Thursday, December 14, 2006

வாடகை அறை (2)

வீட்டின் அறை பிடித்திருந்தது,வேறு பிரச்சனை எதுவும் இல்லாததால்,கொஞ்சம் யோசித்துவிட்டு..

நாளை முடிவை சொல்கிறேன் என்றவுடன் வீட்டு முதலாளியின் முகம் லேசாக மாறியது.

அதற்கு வீட்டின் ஓனர்,உங்களுக்கு பிடிக்கும் பட்சத்தில் ஒப்பந்ததில் இன்றே கையெழுத்து போட்டுவிடலாம் என்றும் மேலும் சிலர் இங்கு வர ஆயத்தமாக இருப்பதால் நம் இருவர்க்கும் நல்லது என்றார்.

இது பலரும் போடும் கொக்கி தான்.இல்லாத ஒருவர் வருவதாகவும் இப்போதே முடித்துவிடலாம் என்று உதார் விடுவார்கள்.

வீடும் ஓரளவு பிடித்திருந்ததாலும் நானும் சரி என்று சொல்லிவிட்டு ஒப்பந்ததில் கையெழுத்து போட்டேன்.

மறுநாள் ஒரு மாத வாடகை,ஒரு மாத முன்பணம் கொடுக்கவேண்டும்.அதற்கு தகுந்தார்போல் மாலை 7 மணிக்கு சந்திப்பதாக ஏற்பாடு செய்திருந்தோம்.

மறுநாள் காலை அலுவலகத்தில் இருந்த போது திடிரென்று ஞாபகம் வந்தது.இணைய தொடர்பு கொடுப்பவர்களிடம் இதைப்பற்றி விஜாரித்தால் என்ன? என்று.தொடர்பு கொண்டவுடன், அவர்கள் "நீங்கள் நாங்கள் சொன்ன ஹார்ட்வேர் உபயோகிக்கும் பட்சத்தில்,தேவையான உதவிகள் செய்வோம் மற்ற உபகரணங்களுக்கு நாங்கள் பொறுப்பள்ள" என்று.

புதிய சோதனை ஆரம்பித்தது.அவர்கள் சொல்லும் உபகரணத்தை வாங்க தனிசெலவு கும்.கணக்கு போட்டுப்பார்த்து,இது சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்து,முகவரை கூப்பிட்டு விபரத்தை சொன்னேன்.

சரி சாயங்காலம் பேசலாம் என்றார்.

சாயங்காலம் போனபோது வீட்டின் ஓனர் இல்லை,பணிப்பெண்ணுக்கு வீட்டின் உள்ளே வர/உட்காரச்சொல்ல அனுமதியில்லை.

முகவர் அவரை தொலைபேசியில் கூப்பிட்டபோது "நீங்கள் வீட்டின் உள்ளே உட்காருங்கள்,நான் பணிப்பெண்ணிடம் சொல்கிறேன்" என்றார்.ஆனால் என்ன நடந்ததோ எங்களை வீட்டின் உள்ளே அனுமதிக்கவில்லை.அப்போதே முடிவெடுத்துவிட்டேன்.இது சரிப்பட்டு வராது,எப்படியாவது ஒப்பந்ததை முறித்துவிடவேண்டும்,என்று.சரியான நேரத்துக்கு வராமல் வீடு தேடி வந்தவர்களை மதிக்ககூட தெரியாத மனிதர்களை என்னவென்று சொல்வது.

வீட்டின் ஓனர் வந்தவுடன் தேவையானவற்றை சொல்லி,ஒப்பந்ததை கிழித்துப்போட்டுவிட்டு வந்துவிட்டோம்.

இதற்கிடையில் மற்றொரு முகவர் ஈசூன் பக்கத்தில் ஒரு அறை காலியாக இருப்பதாகச்சொல்லி வீட்டின் முகவரியை குறுஞ்செய்தி செய்திருந்தார்.சரி அதையும் பார்த்துவிடலாம் என்று எண்ணி,அந்த முகவரை கூப்பிட்டு நான் அந்த பாக்கத்தில் நிற்கிறேன்,நீங்கள் வந்தால் பார்த்துவிடலாம் என்றேன்.அவரும் சரி ஒரு 10 நிமிடங்கள் காத்திருக்கவும் என்றார்.

கடந்தன நிமிடங்கள், முகவர் வரும் செய்தியும் இல்லை.

சரி,நாமே மேலே போய் அறிமுகப்படுத்திக்கொண்டு வீட்டை பார்கலாம் என்று நினைத்துக்கொண்டு அங்கு சென்றேன்.

நல்ல வேளை அவர் தமிழ் பெண்மணி சற்று வயதானவர்.மலாய்/சிங்களம் கலந்த தமிழில் பேசினார்.

நான் தங்க வேண்டிய அறை காலியாக இன்னும் சில தினங்கள் ஆகும் என்பதால்,மற்றொரு அறையில் தங்குமாறும் அதன் பிறகு மாற்றிக்கொள்ளலாம் என்றார்.

எனக்கும் அவசரமாக தேவைப்பட்டதால்,ஒத்துக்கொண்டு வெறும் 100 வெள்ளி முன்பனம் வாங்கிக்கொண்டு மீதியை வீட்டிற்க்கு வரும் போது கொடுத்தால் போதும் என்று சொன்னார்.மிகவும் ஞாயமாக இருந்ததால் OK சொல்லி இங்கு வந்துவிட்டேன்.

நான் தங்கவேண்டிய அறை இன்னும் காலியாக பட்சத்தில் என்னுடைய தொலைபேசி இணைப்பை கொடுக்கமுடியாததாலும்,அவர்கள் தொலைபேசி இணைப்பை பயண்படுத்திக்கொள்ள அனுமதி வாங்கியிருந்தேன்.தினமும் இரவு 1 மணி நேரம் உபயோகிப்பேன் என்று முன்கூட்டியே சொல்லியிருந்தேன்.

பரவாயில்லை,ஒன்றும் பிரச்சனையில்லை.உபயோகிப்பதற்கு தகுந்த பணம் மாத்திரம் கொடுத்துவிடுங்கள் என்றார்.

அப்படி வாங்கி, என்னை சந்தேகப்படவைத்த பதிவு அடுத்ததாக வரும்.

No comments: