Tuesday, January 30, 2007

இந்தோனிஷிய மணல்

இன்றைய நிலவரப்படி மற்ற எல்லா பிரச்சனைகளையும் ஓரம் கட்டிவிட்டு "மணல் " பிரச்சனை இங்கு முன்னனியில் உள்ளது.

ஆதாவது இது நாள் வரை சிங்கப்பூருக்கு வேண்டிய மணல் தேவையை பெரும் பகுதியை இந்தோனேஷியா பூர்த்திசெய்தது.ஆனால் தற்போது அங்கு நிலமை கையை மீறிப்போய் அவர்கள் நிலவளங்களில் பாதிப்பு தெரிய ஆரம்பித்ததால்,அரசாங்கம் மணல் ஏற்று மதிக்கு தடைவிதித்துள்ளது.

1997வில் மலேசியா மணல் ஏற்றுமதியை தடுத்தது,இப்போது இந்தோனஷியா.
இந்த தடை சிங்கப்பூருக்கு மட்டும் அல்ல.பெரும் பகுதி இங்கு வருவதால் இந்த தடை நாளிதழில் கட்டம் போட்டு காட்டக்கூடிய அளவுக்கு போய்விட்டது.

கீழே பார்க்க..



நன்றி: தி ஸ்டெரெயிட்ஸ் டைம்ஸ்

ஆமாம் இந்த சட்டம் எப்படி திடிரென்று வந்தது?இதற்கு முன்பே இதைப்பற்றி முடிவு செய்து இன்று அமல் செய்தார்களா? என்று தெரியவில்லை.மேலும் தேடிய போது வரும் 23ம் தேதிக்கு பிறகு மணல் வராது என்று தெரிகிறது.

நேற்று எனது ஹாட் மெயிலுக்கு ஒருவர் மெயில் கொடுத்து இந்தப்பற்றி கேட்டிருந்தார்.இதனால் சிங்கப்பூரில் எவ்வளவு பாதிப்பு இருக்கும்?இதைப்பற்றி கூட உங்கள் வலைப்பூவில் எழுதலாமே? என்று.

அவருக்கு பதில் அளித்துவிட்டு,சரி நம் மக்களுக்கு கட்டுமானத்துறையில் இப்படியும் ஒரு நிகழ்வு அதன் விளைவைப்பற்றியும் தெரிவித்துவிடலாம் என்ற நோக்கத்துடன் இந்த பதிவு.இவை அனைத்தும் என்னறிவுக்கு எட்டியமட்டும்.

ஒரு முன்னோட்டம்.

கட்டுமானத்துறைக்கு சிமின்ட் எவ்வளவு முக்கியமோ அது போல் மணலும்.கான்கிரீட் இல்லாமல் கட்டுமானம் இல்லை.

இப்படி ஒரு முக்கியமான பொருள் கட்டுமானத்துறைக்கு கிடைப்பதில் பிரச்சனை என்றால் என்ன செய்யவேண்டும் சில அமைச்சர்கள் மற்றும் கட்டுமானத்துறையில் இருப்பவர்கள் சொல்லி வருகிறார்கள்.இங்கு மண் லாரிம் இல்லை மணல் உள்ள நதியும் இல்லை.அதனால் நம்மூரில் தோண்டுவது போல் தோண்டமுடியாது.

"இந்த சூழ்நிலையில் கட்டிடங்களில் என்கெங்கு கான்கிரீட்டை போட வேண்டாமோ அங்கே ஸ்டீல் பொருளை உபயோகிக்க வேண்டும்" என்று ஆலோசனை சொல்லப்பட்டுள்ளது.
இந்தமாதிரி ஆலோசனை அப்படியே எல்லா இடங்களிலும் உபயோகப்படுத்த முடியாது.

உதாரணத்துக்கு,மாடிப்படிகளை இரும்பில் செய்வது.

ஒரு கட்டிடம் எழும்பும் போது நல்ல கட்டுமான அதிகாரியாக இருந்தால்,முதலில் மாடிப்படிகளை கட்டும் பணியை துரிதப்படுத்துவார்,எதெற்கென்றால் ஊழியர்கள் பணியிடத்துக்கு ஏறி இறங்க மற்றும் சிறிய பொருட்களை எடுத்து செல்ல இது ஒரு பாதுகாப்பான முறை.அப்படியே வேலையும் முடிந்த மாதிரி இருக்கும்.

கான்கிரீட்டுக்கு பதில் இரும்பில் போடுகிறோம் என்றால் பாதி வேலை நடந்துகொண்டிருக்கும் போதே மேலே இருந்து விழும் சின்னச்சின்ன பொருட்கள் மற்றும் சிதறும் கான்கிரீட்களால் அந்த மாடிப்படியை நிரந்தரமாக வைத்திருக்கமுடியாது.ஒரு மாடிப்படிகாக 2 மாடிப்படிகள் செய்யவேண்டிவரும்.
மற்றும் துருபிடித்தல்,பெயிண்ட் அடித்தல் போன்ற மராமத்து வேலைகலை அடிக்கடி செய்யவேண்டி வரும்.

அடுத்து தூண் மற்றும் சிலாப்..

மேலே உள்ள படத்தில் குறிப்பிட்ட மாதிரி 80%~100% சேமிக்க முடியும் என்கிறார்கள்.அவர்களுக்கு எப்படி இந்த விபரம் கிடைத்தது என்று தெரியவில்லை.தூண் தான் இரும்பு அதன் உள்ளே கான்கிரீட்.அதை மறந்துவிட்டார்கள் போலும்.

சிலாப்.. படத்தில் காட்டிய மாதிரி ஓரளவுக்கு மிச்சப்படுத்தலாம்,ஆனால் தேவையில்லாமல் செப்டம்பர் 11 ஞாபகம் வருகிறது.பாதுகாப்பு பிரச்சனை இங்குள்ளது.

கைப்பிடிச்சுவர்: இதில் கான்கிரீட் அளவு குறைவு அதனால் மணல் சேமிப்பும் குறைவு.இரும்புக்கு மாறினால் மராமத்து வேலைகளை அடிக்கடி மேற்கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் துருபிடித்த இரும்பு மேலும் தலைவலியை கொடுக்கக்கூடும்.

செங்கல்சுவர்: இதிலும் மணல் உபயோகம் குறைவு.இதிலும் மிச்சப்பிடிக்க வேண்டுமெனில் அவர்கள் சொன்ன வழியை கடைப்பிடிக்க வேண்டும்.

இந்த பிரச்சனை வரும் வரை மணல் விலை $20/டன் விற்றுக்கொண்டிருந்தது அது இப்போது $50/டன் வரைப்போகும் என்று தெரிகிறது என்ற ஊகங்கள் நாளிதழ்களில் வரத்தொடங்கிவிட்டது.இதனால் கட்டுமானத்துறையில் உள்ளவர்களின் செலவு ஏறும்.வீடு விற்க்கும் விலையும் ஏற வாய்ப்புள்ளது.

கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு பின்பு இப்போது தான் கட்டுமானத்துறை எழுந்து நிற்க ஆரம்பித்துள்ளது,இந்த சமயத்தில் இப்படி பட்ட பிரச்சனையை மிக ஆழமாக கையாளுகிறது இங்குள்ள அரசாங்கம்.

"கான்கிரீட்டுக்கு பதில் இரும்பு" ஓரளவே எடுபடும்.

இப்போது தெரிகிறதா இதன் வீரியம்?அதனால் தான் நாளிதழ்களில் கட்டம் கட்டி சொல்கிறார்கள்.

பார்ப்போம் எப்படி சமாளிக்கிறார்கள் என்று.

Monday, January 29, 2007

தண்ணீர் கசிவு

போன பதிவில் கான்கிரீட்டில் தோன்றும் விரிசலும் அதன் மூலம் தண்ணீர் கசிவையும் பற்றி மேலோட்டமாக பார்த்தோம்.

கீழே உள்ள படத்தை பார்க்கவும்.




உதாரணத்துக்கு நிலத்துக்கு கீழே போடப்படும் அஸ்திவாரமும் அதற்கு அடுத்து போடப்போகும் சுற்றுச்சுவரின் குறுக்கு வெட்டுப்படம் கீழே போட்டுள்ளேன்.


அஸ்திவாரம் போடும் போது,வெளிப்புரத்தில் காட்டியபடி ஒரு ரப்பர் டைப்பில் உள்ள ஒரு தட்டை வைத்து கான்கிரீட் போடுவார்கள்.இது பாதி கீழ் கான்கிரீட்டிலும் மீதி சுற்றுச்சுவர் கான்கிரீட்டில் பதியுமாறு பொருத்தப்படும்.இதனால் வெளியில் இருந்து வரும் தண்ணீர் உள்ளே வருவது தடுக்கப்படும்.

இது ஒரு வழி.

மற்றொரு வழி

அஸ்திவாரம் மற்றும் சுற்றுச்சுவர் இடையே உள்ள ஜாயின்ட் இல் கீழ்கண்ட மாதிரி ஒரு குழாயை பொருத்துவார்கள்.அதன் வாய் பக்கம் சுவர் கான்கிரீட்டுக்கு வெளியில் இருக்கும்.



கலர் படங்கள் கீழே




இப்படி பொறுத்தியபிறகு சுவர் கான்கிரீட் போடப்படும்.அந்த குழாய் முற்றிலும் கான்கிரீட் உள்ளே புதைந்துவிடும்.

இப்போது அந்த ஜாயின்ட் மூலம் தண்ணீர் கசிந்தால் மட்டுமே இந்த குழாய் உபயோகப்படும்,இல்லாவிட்டால் அப்படியே விட்டுவிடுவார்கள்.இது ஒரு வருமுன் காக்கும் தற்காப்பு நடவடிக்கை தான்.

சரி தண்ணீர் கசிகிறது என்றால்,இந்த குழாய் பொருத்திய குத்தைகாரர்களே அதற்கான உபகரணங்களுடன் வந்து தேவையான கெமிகல்களை கொண்டு பம்ப் மூலம் அந்த குழாயில் செலுத்துவார்கள்.இந்த ரசாயன கரைசல் தண்ணீருடன் கலந்து விரிய ஆரம்பிக்கும்..இந்த கரைசல் தண்ணீர் இருக்கும் இடங்களில் நன்றாக வேலைசெய்கிறது.இது நான் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு சிங்கையில் பார்த்த தொழிற்நுட்பம்.


இந்த தொழிற்நுட்பத்தை இப்போது எப்படி மாற்றிஅமைத்துள்ளார்கள் என்று அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Friday, January 26, 2007

விரிசல்

கான்கிரீட் விரிசல்


கான்கிரீட்டின் பயன்பாடு என்பது கட்டுமானத்துறையில் முதுகெலும்பு போல்.அது இல்லாமல் இப்போது எந்த கட்டிடமும் கட்டப்படுவதில்லை.

ஆந்திரா பக்கம் போனால் இன்னும் சில கிராமங்களில் கிடைக்கும் கடப்பா கற்களை மட்டும் வைத்து அடுக்கி வீடு கட்டியிருப்பார்கள்.இங்கு சிமின்டுக்கு வேலையில்லாமல் போகிறது.ஏன் நம் பக்கம் இன்னும் சில கிராமங்களில் மண் சுவர் தான்,மேலுக்கு கீத்துக்கொட்டகை தான்.

இன்று கான்கிரீட் பல விதங்களில் பல நிறங்களில் கூட வருகிறது.அதன் நிறம் அது ஈரமாக இருக்கும் போது தான் தெரியும்.அதுவும் அது எந்த வகை சிமின்ட் மூலம் கலக்கப்படுகிறதோ அதன் நிறம் தெரியும்.

பெரிய பெரிய கட்டுமானப்பணியில் இப்போது கலவை இயந்திரம் வைத்து ஆட்களைக்கொண்டு ஜல்லி,மணல் மற்றும் சிமின்ட் போடுவதில்லை.அதற்குப்பதிலாக பேட்சிங் பிளான்ட் வைத்து அதன் மூலம் கலந்து ஓடும் கலவை இயந்திரம் மூலம் அந்தந்த இடத்துக்கு அனுப்பிவைப்பார்கள்.இப்படி பல வேலைகளை இயந்திரத்துக்கு மாற்றியதால் தரக்கட்டுப்பாடு 90% வரை அடையமுடிகிறது.

கான்கிரீட் கலக்கும் பேட்சிங் பிளான்ட்

இப்படி தரக்கட்டுப்பாடு அமைந்ததால் போடும் கான்கிரீட்டில் பிரச்சனை இருக்காது என்று பொருளாகாது.

அதுவும் தரைக்கு கீழ் கான்கிரீட் போடும் வேலை என்றால் பல விஷயங்களில் கவனம் வேண்டும்.எல்லாவற்றையும் செய்தாலும் ஒன்றே ஒன்று மட்டும் நமக்கு தப்பாமல் தண்ணிகாட்டும் அது தான் "தண்ணீர்".ஆதாவது கான்கிரீட் மூலம் தண்ணீர் ஒழுகுவது.

ஏன் இப்படி நடக்கிறது?

ஒரு சில காரணங்கள்..

கான்கிரீட் போடும் போது உபயோகிக்க வேண்டிய அதிர்வு இயந்திரம் (Viberator) சரியாக உபயோகப்படுத்தாது,அல்லது தேவையான அளவு போடாமல் போனாலும் கான்கிரீட் உள்ளேயே சிறிய ஓட்டைகள் உருவாகிவிடும்.இந்த ஓட்டைகள் மூலம் தண்ணீர் கசிய வழிபிறக்கும்.

மற்றது,போட்ட கான்கிரீட்க்கு பக்கவாட்டிலோ,மேலேயோ வரும் பாரம் அதன் மறுபக்கத்தில் சிறு விரிசலைக்கொடுத்து அதன் மூலமும் தண்ணீர் வர வழிவகுக்கும்.

மூன்றாவதாக பழைய மற்றும் புதிய கட்டுமான ஜாய்ன்ட் யில் சரியாக பராமரிக்காமல் போடப்படும் கான்கிரீட் மூலமும் வரும்.

இப்படி பல வழியாக வரும் தண்ணீருக்கு நாம் எப்படி தண்ணி காட்டப்போகிறோம் என்பதைப் பற்றி தான் வரும் பதிவுகளில் எழுதப்போகிறேன்.

முதலில் கான்கிரீட் ஏன் விரிசல் விடுகிறது? இங்கே சொடுக்கவும்



http://www.lmcc.com/news/spring2002/spring2002-7.asp


இன்னும் மேல் விபரங்களுக்கு இங்கும் பார்க்க


http://www.lmcc.com/news/summer2006/summer2006-04.asp

Wednesday, January 24, 2007

ஸ்ரீமான் ஹரிஹர சுப்பிரமணியம்.

போன பதிவில் கட்டுமானத்துறையில் இருக்கும் சில ஓட்டைகளை பற்றி சொன்னேன்.
இந்த ஓட்டை,நேர்மை இல்லாத தலைமை அதிகாரிக்கும் ஓரளவு கணக்காயருக்கும் விளையாட வசதியாக இருக்கும் என்பது கசக்கும் உண்மை.இது ஒரு உதாரணம் தான் இப்படி பல சமயங்களில் விதியை மீற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.பல கட்டுமான கம்பெனிகள் நொடித்துப்போக நேர்மையில்லாத அதிகாரிகளிடம் பொறுப்பைவிட்டு விட்டு முந்திரிபருப்பு சாப்பிட்டுக்கொண்டிப்பதால் ஏற்படுபவை.எப்படி எப்படியெல்லாம் முதலாளியை/கம்பெனியை ஏமாற்றமுடியும் என்று இங்கு சொல்லப்போவதில்லை,அது என் எண்ணமும் கிடையாது.



திரு.ஹரிஹர சுப்பிரமணியத்துடன் நடந்துகொண்டிருந்த பேச்சு வார்த்தை தொடர்ந்தது.
எங்கள் பேச்சு இப்படியே போய் யாரும் விட்டுக்கொடுக்காத நிலையில், சரி சார்,நான் என் வேலையை பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.தலைமை அதிகாரிக்கு என்மேல் சற்று கோபம் இருந்தாலும் என்னை அவர் வெறுக்கவில்லை.வெகு சில சமயங்களிலேயே அவர் கோபப்பட்டு பார்த்திருக்கேன்.பதிவுசாக நடந்துகொள்பவர்களுக்கு கட்டுமானத்துறை ஒத்துவராது என்ற என் எண்ணத்தை உடைத்தவர் இவர் தான்.அவர் சொல்லநினைப்பதை நகைச்சுவை சேர்த்துசொல்வார்.புரிகிறவர்களுக்கு பட்டென்று புரிந்துவிடும்.ஒரு உதாரணம்.
ஏதோ விஷயமாக என்னை கூப்பிட்டு அவர் அறையில் பேசிக்கொண்டே ஏதோ எழுதிக்கொண்டிருந்தார்.ஒரு வேலையில், ஒப்பந்தக்காரை ஈடுபடுத்திய வேலை ஆட்கள் விபரம் மற்றும் தேதிகள் உள்ளனவா? என்றார்.



இல்லை என்றேன்.(இது என்னுடைய வேலையில்லை-அப்போது)



பிறகு கொஞ்சம் நேரம் பேசிவிட்டு நான் அறையை விட்டு வெளியே கிளம்பும் போது ஒரு சிறிய பேப்பரை கொடுத்தார்.



அதில் கீழ்கண்ட படத்தை போட்டு அதில் ஒரே ஒரு வரி










"Do Paper Work" என்று அர்த்தம் வரும் தொனியில் நச்சென்று சொல்லியிருந்தார்.அந்த காகிதத்தை எங்கோ சேகரித்து வைத்தேன் இப்போது கண்ணில் படவில்லை.
தலைமை அதிகாரி இப்படியென்றால் என்னுடைய முதல் அதிகாரி திரு.T.S.ஜனார்த்தனன்(மதுரைக்காரர்),மிகவும் சாந்தமாக உரையாடுபவர்.தில்லு முல்லு தெரியாதவர்.இவர் வேகப்பட்டு பேசும் போது அவரது போலியான கோபம் முகத்தில் தேங்கியிருப்பது அப்பட்டமாக தெரியும்.அந்த அளவுக்கு அப்பிரானி மனிதர்.குணவான்.



எனக்கு தூசி உவாமை இருந்த போது அதை எப்படி போக்குவது,யோகா,மூச்சுப்பயிற்சி என்று பல விதங்களை எடுத்துறைத்து ஓரளவு குணப்படுத்த வழிமுறையை காண்பித்தார்.தொடர்ச்சியான ஜலதோஷம் இருக்கும் போது அவர் சொன்ன மருத்துவம் இது தான்.





மெழுகுவர்த்தி அல்லது விளக்கில் ஒரு மிளகை சுடவைத்து அந்த புகையை இழுத்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது.மற்றொன்று தண்ணீரை நன்கு சுடவைத்து பாத்திரத்தை மூடி வைத்துவிட்டு,போர்வை அல்லது கம்பளி போர்த்திக்கொண்டு பாத்திரத்தின் மூடியை திறந்து அதன் ஆவியை பிடிக்கவேண்டும்.சில மணித்துளிகளில் நல்ல பலன் கிடைக்கும்.எனக்கு கிடைத்தது.தேவையென்றால் யூகலிப்டஸ் அல்லது அமிர்தான்ஜன் கொஞ்சம் சேர்த்துக்கொள்ளலாம்.



இந்த சைட் கடலறுகே இருந்ததால் ஒரு முறை புயலையும் எதிர்கொண்டோம்.விடாமல் 3 நாட்கள் மழை.அப்போது தான் ஒரு கப்பல் இந்த புயலில் சிக்கி இங்கு வந்து தரை தட்டியது.இன்சூரன்ஸ்க்காக விட்டு விட்டார்கள் என்றார்கள்.எவ்வளவு நிஜம் என்பது தெரியவில்லை.கப்பலை பக்கத்தில் சென்று பார்க்கும் வாய்பு கிடைத்தது.யம்மாடி தரையில் நிற்கும் போது எவ்வளவு பெரிதாக இருக்கு.அதில் வேலை செய்யும் மக்கள் கயற்றேனியில் ஏறி இறங்கிக்கொண்டிருந்தார்கள்.ரொம்ப பக்கத்தில் விடவில்லை.சில நாட்கள் கழித்து டக் போட் மூலம் கடலுக்குள் இழுத்துவிடப்போவதாகவும் சொன்னார்கள்.முடிந்ததா என்று தெரியவில்லை.


கிட்டத்தட்ட இந்த படத்தில் இருந்த மாதிரி தான் இருந்தது.



காகிநாடாவில் இருக்கும் வேலைகள் முடியும் தறுவாயில் ஒவ்வொருவராக மாற்றலாகிக்கொண்டிருந்தார்கள்.


அப்போது பல பெரிய வேலைகள் புட்டர்பர்த்தியில் வரப்போவதாகவும் அங்கு தான் மாற்றல் வரும் என பேசிக்கொண்டிருந்தார்கள்.என்னுடைய முதன் அதிகாரியும் அங்கு தான் போகப்போவதாக சொன்னார்.


புட்டபர்த்தி என்றவுடன் ஞாபகத்துக்கு வரும் சாய்பாபா தான் எங்களுக்கும் வந்தது.அப்போது அவர் செய்யும் பல அதிசியங்கள் (சித்து வேலை?) எனக்கு நம்பிக்கையில்லை.அதனால் பலமாக விமர்சனம் செய்வேன்.கடவுளை அடைய அவர் இந்த மாதிரியான வேலைகளை செய்யவேண்டாம்.இதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை.அவர் இந்த மாதிரி மக்களை ஏமாற்றக்கூடாது என்று எனக்கு தோன்றிய தத்துவங்களை சொல்லிக்கொண்டிருந்தேன்.ஒருவேளை எனக்கு அங்கு மாற்றல் இருக்காது என்ற தைரியமோ என்னவோ தெரியாது.பக்தர்களுக்கு கடவுளைக்காட்ட இது சரியான முறையில்லை என்பது என்னுடைய கருத்து,அப்போது,இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த என் முதன்மை அதிகாரி,வெங்கடேசா,நான் கூட அவர் பக்தர் கிடையாது.ஒருவரைப்பற்றி சரியாக தெரிந்துகொள்ளாமல் ஏதும் சொல்லாதே.நமக்கு தெரியாதது எவ்வளவோ அதில் இதுவும் ஒன்று.


இப்படி சொன்ன முதன்மை அதிகாரிக்கு கிடைத்தது என்ன தெரியுமா?


வாங்க அதை மற்றொரு சமயத்தில் சொல்கிறேன்.


இப்போது புட்டபர்த்தியில் உஷ்ணம் அதிகமாக இருப்பதால்,அதைப்பற்றி சிறிது பதிவுகளுக்கு பிறகு எழுதுகிறேன்.

:-))

Friday, January 19, 2007

தலைவருக்கு ஏற்ற தலைவி.

காலை 9 மணி வாக்கில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.முன் பின் கேட்டிராத குரல். ஏற்கனவே இங்கு வருவதாக சொல்லியிருந்ததால்,நலம் விசாரித்துவிட்டு எங்கு தங்கியிருக்கிறீர்கள் என்று விஜாரித்துவிட்டு,உங்களுக்கு நேரம் இருந்தால் மாலை 7.30 மணி வாக்கில் நேரில் சந்திக்கலாம் என்று சொன்னேன்.திரு.கோவி.கண்ணனும் வருவதாக அவர் சொன்னார்.

ஆமாம் உங்கள் அறை எண்?

இன்னும் அறைக்கு போகவில்லை,போனதும் பிறகு தொலைபேசுகிறேன் என்றார்.
நன்றி என்று சொல்லிவைத்தேன்.

என் வீடு என்று ஒன்று இருந்திருந்தால் என் வீட்டுக்கே அழைத்துவந்திருக்கலாம் என்ற நினைப்பு உள்ளூர ஓடிக்கொண்டிருந்தது.என்ன பண்ணுவது ஹரி வரேன் என்ற போது வீடு இருந்தது அவரால் வரமுடியவில்லை இப்போது அதற்கு நேர் எதிராக இருந்தது.

மாலை வேலை முடிந்துவீட்டுக்கு மின் வண்டியில் ஏறும் போது வரை அவரிடம் இருந்து அழைப்பு வராததால்,சரி எங்கோ இருக்கிறார்கள் போலும் அதனால் அழைக்கமுடியவில்லை என்று நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில்,எதற்கும் கோவியாருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பிப்பார்ப்போம் என்று அனுப்பினேன்.

என்னுடைய பெயர் குழப்பத்தில் கொஞ்சம் தடுமாறிய பிறகு,அவருடன் பேசினேன்.அவரும் 7 மணிவாக்கில் அங்கு போகப்போவதாகச் சொன்னார்.அறை எண் தெரியாவிட்டாலும் அங்குள்ள வரவேற்பறையில் கேட்டுக்கொள்ளலாம் என்றார்.
அப்படியென்றால் நான் 7.30 போல் வருகிறேன் என்றேன்.

வீட்டிற்கு வந்து குளிக்க கிளம்பலாம் என்னும் போது அந்த நபரிடம் இருந்து அழைப்பு வந்தது.எங்கள் அறை எண் 1804.

அவரிடமும் 7.30 வாக்கில் வருவதாகச்சொல்லி தொலைபேசியை வைத்தேன்.
குளித்து,சந்தியாவந்தனம் முடித்து பேருந்து பிடிக்கும் சமயத்தில் மழை தூரலும் ஆரம்பித்தது.

சுமார் 35 நிமிடங்கள் பிரயாணம் செய்த பிறகு,உரிய இடத்தில் இறங்கி ஹோட்டலை அடைந்தேன்.மணி 7.35.

இதற்கிடையில் கோவியாரிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி,தான் வாகன நெரிசலில் மாட்டிக்கொண்டிருப்பதாகவும் வர 7.30 மணியாகிவிடும் என்று அந்த நபரிடம் சொல்லிவிடவும் என்றார்.அப்போது நான் இருக்கும் இடம் மற்றும் விடுதியை அடையப்போகும் நேரத்தை கணக்குப்பண்ணி பார்த்தபோது நானே அந்த சமய்த்துக்குத்தான் அங்கு போகமுடியும் என்று தெரிந்தது.அதையே கோவியாருக்கு குறுஞ்செய்தியாக அனுப்பினேன்.

மின்தூக்கிக்குள் போனதும் தான் மண்டையில் உறைத்தது எந்த தளம் என்று கேட்க மறந்ததை.இருந்தாலும் பெரும் பாலான விடுதிகளில் அதன் தளமும் அறை என்னுடன் சேர்ந்திருக்கும் என்பதால் 4 வது மாடியா 18 வதா என்ற குழப்பம் வந்தது.மின்தூக்கியைவிட்டு வெளியே வந்தவுடன் கண்ணில் பட்ட தமிழரிடம் 1804 எந்த மாடி? என்றேன்.

18வது மாடி.

நன்றி சொல்லிவிட்டு,1804 அறையின் அழைப்பானை அழுத்தியபோது 7.41.
திறந்தவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு.உள்ளே பார்த்தால் எனக்கு முன்பே கோவியார் அங்கிருந்தார்.

முன்பே ஏதோ வலைதலத்தில் அவருடைய சிங்கை விசிட் படங்கள் இருந்ததால் அவருக்கும் முகமண் செய்துவிட்டு நாற்காலயில் அமர்ந்தேன்.
பேச ஆரம்பிக்கும் முன்பே கோவியார் தன்னுடைய குடும்பத்தை அறிமுகம் செய்துவைத்தார்.நல்லவேளை, இல்லாவிட்டால் நான் சந்திக்கப்போகும் நபரின் பெண்ணோ என்று அனுமானித்திருப்பேன்.

பல பல விஷயங்களை பற்றி பேசினோம்.எப்படி வலைப்பூவில் நுழைந்தது,அதற்கு முன்பு யார் யாரோடெல்லாம் நட்பு கிடைத்தது என்று சொன்னார்.
இந்திய பயணங்கள் போது யார் யாரோடு எல்லாம் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது என்பது பற்றி சொன்னார்.அதற்கிடையில் தன்னுடைய மறுபாதி அமெரிக்கா போனபோது அங்கு சந்தித்த
இலவசகொத்தனார்
இரவிசங்கர் (கண்ணபிரான்)
இன்னும் சிலருடைய பெயர்களைச்சொன்னார் ஞாபகத்தில் இல்லை.விட்டவர்கள் மன்னிக்கவும்.

கோவியாரின் துணைவி மறக்காமல் .... தொடரில் வந்த கைவிரல் பற்றியும் கேட்டார்.பின்னூட்டம் போடாமல் ரசிக்கும் ரசிகைகளில் ஒருவர் போலும்.பலதை ஞாபகம் வைத்துகேட்டுக்கொண்டிருந்தார்.அப்பு கமல்ஹாசன் யை கம்பேர் செய்து விரலையும் காட்டினார்..மறுபாதி.

கோவியார்,அவர்களிடம் புத்தகம் போடும் எண்ணத்தைப்பற்றி பேசிக்கொண்டிருக்கும் போதே நான் மறுபாதியிடம் உங்கள் தொழிலைப்பற்றி தெரிந்துகொள்ளலாமா என்று கேட்டேன்.சொன்னவுடன் அதில் எனக்கு இருந்த ஒரு சந்தேகத்தை கேட்டேன்.பொறுமையாக விளக்கம் கொடுத்தார்.

வலைப்பூ எழுதுபவர்கள் சந்தித்தால் சாப்பிட்டதை எழுதியே ஆகவேண்டும்.:-))
அதையும் ஏன் விடுவானே..

போன சிறிது நேரத்திலேயே,மறுபாதி பெரிய பெரிய பலாப்பழச் சுளை (எனக்குப்பிடித்த பழங்களில் ஒன்று) கொடுத்து உபசரித்தார்,கூடவே மைசூர் பாகும் வந்தது.

இப்படி போய்கொண்டிருக்கும் போதே,அறையில் உள்ள மின்சாரத்தில் கோளாறு,சிங்கையில் கேள்விப்படாத மின்துண்டிப்பு ஏற்பட்டது.அறை கதவை திறந்து வைத்துக்கொண்டு பேசினோம்.இடையில் விடுதியின் நிர்வாகத்துக்கு தொலைபேசி விபரத்தை சொன்னபிறகு சுமார் 15 நிமிடங்கள் கழித்து மின் இணைப்பு வந்தது.
குழுப்புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட பிறகு சுமார் 9 மணிவாக்கில் இரவு உணவு உண்ண பக்கத்தில் உள்ள "ஆனந்த பவன்" போனோம்.சாப்பிடோம்.

இலவச காபி கிடைத்தது.இது எப்படி கிடைத்தது என்பதை என்னைவிட அவர்கள் சுவாரஸ்யமாக எழுதுவார்கள் என்பதால்,நகர்ந்துவிடுகிறேன்.

இந்த ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே வலைப்பூவில் பின்னூட்டம் பற்றிய பேச்சு எழுந்தது.
நல்ல பதிவு
படித்துவிட்டேன்,அப்புறம் வந்து பின்னூட்டம் இடுகிறேன்
.
இப்படி பலவற்றை பேசி சிரித்தோம்.

திரு SK மற்றும் திரு ஞானவெட்டியான்,திரு சிவகுமார்,திரு ஹரிஹரன்,திரு பாலபாரதி,திரு.PKB,திரு சிவபாலன்..இவர்கள் பதிவைப்பற்றியும் பேசினோம்.(சிலருடைய பெயர்கள் உடனே ஞாபகம் வரவில்லை,மன்னிக்கவும்)

"நாளை சனிக்கிழமை" இதை மட்டும் எழுதி ஒரு பதிவு போட்டால் போது பின்னூட்டம் குவியும் என்று உதவிக்குறிப்பு கொடுத்தார் அந்த பதிவர்.இன்றும் அதை நினைத்து அலுவலகம் மற்றும் ரயிலில் சிரித்துக்கொண்டு வருகிறேன்.அன்று இரவு தூங்குவதற்க்கு கூட நேரமாகிவிட்டது.நிறைய சிரித்தால் மனது மிகவும் fresh ஆக ஆகிவிட்டது.
எல்லாம் முடிந்து வீடு திரும்பும் போது இரவு மணி 10.40 .

ஆமாம் அது "யார்" என்று சொல்லவில்லையே என்கிறீர்களா?

அங்கங்கு உதவி குறிப்புகள் இருந்தாலும்...

அவர்தான் நமது வலைப்பூவின் பின்னூடத்தலைவி "திருமதி.துளசி கோபால்"

மறுபாதி மறுபாதி என்று இங்கு அழைத்தை தவறாகக்கொள்ள மாட்டார் என்று நினைக்கிறேன்,அவர் தான் திரு.கோபால்.

ஒரு சின்ன பின்குறிப்பு: திரு கோபாலுக்கு படிக்க பிடித்தது "பின்னூட்டம்" தான்.

தலைவருக்கு ஏற்ற தலைவி??

மிச்சம் மற்றவர்கள் பதிவில் வரும்.வரலாம்.

Thursday, January 18, 2007

கால்குலேட்டர்

திரு பாபுராஜ் வேலைக்கு ஆள் எடுக்க எத்தனிக்கும் போதே ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திவிட்டேன்.இங்கு வேலைக்கு வரும் ஆள் நான் ரிக்கர்/வெல்டர் வேலைதான் பார்ப்பேன் என்று சொல்லக்கூடாது.எல்லா வேலையும் கலந்து பார்க்கவேண்டும்.அதற்கு தயாராக இருந்தால் அழைத்து வா,இல்லாவிட்டால் வேண்டாம் என்றேன்.வேலை 12 மணி நேரம் அதனால் இரண்டு குரூப் வேண்டும் என்றேன்.

புதிதாக ஒரு ஒப்பந்த வேலை கிடைத்த தெம்பு,நாலு காசு பார்க்கப்போகிறோம் என்ற நினைப்பு அவரை உந்த,தனக்கு தெரிந்த மற்றும் நண்பர்களைக்கொண்டு ஒரு சிறிய குழுவை தயார்படுத்தினார்.

கொஞ்சம் கொஞ்சமாக இந்த வேலையை புரிந்துகொண்டு அதற்கேற்ப ஆட்களை தயார்படுத்திய பிறகு கட்டிடம் மேலே போவதைக்கண்ட தலைமை அதிகாரி அந்த சைட் பக்கமே வரவில்லை.எல்லாவற்றையும் அலுவலகத்தில் இருந்தே கண்கானித்துக்கொண்டிருந்தார்.அவர் இப்படி இருந்ததும் எங்களுக்கு ஒரு விதத்தில் சௌகரியமாக இருந்தது.எங்கள் வேலையை நாங்கள் பழுதில்லாமல் பார்க்கமுடிந்தது.

இப்படிப்பட்ட ஒரு தலைமை அதிகாரியுடனும் மோத வேண்டிய சமயம் வந்தது.


(இடமிருந்து வலமாக:சம்சுதீன்,நான்,T.S.சங்கர்,ராஜேந்திரன்.)

பல கட்டுமானத்துறை வேலை இடங்கள் அலுவலகங்கள் ஒரு சிறிய அறை இருக்கும் அதற்கு பக்கத்தில் இன்னொரு அறை,தட்டுமுட்டு சாமான்கள் போட்டு வைப்பதற்கென்று.கதவு என்று ஒன்று இருந்தாலும் வேலை ஆட்களும் நாங்களும் பகிர்ந்துகொள்ளும் மாதிரியே இருக்கும்.அதனால் வாசல் கதவை பூட்டமுடியாது.அதே மாதிரி நாங்கள் வரைப்படம் மற்றும் சில அலுவலக கடிதங்களை வைத்துக்கொள்ள மேஜை இருக்கும் ஆனால் பூட்டி வைக்க ஏதுவாக இருக்காது அதனால் எப்பவுமே திறந்துதான் இருக்கும்.

அன்றாட வேலைகளுக்கு உதவியாக இருக்க கால்குலேட்டர் (கம்பெனி செலவில்) வாங்கி எனது டிராவரில் வைத்திருந்தேன்.பல காலம் அப்படியே தான் இருந்தது.திடிரென்று ஒரு நாள் உபயோகப்படுத்தலாம் என்று தேடியபோது தான் காணாமல் போனது தெரிந்தது.

இப்படி நடப்பது எல்லா இடங்களில் சகஜம்.அதனால் நான் கவலைப்படவில்லை.சைட்டை விட்டு மாறுதல் ஆகி போகும் போது எங்கள் பேரில் இருந்து நீக்கிவிடுவார்கள்.

ஆனால் இந்த சைட்டில் பல கால்குலேட்டர்கள் காணாமல் போனதால் மற்றும் புதிதாக வாங்க ஆர்டர் போட வேண்டியிருந்ததால்,யார் யார் கால்குலேட்டர்கள் காணாமல் போயிருக்கிறது என்று கணக்கு எடுத்து,அதில் எவ்வளவு தொலைந்து போய்யிருக்கிறது என்று கணக்கு எடுத்து தலைமை அலுவலகத்துக்கு அனுப்பினார்கள்.

தலைமை அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு என்னாயிற்று?? வந்த விபரங்களை பார்த்துவிட்டு ரூல்ஸ் படி என்ன செய்யவேண்டும் என்று சைட்டில் உள்ள கணக்காயருக்கு கடிதம் அனுப்பிவிட்டனர்.ஆதாவது தொலைந்து போன ஒவ்வொரு கால்குலேட்டருக்கும் 50% பணத்தை தொலைத்தவர்களிடம் இருந்து இழப்பீடாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்று.

அதை அப்படியே கணக்காயர் என்னிடம் சொன்னார்.

நான் கட்டமுடியாது என்று சொன்னேன்.ஒரு சைட்டின் கணக்காயர் வேலை இடத்துக்கு மற்றும் பாதுகாப்புக்கும் தேவையான உபகரணங்களையும் கொடுக்கவேண்டும் அல்லது ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும்.இங்கு அந்த இரண்டும் செய்யப்படவில்லை.சைட் ஆபீசுக்கு பூட்டு கிடையாது வைத்துக்கொள்ளும் மேஜைக்கும் பூட்டும் வசதி கிடையாது.தவறு உங்களிடம் இருக்கும் போது நான் ஏன் பணம் கட்டவேண்டும்? என்று கேட்டேன்.

இந்த மாதிரி விவகாரங்களை மேல் அலுவலகத்துக்கு எழுதுவதற்கு முன்பு இங்குள்ள தலைமை அதிகாரியிடம் கேட்டு தான் அனுப்புவார்கள்.அதுவும் இங்கு பின்பற்றவில்லை.

இப்படியே இந்த இழு பறி போய்கொண்டிருந்த போது ஆடிட்டிங் வந்ததால் அதை மூட வேண்டிய அவசியம் வந்தது.கணக்காயார் கூப்பிட்டு தலைமை அலுவலகத்தில் இருந்து வந்த கடிதத்தை காண்பித்து என்னிடம் கொடுத்தார்.

இது மேலும் கோபத்தை வரவழைத்தது.அதை இந்த கையில் வாங்கி அடுத்த சில நாட்களில் எங்கள் ரீஜனல் இன்ஜினியருக்கு(இன்று அவர் தலைமை நிர்வாகி) மேல் சொன்னவற்றையெல்லாம் விளக்கி ஒரு கடிதம் எழுதினேன்.

இப்படிதான் கம்பெனியில் லாபத்தை பெருக்கவேண்டுமென்றால் நான் 50% என்ன? கால்குலேட்டரின் முழுவிலையையும் கொடுக்கிறேன் என்று முடித்திருந்தேன்.அப்படியே முழு தொகையையும் கட்டினேன்.

இந்த கடிதம் அவர் கைக்கு கிடைத்த மறுவாரமே அது எங்கள் சைட்டின் அதிகாரி திரு.ஹரிஹர சுப்பிரமணியத்துக்கு திருப்பி அனுப்பபட்டது.அதைப்பார்த்தவுடன் அவருக்கு கோபம் ஏற்பட்டிற்க வேண்டும்,கூப்பிட்டனுப்பினார்.

ஏன் இந்த மாதிரி பண்ணாய்? என்றார்.

ஏன் சார் உங்களுக்கு நடந்ததே தெரியாதா?

கணக்காயார் என்னிடம் சொல்லவில்லை.ஆனால் நீ இப்படி மேலிடத்துக்கு எழுதுவதற்கு முன்பு என்னிடம் சொல்லியிருக்கலாமே என்றார்.

உங்களுக்கு தெரியாத விஷயமென்றால் உங்களிடம் சொல்லலாம்.தெரிந்த விஷயத்துக்கு எதற்கு உங்களிடம் வரவேண்டும் என்பதால் வரவில்லை என்றேன்.

அதன் பிறகு, கம்பெனி சட்டதிட்டங்கள் ஒரு தனி நபருக்காக மாற்றமுடியாது என்றும்,நீ இப்படி கொடுப்பதால் யாரும் உன்னிடம் வந்து மீதி பணத்தை வாங்கிக்கொள் என்று கெஞ்சப்போவதில்லை என்றார்.இது ஒரு மகா சமுத்திர கம்பெனி இதையெல்லாம் பற்றி யாரும் கவலைப்படபோவதில்லை என்றார்.

உண்மை தான்.இருந்தாலும் என் வரையில் சரி என்பதால் முழுவதையும் கட்டி கம்பெனி லாபத்தில் கொஞ்சம் கூட்டினேன்.

இதை எதற்கு சொல்கிறேன் என்றால்,சைட் வேலை என்பதில் ஓரளவு தான் சட்ட திட்டங்களை செயல்படுத்தமுடியும்.மீற வேண்டிய இடத்தில் மீறித்தான் ஆக வேண்டும்.

Tuesday, January 16, 2007

மென்பொருள் துறை

போன சனிக்கிழமை இங்குள்ள "The Straits Times" பத்திரிக்கையில் " வேலை காலி" உள்ள பகுதியில் காண நேர்ந்த ஒரு வித்தியாசமான விளம்பரம்...
உங்கள் பார்வைக்கு




எனக்கென்னவோ இதில் உள் குத்து இருப்பதாகவே தெரிகிறது.
நான் மனுப்போடலாம் என்று பார்த்தால் 4 வருட முன் அனுபவம் கேட்டிருக்கு.
படிப்பவர்களில் யாருக்கேனும் பொருந்தி வந்தால் முயற்சிக்கவும்.

நண்பர்

போன சனிக்கிழமை ஒரு பழைய குமுதத்தை புரட்டிக்கொண்டிருக்கும் போது கீழ்கண்ட பக்கம் கண்ணில் பட்டது.









படித்துமுடித்தவுடன் புரிந்தது இவர் நம் பழைய நண்பர்,மேட்டூரில் ஒன்றாக வேலைப்பார்த்தவர் என்று.

இவரைப்பற்றி ஏற்கனவே இங்கு எழுதியுள்ளேன்.

மற்றொரு முறை இவருடைய பேட்டி சுமார் 4 வருடங்களுக்கு முன்பு ஆனந்தவிகடனில் "செதுக்கியது யார்?" என்ற தலைப்பில் இவருடைய பேட்டி வந்தது.

படப்பை பக்கம் ஒரு கண்காட்சி நடத்தப்போவதாக சொல்லியுள்ளார். நம் மக்கள் யாராவது போனால் போட்டுக்கொடுக்கவும்.
நன்றி

ஒப்பந்தக்காரர்

காக்கிநாடா சிமினியில் வேலை செய்ய சிறிது நாட்களிலேயே புரிந்து போனது அங்குள்ள பல பிரச்சனைகள்.அதை பட்டியல் இடுவதற்கு முன்பு சில விஷயங்கள்.

இந்த மாதிரி பெரிய கம்பெனிகளில் வேலை செய்யும் போது முக்கியமாக மூன்று ஒப்பந்தக்காரர்கள் இருப்பார்கள்

1.கான்கிரீட் போட

2.ஷட்டர் அடிக்க (சாரம் அடிக்க)

3.கம்பி கட்ட

அவரவர் வேலை அவர்களுக்கு நாள் முழுவதும் இருக்கும் அதனால் அவர்கள் செய்யும் வேலைக்கு தகுந்த மாதிரி ரேட் இருக்கும்.அளந்து கணக்கு பண்ணி பணம் கொடுப்பதில் பிரச்சனை இருக்காது.

இந்த சிமினி அப்படியல்ல..

சின்ன இடம்,வேலைகளும் சிறியது

ஒருவர் ஒரு வேலையை முடிக்கும் வரை அடுத்தவர் சும்மாக உட்கார்ந்திருக்க வேண்டும்.இடம் சிறியது,மற்ற வேலைகளுக்கும் அனுப்பமுடியாது.ஒரு நாள் இரண்டு நாள் என்றால் பரவாயில்லை.1.5 வருடம் என்றால், தூங்கிக்கொண்டு இருப்பவனும் எழுந்து ஓட ஆரம்பித்துவிடுவான்.

அப்படியென்றால் ஒரு சிறிய தொழிலாளர் கூட்டத்தை வைத்துகொண்டு அவர்களே எல்லா வேலைகளும் செய்ய வைக்கவேண்டும்.அப்படி செய்தால் பணம் பார்க்கலாம்.அது அவ்வளவு சுலபமாக இல்லை அந்த காலத்தில்.கான்கிரீட் போடுபவர்கள் கம்பி வேலை பார்க்கமாட்டார்கள்.அந்த மாதிரியே மற்ற வேலை செய்பவர்களும்.


ஆரம்பித்த சில நாட்களிலேயே புதிய பிரச்சனை உண்டானது.ஏற்கனவே இருந்த குத்தகைக்காரர் கொடுத்த ரேட் மிக மிக அதிகமாக இருந்ததால் அவரை மாற்ற வேண்டும் அல்லது கம்பெனி கொடுக்க முடிந்த ரேட்டுக்கு ஒத்துக்கொள்ள செய்யவேண்டும்.புதிய வேலை என்பதால் ஏற்கனவே செய்யப்பட்ட விலையில் குத்தகையை முடிவுசெய்ய முடியவில்லை.அதனால் சில காலம் வேலை செய்யவிட்டு எவ்வளவு ஆட்கள் வேலை செய்கிறார்கள் மற்றும் அவர்கள் லாபத்தையும் போட்டு ரேட் முடிவுசெய்வார்கள்.இந்த மாதிரி சமயங்களில் குத்தைகாரர்கள் வேண்டுமென்றே மெதுவாக செய்து ரேட் முடிவு செய்தபிறகு தங்கள் கைவரிசையை காண்பித்து அதிக லாபம் சம்பாதிப்பார்கள்.

இப்படிப்பட்ட சந்தர்பத்தில் திரு.கிருஸ்ணன்(குத்தைக்காரர்) என்பவர் கொடுத்த விலைப்புள்ளி அதிகமாக இருந்ததாலும்,கம்பெனிக்கு தர்மசங்கடமான நிலைமை உருவானது.நினைத்தவுடன் ஒப்பந்தக்காரர்கள் கிடைப்பதற்கான இடமும் அவ்விடம் இல்லாததால் இன்னும் குழப்பமான நிலைமை உண்டானது.அது வரை பழைய முறையில் வேலை நடந்துகொண்டிருந்தது.

இதில் முடிவு எடுக்க வேண்டியது அந்த சைட்டின் பொறியாளரின் வேலை என்பதால் வாய் மூடி பார்த்துக்கொண்டிருந்தேன்.

சில நாட்களில் அந்த ஒப்பந்தக்காரர் சண்டி செய்ய ஆரம்பித்தார்.ரேட் முடிவுசெய்யாமல் வேலை செய்யப்போவதில்லை என்று.

பல முறை பேச்சு வார்த்தை நடத்தியும் பலன் ஒன்றும் இல்லாததால் வேறு வழியில்லாமல் எங்கள் மேலதிகாரி அந்த பொறியாளரிடம் சில ஆட்களை கம்பெனி நேரடியாக வேலைக்கு எடுத்துக்கொண்டு வேலையை தொடங்கவும் அதற்கிடையில் நல்ல ஒப்பந்தக்காரர் கிடைத்தால் பார்க்கலாம் என்றார்.

பொறியாளரும் என்னிடம் வந்து அதையே சொல்லிவிட்டு கூடவே ஒரு ஐடியாவும் கொடுத்தார்.

போன சிமினி சைட்டில் வேலை செய்தவர்கள் யாராவது இருந்தால் கூப்பிட்டு அவர்களை வைத்து வேலை வாங்கலாம் என்றார்.

அந்த சமயம் பார்த்து என்னிடம் மேட்டூரில் வேலை பார்த்த "திரு.பாபு ராஜ்" என்ற மலையாளி அங்கு இருந்தார்.இவர் தான் 220 மீட்டர் உயரத்தை வெளிப்புற ஏணிப்படி மூலம் நிற்காமல் ஏறியவர்.பாதுகாப்பாகவும் அதே சமயத்தில் சமயோஜிதமாகவும் வேலை செய்யக்கூடியவர்.

கொஞ்சம் வேலை தெரிய ஆரம்பித்தால் இந்த இனத்தவர்கள் பலர் தலை தூக்கி நர்த்தனம் ஆடுபவர்கள்.ஆனால் இவர் அதற்கு மாறுபட்டு மிகவும் நிதானமாக நடந்துகொள்பவர்.அதனாலேயே இவர்மீது எனக்கு ஒரு சாப்ட் கார்னர்.நாம் நம்முடைய ஐடியாவைச்சொன்னால் அதையும் கேட்டு சாதக பாதகங்களை விவாதித்து வேலை செய்பவர்.கடினமான வேலைகளுக்கு அஞசாதவர்கள் மலையாளிகள்,அதே சமயத்தில் சம்பளம் மற்றும் பண விஷயத்தில் கொஞ்சமும் விட்டுக்கொடுக்காதவர்கள்.

அப்போது இவர் ஒரு தொழிலாளி மட்டுமே.கொடுக்கும் சின்ன சின்ன வேலைகளை செய்துகொண்டிருந்தார்.

அவரை கூப்பிட்டு தேவையான விபரங்களை சொல்லி,சில ஆட்களை சேர்த்துக்கொண்டு இந்த வேலை செய்.உன்னுடைய லாபத்துக்கு நான் பொறுப்பு என்று சொன்னேன்.

என்மீது இருந்த நம்பிக்கையில் சரி என்று சொல்லி ஆட்களை தேடும் பணியில் இறங்கினார்.

ஒரு தொழிலாளி ஒப்பந்தக்காரர் ஆனார்.

Thursday, January 11, 2007

மனது லேசானது!!

சிரித்து மகிழ வேண்டுமா!!

கீழே உள்ளதை படிக்கவும்

சமீபத்தில் ஏற்பட்ட கடலடி பூகம்பத்தில் தைவான் பக்கத்தில் உள்ள
கடலுக்கடியில் உள்ள இணைய கேபிள்கள் துண்டுப்பட்டதால் சில நாடுகளில் உள்ள இணைய தளங்களை மேய்வதில் தாமதம் ஏற்பட்டது.இன்றும் கூட முழுமையாக திரும்பவில்லை.

அதன் அடிப்படையில் கேள்வியும் பதிலும் இங்குள்ள ஒரு இணையதளத்தில் படிக்க நேர்ந்தது.அதை உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்.

சிரிப்பு வந்தால் சிரித்து மகிழுங்கள்.

Why the heck are the videos still so streaming so fcking slow? Isnt it 2 weeks already?


who says 2 weeks? 2 weeks do wat? It will take at least end Jan or early Feb for the services to be fully restore.


Ev0D3vil, you think what?
Humans only, and there are i think 7 out of 8 submarine cables that were destroyed by the quake, and you need to repair the 7 cables.
You very good you go repair la.
Ppl sacrifacing their Christmas all that and 24/7 repairing the cables, users here only know how to complain complain.



ermz.. 2 wks?? who promised u 2wks???

like what TheHim/Budweiser says... gonna take much longer... i think complaining here wouldnt help...

its just slower internet connection.. how bout u trying to live in Taiwan?? NO roofs above ur head.. -_-"


முழுவதும் படிக்க இங்கே சொடுக்கவும்.

Jump பார்ம்

இங்கு கட்டப்பட இருந்த சிமினி 120 மீட்டர் உயரம் ஆனால் இதை கட்டவேண்டிய முறை நாங்கள் மேட்டூரில் செய்தது போல் இல்லை.

இங்கு உபயோகித்த முறைக்கு ஜம்ப் பார்ம் என்று பெயர்.

மாதிரி படம் இங்கே.

Photobucket - Video and Image Hosting

நன்றி:Fabquip

சுருக்கமாக..

கீழிருந்து மேலே போகப்போக மத்தியில் ஒரு இரும்பு சாரம் இருக்கும்.இந்த சாரத்தின் ஒரு பகுதியில் ஏணிப்படிக்களுக்கும் மற்றொரு பகுதியில் சாமான்கள் ஏற்றி இறக்க பாரம் தூக்கிக்கும் ஒதுக்கப்பட்டு இருக்கும்.

மின்தூக்கி நிறுவ தேவையான இடம் உள்ளே இல்லாததால் மேற்பார்வையாளர் முதல் தொழிலாளி முதல் இந்த ஏணிப்படியை தான் உபயோகிக்க வேண்டும்.
ஒரு நாளில் 2 முறை மேல் போய் வருவதற்குள் தாவு தீர்ந்துவிடும். ஆரம்பத்தில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்கு கஷ்டம் தெரியாது.

நாங்கள் பண்ண விதம்..

Photobucket - Video and Image Hosting

இந்த வேலை நடந்துகொண்டிருக்கும் இடம் ஒரே காம்பவுண்டில் இருந்தாலும் நான் அதிகமாக அங்கு போகமாட்டேன்.எப்போது அரிதாக நேரம் கிடைக்கும் போது அங்கு இருக்கும் பழைய நண்பர்களை பார்த்து அளவளாவதற்கு போவேன் ஆனால் வேலையைப்பற்றி அவ்வளவாக பேச மாட்டேன்.

அந்த சிமினிக்கு அஸ்திவாரம் போட்டு முடித்து சுற்றுச்சுவர் சுமார் 3.5 மீட்டர் எழுப்பியிருந்தார்கள்.அதன்பிறகு மேலே சொன்ன ஜம்ப் பார்ம் சிஸ்டத்தை முடுக்கி சுற்றுச்சுவரை எழுப்பியிருந்தார்கள்.

புதிய சிஸ்டம்,முன் அனுபவம் இல்லாத குத்தையாளர் மற்றும் மேற்பார்வையாளர்கள் என்பதால் ஒரு அடுக்கு போட்டு மறு அடுக்கு கான்கிறீட் போட ஒரு வார காலம் ஆனது.இந்த ரீதியில் போனால் கொடுக்கப்பட்ட குத்தகை காலத்தைப்போல் இரு மடங்கு காலம் வேண்டும்.

இந்த சிமினி வேலையில் ஏதோ சுணக்கம்,தேவையான நேரத்துக்குள் முடிக்கமுடியாத நிலையில் போய்கொண்டிருந்ததை பார்த்த புதிதாக வந்திருந்த கன்ஸ்ரக்ஷன் மேனேஜர், அதை மேற்பார்வை பார்க்கும் இன்ஜினியரை கூப்பிட்டு காரணத்தை விஜாரித்தார்.வேறு யாராவது உதவி செய்ய தேவைப்படுகிறார்களா? என்று கேட்டிருக்கிறார்.அதற்கு அந்த இன்ஜினியர் அனுபவம் உள்ள யாராவது இருந்தால் நல்லது என்றிருக்கிறார்,உடனே அந்த மேல் அதிகாரிக்கு என் பெயர் தான் ஞாபகம் வந்திருக்கிறது.இருந்தாலும் எனக்கு கொடுத்த உறுதிமொழியும்(ஆதாவது என்னை திரும்ப சிமினி வேலைக்கு அழைகாமல் இருப்பது) அவரை உறுத்தியிருக்கவேண்டும்.வேலை என்று வந்து தான் உயரதிகாரியாக இருந்து வேலை சுணக்கம் ஏற்படுவதை எந்த உயரதிகாரியாலும் பொறுத்துக்கொள்ள முடியாததால் வேறு வழியின்று என்னை கூப்பிட்டனுப்பினார்.

சிமினியின் இப்போது உள்ள நிலமையையும் என்னுடைய அனுபவுமும் மிக அவசியமாக தேவைப்படுவதால் நீ கட்டாயம் அங்கு போய் தான் ஆக வேண்டும் என்றார்.

என்னை தூக்கிவிட்டவர் மற்றும் நான் வேலை செய்யும் முறை அவருக்கு தெரியும் என்பதால் மறுக்க இயலாமல் போவதற்கு ஒத்துக்கொண்டேன்.

சிமினி சைட்டுக்கு போன முதல் நாளே அந்த இளம் இன்ஜினியரிடம் நான் உனக்கு உதவி செய்யவே வந்துள்ளேன் அதனால் உன்னை மீறி செயல்படுவதாக நினைக்காதே.முதன்மை அதிகாரி சொன்னதால் தான் இங்கு வந்தேன் என்று தன்னிலை விளக்கம் கொடுத்துவிட்டு வேலையை ஆரம்பித்தேன்.

நான் விலகி இருக்க வேண்டிய இடம் என்னைவிடமாட்டேன் என்று பிடித்துக்கொள்ள ஆரம்பித்தது.

மீதி வரும் பதிவுகளில்

Monday, January 08, 2007

கடற்கரைக்கு அருகில்

இந்த ரெசிடென்ட் இஞ்சினியர் நம்மிடம் தான் இவ்வளவு மோசமாக நடந்துகொள்கிறார் அதுவும் போன சைட்டில் நடந்ததை ஞாபகம் வைத்துக்கொண்டு என்று நினைத்திருந்தேன்.

நண்பர்களிடம் பேசிய பிறகு தான் தெரிந்தது பலரும் இவர் மீது வெறுப்பாக இருப்பது.அதோடில்லாமல் வேறு காரணத்திற்காக இவர் இன்னும் சில மாதங்களில் மற்றொரு இடத்துக்கு மாற்றல் ஆகி போகக்கூடும் என்று மகிழ்சியான செய்தி காதில் விழுந்தது.

அதனால் பொறுமையை கடைப்பிடிக்க தொடங்கினேன்.

இந்த சைட் கடலுக்கு வெகு அருகாமில் இருந்தது.ஒரு சாலையை தாண்டினால் கடல் தான்.அதனால் தண்ணீர் மட்டம் தரையில் இருந்து சற்றே கீழே இருந்தது.இப்படி இருந்தால் தரைக்கு கீழ் பார்க்கும் வேலைகளில் பெரிய பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிவரும்.

தண்ணீர் ஒரு பிரச்சனை என்றால் கடல் மண் தோண்டும் போது சரிந்துகொண்டே இருக்கும்.தேவையான சாரங்கள் அடிக்காமல் ஒரு அளவுக்கு மேல் மண் தோண்டமுடியாது.

தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வேலை செய்யும் இடத்தை சுற்றி ஒரு 10 மீட்டர் ஆழத்துக்கு 1~ 1.5 மீட்டர் இடைவெளிக்கு ஒரு பிளாஸ்டிக் குழாய்களை சொருகி அதை ஒரு பெரிய குழாயுடன் இணைத்துவிடுவார்கள்.இந்த பெரிய குழாயை தண்ணீர் இழுக்கும் இயந்திரத்துடன் இணைத்து 24 மணிநேரமும் தண்ணீரை வெளியேற்றிக் கொண்டிருக்குமாறு செய்துவிடுவார்கள்.

இப்போதும் நிதி நிலவரம் கேமரா வாங்கும் அளவுக்கு முன்னேராததால் படங்கள் எடுக்க முடியவில்லை.இணையத்திலும் கிடைக்கவில்லை.

அப்போது தான் ஆரம்பித்த ஒரு கட்டிடத்தின் மேற்பார்வை வேலை எனக்கு கொடுக்கப்பட்டது.

கீழே உள்ள படத்தை பார்க்கவும்.




சுமார் 350 மீட்டர் நீளமும் 45 மீட்டர் அகலமும் கொண்ட கட்டிடம்.இரண்டு பக்கமும் தாங்கி நிற்க தூண்களும் அதன் மேல் கூரைக்கு தேவையான டிரஸ்ஸ¤ம் அதன் மேல் சிறிய அளவில் முன்னமே போட்டு மேல் வைக்கக்கூடிய விதத்தில் உள்ள சிலாபுகள் இருக்கும்.

45 மீட்டர் அகலம் என்பதால் அந்த டிரஸ் இரண்டு பகுதியாக போட்டு நடுவில் சப்போர்டு வைத்து இணைப்பார்கள்.

இந்த வேலை இப்படி போய்கொண்டிருக்கும் போது வேறு ரெசிடென்ட் இன் ஜினியர் வருவதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது.அவர் இவர் என்று பலருடய பெயர்கள் அடிபட்டு கடைசியில் நான் மேட்டூரில் வேலை பார்த்தபோது இருந்த திரு.ஹரிஹர சுப்பிரமணியன் தான் வரப்போகிறார் என்று கேள்விப்பட்டேன்.நிறைய நிம்மதியாக இருந்தது.நான் மேட்டூரை விட்டு வரும் போதே இவரிடம் ஒன்றே ஒன்று தான் யாசித்தேன். எனது அடுத்த சைட்டில் எனக்கு சிமினி வேலை கொடுக்கக்கூடாது என்று.அப்போது அவரும் ஒத்துக்கொண்டு அனுப்பிவைத்தார்.

அவரும் வந்தார்.

நான் பார்த்துக்கொண்டிருக்கும் வேலையும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துகொண்டு வந்தது.

இந்த சமயத்தில் பல இடங்களில் வேலை மிக ஜரூராக நடந்துகொண்டிருந்தது.சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பித்த 120 மீட்டர் உயரம் உள்ள சிமினி கீழ்தள வேலைகளை முடித்துவிட்டு தரைக்கு மேல் உள்ள வேலை நடக்கதயாராக இருந்தது.அதை மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தார் திரு.T.S.ஜனார்த்தனன் (மதுரைக்காரர்-1000 வாசல் வீதி என்று விலாசம் வரும் சரியாக ஞாபகம் இல்லை).இவரைப்பற்றி சுவையான விபரங்கள் பின்னால் வரும்.

இதற்கிடையில் ஒரு புதிய பிரச்சனை ஆரம்பித்தது,ஆனால் அது என்னை பாதிக்கப்போகிறது என்று அப்போது எனக்கு தெரியாது.

வாங்க அடுத்த பதிவுக்கு.

Thursday, January 04, 2007

வெட்டி/ஒத்து ஒட்டுதல்

இந்த வலைப்பூக்களில் பின்னூட்டம் இடுவது என்பது அவரவர் கணினியில் வெவ்வேறு முறையில் இருக்கும்.

உதாரணத்துக்கு

வின் XP உபயோகிப்பவர்கள் ஈ கலப்பை மூலம் தமிழில் பின்னூட்டம் இடுவார்கள்.

என்னை மாதிரி வின் 95 வைத்திருப்பவர்கள் ஆன் லைனில் உள்ள யுனிகோட் மாற்றிகள் மூலம் தட்டச்சு செய்து அதை ஒத்து பிறகு ஒட்டுவோம்.

லினக்ஸ் உபயோகிப்பவர்கள் தட்டச்சு முறையை மாற்றி தமிழில் பின்னூட்டம் இடுவார்கள்.

எப்படி செய்தாலும் ஒத்தெடுத்து அல்லது வெட்டி ஒட்டவேண்டியிருக்கிறது.அல்லது தட்டச்சு முறையை மாற்றவேண்டியுள்ளது.

கணினி பயண்பாடே, உபயோகிப்பாளர்கள் தேவையில்லாத வேலை மற்றும் திரும்ப திரும்பச்செய்யும் வேலைகளை குறைப்பதற்காகத்தான்.அப்படியிருக்கும் போது தமிழில் உள்ளீடு செய்வதற்கு இவ்வளவு செய்யவேண்டியுள்ளதே என்ற அரிப்பு பல மாதங்களாக என்னுள் ஓடிக்கொண்டிருந்தது.

பின்னூட்டம் என்ற பதிவின் மூலம் என்னுடைய ஆதங்கத்தை வெளியிட்ட போது திரு.வசந்தன் நிரலை அனுப்பி உபயோகிக்கச்சொன்னார்.அது என்னுடைய வலைப்பூவிலேயே இரு கட்டங்களை கொடுத்து தேவையான எழுத்துருவை தேர்ந்தெடுத்து பின்னூட்டம் கொடுக்க வசதி செய்தது.இருந்தாலும் தேவையில்லாத விஷயங்களும் மற்றும் வெட்டி/ஒட்டும் வேலையும் இருந்தது.
அதை கொஞ்ச நாட்களுக்கு வைத்திருந்தேன்.திடிரென்று நம் தமிழ் வலைப்பூ படிப்பவர்களில் ஒருவர் செந்தமிழில் பின்னூட்டம் கொடுக்க ஆரம்பித்தவுடன் அதை எடுத்துவிட்டேன்.

இருந்தாலும் மூளை மறக்கவில்லை.

போன மாதம் என்று நினைக்கிறேன்.திரு ரவிசங்கர் எழுதிய பதிவில் இந்த முறையை பற்றி ஒருவர் எழுதியிருந்தார்,அதில் என் பெயரை குறிப்பிட்டு நான் உபயோகித்ததையும் சொல்லியிருந்தார்.அப்போது தான் புரிந்தது,என்னுடைய வலைப்பூவை பலரும் படிக்கிறார்கள் என்று.அந்த பதிவில் திரு ஸ்டீபன் பொல் வெப்பர் அவர்களின் டெம்பிளேட் ஹேக் பற்றி குறிப்பிட்டிருந்தார்.அதைப்பற்றி படித்துக்கொண்டிருந்த போது "கல் விட்டெறிவோமா" என்ற எண்ணம் தோன்றியது.சரி முயற்சிப்பதில் தவறில்லை என்று எண்ணி ஒரு மெயில் அனுப்பினேன்.

முதலில் இவரை உள்ளூர் சீனர் என்று நினைத்தேன்.ஆனால் இங்கு வந்து படித்துக்கொண்டிருக்கும் வெளிநாட்டவர்.

இவர் கொடுத்த ஹேக் பின்னூட்டம் கட்டத்தை வலைப்பூ உள்ளே கொண்டு வந்தது.ஆனால் வெட்டி ஒட்டும் வேலை குறைந்தபாடில்லை.

யோசித்துகொண்டிருந்தபோது எதற்கு இரண்டு எழுத்துரு? பாமினி & தமிங்கலம் இவற்றில் நான் தமிங்கலத்தை மட்டும் வைத்துக்கொள்ளும் எண்ணத்தில் டெம்பிலேட்டில் தேவையில்லாதவற்றை எடுத்துவிட்டு காப்பிக்கு ஒரு பட்டன் கொடுத்துவிடலாம் என்று தேவையானதை செய்தேன்.ஆனால் இந்த காப்பி பட்டன் மட்டும் சரியாக வேலை செய்யவில்லை.

திரும்பவும் அவரிடம் போக தயக்கம்,என்னதான் செய்துகொடுத்தாலும் பணம் கொடுக்காமல் அவரை வேலை வாங்குகிறோமோ என்ற எண்ணம் தலைதூக்கியது.

கொஞ்ச நாள் ஆறப்போட்டு விட்டு வாசிப்பகத்தில் ஜாவா ஸ்கிரிப்ட் புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.

என் அறிவுக்கு தெரிந்த அளவு செய்தும்,சரியாக வரவில்லை.

மீண்டும் யோசித்த போது..

தேவையில்லாத எழுத்துருவை எடுத்தாகிவிட்டது.

காப்பி பட்டன் வேலை செய்ய மறுக்கிறது என்ற போது எதற்கு அந்த பட்டன்? என்ற யோஜனை வந்தது.மேல் உள்ள கட்டத்தில் உள்ளீடு செய்யும் போது அப்படியே அது பின்னூட்ட கட்டத்தில் வந்துவிட்டால்?பின்னூட்டம் செய்பவர்களுக்கு மிக வசதியாக இருக்கும் அல்லவா?

எனக்கு வேறு வழியில்லை என்பதால் திரும்பவும் ஸ்டீபனை நாடினேன்.

மனிதருக்கு என்ன ஒரு நல்ல மனது!!

உடனே அதை மாற்றி அனுப்பியிருந்தார்,அட்டகாசமாக வேலை செய்கிறது. ·யர் பாக்ஸில் முயற்சித்தேன் அதிலும் அழகாக வேலைசெய்கிறது.

நம் தமிழுக்காக வேலை செய்த திரு ஸ்டீபன் அவர்களுக்கு ஒரு பெரிய நன்றியை தெரிவித்துவிடுவோம்.

முயற்சித்துவிட்டு சொல்லுங்கள் நண்பர்களே.

நான் கேட்ட கேள்விகளும் பதிலும் கீழே

Hi Stephen
I went thro this hack baut my template doesn't have <$BlogItemCreate$>.Can guide me a bit?
Actually my concern is
I have a script in blog to write in my native language.When they type their comments and click send,the comment should go to the default comment box.But its not showing up in default box,propably hidden.How I give link between the default comment box and the posting box?.
I hope I made it clear.
Pl help me.
The way it works in your blog.
Thanks
venkat

If you do not have a <$BlogItemCreate$> tag, just put the code right after the code that displays the comments

Hi Mr stephen
It didn't work that way.May be I didn't do it exactly.
Anyway,thanks for the reply.
Regards
venkat

If you send me a link to your blog, I can take a look.

Please note that if you are on the new version of Blogger I CANNOT make this hack work for you at the present moment -- there are script incompatibilities.
Hi Stephen
I am still using the older version of Blogger.Let me look into the code one more time and see what happens.
I saw in your blog,its stated clearly that this hack doesn't work even in beta.
My blog is http://madavillagam.blogspot.com/ (Construction Industry).This blog have been written in my native language "Tamil"- for info.
I have attached the template too for easy reference.
Thanks for helping me .
Regards
venkat

Hi Stephen
I am still doing some hack to suit my requirements.
Can't we leave open the comment box for ever instead of opening after user click "Post Comment" link?
I hope you don't mind, clearing my doubts on this latter stage.
Anyway,thanks for the guidance.
Have a nice day.
venkat

Hi Stephen

Need some more help on tuning my blog template.

This time ,if u don't mind please make your correction in different color so that I can understand where, what effects do take place.

The modification makes the visitor to my blog should be easier.

I have 3 boxes

1st box for put the comments in english

2nd box converts it into my native language

Below this 2nd box I have button called "Copy" which doesn't work presently.This copy button should copy whatever appears in the No.2 box.

The 3rd box is the default comments box.If the above copy button works,the user just click on the 3rd box and paste it but it doesn't .

My ambition is

I don't require the 2nd box.

The conversion should directly takes place in the 3rd box. So no more copy button . Those who want to put their comments in English,they can do it directly at the 3rd box.

How to link the 2nd box text to 3rd box and make the 2nd box invisible?

Please help me.

I attached my recent template for easy editing.

I would like to learn hence please highlight your correction.

Thanks a lot.

Last but not least "Have a nice Happy New Year"

Venkat

Try the attached -- blue is stuff to be removed, red is stuff to be added :)

Ya!!It worked the way I want.

ரெசிடென்ட் இஞ்சினியர்

ரெசிடென்ட் இஞ்சினியர் சைட் உள்ளே இருந்ததால் அவரை பார்க்க கிளம்பினேன்.

வழியில் பல பழைய நண்பர்களை பார்த்து பேசிய போது ரெசிடென்ட் இஞ்சினியர் சைலோ எனப்படும் கட்டிடத்தின் அஸ்திவாரம் போடும் இடத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தை தொடர்ந்து அங்கு சென்றேன்.

சைலோ என்பது ஒரு பெரிய கிணற்றை மேல் நோக்கி கட்டினால் எப்படியிருக்குமோ அப்படி இருக்கும்.இதைப்பற்றி இந்த பழைய பதிவில் சொல்லியிருந்தேன்.விருப்பம் இருந்தால் போய் பார்க்கவும்.

அந்த அஸ்திவாரம் போடும் இடத்தில் ஒரே கூட்டம் மற்றும் சத்தமும் கூட.மூன்று கான்கிரீட் கலக்கும் இயந்திரங்கள் வேலை செய்துகொண்டிருந்தன.கான்கிரீட் அளவும் அதிகமாக இருந்ததால் 3 மிஷின்கள் போடப்பட்டிருந்தன.இது நடக்கும் கால கட்டம் 1989,அப்போது கூட பேச்சிங் பிளன்ட் மற்றும் கான்கிரீட் வண்டிகள் எட்டிப்பார்க்காத காலம்,அதானாலேயே மிக்ஸர் மிசின் மற்றும் ஆட்கள் மூலம் ஜல்லி , சிமின்ட் மற்றும் மணல் போடும் வேலையை செய்துகொண்டிருந்தோம்.ஒரு மிஷின் சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு 16 மூட்டைகள் போடும்.

நான் அங்கு போன சமயம் கான்கிரீட்டை அதிரப்படுத்தும் சாதனம் பழுதாகி, வேறு இல்லாத நிலையில் எல்லோரும் அங்கு இங்கு என்று ஓடிக்கொண்டிருந்தார்கள்.அந்த இஞ்சினியர் கொஞ்சம் டென்ஷன் பார்ட்டி ஆனதால் அந்த இடமே ஒரே சத்தமாக இருந்தது.போதாக்குறைக்கு கிளைன்ட் அதிகாரிகளும் தங்கள் பங்குக்கு அவ்விடத்தை உஷ்ணப்படுத்திக்கொண்டிருந்தார்கள்.

இதற்கிடையில்,

அந்த கால கட்டத்தில் இருந்த பல படித்த மற்றும் படிக்காத சில உயரதிகாரிகள் வேலை செய்யும் தொழிலாளர்களை நடத்தும் விதம் மிக மோசமாக இருக்கும்.வேலை செய்பவர்களை சத்தம் போட்டு தான் வேலை வாங்கவேண்டும் என்று எழுதப்படாத விதியாக இருந்தது.அதிலும் மரியாதை இருக்காது

அவர்கள் கால கட்டத்தில் பலர் கட்டுமானத்துறைக்கு போதிய கல்வி அறிவு இல்லாதவர்களாகத்தான் வந்தார்கள் அதனால் இவர்கள் மிரட்டல்கள் எல்லாம் செல்லுபடியாகியிருக்குமோ என்னவோ!!ஆனால் இந்த கால கட்டத்தில் கொஞ்சம் படித்தவர்கள் வர ஆரம்பித்தவுடன் பூசல்கள் தோன்ற ஆரம்பித்தது.

"சார் அவரை இங்கு வந்து கத்தச்சொல்லாதீங்க,செய்ய வேண்டியது மட்டும் சொன்னால் போதும், நாங்கள் செய்கிறோம்,வேலை முடிந்த பிறகு வந்து பார்த்து தவறு இருந்தால் சொல்லச்சொல்லுங்கள்" என்பார்கள்.

இது ஒரு Transition டைம்.அதனால் இவர்களாலும் மாற முடியவில்லை, வேலை செய்பவர்களாலும் பொருத்துக்கொள்ள முடியவில்லை.

அந்த உஷ்ணமான நிலையில் அவரருகே சென்று காலை வணக்கம் என்றேன்.
பதில் சொல்வதற்குள் அந்த கான்கிரீட் அதிரப்படுத்தும் சாதனத்தை எடுத்து அவரே வேலை செய்ய ஆரம்பித்துவிட்டார். அவருடன் சில காலம் பணிபுரிந்திருந்ததால் அவருடைய குணம் தெரிந்து நானும் சில வேலைகளை அங்கேயே செய்ய ஆரம்பித்துவிட்டேன்.முதல் நாள் அன்றே வேலை ஆரம்பித்துவிட்டது.யார் நமது ஆள் யார் குத்தகைகாரரின் ஆள் என்று தெரியாமல் வேலை நடக்காதது பார்த்து அந்த இஞ்சினியருக்கு கோபம் தலைக்கு மேல் ஏறி என்னைப்பார்த்து "நீ அங்கு போய் ரெஸ்ட் எடு" என்ற தொனியில் சொல்லிவிட்டு அவரே அந்த வேலை செய்ய ஆரம்பித்தார்.

இதை எதற்கு சொல்கிறேன் என்றால்,முதன் முதலில் வரும் ஒருவருக்கு ஒரு சைட் என்பது காடு மாதிரி.எங்கு என்ன இருக்கும் என்று தெரியாது,நமது கம்பெனி ஆள் யார் என்று தெரியாது,அதனால் சில நாட்கள் தேவையான கட்டுமான வரைப்படங்களை கொடுத்து படிக்கச்சொல்வார்கள்.

வந்து இரண்டு மூன்று நாட்கள் ஆனவுடன் எங்கு வேலை செய்யப்போகிறோமோ அந்த இஞ்சினியரிடம் ஒப்படைப்பார்கள்.இது ஒவ்வொரு தலைமை இஞ்சினியரின் பொறுப்பு.இப்படி செய்வதால் வேலை செய்யப்போகும் இடம்,மக்கள் பற்றி ஒரு தெளிவு வரும்.எதற்கு யாரை பார்க்கவேண்டும் என்று தோனும்.அது இங்கு நடைபெறவில்லை.

ஆமாம் கான்கிரீட் போடுவது கஷ்டமான வேலையா?இந்த மாதிரி வேலைக்கு தலைமை அதிகாரி தான் இந்த வேலைகளை செய்யவேண்டுமா? என்றால்

நிச்சயமாக இல்லை.

சில பிராஜக்ட் மேனேஜர்கள் பக்கத்திலேயே வரமாட்டார்கள்,ஆனால் வேலை மட்டும் சுலபமாக போய்கொண்டிருக்கும்.அதெப்படி?

இவர்கள் எண்ணம் இப்படி

சைட்டில் வேலை நடக்க உதவி இஞ்சினியர்கள் உள்ளார்கள்,தேவையானவற்றை வைத்துக்கொள்வது மற்றும் வழி நடத்துவது அவர்கள் வேலை,இதில் நான் தலையிடவேண்டிய அவசியம் இல்லை.பிரச்சனை அவர்களால் தீர்க்கமுடியாத அளவில் இருந்தால் நான் வருவேன்.அது வரையில் என்னிடம் வரவேண்டிய அவசியமே இல்லை என்று பட் என்று சொல்லிவிடுவார்.

"ஆதாவது அவரவர் வேலை அவரவர் செய்யவேண்டும்"- இது தான் சாராம்சம்.
எனக்கு தெரிந்த சில தலைமை இஞ்சினியர்கள் இதில்லெல்லாம் தலையிடமாட்டார்கள்.

மீண்டும் இங்கே

ஏற்கனவே நல்லுறவு இல்லை அதுவும் வந்த முதல் நாளே சரியாக அமையவில்லை.இது சரிப்பட்டு வராது என்று நினைத்து மறுநாளே மாற்றல் கேட்கலாம் என்றிருந்தேன்.

சாயங்காலம் வீட்டுக்கு வந்தவுடன்,பிரம்மச்சாரிகள் தங்கும் அறையில் ஒரு இடமும் கட்டிலும் கொடுக்கப்பட்டது.

இரவு சக நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது என்னுடைய எண்ணத்தை சொன்னேன்.இந்த ரெசிடென்ட் இஞ்சினியருடன் சரிப்பட்டுவராது நான் டிரான்பர் கேட்கலாம் என்றுள்ளேன்,என்று.

அதற்கு நண்பர்கள் "கவலைப்படாதே நாங்கள் எல்லோரும் பொருத்துக்கொண்டிருக்கிறோம் மற்றும்..??"

வாங்க அடுத்த பதிவுக்கு.