Showing posts with label புட்டபர்த்தி. Show all posts
Showing posts with label புட்டபர்த்தி. Show all posts

Tuesday, March 20, 2007

கேட்டவை

இந்த பதிவை போடுவதா? வேண்டாமா? என்ற குழப்பம் கடந்த 3 நாட்களாக,அதற்கு காரணம் கீழே கொடுத்துள்ள சுட்டி.

பிரபலமான ஒருவரைப்பற்றி நல்லதும் கெட்டதும் வருபவை சகஜம் தான் என்றாலும்,அது கொஞ்சம் மோசமானதாகவே இருக்கிறது.

இதை படிக்கும் மக்களே,தயவு செய்து ஒரு மூன்றாம் மனிதனின் நோக்கத்துடன் படிக்கவும்.




புட்டபர்த்தியில் நான் வேலை நிமித்தம் இருந்த சுமார் 2 வருடகாலங்களில் நான் கேட்ட அனுபவங்களை இங்கு தொகுத்துள்ளேன்.

1.இது நான் வருவதற்கு சில மாதங்கள் முன்பு நடந்தது.அப்போது ஆயுத பூஜை காரணமாக ஆசிரம் உள்ளேயே ஒரு கூடாரம் போட்டு,பெரிய அலங்காரங்கள் செய்து அதற்கு சுவாமிகளையும் அழைத்திருந்தார்களாம்.அவர் வந்து கொஞ்ச நேரத்தில் பூஜைகள் ஆரம்பித்தன.எல்லாவற்றையும் பார்த்துவிட்டு புறப்படும் நேரம் அந்த சைட்டின் ரெசிடென்ட் இஞ்சினியரை கூப்பிட்டு ஒரு வைர மோதிரத்தை பரிசாக கொடுத்தாராம்.பிற்காலத்தில் அதை நானும் வாங்கிப்பார்த்தேன்.மதிப்பு சுமார் 1L என்று கேள்விப்பட்டேன்.

2.இது என் மேல் மேல் அதிகாரிக்கு நடந்தது.இங்கு வேலை நடந்துகொண்டிருக்கும் போது பெரிய தலைகள் வந்து போய் கொண்டிருப்பார்கள்.ஒரு தடவை எங்கள் மேலதிகாரி வந்தபோது அவரை சந்தித்திருக்கிறார்.சந்தித்து முடித்தவுடன்,அவரையும் அழைத்துக்கொண்டு ஒரு கல்யாணத்திற்கு பாபா போனார்.கல்யாணத்தில் தாலிக்கு பதிலாக வெறும் கையில் ஒரு 5 பவுன் சங்கிலியை வரவழைத்து மணமகனிடம் கொடுத்தாராம்.

3.ஒரு நாள் ஒரு பழைய கோபுரம் இடிந்து விழுந்ததில் 3வர் மரணமடைந்தார்கள். அதில் ஒருவர் வெளிநாட்டவர்.அந்தூர் வழக்கப்படி போலீஸ் வழக்கு பதிவு செய்த்தது.வெளிநாட்டவரின் வீட்டுக்கு விஷயம் போய் அவர்கள் இங்கு வந்த பிறகு,போலீஸ் அவர்களிடம் நாங்கள் இந்த மாதிரி வழக்கு பதிவு செய்துள்ளோம்,உங்களுக்கு விருப்பம் இருந்தால் உங்கள் பெயரை சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறார்.அதற்கு அவர்கள் எங்கள் மகன் இங்கு இறந்ததில் மிகவும் சந்தோஷப்படுகிறோம்,அதனால் எந்த Complaint தேவையில்லை என்று சொல்லி போய்விட்டார்களாம்.அவன் இங்கு சாக கொடுத்துவைத்திருக்க வேண்டும் என்று சொல்லிச்சென்றார்களாம்.

4.எங்கள் கம்பெனியின் சில உயரதிகாரிகளுக்கு தனிப்பட்ட சந்திப்பில் மோதிரம் போன்ற பொருட்களை கொடுத்ததாக கேள்வி.

5.இது என்னுடைய நண்பர்,பல இடங்களில் ஒன்றாக வேலை பார்த்தவர் வீட்டில் நடந்தது.இதையே அவர் பலரிடம் சொல்லாமல் மறைத்துவிட்டார்.
நடந்தது இது தான்.
நண்பருடைய மனைவி தினமும் காலையும் மாலையும் பஜன்/தரிசனத்துக்கு போய் வருவார்.அப்படி ஒரு நாள் போன போது அவருக்கு முதல் வரிசையில் உட்கார இடம் கிடைத்தது.பாபாவும் வந்தார்,கடிதங்களை வாங்கினார்,சிலருக்கு விபூதி கொடுத்தார்.அப்படி வந்துகொண்டிருக்கும் போது நண்பருடைய மனைவி உட்கார்ந்திருக்கும் பக்கம் வந்து அவருக்கு 2 பேர் தள்ளி உட்கார்ந்திருக்கும் பெண்ணுக்கு விபூதி வரவழைத்துக்கொடுத்தார்.இதை பார்த்ததும் நண்பருடைய மனைவிக்கு வருத்தம் வந்தது.செ! நமக்கு கிடைக்கவில்லையே என்று.

சிறிது நேரத்தில் நடந்ததை மறந்துவிட்டு வீட்டுக்கு வந்து சமையல் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டார்.கொஞ்ச நேரம் கழித்து ஏதோ வேலையாக பூஜை அறைக்கு போனால் அங்கு இருக்கும் பாபா படத்தில் இருந்து விபூதி விழுந்து கிடந்தது.அவருக்கு ஆச்சிரியமான ஆச்சரியம்,.நம் மனதில் நினைத்தை எப்படியோ கண்டுகொண்டு வீட்டுக்கே வந்து கொடுத்துவிட்டார் என வியந்தார்.



இத்தனைக்கும் அவர்கள் இருவரும் பெரிய பக்தர்கள் கிடையாது.நான் பாபாவை விமர்சித்த போது, முழுவதும் தெரியாமல் யாரையும் குறை சொல்லாதே என்று என்னை திருத்திய நண்பன் அவன்.இதே கதை உலகில் பல இடங்களில் பல மாதிரி நடைபெற்றுள்ளது.
இந்த உலகத்தில் நடக்கும் சில இந்த மாதிரி விஷயங்கள் பாபாவை போட்டிக்கு அழைத்த கோவூர் கண்ணன் மற்றும் பலரும் விளக்கம் சொல்லாமல் விட்டு விட்டார்கள். இல்லை என் கண்ணில் படவில்லையோ என்னவோ??
மொத்தத்தில் நாம் புரிந்துகொள்ள நிறைய இருக்கு இந்த உலகத்தில் என்று மட்டும் தெரிகிறது.
இது நான் கேள்விப்பட்டது தான்,இணையத்தில் பார்த்தால் வெவ்வேறு தேசங்களில் உள்ளவர்கள் ஏதேதோ எழுதியிருக்கிறார்கள்.நம்புவதும் நம்பாமல் இருப்பதும் தனி மனித உரிமை.
நம்ப மாட்டேன் சொல்பவர்களை நம்ப வைப்பது என்னுடைய வேலையில்லை,ஆனால் நம்பிக்கை உள்ளவர்களை ஏளனம் செய்வதற்கு நமக்கு உரிமை இல்லை என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள விழைகிறேன்.
உன்னால் YouTubeஐ நம்பமுடிகிறது என்றால் அவர்களால் பாபாவை நம்பமுடிகிறது.சிம்பிள் லாஜிக்.

நம்மில் சில வலைப்பதிவர்கள் அவர் கொலைகாரர் என்று இங்கு நீதி கொடுத்திருப்பதை பார்க்கவும்.

அது ஒரு பக்கம்,மற்றொருவரின் பக்கம் இங்கே!! கொஞ்சம் மோசமானது.

மேல் கொடுத்த சுட்டியில் சொல்லிய மாதிரி நான் வேலை செய்யும் போதே கேள்விப்பட்டேன்.

இது மற்றொருவரின் நம்பிக்கை.

நம்பவும் முடியவில்லை,நம்பாமலும் இருக்க முடியவில்லை.

சரி,இதையெல்லாம்,அவரவர் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

இங்கு என்னுடைய பணி முடிவடையும் நேரத்தில் அடுத்த வேலை இடத்துக்கான ஊகங்கள் வர ஆரம்பித்தன.

ஊகங்கள் வரத்தொடங்கினாலும் எதுவும் முடிவாகத நிலையில் சென்னை அலுவலகத்திக்கு போகுமாறு பணிக்கப்பட்டேன்.

அடுத்த பதிவை சென்னையில் தொடங்குவோம்.

Thursday, March 15, 2007

Dome

புட்டபர்த்தியில் கேட்ட கிடைத்த அனுபவத்தை அடுத்த பதிவில் சொல்கிறேன்.
இந்த மருத்துவமனை கட்டுமானத்தில் கொஞ்சம் கஷ்டம் கொடுத்த வேலை என்றால் அது மத்தியில் உள்ள கூம்பு வடிவமான டோம் (Dome) தான்.



எப்போதுமே கட்டுமானத்துறையில் சதுரமாகவோ,செவ்வகமாகவோ இருந்தால் பிரச்சனை இருக்காது.வளைவுகள் வந்தால் கொஞ்சம் கஷ்டப்படுத்தும்.வளைவுகள் என்றாலே கஷ்டம் தானே!!
அதுவும் இந்த டோம் முப்பரிமானத்திலும்,ஒவ்வொரு நிலையிலும் வெவ்வேறு அளவுகள் கொண்டதாக இருந்ததால் சாரம் அடிக்கும் பணி மிக கடுமையாக இருந்தது.
அப்போது கம்பெனியில் ஆட்டோ கேட் சமாச்சாரம் எல்லாம் இல்லாததால்,மிகவும் கஷ்டப்பட்டோம்.
இதனை மேற்பார்வை செய்தவர்,திரு மீனாட்சி சுந்தரம் எனபவர்,உடம்பு மெலிந்தவர்,சிகரெட் பழக்கம் உள்ளவர்.அவருக்கு இந்த வேலையில் உதவ திரு ரமேஷ் பாபு என்பவர் வந்திருந்தார்.அவர் தான் எவ்வளவு இடைவெளியில் சாரம் போடவேண்டும்,எப்படி அதை செதுக்கவேண்டும் என்று பட்டியல் போட்டு கொடுத்தார்.
அப்படி எல்லா விபரங்களும் கொடுத்தும்,பல குத்தகைகாரர்களை விட்டும் இந்த பணியை மருத்துவமனையை திறக்கும் தேதிக்குள் முடிக்கமுடியாது போலிருந்தது.இரவு பகல் என வேலை நடந்தாலும் ஏதோ ஒரு சுணக்கம் அங்கு குடி கொண்டிருந்தது.

இந்த சமயத்தில் என் வேலை ஒரளவு முடிந்து வேறு வேலைகள் பார்த்துக்கொண்டிருந்தேன்.அப்போது ஒரு நாள்,என்னுடைய மேல் அதிகாரி என்னை கூப்பிட்டு,அந்த டோமில் போய் பார்,அவர்களுக்கு உதவிக்கு ஆள் தேவைப்படுகிறது,மீனாட்சி சுந்தரத்தால் முழுவதுமாக மேற்பார்வையிட முடியவில்லையாம் என்றார்.

ஒருவர் மேற்பார்வை செய்துகொண்டிருக்கும் ஒரு வேலையில் மற்றொருவர் போய் பார்பதும் ,தலையிடுவதும் பின்னால் பிரச்சனையை கொடுக்கும் என்பதால் அரை மனதுடன் ஒப்புக்கொண்டேன்.

இதில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என்று அறிய,நேரடியாக மீனாட்சியிடம் போய்,"பாஸ் இங்கு வரச்சொன்னார் , உனக்கும் எதுவும் பிரச்சனையில்லையே?" என்றேன்.

நிச்சயமாக இல்லை,நான் தான் என்னால் முடியவில்லை என்று சொல்லி ஆள் கேட்டேன் என்றான்.

சரி என்று சாரம் மட்டும் பண்ணிக்கொண்டிருந்த அந்த மேல் பகுதிக்கு போய் வெறுமனே வேடிக்கை பார்த்து அங்கிருக்கும் தொழிலாளர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். இப்படி செய்வதால் ஒரு நன்மை,அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உள்ள சிரமம் தெரியும்.அதை பாதி நிவர்த்தி செய்தாலே போதும் வேலை கொஞ்சம் வேகமாக நடைபெரும்.

அப்போது மேலே வந்த மீனாட்சியிடம்,இந்த வேலையை எப்படி பிளான் பண்ணியுள்ளீர்கள் என்றேன்?

மொத்த வேலையையும் 8 பாகமாக பிரித்திருக்கோம்.முட்டு கொடுத்திருக்கும் சாரத்துக்கு ஒரே பக்க அழுத்தம் வராமல் இருக்க எதிரெதிர் பக்கங்களில் கான்கிரீட் போடலாம் என்றுள்ளேன் என்றார்.

அன்றிருந்த நிலமையில் இன்னும் 1 மாதம் ஆனால் கூட முதல் பகுதியை கான்கிரீட் போட முடியாது போல் இருந்தது.

இப்படியே ஒரு வாரம் போனதும்,அந்த வேலையின் பிளானருடன் பேசிக்கொண்டிருக்கும் போது அவருக்கும் இந்த வேலையை குறிப்பிட்ட தினத்தில் முடிக்கமுடியுமா என்ற சந்தேகம் இருந்தது.

அப்போது நான் அவரிடம் என் ஐயப்பாட்டை வைத்தேன்.

இது நாள் வரை நான் கான்கிரீட்டை கீழே இருந்து மேல் நோக்கி தான் போட உத்தேசித்திருந்தோம்.கீழ் பகுதியில் சார வேலை முடியவில்லை,அதற்கு பிறகு கம்பி கட்டி, கான்கிரீட் போட வேண்டும்.இப்போது எல்லா வேலைகளும் கீழ் பகுதியை நம்பியே இருக்கு.

இதற்கு மாற்றாக,நாம் மொத்த வேலையையும் 16 பாகங்களாக பிரித்து,மேல் பகுதியை மட்டும் கான்கிரீட் போடுவோம் அதற்குள் கீழ் பாக வேலை முடிந்திருக்கும் அதையும் தொடர்ந்து முடித்துவிடலாம் என்றேன்.

இதிலும் சில பிரச்சனைகளை எதிர்பார்த்து அதை அவரிடமும் சொல்லி தகுந்த இஞ்னியரிடம் மறு உறுதிப்படுத்தச்சொன்னேன்.ஏனென்றால் கான்கிரீரட்டை மேலிருந்து போடும் போது அதன் மொத்த எடையையும் அதை தாங்கிக்கொண்டிருக்கும் சாரம் உறுதியாக இருக்கவேண்டும்.இல்லாவிட்டால் மொத்தமும் முடியும் முன்பே தரையில் இருக்கும்.

அதை Confirm செய்துகொண்ட பிறகு கான்கிரீட்டை மேலிருந்து கீழ் கொண்டு வந்தோம்.வேலையையும் திறப்பு விழாவுக்கு முன்பே முடித்துவிட்டோம்.

அந்த மகிழ்சியில் எங்கள் அக்கால Regional Manager, இன்னாள் தலைமை அதிகாரி அனுப்பிய கடிதம் கீழே உள்ளது.







Tuesday, March 13, 2007

புட்டபர்த்தி மருத்துவமனை

இது நாங்கள் புட்டபர்த்தியில் கட்டிய மருத்துவமனையின் தொடர்சி.

இது பழைய மருத்துவமனையைப்பற்றிய தகவல்,எனக்கே புதுசு தான்.

Sathya Sai Hospital, Puttaparthi, 1957

Inaugurated 20 October 1957, on the hill behind Prasanthi Nilayam

Some of you may ask why there should be a Hospital at all, here! Why should not Baba cure diseases by an exercise of His Will, that is the question. Well, for one thing, this Hospital is not My only Hospital. Hanumantha Rao has a Hospital in Madras where disabled children are treated and trained to be useful and self- respecting individuals. That too is My Hospital. In fact, all hospitals everywhere are Mine. I visit them all. Why, all those who call out from their hearts for succour, in whatever language, from whatever clime, whether from hospitals or homes, are Mine. Do not confine Me to these few acres round the Prasanthi Nilayam. Wherever a person craving for Prasanthi lives and prays, there a Prasanthi Nilayam exists.


நன்றி:http://www.saiaustralia.org.au/medical/hospitals.html (மேலும் பல நல்ல தகவல்கள் இதில் உள்ளது)


இது புது மருத்துவமனையைப்பற்றியது.



Two Super Speciality hospitals built by SSB are considered by his followers as an expression of SSB's love and compassion to all people in the world. Free medical care from those hospitals is seen as a clear sign of Divine promise of a better future for all the needy and suffering people.

The first Super Speciality hospital in Puttaparthi was built by the firm Larsen & Tubro in 1991 and was constructed for 5 months. SSB's followers believe that it was SSB's divine intervention that got this hospital erected so fast and consider it as a miracle. Sai Baba himself emphasizes this moment: "Work on the hospital began in May after my return from Kodaikanal. Within five months from May to November, work has been done which would have taken five years". (23.11.1991. Sathya Sai Speaks, v.XXIV, p.310) It is still unclear what caused the construction to be finished so quickly. According to Sai Baba it must have been the enthusiasm of the workers: "The firm Larsen & Tubro are known for their big constructions in India and abroad. But nowhere else was such enthusiasm and zeal displayed by the workers engaged in the construction as in this Hospital. Even the smallest worker did the work of ten persons with zeal and joy. All workers performed their job with enthusiasm and devotion". (23.11.1991. Sathya Sai Speaks, v.XXIV, p.310).


நன்றி:http://home.no.net/anir/Sai/enigma/hospital.htm



இந்த புட்டபர்த்தி மருத்துவமனைக்கு பல தேசங்களில் பலரிடம் இருந்து பலவிதமான Information பெறப்பட்டு செய்யப்பட்டது.

பிரிட்டீஸ் நிறுவனம் கட்டுமானத்துறையில் இருந்து பின் வாங்கியதும்,அதில் சில வேலைகளை எங்கள் டிசைன் நிர்வாகம் எடுத்துக்கொண்டது.அப்படியும் பல சமயம் தேவையான விபரங்களுக்காக காத்திருக்கவேண்டியிருந்தது.
வேலை என்று பார்க்கும் போது,அந்த மத்தியில் இருக்கிறதே Dome தவிர மீதியெல்லாம் எப்போதும் செய்கிற வேலை தான்.



என்னுடைய கட்டுப்பாட்டில் இருந்த இடங்கள் கீழே உள்ள படத்தில் கோடிட்டு காண்பித்துள்ளேன்.




இது வலது பக்கக்கோணம்






மேலே உள்ள படம் நுழைவாயிலில் இருந்து எடுக்கப்பட்டது.


பல பக்தர்கள் தவமாய் காத்திருக்க எங்களுக்கு மட்டும் அதிஷ்டம் இருக்கு போல,சில சமயங்களில் நாங்கள் வேலை செய்யும் போது திடிரென்று ஒரு வெள்ளைக்கார் நுழையும்,அதிலிருந்து பாபா அவருக்கே உரிய அங்கியுடம் நடந்து கொஞ்ச தூரம் போய் பார்ப்பார்.டிக்கியில் இருந்து அவருக்கென்று வந்த இனிப்பு பலகாரங்கள் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கொடுக்கச்சொல்லி வைத்துவிட்டு போவார்.அவரைச்சுற்றி ஒரு நறுமணம் வீசிக்கொண்டு இருக்கும்.வெகு அருகில் அவரைப்பார்க்கும் அனுபவமும் எனக்கு கிடைத்தது.

அப்போது அவரிடம் அவ்வளவு நம்பிக்கையில்லாத்தால் ஏனோ தானோ என்று தான் பார்த்தேன்.ஒரு 10 நிமிடங்கள் மட்டுமே இருப்பார்.
எனக்கு ஏற்பட்ட வேடிக்கையான அனுபவம் இது.
ஒரு தடவை என்னுடைய அலுவலகத்தில் நான் மற்றும் சில நண்பர்கள் வரைப்படத்தை வைத்துக்கொண்டு ஏதோ விவாதித்துக்கொண்டிருந்தோம்.
அப்போது பாபா தன் காரை கொஞ்சம் தூரத்தில் நிறுத்திவிட்டு நடந்து வந்துகொண்டிருந்தார்.அவருக்கும் பின்னால் சில சீடர்கள் மட்டுமே.
இதைப்பார்த்த சில வேலை ஆட்கள் அவரிடம் வந்து ஆசீர்வாதம் வாங்க முயற்சித்து கொண்டிருந்தனர்.இதை கவனித்து, என் நண்பன் என்னிடம் சொன்னான்.அதற்குள் மண்டையில் ஒரு எண்ணம்,இவர் நம் பக்கம் வந்தாலும் இவரை நாம் கை கூப்பி வணங்கக்கூடாது என்று முடிவெடுத்திருந்தேன்.அவர் என் எதிரி கிடையாது,இருந்தாலும் அப்போது அவர் செய்பவைகளில் முறன்பட்டு நின்றேன்.
அதற்குள் அவர் நான் இருக்கும் அறையின் பக்கமாக வந்துகொண்டிருந்தார்.
சரி என்று நானும் அலுவலகத்தை விட்டு வெளியேறி என்னதான் நடக்கிறது என்று சற்று தொலைவில் நின்று கவனித்தேன்.
சுற்றும் முற்றும் பார்த்த பிறகு என் பக்கம் திரும்பி ஒரு பார்வை,அவரை எப்போது கை கூப்பி வணங்கினேன் என்று தெரியவில்லை.கை கூப்பிய படி இருந்தது.
இதெல்லாம் என் அளவில் ஜு ஜு பி.
படித்த பண்பாளர்கள் எப்படி அளக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை "safaya" சுட்டில் கொடுத்துள்ளேன்.

சில நாட்கள் அவர் பக்தர்கள் என்று கூறிக்கொண்டு பல தேசத்து பிரஜைகளும் வந்து இன்று மதியம் எங்கள் செலவில் உங்களுக்கு இலவசசாப்பாடு என்று சொல்லிப்போடுவார்கள்.
இதெல்லாம் எங்கள் கம்பெனியில் வேலைசெய்பவர்களுக்கு புது அனுபவம்.நாங்கள் எப்போதும் வெளி ஆட்களை வேலைசெய்யும் இடத்துக்குள் அனுமதிக்கமாட்டோம்.
இங்கு சொல்லவும் முடியவில்லை,மெல்லவும் முடியவில்லை.

இந்த மருத்துவமனையின் தலைமை நிர்வாகியின் அனுபவத்தை கீழே காணலாம்.
திரு சபாயா இந்த மருத்துவமனை ஆரம்பம் பற்றி சொல்லி அவர் வந்த விதத்தைப்பற்றி பதிவு 1 & 2 சொல்லியுள்ளார்,பாருங்கள்.

Dr.Safaya Part 1 Part 2



செந்தழல் ரவி இதைப்பற்றி இங்கு எழுதியிருந்தார்.

நான் கேட்ட சில அனுபவங்கள் அடுத்த பதிவில்.

Wednesday, March 07, 2007

Dehydration

புட்டபர்த்தி மருத்துவமனை பணிகள்ஆரம்பிக்கும் முன்பே சின்னச்சின்ன நில சம்பந்தமாக சிக்கல்கள் தோன்றிய வண்ணம் இருந்தது.அதை சிறுகச்சிறுக சீர்படுத்தி கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.

வேலை ஆரம்பிக்கும் போது முழுமையான வரைப்படம் கைக்கு வரவில்லை.இருப்பதை வைத்து எங்கெங்கு செய்ய முடியுமோ அதை செய்து வந்தோம்.

இந்த கட்டிடத்தின் மேற்பார்வைக்காக லண்டனில் இருந்து ஒரு பொறியாளர் வரவழைக்கப்பட்டது,அவரின் கெடுபிடிகள் அதிகமாக இருந்ததாலோ என்னவோ,அவர் திரும்ப போய்விட்டார்.மேற்பார்வை முழுவதும் எங்கள் இன்ஜினியர்களிடம் கொடுக்கப்பட்டது.எங்கள் கம்பெனியில் (லார்சன் அண்ட் டூப்ரோ- இ சி சி)சுமார் 60 பேரும்,அதை தவிர குத்தகைக்காரர்களும் வேலை ஆட்களும் இருந்தார்கள்.இப்போது இருக்கும் இடத்துக்கு எதிராக ஒரு இடத்தில் கொஞ்ச பேர் தங்குவதற்கு மெஸ்ஸ¤டன் கூடிய இடம் கட்டப்பட்டது.

தங்கள் மனைவியுடன் இருப்பவர்கள் கொஞ்ச பேர் புட்டபர்த்தியிலும்,கொஞ்ச பேர் "கொத்தச்செருவு" என்ற இடத்திலும் தங்கவைக்கப்பட்டனர்.இங்கும் இட நெருக்கடி ஏற்பட தர்மாவரத்திலும் வீடு பார்த்தார்கள்.

இந்த கொத்தச்செருவு,சென்னையில் இருந்து பஸ்ஸில் வரும் போது புட்டபர்த்திக்கு திரும்பும் ஒரு சாலையில் உள்ளது.2 கோவில்கள்,ஞாயிறு சந்தை,காய்ந்த காய்கறிகள் கிடைக்கும் இடம்.மிகவும் சிறிய ஊர்.தூசிக்கு பஞ்சமே கிடையாது.பத்து தடவை ஹாப் ஸ்டெப் ஜம் செய்தால் ஊரை விட்டு வெளியே வந்துவிடலாம்.

நான் வந்த சமயம் அவ்வளவு ஸ்டாப் வராததால் எனக்கு கொத்தச்செருவிலேயே வீடு கிடைத்தது.பக்கத்தில் இருந்த இன்னொரு வீடு மற்றொரு இன்ஜினியருக்கு கொடுக்கப்பட்டது.

பக்கத்துவீட்டில் தங்கியிருந்த இன்ஜினியருக்கு அப்போது தான் குழந்தை பிறந்து 2~3 மாதங்கள் இருக்கும்,அழைத்து வந்த நேரம் வெப்பம் அதிகமாக இருந்ததால் மிகவும் தினறியது.இரண்டு நாட்களில் ஜுரம் வந்து உடலில் தண்ணீர் குறைபாடு ஏற்பட்டு,பிரிந்து போனது.தனது குழந்தையை கூட்டி வந்த 1 வாரத்துக்குள் எல்லாம் முடிந்துவிட்டது.சோகத்தில் ஆழ்ந்தோம்.வெளிநாட்டில்/மாநிலத்தில் இருந்து வருபவர்கள் நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும்,அதை குழந்தைகள் செய்ய மறுப்பார்கள்,அதன் வினைதான் மேல் சொன்னது.குழந்தை கொஞ்சம் குண்டாக இருந்தால் பிழைத்துக்கொள்ளும்,மற்றபடி கஷ்டம் தான்.

இப்படிப்பட்ட சமயத்தில் எங்கள் குழந்தைக்கும் அம்மை போட்டியது,அதே டிஹைடிறேசன் வந்து அவனும் ஒரு அறையில் படுத்துக்கொண்டிருந்தான்.மருத்துவரிடம் காட்டி தேவையான மருந்துகளை கொடுத்துவிட்டு,நானும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தோம்.மேற்கொண்டு என்ன நடக்குமோ என்று.மற்ற மாநிலத்தில் இருந்துவரும் இளம் குழந்தைகளுக்கு முதலில் இங்குள்ள வெப்பம் மற்றும் சீதோஷ்ணநிலை அவ்வளவாக ஒத்துப்போவதில்லை.

சரியான மருத்துவமனை கிடையாது.வீடு தான் மருத்துவமனை,மருத்துவர் கொடுக்கும் மருத்துகளை பார்க்கும் போது அச்சம் ஏற்படுவது தவிர்க்கமுடியாது.பஞ்சகச்சம் கட்டிய மருத்துவர் வேஷ்டியை பார்க்கும் போதே ஏதேதோ தோனும்.இருந்தாலும் அவர் தான் அந்த ஊருக்கு ஆபத்தாண்டவர்.

இந்த சூழ்நிலையில் என் பையனின் நிலை என்னாகுமே என்று கவலை ஏற்பட்டது.திரும்பவும் ஊருக்கே திரும்ப அனுப்பிவிடலாமா என்று ஏகப்பட்ட குழப்பம்.மருத்துவரும் இன்னும் 2 நாட்கள் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டார்.
நிறைய தண்ணீர் மற்றும் இளநீர் கொடுத்து காப்பாற்றிவிட்டோம்.கூச்சம் இல்லாமல் சொல்கிறேன்,இந்த நிலையில் மனைவியின் பங்கு மிக மிக அதிகம்.
பக்கத்துவீட்டு குழந்தை இறந்து,நம் வீட்டிலும் குழந்தை இப்படி கிடக்கும் போது எப்படியிருக்கும்?வேதனை தான்.

குழந்தையை பறிகொடுத்த அவர் மாற்றல் வாங்கிக்கொண்டு வேறு இடத்துக்கு போய்விட்டார்.

கொஞ்சம் வழிமாறிவிட்டேன்,திரும்ப மருத்துவமனை கட்டுமானத்துக்குள் போவோம்.
அடுத்த பதிவில்.

Tuesday, February 27, 2007

ஆஞ்சநேயர்.

புட்டபர்தி வேலையை பற்றி எழுத ஆரம்பிக்கும் முன்பே ஒரு சின்ன முன்னோட்டம் ஓட்டி பார்த்துக்கொண்டேன்.அதில் முதல் கவனம் கொண்டது "ஆஞ்சனேயர் சிலை" தான்.


இது ஆஸ்ரம் நுழைவதற்கு சற்று முன்பு ஒரு சின்ன குன்றின் மேல் இருக்கும்.இதற்கான இரும்பு வேலைகளை மாத்திரம் L&T-ECC செய்தது.

சரி இணையத்தில் ஏதாவது படம் கிடைக்குமா என்று தேடியபோது கீழ் கண்ட ஒரு அனுபவஸ்தரின் வரிகள் கிடைத்தது.

இவரை தொடர்புகொண்டு அனுமதிவாங்கி போடலாம் என்று பார்த்தால் அதற்கான விளக்கம் ஒன்றும் இல்லை.

அதனால் அப்படியே போடுகிறேன்.ஒரு வேளை அவரே படிக்க நேர்ந்தால்,ஆட்சேபித்தால் என்னை தொடர்புகொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

Experience of the Divinity of Bhagavan by Devotees

Mr. K.Thillainayagam

Mr. Thillainayagam (60), a Civil & Sanitary Engineer, worked
initially in the Tamil Nadu Water Supply & Drainage Board. Later he
moved to the Corporations of the Government of India. From there he
moved to Bahrain to work in the Government there for about 20 years.
He just resigned service and moved over to Chennai. He plans to move
over to Puttaparthi in the next few weeks to spend the rest of his
life at the Feet of Bhagavan. He has several experiences of the
Divinity of Bhagavan of which he narrates an important one in his own
words.

'Swami called the then Ashram Engineer Sri Jeyakumar a few months
before the 65th Birthday Celebrations in the year 1990 and instructed
him to begin the construction of a 65 feet tall statue signifying the
65th year of the Advent of the Avatar, for His Bhaktha 'Hanuman', at
a place selected by Him on the hill top overlooking the Hill View
Stadium.

I had been then working as an Honorary Engineer of the Sri Sathya Sai
Institute of Higher Learning at Prasanthi Nilayam for a short while.
Sri Jayakumar formed a team of three, comprising him, Sri
Subrahmanyam the Ashram Shilpi and me. Swami blessed all of us
together expressing His approval for the joint effort.

Sri Subrahmanyam colleted a few pictures available in the market and
also prepared a few hand sketches, and submitted all those for
Swami's approval. Swami selected a particular picture depicting
Hanuman lifting Sanjeevani Hill in his left hand, the bent left leg
on small hillock and the straight right leg behind. None of us had
any idea as to how to proceed. Sri Subrahmanyam, though involved in
creating many statues earlier, also had no definite ideas about this
tall statue.

Sri Subrahmanyam, however, made a small-scale model of the statue. I
took measurement of the various components of this scale model, and
made load calculation of the prototype statue. I found that the
statue was going to weigh several hundreds of tonnes. We thought that
it would be too difficult to support this massive statue, and hence
we prayed to Swami to allow us to make the statue hollow.

Swami, while disapproving our proposal, said, 'this statue is going
to last hundreds and hundreds of years. Therefore, no hollow work, no
false work. Make it solid and strong.' Owing to the heaviness, I
decided to support the statue using rolled structural steel sections.
Swami, though He did not instruct me directly, used to flash the
right solution at the right time, of course, only after we had
strained our nerves. Unable to resolve many issues related to the
structural stability of the statue, I used to go to the Prayer Hall,
kneel before the Chair with my sketchbook, pencil and eraser and
prayed to Swami to give me the correct solution. I used to get the
correct idea as if some one was dictating. This happened on quite a
few occasions during the period.

The statue had been designed on the following principle. The
structural steel sections were to form part of the skeleton, and
reinforced cement concrete (RCC) would make the flesh. Brickbats
fixed on specially prepared cement mortar were to be used to create
the shape and curves of the statue.

After having completed the preliminary calculations, the next step
was the site clearance, levelling, grading and preparation of the
base area for the statue. We engaged local labour to clear the site
over the rock underneath. Once we removed the weathered rock, lo, we
found a flat, level, solid rock bed, which did not require any
further treatment to bear the massive statue! Remember, Swami Himself
chose this site!

Next we wanted to procure the rolled structural steel sections from
Bangalore. To fabricate the legs and other important parts, we needed
ISMB 600 steel girders. This is the largest and heaviest rolled steel
section manufactured in India. This section is normally used in
railway bridges and in heavy steel construction. This section was not
available in Bangalore city. We went round and round, but of no use.

We suddenly heard from one dealer that freshly rolled ISMB 600
girders in required quantity and length had just been received
through railway wagons in the goods yard, and could be delivered to
us the next day! We transported these and other smaller sections
through long body trucks. Lord Sai made it possible for us to get the
steel sections not commonly used by the general public and not easily
available in the open market. Normally one has to place orders for
these sections and wait for a very long time, whereas we got them
just like that.

While gracing the Bhoomi Pooja for the statue, Swami created a three
inches and a half (approximately) tall statue, and instructed us to
construct the actual statue according to this model. This model was
different from the one approved by Swami earlier, but it was a
beautiful one. The statue now standing on the Hilltop was built on
that model. Swami blessed a few stone blocks and bricks by touching
them. Swami also placed them in position on cement mortar bed thus
signalling the commencement of construction. The Divine Feet
consecrated the whole area. Swami broke a few coconuts and sprinkled
the water all over the place.

Swami directed me to go to the ECC Design Office to finalize the
design, detailed engineering and drafting the construction drawing.
They allocated a draughtsman to assist me in preparing the drawings.
Within a couple of days, that draughtsman was withdrawn saying that
his services were required for a very urgent tender work. As I could
not wait for long, I requested the ECC Management to make alternate
arrangement. They borrowed the services of a draughtsman from another
division. Once again Lord Sai came to our rescue. The draughtsman
suddenly withdrawn from this work is a RCC specialist where as the
one who replaced him is a structural steel specialist. Thus Swami
arranged the services of the right person for this job.

Swami used to visit the site very frequently. One day, during one of
His site visits, He instructed me to place the statue on a pedestal
and not directly on the rock, because the lower part of the statue
might not be visible to the people at the ground level.

I prayed to Swami to indicate as to what should be the height of the
pedestal. Swami said, 'My height'.

In order to counterbalance the overturning effect of the wind on the
statue, we needed a very heavy base for the statue. We found, by
calculation, that we needed a 45 feet long and 25 feet wide pedestal.
But what should be the height of the pedestal? After calculations we
found that the height of the pedestal required to counter the wind
forces is the same as Swami wanted it to be!

The leg girders were actually anchored into this pedestal, which is
simply resting on the sheet rock. Because of this base pedestal,
there was no need to excavate deep into the rock or drill holes into
the rock for anchoring the statue. Thus Swami saved us from the
difficult task of anchoring the statue.

Swami evinced keen interest on this work. He used to bless us with
His frequent Darshan at the site. He always came with carloads of
snacks, sweets, and fruits to the site. Swami used to bring many
visitors and show them the construction work.

The steel frame supporting the Sanjeevani hill had to be hoisted and
placed in position. The frame was ready. Hoisting arrangement was
made ready. I was requesting Swami to come to the site and bless us
to commence the hoisting. Swami was somehow postponing the site-
visit. But I was continuously praying for the Divine site-visit.

One day He came and broke a coconut on the steel frame and directed
us to start lifting. Swami got into the car and drove off. The car
would have gone only a hundred yards, and suddenly stopped. I ran and
reached Swami's Presence. Swami asked me, 'when will you complete the
hoisting work?' I replied, 'Swami, with your grace, we hope to
complete the work around lunch time and I will inform you when I come
for the afternoon Darshan'.

No sooner had Swami left the scene than the steel beam on top
carrying the hoisting pulley was twisted (torsion failure), and the
steel frame, which was lifted above the ground by a few feet, crash-
landed on the ground. Because of this unexpected event, we had simply
to abandon the hoisting work!

I went to the Mandir for the afternoon Darshan and sat desolate in
the verandah. Swami's door opened, and Swami came straight to me with
thumb- down signal even before I could open my mouth to explain the
debacle. Swami said he had known everything. There was no damage to
men or materials. Swami saved us all from a major site accident.

The next day Swami told me that I had chosen a very bad time for the
hoisting operation because all the planets at that time were in
unfavourable position. He directed us not to do anything for the next
few days. Accordingly we waited for a few days and recommenced the
work on instructions by Swami. No need to mention that we could
successfully complete the work soon after.


The steel fabrication and erection work of the statue was a heavy
construction work, something similar to major bridgework. The hard
working and highly skilled site engineers and technicians of the ECC
accomplished the construction work in time. Every one of us
associated with the erection of the Hanuman statue could feel the
Divine Presence every moment in its execution.

Jai Sai Ram'

-- Mr. K.Thillainayagam

நன்றி:http://srisathyasaibaba.blogspot.com/2005_03_01_srisathyasaibaba_archive.html

ஒரு சின்ன பின்குறிப்பு:இதை மேற்பார்வை செய்த எங்கள் சக நண்பர் திரு.தியாகராஜன்,இதற்கு முன்பு இருந்த போதும் அந்த வேலை முடித்தபிறகு அவர் வாழ்ந்த வாழ்கை முறையும் அப்படியே நேர் எதிர்.நேரில் பார்த்த அனுபவம் இது.
இத்தனைக்கும் அவர் என்னை அழைப்பது (மறைமுகமாக) ஹரி வலைப்பூவில் நமது கருப்புவின் பெயரில் வரும் பின்னூட்டம் போல்!!

இப்படி ஆசிரமத்தை சுற்றி சிறிய வேலைகள் செய்துவந்தோம்.
அபோது தான் சாய்பாபா ஒரு ஆஸ்பத்திரி கட்டப்போகிறார் என்றும் அதற்காக நிலம் வாங்கும் முயற்சிகள் முடிவடைந்தாக சொன்னார்கள்.

அந்த இடம் புட்டபர்த்தியில் இருந்து சுமார் 7KM தள்ளியிருந்தது.

புட்டபர்த்தி வருபவர்கள் இந்த இடத்தை கடந்துதான் வரவேண்டும்,அதனால் கண்ணில் இருந்து தப்பிப்பது கஷ்டம்.
வாங்க அங்கு போவோம்,அடுத்த பதிவில்.

Thursday, February 15, 2007

புட்டபர்த்தி

இந்த சாய்ராம் பேப்பர்களை அஸ்திவாரத்தில் போடமுடியுமா என்று கேட்டு வந்த மலையாள பெண்மணிக்கு தேவையான அறிவுரைகளை கொடுத்து,எங்கள் வேலைக்கு வேட்டு வைக்காதே,என்று சொல்லி அனுப்பிவைத்தோம்.

இந்த கேன்டின் கட்டுமானப்பணி மிக சாதாரணமானது ஆனால் மிகவும் இட நெருக்கடிக்கிடையில் செய்யவேண்டியிருந்தது.காலை மற்றும் மாலை நடக்கும் பஜன்/தர்ஷன் சமயங்களில் வேலையை நிறுத்த வேண்டும்.அருகருகே உள்ள கட்டிடங்களுக்கு எவ்வித சேதாரம் இல்லாமல் வேலை செய்யவேண்டும் என்ற நெருக்கடி வேறு.இதெல்லாம் எங்களுக்கு பழக்கமான வேலை என்பதால் அவ்வளவாக கஷ்டம் தெரியவில்லை.

என்னை இங்கு வரச்சொல்லிய வேலை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டிருந்ததால்,அது சரியாகும் வரை இந்த கேன்டின் கூரை வேலையை பார்க்கும்படி பணிக்கப்பட்டேன்.

இது முன்கூட்டிய கான்கிரீட் போட்டு மேல் எடுத்து வைக்கும் முறையான (PreCast) முறைப்படி கட்ட உத்தேசித்திருந்தார்கள்.நான் இந்த வேலையை ஏற்கனவே செய்திருந்ததால் அதற்கான வேலையில் மூழ்கினேன்.


அதற்கு தேவையான மோல்ட் செய்து முதல் சிலாப் போட்டு எடுக்கும் வரை தான் பிரச்சனை.முதல் சிலாப் உடையாமல் வந்துவிட்டால்,அப்புறம் வந்து சும்மா மேற்பார்வை மட்டும் செய்தால் போதும்.

இந்த மோல்ட் என்பது மெழுகு பொம்மை தயாரிக்க அதன் உருவத்தின் பிரதி எடுத்து அதன் மேல் மெழுகை ஊற்றி எடுப்பார்களோ அதே டெக்னிக் தான் இங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது.

இது சில சமயம் பிளைவுட் அல்லது செங்கல்லில் செய்து சுற்றி கொஞ்சம் கான்கிரீட் போட்டு பிறகு மெழுகை கரைத்து ஊற்றி நன்றாக பாலிஸ் செய்வார்கள்.கான்கிரீட் போடுவதற்கு முன்பு இதற்கென்று உள்ள எண்ணையை ஊற்றி போடுவார்கள்.இந்த எண்ணெய் கான்கிரீட்டுக்கும் மோல்டுக்கும் இடையே அதிக உராய்வு இல்லாமல் செய்து,கான்கிரீட்டை மேல் தூக்கும் போது இலகுவாக்கும்.


இதில் மிக முக்கியமாக பார்க்கவேண்டியது,மோல்டின் அத்தனை பக்கங்களும் கீழ் பக்கத்தைவிட மேல் பக்கம் குறைவாக இருக்கவேண்டும்.

அதற்கடுத்தது எல்லா பக்கங்களும் வழவழப்பாக இருக்கவேண்டும்.எவ்வளவுக்கு எவ்வளவு வழுவழுப்பாக இருக்கோ அவ்வளவுக்கு நல்லது.

அதற்கடுத்தது இப்படி போட்ட கான்கிரீட் தூக்குவதற்கு ஏற்ற ஹ¥க் இருக்கவேண்டும்.

குடுத்திருக்கும் வரைபடத்தில் இருக்கும் இடத்திலேயே பொருத்தினால் சரியாக இருக்கும்.இந்த ஹ¥க்கின் மேல் பகுதி கான்கிரீட்டின் வெளிப்புறத்தில் இருந்து மிக குறைந்த பட்சமாக 30MM இருக்க வேண்டும்.

அதி முக்கியமாக போட்ட கான்கிரீட் ஓரளவுக்கு இறுகியிருக்கவேண்டும்.இதற்காக சில சமயம் நீராவியில் கூட குளிப்பாட்டுவார்கள்.இது கான்கிரீட் இறுகும் நிலையை மேம்படுத்தும் ஆனால் செலவு பிடிக்கும்.

தேவைக்கேற்ப ஒன்று அல்லது இரண்டு மோல்ட் போட்டு வேலை பார்ப்போம்.அதை தூக்குவதற்கு கிரேன் இருக்கும்.பக்கத்திலேயே,போட்ட சிலாபுகளை ரிப்பேர் மற்றும் மேம்படுத்துவதற்காக பல மேடைகள் இருக்கும்.

இந்த வேலை அவ்வளவு தொந்திரவு கொடுக்காமல் முடிய,நாங்கள் எதிர்பார்த்த வேலையும் வந்தது.

மேலும் சில கலர் படங்கள் (Precast) அடுத்த பதிவில் வரும்

வாங்க அடுத்த பதிவுக்கு

Tuesday, February 13, 2007

பிரசாந்தி நிலையம்

போன பதிவு

போன பதிவில் எங்களுக்கு புட்டபர்த்தியில் பல வேலைகள் கிடைத்ததை பற்றி சொல்லியிருந்தேன்.அதன் பிறகு வேறு பெரிய வேலை எதுவும் கிடைக்காத பட்சத்தில் எனக்கு அங்கு போகச்சொல்லி கடிதம் வந்தது.

பாபாவை விமர்சித்ததற்கு உடனே பலன் கிடைத்துவிட்டது.

இளம் வயது,வீரியம் அதிகம், அதனால் எதற்கும் கவலைப்படாமல் திரும்ப பெட்டிகளை கட்ட ஆரம்பித்தேன்.

ஆமாம் இந்த புட்டபர்த்தி எங்கிருக்கு?கீழே உள்ள படத்தை பார்க்கவும்.



சென்னையில் இருந்து நேரடி பேருந்து வசதி அப்போது இருந்தது.இன்று இருக்கிறதா என்று தெரியவில்லை.


தேவையான விபரங்களை வாங்கிக்கொண்டு கொஞ்ச நாள் விடுமுறை எடுத்துக்கொண்டு சென்னை போய் பிறகு புட்டபர்த்தி போகலாம் என்று முடிவுசெய்தேன்.

சென்னை வந்து சில காலம் சுற்றிவிட்டு, புட்டபர்த்திக்கு ஆந்திர போக்குவரத்து கழக பேருந்து நமது பழைய பாரீஸ் கார்னரில் இருந்து புறப்படும்,அதில் முன்பதிவு செய்துகொண்டு (ரூபாய் 87 என்று ஞாபகம்)புறப்பட்டு போனேன்.இதில் உள்ள இருக்கைகளுக்கு இடையே உள்ள இடைவெளி மிக மிக குறுகியதாக இருக்கும்.மேல் நாட்டவர்கள் அதிகமாகவே சிரமப்படுவார்கள்.

இரவு சுமார் 8 மணிவாக்கில் கிளம்பி காடு மேடுகளைத்தாண்டி காலை சுமார் 7 மணிக்கு புட்டபர்த்தி வந்துசேர்ந்தேன்.

மிகச்சிறிய பஸ் நிலையம்.இறங்கியதும் எங்கு போவது என்று தெரியாமல் ஏதோ ஒரு திசையை நோக்கி போய்கொண்டிருந்தேன்.

கையில் இருக்கும் ஒரே விலாசம் "பிராசாந்தி" நிலையம்.அது என்ன இடம்?யார் இருக்கிறார்கள் என்று எதுவும் தெரியாமல்,வழியில் உள்ளவர்களிடம் விஜாரித்து போனேன்.

வாசலில் "பிராசாந்தி" நிலையம் போர்டு பார்த்து உள்ளே போனேன்.ஒரு விதமான அமைதி.அதை விளக்குவது கஷ்டம்.பல காலங்கள் கழித்து இந்த மாதிரி இடங்களுக்கு போன போது என்னையறியாமலே இதை உணர்ந்தேன்.

வெள்ளை சீருடையில் பல மக்கள் எறும்புகளை போல் சாரி சாரியாக ஒரு திசையை நோக்கி போய்கொண்டிருந்தார்கள்.எங்கு போகிறார்கள் எதற்கு போகிறார்கள் என்று தெரியாமல் அவர்களை கொஞ்சம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

கொஞ்சம் நேரம் கழித்து,ஒருவரை அனுகி,நான் எல் & டி கம்பெனியில் வேலை செய்ய வந்துள்ளேன்.அவர்கள் அலுவலகம் எங்குள்ளது என்று காட்டமுடியுமா? என்றேன்.

அவர், நான் உள் நுழைந்த வாசலைக்காட்டி அங்கு காத்திருங்கள் உங்கள் ஜீப் வரும்,அவர்களை விஜாரித்தால் சொல்வார்கள் என்று எனக்கு மட்டுமே கேட்கக்கூடிய அளவில் சொல்லிவிட்டு,இன்னும் கொஞ்ச நேரத்தில் பஜன் ஆரம்பித்துவிடும் அதனால் வெளியில் காத்திருங்கள் என்றார்.அப்போது தான் புரிந்தது நான் பாபா தரிசனம் தரும் இடத்துக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்தது.

வெளியில் வந்து காந்திருந்த கொஞ்ச நேரத்தில் ஜீப் வந்தது.விபரம் சொன்னவுடன்,புற வழியில் போய் அலுவலகத்துக்கு போனேன்.

இங்கிருந்த ரெசிடென்ட் இன்ஜினியர் திரு.ரகுராமன்,முன்னமே மேட்டூரில் பழக்கமானவர் மற்றும் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்தவர்.மெதுவாகப்பேசக்கூடியவர்.

நான் போன சமயத்தில் இவர் தலைமையில் பக்தர்கள் தங்குவதற்காக பல மாடிகள் கொண்ட வீடுகளை கட்டிக்கொண்டிருந்தார்கள்.வெளிப்புற வேலைகள் முடிந்து உள் பூச்சு/ அலங்கார வேலைகள் நடந்துகொண்டிருந்தது.

அப்போது, கட்டிய வீடுகள் பக்தர்களுக்கு விற்கப்பட்டது.சுமார் 1 இலட்சம்.புட்டபர்த்தி வரும் போது தங்கிக்கொள்ளலாம்.மற்ற நேரத்தில் ஆசிரமம் தேவையானால் உபயோகித்துக்கொள்ளும். இந்த அடிப்படையில் எல்லா வீடுகளும் விற்கப்பட்டன.

இந்த தங்கும் விடுதி கூட மிக விரைவாக கட்டிமுடிக்க சாதாரண தொழிற்நுட்பத்துக்கு பதிலாக முன்னமே கட்டப்பட்டு தேவையான இடத்துக்கு கொண்டுவந்து தீப்பெட்டி மாதிரி அடிக்கிவைக்கிற மாதிரி கட்டினோம்.

நான் போகும் போது இந்த வீட்டு வேலை முடியும் தருவாயில் இருந்தது.

இப்படி எங்கள் வேலை போய்கொண்டிருக்கும் போது ஆசிரமத்தில் மேலும் ஒரு வேலை கொடுத்தார்கள்.அது தான் கேன்டின்.

புட்டபர்த்தியில் விரல் விட்டு எண்ணக்கூடிய விடுதிகளும் சாப்பாட்டு விடுதிகளும் தான் இருந்தது.இதனால் வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் படும் அவஸ்தையை சொல்லிமாலாது,அதுவும் பாபாவின் பிறந்த நாள் என்றால் கேட்கவேண்டாம்.


உணவு உண்ண சரியான இடம் கிடையாது.அதை மனதில் வைத்துக்கொண்டு,ஒரு கேன்டீன் கட்ட தயாராகுமாறு சொன்னார்கள்.

இது அத்தனையும் ஆஸ்ரமத்தின் உள்ளேயே நடந்தது.பல தேசங்களில் இருந்து வந்த பக்தர்கள்,எப்போது கூட்டம் கூட்டமாக வந்து போய்கொண்டிருப்பார்கள்.
ஒரு சமயம் இந்த விடுதிக்கான அஸ்திவாரம் போடும் போது ஒரு பக்தர் கூட்டத்தில் இருந்த ஒரு சில பெண்கள் வந்து ஒரு கட்டு காகிதத்தை கொடுத்து " இது சாய்ராமுக்காக எழுதியது,அந்த அஸ்திவாரத்தில் போட்டு மூடமுடியுமா?" என்றார்கள்.

என்னது கான்கீரீட் உள்ளே காகிதக்கட்டா?

வாங்க அடுத்த பதிவுக்கு.