Tuesday, January 16, 2007

ஒப்பந்தக்காரர்

காக்கிநாடா சிமினியில் வேலை செய்ய சிறிது நாட்களிலேயே புரிந்து போனது அங்குள்ள பல பிரச்சனைகள்.அதை பட்டியல் இடுவதற்கு முன்பு சில விஷயங்கள்.

இந்த மாதிரி பெரிய கம்பெனிகளில் வேலை செய்யும் போது முக்கியமாக மூன்று ஒப்பந்தக்காரர்கள் இருப்பார்கள்

1.கான்கிரீட் போட

2.ஷட்டர் அடிக்க (சாரம் அடிக்க)

3.கம்பி கட்ட

அவரவர் வேலை அவர்களுக்கு நாள் முழுவதும் இருக்கும் அதனால் அவர்கள் செய்யும் வேலைக்கு தகுந்த மாதிரி ரேட் இருக்கும்.அளந்து கணக்கு பண்ணி பணம் கொடுப்பதில் பிரச்சனை இருக்காது.

இந்த சிமினி அப்படியல்ல..

சின்ன இடம்,வேலைகளும் சிறியது

ஒருவர் ஒரு வேலையை முடிக்கும் வரை அடுத்தவர் சும்மாக உட்கார்ந்திருக்க வேண்டும்.இடம் சிறியது,மற்ற வேலைகளுக்கும் அனுப்பமுடியாது.ஒரு நாள் இரண்டு நாள் என்றால் பரவாயில்லை.1.5 வருடம் என்றால், தூங்கிக்கொண்டு இருப்பவனும் எழுந்து ஓட ஆரம்பித்துவிடுவான்.

அப்படியென்றால் ஒரு சிறிய தொழிலாளர் கூட்டத்தை வைத்துகொண்டு அவர்களே எல்லா வேலைகளும் செய்ய வைக்கவேண்டும்.அப்படி செய்தால் பணம் பார்க்கலாம்.அது அவ்வளவு சுலபமாக இல்லை அந்த காலத்தில்.கான்கிரீட் போடுபவர்கள் கம்பி வேலை பார்க்கமாட்டார்கள்.அந்த மாதிரியே மற்ற வேலை செய்பவர்களும்.


ஆரம்பித்த சில நாட்களிலேயே புதிய பிரச்சனை உண்டானது.ஏற்கனவே இருந்த குத்தகைக்காரர் கொடுத்த ரேட் மிக மிக அதிகமாக இருந்ததால் அவரை மாற்ற வேண்டும் அல்லது கம்பெனி கொடுக்க முடிந்த ரேட்டுக்கு ஒத்துக்கொள்ள செய்யவேண்டும்.புதிய வேலை என்பதால் ஏற்கனவே செய்யப்பட்ட விலையில் குத்தகையை முடிவுசெய்ய முடியவில்லை.அதனால் சில காலம் வேலை செய்யவிட்டு எவ்வளவு ஆட்கள் வேலை செய்கிறார்கள் மற்றும் அவர்கள் லாபத்தையும் போட்டு ரேட் முடிவுசெய்வார்கள்.இந்த மாதிரி சமயங்களில் குத்தைகாரர்கள் வேண்டுமென்றே மெதுவாக செய்து ரேட் முடிவு செய்தபிறகு தங்கள் கைவரிசையை காண்பித்து அதிக லாபம் சம்பாதிப்பார்கள்.

இப்படிப்பட்ட சந்தர்பத்தில் திரு.கிருஸ்ணன்(குத்தைக்காரர்) என்பவர் கொடுத்த விலைப்புள்ளி அதிகமாக இருந்ததாலும்,கம்பெனிக்கு தர்மசங்கடமான நிலைமை உருவானது.நினைத்தவுடன் ஒப்பந்தக்காரர்கள் கிடைப்பதற்கான இடமும் அவ்விடம் இல்லாததால் இன்னும் குழப்பமான நிலைமை உண்டானது.அது வரை பழைய முறையில் வேலை நடந்துகொண்டிருந்தது.

இதில் முடிவு எடுக்க வேண்டியது அந்த சைட்டின் பொறியாளரின் வேலை என்பதால் வாய் மூடி பார்த்துக்கொண்டிருந்தேன்.

சில நாட்களில் அந்த ஒப்பந்தக்காரர் சண்டி செய்ய ஆரம்பித்தார்.ரேட் முடிவுசெய்யாமல் வேலை செய்யப்போவதில்லை என்று.

பல முறை பேச்சு வார்த்தை நடத்தியும் பலன் ஒன்றும் இல்லாததால் வேறு வழியில்லாமல் எங்கள் மேலதிகாரி அந்த பொறியாளரிடம் சில ஆட்களை கம்பெனி நேரடியாக வேலைக்கு எடுத்துக்கொண்டு வேலையை தொடங்கவும் அதற்கிடையில் நல்ல ஒப்பந்தக்காரர் கிடைத்தால் பார்க்கலாம் என்றார்.

பொறியாளரும் என்னிடம் வந்து அதையே சொல்லிவிட்டு கூடவே ஒரு ஐடியாவும் கொடுத்தார்.

போன சிமினி சைட்டில் வேலை செய்தவர்கள் யாராவது இருந்தால் கூப்பிட்டு அவர்களை வைத்து வேலை வாங்கலாம் என்றார்.

அந்த சமயம் பார்த்து என்னிடம் மேட்டூரில் வேலை பார்த்த "திரு.பாபு ராஜ்" என்ற மலையாளி அங்கு இருந்தார்.இவர் தான் 220 மீட்டர் உயரத்தை வெளிப்புற ஏணிப்படி மூலம் நிற்காமல் ஏறியவர்.பாதுகாப்பாகவும் அதே சமயத்தில் சமயோஜிதமாகவும் வேலை செய்யக்கூடியவர்.

கொஞ்சம் வேலை தெரிய ஆரம்பித்தால் இந்த இனத்தவர்கள் பலர் தலை தூக்கி நர்த்தனம் ஆடுபவர்கள்.ஆனால் இவர் அதற்கு மாறுபட்டு மிகவும் நிதானமாக நடந்துகொள்பவர்.அதனாலேயே இவர்மீது எனக்கு ஒரு சாப்ட் கார்னர்.நாம் நம்முடைய ஐடியாவைச்சொன்னால் அதையும் கேட்டு சாதக பாதகங்களை விவாதித்து வேலை செய்பவர்.கடினமான வேலைகளுக்கு அஞசாதவர்கள் மலையாளிகள்,அதே சமயத்தில் சம்பளம் மற்றும் பண விஷயத்தில் கொஞ்சமும் விட்டுக்கொடுக்காதவர்கள்.

அப்போது இவர் ஒரு தொழிலாளி மட்டுமே.கொடுக்கும் சின்ன சின்ன வேலைகளை செய்துகொண்டிருந்தார்.

அவரை கூப்பிட்டு தேவையான விபரங்களை சொல்லி,சில ஆட்களை சேர்த்துக்கொண்டு இந்த வேலை செய்.உன்னுடைய லாபத்துக்கு நான் பொறுப்பு என்று சொன்னேன்.

என்மீது இருந்த நம்பிக்கையில் சரி என்று சொல்லி ஆட்களை தேடும் பணியில் இறங்கினார்.

ஒரு தொழிலாளி ஒப்பந்தக்காரர் ஆனார்.

2 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

பொங்கல் வாழ்த்து!

//கிருஷ்ணன் கொடுத்த விலை...//

'கிருஷ்ணன் கொடுத்த விலைப்புள்ளி'
என்றால் சரியாக இருக்குமா?

வடுவூர் குமார் said...

இருக்கலாம் அய்யா.
நன்றி