Wednesday, October 26, 2016

தீர்வு

என்ன செய்வது ? என் மூளை இப்படியெல்லாம் யோசிப்பது இன்று நேற்று அல்ல. பல முறை பல்பு வாங்கினாலும் விக்கிரமாதித்யன் போல் மேலே ஏறிக்கொண்டே இருக்கிறது.

புதிய வீடு. ஒவ்வொன்றாக சரி செய்துகொண்டிருக்கும் போது பல Tap கள் பூஞ்சானம் பிடித்து விகாரமாக தெரிந்தது. தண்ணீரில் உள்ள கடினத்தன்மையோ அல்லது அமிலத்தன்மையோ இந்த வேலையை செய்கிறது என்று தெரிந்தவுடன் அதற்கான முன்னேற்பாடுகளை செய்தேன் ஆனால் பலனில்லை. வன்பொருள் கடையில் கேட்ட போது ரூ 80 கொடுத்து ஒரு சொலுசனை வாங்கினேன் ஆனால் அதுவும் திருப்திகரமாக இல்லை.இந்த பிரச்சனை புது மாதிரியாக குளியறையில் உள்ள சூடு/குளிர் நீர் கலப்பானிலும் வந்தது. என்ன காரணம் என்று பார்த்த போது அதற்கு மேலுள்ள ஷவரில் இருந்து அதிக அழுததம் காரணமாக தண்ணீர் சொட்டு சொட்டாக அதன் மேல் விழுந்துகொண்டிருந்தது.

ஷவரில் இருக்கும் நெடுக்கு பைப்பின் நீளம் 6”, அதை 8” ஆக மாற்றிவிட்டால் தண்ணீர் அதன் மேல் விழாதல்லவா? இதை மனதில் வைத்துக்கொண்டு வேறு வேலையாக சென்ற போது கடையில் கேட்டேன்.

“ரூ 146 என்றார்”

சரி பிறகு வாங்கிக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன்.

ஒரு நாள் ஏதோ ஞாபமாக இருக்கும் போது கையில் இருந்த ஒரு லிட்டர் நெகிழி பாட்டில் எடுத்தேன் 2 பாகமாக வெட்டினேன்.தலைப்பகுதியையும் அடிப்பகுதியையும் தூக்கிப்போட்டேன். அதன் விட்டத்தையும் ஷவரின் விட்டத்தையும் அளந்தேன். பாட்டிலின் விட்டம் அதிகமாக இருந்தது. அதிகமாக இருக்கும் காரணத்தால் அதை இரண்டாக வெட்டி ஷவரின் உள்ளே நுழைத்து நன்றாக இறுக்கிப்பிடித்து இரண்டு முனையிலும் ஸ்டேப்ளர் பின் அடித்தேன்.





இப்போது தண்ணீர் அந்த  Mixer மீது தண்ணீர் விழவில்லை.

சரி ஒரு பிரச்சனை தீர்ந்தது.

பூசானத்துக்கு இந்த பகுதியில் உள்ள  வன் பொருள்  கடையில் கேட்டேன். இம்முறை வேறு ஒரு சொலூஷனை கொடுத்து தண்ணீரில் கலந்து உபயோகப்படுத்த சொன்னார். அதை உபயோகித்த போது ரிசல்ட் அருமையாக இருந்தது.

அந்த திரவம் இது தான்.

முன்பு




பிறகு.



Monday, May 02, 2016

இதுவும் புலம்பல் தான்.

சமீப காலத்தில் ஒரு சின்ன நிறுவனத்தில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது அதுவும் நண்பனின் ரெபரன்ஸ் மூலமாக. நுழையும் போதே தெரியும் இங்கு பெரிதாக எதுவும் எதிர்பார்க்க முடியாது அதே சமயத்தில் வாங்கிற காசுக்கு ஏதாவது உருப்படியாக செய்யவேண்டும் என்ற முடிவுடன் தான் உள்ளே நுழைந்தேன்.ஏனென்றால் தல கட்டுமானத்துறையை படித்தவர் அல்ல பணத்தை முதலீடு செய்தவர்.

முதல் நாள் நிறுவனத்தில் நுழைந்தும் அறிமுகம் செய்துவைக்க யாரும் இல்லை பிறகு நானாகவே செய்துகொண்டேன்.எதிர்பார்த்தது தான் என்பதால் இழப்பு ஒன்றும் இல்லை.

எனக்கு என்று ஒரு வேலை கொடுக்கப்பட்டது, நீ தான் சகலத்தையும் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டது.உனது ஆணை தான் இந்த பிராஜக்டை எடுத்துச்செல்ல வேண்டும் எனப்பட்டது.

இந்த பிராஜக்ட் பற்றி சின்ன அறிமுகம்; வயதானவர்களுக்கான சாப்பாடு மற்றும் மருத்துவ வசதியுடன் கூடிய வீடு. எல்லா இடங்களில் உள்ள மாதிரி அஸ்திவாரம்,பிளிந்த் பீம்,கட்டுவேலை அதன் மீது சிலாப்(கூரை) இவ்வளவு தான். இதற்கான வரைப்படம் மற்றும் டிசைன் எல்லாம் பொத்தாம் பொதுவாக போட்டு வேலை நடந்துகொண்டிருந்தது.60 மற்றும் 70 களில் வீட்டு கட்டுமான வரைப்படத்தில் பார்த்தால் அஸ்திவாரத்துக்கு மண் தோண்டி முதலில் ஆற்று மணல் ஒரு 4’ - 6” வரை போட்டு அதன் மீது Lean Concrete போடுவார்கள். இந்த ஆற்று மணல் எதற்கு என்றால் அஸ்திவாரம் தோண்டும் போது சேறும் சகதியாக இருக்கும் என்பதால் ஒரு மணல் லேயர் போட்டு அதன் மீது கான்கிரீட் போட்டார்கள். இப்படிப்பட்ட ஒரு நிலை அஸ்திவாரம் இருக்கும் இடத்தில் நீர் இருந்தால் மட்டுமே. இதை அப்படியே காப்பி / பேஸ்ட் பண்ண ஒரு மேஸ்திரி அப்படியே  எல்லா இஞ்ஜினியரும் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.அதுவே சரியான நிலைப்பாடு என்று நினைத்து பல கன்சல்டிங் பொறியாளர்களும் வரை படத்தில் போட்டுவிட்டார்கள். மேலே வருகிற எடையை தாங்கக்கூடிய மண் வரை அஸ்திவாரம் இருக்க வேண்டும் என்பது தான் நியதி. Lean Concrete மற்றும் மண் இடையே ஒரு Soft Layer என்பது தேவையில்லாத அம்சம் -பல இடங்களில் பல நேரங்களில்.

சின்னச்சின்ன வீடு கட்டுமானத்தில் இது ஒரு பெரிய செலவு வைக்கும் ஐட்டம் இல்லை ஆனால் அதுவே பெரிய கட்டுமானம் என்றால் அதுவும் நல்ல மண் அஸ்திவாரம் இருக்கும் போது இந்த மாதிரி Cushion Layer என்பது தேவையில்லாத செலவையும் நேர விரயத்தையும் கொண்டு வரும்.இந்த மாதிரி வேலை தான் அந்த பிராஜக்ட்டில் நான் போவதற்கு முன்பு செய்துவந்திருக்கிகார்கள். இதை மாற்ற எண்ணி Consulting Engineer ஐ வேலை இடத்துக்கு கூட்டி வந்து என்னுடைய ஐயத்தை எழுப்பினேன்.நல்ல பண்பாளரான அந்த பொறியாளர் நான் கேட்டத்தின் உள் அர்த்ததை புரிந்துகொண்டு அதை நீக்கிவிட்டு  கிட்டத்தட்ட சுமார் 16 லட்சம் கம்பெனிக்கு மிச்சப்படுத்தினார்.

இப்படி செய்த எனக்கு 4 மாதத்திலேயே வெளியே போகும் வழியை காட்டினார்கள்.நல்ல வேளை எனக்கு.

இதை இப்போது எதற்கு சொல்கிறேன் என்றால் நான் இருக்கும்(பொறியாளர்/கட்டுனர்கள்) ஒரு குழுமத்தில் இதே மேட்டர் வந்த போது நான் எழுப்பிய கேள்விக்கு பதில் கொடுக்காமல் 4” 6” என்று சொல்லும் போது மனது வலிக்கிறது.