Friday, November 30, 2012

பாதுகாப்பு பாவனை பயிற்சி

கட்டுமானத்துறை இடம் என்றால் புதிதாக ஆட்கள் வந்தவுடன் காலணி,தலைக்கவசம் மற்றும் தேவையான உபகரணங்கள் கொடுப்பதோடு முதலாளிகளின்/குத்தகைக்காரர்களின் வேலை முடிவதில்லை.இப்போதெல்லாம் பல தொழிலாளிகள் வடக்கு மாநிலத்தில் இருந்து வருவதால் இங்குள்ள நிலமை மற்றும் விபத்து அல்லது பேரிடர் ஏற்படும் போது என்ன செய்யவேண்டும் என்பதை அவர்கள் மொழியில் விளக்கவேண்டும், அதோடில்லாமல் அவசரகால தொலைப்பேசி எண்களையும் சொல்லச்சொல்லி அவர்கள் நினைவில் நிறுத்துவார்கள்.

சமீபத்தில் அந்த மாதிரி விளக்க கூட்டம் நடைபெறும் போது எடுத்த படங்கள் கீழே.அதில் ஒருவர் வேலைசெய்யும் இடத்தில் அடிபட்டால் அல்லது கீழே விழுந்துவிட்டால் என்னென்ன செய்யவேண்டும் என்பதை விளக்கி அடிபட்டவரை எப்படி தூக்கவேண்டும்,என்ன முதலுதவி செய்ய வேண்டும் என்பதை பாவனை பயிற்சி மூலம் விளக்குவார்கள். இதெல்லாம் 10 வருடங்களுக்கு முன்பு இல்லாதது.கட்டுமான உரிமையாளர் கொடுக்கும் அழுத்தமும்,ISO தரம் கட்டிக்காக்கவும் மற்றும் காப்பீடு செலவை குறைக்கவும் கட்டாயமாக்கப்பட்டதால் செய்யப்படும் நிகழ்வுகள்.இதெல்லாம் செய்வதால் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஒரு விழிப்புணர்வு வருகிறது என்றால் மிகையில்லை.