Sunday, June 11, 2006

ஜாக்கிரதை!!

2 நாட்களுக்கு முன்பு திரு.பத்ரி அவர்களின் பேட்டி தொலைகாட்சியில் ஒளிப்பரப்பியதாக எனது மனைவி சொல்லிவிட்டு.....
இந்த குண்டையும் தூக்கிப்போட்டார்.!
அதாவது அவர்களும் வலைபூக்களில் எழுதப்போவதாக.
நானும் "இது எழுதுவது பேசுவது அல்ல" என்று சொல்லிப்பார்தேன்.
ஹுகும்,நான் உங்களுக்கு முன்னாடியே எழுத ஆரம்பித்துவிட்டேன்,அதை ஒரு பத்திரிக்கை வேறு பிரசுரித்துவிட்டது என்று சொல்லிவிட்டார்கள்.
இனி நான் சொல்லிப்பிரயோஜனம் இல்லை.
நண்பர்களே!
திரும்ப தலைப்பை பார்த்துக்கொள்ளுங்கள்.

3 comments:

ramachandranusha(உஷா) said...

ஆஹா, ஒரு உறையில் இரண்டு கத்திகள் ! ஜாக்கிரதை- இது உங்களுக்கான எச்சரிக்கை :-)

வடுவூர் குமார் said...

திருமதி உஷா
அப்படித்தான் தோன்றுகிறது.
உங்கள் எச்சரிக்கைக்கு நன்றி.
:-))

வடுவூர் குமார் said...

எழுதிய பிறகு கொடுப்பார்கள் என்று நினக்கிறேன்.