Wednesday, December 27, 2006

காகிநாடா (L&T-ECC )



மேட்டூரில் வேலை முடிந்து சின்ன சின்ன வேலைகளையும் முடித்துவிட்டு அடுத்த இடத்துக்காக காத்திருக்கும் நேரத்தில் வந்தது வேலை மாற்றம் "காகிநாடாவிற்கு".

திரும்பவும் ஆந்திரா பக்கம்.

நாங்கள் எந்த புது பிராஜக்ட்க்கு போனாலும் முதலில் யார் அங்கு ரெசிடன்ட் இன்ஜினியர் என்று தான் பார்ப்போம்.ஏனென்றால் சிலர் தலைவலி,திருகுவலி எல்லாம் கொடுப்பவர்கள்.புதியவர்கள் என்றால் திரும்ப நம்மை நிரூபிக்கவேண்டுமே!

இந்த வேலை இடத்தில், அப்போது இருந்தவர் திரு ஞானசேகர் என்பவர்,இப்போதும் ஹைதராபாத் விமானநிலைய சைட்டில் வேலை செய்துகொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.முதன்முதலில் ECC யில் வேலை ஆரம்பிக்கும் போது இவர் தலைமையில் கீழ் வேலை பார்த்தேன் பிறகு மறைமலை நகர் சைட்டிலும் வேலை பார்த்தேன்.மறைமலைநகர் சைட்டில் எங்கள் இருவருக்கும் இடையில் அவ்வளவு நல்லுறவு இல்லாததால் எங்கே இங்கேயும் பிரச்சனை வருமோ? என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.

அது நடந்து பல வருடங்கள் ஓடிவிட்டதால் அதெல்லாம் அவர் மனதில் வைத்துக்கொண்டிருக்கமாட்டார் என்று நினைத்திருந்தேன்.ஆனால் அப்படி நடக்கவில்லை என்பது வேறு விஷயம்.அதற்கு பிறகு வருகிறேன்.

காக்கிநாடா என்றவுடனே வீட்டை காலி பண்ண ஆரம்பித்துவிட்டேன்.மனைவி பிறந்தகம் போய்விட்டதால் அவர்களுக்கு தேவையானவை எனக்கு தேவையில்லாதாக தோன்றுபவை அனைத்தையும் வெளியில் கொண்டு போட்டேன்.அப்படி போட்டவற்றில் சில எங்கள் கல்யாணத்திற்கு வந்தவை.அதில் அவர்களுக்கு கொஞ்சம் வருத்தம்,அதிலிருந்து வேலை இட மாற்றம் என்றால் வீட்டை காலி பண்ண என்னை விட மாட்டார்கள்.

தேதி குறித்து மேட்டூரிலிருந்து காகிநாடா போக தேவையானவற்றை எடுத்துக்கொண்டு,பெரிய பெட்டிகளை இங்கிருந்து அந்த சைட்டுக்கு போகும் கம்பெனி சாமன்கள் கூட அனுப்பிவிட்டேன்.கட்டுமானத்துறையில் இது ஒரு அனுகூலம்.வெளியிடங்கள் மூலம் அனுப்பினாலும் (ABT பார்சல்.. ) தேவையான பணம் பெற்றுக்கொள்ளலாம் என்றாலும் கம்பெனி மூலம் அனுப்பும் போது பாதுகாப்பாகவும் விரைவாகவும் மற்றும் சேதமில்லாமலும் போய்விடும்.

போகும் வழியில் மனைவியை பார்த்துவிட்டு சென்னை வந்து அங்கிருந்து காகிநாடா போகும் ஒரே புகைவண்டி "சர்கார் எக்ஸ்பிரஸ்"யில் முன்பதிவு செய்தேன்.காகிநாடாவும் கிட்டத்தட்ட குண்டூர் மாதிரி தான்.மெயின் லயின் பாதையில் இருந்து பிரிந்து கொஞ்சம் உள்ளே போகவேண்டும்.

அவசரமில்லாத பயணம் மற்றும் வேறு வண்டிகளில் முன்பதிவு கிடைக்காத நேரத்தில் சர்காரில் பயணம் செய்யலாம்.நேர விரயம் ஆகும்.அதற்கு பதிலாக பல சமயம் நாங்கள் சென்னையில் இருந்து ராஜமுந்திரி வந்து அங்கிருந்து காகிநாடாவுக்கு 1மணி முப்பது நிமிடங்களுக்குள் பேருந்துவில் வந்துவிடுவோம்.

சென்னையில் இருந்து ராஜமுந்திரிக்கு பல வண்டிகள் இருக்கும்.முடிந்தவரை இரவில் பயணத்தை வைத்துக்கொண்டு காலை வேலைக்கு போய்விடுவோம்.


இந்த பிராஜக்ட் நாகர்சுனா உரத்தொழிற்சாலை கட்ட தேவையான சில கட்டங்களை கட்டவேண்டும்.அதில் இரண்டு சைலோ,ஒரு சிமினி மற்றும் மெக்கானிகல் எரக்ஷன் வேலைகள்.

வந்த முதல் நாள், ராஜமுந்திரி இறங்கி பேருந்து மூலம் காக்கிநாடா வந்து இறங்கினேன்.நகர பஸ் நிலையம் வரை போகாமல் நடுவிலேயே இறங்கி அங்கிருந்து ரிக்ஷா மூலம் எங்கள் குடியிருப்புக்கு போனேன்.முதலில் கண்ணில் பட்டது மெஸ் தான்.அதைச்சுற்றி பல வீடுகளை கம்பெனி வாடகைக்கு எடுத்திருந்தது.

மெஸ்ஸில் நான் முதன் முதலில் இந்த கம்பெனியில் வேலை பார்த்தபோது உதவியாளராக சேர்ந்த "திரு.சின்னையா" இப்போது குக் ஆக பதவி உயர்வு பெற்று அங்கு இருந்தார்.இடைப்பட்ட வருடங்களில் நல்ல தேர்ச்சி பெற்று நல்ல பெயருடன் இருந்தார்.ஒரு காலத்தில் சின்ன வயதில் வந்து வேலைக்கு சேர்ந்து பிறகு படிப்படியாக உயர்ந்து இந்த நிலைக்கு வந்திருந்தார்.

மெஸ்ஸிலேயே எல்லா சாமான்களை வைத்துவிட்டு குளித்து,சாப்பிட்டுவிட்டு ஜீப்புக்காக காத்திருந்தேன்.வேலை இடம் மெஸ்ஸில் இருந்து 7 KM தள்ளி இருந்தது.

பல பழைய முகங்களை பார்க்கப்போகிறோம் என்ற ஆவல் இருந்தாலும்,முதல் நாள் அந்த ரெசிடென்ட் இன்ஜினியரை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்ற கவலையும் வந்தது.ஏனென்றால் மனிதர் அந்த மாதிரி.

சுமார் மதியம் 12 மணிக்கு சைட் உள்ளே போனேன்.அலுவலகத்தில் முகத்தை காண்பித்துவிட்டு ரெசிடென்ட் இன்ஜினியரை பார்க்கலாம் என்று பார்த்தால் அவர் சைட்க்கு போய் இருப்பதாகவும், இன்னும் வரவில்லை என்றார்கள்.

மணி 1 ஆகியும் வரவில்லை,சரி நாமே தேடிப்போய் முகமன் செய்துவிடுவோம் என்று கிளம்பி சைட் உள்ளே போனேன்.

மீதி அடுத்த பதிவில்..

Monday, December 18, 2006

இணைய வலை (2)

நமது நண்பர் அன்று உபயோகப்படுத்திய விபரம்.
19.11.06 விடியற்காலை 3.49 வரை உபயோகப்படுத்தியுள்ளார்.
கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

Photobucket - Video and Image Hosting

வீட்டு ஓனர் பேசிய தொனியில் இருந்தே பிரச்சனை கொஞ்சம் பெரிது என்று கண்டுகொண்டேன்.

கொஞ்சம் படபடப்பு மனிதர் என்பதால் அவர் சொல்வதை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தேன்.இந்த மாதிரி படபடப்பு ஆசாமிகளிடம் பழகும் போது அவர்கள் சொல்வதை முழுவதும் கேட்டபிறகு,ஆதாவது அவர்களை டிரைன் அவுட் செய்தபிறகு நீங்கள் சொன்னீர்கள் என்றால் கேட்பார்கள்.அவர்கள் படும் அவசரத்துடன் நீங்களும் சேர்ந்துகொண்டால் நீங்கள் சொல்வது அங்கு சுத்தமாக கேட்கப்படாது.வீணான பிரச்சனை தான் வரும்.

ஏங்க நீங்க 19ம் தேதி அமெரிக்காவுக்கு தொலைபேசினார்களா?

இல்லீங்களே,எனக்கு தெரிந்து என்னுடைய உறவினர்களோ,நண்பர்களோ இல்லையே என்றேன்.எத்தனை மணிக்கு என்று போட்டிருக்கா?

விடியல் காலை 4 மணிக்கு.

என்னது! விடியல் காலை 4 மணிக்கா? நான் நன்றாக தூங்கிக்கொண்டிருந்திருப்பேன்.அந்த சமயத்தில் நான் பண்ணவில்லையே,என்றேன்.

19ம் தேதி என்ன கிழமை வருகிறது? என்றார்.

பார்த்தால் ""ஞாயிற்றுக்கிழமை"

கொஞ்ச நேரத்தில் புரிந்தது நமது நண்பருக்கு இரவல் கொடுத்த இணைய இணைப்பின் மகிமை என்று.

அதைச்சொன்னவுடன் அவருக்கு இன்னும் கோபம் அதிகமாகியது.என்னிடம் கேட்காமல் ஏன் கொடுத்தீர்கள்.பிறகாவது என்னிடம் சொல்லியிருக்க வேண்டாமா? என்றார்.

சட்டென புரிந்தது,நமது நண்பர் என் காலை வாரிவிட்டது.

வீட்டு ஓனரிடம் நான் சொல்லச்சொன்னதையும் அவர் சொல்லாததையும் சொல்லி மன்னிப்பு கேட்டேன்.சரி அதனால் என்ன பிரச்சனை என்றேன்.

அவருடைய டெலிபோன் பில்லுக்கு 93 வெள்ளி அதிகமாக வந்திருந்ததால் தொலைபேசி கம்பெனியே வெளிநாட்டு அழைப்புகளை நிறுத்திவிட்டனர்.இதன் காரணமாகத்தான் அவரால் ஆஸ்திரேலியாவுக்கு அழைக்கமுடியவில்லை.இந்த மாதிரி தொல்லைகள் இணையம் ஆரம்பித்த காலங்களில் தேவையில்லாத இடங்களுக்கு போய் தட்டிக்கொண்டிருந்தவர்கள் இழந்ததால் பட்டென்று கட் செய்துவிட்டார்கள்.

இப்போது புரிந்தது அன்று நான் சொல்லியும் நமது நண்பர் நான் சொல்லியும் தொலைபேசி கேபிளை திரும்ப இணைக்காமல் விட்டார் என்று.

ஓனரை ஓரளவு சாமாதானப்படுத்தி நான் வீட்டுக்கு வந்தபிறகு அந்த பில்லை பார்த்து முடிவுசெய்யலாம்,அப்படி அந்த பையன் பண்ணவில்லை என்றால் நான் செய்த தவறுக்கு நானே அந்த பணத்தை கொடுக்கிறேன் என்றேன்.

அதில் கொஞ்சம் சமாதானம் அடைந்தார்.

வீட்டுக்கு போய் பில்லை பார்த்தேன்.

எல்லாமே விடிகாலை அழைப்புகள்.

அன்று இரவு நமது நண்பர் வெகுநேரம் கழித்து வந்ததால் பேச முடியவில்லை.
மறு நாள் காலை அலுவலகம் கிளம்பும் முன் வெளியே வந்த போது இது பற்றி கேட்ட போது தனக்கு எதுவும் தெரியாது என்றும்.நான் விடியற்காலை 4 மணிவரை இணையத்தை உபயோகித்தேன் என்றார்.

அப்படி என்றால் யார் 4 மணிக்கு அமெரிக்காவிற்கு தொலைபேசியது? இது ஓனர்.
சில சமயம் இணையத்திருடர்கள் இந்த மாதிரி செய்வார்கள் என்று சால்ஜாப்புகள் சொல்ல ஆரம்பித்தான்.

நீ இல்லை என்றால் நான் இன்றே காவல்நிலையத்தில் புகார் செய்வேன் என்றார். தவறு உன் பக்கத்தில் இருந்தால் உன் நிரந்தரவாசத்தகுதியை கூட இழக்க நேரிடும் என்றார்.
இதற்கு எப்படி நான் மட்டும் பொறுப்பாக முடியும்?என்னை காண்பித்து, இவரும் தான் உபயோகிக்கிறார் அதனால் 50- 50 பகிர்ந்துகொள்ளலாம் என்றான்.

எனக்கோ செம கோபம் வந்தது."வேலியில் போற ஓணானை.."

அதற்குள் ஓனர் "அவர் 5 நாட்களாக உபயோகிக்கிறார்,அப்போதெல்லாம் வராத பிரச்சனை நீ உபயோகிக்கும் போது ஏன் வந்தது?" என்றார்.

பதில் சொல்ல முடியாத கேள்வி,அதற்குள் எனக்கு வேலைக்கு நேரமானதால் கிளம்பிவிட்டேன்.

கடைசியாக வேறு வழியில்லாமல் முழு பணத்தையும் தருவதாகச்சொல்லி அப்போதே தந்துவிட்டான்.

அவன் எங்கு போனான்?,எதை தட்டினான்?,எதைப்பார்த்தான்?எதுவும் எனக்கு தெரியாது.

அவனால் நான் இழந்தது வீட்டு ஓனர் என் மீது வைத்திருந்த நம்பிக்கையை.
நண்மை செய்யப்போய் மாட்டிக்கொண்டேன்.

டையல் அப்பில் இருக்கும் நண்பர்களே உங்களுக்கே தெரியாமல் எதையும் கவனிக்காமல் எண்டர் பட்டனை அமுக்கிக்கொண்டிருந்தால் இந்த மாதிரி கஷ்டத்தில் மாட்டிக்கொள்ளலாம்.

இங்குள்ள தொலைபேசி நிறுவனம் முன்கூட்டியே தெரிந்துகொண்டு இந்த மாதிரி அழைப்புகள் நேரும் போது துண்டித்துவிட்டு அந்தந்த நபரிடம் தெரிவிக்கிறார்கள்.இதுவே சிறுவர்கள் செய்து அப்படியே விட்டுவிட்டார்கள் என்றால் அவர்களது தொலைப்பேசி கட்டணம் எகிறியிருக்கும்.

ஜாக்கிரதை!!

இனி வரும் பதிவுகள் கொஞ்ச நாட்களுக்கு முன்பு மேட்டூர் வரை வந்து, விட்டதில் இருந்து தொடங்கும்.

Friday, December 15, 2006

இணையம் ஒரு வலை (1)

வலை எனபது பலருக்கும் தெரியும்,ஆனால் இந்த வலையை கொஞ்சம் பாருங்க.வித்தியாசமாக இருக்கும்.

இப்போது இருக்கும் வீட்டில் நான் ஒரு அறையில்,உத்ராஞ்சலில் இருந்து வந்து இங்கு வேலை பார்க்கும் ஒரு பையனும் இருந்தோம்.இந்த பையன் காலி செய்ததும் நான் அந்த அறைக்கு போகவேண்டும்.

இணைய இணைப்புக்கு வீட்டின் ஹாலில் இருந்து கேபிள் போட்டு என்னுடைய அறைக்கு இழுக்கவேண்டும்.அதனாலேயே அது வீட்டின் குறுக்கே போய் கொண்டிருந்தது.

அந்த பையன் இணையத்தை வீட்டில் உபயோகப்படுத்தாததால் அவனுக்கு தொலைபேசி இணைப்பு தேவைப்படாததாக இருந்தது.

நான் வந்தபிறகு இணையத்தை உபயோகப்படுத்துவதை பார்த்ததும் அவனுக்கும் ஆசை வந்தது போலும்.

ஒரு சனிக்கிழமை இரவு நான் வலையில் மேய்ந்துகொண்டிருக்கும் போது

அங்கிள் நான் இணையத்தை உபயோகப்படுத்த முடியுமா? என்றான்.

உனக்கு அக்கவுண்ட் இருக்கா?

இல்லை!

எவ்வளவு செலவாகும்?

இது டையல் அப் என்பதால்,தொலைபேசிக்கு எவ்வளவு ஆகுமோ அவ்வளவு தான் கும்.ஆதாவது Off Peak சமயத்தில் 1 மணி நேரத்துக்கு சுமார் 40 காசு,அதில்லாமல் நீ இணைய விரும்பும் ஸர்வீஸ் கொடுப்பவர்களுக்கு தனியாக பணம் செலுத்த வேண்டும் என்றேன்.

அது எவ்வளவு? என்றான்

மாதத்திற்கு 15.75 வெள்ளி என்றேன்.

முதலில் வீட்டு ஓனரிடம் அனுமதிபெற்றுக்கொள்,அப்படி கிடைத்தால் எனக்கு ஒன்றும் பிரச்சனையில்லை என்றேன்.

வீட்டு ஓனர் வீட்டில் இல்லாததால் இன்று ஒரு நாள் கொடுங்கள் அவர் வந்ததும் அனுமதி வாங்கிக்கொள்கிறேன் என்றான்.

அப்படியென்றால் "Free to Surf" என்ற வசதி ஸ்டார் ஹப் நிறுவனத்தினர் கொடுக்கிறார்கள்.அங்கு போய் பதிந்துகொண்டு நீ இணையலாம் என்று அதற்கு வேண்டிய வட்டையையும் கொடுத்தேன்.3 வருடங்களுக்கு முன்பு இதை நான் உபயோகித்துக்கொண்டிருந்த போது கிடைத்தவட்டு அது. ஆனால் அதை நிறுத்தியது எனக்கு அப்போது தெரியாது.

அதை வாங்கிக்கொண்டு போய்விட்டு,சரியாக வரவில்லை அங்கிள்,டையலிங் சத்தம் வரவில்லை என்றான்.

பிறகு அவன் அறைக்குப்போய் மோடம் கார்டில் இரண்டு ஸ்லாட் இருக்கும் பார், அதில் ஒன்று சுவற்றில் இருந்து வரும் கேபிளுக்கு மற்றொன்று தேவையானால் இன்னொரு தொலைபேசிக்கு அதனால் கேபிளை மாற்றிப்போட்டு முயற்சி செய் என்றேன்.

மாற்றியபிறகு டையலிங் சத்தம் வந்தது ஆனால் இணையத்துள் இணைய முடியவில்லை.

கொஞ்ச நேரத்துக்குப்பிறகு தான் தெரிந்தது அந்த சர்வீசை வெகு நாட்களுக்கு முன்பே நிறுத்தியிருந்ததை.

சரி என்னுடைய அக்கவுண்டை பயண்படுத்தி பார்கலாம் என்று நினைத்து என்னுடைய விபரங்களை கொடுத்தவுடன் இணையத்தின் உள் போகமுடிந்தது.கணினியில் எவ்வித பிரச்சனையும் இல்லை என்று தெரிந்துகொண்டபிறகு,அவனிடம்

உன் உபயோகத்துக்கு தகுந்தமாதிரி வீட்டு ஓனரிடம் பணம் கொடுத்துவிடு அதோடில்லாமல் பயண்படுத்தி முடித்தபிறகு மறக்காமல் அவர்களின் தொலைபேசி இணைப்பை திரும்ப பொருத்திவிடு என்றேன்.

சரி என்றான்.

இதெல்லாம் நடக்கும் போது இரவு மணி சுமார் 10.30.

மறுநாள் ஞாயிறு காலை எழுந்து ஹால் பக்கம் போன போது தொலைபேசி மற்றும் இணையத்துக்கு போட்டிருந்த கேபிளும் தரையில் கிடந்தது.நான் சொன்ன மாதிரி தொலைபேசி கேபிளை பொருத்தாது பார்த்து கோபமாக வந்தது.

நானே எடுத்து பொருத்திவிட்டு போனேன்.

அன்று மாலை வந்த வீட்டு ஓனர் ஆஸ்திரேலியாவுக்கு தொலைபேச முற்பட்ட போது தொடர்பு கிடைக்கவில்லை.சரி வேறெங்கோ பிரச்சனை என்று நினைத்து சும்மா இருந்துவிட்டார்கள்.

மறுநாள் திங்கட்கிழமை,அவரால் வெளிநாட்டுக்கு தொலைபேச முடியவில்லை.நான் சாயங்காலம் போனவுடன் தொலைபேசி நிறுவனத்துக்கு பேசி பிரச்சனை எங்கு என்று கேட்கச்சொன்னார்.

கேட்டபோது அவர்கள் சோதித்துப்பார்பதாக சொன்னார்கள்,ஆனால் இரவு 9.30 மணிவரை எந்த பதிலும் இல்லை.அதற்குப்பிறகு வந்த அழைப்பில் ஏதோ சொன்னதாக வீட்டின் உரிமையாளர் சொன்னார்கள். அவரால் சரியாக விளக்கமுடியவில்லை.

மறுநாள் செவ்வாய்கிழமை அவர் வேலை பார்க்கும் அலுவலகத்திக்கு பக்கத்தில் தான் தொலைபேசி நிறுவனத்தின் அலுவலகம் இருந்ததால்,போய் விஜாரித்து வரலாம் என்று சென்று கேட்ட போது..

அவர்கள் சொன்ன பதிலில் அவர் உறைந்து போய் தேவையான நடவடிக்கைகளில் மேற்கொண்டு விட்டு வீட்டுக்கு வந்து செம கோபத்துடன் எனக்கு தொலைபேசினார்கள்.

என்னவாயிற்று??

அடுத்த பதிவில்.

Thursday, December 14, 2006

வாடகை அறை (2)

வீட்டின் அறை பிடித்திருந்தது,வேறு பிரச்சனை எதுவும் இல்லாததால்,கொஞ்சம் யோசித்துவிட்டு..

நாளை முடிவை சொல்கிறேன் என்றவுடன் வீட்டு முதலாளியின் முகம் லேசாக மாறியது.

அதற்கு வீட்டின் ஓனர்,உங்களுக்கு பிடிக்கும் பட்சத்தில் ஒப்பந்ததில் இன்றே கையெழுத்து போட்டுவிடலாம் என்றும் மேலும் சிலர் இங்கு வர ஆயத்தமாக இருப்பதால் நம் இருவர்க்கும் நல்லது என்றார்.

இது பலரும் போடும் கொக்கி தான்.இல்லாத ஒருவர் வருவதாகவும் இப்போதே முடித்துவிடலாம் என்று உதார் விடுவார்கள்.

வீடும் ஓரளவு பிடித்திருந்ததாலும் நானும் சரி என்று சொல்லிவிட்டு ஒப்பந்ததில் கையெழுத்து போட்டேன்.

மறுநாள் ஒரு மாத வாடகை,ஒரு மாத முன்பணம் கொடுக்கவேண்டும்.அதற்கு தகுந்தார்போல் மாலை 7 மணிக்கு சந்திப்பதாக ஏற்பாடு செய்திருந்தோம்.

மறுநாள் காலை அலுவலகத்தில் இருந்த போது திடிரென்று ஞாபகம் வந்தது.இணைய தொடர்பு கொடுப்பவர்களிடம் இதைப்பற்றி விஜாரித்தால் என்ன? என்று.தொடர்பு கொண்டவுடன், அவர்கள் "நீங்கள் நாங்கள் சொன்ன ஹார்ட்வேர் உபயோகிக்கும் பட்சத்தில்,தேவையான உதவிகள் செய்வோம் மற்ற உபகரணங்களுக்கு நாங்கள் பொறுப்பள்ள" என்று.

புதிய சோதனை ஆரம்பித்தது.அவர்கள் சொல்லும் உபகரணத்தை வாங்க தனிசெலவு கும்.கணக்கு போட்டுப்பார்த்து,இது சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்து,முகவரை கூப்பிட்டு விபரத்தை சொன்னேன்.

சரி சாயங்காலம் பேசலாம் என்றார்.

சாயங்காலம் போனபோது வீட்டின் ஓனர் இல்லை,பணிப்பெண்ணுக்கு வீட்டின் உள்ளே வர/உட்காரச்சொல்ல அனுமதியில்லை.

முகவர் அவரை தொலைபேசியில் கூப்பிட்டபோது "நீங்கள் வீட்டின் உள்ளே உட்காருங்கள்,நான் பணிப்பெண்ணிடம் சொல்கிறேன்" என்றார்.ஆனால் என்ன நடந்ததோ எங்களை வீட்டின் உள்ளே அனுமதிக்கவில்லை.அப்போதே முடிவெடுத்துவிட்டேன்.இது சரிப்பட்டு வராது,எப்படியாவது ஒப்பந்ததை முறித்துவிடவேண்டும்,என்று.சரியான நேரத்துக்கு வராமல் வீடு தேடி வந்தவர்களை மதிக்ககூட தெரியாத மனிதர்களை என்னவென்று சொல்வது.

வீட்டின் ஓனர் வந்தவுடன் தேவையானவற்றை சொல்லி,ஒப்பந்ததை கிழித்துப்போட்டுவிட்டு வந்துவிட்டோம்.

இதற்கிடையில் மற்றொரு முகவர் ஈசூன் பக்கத்தில் ஒரு அறை காலியாக இருப்பதாகச்சொல்லி வீட்டின் முகவரியை குறுஞ்செய்தி செய்திருந்தார்.சரி அதையும் பார்த்துவிடலாம் என்று எண்ணி,அந்த முகவரை கூப்பிட்டு நான் அந்த பாக்கத்தில் நிற்கிறேன்,நீங்கள் வந்தால் பார்த்துவிடலாம் என்றேன்.அவரும் சரி ஒரு 10 நிமிடங்கள் காத்திருக்கவும் என்றார்.

கடந்தன நிமிடங்கள், முகவர் வரும் செய்தியும் இல்லை.

சரி,நாமே மேலே போய் அறிமுகப்படுத்திக்கொண்டு வீட்டை பார்கலாம் என்று நினைத்துக்கொண்டு அங்கு சென்றேன்.

நல்ல வேளை அவர் தமிழ் பெண்மணி சற்று வயதானவர்.மலாய்/சிங்களம் கலந்த தமிழில் பேசினார்.

நான் தங்க வேண்டிய அறை காலியாக இன்னும் சில தினங்கள் ஆகும் என்பதால்,மற்றொரு அறையில் தங்குமாறும் அதன் பிறகு மாற்றிக்கொள்ளலாம் என்றார்.

எனக்கும் அவசரமாக தேவைப்பட்டதால்,ஒத்துக்கொண்டு வெறும் 100 வெள்ளி முன்பனம் வாங்கிக்கொண்டு மீதியை வீட்டிற்க்கு வரும் போது கொடுத்தால் போதும் என்று சொன்னார்.மிகவும் ஞாயமாக இருந்ததால் OK சொல்லி இங்கு வந்துவிட்டேன்.

நான் தங்கவேண்டிய அறை இன்னும் காலியாக பட்சத்தில் என்னுடைய தொலைபேசி இணைப்பை கொடுக்கமுடியாததாலும்,அவர்கள் தொலைபேசி இணைப்பை பயண்படுத்திக்கொள்ள அனுமதி வாங்கியிருந்தேன்.தினமும் இரவு 1 மணி நேரம் உபயோகிப்பேன் என்று முன்கூட்டியே சொல்லியிருந்தேன்.

பரவாயில்லை,ஒன்றும் பிரச்சனையில்லை.உபயோகிப்பதற்கு தகுந்த பணம் மாத்திரம் கொடுத்துவிடுங்கள் என்றார்.

அப்படி வாங்கி, என்னை சந்தேகப்படவைத்த பதிவு அடுத்ததாக வரும்.

Monday, December 11, 2006

வாடகை அறை (1)

வரும் இரு பதிவுகளில் சிங்கையில் வாடகை அறை எடுக்க நான் பட்ட அனுபவங்களை படிக்கலாம்.

வீடு விற்பனை முடியும் முன்பே அடுத்து தங்குவதற்கு அறை பார்க்க ஆரம்பித்தேன்.சில நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் சொல்லி ஏதாவது கேள்விப்பட்டால் சொல்லுங்கள் என்றேன்.

அதே சமயத்தில் இங்கு வரும் தமிழ் பத்திரிக்கையில்(தமிழ் முரசு) வரும் வரிவிளம்பரங்களில் பிடித்த பெயர் உள்ள சிலரை தொடர்புகொண்டு விபரங்களை சொன்னேன்.சிலர் "Yee Tee" யா அது எங்க இருக்கு? என்று கிசு கிசு மூட்டினார்கள்.

அதோடில்லாமல் இணையத்தில் துழாவிக்கொண்டிருந்த போது கிடைத்தவர்களிடமும் சொன்னேன்.

தோராயமாக இவர்கள் எப்படி செய்கிறார்கள் என்று பார்ப்போம்.
முதலில் நீங்கள் என்ன அனுமதியில் இங்கு இருக்கிறீர்கள் என்று கேட்பார்கள்,தாவது work permit or permanent Residence என்று.

நமது பெயரை வைத்து அதற்கு தகுந்தார் போல் உள்ள வீட்டை பார்ப்பார்கள்.பிற சமூகத்துடன் போய் வாழும் போது காலாச்சார முறையில் சில கஷ்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதால் வீட்டின் முதலாளிகளும் வாடகைதாரர்களும் அவரவர் சமூகத்திலியே அறை பார்ப்பார்கள்.

அறையில் எவ்வளவு பேர் தங்குவீர்கள்,குளிர்சாதனம் வேண்டுமா?(என்னை பொறுத்தவரை,சிங்கையில் குளிர்சாதனத்துக்கு அவசியம் இல்லை.)
சமைப்பீர்களா,எவ்வளவு முறை சமைப்பீர்கள் போன்ற கேள்விகள் வரும்.சாப்பாட்டுக்கடைகள் பக்கத்தில் உள்ளதா?

MRT எனப்படும் ரயில் சேவை பக்கத்தில் உள்ளதா? என்று பார்க்கப்படும் சிங்கையில் ரயில் மற்றும் பஸ் சேவைகள் முடிந்த அளவில் பக்கத்திலேயே இருக்கும். MRT பக்கத்தில் வீடு இருந்தால் நல்லதா / கெட்டதா? அதை கடைசியில் சொல்கிறேன்.

தமிழ்முரசு பத்திரிக்கையில் இருந்து கிடைத்த எந்த முகவரும் அவர்கள் கூட வந்து வீட்டை காண்பிக்கவில்லை.போனில் கூப்பிட்டு அங்கு போய் பாருங்கள்,இங்கே போய் பாருங்கள், பிடித்தால் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார்கள்.ஏதோ ஒரு வீடு பிடித்திருந்தால் அவர் நமக்காக ஒரு ஒப்பந்தம் போடுவார்கள்,பிறகு அரை மாத கமிஷன் வாங்கிக்கொண்டு போய்விடுவார்.வாடிக்கையாளர் நலம் ஜீரோ.

இப்படிப்பட்ட நேரத்தில் ஒரு தமிழ் முகவர் கூப்பிட்டு ஒரு வீட்டில் காலி அறை இருக்கிறது என்றார்.வீட்டின் ஓனர் நம்பர் கொடுக்க முடியுமா என்று கேட்டதற்கு,முடியாது என்றார்.

முதல் விசிட்: முகவர் கூப்பிட்டு யூடியில் (Yew Tee) ஓரறை காலியாக இருக்கிறது ஞாயிறு இரவு 8.30 மணிக்கு போய் பாருங்கள் என்றார்.சுமார் 8.20 க்கு அந்த வீட்டின் முன் நின்று கொண்டு கதவை தட்டினேன்,அழைப்பானை அழுத்தினேன்.அழைப்பான் சத்தம் காதில் விழுத்த மாதிரி தெரியவில்லை.சுமார் 5 நிமிடங்கள் சென்றதும் அங்கே இருக்க விருப்பம் இல்லாமல் கீழே வந்து முகவருக்கு போன் போட்டு விபரம் சொன்னேன்.அவரும் வீட்டுக்காரருக்கு போன் போட்டு விஜாரித்துவிட்டு திரும்ப அழைப்பதாக சொன்னார்.நேரம் கடந்ததே தவிர அழைப்பு வரவில்லை.வெறுப்புடன் வீடு திரும்பலாம் என்று மின்வண்டி ஏறியவுடன் முகவரிடம் இருந்து அழைப்பு வந்தது.அவர்கள் வீட்டில் தான் இருப்பதாகவும்,அழைப்பான் சத்தம் கேட்கவில்லை என்றும் சொன்னதாக சொன்னார்.

சரி,ஏதோ தவறு என்று நினைத்து மறுநாள் மாலை 6.30 மணிக்கு முன் ஒப்பந்தம் செய்துகொண்டு செல்லலாம் என்றிருந்தேன்.அதற்கிடையில் அந்த வீட்டின் முதலாளியே அழைத்து இன்று உங்களுக்காக வீட்டில் காத்திருக்கிறேன் என்றார்.

2வது முறையாக அந்த வீட்டின் முன்பு,அதே மாதிரி அழைப்பான் அழுத்தல்,கதவை தட்டுதல் நடந்துகொண்டிருக்க யாரும் வரவில்லை திறக்கவில்லை மாறாக நாய் ஒன்று குலைக்கும் சத்தம் மாத்திரம் கேட்டுக்கொண்டிருந்தது.

ஏமாற்றம் இரண்டாவது முறையாக. I dumb that agent.

இன்னொரு முகவர்:தமிழில் பேசும் முதிய பெண்மணி.இவரும் வீட்டின் விலாசத்தை சொல்வதோடு சரி.கூட வருவதில்லை.இங்கேயும் விடு ஜூட்.

இணையத்தில் கிடைத்த முகவர்: திரு பீட்டர், அழைத்து காதீப் (இடத்தின் பெயர்) யில் ஒரு அறை வாடைகைக்கு உள்ளது பார்கலாமா? என்று கூப்பிட்டு அழைத்துப்போனார்.

மிகப்பெரிய வீடு ஆனால் மஹா மோசமாக பராமரிக்கப்பட்டிருந்தது.அவர் காட்டிய அறையில் ஒரே ஒரு Wardrope தவிர வேறு எதுவும் இல்லை.வாடகை 275 வெள்ளி என்றார்.அறையும் மிகவும் சிறியதாக இருந்தது.சமைக்க அனுமதி தந்தார்.வீட்டின் மற்றொரு அறையை வாடகைக்கு விட்டிருந்தார்.நாங்கள் போன போது சிகரெட் புகையும் ஹாலில் தீர்த்தவாரிக்கு தேவைப்படும் சாமான்கள் தயாராக இருந்தன.தண்ணீர் அருந்துவது என்பது என்னை அவ்வளவாக பாதிக்கப்போவதால் நான் கவலைப்படவில்லை,ஆனால் சிகரெட்?

அப்போதே முடிவெடுத்துவிட்டேன் இது வேண்டாம் என்று,இருந்தாலும் முகவரிடம் இதை கடைசி Option க வைத்துக்கொள்ளலாம் என்றேன்.

அடுத்து செம்பவாங் என்னும் இடத்தில் உள்ள ஒரறை பார்க்கபோனோம்.வீடு சூப்பராக இருந்தது.அறையின் உள்ளே எதுவும் இல்லை.light Cooking செய்யலாம் என்றார். எதிர் பக்கம் உள்ள அறையில் இன்னொரு தம்பதிகள் வாடகைக்கு இருக்கிறார்கள் என்றார்.குளியல் அறை,சமையல் அறைக்கு பக்கத்திலேயே இருந்தது.எனக்கு தேவையான தொலைபேசி இணைப்புக்கு வழியில்லாமல் இருந்தது.அதுவும் நான் தினமும் பயணிக்கக்கூடிய ரயில் நிலையத்துக்கு மிதிவண்டியில் போனால் கூட 20 நிமிடங்கள் கும் போல உள்ளடங்கியிருந்தது.இங்கும் சிகரெட் வாசம்.வேண்டாம் என்றேன்.

அடுத்து மீண்டும் காதீப் பக்கம்.இது தமிழ் மக்கள் இருக்கும் வீடு.அறை சுமாராக இருந்தது.Warrope,படுக்கை இருந்தது.குளிர்சாதன வசதி கொடுக்கப்பட்டிருந்தது.சமையல் அறையில் உள்ள Tiles எப்போது விழுவது என்று நல்லகாலம் பார்த்துக்கொண்டிருந்தது.அறையில் தொலைபேசி இணைப்பு இல்லாததால் அதை போட்டுக்கொள்ள அனுமதித்தார்கள்.வாடகை 400 வெள்ளி என்றும் சமைத்தால் மேலும் 50 வெள்ளி கொடுக்கவேண்டும் என்றார்கள்.அகலக்கட்டை இணைய இணைப்பு இருக்கிறது என்றும்,அவர்கள் கணினியில் ஏதோ பிராப்ளம் என்பதால் நாங்கள் உபயோகித்தால் அதற்கு பணம் முழுவதுமாக கட்டவேண்டும் என்றார்கள்.வீட்டின் நிலைமை மற்றும் வாடகைக்கட்டணம் மிக அதிகமாக இருந்ததால் இதையும் நிராகரித்தேன்.

பீட்டரின் நாலாவது வீடு,இது நான் அப்போது இருந்த வீட்டுக்கு வெகு அருகாமையில் இருந்தது.இந்திய குடும்பம்- கணவன்,மனைவி ஒரு 5 வயது குழந்தை மற்றும் பணிப்பெண்.வாசலில் ஒரு கிளி- பார்த்தவுடன் நம் கால்கரி சிவாவின் பதிவு ஞாபகம் வந்தது.

இந்த வீட்டின் வசதிகள் போறுமானதாக இருந்தது.தொலை பேசி இணைப்பு இல்லை என்பதால் நான் அவர்கள் இணைய இணைப்பை பகிர்ந்துகொள்ள முடியுமா என்று கேட்டேன்.வரும் பில்லில் சம்மாக பகிர்ந்துகொள்ளலாம் என்றார்.அரை மனதுடன் சரி என்றேன்.
என்னுடைய கணினியில் wireless dongle இல்லாததால் எப்படி இணையத்துடன் இணைவது என்ற குழப்பம் வந்தது.பிறகு விசாரித்துக்கொள்ளலாம் என்றிருந்தேன்.

சமைக்க அனுமதி கிடைத்தது.இவருக்கு போன வாடகைதாரருடன் என்ன பிரச்சனையோ இவர் வீட்டில் உபயோகிக்கும் Piped Gas உபயோகம் பற்றியே அதிகம் கவலைப்பட்டார்.

30 வெள்ளிக்கு நான் உபயோகித்த சிலிண்டர் எனக்கு 7 மாதம் வரும்,அந்த அளவு தான் என்னுடைய பயண்பாடு என்று சொன்ன பிறகும் அவர் சமாதனம் அடையவில்லை. இவர் போட்ட சில கண்டீஷன்கள்.

வீட்டிற்கு உள்ளே வரும் போது காலை கழுவவேண்டும்.(ஆதாவது காலை கழுவாமல் ஹால் வழியாக சமையல் அறையில் நுழைந்து அங்குள்ள குளியல் அறையில் காலை கழுவிவிட்டு எனது அறைக்கு போகவேண்டும்).எனக்கென்ன தண்ணீர் செலவு அவுங்க தானே.

பிரதி செவ்வாய் கிழமை சாம்பிரானி போடுவோம்.அதனால் வீடு புகையாக இருக்கும்.

வாரத்துக்கு ஒரு முறை தான் வாஷிங் மிசின் போடவேண்டும்.

குளிக்க வெண்ணீர் போடலாம்,குளித்தபின் அணைத்துவிடவேண்டும்.

எல்லாம் பேசி முடித்த பிறகு,சரி நாளை என் முடிவை சொல்கிறேன் என்றேன்.

வாங்க அடுத்த வீட்டுக்கு.

Wednesday, December 06, 2006

கதாவிலாசம்

எஸ்.ராமகிருஷ்ணன்.

இவரை, தமிழ் எழுத்துலகம் அதுவும் ஆனந்தவிகடன் புத்தகம் படிக்கும் பலருக்கும் தெரிந்திருக்கும் & பரிச்சயமானவர்.இவருடைய தேசாந்திரி தொடர் படிப்பவர்களுக்கு இவருடைய எழுத்தைப்பற்றி தெரிந்திருக்கும்.

முதலில் நானும் இந்த தொடரை பார்த்தபோது,அதில் வரும் படங்கள் அவ்வளவாக பிடிக்காததால் "பாஸ்" செய்துகொண்டிருந்த போது ஒரு நாள் ஏதோ கோயில் படம் போட்டு எழுதியிருந்தார்.சும்மா அட்டகாசமாக இருந்தது.அதிலிருந்து அவரையும் படிக்க ஆரம்பித்தேன்.
கடந்த வாரம் நூலகம் போனபோது தற்செயலாக அவர் எழுதி "விகடனார்" வெளியிட்ட "கதாவிலாசம்" என்ற புத்தகம் கிடைத்தது.

சும்மா அட்டகாசமான"லே அவுட்" உடன் வந்திருக்கிறது.ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு எழுத்தாளருடன் பின்னிப்பிணைந்திருக்கிறார்.

தமிழ்மணத்தில் வரும் பல பதிவுகளை ஒன்று திரட்டிப்போட்டது போல் உள்ளது சில நிகழ்வுகள்.

இவருடைய பல நிகழ்வுகளை ஆனந்தவிகடன் மூலம் படித்திருந்ததால் அதையெல்லாம் மேலோட்டமாக பார்த்துவிட்டு படிக்காதது மட்டும் படித்தேன்.

ஊர் சுற்றுவதில் உள்ள சுகம்,ஒரு எழுத்தாளனை சந்திக்கும் போது என்ன நேர்கிறது என்று ஒரு சின்ன உலகத்தையே படைத்திருக்கிறார்.

நம் சக வலைபதிவாளர்களுக்காக அட்டைப்படம் இங்கே.

Photobucket - Video and Image Hosting
Photobucket - Video and Image Hosting

பெண் சுதந்திரம்,அவர்களின் வலி,குடும்ப கட்டுக்கோப்பு,போலீஸ்காரரின் விநாயகர் கண்ணாடி என்று ஒரு வரைமுறைக்குள் கொண்டுவரமுடியாதபடி எழுதியுள்ளார்.

பலரும் படித்து பயனைடைய வேண்டிய நூல் என்பதால் இந்த பதிவு.

அதுவும் இளம் எழுத்தாளர்களுக்கு.

ஆமாம் இதென்ன கடைசியில் பாரதியார்?
Photobucket - Video and Image Hosting

இதை படித்தால் யாரவது பிரொபைல் ஞாபகத்துக்கு வருதா?

எனக்கு வந்தது.

கண்டுபிடிச்சுக்குங்க.

ஒரே ஒரு க்குளு- இவர் சென்னையில் இருப்பவர்.

படங்கள்:நன்றி:விகடனார் அவர்களே.

Friday, December 01, 2006

அப்பாடி!!

வீடு பார்த்த மறுநாள் மாலை 7 மணிக்கு என் வீட்டுக்கு வந்து முறையான ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாம் என்று என் முகவர் கூறியிருந்தார்.இந்த ஒப்பந்தம் எனக்கும் வீடு வாங்குபவருக்கும் இடையே உள்ளது.

இப்படி ஒப்பந்தம் போடுவதற்கென்றே சில விதிமுறைகள் உள்ளது.அவற்றில் சில வற்றை பார்ப்போம்.

இந்த ஒப்பந்தத்துக்கு "Option to Purchase"என்று பேர்.வீடு வாங்குவது என்று முடிவெடுத்த பிறகு வாங்குபவர் ஒரு தொகை கொடுத்து முன் பதிவு செய்து கொள்வது போல்.இதனால் மற்றொருவர் வந்து நான் இன்னும் அதிகமாக கொடுக்கிறேன் என்றாலும் ஒத்துக்கொள்ளமுடியாது.

படம் கீழே.

Photobucket - Video and Image Hosting


என்னுடைய வீடு ஏற்கனவே மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதால் வீடு வாங்கப்போகிற விலை தோராயமாக தெரியும் அப்படியில்லாவிட்டால்,மதிப்பீடு வந்த பிறகு தான் இதை வீவக யிடம் கொடுக்கமுடியும்.

எங்களுடைய முகவர்கள் அவரவருக்கு வேண்டிய விவரங்களை சொல்லியபிறகு, வீடு விற்கும் விலையை போடும் போது வாங்குபவர் "நான் ஏற்கனவே செய்யப்பட்ட மதிப்பீடு காலாவதியாகிவிட்டதால்,நான் ஒத்துக்கொள்ளமுடியாது" என்றார்.

புது தலைவலியா? என்று நினைத்துக்கொண்டேன்.

அப்படியென்றால் புதிதாக மதிப்பீடு செய்ய விண்ணப்பம் செய்யவேண்டும்,அதற்குப்பிறகு வந்து மதிப்பீடு செய்து எல்லாம் முடிவதற்கு மேலும் 1~2 மாதங்கள் ஆகலாம்.

வேறு வழி தெரியாததால் ஒத்துக்கொண்டேன்.

மேல் சொன்ன பேப்பரில் கையெழுத்து போட்டபிறகு அவர்கள் சென்றபிறகு நானும் எனது முகவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.அப்போது நான் சொன்னேன்.அவர்கள் தவறாக மறுமதிப்பீடு கேட்கிறார்கள்,ஏற்கனவே வந்த மதிப்பீடை விட அதிகமாகப்போகிறது என்றேன்.இது ஒரு மாதிரியான சூதாட்ட விளையாட்டு தான்.மதிப்பீட்டாளர்கள் பலர் இருப்பதால் அவரவர் கண்ணோட்டத்தில் விலை மதிப்பிடுவார்கள்.அதனால் சில சமயம் ஏறும் / இறங்கும். என் பேச்சை என் முகவரும் ஒத்துக்கொள்ளவில்லை.ஏற்கனவே செய்யப்பட்டதை விட குறையும் என்றார்.

மறுபடி மதிப்பீடு வந்தது.

நான் முதலில் கேட்ட வீட்டின் விலைக்கு மேல் 2K என்பதை யாரோ ஞாபகம் வைத்துக்கொண்டு 162K க்கு மறுமதிப்பீட்டு போட்டு வந்தது.அனாமத்தாக 2K வந்ததில் கொஞ்சம் சந்தோஷம் தான்.

இது நடந்துகொண்டிருக்கும் போது எனது முகவர் கூப்பிட்டு,என்னுடைய முகவர் பணிக்கு உண்டான தொகைக்கும் ஒரு ஒப்பந்தம் போட்டுவிடலாம்,இருவருக்கும் பிரச்சனை இருக்காது என்றார்.

நல்லது ஆனால் என்னால் 2% கொடுக்கமுடியாது.வீடு விற்பதில் நான் லாபம் பார்க்கவில்லை அதனால் என்னால் S$2500 தான் கொடுக்கமுடியும் என்றேன்.எனக்கு நன்றாக தெரியும்,வீட்டு விற்பனை இந்த அளவுக்கு வந்த பிறகு எந்த முகவரும் கிடைப்பதுவரை லாபம் என்ற நோக்கில் தான் இருப்பார்கள் என்பதால் அவ்வாறு சொன்னேன்.முதலில் இருந்தே இந்த முகவரின் சேவை அவ்வளவு தரமாக இல்லாததாலும் சில நூறு வெள்ளியை இழந்திருந்தாலும் அவரிடம் பேரம் பேசினேன்.

அதென்ன கணக்கு 2500?

வீடு விற்பது 162K, முறையாக கொடுக்கவேண்டிய 2% வெள்ளி 3140 வருகிறது.முதல் தடவை மதிப்பீடு செய்து அதற்குள் வாங்குபவரை பிடிக்காததால் எனக்கு இழப்பு சுமார் 180 வெள்ளி,அதையும் அவர் தலையில் கட்டினேன்.இணையத்தில் பார்க்கும் போது பலரும் 1.5% கொடுக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டு 2500 வெள்ளி என்றேன்.3000 க கொடுங்கள் என்றார் முகவர்.

முடியாது என்று சொன்னதால் வேறு வழியின்று ஒத்துக்கொண்டார்.ஒப்பந்தம் போடும் போது 5% GST-பொருள் சேவை வரி தனியாக கொடுக்கவேண்டும் என்றார்.(பாருங்கள் எங்கெங்கு சுரண்டமுடியுமோ அங்கெங்கு சுரண்டிப்பார்கிறார்கள்)அதற்கும் முடியாது என்றேன்.நான் பேசியது மொத்த தொகை அதுவும் நமது கடைசி Appointment முடிந்த கையோடு கொடுத்துவிடுவேன் என்றேன்.

ஒத்துக்கொண்டார்.அவருக்கும் வேறு வழியில்லை.வந்த வரை லாபம் தானே.

இது நடந்த பிறகு ஒரு வழியாக "வீவக" விடம் எங்களது விண்ணப்பம் போய் அதை அவர்கள் சோதித்துவிட்டு அக்டோபர் 12ம் தேதி முதல் அப்பாயின்மென்ட் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவுசெய்து அன்று போய் அந்த வேலையை முடித்தோம்.அன்றே கடைசி அப்பாயின்மென்ட்க்கும் தேதி குறித்துவிடலாம்.

வீவக அதிகாரி கேட்டவுடன்,வாங்குபவர்களிடம் கலந்தாலோசித்து நவம்பர் 16 என்று முடிவுசெய்துவிட்டோம்.வீடு கையை விட்டு போனால் சரி என்பதால் எனக்கென்று எந்த வித கட்டுப்பாடு இல்லாமல் சரி என்று சொன்னேன்.

ஒரு வழியாக நவம்பர் 16ம் தேதி கட்டுப்பாடில்லாமல் சுதந்திரமனிதனாக ஆனேன்.

இழந்தது எவ்வளவு?
கீழே பார்த்து நீங்களே கணக்கு போட்டுக்குங்க!
:-))

Photobucket - Video and Image Hosting
Photobucket - Video and Image Hosting

இனி தங்குவதற்கு வாடகை வீடு பார்க்கவேண்டும்.இதில் பார்த்த வீடுகளும் அதன் அனுபவங்களும் தொடரும்.