Friday, March 26, 2010

மஸ்கட் பேரீட்சங்காய்

சற்று முன் எடுத்தது,கையில் காய்கறி பை இருந்தாலும் பார்த்த உடனே எடுக்கனும் என்று தோன்றியது.இது பழுக்க இன்னும் எவ்வளவு நாள் ஆகும் என்று தெரியவில்லை.போன வருடம் இந்த சமயத்தில் தான் துபாயை விட்டு வெளியேற வேண்டியதால் அங்கு சுவைக்கமுடியவில்லை,இங்காவது முடிகிறதா என்று பார்ப்போம்.



பின்புலத்தில் சேட்டன் சாய் கடை.

Thursday, March 25, 2010

கம்பியின் நிலை.

கட்டுமானத்துறையில் கம்பியின் பங்கு என்பது இன்றியமையாதது.பல கட்டுமானங்கள் நிமிர்ந்து பல காலம் நிட்கவும் அதே சமயத்தில் முறையாக உபயோகப்படுத்தாததால் சரிந்து விழுவதும் அடிக்கடி நிகழ்கின்ற நிகழ்வுகள்.அதென்ன கம்பியை சரியாக பயண்படுத்தாத முறை??

நிறையவே இருக்கு,இடம் சூழல் இவற்றை கணக்கில் எடுத்துக்கொன்டு கான்கிரீட்டில் உள்ளிருக்கும் கம்பி வெளிப்புறத்தில் இருந்து எவ்வளவு தூரம் இருக்கனும் என்பதை பொறியாளர்களும் தரநிர்ணய கழகமும் சொலியிருக்கிறார்கள்.உதாரணத்துக்கு தஞ்சாவூரில் ஒரு கட்டிடம் என்றால் அதன் பீமின்(Beam) உள்ளே போடப்படும் கம்பி வெளியில் இருந்து 40mm இருக்கனும் அதுவே நாகப்பட்டினத்தில் கட்டப்படும் பீமில் 50 mm இருக்கனும்.உப்புக்காற்றின் தாக்கத்தை முன்னிட்டு இதை முடிவு செய்துள்ளார்கள்.முடிவு செய்வது எல்லாம் சுலபம் தான் ஆனால் பீம் கம்பி கட்டி கான்கிரீட் போடும் போது அது சரியான நிலையில் இருக்கிறதா என்பதை மேற்பார்வை செய்பவர்கள் கையில் தான் உள்ளது.என்ன தான் மேற்பார்வையாளர் பக்கத்தில் இருந்து கான்கிரீட் போட்டாலும் வேலை செய்பவர்களும் மற்றும் வேறு சில காரணங்களாலும் கம்பி அது உள்ள நிலையில் இருந்து விலக வழியிருக்கு.இந்த மாதிரி வழிகளை பல முறையில் அடைக்கலாம் என்றாலும் அது முழு பயணை பெரும்பாலான சமயங்களில் கொடுப்பதில்லை.

கீழே உள்ள படங்களை பாருங்கள்.

30 ஆண்டு பழமையான ஒரு கட்டிடத்தின் பகுதிகள் முக்கியமாக கூறையின் கீழ் பகுதி.





இங்கு என்ன நடந்துள்ளது? ஆதாவது கான்கிரீட்டின் அடிப்பகுதிக்கும் கம்பிக்கும் தேவையான தூரத்தை விடவில்லை.இதை ஒழுங்குபடுத்த கான்கிரீட் போடும் போது கம்பியின் கீழ் Cover Block என்று சொல்லப்படுகிற சிறிய கான்கிரீட் துண்டைவைத்து அதை கம்பியுடன் கட்டிவிடுவார்கள்,அதனால் கம்பி தன் நிலையில் இருக்கும்.இப்படி சொல்வது எளிதென்றாலும் கான்கிரீட் போடும் இடம் ஒரு போர்களம் அங்கு இதெயெல்லாம் தெளிவாக பார்த்துக்கொண்டிருக்க முடியாது.ஒன்றிருந்தால் போதும் என்ற இடத்தில் 3 வைப்பார்கள்.மேலே உள்ள படத்தில் இந்த மாதிரி Block இல்லாததால் கம்பி கீழே உள்ள சாரத்துடன் ஒட்டிக்கொண்டுவிட்டது,நாள் ஆக ஆக வெளிப்புற காற்றில் உள்ள ஈரப்பதம் கான்கிரீட் உள்ளோ போனதால் கம்பியும் ஆக்ஜிஜனும் சேர்ந்து வேதியல் மாற்றம் அடைய கம்பி துறு பிடித்து அதன் அளவில் விரிவடைய ஆரம்பித்திருக்கு அதன் மூலம் கீழிருக்கும் மெலிதான கான்கிரீட்டை தள்ள ஆரம்பித்திருக்கு.வலுவிழிந்திருக்கும் கான்கிரீட் கீழே விழுந்துவிட்டது.

சரி,இப்போது என்ன பண்ணுவது?30 வருடங்களுக்கு முன்பு போய் யாரையெல்லாம் காரணகர்தாவாக முடியும்? அதற்கு ஆகும் செலவுக்கு தேவையான மராமத்து வேலைகளை பார்த்து குடிபுகும் வழியை பார்பது தான் உசிதம்.மராமத்து பார்த்தால் சரியாகிவிடுமா?

இந்த கேள்விக்கு சரியான Test மூலமும் தேர்ந்த பொறியாளருமே விடை கொடுக்கமுடியும்.என்னென்ன சோதனை செய்வார்கள் அதை எப்படி ஒரு பொறியாளர் அனுகுவார் என்பன எனக்கு அவ்வளவாக தெரியாது அதனால் எப்படி இதை ரிப்பேர் செய்தார்கள் என்பதை மட்டும் இப்போது பார்ப்போம்.

முதலில் இக்கம்பிகளை சுத்தப்படுத்துவார்கள் அதன் பிறகு ஒருவித ரசாயன கலவையை கொண்டு அதன் மீது பூசுவார்கள்.இது ஒரு வகை பெயிண்ட்.அதன் பிறகு அது காயும் வரை காத்திருந்து அதன் மீது கீழ்கண்ட படத்தில் உள்ள சிமிண்ட் கலவையை பூசுவார்கள்.இதன் மூலம் ஒன்று துறுபிடிப்பதை தவிர்த்தல் அடுத்து அக்கம்பிகள் வெளிக்காற்றுடன் உள்ள தொடர்பை கட்டுப்படுத்துதல் என்ற இருவித பணிகளை செய்கிறது.

Wednesday, March 24, 2010

ப‌ரிசு தின‌ம்

ச‌க‌ தொழிலாள‌ ந‌ண்ப‌ர் அன்புத்தொல்லையாக‌ அவ்வ‌ப்போது வெளியில் போக‌ கூப்பிட்டாலும் பெரும்பாலான‌ நேர‌ங்க‌ளில் அதை த‌விர்த்துவிடுவேன் இருந்தாலும் சில‌ ச‌ம‌ய‌ம் வேறு வ‌ழியில்லாம‌ல் போக‌ வேண்டிவ‌ந்துவிடுகிற‌து.ஒரு நாள் தான் லுலு க‌டைத்தொகுதிக்கு போவ‌தாக‌வும் நீயும் வாயேன் என்றார்.அப்போது அரிசி வாங்க‌ வேண்டிய‌ நேர‌ம் அத்தோடு லுலுவில் காய்க‌றிக‌ள் கொஞ்ச‌ம் ஃப்ரிர‌ஸ்ஸாக‌ இருக்கும் என்ப‌தால் ஒத்துக்கொண்டு போனேன்.மூவ‌ரும் அவ‌ர‌வ‌ர்க்கு வேண்டிய‌தை வாங்கிக்கொண்டு திரும்பினோம்.

போன‌ வார‌ம் ஒரு நாள் ஸ்க‌ந்த‌ப் போக‌லாம் என்றார் அதுவும் இர‌வில்.இர‌வில் அங்கு போய் என்ன‌ பார்க்க‌ப்போகிறீர்க‌ள் அதுவும் க‌ட‌ற்க‌ரையை த‌விர‌ அங்கு ஒன்றும் இல்லையே என்றேன்.அப்போதைக்கு அந்த‌ ப‌ய‌ண‌ம் த‌ள்ளிப்போட‌ப்ப‌ட்ட‌து.

நேற்று திரும்ப‌வும் ஸ்க‌ந்த‌(Qantab) ப‌ய‌ண‌ம் ப‌ற்றி பேச்சு வ‌ந்த‌து,எப்போது போக‌ப்போகிறீர்க‌ள் என்றேன்.வேலை முடிந்து வீட்டுக்கு வ‌ந்து பிற‌கு போக‌லாம் என்றார்.போவ‌த‌ற்கு ம‌ட்டுமே 20 நிமிட‌ங்க‌ளுக்கு மேலாகும் அதுவும் வீட்டுக்கு போய்விட்டு போனால் சூரிய‌ன் ம‌றைந்த‌ பிற‌கு தான் அங்கு போ சேர‌ முடியும் என்றேன்.
அப்ப‌டியென்றால் வேலை முடிந்த‌ உட‌னே நேர‌டியாக‌ கிள‌ம்பிவிட‌லாம் என்றார்,ச‌ரி போக‌லாம் என்று மாலை 6 ம‌ணிக்கு கிள‌ம்பினோம்.முத்ரா வ‌ரை போய் அங்கு வ‌ண்டியை நிறுத்திவிட்டு ஒரு 5 நிமிட‌ம் இருங்க‌ள் நான் போய் தொழுதுவிட்டு வ‌ருகிறேன் என்று போனார்.வித்தியாச‌மான‌ கோண‌த்தில் முத்ரா ப‌ட‌ங்க‌ள்.ம‌லை மீது ஒரு சிறிய‌ கோட்டை கூட‌ உள்ள‌து.




அங்கிருந்து கிள‌ம்பி ஸ்க‌ந்த‌ நோக்கி போனோம்,அப்போதே கொஞ்ச‌ம் இருட்டிவிட்ட‌து இத‌ற்கு மேல் அங்கு போய் என்ன‌ பார்க்க‌ப்போகிறேன் என்ப‌தே என் நினைவாக‌ இருந்த‌து,இத‌ற்கிடையில் ந‌டுவில் ஓரிட‌த்தில் நிறுத்தி கேக் ம‌ற்றும் பான‌ங்க‌ளை வாங்கிக்கொண்டு வ‌ந்தார்.செல‌வு செய்ய‌விட‌வில்லை.தொட‌ர்ந்த‌ ப‌ய‌ண‌ம் ஸ்க‌ந்த‌ப் வ‌ந்த‌ போது ந‌ன்றாக‌ இருட்டிவிட்ட‌து.ஏதோ ஒரு சாலை க‌ட‌ல்வ‌ரை வ‌ந்து முடிந்திருந்த‌து.அப்ப‌டியே வ‌ண்டியை நிறுத்திவிட்டு க‌ட‌ற்க‌ரையை நோக்கி ந‌ட‌ந்தோம்.நிலா வெளிச்ச‌ம் கொஞ்ச‌மாக‌ இருந்த‌து ம‌ற்ற‌ப‌டி யாரோ நான்கு தொழிலாள்ர்க‌ள் பாய்விரித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்க‌ள்.

க‌ட‌ற்க‌ரை நோக்கி நின்ற‌ போது....வாவ்!! என்னை அறியாம‌லே உள்ள‌ம் குதூக‌லித்த‌து.இருண்ட‌ வான‌ம்,வ‌ட‌க்கு நோக்கி க‌ட‌ல்..ந‌ட்ட‌ ந‌டுவே சிறிய‌ க‌ர‌டி என்று அழைக்க‌ப்ப‌டுகிற‌ Ursa Miநொர் ந‌ட்ச‌த்திர‌ கூட்ட‌ம் தென்ப‌ட்ட‌து.வால் போன்ற‌ ப‌குதியில் ந‌டுவில் இருக்கும் ந‌ட்ச‌த்திர‌த்தின் துணை ந‌ட்ச‌த்திர‌மும் தெரிந்த‌து.இது அனைத்தையும் என் தாத்தா என‌க்கு காண்பித்த‌ நாக‌ப்ப‌ட்டின‌ முற்ற‌ம் தான் ஞாப‌க‌த்துக்கு வ‌ந்த‌து.Polaris என்ற‌ழைக்க‌ப்ப‌டும் ந‌ட்ச‌த்திர‌ம் க‌ட‌ல்ம‌ட்ட‌த்தில் இருந்து 10 டிகிரி கோண‌த்தில் இருந்த‌து.




அன்னாந்து பார்த்தால் இதுவ‌ரை காண‌க்கிடைக்காத‌ ந‌ட்ச‌த்திர‌ கூட்ட‌ங்க‌ள் வெறும் க‌ண்க‌ளுக்கு பெரும் விருந்தாக‌ இருந்த‌து.என்னுடைய‌ ஆர்வ‌த்தை பார்த்த‌ சிரியா ந‌ண்ப‌ர் த‌ன்னிட‌ம் இருக்கும் சில‌ நெகிழிக‌ளை கொண்டுவ‌ந்து கொடுத்து ப‌டுத்துக்கொண்டு பார் என்றார்.

த‌லைக்கு மேல் தெரிந்த‌ செவ்வாய் செங்க‌திர்க‌ளை வீசிக்கொண்டிருந்த‌து அத்தோடு ப‌ல‌ ப‌ல ந‌ட்ச‌த்திர‌ தொகுதிக‌ள் வான‌த்தை பிர‌ம்மாண்ட‌மாக்கிகொண்டிருந்த‌து.ந‌க‌ர‌ங்க‌ளில் செய‌ற்கை ஒளியில் இம்மாதிரியான‌ காட்சிக‌ளை நாம் காண‌முடியாது.நிர்மால்ய‌மான‌ வான‌ம் ம‌ற்றும் செய‌ற்கை ஒளியில்லாம‌ல் இருக்கும் இட‌ங்க‌ளை தேர்ந்தெடுத்து வான‌த்தை பார்த்தால் கிடைக்கும் ஆன‌ந்த‌ம் சொல்லில் அட‌ங்காது.கையில் தொலைநோக்கி எதுவும் இல்லாத‌து மிக‌ பெரிய‌ இழ‌ப்பாக‌ தெரிந்த‌து.ஒன்றுமே பார்க்க‌ முடியாது என்று வ‌ந்த‌ என‌க்கு மிக‌ப்பெரிய‌ ப‌ரிசாக‌ ந‌ட்ச‌த்திர‌ வான‌ம் பார்க்க‌ கிடைத்த‌து.

க‌ட‌ற்க‌ரையில் ப‌டுத்துக்கொண்டிருக்கும் போதே ஏதோ பேச்சு திசைமாறி Religion ப‌க்க‌ம் போய் அது தீவிர‌மாக‌ போகும் முன்பே அங்கிருந்து கிள‌ம்பிவிட்டோம்.இத‌ன் விளைவை அடுத்த‌ ப‌திவில் பார்க்க‌லாம்.


வ‌ரும் வ‌ழியில் அங்குள்ள‌ ஒரு Resort உள்ளே போய் பார்த்துவிட்டு அத‌ன் பிற‌கு Diving Centre என்ற‌ இட‌த்துக்கும் போய்விட்டு வ‌ந்தோம்.

Monday, March 22, 2010

புதிய‌வ‌ர்

எங்க‌ள் வீட்டில் 3 அறை.க‌ழிவ‌றையுட‌ன் இருக்கும் அறையில் முத‌லில் ஒரு த‌மிழ‌ர் இருந்தார் இப்போது ஒரு ம‌லேசிய‌ர் இருக்கார்.இர‌ண்டாவ‌து அறையில் நான்.மூன்றாவ‌து அறை ஒரு பிலிபினோவுக்காக‌ ஒதுக்க‌ப்ப‌ட்ட‌து ஆனால் என்ன‌ கார‌ண‌மோ அவ‌ன் இங்கு கொஞ்ச‌ நாள் ம‌ட்டும் த‌ங்கிவிட்டு போய்விட்டான்.அவ‌ன் போன‌ பிற‌கு அந்த‌ அறை சும்மாவாக‌வே தூசிக‌ளை சேமித்துக்கொண்டிருந்த‌து.இப்ப‌டிப்ப‌ட்ட‌ ச‌ம‌ய‌த்தில் வேறு ஒரு புது வேலைக்காக‌ துபாய் ம‌ற்றும் அபுதாபியில் இருந்த‌ சில‌ ஊழிய‌ர்க‌ளை இங்கு கொண்டு வ‌ந்த‌து நிர்வாக‌ம்.புதிதாக‌ வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு முத‌லில் ஹோட்ட‌லில் த‌ங்க‌வைப்ப‌தாக‌ முடிவு செய்திருந்தார்க‌ள் அத‌ன் பிற‌கு ஒரு நாள் வாட‌கை 33 ரியால் என்ப‌தை க‌ண‌க்கு போட்டு சும்மா இருந்த‌ இந்த‌ அறைக்கு அந்த‌ பாக்கிஸ்தானியை மாற்றிவிட்டார்க‌ள்.இந்த‌ வீடு எடுக்கும் போதே நான் வெஜிடேரிய‌ன் என்ப‌தால் என்னை முன்னிருத்தியே ம‌ற்ற‌வ‌ர்க‌ளை தேர்வுசெய்தார்க‌ள் ஆனால் இப்போது இருக்கும் "த‌ல‌" அதையெல்லாம் காற்றில் ப‌ற‌க்க‌விட்டுவிட்டு எங்க‌ளை ஒரு வார்த்தை கூட‌ கேட்காம‌ல் மூன்றாம‌வ‌ரை இங்கு மாற்றிவிட்டார்.

பாவ‌ம் அந்த‌ பாக்கிஸ்தானி உள்ளே ச‌மைக்க‌ இட‌ம் இல்லாம‌ல் வெளியில் போய் சாப்பிட‌வேண்டிய‌ நில‌மைக்கு த‌ள்ள‌ப்ப‌ட்டிருந்தார்.இத‌ற்கிடையில் பாக்கிஸ்தானியின் ஒப்ப‌ந்த‌ப்ப‌டி ஒரு வார‌த்தில் வேறு வீடு பார்த்துக்கொள்ள‌ வேண்டும் என்றும் அத‌ன் பிற‌கு ஒரு சிரியா நாட்டுக்கார‌ர் ஒரு மாத‌த்துக்காக‌ அங்கு வ‌ருகிறார் என்று ம‌றைமுக‌மாக‌ சொல்ல‌ப்ப‌ட்ட‌து.நேரிடையாக‌ சொல்ல‌ப்ப‌டாத‌து வ‌ருத்த‌த்தை த‌ந்தாலும் இன்னும் 6 மாத‌ம் தான் இருக்கு எத‌ற்கு ச‌ண்டை போட‌ வேண்டும் என்று விட்டுவிட்டேன்.

சிரியாகார‌ர் தான் வ‌ரும் போது ம‌னைவியுட‌ன் த‌ன் ம‌கிழுந்துவில் ஷார்ஜாவில் இருந்து வ‌ந்திருந்தார்.ம‌ஸ்க‌ட் முழுவ‌தும் ம‌னைவியுட‌ன் சுற்றிப்பார்க்க‌ வ‌ச‌தியாக‌ ஒரு வார‌ம் வெளியில் த‌ங்கியிருந்தார்.ம‌னைவி கிள‌ம்புவ‌த‌ற்கு முன்பு தான் த‌ங்க‌ப்போகும் அறைக்கு அழைத்து வ‌ந்து காண்பித்தார்.

இந்த‌ சிரியாக்கார‌ரை ஒரே ஒரு முறை துபாயில் வேலை செய்யும் போது பார்த்திருந்தாலும் அவ்வ‌ள‌வாக‌ பேசிய‌தில்லை.ந‌ல்ல‌ எட்டு க‌ட்டை குர‌ல் வ‌ள‌ம்,ப‌க்க‌த்தில் இருப்ப‌வ‌ருட‌ன் பேசினாலே இர‌ண்டு வீடு த‌ள்ளி இருப்ப‌வ‌ர்க‌ள் கூட‌ கேட்க‌லாம்.எளிமையாக‌ இருப்ப‌வ‌ர்- தான் காபி போட்ட‌ GASக்கு கூட‌ காசு கொடுத்துவிடுகிறேன் என்று சொல்ப‌வ‌ர்.இஸ்லாம் ம‌ற்றும் அவ‌ருடைய‌ க‌ட‌வுள் ப‌ராக்கிர‌ம‌ங்க‌ளை நான் ஹெட் போன் போட்டு ப‌ட‌ம் பார்த்துக்கொண்டிருந்தாலும் சொல்வார்.அவ்வ‌ப்போது த‌ருமி ப‌திவுக‌ள் ஞாப‌க‌ம் வ‌ந்தாலும் அவ‌ர் சொல்வ‌தை பொருமையுட‌ன் கேட்டுக்கொண்டிருப்பேன்.

அவ‌ர் வாழ்கை முறை வித்தியாச‌மாக‌ இருந்த‌து.மாலை வேலை முடிந்து வீடு திரும்பிய‌வுட‌ன் தூக்க‌ம் அத‌ன் பிற‌கு இர‌வு 9 ம‌ணிக்கு எழுந்து மெது ந‌டை ஓட்ட‌ம் அத‌னால் வ‌ந்த‌ வேர்வையை நீக்க‌ குளிய‌ல்,குளித்த‌தால் வ‌ந்த‌ சுறு சுறுப்பால் 11 ம‌ணிக்கு மேல் சாப்பாடு,சாப்பிட்ட‌தால் தூக்க‌ம் வ‌ராம‌ல் 2 ம‌ணி வ‌ரை தொலைக்காட்சி.இவ்வ‌ள‌வும் முடிந்த‌பிற‌கு தூங்கி காலை 7 அல்ல‌து 7.30 ம‌ணிக்கு எழுந்து அலுவ‌ல‌க‌த்துக்கு 8.30 வ‌ருவார்.ஏன் இப்ப‌டி என்ற‌ கேட்ட‌ ஒரு நாள்,என்னுடைய‌ நேர‌ப்ப‌டி இர‌வு 10.30 தூங்கி விடிய‌ற்காலை 3 ம‌ணிக்கெல்லாம் முழிப்பு வ‌ந்த‌தாக‌ சொன்னார்.

ஒவ்வொரு நாளும் அலுவ‌ல‌க‌ம் முடிந்த‌ பிற‌கு என்னிட‌ம் வ‌ந்து சாமான்க‌ள் வாங்க‌ என்கேயாவ‌து போக‌னுமா? என்று அன்புத்தொல்லை ப‌ண்ணுவார்.நானும் "ஒன்றும் இல்லை" இப்போது என்று சொல்லி த‌ப்பித்து வ‌ந்தேன்.ஒரு நாள் ச‌ரி போய் தான் பார்க்க‌லாம் என்று என்னுடைய‌ இர‌வு சாப்பாடு 8 ம‌ணிக்கு முடித்துவிட்டு அவ‌ருட‌ன் 8.30 வெளியில் கிள‌ம்பினேன்.ம‌கிழுந்து ஓட்டுவ‌து என்றால் அவ்வ‌ள‌வு இஷ்ட‌ம் போல் அவ‌ருக்கு.எங்கு போக‌லாம் என்றார்?உங்க‌ளுக்கு என்ன‌ வாங்க‌வேண்டுமோ அங்கேயே போக‌லாம் என்றேன்.

வ‌ண்டி 100 ~120 கிமீட்ட‌ர் வேகத்தில் வ‌ழுக்கிக்கொண்டு போய்கொண்டிருந்த‌து.40 கி மீட்ட‌ர் தள்ளி உள்ள‌ சீஃப் என்று சொல்ல‌க்கூடிய‌ விமான‌ நிலைய‌த்தையும் தாண்டி போய்கொண்டிருந்த்து.வ‌ழி நெடுகே ந‌ம்மூர் ம‌க்க‌ள் சொல்வ‌து போல் ந‌ம்மூரில் ப‌டித்து அமெரிக்க‌ர்க‌ளுக்கு வேலை செய்வ‌து,அங்கு ந‌ல்ல‌ பெரிய‌ ப‌த‌விக‌ளில் இருப்ப‌து ம‌ற்றும் ப‌ண‌ம் சேர்த்த‌ பிற‌கு சொந்த‌ நாட்டுக்கு திரும்பி வ‌ந்து இங்குள்ள‌ அர‌சிய‌ல் நிலையை க‌ண்டு வெம்பி வெடிப்ப‌து என்று வ‌ரிசையாக‌ சொல்லிக்கொண்டு வ‌ந்தார்.ஆச்ச‌ரிய‌மான‌ ஒற்றுமை என்னை திகைக்க‌வைத்த‌து.சீஃப் க்கு பக்க‌த்தில் உள்ள‌ சிட்டி சென்ட‌ருக்கு போய் 6 ரியாலுக்கு சாமான் வாங்கிவிட்டு திரும்ப‌ ஒரு 45 கிமீட்ட‌ர் ஓட்டி வீடு வ‌ந்து சேரும் போது ம‌ணி 10.30.ச‌ரியாக‌ நான் தூங்கும் நேர‌த்துக்கு கொண்டுவ‌ந்து விட்டார்.என்ன‌தான் பெட்ரோல் விலை குறைவு என்றாலும் வெறும் 6 ரியாலுக்காக‌ சுமார் 90 கி மீட்ட‌ர் ஓட்டிப்போய் கொண்டுவிட்டார்.நேர‌த்தை போக்க‌ பேச‌வேண்டும் அதை யாராவ‌து கேட்க‌வேண்டும் அத்தோடு வ‌ண்டி ஓட்ட‌வேண்டும் என்று காசு கூட‌ வீணாக்குவ‌தை ப‌ற்றி க‌வ‌லைப்ப‌டாம‌ல் இய‌ற்கையையும் அசுத்த‌ப்ப‌டுத்திகிறார்க‌ளே என்று வ‌ருத்த‌மாக‌ இருந்த‌து.ம‌ற்றொரு முறை இதை அனும‌திக்க‌க்கூடாது என்று நினைத்துக்கொண்டேன்.

வார‌ இறுதி விடுமுறை இங்கு இர‌ண்டு நாட்க‌ள்.என்னிட‌மும் அந்த‌ ம‌லேசிய‌ரிட‌மும் வாக‌ன‌ம் இல்லாத்தால் வெளியிட‌ம் போக‌ பொது முறையை ம‌ட்டுமே ந‌ம்பி இருக்க‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம் ஆனால் ந‌ம்ம‌ சிரியாகார‌ருக்கு ம‌கிழுந்து இருக்கு,குடும்ப‌ம் ஷார்ஜாவில் இருக்கு அத்தோடு இர‌ண்டு தேச‌த்துக்கு போய் வ‌ர‌ விசா கெடுபிடி அவ்வ‌ள‌வாக‌ கிடையாது.இந்த‌ கார‌ண‌ங்க‌ளாலேயே வார‌ இறுதி நாட்க‌ளில் குடும்ப‌த்தை க‌ண்டு வ‌ர‌ சுமார் 1000 கிமீட்ட‌ர் வ‌ண்டி ஓட்டுகிறார்.இப்ப‌டி போய் வ‌ருவ‌தால் சாத‌ர‌ண‌ நாட்க‌ளில் அவ‌ரால் சும்மா இருக்க‌ முடிவ‌தில்லையோ என்ன‌வோ!!

அத‌ன் பிற‌கு ப‌ல‌ முறை வெளியில் போக‌ கேட்டாலும் அவ‌ர் ம‌ன‌ம் நோகாம‌ல் வேறு வேலை இருப்ப‌தாக‌ சொல்லிவிடுவேன்.

நினைப்ப‌தெல்லாம் எங்கு ந‌ட‌க்குது? மீதி அடுத்த‌ ப‌திவில்.

Friday, March 05, 2010

சுத்தமான காத்து

ஒவ்வொரு தேசத்துக்கும் தனித்தனியே விதிமுறைகள்,வேலை செய்ய வந்துவிட்டால் வேறு வழியின்றி அனுசரித்து தான் போக வேண்டும்.இதை எதற்கு சொல்கிறேன் என்றால் இங்கு இணைய இணைப்புக்கு (Nawras) 48 மணி நேரத்துக்கு இரண்டு ரியால் வசூலிக்கிறார்கள்.மிக அதிகபட்சமாக நீங்கள் 2 ஜிபி வரை உபயோகிக்கலாம்.இந்த இணைய இணைப்பில் பலான/அனுமதிகப்படாத பக்கங்கள் என்று அவர்கள் நிர்ணயத்திர்கிற பக்கங்களை பார்க்க முடியாது.வேறு வழி மூலம் பார்க்கலாம் என்றாலும் விதியை அனுசரிப்பது நல்லது என்பதால் அந்த வழி முறையை சொல்லவில்லை.சரி,பிள்ளைகளை காப்பாற்ற தேவையான வழி என்பதால் அதில் குறை காணமுடியாது ஆனால் இந்த VOIP என்று சொல்லப்படுகிற இணையம் மூலம் தொலைப்பேசி முறையை மூடி வைத்துள்ளார்கள்.இது UAE யிலும் நடைமுறையில் உள்ளது.இதை தடை செய்ய பிள்ளையார் சுழி போட்டது Skype என்று ஓரிடத்தில் படித்தேன் ஆதாவது இந்த மென்பொருள் மூலம் செலுத்தப்படும் பாக்கெட்கள் அவ்வளவு பாதுகாப்பாக இல்லாத்தாலும் மற்றும் கட்டமைப்பை சேதப்படுத்தும் முறையில் இருப்பதால் இதை தடை செய்துவிட்டார்கள் என்று.கணினியில் ஒன்று போனால் என்ன அதே போல் 100 இருக்கே என்ன செய்வது என்று யோசித்து எல்லாவற்றையும் மூடிவிட்டார்கள்.பக்கத்து நாடுகளில் உள்ள முறையை அப்படியே காப்பி அடிக்கிறார்களோ என்று சந்தேகம் வருகிறது.

ஆமாம் இப்படி VOIP ஐ மூடுவதால் அப்படி என்ன பெரிதாக சாதிக்கப்போகிறார்கள் என்று முதலில் தோனினாலும் இதன் உள்ள இருக்கும் சூட்சமம் அதன் வீரியம் அதனால் இங்குள்ள தொலை தொடர்பு துறை சந்திக்க நேரிடும் இழப்புகள் என்று ஒன்றன் பின் ஒன்றாக தொடர்கிறது.இந்த காரணத்தையாவது ஓரளவு ஒத்துக்கொள்ளலாம் அதைவிட்டு இணையத்துக்கு பணம் கட்டிய பிறது கணினி - கணினி தொடர்பில் செய்யப்படும் குரலுக்கும் ஆப்பு வைக்கிறார்கள்.உதாரணமாக MSN,Yahoo மற்றும் Gtalk மூலம் நண்பர்களுக்கிடையே செய்யப்படும் ஆடியோவையும் அவ்வப்போது மூடிவிடுகிறர்கள்.

வீட்டில் திறந்தால் 2 ரியால் கொடுக்கவேண்டி வரும் என்று Internet Cafe க்கு போன வாரம் போனேன்.35 நிமிடங்களாக Hello வை தவிர ஒன்றும் பேசவில்லை,தெண்டமே என்று 300 பைசா கொடுத்துவிட்டு வந்தேன்.நேற்று காலை வீட்டில் இருந்து மனைவியுடன் பேச முற்படும் போதும் இதே பிரச்சனை ஆனால் நகர்படத்தில் பிரச்சனையில்லை.நகர்படம் போக வர இருக்கும் பேண்ட் விட்த் ஆடியோவுக்கு இல்லை என்றால் என்ன அர்த்தம்?அ தை மூடியிருக்கிறார்கள் என்றே தெரிகிறது.அதன் பிறகு கூகிளில் தேடிய போது மேற்சொன்ன பல விபரங்கள் வந்துவிழுந்தது.இப்படி கெடுபிடி இருப்பதாலே பல Internet cafe யில் மலிவு விலையில் தொலைபேசி அழைப்புகளை கள்ளத்தனமாக செய்கிறார்கள்.

காலையில் செய்ய முடியாத குரல் வழி பேச்சு மாலையில் கிடைத்தது - என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ள முடியவில்லை.

வழக்கம் போல் மாலையில் பக்கத்தில் இருக்கும் கடற்கரைக்கு மெது நடை போகும் போது சில அருமையான காட்சிகள் காண கிடைத்தது அது அப்படியே கீழே போட்டிருக்கேன்.

சூரியன் தண்ணீரை தொடும் வரை காணக்கிடைத்தால் காற்றும் வளி மண்டலமும் தூசு இல்லாமல் இருக்கு என்று வைத்துக்கோள்ளலாம்.









கடைசி படத்தில் நம்மக்கள் மூவர் நின்று ரசித்துக்கொண்டிருக்கிறார்கள்.படத்தை பெரிதாக்கி பார்க்க அதன் மீது சொடுக்குங்கள்.
அனைத்தும் சோனி எரிக்ஸன் w880i எடுத்தது.

Thursday, March 04, 2010

இணைப்புப் பகுதி

துபாய் மெட்ரோ சத்தமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது போலும்.அவ்வப்போது வரும் சிற்சில பிரச்சனைகளை தவிர வேறு எதுவும் பெரிய பிரச்சனையை ஊடகங்கள் போடவில்லை.இந்த வேலை செய்யும் போது போட்ட பதிவு இது.

தரைக்கு மேல் வரும் இந்த பால வகைகளை எப்படி செய்கிறார்கள் என்று இங்கு போட்டிருந்தேன்.இந்த பல துண்டுகளை ஒன்றிணைக்கும் பகுதி எப்படி இருக்கும்? அதை பிரத்யோகமாக காண்பிக்கத்தான் இந்த படம் அங்கிருக்கும் போது எடுத்திருந்தேன்.அந்த சமயத்தில் போட மறந்த படம் கீழே...

இந்த மேடு பள்ளங்களில் ஏதோ ஒரு வித கெமிகல் தடவி இரண்டையும் சேர்கிறார்கள் என்று அங்கு வேலை செய்யும் தொழிலாளி சொன்னர்.இப்பிடிப்பு ஒன்றோடு என்று நல்ல பிடிமானம் ஏற்படுத்தக்கூடியது மற்றபடி இதன் மேல் வரக்கூடிய Load ஐ அவ்வளவாக எடுக்காது என்றே தோனுகிறது.அடிபக்கத்தில் காணப்படும் குழாய் மூலம் தான் இதை தாங்கிப்பிடிக்கும் Cable கள் போகும்.



இப்படம் டிரைலரில் கொண்டுவந்து வைத்திருக்கும் போது எடுக்கப்பட்டது.

Wednesday, March 03, 2010

நங்கூரம்.

இருப்பது ஓரிடம்..ஆனால்
விழுந்ததும்
வெவ்வேறிடம்!!




துபாய் கிரீக்கில் நிற்கும் ஒரு படகின் பகுதி படம்.