Thursday, January 31, 2013

இப்படியெல்லாம்.....ஹூம்!

யாகூ குழுமத்தில் ஒரு கேள்வி



 In my project , a 10 m Pier was constructed till Pier Cap properly. For Launching the girder(Pre-cast Girder) using  crane, they made a ramp by backfilling between the piers.After Backfilling the pier was tilted of an about 0.4m.Can anybody tell me the best solution for dis case.

இப்படியெல்லாம் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்தாலும் மேஸ்திரி கொண்டு வீடு கட்டும் நம் நாட்டில் இது சாத்தியமே.

Pier Design என்பது மேலிருந்து வரும் Load மற்றும் ஓரளவு பக்கவாட்டு அதிர்வை தாங்கக்கூடிய முறையில் வடிவமைத்திருப்பார்கள் ஆனால் மண் போட்டு அதை முட்டுக்காக உபயோகப்படுத்தியிருந்தால் அது அதை தாங்காது. மண் மேடு என்பது ஏதோ ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரத்தில் முடியக்கூடிய வேலையில்லை அப்படியென்றால் அந்த வேலை நடக்கிறது என்பதை யாரும் பார்க்கவில்லையா என்ற கேள்வியும் எழுகிறது. 

Wednesday, January 30, 2013

தோட்டக்கலை வாரியம்

ஒன்னும் பெரிசா வேலை இல்லை என்னும் போது வீட்டு மாடியில் என்னென்ன பயிரிடலாம் அல்லது எப்படி மேம்படுத்தலாம் என்று இணையத்தில் மேய்ந்துகொண்டிருப்பேன் அல்லது பொதிகை மற்றும் மக்கள் தொலைக்காட்சி பார்பேன். ஒரு நாள் மக்கள் தொலைக்காட்சியில் ஒருவர் அவர் வீட்டு மாடியில் பயிர் வளர்ததையும் அதற்கு தேவையான விதைகளை அண்ணா நகரில் உள்ள தோட்டக்கலை வாரியத்தில் வாங்கியதாக சொன்னார்.அட! அண்ணா நகர் என்றால் பக்கத்தில் தானே என்று இணையத்தில் முகவரி எடுத்துக்கொண்டு கூகிள் எர்த் மூலம் இருப்பிடத்தையும் மனதில் வைத்துக்கொண்டு கிளம்பினேன். இணையத்தில் உள்ள முகவரிபடி சென்றால் அது வேறெங்கோ போனது பிறகு குறிப்பெடுத்து போன தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு அவ்விடத்தை அடைந்தேன்.

நான் போன போது அங்கு சுமார் 30 பேர் ஒரு அறையில் இருந்தார்கள்  அவர்களுக்கு ஒருவர் மண்வளம் மற்றும் பயிரிடும் முறை பற்றி சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தார்.விஜாரித்த போது இதே மாதிரி பல நிகழ்வுகளை  அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள் என்று தெரிந்தது.விபரங்கள் அவர்கள் இணைய பக்கத்தில் உள்ளது.தொலைப்பேசி மூலமும் விபரங்கள் பெற்றுக்கொள்ளலாம்.உங்கள் சௌகரியத்துகாக கீழே படத்தில் அவர்கள் இருப்பிட முகவரியை கொடுத்துள்ளேன்.



விதைகள் பற்றி கேட்டவுடன் பக்கத்தில் உள்ள ஒரு அறைய காட்டினார்கள்.ஓரமாக ஒரு இடத்தில் போட்டு வைத்திருந்த விதைகளை காட்டினார்கள் அதிலிருந்து எனக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டேன்.

இவ்விதைகளுக்கு Expiry Date உள்ளது அதனால் அதற்குள் உபயோகிக்க வேண்டும்.

அசல் விவசாயிக்கு வேண்டிய வேறு சில விபரங்கள் அட்டையின் பின் பக்கத்தில் போட்டுள்ளார்கள்.எனக்கெல்லாம் புரிபட இன்னும் சில காலம் ஆகலாம்.

Wednesday, January 16, 2013

ஒரு விபத்து நடக்க காத்திருக்கிறது.

ஓரிரவு எங்கள் குடியிருப்பில் நின்று பேசிக்கொண்டிருக்கும் போது பக்கத்தில் உள்ள கல்யாண மண்டபத்தின் ஒரு பகுதியை காண் நேரிட்டது.சமீபத்தில் அதன் ஒரு பகுதியை மேலும் ஒரு Floor அதிகப்படுத்தியிருந்தது தெரிந்தது ஆனால் என் பார்வையோ கீழே உள்ள பீம் மீதும் அதன் முகப்பில் ஏற்பட்டிருந்த வெடிப்பும் மீதும் இருந்தது

Beam யில் அதுவும் அதை தாங்கும் தூணுக்கு அருகில் என்றாம் அது அபாயகரமானது.இரவு நேரம் என்பதால் என்னுடைய ஆராய்சியை பகலுக்கு ஒத்திப்போட்டேன்.மறு நாள் காலை பார்த்த போது அதன் வீரியம் தெரிந்தது.நிலமை மோசம் என்று புரிந்தது ஆனால் உடனடியாக அல்ல.

 மேலே உள்ள படத்தில் தூணுக்கும் பீமும் இணையும் இடத்தில் இருக்கும் 45 டிகிரி கோண வெடிப்பை பாருங்கள்.இவ்வெடிப்பு அக்கட்டிடத்தின் மேற்பகுதி நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கும் போது ஏற்பட்டிருக்க கூடும்.நம்மூரில் இப்படி நீட்டிப்புக்கு அனுமதி பெற வேண்டும் அதெல்லாம் செய்தார்களா என்று தெரியவில்லை அப்படியே செய்திருந்தாலும் ஏற்கனவே இருந்த கட்டிடத்தில் உறுதித் தன்மையை சோதித்தார்களா என்று தெரியவில்லை.

வண்ண பூச்சு செய்தாத பகுதி தான் நீட்டிக்கப்பட்டது.

இதுமட்டுமல்ல சென்னையில் இப்படி பல கட்டிடங்கள் இப்படி யார் கண்காணிப்பும் இல்லாமல் நீட்டிக்கப்படுகின்றன.ஏதாவது ஒரு பெரிய விபத்து ஏற்பட்ட பிறகு அதைப் பற்றி சில நாட்கள் பேசிவிட்டு அதற்கடுத்த பிரச்சனையை ஓடிவிடுகிறோம்.

இந்த மோசமான நிலமையை பார்த்ததும் மனது கேட்காமல் பக்கத்து கட்டிடத்தின் நிர்வாகியிடம் போய் நிலமையை விவரித்து அவர்களுக்கு தெரிந்த கட்டுமான பொறியாளரை கேட்டு ஆவன செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளேன்,செய்வார்களா என்று தெரியவில்லை.நான் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவர்களுக்கு தெரிந்த வரையில் அந்த ஓரத்தில் தாங்கும் தூண் இல்லை அதை போட்டுவிடலாம் என்று பேசிக்கொண்டிருந்தார்கள்.

ஆண்டவன் விட்ட வழி.