சிங்கையில் வேலைக்கு சேர்ந்த (1995) போது அறிமுகமானவர் திரு மாக், நிலவியலில் வேலை,மலேசிய-சீனர். எனக்கு நிலவியலில் சிறிது அறிவு உள்ளது என்பதால் என்னுடன் பழகுவார்.ஒருமுறை மலேசியாவில் வேலை செய்துகொண்டிருக்கும் போது வெடி வைத்து தகர்க்கும் பாறைக்கு அருகில் வேலை செய்துகொண்டிருந்ததால் ஒரு காது கேட்கும் சக்தியை இழந்துவிட்டது ஆனாலும் அவ்வப்போது நான் வேறு யாருடன் பேசும் போது தானும் பதிலலித்து அசத்துவார்.எனக்கு பக்கத்து மேஜை என்பதால் அவ்வப்போது காகிதத்தில் ஏதோ கிறுக்கிக்கொண்டிருப்பதை கவனிக்க நேரிடும். ஒரு நாள் என்ன தான் கிறுக்குகிறார் என்று பார்த்த போது தூரத்தில் உட்கார்ந்துகொண்டிருக்கும் முதன்மை அதிகாரியை வரைந்துகொண்டிருந்தார்,அப்படியே தத்ரூபமாக இருந்தது.
அதே கை என்னையும் போட்டுபார்த்தது தான் கீழே.
1996 பிறந்த நாள் போது..
ஏதோ சில விபர காகிதங்களை தேடும் போது இப்படங்கள் கிடைத்தது.
Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts
Thursday, March 01, 2012
Monday, January 16, 2012
தரமான கட்டுமானம்- ஸ்ரீராம் சங்கரி
சில வருடங்களாகவே ஒரு வீடு என் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி தேடிக்கொண்டிருக்கிறேன், இது வரை சரியாக அமையவில்லை.வளசரவாக்கம்/வடபழநி/விருகம்பாகம் வீடுகள் சுமார் 6000 முதல் 8000 வரை ஒரு சதுர அடிக்கு கேட்கிறார்கள்.லோக்கல் வீடு கட்டுபவர்கள் செய்யும் வேலை பார்த்து அவர்கள் பக்கம் போவதையே நிறுத்திவிட்டேன்.வீட்டு இடத்துக்குள் இருக்கும் ஆக்கிரமிப்பை தவிர்த்து வீட்டு முன்புறம் வண்டி ஏறுவதற்காக சாலையை ஆக்கிரமிப்பு பணியை நிறைவாகவே செய்கிறார்கள்.இதையெல்லாம் யாராவது கண்காணிக்கிறார்களா அல்லது தெரிந்தே விட்டுவிடுகிறார்களா என்று தெரியவில்லை.ஆக்கிரமிப்பு என்ற ஒரு வார்த்தையை வைத்தே ஒரு பெரிய வால்யூம் புக் போடலாம், அதுவும் சென்னையில்.
பின்புலம் இப்படி இருக்க, அடிக்கடி வானொலியில் இவர்களின் விளம்பரம் கேட்க கேட்க, சரி போய் பார்த்தால் என்ன என்ற முடிவு எடுத்து அதுவும் போன வாரம் தான் போக முடிந்தது.GST சாலையில் பல துணை சாலைகள் இருந்தாலும் கூடுவாஞ்சேரியில் இருக்கும் சாலைக்கு பெயர் எதுவும் கண்ணில் படாததால் சிறிது திணறி பயணித்தோம். சுமார் 4 கி.மீட்டர் பயணிந்த பிறகு இவர்களின் கட்டுமான இடத்தை அடைந்தோம் . G+4 முறையில் அமைந்த 3 கட்டிடங்கள் கான்கிரீட் முடிந்த நிலையில் சுற்றுச்சுவர்கள் வேலை நடந்துவருகிறது.கட்டுமான இடத்திலேயே Batching Plant அமைத்து கான்கிரீட் போடுவதால் குறை எதுவும் கண்ணில் படாமல் அட்டகாசமாக இருந்தது.தாங்கும் தூண்கள் கூட நேர்த்தியாக வரிசையில் இருந்தது.இவ்வளவு நாள் பல கட்டுமான வேலைகளை பார்த்திருந்தாலும் இவர்களின் Finish மிக அருமையாக இருக்கிறது.கட்டுமான வேலைகளை இவர்கள் நேரடியாக மேற்கொள்ளாமல் ஒரு துணை நிறுவனத்திடம் கொடுத்துள்ளார்கள்.Middle East நிறுவனம் என்று சொன்னதாக ஞாபகம்.
அங்கிருந்த முகவர் எங்கள் விவரங்களை கேட்ட பிறகு மாதிரி வீட்டை காண்பிக்க அமைத்துப்போனார்.ஒரு ஏரிக்கு பக்கத்தில் இருந்ததால் எல்லோருக்கும் ஏற்படும் சந்தேகம் போல் எனக்கும் எழுந்தது. மழை காலத்தில் ஏரி தண்ணீர் எங்கு போகும் என்று கேட்டேன். சமீபத்தில் ”தானே” புயல் கொண்டு வந்து கட்டிய மழையில் இதன் விளைவு தெரிந்திருக்குமே என்று கேட்டேன். நிலம் மேட்டுப்பகுதியில் இருப்பதாலும் இதன் கீழ் பகுதியில் இன்னொரு ஏரி இருப்பதாலும் தண்ணீர் பிரச்சனை இருக்காது என்றார்கள்.
ஒரு Model House, 3 அறை வீடுக்குள் அழைத்துப்போனார்கள்.வெளிவெளிச்சம் நன்றாக நுழையும் அளவுக்கு வீடுகள் இருந்தன.வீட்டு விலையை கேட்ட போது,சதுர அடிக்கு 2150 ரூபாய் என்றும் மற்ற செலவுகளை கூட்டினால் 2500 வரும் என்று சொன்னார்.கூடவே கிளப் ஹவுசும் நீச்சல் குளமும் வரப்போவதாகவும் பிற்காலத்தில் நல்ல தங்கும் இடமாகவும் விளங்கும் என்ற விளக்கமும் சொல்லப்பட்டது.தற்போதைக்கு பள்ளிக்கூடமும்,மருத்துவனையும் பக்கத்தில் இல்லை.மக்கள் அதிகம் வந்தால் இவையெல்லாம் தன்னால் வந்துவிடும் என்று நம்பலாம்.இப்போதைக்கு முதல் Phase ஐ வரும் ஜூன் மாதம் முடியப்போவதாகவும் அடுத்த Phase இரண்டு வருடம் ஆகும் என்றார்கள்.மற்ற விவரங்களுக்கு இங்கு போய் பாருங்கள்.
புது வீடுக்காக 95% விழுக்காடு பணத்தை கட்டிய பிறகும் கடைசி 5% பணத்தை மட்டும் விட்டு வைத்துவிட்டு வீட்டை Handing Over பண்ண வருடக்கணக்காகும் நிலை போய், வீட்டை கட்ட கட்ட நம்மிடம் பணம் கறக்கும் காலமும் போய் கட்டியவீடுகள் பணம் கட்டிய உடன் கிடைக்கும் வீடுகள் சந்தையில் வர ஆரம்பித்திருப்பது இப்போது தான். இது கட்டுமானத்துறையின் வீழ்ச்சி என்றாலும் மற்ற நகரங்களை விட சென்னையில் வீடுகள் விற்பனை ஆகாவிட்டாலும் விலையை மட்டும் யாரோ தாங்கிப்பிடிக்கிறார்கள்.
கூடுவாஞ்சேரி பக்கத்தில் இருக்க ஆசைப்படுபவர்கள் இந்த கட்டுமானத்தொகுதியை நேரில் பார்த்து முடிவு செய்யலாம்.
பின்குறிப்பு: நான் இவர்களுக்கு முகவர் அல்ல, அவரவர் தேவையை கருத்தில் கொண்டு முடிவு செய்துகொள்ளவும்.
பின்புலம் இப்படி இருக்க, அடிக்கடி வானொலியில் இவர்களின் விளம்பரம் கேட்க கேட்க, சரி போய் பார்த்தால் என்ன என்ற முடிவு எடுத்து அதுவும் போன வாரம் தான் போக முடிந்தது.GST சாலையில் பல துணை சாலைகள் இருந்தாலும் கூடுவாஞ்சேரியில் இருக்கும் சாலைக்கு பெயர் எதுவும் கண்ணில் படாததால் சிறிது திணறி பயணித்தோம். சுமார் 4 கி.மீட்டர் பயணிந்த பிறகு இவர்களின் கட்டுமான இடத்தை அடைந்தோம் . G+4 முறையில் அமைந்த 3 கட்டிடங்கள் கான்கிரீட் முடிந்த நிலையில் சுற்றுச்சுவர்கள் வேலை நடந்துவருகிறது.கட்டுமான இடத்திலேயே Batching Plant அமைத்து கான்கிரீட் போடுவதால் குறை எதுவும் கண்ணில் படாமல் அட்டகாசமாக இருந்தது.தாங்கும் தூண்கள் கூட நேர்த்தியாக வரிசையில் இருந்தது.இவ்வளவு நாள் பல கட்டுமான வேலைகளை பார்த்திருந்தாலும் இவர்களின் Finish மிக அருமையாக இருக்கிறது.கட்டுமான வேலைகளை இவர்கள் நேரடியாக மேற்கொள்ளாமல் ஒரு துணை நிறுவனத்திடம் கொடுத்துள்ளார்கள்.Middle East நிறுவனம் என்று சொன்னதாக ஞாபகம்.
அங்கிருந்த முகவர் எங்கள் விவரங்களை கேட்ட பிறகு மாதிரி வீட்டை காண்பிக்க அமைத்துப்போனார்.ஒரு ஏரிக்கு பக்கத்தில் இருந்ததால் எல்லோருக்கும் ஏற்படும் சந்தேகம் போல் எனக்கும் எழுந்தது. மழை காலத்தில் ஏரி தண்ணீர் எங்கு போகும் என்று கேட்டேன். சமீபத்தில் ”தானே” புயல் கொண்டு வந்து கட்டிய மழையில் இதன் விளைவு தெரிந்திருக்குமே என்று கேட்டேன். நிலம் மேட்டுப்பகுதியில் இருப்பதாலும் இதன் கீழ் பகுதியில் இன்னொரு ஏரி இருப்பதாலும் தண்ணீர் பிரச்சனை இருக்காது என்றார்கள்.
ஒரு Model House, 3 அறை வீடுக்குள் அழைத்துப்போனார்கள்.வெளிவெளிச்சம் நன்றாக நுழையும் அளவுக்கு வீடுகள் இருந்தன.வீட்டு விலையை கேட்ட போது,சதுர அடிக்கு 2150 ரூபாய் என்றும் மற்ற செலவுகளை கூட்டினால் 2500 வரும் என்று சொன்னார்.கூடவே கிளப் ஹவுசும் நீச்சல் குளமும் வரப்போவதாகவும் பிற்காலத்தில் நல்ல தங்கும் இடமாகவும் விளங்கும் என்ற விளக்கமும் சொல்லப்பட்டது.தற்போதைக்கு பள்ளிக்கூடமும்,மருத்துவனையும் பக்கத்தில் இல்லை.மக்கள் அதிகம் வந்தால் இவையெல்லாம் தன்னால் வந்துவிடும் என்று நம்பலாம்.இப்போதைக்கு முதல் Phase ஐ வரும் ஜூன் மாதம் முடியப்போவதாகவும் அடுத்த Phase இரண்டு வருடம் ஆகும் என்றார்கள்.மற்ற விவரங்களுக்கு இங்கு போய் பாருங்கள்.
புது வீடுக்காக 95% விழுக்காடு பணத்தை கட்டிய பிறகும் கடைசி 5% பணத்தை மட்டும் விட்டு வைத்துவிட்டு வீட்டை Handing Over பண்ண வருடக்கணக்காகும் நிலை போய், வீட்டை கட்ட கட்ட நம்மிடம் பணம் கறக்கும் காலமும் போய் கட்டியவீடுகள் பணம் கட்டிய உடன் கிடைக்கும் வீடுகள் சந்தையில் வர ஆரம்பித்திருப்பது இப்போது தான். இது கட்டுமானத்துறையின் வீழ்ச்சி என்றாலும் மற்ற நகரங்களை விட சென்னையில் வீடுகள் விற்பனை ஆகாவிட்டாலும் விலையை மட்டும் யாரோ தாங்கிப்பிடிக்கிறார்கள்.
கூடுவாஞ்சேரி பக்கத்தில் இருக்க ஆசைப்படுபவர்கள் இந்த கட்டுமானத்தொகுதியை நேரில் பார்த்து முடிவு செய்யலாம்.
பின்குறிப்பு: நான் இவர்களுக்கு முகவர் அல்ல, அவரவர் தேவையை கருத்தில் கொண்டு முடிவு செய்துகொள்ளவும்.
Friday, February 18, 2011
Exercise- உடல் நலம்.
என்னுடைய முந்தைய பதிவுகளில் அவ்வப்போது உடல் நலம் பேணுவதின் அவசியத்தை பற்றி எழுதியிருக்கேன் ஆனால் இதுவரை இணையத்தில் விடாத படங்களை இப்போது விடுகிறேன்.
தூசியை பார்த்தாலே தும்மல் விடும் நான் அந்த ஒவ்வாமை மூலமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வார சிகிச்சைக்கு பிறகு வெளியில் வந்தேன், இது நடந்ததெல்லாம் 1982 வாக்கில்.மருத்துவ மனையில் இருக்கும் போது அங்கிருந்த மருத்துவர் சொன்ன அறிவுரை தான் இன்றுவரை என்னுடைய உடல்நலத்தை பாதுகாக்கவும் பேணுவதற்கும் உதவி வருகிறது.
அன்று இருந்த இடம் பொட்டை காடு “ஜிம்” என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாத வயது இப்படி இருக்கும் கால கட்டத்தில் எனக்கு கிடைத்த ஒரே வழி Parallel Bar. இரு பைப்புகள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் பொருத்தப்படும் அதன் மூலம் செய்யும் Exercise நமது தசைகளை முறுக்கேற்றி நெஞ்சேற்றி நடக்கவைக்கும், மீசை முருக்கும் அளவுக்கு இருந்தால் அதன் மூலம் கொஞ்ச பந்தா காட்டவும் உதவும்.
விடாமுயற்சியும் ஓரளவு சத்துள்ள சாப்பாடு சாப்பிட்டு தினமும் செய்தால் உடலை நோய் எதிர்ப்பு சக்திக்கு ஏதுவாக இருக்கும் படி செய்யலாம். சுமார் 1 1/2 ஆண்டு காலம் விடாமல் செய்தது எந்த ஊருக்கு போனாலும் அது இருக்கும் இடம் தேடி செய்யவைத்தது.
சிங்கையில் மூலைக்கு ஒன்றாக இருக்கும் பூங்காவில் இளைஞர்களுக்கு மற்றும் முதியவர்களுக்கு ஏற்ற Exercise சாதனத்தை இலவசமாக வைத்திருப்பார்கள்.தினமும் அலுவலகம் விட்டு வந்தபிறகு சுமார் 2 கி.மீ நடந்த பிறகு கீழே உள்ள மாதிரி செய்வேன்.


துபாய் போன பிறகு ஜிம் உள்ளே இருக்கும் சாதனங்களை ஓரிரு முறை உபயோகித்துள்ளேன்.

வெளிநாட்டு வேலைகளை மூட்டைகட்டிய பிறகு சென்னை வந்தவுடன் இந்த Parallel Bar க்காக தேடித்தேடி அலைந்து ஓய்ந்து போன வேளையில் ஒரு நாள் திநகர் வெங்கட்நாராயண சாலையில் உள்ள நடேசன் பூங்காவில் இதைக் கண்டேன் ஆசையில் சில நாட்கள் செய்த பிறகு வயதான மூட்டுகள் வாய்விட்டு அலராமல் வலி மூலம் தன் இயலாமை காட்டியது.எச்சரிக்கை மணி அடித்த பிறகும் வீம்புக்காக செய்யாமல் வேறு விதமான Exercise களை செய்துவருகிறேன்.
தூசியை பார்த்தாலே தும்மல் விடும் நான் அந்த ஒவ்வாமை மூலமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வார சிகிச்சைக்கு பிறகு வெளியில் வந்தேன், இது நடந்ததெல்லாம் 1982 வாக்கில்.மருத்துவ மனையில் இருக்கும் போது அங்கிருந்த மருத்துவர் சொன்ன அறிவுரை தான் இன்றுவரை என்னுடைய உடல்நலத்தை பாதுகாக்கவும் பேணுவதற்கும் உதவி வருகிறது.
அன்று இருந்த இடம் பொட்டை காடு “ஜிம்” என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாத வயது இப்படி இருக்கும் கால கட்டத்தில் எனக்கு கிடைத்த ஒரே வழி Parallel Bar. இரு பைப்புகள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் பொருத்தப்படும் அதன் மூலம் செய்யும் Exercise நமது தசைகளை முறுக்கேற்றி நெஞ்சேற்றி நடக்கவைக்கும், மீசை முருக்கும் அளவுக்கு இருந்தால் அதன் மூலம் கொஞ்ச பந்தா காட்டவும் உதவும்.
விடாமுயற்சியும் ஓரளவு சத்துள்ள சாப்பாடு சாப்பிட்டு தினமும் செய்தால் உடலை நோய் எதிர்ப்பு சக்திக்கு ஏதுவாக இருக்கும் படி செய்யலாம். சுமார் 1 1/2 ஆண்டு காலம் விடாமல் செய்தது எந்த ஊருக்கு போனாலும் அது இருக்கும் இடம் தேடி செய்யவைத்தது.
சிங்கையில் மூலைக்கு ஒன்றாக இருக்கும் பூங்காவில் இளைஞர்களுக்கு மற்றும் முதியவர்களுக்கு ஏற்ற Exercise சாதனத்தை இலவசமாக வைத்திருப்பார்கள்.தினமும் அலுவலகம் விட்டு வந்தபிறகு சுமார் 2 கி.மீ நடந்த பிறகு கீழே உள்ள மாதிரி செய்வேன்.
துபாய் போன பிறகு ஜிம் உள்ளே இருக்கும் சாதனங்களை ஓரிரு முறை உபயோகித்துள்ளேன்.
வெளிநாட்டு வேலைகளை மூட்டைகட்டிய பிறகு சென்னை வந்தவுடன் இந்த Parallel Bar க்காக தேடித்தேடி அலைந்து ஓய்ந்து போன வேளையில் ஒரு நாள் திநகர் வெங்கட்நாராயண சாலையில் உள்ள நடேசன் பூங்காவில் இதைக் கண்டேன் ஆசையில் சில நாட்கள் செய்த பிறகு வயதான மூட்டுகள் வாய்விட்டு அலராமல் வலி மூலம் தன் இயலாமை காட்டியது.எச்சரிக்கை மணி அடித்த பிறகும் வீம்புக்காக செய்யாமல் வேறு விதமான Exercise களை செய்துவருகிறேன்.
Sunday, January 16, 2011
Sunday, December 26, 2010
விளக்கில்லா விமான நிலையம்.
கடந்த 21ம் தேதி வேலை விஷயமாக பெங்களூரு வழியாக கோவா செல்லவேண்டியிருந்தது. தலையும் நானும் ஒரே விமானத்தில் பயணம் செய்தாலும் கூடிய வரை அவர் கண்ணில் படாமல் இருக்கவே முயற்சித்தேன், காரணம் பயமில்லை தேவையில்லாமல் பேசவேண்டிவ்ருமே என்பது தான்.
சென்னையில் இருந்து 50 நிமிடங்களில் பெங்களூரு விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தது ஜெட் ஏர்வேய்ஸ்.புது விமான நிலையம் வெளிப்பார்வைக்கு ஓடு பாதையில் இருந்து அவ்வளவு வசீகரமாக இல்லை ஆனால் உள்ளே நுழைந்ததும் சர்வதேச தரத்துக்கு இழைத்து வைத்திருக்கிறார்கள் மிக முக்கியமாக வழுக்கும் தரையில்லை.மின்சாரத்தை சேமிக்கும் விதமாக North Light முறையில் அமைக்கப்பட்டிருக்கும் உயர் ஜன்னல் மூலம் நிலையத்துக்கு தேவையான வெளிச்சம் உள் வரும் வகையில் அமைத்திருக்கிறார்கள்.நான் இருக்கும் வரை ஒரு விளக்கு கூட எரியவில்லை அதனல் எவ்வித குறைபாடும் தெரியவில்லை.

இவ்வேலை L&T- ECC நிறுவனம் செய்ததாக என் தலைவர் சொன்னார்.Folded Plate என்னும் முறைப்படி அமைத்திருப்பதாகவும் சொன்னார்.தரமும் நன்றாகவே இருந்தது. என்ன தான் அத்தனை வேலைகளையும் அருமையாக செய்திருந்தாலும் மழை நீர் செல்லும் குழாயை வெளியே தெரியும் படி செய்து ஒரு திருஷ்டி வைத்திருக்கிறார்கள்.இத்தனை வேலை செய்து அதை எப்படி கடைசியில் இப்படி வைத்துவிட மனது வந்தது என்று தெரியவில்லை.

மரக்கறி உணவு கிடைக்கும் இடம் நன்றாக இருந்தாலும் மிச்சம் மீதி இருக்கும் உணவுகளை சாப்பிட சென்னையில் இருந்து காலி செய்துவிட்டு போன சிட்டுக்குருவிகள் அவ்விடத்தை இருப்பிடமாக மாற்றிக்கொண்டுவிட்டன. செல்போன் டவரினால் குருவி காணாமல் போகும் என்ற கொஞ்ச நாளுக்கும் முன்பு வந்த தியரி இங்கு அடிப்பட்டு போகிறதே??
சென்னையில் இருந்து 50 நிமிடங்களில் பெங்களூரு விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தது ஜெட் ஏர்வேய்ஸ்.புது விமான நிலையம் வெளிப்பார்வைக்கு ஓடு பாதையில் இருந்து அவ்வளவு வசீகரமாக இல்லை ஆனால் உள்ளே நுழைந்ததும் சர்வதேச தரத்துக்கு இழைத்து வைத்திருக்கிறார்கள் மிக முக்கியமாக வழுக்கும் தரையில்லை.மின்சாரத்தை சேமிக்கும் விதமாக North Light முறையில் அமைக்கப்பட்டிருக்கும் உயர் ஜன்னல் மூலம் நிலையத்துக்கு தேவையான வெளிச்சம் உள் வரும் வகையில் அமைத்திருக்கிறார்கள்.நான் இருக்கும் வரை ஒரு விளக்கு கூட எரியவில்லை அதனல் எவ்வித குறைபாடும் தெரியவில்லை.
இவ்வேலை L&T- ECC நிறுவனம் செய்ததாக என் தலைவர் சொன்னார்.Folded Plate என்னும் முறைப்படி அமைத்திருப்பதாகவும் சொன்னார்.தரமும் நன்றாகவே இருந்தது. என்ன தான் அத்தனை வேலைகளையும் அருமையாக செய்திருந்தாலும் மழை நீர் செல்லும் குழாயை வெளியே தெரியும் படி செய்து ஒரு திருஷ்டி வைத்திருக்கிறார்கள்.இத்தனை வேலை செய்து அதை எப்படி கடைசியில் இப்படி வைத்துவிட மனது வந்தது என்று தெரியவில்லை.
மரக்கறி உணவு கிடைக்கும் இடம் நன்றாக இருந்தாலும் மிச்சம் மீதி இருக்கும் உணவுகளை சாப்பிட சென்னையில் இருந்து காலி செய்துவிட்டு போன சிட்டுக்குருவிகள் அவ்விடத்தை இருப்பிடமாக மாற்றிக்கொண்டுவிட்டன. செல்போன் டவரினால் குருவி காணாமல் போகும் என்ற கொஞ்ச நாளுக்கும் முன்பு வந்த தியரி இங்கு அடிப்பட்டு போகிறதே??
Saturday, October 16, 2010
யோகா
சில நாட்களுக்கு முன்பு யாகூ முதல் பக்கத்தில் மோசமான சுற்றுச்சூழல் உள்ள 20 நகரங்களில் பட்டியல் போட்டிருந்தார்கள் அதில் சென்னைக்கு 8வது இடம்,முதல் இடத்தில் குஜராத்தில் உள்ள அன்கலேஷ்வர்.இந்த அனகலேஷ்வர் பகுதியில் 1992களில் சில மாதங்கள் வேலை செய்துள்ளேன் அப்போதே காற்றில் ஒரு வித நெடி இருக்கும்.வெளியிடங்களில் இருந்து வரும் ரயிலில் வரும் போது இந்த நெடியே அன்கலேஷ்வர் வந்துவிட்டதை குறிப்பால் உணர்த்தும்.
உடல் நலம் அதுவும் வெட்டவெளியில் பணியில் இருக்கும் என்னை மாதிரி ஆட்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை என்னுடைய பழைய பதிவுகளில் அவ்வப்போது எழுதிவந்துள்ளேன்.ஒல்லியாக இருந்து சின்ன தூசிகளுக்கு எல்லாம் பல முறை பென்சிலின் ஊசி போட்டு வாழ்நாளை ஓட்டிக்கொண்டிருந்த நான் அதிலிருந்து விடுபட்டு ஓரளவு வியாதியில்லா வாழ்கைக்கு என்னை தயார்படுத்திக்கொள்ள பல உடற்பயிற்சிகள் உதவினாலும் அதையும் மீறி "யோகா" பக்கம் என்னை தள்ளியது 1990 களில் ஆனந்த விகடனில் வந்த யோகா பற்றிய கேள்வி பதில்கள் தான்.என்னை நான் தள்ளிக்கொண்ட பல நிகழ்வுகள் ஏனோ தானோ என்று புரிதல் முறையில் தான் நடந்திருக்கின்றன,அதே முறையில் இந்த யோகா கட்டுரைகளையும் படித்துக்கொண்டிருந்தேன்.திரு தேசிக்காச்சாரி என்பவர் அவர் தந்தை பெயரில் "கிருஷ்ணமாச்சாரி யோகா மந்திரம்" மூலம் பலருக்கு யோகா கலையை சொல்லிக்கொடுத்துக்கொண்டிருப்பதை அறிந்தேன்.உடலை ஓரளவு Tone Up செய்தாகிவிட்டது இனிமேல் அதில் அவ்வளவு முன்னேற்றம் காணமுடியாது என்ற நிலையில் யோகா பக்கம் முயற்சிக்கலாம் என்று அவர்களிடம் சில காலம் யோகா கற்றுக்கொண்டேன்.முதல் முறை அவர்கள் மந்திரம் போன போது அவர் என்னிடம் எதற்கு யோகா கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் என்றார்.இந்தியனாக இருக்கின்ற எனக்கு இக்கலை தெரியவில்லை என்பது கஷ்டமாக இருப்பதால் வந்தேன் என்றேன்.உடல் நிலை பற்றிய பேச்சு வந்த போது பெரிய பிரச்சனை எதுவும் இல்லை என்ற போது "திரு ஆன்ந்த்" என்பவரை எனக்கு ஆசிரியராக போட்டார்கள்.அவர் மூச்சு எடுக்கும் போது விடும் போதும் ஏதோ பிளாஸ்டிக் குழாய் மூலம் காற்று போய் வருவதைப்போன்று ஒரு சத்தம்,அவ்வளவு சுத்தமான மூச்சுக்குழாய் போலும்! ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தேன்.


யோகாவின் முக்கிய அங்கங்களில் முச்சுக்காற்று.ஏற்றுவது இறக்குவது என்ற கணக்கில் ஓடும்.எவ்வளவு வருடம் செய்தேன் என்ற நினைவில் இல்லை ஆனால் அதை செய்வதற்கால கால அளவு நிறையவே காலை நேரத்தை விழுங்கியது அதோடு சாயங்காலம் சரியாக வரவில்லை.யோகா செய்ததால் எவ்வளவு பலன் என்று தெரியவில்லை ஆனால் ஏதோ இருக்கு என்பதை மட்டும் உடல் நலம் காண்பிக்கிறது.இப்போதெல்லாம் யோகா பண்ணுவதில்லை என்றாலும் மூச்சுப்பயிற்சி மட்டும் தொடர்கிறது.
இனி சென்னை காற்றை தான் சுவாசிக்கவேண்டும் என்பதால் இது வரை செய்துவந்த உடற்பயிற்சிகள் எவ்வளவு நாட்களுக்கு தாக்குப்பிடிக்கும் என்று தெரியவில்லை அப்படி முடியவில்லை என்றால் திரும்பவும் யோகா பக்கம் கண்ணைப்பதிக்கவேண்டும்.
உடல் நலம் அதுவும் வெட்டவெளியில் பணியில் இருக்கும் என்னை மாதிரி ஆட்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை என்னுடைய பழைய பதிவுகளில் அவ்வப்போது எழுதிவந்துள்ளேன்.ஒல்லியாக இருந்து சின்ன தூசிகளுக்கு எல்லாம் பல முறை பென்சிலின் ஊசி போட்டு வாழ்நாளை ஓட்டிக்கொண்டிருந்த நான் அதிலிருந்து விடுபட்டு ஓரளவு வியாதியில்லா வாழ்கைக்கு என்னை தயார்படுத்திக்கொள்ள பல உடற்பயிற்சிகள் உதவினாலும் அதையும் மீறி "யோகா" பக்கம் என்னை தள்ளியது 1990 களில் ஆனந்த விகடனில் வந்த யோகா பற்றிய கேள்வி பதில்கள் தான்.என்னை நான் தள்ளிக்கொண்ட பல நிகழ்வுகள் ஏனோ தானோ என்று புரிதல் முறையில் தான் நடந்திருக்கின்றன,அதே முறையில் இந்த யோகா கட்டுரைகளையும் படித்துக்கொண்டிருந்தேன்.திரு தேசிக்காச்சாரி என்பவர் அவர் தந்தை பெயரில் "கிருஷ்ணமாச்சாரி யோகா மந்திரம்" மூலம் பலருக்கு யோகா கலையை சொல்லிக்கொடுத்துக்கொண்டிருப்பதை அறிந்தேன்.உடலை ஓரளவு Tone Up செய்தாகிவிட்டது இனிமேல் அதில் அவ்வளவு முன்னேற்றம் காணமுடியாது என்ற நிலையில் யோகா பக்கம் முயற்சிக்கலாம் என்று அவர்களிடம் சில காலம் யோகா கற்றுக்கொண்டேன்.முதல் முறை அவர்கள் மந்திரம் போன போது அவர் என்னிடம் எதற்கு யோகா கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் என்றார்.இந்தியனாக இருக்கின்ற எனக்கு இக்கலை தெரியவில்லை என்பது கஷ்டமாக இருப்பதால் வந்தேன் என்றேன்.உடல் நிலை பற்றிய பேச்சு வந்த போது பெரிய பிரச்சனை எதுவும் இல்லை என்ற போது "திரு ஆன்ந்த்" என்பவரை எனக்கு ஆசிரியராக போட்டார்கள்.அவர் மூச்சு எடுக்கும் போது விடும் போதும் ஏதோ பிளாஸ்டிக் குழாய் மூலம் காற்று போய் வருவதைப்போன்று ஒரு சத்தம்,அவ்வளவு சுத்தமான மூச்சுக்குழாய் போலும்! ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தேன்.
யோகாவின் முக்கிய அங்கங்களில் முச்சுக்காற்று.ஏற்றுவது இறக்குவது என்ற கணக்கில் ஓடும்.எவ்வளவு வருடம் செய்தேன் என்ற நினைவில் இல்லை ஆனால் அதை செய்வதற்கால கால அளவு நிறையவே காலை நேரத்தை விழுங்கியது அதோடு சாயங்காலம் சரியாக வரவில்லை.யோகா செய்ததால் எவ்வளவு பலன் என்று தெரியவில்லை ஆனால் ஏதோ இருக்கு என்பதை மட்டும் உடல் நலம் காண்பிக்கிறது.இப்போதெல்லாம் யோகா பண்ணுவதில்லை என்றாலும் மூச்சுப்பயிற்சி மட்டும் தொடர்கிறது.
இனி சென்னை காற்றை தான் சுவாசிக்கவேண்டும் என்பதால் இது வரை செய்துவந்த உடற்பயிற்சிகள் எவ்வளவு நாட்களுக்கு தாக்குப்பிடிக்கும் என்று தெரியவில்லை அப்படி முடியவில்லை என்றால் திரும்பவும் யோகா பக்கம் கண்ணைப்பதிக்கவேண்டும்.
Wednesday, September 22, 2010
சென்னை ரயிலில்...
Friday, August 13, 2010
சென்னையில் Sink Hole?
Sink Hole இதுக்கு தமிழாக்கம் என்னவென்று தெரியவில்லை ஆனால் கீழ்கண்ட படங்களை பாருங்கள்.முதல் படம் குவாண்டமாலா எனும் இடத்தில் ஏற்பட்டது ஆனால் இரண்டாம் படம் விருகம்பாக்கம் பூங்காவுக்கு அருகில் உள்ள தெருவில் ஏற்பட்டுள்ளது,அதிசியமாக யாரோ புண்ணியவான் அதை சுற்றி பாதுகாப்பு பட்டையை கட்டியுள்ளார்கள்.
முதல் படம் குவாண்டமாலாவில் ஏற்பட்டது.

நம்மூர் சாலைகளில் பயணிப்பவர்களுக்கு இந்த மாதிரி பூமி உள்வாங்குவது என்பது சாதரண நிகழ்வு தான் ஆதாவது தொலைப்பேசி அல்லது கழிவு நீர் பாதைகளை ஏற்படுத்திவிட்டு பிறகு அதை முறையாக மூடாமல் விட்டால் அந்த இடமே செயற்கையாக தாழ்ந்திருக்கும்.இவ்விடம் அப்படியில்லாமல் மொத்தமாக இறங்கியிருப்பது பக்கத்தில் உள்ள கட்டிடங்களுக்கு ஏதாவது இடையூறு ஏற்படுமா என்று அஞ்சவேண்டியிருக்கு.
முதல் படம் குவாண்டமாலாவில் ஏற்பட்டது.

நம்மூர் சாலைகளில் பயணிப்பவர்களுக்கு இந்த மாதிரி பூமி உள்வாங்குவது என்பது சாதரண நிகழ்வு தான் ஆதாவது தொலைப்பேசி அல்லது கழிவு நீர் பாதைகளை ஏற்படுத்திவிட்டு பிறகு அதை முறையாக மூடாமல் விட்டால் அந்த இடமே செயற்கையாக தாழ்ந்திருக்கும்.இவ்விடம் அப்படியில்லாமல் மொத்தமாக இறங்கியிருப்பது பக்கத்தில் உள்ள கட்டிடங்களுக்கு ஏதாவது இடையூறு ஏற்படுமா என்று அஞ்சவேண்டியிருக்கு.
Monday, August 09, 2010
இது சரியல்ல.
ஒரு காலத்தில் சென்னையில் வீட்டுக்கு குளிர்சாதன வசதி என்பது விரல்விட்டு எண்ணக்கூடிய நிலையில் தான் இருந்தது ஆனால் இப்போது சுமார் 40 விழுக்காடு வீடுகளில் குளிர்சாதன வசதி வந்துவிட்டது.இரவில் தூங்க காற்றாடி போய் குளிர்சாதனம் அத்தியாவசியமாகிவிட்டது.வீட்டு குளிர்சாதன வசதிக்கு சிறிதும் பெரிதுமாக பல உபகரணங்கள் இருந்தாலும் மத்திய வர்கத்துக்கு கைவசப்படுவது இரண்டு ரகம் தான்,ஒன்று Window Unit மற்றொன்று Split Aircon.
முதல் வகை சுவரில் இருக்கும் ஓட்டையில் அதன் பிரேமுடன் பொருத்தி தேவையான ஆணிகளை கொண்டுமுடுக்கிவிடுவார்கள்.சிங்கையில் இவ்வகையிலும் தரனான Stainless Brackets களை மட்டுமே உபயோகிகவேண்டும் என்ற சட்டம் இருக்கு,ஏனென்றால் இவ்வகை குளிர்சாதன பெட்டி மேலிருந்து கீழே விழுந்து பல விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளது.நம்மூரில் சரியான முறைகளை அமல்படுத்தாவிட்டால் இன்னும் பல விபத்துக்கள் இதனால் ஏற்பட சாத்தியங்கள் உள்ளது.
இரண்டாம் வகை Split Aircon : இது கொஞ்சம் பவர் அதிகம்என்பதாலும் ஒன்றுக்கு மேற்பட்ட அறைகளுக்கு குளிர்சாதன வசதி கொடுக்க முடியும் என்பதால் ஒரு சிறிய கம்பிரசரை பொருத்தி இவ்வசதியை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.இதை பொருத்தும் இடம் மற்றும் சில நியதிகள் இருக்கின்றன.கொஞ்சம் எடை அதிகம் என்பதால் இதை சரியாக பொருத்த வேண்டும் ஆனால் பல மாடிக்கட்டிடங்களில் இம்முறைகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு சன்ஷேடு மேல் வைத்துவிடுகிறார்கள். இந்த சன்ஷேடு சரியான முறையில் கன்கிரீட் போடப்பட்டிருந்தாலும் இவ்வகை எடைகளை தாக்குப்பிடிக்க ஏற்ற வகையில் டிசைன் செய்திருக்கமாட்டார்கள்,அத்துடன் இதிலிருந்து கசியும் நீர் கம்பியை துருபிடிக்கவைத்து கட்டிடத்தை பலமிழுக்கவைத்துவிடும்.கட்டுமான Knowledge மற்றும் வழிமுறைகள் முறையாக செயல்படுத்தாவிட்டால் தேவையில்லாத உயிரிழப்புகள் என்று நாளிழதர்களில் தினமும் பார்க்க நேரிடும்.
முறையான வழியும்,தவறான முறையும் கீழே படங்களில்.
தவறான முறைகள்.


சரியான முறை கீழே.
முதல் வகை சுவரில் இருக்கும் ஓட்டையில் அதன் பிரேமுடன் பொருத்தி தேவையான ஆணிகளை கொண்டுமுடுக்கிவிடுவார்கள்.சிங்கையில் இவ்வகையிலும் தரனான Stainless Brackets களை மட்டுமே உபயோகிகவேண்டும் என்ற சட்டம் இருக்கு,ஏனென்றால் இவ்வகை குளிர்சாதன பெட்டி மேலிருந்து கீழே விழுந்து பல விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளது.நம்மூரில் சரியான முறைகளை அமல்படுத்தாவிட்டால் இன்னும் பல விபத்துக்கள் இதனால் ஏற்பட சாத்தியங்கள் உள்ளது.
இரண்டாம் வகை Split Aircon : இது கொஞ்சம் பவர் அதிகம்என்பதாலும் ஒன்றுக்கு மேற்பட்ட அறைகளுக்கு குளிர்சாதன வசதி கொடுக்க முடியும் என்பதால் ஒரு சிறிய கம்பிரசரை பொருத்தி இவ்வசதியை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.இதை பொருத்தும் இடம் மற்றும் சில நியதிகள் இருக்கின்றன.கொஞ்சம் எடை அதிகம் என்பதால் இதை சரியாக பொருத்த வேண்டும் ஆனால் பல மாடிக்கட்டிடங்களில் இம்முறைகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு சன்ஷேடு மேல் வைத்துவிடுகிறார்கள். இந்த சன்ஷேடு சரியான முறையில் கன்கிரீட் போடப்பட்டிருந்தாலும் இவ்வகை எடைகளை தாக்குப்பிடிக்க ஏற்ற வகையில் டிசைன் செய்திருக்கமாட்டார்கள்,அத்துடன் இதிலிருந்து கசியும் நீர் கம்பியை துருபிடிக்கவைத்து கட்டிடத்தை பலமிழுக்கவைத்துவிடும்.கட்டுமான Knowledge மற்றும் வழிமுறைகள் முறையாக செயல்படுத்தாவிட்டால் தேவையில்லாத உயிரிழப்புகள் என்று நாளிழதர்களில் தினமும் பார்க்க நேரிடும்.
முறையான வழியும்,தவறான முறையும் கீழே படங்களில்.
தவறான முறைகள்.


சரியான முறை கீழே.
Wednesday, May 26, 2010
குஜராத் பூகம்பம்.
என்ன மேட்டரே ரொம்ப பழசா இருக்கே என்று பார்க்கிறீர்களா,நேற்று கூகிளிடம் ஏதோ தேடப்போய் இந்த பக்கம் சிக்கியது.படிக்க படிக்கப்படிக்க தார்மீக கோபங்கள் எங்கெங்கோ பாய்ந்தாலும் இந்த மாதிரி பொறியாளர்கள் மற்றும் குத்தகைத்தாரர்கள் இருக்கும் வரை இது தீராத பிரச்சனை தான்.
டெல்லியில் மெட்ரோ கான்கிரீட் Corbel விழுந்ததும் இதே மாதிரியான ஆனால் கம்பியால் ஏற்பட்ட பிரச்சனை தான்.இதெல்லாம் படிக்கப்படிக்க அடுக்கு மாடி கட்டிடம் அல்லது கடை தொகுதிக்கு உள்ளே போகும் வாசலில் இருக்கும் பிள்ளையாரை வேண்டிக்கொண்டு தான் போகனும் என்று நினைக்கிறேன்.போனா திரும்பி வருவதும் வராததும் அவர் கையில் தான் இருக்கு.
வெளி நாட்டில் ஏன் பல கட்டிடங்கள் விழவில்லையா?இந்தியர்களை மட்டும் குறை சொல்லும் கூட்டத்தில் நீங்களும் ஒருவர் என்று என்னை சுட்டிக்காட்ட விரும்பினால்...கீழே உள்ள சுட்டிக்கு போய் முழுவதுமாக படித்துவிட்டு சொல்லவும்.சுருக்கமாக சொன்னால் பொறியாளர் படிப்புக்கு படித்துவிட்டு ஆரம்ப கல்வி அறிவு கூட இல்லாதவர்கள் கட்டிய கட்டிடங்கள் தான் இந்த மாதிரி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை சென்னை IIT குழுமம் ஆய்வு செய்து சொல்லியுள்ளது.
படித்துவிட்டு தலையில் கை வைத்துக்கொள்ளுங்கள்-குஜராத் பூகம்பம்
பொறியாளர்கள் தவறால் உயிரிழந்த பல ஆன்மாக்கள் சாந்தி அடையட்டும்
டெல்லியில் மெட்ரோ கான்கிரீட் Corbel விழுந்ததும் இதே மாதிரியான ஆனால் கம்பியால் ஏற்பட்ட பிரச்சனை தான்.இதெல்லாம் படிக்கப்படிக்க அடுக்கு மாடி கட்டிடம் அல்லது கடை தொகுதிக்கு உள்ளே போகும் வாசலில் இருக்கும் பிள்ளையாரை வேண்டிக்கொண்டு தான் போகனும் என்று நினைக்கிறேன்.போனா திரும்பி வருவதும் வராததும் அவர் கையில் தான் இருக்கு.
வெளி நாட்டில் ஏன் பல கட்டிடங்கள் விழவில்லையா?இந்தியர்களை மட்டும் குறை சொல்லும் கூட்டத்தில் நீங்களும் ஒருவர் என்று என்னை சுட்டிக்காட்ட விரும்பினால்...கீழே உள்ள சுட்டிக்கு போய் முழுவதுமாக படித்துவிட்டு சொல்லவும்.சுருக்கமாக சொன்னால் பொறியாளர் படிப்புக்கு படித்துவிட்டு ஆரம்ப கல்வி அறிவு கூட இல்லாதவர்கள் கட்டிய கட்டிடங்கள் தான் இந்த மாதிரி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை சென்னை IIT குழுமம் ஆய்வு செய்து சொல்லியுள்ளது.
படித்துவிட்டு தலையில் கை வைத்துக்கொள்ளுங்கள்-குஜராத் பூகம்பம்
பொறியாளர்கள் தவறால் உயிரிழந்த பல ஆன்மாக்கள் சாந்தி அடையட்டும்
Thursday, May 20, 2010
இசை கேட்டால்.....
மனைவியுடன் Chat செய்துகொண்டிருக்கும் போதே Airtel சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஆரம்பித்திருக்கும்(மறு ஒளிபரப்பு) என்றும் அதுவும் நேற்று ஷ்ரீகாந்த் நன்றாக பாடி இருப்பதாகவும் சொன்னார்,அப்படியே Chat ஐ முடித்து தொலைக்காட்சியை ஆரம்பித்த போது ஓவியா பாடிக்கொன்டிருந்தார்.ஷ்ரீகாந்த் பாடிவிட்டாரா இல்லையா என்று தெரியாத நிலையில் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.
கடைசியாக வந்த அந்த இளம் சிங்கம் கர்சித்ததை தொண்டை அடைக்க பார்த்து மகிழ்ந்தேன்.என்ன குரல்! சித்ரா சொன்ன மாதிரி பெரிய பெரிய பாடகர்களே தொட யோசிக்கும் பாட்டை அனாயாசமாக பாடி எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டான்.வயதுக்கு ஏற்காத இடங்களில் சிதறினாலும் மொத்தத்தில் "சூப்பர்" பாட்டுக்காரன் அவன் தான்.
Child Prodigy வகையில் வரும் ஷ்ரீகாந்த் மென்மேலும் வளர்ந்து ஒரு நல்ல பாடகனாக வரவேண்டும் என்பதே என் ஆசை.
ஒரு சாம்பிள்
யூடூபில் தேடினால் இன்னும் நிறைய கண்டு மகிழலாம்.
கடைசியாக வந்த அந்த இளம் சிங்கம் கர்சித்ததை தொண்டை அடைக்க பார்த்து மகிழ்ந்தேன்.என்ன குரல்! சித்ரா சொன்ன மாதிரி பெரிய பெரிய பாடகர்களே தொட யோசிக்கும் பாட்டை அனாயாசமாக பாடி எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டான்.வயதுக்கு ஏற்காத இடங்களில் சிதறினாலும் மொத்தத்தில் "சூப்பர்" பாட்டுக்காரன் அவன் தான்.
Child Prodigy வகையில் வரும் ஷ்ரீகாந்த் மென்மேலும் வளர்ந்து ஒரு நல்ல பாடகனாக வரவேண்டும் என்பதே என் ஆசை.
ஒரு சாம்பிள்
யூடூபில் தேடினால் இன்னும் நிறைய கண்டு மகிழலாம்.
Thursday, May 13, 2010
சென்னையில் வீடு வாங்கியிருக்கிறீர்களா?
சொன்னா நம்பமாட்டீங்க,சமீபத்தில் நானும் சென்னையில் ஒரு வீடு வாங்கலாம் என்று சுமார் 1 வருடமாக அலைகிறேன்..ஹூகும் முடியவில்லை.எப்படியும் பேங்க் லோன் போட்டே ஆகனும் என்ற நிலை இருந்தாலும் நான் பார்க்கிற அல்லது எனக்கு காண்பிக்கிப்படுகிற வீடுகள் அவ்வளவும் சில முக்கியமான விஷயங்களில் விட்டுக்கொடுத்து போக வேண்டியுள்ளது.சென்னைக்கு உள்ளே கட்டப்படும் பல வீடுகள் நடுத்தர குத்தகைக்காரர்களாகவே அல்லது பில்டர்ஸ்களாலேயே கட்டப்படுகிறது.இவர்கள் வேலையை எடுத்து முன் அனுபவம் உள்ள குத்தகைக்காரர்களிடம் கொடுத்துவிடுகிறார்கள் அதன் பிறகு அவ்வப்போது உள் நுழைந்து பார்பதோடு சரி.எனக்கு தெரிந்த அளவில் தரக்கட்டுப்பாடு என்பது அதுவாக நிகழ்தாலொழிய இவர்களால் கொடுக்க இயலாது ஏனென்றால் இவர்கள் சொல்லும் காரணம்
சதுர அடிக்கு பேசியுள்ள விலை
வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை
சாமான்கள் விலை ஏறிவிட்டது.
வேலையை முடிக்க நிறைய நேரமாகும்.. இப்படி பல.
நான் நுழைந்து பார்த்த பல வீடுகளின் கான்கிரீட், போட்ட பின்பும் கம்பி வெளியில் தெரிந்தவையாகவே இருந்தது.Cantilever Slab க்கு கம்பி கீழ்பகுதியில் கட்டி தூக்கிக்கொண்டு போகும் போது..இந்த துறையில் இருந்துகொண்டு இப்படி ஒரு நிலையை பார்க்கும் போது அப்படியே வெளியே ஒடிப்போய்விடனும் என்று தோனும்,எவ்வளவு வீட்டுக்கு அப்படி போவது?சிலவற்றில் செங்கற்கள் தரமாக இருக்கும் ஆனால் சிலாப் சிமிண்ட் மோசமாக இருக்கும்,இன்னொன்றில் இதற்கு அப்படியே ஏறுமாறாக இருக்கும்.பல வீடுகளில் அறைகள் சிறியதாகவும் அமைப்பாகவும் இருக்காது.பாதி கட்டிக்கொண்டு இருக்கும் வீட்டுக்கு தாத்தாக்களை/பாட்டிகளையெல்லாம் அழைத்துப்போக கூடாது,ஏதோ நாளையே அங்கு குடி வருவது போல் நொட்டாங்கு சொல்லிக்கொண்டிருப்பார்கள் அதோடில்லாமல் செங்கல் சரியில்லை என்பார்கள்.பழைய காலங்களில் மேற்கூரை மற்றும் பலவற்றின் Weight சுவற்றின் வழியாகத்தான் தரைக்கு எடுத்துச்செல்லப்படும் அதனால் செங்கல்லின் தரம் முக்கியமான ஒன்று ஆனால் இப்போதெல்லாம் Column/Beam வழியாக செல்வதால் சுற்றுச்சுவர்கள் எல்லாமே ஒரு மறைப்புச்சுவர் தான். தடுப்புச்சுவருக்கு சுதி சுத்தமான செங்கல் என்பது அத்தியாவசியம் இல்லை.குத்தகைக்காரர்களுக்கு செங்கல் சுவர் கட்டுவது பழகிக்போன ஒன்று அவ்வளவு தான். அதை விட செலவு குறைவாக பிடிக்கக்கூடிய வேலைகள் நிறைய இருந்தாலும் அவ்வளவாக பயண்பாட்டில் காண முடிவதில்லை. மிக மிக முக்கியமாக Violation என்று சொல்லப்படுகிற அரசாங்க விதிமுறை மீறல் நான் பார்த்த பல இடங்களிலும் அளவில் வித்தியாசத்துடன் இருந்தது.ஏதோ ஒரு சமயத்தில் அரசாங்கம் விழித்துக்கொண்டு அதையெல்லாம் இடிக்கனும் என்று புறப்பட்டால் நகரத்தில் உள்ள 90% கட்டிடங்களை இடிக்கவேண்டியிருக்கும்(சென்னையில் மட்டும்).
உதாரணம் 1:என் பெற்றோர் இருக்கும்(தெருவில்) நங்கநல்லூரில் அனைத்து வீடுகளும் G+1,ஆதாவது சாலையில் அகலம் வைத்து வீட்டின் உயரத்தை முடிவு செய்து அதையே அங்கிருக்கும் அனைவரும் கடைபிடித்து வீடு கட்டியுள்ளார்கள் ஆனால் ஒரு வீடு மாத்திரம் ஒரு மாடி அதிகம் ஏனென்றால் அது அந்த ஏரியா கவுன்சிலர் வீடு.இந்த வீடு தான் சமீபத்தில் கட்டிய வீடுகளில் ஒன்று.
உதாரணம் 2:விருகம்பாக்கத்தில் ஒரு வீடு அதுவும் Dead Endல் உள்ள வீடு,அவ்வீட்டை அனுகும் சாலையும் அகலத்தில் மிக குறைவு இருந்தாலும் அவர்கள் G+2 உயரத்துக்கு கட்டியுள்ளார்கள்.கேட்க ஆளில்லை போலும்!ஏதோ ஒரு விபத்து நேரிட்டால் பக்கத்தில் உள்ள பல வீட்டிக்காரர்களும் தங்கள் வீட்டை இழக்கவேண்டும்.இழப்பீடு இன்ஷூர் செய்திருந்தால் கிடைக்கலாம்,இல்லாவிட்டால் அதோ கதி தான்.
இப்பிரச்சனையை வேறு ஏதாவது தேர்தலுக்கு ஏதாவது ஒரு கட்சி Trump Card ஆக உபயோகித்துக்கொள்ளக்கூடும்.மக்களுக்கு இலவசமாக அனுமதி பத்திரமும் கொடுக்கப்படும்.
ஆமாம் இதென்ன அரசாங்க விதிமுறை மீறல்??
ஒரு வீடு என்பது எப்படி அமையவேண்டும் என்ற விதிமுறை.2400 சதுர அடியில் 65(இப்ப 70% என்று நினைக்கிறேன்) விழுக்காடு மட்டுமே கட்டிடம் அமையவேண்டும் போன்ற விதிமுறைகள் சர்வசாதரணமாக காற்றில் விடப்படுவது,இது கொஞ்சம் பெரிய சப்ஜெக்ட் இதில் பில்டர்ஸ் பண்ணும் கோல்மால்கள் ஒரு பெரிய நாவல் எழுதும் அளவுக்கு உள்ளது.நான் பார்த்த ஒரு வீட்டில் பக்கத்து பிளாட்டு சன்ஷேடுக்கு நடந்தே போகலாம் என்ற இடைவெளி மட்டுமே இருந்தது.இவ்வளவு குருகிய இடைவெளி இருந்தால் நாள் முழுவதும் அறையில் மின்வெளிச்சம் வேண்டியிருக்கும் அதோடு வெய்யில் காலங்களில் ஒவ்வொரு வீடும் வெளியிடும் வெப்பம் வெளியேற வழியில்லாமல் வீடே Oven மாதிரி இருக்கும்.பிறகு என்ன? குளிர்சாதன வசதி செய்துகொண்டு அதற்கு மின்சாரம் கிடைக்கவில்லை என்று புலம்பிக்கொண்டிருக்கவேண்டியது தான்.
சென்னை மாதிரி நகரங்களில் Town Planning Council என்று ஒன்று இருக்கிறது, இவர்களிடம் தான் இந்த இடங்களில் இந்த மாதிரியான கட்டிடங்கள் வரலாம் என்ற நியதியும் உள்ளது அதுபடி தான் அனுமதியும் வழங்குகிறார்கள்,ஆனால் அதை மேற்பார்வை செய்ய அல்லது கட்டுப்படுத்த ஏதாவது செய்கிறார்களா? என்பது சந்தேகமாகவே இருக்கிறது.
இதுவரை பார்த்தது முதல் படி தான்.வீடு இருக்கும் இடம் அவர்கள் சொல்லும் அளவு பிடித்திருந்தால் அவர்களிடம் முன் பணம் கொடுத்து அந்த நிலப்பகுதியின் பட்டா விபரங்களை வாங்கவேண்டும் அதை தேர்ந்த நோட்டரியிடமோ அல்லது வக்கீலீடமோ கொடுத்து ஆவணங்கள் சரியாக இருக்கிறதா? என்று பார்க்கவேண்டும்.இவ்வேளையை செய்ய 1500 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள்.இப்படி சொல்வதிலும் ஒருவொருக்கொருவர் வேறுபடுகிறார்கள்.இந்த இரண்டாவது படியையும் ஆண்டவன் மேல் பாரத்தை போட்டு மேலே போவோம்.
வீடு பிடிச்சிருக்கு,வில்லங்கம் இல்லாத நிலம் என்று சான்றிதழ் இருக்கு அடுத்து இங்கு கட்டிடம் கட்ட அனுமதி இருக்கா என்று பார்க்கனும்!! அதிலும் வேடிக்கை தான்.பிளானை கொடுக்கும் போதே அதில் இருக்கும் சீலெல்லாம் நம்மை ஓரளவுக்கு நம்பவைக்கும் திசையை நோக்கி இழுத்துப்போகும் ஆனால் அதனுள்ளும் பல்வேறு விஷயங்கள் இருக்கும்.இதனுள் இருக்கும் விஷயங்களை தெளிவாக எழுதனும் என்றால் இன்னும் அதனுள் போய் பார்த்தால் தான் தெரியும்.கொஞ்சம் கேள்வி கேட்கும் ஞானம் இருந்தாலே போதும் இதிலும் வில்லங்கம் இருக்கு என்று.
இந்த கடைசி படி தான் சூப்பரோ சூப்பர்,அது தான் உங்க வீட்டின் அளவு(சதுர அடியில்).இதில் எப்படியெல்லாம் விளையாடிகிறார்கள் என்று ஒரு நண்பர் விவரித்த போது அப்படியே அசந்து இனி நம்மால் முடியாது என்று கையை மேலே தூக்கிடவேண்டியது தான்.வீட்டின் அளவை அவர்கள் சொல்லிய அளவில் வாங்குபவர்களுக்கே முன்னுரிமை அதில் ஏதாவது கேள்வி கேட்டால் நீங்கள் காஞ்சிபுரம் அருகே தான் வீடு பார்க்கவேண்டும்.
ஒன்னே ஒன்னு மறந்திட்டேன்....உங்களிடம் எப்படிப்பட்ட Payment Schedule இருக்கு? அதற்கு தகுந்த மாதிரி வீடு கிடைக்கும்.அதென்ன Payment Schedule???
மார்க்கெட்டில் விஜாரியுங்கள். :-)
இவ்வளவு தொந்தரவுகளையும் ஓரளவு தவிர்க்கலாம் ECR/OMR பகுதியில் கட்டப்படும் அடுக்கு மாடிகளை தேர்வு செய்தால் ஆனால் வேலை இடத்துக்கு வந்து போக கொஞ்சம் நேரமாகும்.
சதுர அடிக்கு பேசியுள்ள விலை
வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை
சாமான்கள் விலை ஏறிவிட்டது.
வேலையை முடிக்க நிறைய நேரமாகும்.. இப்படி பல.
நான் நுழைந்து பார்த்த பல வீடுகளின் கான்கிரீட், போட்ட பின்பும் கம்பி வெளியில் தெரிந்தவையாகவே இருந்தது.Cantilever Slab க்கு கம்பி கீழ்பகுதியில் கட்டி தூக்கிக்கொண்டு போகும் போது..இந்த துறையில் இருந்துகொண்டு இப்படி ஒரு நிலையை பார்க்கும் போது அப்படியே வெளியே ஒடிப்போய்விடனும் என்று தோனும்,எவ்வளவு வீட்டுக்கு அப்படி போவது?சிலவற்றில் செங்கற்கள் தரமாக இருக்கும் ஆனால் சிலாப் சிமிண்ட் மோசமாக இருக்கும்,இன்னொன்றில் இதற்கு அப்படியே ஏறுமாறாக இருக்கும்.பல வீடுகளில் அறைகள் சிறியதாகவும் அமைப்பாகவும் இருக்காது.பாதி கட்டிக்கொண்டு இருக்கும் வீட்டுக்கு தாத்தாக்களை/பாட்டிகளையெல்லாம் அழைத்துப்போக கூடாது,ஏதோ நாளையே அங்கு குடி வருவது போல் நொட்டாங்கு சொல்லிக்கொண்டிருப்பார்கள் அதோடில்லாமல் செங்கல் சரியில்லை என்பார்கள்.பழைய காலங்களில் மேற்கூரை மற்றும் பலவற்றின் Weight சுவற்றின் வழியாகத்தான் தரைக்கு எடுத்துச்செல்லப்படும் அதனால் செங்கல்லின் தரம் முக்கியமான ஒன்று ஆனால் இப்போதெல்லாம் Column/Beam வழியாக செல்வதால் சுற்றுச்சுவர்கள் எல்லாமே ஒரு மறைப்புச்சுவர் தான். தடுப்புச்சுவருக்கு சுதி சுத்தமான செங்கல் என்பது அத்தியாவசியம் இல்லை.குத்தகைக்காரர்களுக்கு செங்கல் சுவர் கட்டுவது பழகிக்போன ஒன்று அவ்வளவு தான். அதை விட செலவு குறைவாக பிடிக்கக்கூடிய வேலைகள் நிறைய இருந்தாலும் அவ்வளவாக பயண்பாட்டில் காண முடிவதில்லை. மிக மிக முக்கியமாக Violation என்று சொல்லப்படுகிற அரசாங்க விதிமுறை மீறல் நான் பார்த்த பல இடங்களிலும் அளவில் வித்தியாசத்துடன் இருந்தது.ஏதோ ஒரு சமயத்தில் அரசாங்கம் விழித்துக்கொண்டு அதையெல்லாம் இடிக்கனும் என்று புறப்பட்டால் நகரத்தில் உள்ள 90% கட்டிடங்களை இடிக்கவேண்டியிருக்கும்(சென்னையில் மட்டும்).
உதாரணம் 1:என் பெற்றோர் இருக்கும்(தெருவில்) நங்கநல்லூரில் அனைத்து வீடுகளும் G+1,ஆதாவது சாலையில் அகலம் வைத்து வீட்டின் உயரத்தை முடிவு செய்து அதையே அங்கிருக்கும் அனைவரும் கடைபிடித்து வீடு கட்டியுள்ளார்கள் ஆனால் ஒரு வீடு மாத்திரம் ஒரு மாடி அதிகம் ஏனென்றால் அது அந்த ஏரியா கவுன்சிலர் வீடு.இந்த வீடு தான் சமீபத்தில் கட்டிய வீடுகளில் ஒன்று.
உதாரணம் 2:விருகம்பாக்கத்தில் ஒரு வீடு அதுவும் Dead Endல் உள்ள வீடு,அவ்வீட்டை அனுகும் சாலையும் அகலத்தில் மிக குறைவு இருந்தாலும் அவர்கள் G+2 உயரத்துக்கு கட்டியுள்ளார்கள்.கேட்க ஆளில்லை போலும்!ஏதோ ஒரு விபத்து நேரிட்டால் பக்கத்தில் உள்ள பல வீட்டிக்காரர்களும் தங்கள் வீட்டை இழக்கவேண்டும்.இழப்பீடு இன்ஷூர் செய்திருந்தால் கிடைக்கலாம்,இல்லாவிட்டால் அதோ கதி தான்.
இப்பிரச்சனையை வேறு ஏதாவது தேர்தலுக்கு ஏதாவது ஒரு கட்சி Trump Card ஆக உபயோகித்துக்கொள்ளக்கூடும்.மக்களுக்கு இலவசமாக அனுமதி பத்திரமும் கொடுக்கப்படும்.
ஆமாம் இதென்ன அரசாங்க விதிமுறை மீறல்??
ஒரு வீடு என்பது எப்படி அமையவேண்டும் என்ற விதிமுறை.2400 சதுர அடியில் 65(இப்ப 70% என்று நினைக்கிறேன்) விழுக்காடு மட்டுமே கட்டிடம் அமையவேண்டும் போன்ற விதிமுறைகள் சர்வசாதரணமாக காற்றில் விடப்படுவது,இது கொஞ்சம் பெரிய சப்ஜெக்ட் இதில் பில்டர்ஸ் பண்ணும் கோல்மால்கள் ஒரு பெரிய நாவல் எழுதும் அளவுக்கு உள்ளது.நான் பார்த்த ஒரு வீட்டில் பக்கத்து பிளாட்டு சன்ஷேடுக்கு நடந்தே போகலாம் என்ற இடைவெளி மட்டுமே இருந்தது.இவ்வளவு குருகிய இடைவெளி இருந்தால் நாள் முழுவதும் அறையில் மின்வெளிச்சம் வேண்டியிருக்கும் அதோடு வெய்யில் காலங்களில் ஒவ்வொரு வீடும் வெளியிடும் வெப்பம் வெளியேற வழியில்லாமல் வீடே Oven மாதிரி இருக்கும்.பிறகு என்ன? குளிர்சாதன வசதி செய்துகொண்டு அதற்கு மின்சாரம் கிடைக்கவில்லை என்று புலம்பிக்கொண்டிருக்கவேண்டியது தான்.
சென்னை மாதிரி நகரங்களில் Town Planning Council என்று ஒன்று இருக்கிறது, இவர்களிடம் தான் இந்த இடங்களில் இந்த மாதிரியான கட்டிடங்கள் வரலாம் என்ற நியதியும் உள்ளது அதுபடி தான் அனுமதியும் வழங்குகிறார்கள்,ஆனால் அதை மேற்பார்வை செய்ய அல்லது கட்டுப்படுத்த ஏதாவது செய்கிறார்களா? என்பது சந்தேகமாகவே இருக்கிறது.
இதுவரை பார்த்தது முதல் படி தான்.வீடு இருக்கும் இடம் அவர்கள் சொல்லும் அளவு பிடித்திருந்தால் அவர்களிடம் முன் பணம் கொடுத்து அந்த நிலப்பகுதியின் பட்டா விபரங்களை வாங்கவேண்டும் அதை தேர்ந்த நோட்டரியிடமோ அல்லது வக்கீலீடமோ கொடுத்து ஆவணங்கள் சரியாக இருக்கிறதா? என்று பார்க்கவேண்டும்.இவ்வேளையை செய்ய 1500 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள்.இப்படி சொல்வதிலும் ஒருவொருக்கொருவர் வேறுபடுகிறார்கள்.இந்த இரண்டாவது படியையும் ஆண்டவன் மேல் பாரத்தை போட்டு மேலே போவோம்.
வீடு பிடிச்சிருக்கு,வில்லங்கம் இல்லாத நிலம் என்று சான்றிதழ் இருக்கு அடுத்து இங்கு கட்டிடம் கட்ட அனுமதி இருக்கா என்று பார்க்கனும்!! அதிலும் வேடிக்கை தான்.பிளானை கொடுக்கும் போதே அதில் இருக்கும் சீலெல்லாம் நம்மை ஓரளவுக்கு நம்பவைக்கும் திசையை நோக்கி இழுத்துப்போகும் ஆனால் அதனுள்ளும் பல்வேறு விஷயங்கள் இருக்கும்.இதனுள் இருக்கும் விஷயங்களை தெளிவாக எழுதனும் என்றால் இன்னும் அதனுள் போய் பார்த்தால் தான் தெரியும்.கொஞ்சம் கேள்வி கேட்கும் ஞானம் இருந்தாலே போதும் இதிலும் வில்லங்கம் இருக்கு என்று.
இந்த கடைசி படி தான் சூப்பரோ சூப்பர்,அது தான் உங்க வீட்டின் அளவு(சதுர அடியில்).இதில் எப்படியெல்லாம் விளையாடிகிறார்கள் என்று ஒரு நண்பர் விவரித்த போது அப்படியே அசந்து இனி நம்மால் முடியாது என்று கையை மேலே தூக்கிடவேண்டியது தான்.வீட்டின் அளவை அவர்கள் சொல்லிய அளவில் வாங்குபவர்களுக்கே முன்னுரிமை அதில் ஏதாவது கேள்வி கேட்டால் நீங்கள் காஞ்சிபுரம் அருகே தான் வீடு பார்க்கவேண்டும்.
ஒன்னே ஒன்னு மறந்திட்டேன்....உங்களிடம் எப்படிப்பட்ட Payment Schedule இருக்கு? அதற்கு தகுந்த மாதிரி வீடு கிடைக்கும்.அதென்ன Payment Schedule???
மார்க்கெட்டில் விஜாரியுங்கள். :-)
இவ்வளவு தொந்தரவுகளையும் ஓரளவு தவிர்க்கலாம் ECR/OMR பகுதியில் கட்டப்படும் அடுக்கு மாடிகளை தேர்வு செய்தால் ஆனால் வேலை இடத்துக்கு வந்து போக கொஞ்சம் நேரமாகும்.
Wednesday, May 05, 2010
உபயம்
மலிவு விலையில்...
வர வர கட்டிடங்கள் உயரமாகிக்கொண்டு போய் கொண்டிருக்கும் வேளையில் அதற்காக செய்யப்படும் வேலைகளிலும் அபாயங்கள் நிறைந்துவருகின்றன அதில் ஒன்று தான் இந்த சுற்றுச்சுவர் கண்ணாடி துடைக்கும் வேலை.சில வருடங்கள் வரை கண்டோலா என்று சொல்லப்படுகிற தொங்கும் மேடை மூலம் சுத்தம் செய்து வந்தார்கள்.இம்மேடை இரு சிறுமோட்டார்கள் மூலம் கூறையின் மேலிருக்கும் ஒரு அமைப்பின் மூலம் இரும்பு கம்பி மூலம் நகரும் தன்மையுடையது.இம்முறை ஓரளவுக்கே பாதுகாப்புடையது இதுவும் தன் கட்டுப்பாடை இழந்து பல மனித உயிர்களை பலிவாங்கியுள்ளது.மேலே சொன்ன முறையை மேம்படுத்தி ஒழித்து மோட்டார் இல்லாமல் இரு கயிறுகள் மூலமே சுத்தம்செய்யும் வேலையை கொண்டுவந்தார்கள்.இம்முறையில் மன தைரியம் உள்ளவர்கள் மட்டுமே வேலை செய்யமுடியும்.முதன் முறையாக இவ்வேலையை சிங்கையில் உள்ள ஒரு பெரிய கட்டிடத்தில் அறிமுகபடுத்தினார்கள்.இதன் பாதகங்கள் பற்றிய முழு விபரங்கள் எனக்கு தெரியவில்லை.
கிழே உள்ள படம் சிங்கை நூலக வெளிப்புற கண்ணாடி சுவரை சுத்தம் செய்யும் போது எடுத்தது.இரு கயிற்றில் ஒன்று பாதுகாப்புக்காக.

கிழே உள்ள படம் துபாயில் ஒரு கட்டிடத்தில் அதே வேலை பழைய முறையில் நடக்கிறது.சில பாதுகாப்பு குறைபாடுங்கள் உள்ளன்.தலைக்கவசம் அணியவில்லை.

கடைசியாக நேற்று சென்னையில் எடுத்தது.இன்ஷூரன்ஸ் கம்பெனி விளம்பரம் வேறு.இதில் உள்ள குறைபாடுகள்...
முதலில் கட்டிடம் இவ்வேலை செய்ய தகுந்த ஏற்பாடுகளை கொண்டிருக்கவில்லை,அப்படியே இருந்தாலும் ஏன் அதை உபயோகிக்கவில்லை? இந்த நூலேனி சமாச்சாரம் எல்லாம் சர்கஸ் மற்றும் கப்பலில் மட்டுமே மிஞ்சியுள்ளது.அந்த ஏணியில் உள்ளவர் பாதுகாப்பு பட்டை அணியவில்லை.தலைக்கவசமும் இல்லை.ஆக மொத்தத்தில் இங்கு மனித உயிர்கள் "மிக மலிவு விலையில்!!"

நாளுக்கு நாள் பாதுகாப்பு சமாச்சாரங்கள் நுட்பமான முறையில் உலக நாடுகளில் அறிமுகபடுத்திவரும் வேலையில் நாம்மட்டும் ஏன் இவ்வளவு வருடங்கள் எடுத்துக்கொள்கிறோம் என்பது புரியாத புதிராகவே இருக்கு.
கிழே உள்ள படம் சிங்கை நூலக வெளிப்புற கண்ணாடி சுவரை சுத்தம் செய்யும் போது எடுத்தது.இரு கயிற்றில் ஒன்று பாதுகாப்புக்காக.

கிழே உள்ள படம் துபாயில் ஒரு கட்டிடத்தில் அதே வேலை பழைய முறையில் நடக்கிறது.சில பாதுகாப்பு குறைபாடுங்கள் உள்ளன்.தலைக்கவசம் அணியவில்லை.

கடைசியாக நேற்று சென்னையில் எடுத்தது.இன்ஷூரன்ஸ் கம்பெனி விளம்பரம் வேறு.இதில் உள்ள குறைபாடுகள்...
முதலில் கட்டிடம் இவ்வேலை செய்ய தகுந்த ஏற்பாடுகளை கொண்டிருக்கவில்லை,அப்படியே இருந்தாலும் ஏன் அதை உபயோகிக்கவில்லை? இந்த நூலேனி சமாச்சாரம் எல்லாம் சர்கஸ் மற்றும் கப்பலில் மட்டுமே மிஞ்சியுள்ளது.அந்த ஏணியில் உள்ளவர் பாதுகாப்பு பட்டை அணியவில்லை.தலைக்கவசமும் இல்லை.ஆக மொத்தத்தில் இங்கு மனித உயிர்கள் "மிக மலிவு விலையில்!!"

நாளுக்கு நாள் பாதுகாப்பு சமாச்சாரங்கள் நுட்பமான முறையில் உலக நாடுகளில் அறிமுகபடுத்திவரும் வேலையில் நாம்மட்டும் ஏன் இவ்வளவு வருடங்கள் எடுத்துக்கொள்கிறோம் என்பது புரியாத புதிராகவே இருக்கு.
Sunday, May 02, 2010
திண்டுக்கல்லில் கொட்டிய மழை.
இரண்டு நாட்களுக்கு முன்பு திண்டுகல்லில் கொட்டிய மழையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக செய்தித்தாளில் பார்த்தேன்.அன்று சாயங்காலம் சென்னை கடற்கடற்கரையில் இருந்தேன்.வீட்டை விட்டுகிளம்பும் போதே மேற்கு பக்கம் மேக மூட்டம் மழைக்கான கட்டியம் கூறினாலும் அன்று சில தூரல்களுடன் முடிந்துவிட்டது.
சென்னை கடற்கரையில் இருந்து அலை பேசியில் எடுத்த படம் இது.
சென்னை கடற்கரையில் இருந்து அலை பேசியில் எடுத்த படம் இது.
400 கி.மீட்டர் பயணம்.
மே 1 & 2 விடுமுறை வருகிறது எங்காவது போகலாமா என்று மச்சினர் சில தினங்களுக்கு முன்பு கேட்டிருந்தாலும் முடிவெடுக்கமுடியாமால் அந்த சமயத்தில் மனதுக்கு தோன்றிய இடத்தை சொல்லி அதில் திருவண்ணாமலையை தேர்ந்தெடுத்தோம்.கூகிளில் அவ்விடத்துக்கு எப்படி போகனும்என்று தேடிய போது சென்னை---மதுராந்தகம்--திண்டிவனம்--திருவண்ணாமலை என்று போட்டிருந்தது,பயண தூரம் 182 கி.மீட்டர் என்றும் 3.86 மணி நேரம் ஆகும் என்று விபரங்கள் தெளிவாக இருந்தன.இன்னும் தெளிவாக தெரிந்துகொள்ள கூகிள் எர்த்தில் திண்டிவனம் மேம்பாலத்தில் இருந்து எப்படி போகனும் என்ற விபரங்களை வண்டி செலுத்தப்போகும் மச்சினருக்கு காண்பித்தேன்.
மதிய சாப்பாடுக்கு பிறகு சுமார் 12.45 க்கு கிளம்பி வடபழனியை விட்டு ஒருவழியாக நீந்தி தாம்பரம் வரவே 45 நிமிடங்களுக்கு மேலாக ஆகிவிட்டிருந்தது.இது இப்படி இருந்தாலும் சாலையில் நடைபெரும் சாகச நிகழ்சிகள் இந்த குறையை போக்கி சந்தோஷத்துடன் கூடிய அதிர்ச்சிகளையும் தந்தது.கீழே உள்ள படத்தில் பாருங்கள் ஆபீஸ் ரோலிங் சேர் பைக்கில் பயணிக்கிறது.

ஒரே Lane க்குள் இருவண்டிகள் பயணிக்கும் திறமையா அல்லது அனுசரனையா என்று தெரியாமல் ஒரு வழியாக திண்டிவனம் அடைந்தோம்.ஊருக்கு தகுந்த மாதிரி சாலைகள் என்ற நியதி போலும்,முக்கிய சாலைகள் தோண்டப்பட்டு வண்டிகளின் தரத்தை சோதனை செய்யும் களமாக இருக்கிறது.திண்டிவனத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இரு லேன் வழித்தடம் அதனால் வாகனங்களின் வேகம் மிகவும் மட்டுப்படுத்தப்படுகிறது.திருவண்ணாமலை அடைவதற்கு முன்பு செஞ்சி கோட்டையை கடக்கவேண்டும்.இருமலைகளை இணைக்கும் ஒரு சுவர் சீனப்பெருஞ்சுவர் போல் இருக்கு.சாலை வழித்தடத்துக்காக அதை உடைத்து வழி ஏற்படுத்தியிருக்கிறார்கள்.நடந்தே மேலே போகனும் என்பதாலும் வெய்யிலின் கடுமை காரணமாகவும் தூரத்தில் இருந்து படம் எடுப்பதோடு நிறுத்திக்கொண்டு பயணத்தை தொடர்ந்தோம்.


பல சுற்றுலா தளங்களை அடைய சரியான வழிகாட்டி இல்லாதது சாலைகளில் பயணிப்பவர்களுக்கு இடையூராக இருக்கிறது.அரசாங்க வருவாயை பெருக்க பல சுற்றுலா தளங்கள் இருந்தும் அதனை சரியாக பராமரிக்காமல் இருக்கிறமோ என்று தோனுகிறது.இந்த மாதிரி இடங்களில் தமிழோடு கூடிய ஆங்கில விபரங்கள் கட்டாயப்படுத்த வேண்டும்.இங்கு தமிழை மட்டும் உபயோகிப்பது அவ்வளவு நல்லதல்ல.
திருவண்ணாமலையிலும் பல விபர பலகைகள் சிரிதாகவோ அல்லது கண்ணில் படாத இடத்திலோ வைத்து புதியவர்களை திண்டாடவைக்கிறார்கள்.இங்கு என்னனென்ன பார்க்கவேண்டும் என்று பட்டியல் போடும் போது ஞாபகம் வந்த ஒரே வலைப்பதிவு நம் சுவாமி ஓம்காரருடையது தான்.தேவையான விபரங்களை எடுத்துக்கொண்டுஅதனை வைத்து சில இடங்களுக்கு போனோம்.அங்கு எடுத்த சில படங்கள்.... கீழே.


பிராதனகோபுரத்தின் வாயிலின் இருபுற சுவற்றில் உள்ள சிற்பங்கள்.


இந்த அம்மன் சன்னிதியில் ஒரு தூணில் வித்தியாசமான ஒரு சிற்பத்தை பார்த்தேன் ஆதாவது அந்தக்கால DD யில் வரும் சுழலும் பந்து போன்றது,இன்னும் இலகுவாக சொல்லனும் என்றால் கொரிய சின்னம் எப்படி இருக்குமோ அப்படியே இருந்தது- வண்ணம் இல்லாமல்.



கீழே உள்ள படம் நடைபாதையில் இருந்தது.பல பாஷைகளின் கலவை போல் இருக்கிறது.
கோவில் தரிசனம் முடித்த பிறகு ரமனாஸ்ரமம் போனோம்.வாசலிலேயே சில இஸ்லாமியர்களை கண்டது ஆச்சரியமாக இருந்தது.மிகப்பெரிய விளம்பர பலகையில் அங்குள்ள கட்டிட விபரங்களை கொடுத்துள்ளதால் பல கட்டிட விபரங்கள் வாசலில் எழுதப்படவில்லை.நிர்வாண அறைக்கும் குளியறறை மட்டும் விதிவிலக்கு.எங்கெங்கு காணினும் பலவித மயில்கள் அங்கும் இங்கும் போய்கொண்டிருந்தது.அசாதரண அமைதி ஒரு சில இடங்களில்.
திரும்ப வரும் போது திண்டிவனத்தில் இருந்து பஞ்சவடி போகலாம் என்று நினைத்து பாண்டிச்சேரி சாலையில் போனோம் பொன்னோம் போய்க்கொண்டே இருந்தோம்.இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்திக்கொண்டிருந்தார்கள்.அறிவிப்பு பலகை எதுவும் இல்லாத்தாலும் மணி 9 மணியாகிவிட்டதாலும் அப்படியே திரும்ப சென்னை வந்த போது இரவு மணி 11.15 ஆனது.
மதிய சாப்பாடுக்கு பிறகு சுமார் 12.45 க்கு கிளம்பி வடபழனியை விட்டு ஒருவழியாக நீந்தி தாம்பரம் வரவே 45 நிமிடங்களுக்கு மேலாக ஆகிவிட்டிருந்தது.இது இப்படி இருந்தாலும் சாலையில் நடைபெரும் சாகச நிகழ்சிகள் இந்த குறையை போக்கி சந்தோஷத்துடன் கூடிய அதிர்ச்சிகளையும் தந்தது.கீழே உள்ள படத்தில் பாருங்கள் ஆபீஸ் ரோலிங் சேர் பைக்கில் பயணிக்கிறது.

ஒரே Lane க்குள் இருவண்டிகள் பயணிக்கும் திறமையா அல்லது அனுசரனையா என்று தெரியாமல் ஒரு வழியாக திண்டிவனம் அடைந்தோம்.ஊருக்கு தகுந்த மாதிரி சாலைகள் என்ற நியதி போலும்,முக்கிய சாலைகள் தோண்டப்பட்டு வண்டிகளின் தரத்தை சோதனை செய்யும் களமாக இருக்கிறது.திண்டிவனத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இரு லேன் வழித்தடம் அதனால் வாகனங்களின் வேகம் மிகவும் மட்டுப்படுத்தப்படுகிறது.திருவண்ணாமலை அடைவதற்கு முன்பு செஞ்சி கோட்டையை கடக்கவேண்டும்.இருமலைகளை இணைக்கும் ஒரு சுவர் சீனப்பெருஞ்சுவர் போல் இருக்கு.சாலை வழித்தடத்துக்காக அதை உடைத்து வழி ஏற்படுத்தியிருக்கிறார்கள்.நடந்தே மேலே போகனும் என்பதாலும் வெய்யிலின் கடுமை காரணமாகவும் தூரத்தில் இருந்து படம் எடுப்பதோடு நிறுத்திக்கொண்டு பயணத்தை தொடர்ந்தோம்.


பல சுற்றுலா தளங்களை அடைய சரியான வழிகாட்டி இல்லாதது சாலைகளில் பயணிப்பவர்களுக்கு இடையூராக இருக்கிறது.அரசாங்க வருவாயை பெருக்க பல சுற்றுலா தளங்கள் இருந்தும் அதனை சரியாக பராமரிக்காமல் இருக்கிறமோ என்று தோனுகிறது.இந்த மாதிரி இடங்களில் தமிழோடு கூடிய ஆங்கில விபரங்கள் கட்டாயப்படுத்த வேண்டும்.இங்கு தமிழை மட்டும் உபயோகிப்பது அவ்வளவு நல்லதல்ல.
திருவண்ணாமலையிலும் பல விபர பலகைகள் சிரிதாகவோ அல்லது கண்ணில் படாத இடத்திலோ வைத்து புதியவர்களை திண்டாடவைக்கிறார்கள்.இங்கு என்னனென்ன பார்க்கவேண்டும் என்று பட்டியல் போடும் போது ஞாபகம் வந்த ஒரே வலைப்பதிவு நம் சுவாமி ஓம்காரருடையது தான்.தேவையான விபரங்களை எடுத்துக்கொண்டுஅதனை வைத்து சில இடங்களுக்கு போனோம்.அங்கு எடுத்த சில படங்கள்.... கீழே.


பிராதனகோபுரத்தின் வாயிலின் இருபுற சுவற்றில் உள்ள சிற்பங்கள்.


இந்த அம்மன் சன்னிதியில் ஒரு தூணில் வித்தியாசமான ஒரு சிற்பத்தை பார்த்தேன் ஆதாவது அந்தக்கால DD யில் வரும் சுழலும் பந்து போன்றது,இன்னும் இலகுவாக சொல்லனும் என்றால் கொரிய சின்னம் எப்படி இருக்குமோ அப்படியே இருந்தது- வண்ணம் இல்லாமல்.



கீழே உள்ள படம் நடைபாதையில் இருந்தது.பல பாஷைகளின் கலவை போல் இருக்கிறது.
கோவில் தரிசனம் முடித்த பிறகு ரமனாஸ்ரமம் போனோம்.வாசலிலேயே சில இஸ்லாமியர்களை கண்டது ஆச்சரியமாக இருந்தது.மிகப்பெரிய விளம்பர பலகையில் அங்குள்ள கட்டிட விபரங்களை கொடுத்துள்ளதால் பல கட்டிட விபரங்கள் வாசலில் எழுதப்படவில்லை.நிர்வாண அறைக்கும் குளியறறை மட்டும் விதிவிலக்கு.எங்கெங்கு காணினும் பலவித மயில்கள் அங்கும் இங்கும் போய்கொண்டிருந்தது.அசாதரண அமைதி ஒரு சில இடங்களில்.
திரும்ப வரும் போது திண்டிவனத்தில் இருந்து பஞ்சவடி போகலாம் என்று நினைத்து பாண்டிச்சேரி சாலையில் போனோம் பொன்னோம் போய்க்கொண்டே இருந்தோம்.இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்திக்கொண்டிருந்தார்கள்.அறிவிப்பு பலகை எதுவும் இல்லாத்தாலும் மணி 9 மணியாகிவிட்டதாலும் அப்படியே திரும்ப சென்னை வந்த போது இரவு மணி 11.15 ஆனது.
Thursday, April 29, 2010
வாழ்கிறது.
இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியாவில் பல தொடக்க நிலை பள்ளிகளில் படிக்கும்(5ம் வகுப்பு) மாணவர்களுக்கு 2வது பாட தமிழ் படிக்க தெரியவில்லை என்ற செய்தி போட்டிருந்தார்கள்,இதற்கான ஆதார காரணம் ஒரு பக்கம் போதிக்கும் ஆசிரியர்களை நோக்கி விரல் நீட்டினாலும் பெற்றோர்களில் பங்கு இதில் இல்லாமல் இல்லை.நிலமை இப்படியே போனால் தமிழை கீழே உள்ள சுவற்றில் உள்ள மாதிரி தான் காணநேரிடுமோ என்று தோனுகிறது.
இப்படம் நேற்று ஒரு வீட்டு விஷேத்துக்கு போன போது சுமார் 1.2 மீட்டர் உயரத்தில் சுவரில் யாரோ எழுதி பார்த்திருக்கிறார்கள்.
இப்படம் நேற்று ஒரு வீட்டு விஷேத்துக்கு போன போது சுமார் 1.2 மீட்டர் உயரத்தில் சுவரில் யாரோ எழுதி பார்த்திருக்கிறார்கள்.
Thursday, March 25, 2010
கம்பியின் நிலை.
கட்டுமானத்துறையில் கம்பியின் பங்கு என்பது இன்றியமையாதது.பல கட்டுமானங்கள் நிமிர்ந்து பல காலம் நிட்கவும் அதே சமயத்தில் முறையாக உபயோகப்படுத்தாததால் சரிந்து விழுவதும் அடிக்கடி நிகழ்கின்ற நிகழ்வுகள்.அதென்ன கம்பியை சரியாக பயண்படுத்தாத முறை??
நிறையவே இருக்கு,இடம் சூழல் இவற்றை கணக்கில் எடுத்துக்கொன்டு கான்கிரீட்டில் உள்ளிருக்கும் கம்பி வெளிப்புறத்தில் இருந்து எவ்வளவு தூரம் இருக்கனும் என்பதை பொறியாளர்களும் தரநிர்ணய கழகமும் சொலியிருக்கிறார்கள்.உதாரணத்துக்கு தஞ்சாவூரில் ஒரு கட்டிடம் என்றால் அதன் பீமின்(Beam) உள்ளே போடப்படும் கம்பி வெளியில் இருந்து 40mm இருக்கனும் அதுவே நாகப்பட்டினத்தில் கட்டப்படும் பீமில் 50 mm இருக்கனும்.உப்புக்காற்றின் தாக்கத்தை முன்னிட்டு இதை முடிவு செய்துள்ளார்கள்.முடிவு செய்வது எல்லாம் சுலபம் தான் ஆனால் பீம் கம்பி கட்டி கான்கிரீட் போடும் போது அது சரியான நிலையில் இருக்கிறதா என்பதை மேற்பார்வை செய்பவர்கள் கையில் தான் உள்ளது.என்ன தான் மேற்பார்வையாளர் பக்கத்தில் இருந்து கான்கிரீட் போட்டாலும் வேலை செய்பவர்களும் மற்றும் வேறு சில காரணங்களாலும் கம்பி அது உள்ள நிலையில் இருந்து விலக வழியிருக்கு.இந்த மாதிரி வழிகளை பல முறையில் அடைக்கலாம் என்றாலும் அது முழு பயணை பெரும்பாலான சமயங்களில் கொடுப்பதில்லை.
கீழே உள்ள படங்களை பாருங்கள்.
30 ஆண்டு பழமையான ஒரு கட்டிடத்தின் பகுதிகள் முக்கியமாக கூறையின் கீழ் பகுதி.
இங்கு என்ன நடந்துள்ளது? ஆதாவது கான்கிரீட்டின் அடிப்பகுதிக்கும் கம்பிக்கும் தேவையான தூரத்தை விடவில்லை.இதை ஒழுங்குபடுத்த கான்கிரீட் போடும் போது கம்பியின் கீழ் Cover Block என்று சொல்லப்படுகிற சிறிய கான்கிரீட் துண்டைவைத்து அதை கம்பியுடன் கட்டிவிடுவார்கள்,அதனால் கம்பி தன் நிலையில் இருக்கும்.இப்படி சொல்வது எளிதென்றாலும் கான்கிரீட் போடும் இடம் ஒரு போர்களம் அங்கு இதெயெல்லாம் தெளிவாக பார்த்துக்கொண்டிருக்க முடியாது.ஒன்றிருந்தால் போதும் என்ற இடத்தில் 3 வைப்பார்கள்.மேலே உள்ள படத்தில் இந்த மாதிரி Block இல்லாததால் கம்பி கீழே உள்ள சாரத்துடன் ஒட்டிக்கொண்டுவிட்டது,நாள் ஆக ஆக வெளிப்புற காற்றில் உள்ள ஈரப்பதம் கான்கிரீட் உள்ளோ போனதால் கம்பியும் ஆக்ஜிஜனும் சேர்ந்து வேதியல் மாற்றம் அடைய கம்பி துறு பிடித்து அதன் அளவில் விரிவடைய ஆரம்பித்திருக்கு அதன் மூலம் கீழிருக்கும் மெலிதான கான்கிரீட்டை தள்ள ஆரம்பித்திருக்கு.வலுவிழிந்திருக்கும் கான்கிரீட் கீழே விழுந்துவிட்டது.
சரி,இப்போது என்ன பண்ணுவது?30 வருடங்களுக்கு முன்பு போய் யாரையெல்லாம் காரணகர்தாவாக முடியும்? அதற்கு ஆகும் செலவுக்கு தேவையான மராமத்து வேலைகளை பார்த்து குடிபுகும் வழியை பார்பது தான் உசிதம்.மராமத்து பார்த்தால் சரியாகிவிடுமா?
இந்த கேள்விக்கு சரியான Test மூலமும் தேர்ந்த பொறியாளருமே விடை கொடுக்கமுடியும்.என்னென்ன சோதனை செய்வார்கள் அதை எப்படி ஒரு பொறியாளர் அனுகுவார் என்பன எனக்கு அவ்வளவாக தெரியாது அதனால் எப்படி இதை ரிப்பேர் செய்தார்கள் என்பதை மட்டும் இப்போது பார்ப்போம்.
முதலில் இக்கம்பிகளை சுத்தப்படுத்துவார்கள் அதன் பிறகு ஒருவித ரசாயன கலவையை கொண்டு அதன் மீது பூசுவார்கள்.இது ஒரு வகை பெயிண்ட்.அதன் பிறகு அது காயும் வரை காத்திருந்து அதன் மீது கீழ்கண்ட படத்தில் உள்ள சிமிண்ட் கலவையை பூசுவார்கள்.இதன் மூலம் ஒன்று துறுபிடிப்பதை தவிர்த்தல் அடுத்து அக்கம்பிகள் வெளிக்காற்றுடன் உள்ள தொடர்பை கட்டுப்படுத்துதல் என்ற இருவித பணிகளை செய்கிறது.
நிறையவே இருக்கு,இடம் சூழல் இவற்றை கணக்கில் எடுத்துக்கொன்டு கான்கிரீட்டில் உள்ளிருக்கும் கம்பி வெளிப்புறத்தில் இருந்து எவ்வளவு தூரம் இருக்கனும் என்பதை பொறியாளர்களும் தரநிர்ணய கழகமும் சொலியிருக்கிறார்கள்.உதாரணத்துக்கு தஞ்சாவூரில் ஒரு கட்டிடம் என்றால் அதன் பீமின்(Beam) உள்ளே போடப்படும் கம்பி வெளியில் இருந்து 40mm இருக்கனும் அதுவே நாகப்பட்டினத்தில் கட்டப்படும் பீமில் 50 mm இருக்கனும்.உப்புக்காற்றின் தாக்கத்தை முன்னிட்டு இதை முடிவு செய்துள்ளார்கள்.முடிவு செய்வது எல்லாம் சுலபம் தான் ஆனால் பீம் கம்பி கட்டி கான்கிரீட் போடும் போது அது சரியான நிலையில் இருக்கிறதா என்பதை மேற்பார்வை செய்பவர்கள் கையில் தான் உள்ளது.என்ன தான் மேற்பார்வையாளர் பக்கத்தில் இருந்து கான்கிரீட் போட்டாலும் வேலை செய்பவர்களும் மற்றும் வேறு சில காரணங்களாலும் கம்பி அது உள்ள நிலையில் இருந்து விலக வழியிருக்கு.இந்த மாதிரி வழிகளை பல முறையில் அடைக்கலாம் என்றாலும் அது முழு பயணை பெரும்பாலான சமயங்களில் கொடுப்பதில்லை.
கீழே உள்ள படங்களை பாருங்கள்.
30 ஆண்டு பழமையான ஒரு கட்டிடத்தின் பகுதிகள் முக்கியமாக கூறையின் கீழ் பகுதி.
இங்கு என்ன நடந்துள்ளது? ஆதாவது கான்கிரீட்டின் அடிப்பகுதிக்கும் கம்பிக்கும் தேவையான தூரத்தை விடவில்லை.இதை ஒழுங்குபடுத்த கான்கிரீட் போடும் போது கம்பியின் கீழ் Cover Block என்று சொல்லப்படுகிற சிறிய கான்கிரீட் துண்டைவைத்து அதை கம்பியுடன் கட்டிவிடுவார்கள்,அதனால் கம்பி தன் நிலையில் இருக்கும்.இப்படி சொல்வது எளிதென்றாலும் கான்கிரீட் போடும் இடம் ஒரு போர்களம் அங்கு இதெயெல்லாம் தெளிவாக பார்த்துக்கொண்டிருக்க முடியாது.ஒன்றிருந்தால் போதும் என்ற இடத்தில் 3 வைப்பார்கள்.மேலே உள்ள படத்தில் இந்த மாதிரி Block இல்லாததால் கம்பி கீழே உள்ள சாரத்துடன் ஒட்டிக்கொண்டுவிட்டது,நாள் ஆக ஆக வெளிப்புற காற்றில் உள்ள ஈரப்பதம் கான்கிரீட் உள்ளோ போனதால் கம்பியும் ஆக்ஜிஜனும் சேர்ந்து வேதியல் மாற்றம் அடைய கம்பி துறு பிடித்து அதன் அளவில் விரிவடைய ஆரம்பித்திருக்கு அதன் மூலம் கீழிருக்கும் மெலிதான கான்கிரீட்டை தள்ள ஆரம்பித்திருக்கு.வலுவிழிந்திருக்கும் கான்கிரீட் கீழே விழுந்துவிட்டது.
சரி,இப்போது என்ன பண்ணுவது?30 வருடங்களுக்கு முன்பு போய் யாரையெல்லாம் காரணகர்தாவாக முடியும்? அதற்கு ஆகும் செலவுக்கு தேவையான மராமத்து வேலைகளை பார்த்து குடிபுகும் வழியை பார்பது தான் உசிதம்.மராமத்து பார்த்தால் சரியாகிவிடுமா?
இந்த கேள்விக்கு சரியான Test மூலமும் தேர்ந்த பொறியாளருமே விடை கொடுக்கமுடியும்.என்னென்ன சோதனை செய்வார்கள் அதை எப்படி ஒரு பொறியாளர் அனுகுவார் என்பன எனக்கு அவ்வளவாக தெரியாது அதனால் எப்படி இதை ரிப்பேர் செய்தார்கள் என்பதை மட்டும் இப்போது பார்ப்போம்.
முதலில் இக்கம்பிகளை சுத்தப்படுத்துவார்கள் அதன் பிறகு ஒருவித ரசாயன கலவையை கொண்டு அதன் மீது பூசுவார்கள்.இது ஒரு வகை பெயிண்ட்.அதன் பிறகு அது காயும் வரை காத்திருந்து அதன் மீது கீழ்கண்ட படத்தில் உள்ள சிமிண்ட் கலவையை பூசுவார்கள்.இதன் மூலம் ஒன்று துறுபிடிப்பதை தவிர்த்தல் அடுத்து அக்கம்பிகள் வெளிக்காற்றுடன் உள்ள தொடர்பை கட்டுப்படுத்துதல் என்ற இருவித பணிகளை செய்கிறது.
Thursday, December 31, 2009
சிமிண்ட் தேவையில்லை
மஸ்கட்டில் சிறு சிறு குன்றுகளை சமப்படுத்தி அதன் மேல் வீடுகள் கட்டாமல் குன்றின் மேலேயே கட்டி,வீட்டுக்குப்போக சாலையை அதன் போக்கிலே போட்டுவிடுகிறார்கள்.நடப்பதெல்லாம் வீட்டோடு சரி, வெளியில் வந்தால் மகிழுந்து தான் அதனால் அதற்கு ஏற்றாற் போல் சாலையை போட்டுவிட்டால் போதும் வீடு எந்த உயரத்தில் இருந்தாலும் கவலையில்லை.
மேடு பள்ளம் என்று மாறி மாறி இருக்கும் இடத்தில் சாலைகள் வரும் போது சரிவு எந்த பக்கம் அதிகமாக இருக்கும் இடத்தில் கான்கிரீட் சுவர் எழுப்புவது என்பது நடைமுறை.தொழிற்நுட்பம் மேம்பாடு கண்டுகொண்டிருக்கும் நிலையில் அதையும் மாற்றி அமைத்துள்ளார்கள்,இந்த முறையில் சுவருக்கு கட்டுவதற்கு மட்டும் சிமிண்ட் தேவையில்லை.கீழே உள்ள படத்தை பாருங்கள் இது அத்தனையும் முன்னமே வடிவமைத்து செய்யப்பட்ட Precast Blocks.இந்த பிலாக்குகள் ஒன்றுடன் ஒன்று இணைந்துகொள்ளும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த இரு பிலாக்குகளுக்கு இடையே வரும் பகுதியை ஒரு சிறிய சிலாப் மூலம் அடைத்துவிடுகிறார்கள்.அவ்வளவு தான்.வேலையிடத்தில் சிமிண்ட்டுக்கு அவசியமே இல்லை.இதைப் பற்றி ஏற்கனவே ஒரு பதிவு இங்கே போட்டிருந்தேன்.பக்கத்தில் இருக்கும் Qurm பூங்காவிலும் இத்தொழிற்நுட்பத்தை புகுத்தியுள்ளார்கள்.

இப்படியெல்லாம் இருந்தாலும் நான் தங்கியிருக்கும் இடத்துக்கு பக்கத்தில் ஒரு வீடு கொஞ்சம் சாலையை விட ஒரு 3 மீட்டர் உயரத்தில் இருந்தது.சாலையை விட 10’ உள்ளடங்கியும் இருந்தது.வீட்டின் அஸ்திவாரத்துக்கும் சாலைக்கும் இடைப்பட்ட பகுதி வாட்டமாக மண் சரிந்து இருந்தது.
முதல் நாள் ஒரு மண் தோண்டி வந்தது மறு நாள் அந்த வாட்டமான பகுதி மழித்து எடுக்கப்பட்டது.இப்போது வீடு அதன் அஸ்திவார ஒரு பகுதி வெளியில் தெரிய ஆரம்பித்தது.இந்நிலையில் மழை பெய்தால் அந்த வீடு ஒருவழியாக சரிய ஏதுவாகியிருக்கும் ஆனால் இந்த ஊரில் தான் அவ்வளவாக மழை கிடையாதே அதனால் தான் இப்படி தைரியமாக செய்கிறார்கள் என்று நினைத்திருந்தேன்.அவர்கள் நேரம், 3 ம் நாள் “ப” வடிவத்தில் சுவர் எழுப்பினார்கள் அதுவும் Hollow Blockயில்.இந்த Hollow Blocks இவ்வகை அழுத்தத்தை தாங்கக்கூடியது அல்ல.முதலில் இந்த பகுதியை என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியாமல் இருந்தது,சுவர் எழுப்பியவுடன் புரிந்தது இவர்கள் சாலை மட்டத்தில் ஒரு மகிழுந்து நிருத்தும் இடம் செய்கிறார்கள் என்று.
3ம் நாள் சுவர் வேலை செய்யும் போதே என் நண்பனிடம் சுட்டினேன் இவ்விடத்தை பார்த்துக்கொள் என்றேன்.நீட்டு வாக்கில் உள்ள சுவர் சுமார் 7 மீட்டர் இருக்கும் அந்த சுவர் தான் பக்கத்தில் உள்ள வீட்டின் ஒரு பகுதி மண்ணை தாங்க வேண்டும்.யார் பொறியாளரோ தெரியவில்லை.3 மீட்டர் உயரத்தில் 1 மீட்டர் எழுப்பியாகிவிட்டது அடுத்த வேலை ஆரம்பிக்கும் முன்பு 3 நாட்கள் விட்டு விட்டு மழை.Flash Flood மூலம் ஓமனில் ஆறு பேர் சாவு.
மழை நின்றவுடன் வேலை ஆரம்பமானது.மீதி உயரத்தை கட்டி முடித்தார்கள்,வண்டி நிற்கும் இடத்துக்கு கீழே கற்கள் பதித்தார்கள்.காசு இருக்கே என்ன பண்ணலாம் என்று நினைத்து சுவருக்கும் சேர்த்து Tile பதித்தார்கள்.
அடுத்து இப்போது சுவருக்கும் வீட்டுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை நிரப்ப பக்கத்தில் வெட்டிப்போட்ட மண்ணை உபயோகித்தார்கள்.வேலை முடிந்தது!!!
அங்கு மண் போட போட சுவர் உள் பக்கம் வில் மாதிரி வளைய ஆரம்பித்தது.Hollow Block என்பது 3 மீட்டர் உயர மண்ணை தாங்கும் திறன் கிடையாது என்பதை இவ்வளவு வேலை செய்து தெரிந்துகொண்டார்கள்.எல்லாவற்ரையும் இடித்துவிட்டு இப்போது அந்த பகுதி தட்டி போட்டு மறைத்து வைத்துள்ளார்கள்.இடிப்பதற்கு முதல் நாள் இரவு அந்த பக்கம் போய் நின்று பார்த்த போது அந்த “வில்” தெரிந்தது,சரி வீட்டுக்காரரிடம் சொல்லுவோம் என்று கதவை திறக்கப்போனால் அது பூட்டியிருந்தது.வீட்டில் ஆட்கள் இருப்பதற்கான அறிகுறியும் இல்லை.மறு நாள் எப்படியே தெரிந்து அந்த சுவரை இடித்துவிட்டார்கள்.இப்ப வீட்டின் கதி என்னவென்று தெரியவில்லை.
மேடு பள்ளம் என்று மாறி மாறி இருக்கும் இடத்தில் சாலைகள் வரும் போது சரிவு எந்த பக்கம் அதிகமாக இருக்கும் இடத்தில் கான்கிரீட் சுவர் எழுப்புவது என்பது நடைமுறை.தொழிற்நுட்பம் மேம்பாடு கண்டுகொண்டிருக்கும் நிலையில் அதையும் மாற்றி அமைத்துள்ளார்கள்,இந்த முறையில் சுவருக்கு கட்டுவதற்கு மட்டும் சிமிண்ட் தேவையில்லை.கீழே உள்ள படத்தை பாருங்கள் இது அத்தனையும் முன்னமே வடிவமைத்து செய்யப்பட்ட Precast Blocks.இந்த பிலாக்குகள் ஒன்றுடன் ஒன்று இணைந்துகொள்ளும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த இரு பிலாக்குகளுக்கு இடையே வரும் பகுதியை ஒரு சிறிய சிலாப் மூலம் அடைத்துவிடுகிறார்கள்.அவ்வளவு தான்.வேலையிடத்தில் சிமிண்ட்டுக்கு அவசியமே இல்லை.இதைப் பற்றி ஏற்கனவே ஒரு பதிவு இங்கே போட்டிருந்தேன்.பக்கத்தில் இருக்கும் Qurm பூங்காவிலும் இத்தொழிற்நுட்பத்தை புகுத்தியுள்ளார்கள்.
இப்படியெல்லாம் இருந்தாலும் நான் தங்கியிருக்கும் இடத்துக்கு பக்கத்தில் ஒரு வீடு கொஞ்சம் சாலையை விட ஒரு 3 மீட்டர் உயரத்தில் இருந்தது.சாலையை விட 10’ உள்ளடங்கியும் இருந்தது.வீட்டின் அஸ்திவாரத்துக்கும் சாலைக்கும் இடைப்பட்ட பகுதி வாட்டமாக மண் சரிந்து இருந்தது.
முதல் நாள் ஒரு மண் தோண்டி வந்தது மறு நாள் அந்த வாட்டமான பகுதி மழித்து எடுக்கப்பட்டது.இப்போது வீடு அதன் அஸ்திவார ஒரு பகுதி வெளியில் தெரிய ஆரம்பித்தது.இந்நிலையில் மழை பெய்தால் அந்த வீடு ஒருவழியாக சரிய ஏதுவாகியிருக்கும் ஆனால் இந்த ஊரில் தான் அவ்வளவாக மழை கிடையாதே அதனால் தான் இப்படி தைரியமாக செய்கிறார்கள் என்று நினைத்திருந்தேன்.அவர்கள் நேரம், 3 ம் நாள் “ப” வடிவத்தில் சுவர் எழுப்பினார்கள் அதுவும் Hollow Blockயில்.இந்த Hollow Blocks இவ்வகை அழுத்தத்தை தாங்கக்கூடியது அல்ல.முதலில் இந்த பகுதியை என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியாமல் இருந்தது,சுவர் எழுப்பியவுடன் புரிந்தது இவர்கள் சாலை மட்டத்தில் ஒரு மகிழுந்து நிருத்தும் இடம் செய்கிறார்கள் என்று.
3ம் நாள் சுவர் வேலை செய்யும் போதே என் நண்பனிடம் சுட்டினேன் இவ்விடத்தை பார்த்துக்கொள் என்றேன்.நீட்டு வாக்கில் உள்ள சுவர் சுமார் 7 மீட்டர் இருக்கும் அந்த சுவர் தான் பக்கத்தில் உள்ள வீட்டின் ஒரு பகுதி மண்ணை தாங்க வேண்டும்.யார் பொறியாளரோ தெரியவில்லை.3 மீட்டர் உயரத்தில் 1 மீட்டர் எழுப்பியாகிவிட்டது அடுத்த வேலை ஆரம்பிக்கும் முன்பு 3 நாட்கள் விட்டு விட்டு மழை.Flash Flood மூலம் ஓமனில் ஆறு பேர் சாவு.
மழை நின்றவுடன் வேலை ஆரம்பமானது.மீதி உயரத்தை கட்டி முடித்தார்கள்,வண்டி நிற்கும் இடத்துக்கு கீழே கற்கள் பதித்தார்கள்.காசு இருக்கே என்ன பண்ணலாம் என்று நினைத்து சுவருக்கும் சேர்த்து Tile பதித்தார்கள்.
அடுத்து இப்போது சுவருக்கும் வீட்டுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை நிரப்ப பக்கத்தில் வெட்டிப்போட்ட மண்ணை உபயோகித்தார்கள்.வேலை முடிந்தது!!!
அங்கு மண் போட போட சுவர் உள் பக்கம் வில் மாதிரி வளைய ஆரம்பித்தது.Hollow Block என்பது 3 மீட்டர் உயர மண்ணை தாங்கும் திறன் கிடையாது என்பதை இவ்வளவு வேலை செய்து தெரிந்துகொண்டார்கள்.எல்லாவற்ரையும் இடித்துவிட்டு இப்போது அந்த பகுதி தட்டி போட்டு மறைத்து வைத்துள்ளார்கள்.இடிப்பதற்கு முதல் நாள் இரவு அந்த பக்கம் போய் நின்று பார்த்த போது அந்த “வில்” தெரிந்தது,சரி வீட்டுக்காரரிடம் சொல்லுவோம் என்று கதவை திறக்கப்போனால் அது பூட்டியிருந்தது.வீட்டில் ஆட்கள் இருப்பதற்கான அறிகுறியும் இல்லை.மறு நாள் எப்படியே தெரிந்து அந்த சுவரை இடித்துவிட்டார்கள்.இப்ப வீட்டின் கதி என்னவென்று தெரியவில்லை.
Saturday, December 19, 2009
யோசிக்க வைத்திருக்கார்.
உலகமயமாக்கல்.
அமெரிக்க டாலர் பரிவர்தனை.
அரபுகளில் கையிருப்பு.(சிட்டி பேங்கை முழுங்குதல்)
எண்ணை பரிவர்தனை.
இந்திய பொருளாதாரம்.
அமெரிக்க வீட்டுக்கடன் பிரச்சனை.
இந்திய திட்டமிடல் கமிஷன்.
இந்திய மங்கையரின் சேமிக்கும் பண்பு...இதைப்பற்றி ஒன்றிரண்டு தெரியவில்லை என்றால் பொருமையாக கீழுள்ள நகர் படத்தை பார்க்கவும்.
56 நிமிட நகர் படம் திரு வெங்கடேஷ் அருமையாக சொல்லியுள்ளார்,நேரமானாலும் பார்த்துவிட்டு தான் படுக்கனும் என்று இருந்தேன்,இப்போது தான் முடிந்தது.
நன்றி:Vision India Trust.
இதை பார்க்கும் போது நம் பழைய பதிவர் திரு சிவஞானம் ஜி தான் ஞாபகத்துக்கு வந்தார்.இதை தருமி அவர்கள் பார்த்தாலும் சந்தோஷப்படுவார் என்று நினைக்கிறேன்.
அகலகட்டை இணைய இணைப்பு இல்லை என்றால் உங்களால் சரியாக பார்க்க முடியாது.
அமெரிக்க டாலர் பரிவர்தனை.
அரபுகளில் கையிருப்பு.(சிட்டி பேங்கை முழுங்குதல்)
எண்ணை பரிவர்தனை.
இந்திய பொருளாதாரம்.
அமெரிக்க வீட்டுக்கடன் பிரச்சனை.
இந்திய திட்டமிடல் கமிஷன்.
இந்திய மங்கையரின் சேமிக்கும் பண்பு...இதைப்பற்றி ஒன்றிரண்டு தெரியவில்லை என்றால் பொருமையாக கீழுள்ள நகர் படத்தை பார்க்கவும்.
56 நிமிட நகர் படம் திரு வெங்கடேஷ் அருமையாக சொல்லியுள்ளார்,நேரமானாலும் பார்த்துவிட்டு தான் படுக்கனும் என்று இருந்தேன்,இப்போது தான் முடிந்தது.
நன்றி:Vision India Trust.
இதை பார்க்கும் போது நம் பழைய பதிவர் திரு சிவஞானம் ஜி தான் ஞாபகத்துக்கு வந்தார்.இதை தருமி அவர்கள் பார்த்தாலும் சந்தோஷப்படுவார் என்று நினைக்கிறேன்.
அகலகட்டை இணைய இணைப்பு இல்லை என்றால் உங்களால் சரியாக பார்க்க முடியாது.
Subscribe to:
Comments (Atom)


