சில வருடங்களாகவே ஒரு வீடு என் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி தேடிக்கொண்டிருக்கிறேன், இது வரை சரியாக அமையவில்லை.வளசரவாக்கம்/வடபழநி/விருகம்பாகம் வீடுகள் சுமார் 6000 முதல் 8000 வரை ஒரு சதுர அடிக்கு கேட்கிறார்கள்.லோக்கல் வீடு கட்டுபவர்கள் செய்யும் வேலை பார்த்து அவர்கள் பக்கம் போவதையே நிறுத்திவிட்டேன்.வீட்டு இடத்துக்குள் இருக்கும் ஆக்கிரமிப்பை தவிர்த்து வீட்டு முன்புறம் வண்டி ஏறுவதற்காக சாலையை ஆக்கிரமிப்பு பணியை நிறைவாகவே செய்கிறார்கள்.இதையெல்லாம் யாராவது கண்காணிக்கிறார்களா அல்லது தெரிந்தே விட்டுவிடுகிறார்களா என்று தெரியவில்லை.ஆக்கிரமிப்பு என்ற ஒரு வார்த்தையை வைத்தே ஒரு பெரிய வால்யூம் புக் போடலாம், அதுவும் சென்னையில்.
பின்புலம் இப்படி இருக்க, அடிக்கடி வானொலியில் இவர்களின் விளம்பரம் கேட்க கேட்க, சரி போய் பார்த்தால் என்ன என்ற முடிவு எடுத்து அதுவும் போன வாரம் தான் போக முடிந்தது.GST சாலையில் பல துணை சாலைகள் இருந்தாலும் கூடுவாஞ்சேரியில் இருக்கும் சாலைக்கு பெயர் எதுவும் கண்ணில் படாததால் சிறிது திணறி பயணித்தோம். சுமார் 4 கி.மீட்டர் பயணிந்த பிறகு இவர்களின் கட்டுமான இடத்தை அடைந்தோம் . G+4 முறையில் அமைந்த 3 கட்டிடங்கள் கான்கிரீட் முடிந்த நிலையில் சுற்றுச்சுவர்கள் வேலை நடந்துவருகிறது.கட்டுமான இடத்திலேயே Batching Plant அமைத்து கான்கிரீட் போடுவதால் குறை எதுவும் கண்ணில் படாமல் அட்டகாசமாக இருந்தது.தாங்கும் தூண்கள் கூட நேர்த்தியாக வரிசையில் இருந்தது.இவ்வளவு நாள் பல கட்டுமான வேலைகளை பார்த்திருந்தாலும் இவர்களின் Finish மிக அருமையாக இருக்கிறது.கட்டுமான வேலைகளை இவர்கள் நேரடியாக மேற்கொள்ளாமல் ஒரு துணை நிறுவனத்திடம் கொடுத்துள்ளார்கள்.Middle East நிறுவனம் என்று சொன்னதாக ஞாபகம்.
அங்கிருந்த முகவர் எங்கள் விவரங்களை கேட்ட பிறகு மாதிரி வீட்டை காண்பிக்க அமைத்துப்போனார்.ஒரு ஏரிக்கு பக்கத்தில் இருந்ததால் எல்லோருக்கும் ஏற்படும் சந்தேகம் போல் எனக்கும் எழுந்தது. மழை காலத்தில் ஏரி தண்ணீர் எங்கு போகும் என்று கேட்டேன். சமீபத்தில் ”தானே” புயல் கொண்டு வந்து கட்டிய மழையில் இதன் விளைவு தெரிந்திருக்குமே என்று கேட்டேன். நிலம் மேட்டுப்பகுதியில் இருப்பதாலும் இதன் கீழ் பகுதியில் இன்னொரு ஏரி இருப்பதாலும் தண்ணீர் பிரச்சனை இருக்காது என்றார்கள்.
ஒரு Model House, 3 அறை வீடுக்குள் அழைத்துப்போனார்கள்.வெளிவெளிச்சம் நன்றாக நுழையும் அளவுக்கு வீடுகள் இருந்தன.வீட்டு விலையை கேட்ட போது,சதுர அடிக்கு 2150 ரூபாய் என்றும் மற்ற செலவுகளை கூட்டினால் 2500 வரும் என்று சொன்னார்.கூடவே கிளப் ஹவுசும் நீச்சல் குளமும் வரப்போவதாகவும் பிற்காலத்தில் நல்ல தங்கும் இடமாகவும் விளங்கும் என்ற விளக்கமும் சொல்லப்பட்டது.தற்போதைக்கு பள்ளிக்கூடமும்,மருத்துவனையும் பக்கத்தில் இல்லை.மக்கள் அதிகம் வந்தால் இவையெல்லாம் தன்னால் வந்துவிடும் என்று நம்பலாம்.இப்போதைக்கு முதல் Phase ஐ வரும் ஜூன் மாதம் முடியப்போவதாகவும் அடுத்த Phase இரண்டு வருடம் ஆகும் என்றார்கள்.மற்ற விவரங்களுக்கு இங்கு போய் பாருங்கள்.
புது வீடுக்காக 95% விழுக்காடு பணத்தை கட்டிய பிறகும் கடைசி 5% பணத்தை மட்டும் விட்டு வைத்துவிட்டு வீட்டை Handing Over பண்ண வருடக்கணக்காகும் நிலை போய், வீட்டை கட்ட கட்ட நம்மிடம் பணம் கறக்கும் காலமும் போய் கட்டியவீடுகள் பணம் கட்டிய உடன் கிடைக்கும் வீடுகள் சந்தையில் வர ஆரம்பித்திருப்பது இப்போது தான். இது கட்டுமானத்துறையின் வீழ்ச்சி என்றாலும் மற்ற நகரங்களை விட சென்னையில் வீடுகள் விற்பனை ஆகாவிட்டாலும் விலையை மட்டும் யாரோ தாங்கிப்பிடிக்கிறார்கள்.
கூடுவாஞ்சேரி பக்கத்தில் இருக்க ஆசைப்படுபவர்கள் இந்த கட்டுமானத்தொகுதியை நேரில் பார்த்து முடிவு செய்யலாம்.
பின்குறிப்பு: நான் இவர்களுக்கு முகவர் அல்ல, அவரவர் தேவையை கருத்தில் கொண்டு முடிவு செய்துகொள்ளவும்.
Showing posts with label வேலை. Show all posts
Showing posts with label வேலை. Show all posts
Monday, January 16, 2012
Sunday, May 29, 2011
இதுவும் ஒரு வகை
எச்சரிக்கை:இது தொழிற்சார் பதிவு.
கட்டிடத்தின் தாங்கும் சக்தியை அதிகரிக்க பெரிய பெரிய கட்டிடங்களுக்கு மண்ணுக்கு கீழே தாங்கும் தூண்களை இறக்குவார்கள். எடைக்கு ஏற்ற மாதிரி பலவித அளவுகளில் இந்த தூண்கள் இருக்கும்.இதை மேலும் அலசாமல் சமீபத்தில் நான் பார்த்த ஒரு வித்தியாசமான தூண் கட்டுமானத்தை பார்க்கலாம். தூண் தூண் என்று சொல்லும் போதெல்லாம் சப்ஜெக்ட் தெரிந்தவர்கள் Pile என்று அர்த்தம் செய்துகொள்ளுங்கள்.

மொத்தமே 5 பேர் தான்.நெகிழான மண் உள்ள இடம் மற்றும் அளவான தூரம் மண்ணுக்கு கீழே இருக்குமானால் இம்முறை சரியாக வரும். மேலே உள்ள படத்தில் 350 மி மீட்டர் விட்டம் உள்ள தூண்,மண்ணுக்கு கீழே 5 மீட்டர் மட்டுமே போகக்கூடிய தூண் அமைக்கும் வேலையை செய்கிறார்கள்.இது அனேகமாக சுற்றுச்சுவர் கட்டுவதற்கான அஸ்திவாரத்தின் ஒரு பகுதியாக இருக்கக்கூடும்.
மண்ணில் துளை போடும் போதே உள்ளே இருக்கும் மண்ணை எடுக்கும் விதத்தில் அமைந்துள்ள துருத்தியை செக்க்கு மாடு போல் 4 ஆட்கள் சுற்றுவார்கள்.அனுபவத்தில் சில சுற்றுகள் முடிந்த்த பிறகு அது சேகரிந்த மண்ணை வின்ஞ் மூலம் தூக்கி மண்ணை வெளியில் கொட்டுவார்கள்.இதே மாதிரி தேவையான ஆழத்துக்கு மண்ணை தோண்டிவிட்டு கம்பி போட்டு கான்கிரீட் போட்டுவிடுவார்கள்.

எவ்வளவோ தொழிற்நுட்பம் வளர்ந்த நிலையில் இம்மாதிரி மனித உழைப்பை நம்பி செய்யும் வேலையும் அவ்வப்போதும் நடந்துவருகிறது,இதுவே ஒரு சில இடங்களில் Economical ஆகவும் இருக்கக்கூடும்.
கட்டிடத்தின் தாங்கும் சக்தியை அதிகரிக்க பெரிய பெரிய கட்டிடங்களுக்கு மண்ணுக்கு கீழே தாங்கும் தூண்களை இறக்குவார்கள். எடைக்கு ஏற்ற மாதிரி பலவித அளவுகளில் இந்த தூண்கள் இருக்கும்.இதை மேலும் அலசாமல் சமீபத்தில் நான் பார்த்த ஒரு வித்தியாசமான தூண் கட்டுமானத்தை பார்க்கலாம். தூண் தூண் என்று சொல்லும் போதெல்லாம் சப்ஜெக்ட் தெரிந்தவர்கள் Pile என்று அர்த்தம் செய்துகொள்ளுங்கள்.
மொத்தமே 5 பேர் தான்.நெகிழான மண் உள்ள இடம் மற்றும் அளவான தூரம் மண்ணுக்கு கீழே இருக்குமானால் இம்முறை சரியாக வரும். மேலே உள்ள படத்தில் 350 மி மீட்டர் விட்டம் உள்ள தூண்,மண்ணுக்கு கீழே 5 மீட்டர் மட்டுமே போகக்கூடிய தூண் அமைக்கும் வேலையை செய்கிறார்கள்.இது அனேகமாக சுற்றுச்சுவர் கட்டுவதற்கான அஸ்திவாரத்தின் ஒரு பகுதியாக இருக்கக்கூடும்.
மண்ணில் துளை போடும் போதே உள்ளே இருக்கும் மண்ணை எடுக்கும் விதத்தில் அமைந்துள்ள துருத்தியை செக்க்கு மாடு போல் 4 ஆட்கள் சுற்றுவார்கள்.அனுபவத்தில் சில சுற்றுகள் முடிந்த்த பிறகு அது சேகரிந்த மண்ணை வின்ஞ் மூலம் தூக்கி மண்ணை வெளியில் கொட்டுவார்கள்.இதே மாதிரி தேவையான ஆழத்துக்கு மண்ணை தோண்டிவிட்டு கம்பி போட்டு கான்கிரீட் போட்டுவிடுவார்கள்.
எவ்வளவோ தொழிற்நுட்பம் வளர்ந்த நிலையில் இம்மாதிரி மனித உழைப்பை நம்பி செய்யும் வேலையும் அவ்வப்போதும் நடந்துவருகிறது,இதுவே ஒரு சில இடங்களில் Economical ஆகவும் இருக்கக்கூடும்.
Thursday, February 03, 2011
Pre-Cast Girder
இத்தொழிற்நுட்பம் பற்றி பல இடங்களில் எழுதியிருந்தாலும் சமீபத்தில் சென்ற ஒரு வேலை இடத்தில் எடுத்த படம் கிடைத்தது.அதன் விபரம் மற்றும் அனுகூலங்கள் கீழே.

இதை தரையில் மிகப்பெரிய முன்னேற்பாடுகள் இல்லாமல் குறைவான செலவில் கால தாமதமின்றி தேவைக்காலத்துக்கு முன்பே செய்துவிடலாம்.இத்துடன் அதன் தொடர்புடைய மற்றொரு தொழிற்நுட்பமான போஸ்ட் டென்ஷன் (Post Tension) ஐ புகுத்தி நம் தேவைக்கு ஏற்ப பீம்களை கான்கிரீட் போடலாம்.மேலே உள்ள படத்தில் கீழே உள்ள இரண்டு கான்கிரீட் குமிழ்கள் ஏற்கனவே அவ்விடத்தில் உள்ள கேபிள்களை இழுப்பு விசைக்கொண்டு நிலை நிறுத்தி அதன் பிரத்யோக அமைப்பின் மூலம் Lock செய்தவுடன் அதனை இம்மாதிரி கான்கிரீட் கொண்டு பூசிவிடுவார்கள்.இப்படி செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை என்றாலும் ஏதாவது ஒரு காரணத்தில் அந்த கம்பிகள் லூஸ் ஆனால் அதை பிடித்திருக்கும் நட் மாதிரியான அமைப்பு புல்லட் மாதிரி வெளியேற வாய்புள்ளது.அந்த வாய்ப்பை தவிர்க்கவே இந்த மாதிரி கான்கிரீட் போட்டு மூடிவிடுவார்கள்.

மேலே உள்ள படத்தில் கீழிருந்து 3 வது ஓட்டையில் ஒரு நெகிழி வைத்திருக்கார்களே அது இந்த பீம் கான்கிரீட் போடும் போது வளைந்து போகாமல் தடுக்க அதன் உள் அளவுக்கு தகுந்த நெகிழியை வைத்துவிடுவார்கள்.இந்த கேபிள் போகும் பாதை மெலிதான் தகடு பைப் ஒன்று இந்த முனையில் இருந்த அடுத்த முனை வரை போகக்கூடியதாக இருக்கும்.
கீழே உள்ள இரு பைப்புகளில் உள்ள ஒயர்களை Strands என்று சொல்வார்கள் இதன் மூலம் தேவையான இழுப்புவிசையை ஏற்படுத்தி கான்கிரீட் பீமை தகுந்த Load தாங்கக்கூடிய நிலைக்கு எடுத்துவருவார்கள்.மேலே உள்ள இரண்டு ஓட்டைகளையும் இதே முறையில் நிலை நிறுத்துவார்கள் அது இப்பீமை கிரேன் மூலம் தேவையான இடத்தில் வைத்த பிறகு செய்வார்கள்.இம்முறை இடத்துக்கு இடம் மாறுபடும் என்பதால் இது தான் முழுவேலை என்று சொல்லமுடியாது.

மேலே உள்ள படத்தில் ஒரு சிறிய Shutter ஐ எடுக்க எவ்வளவு பேர் நிற்கிறார்கள் பாருங்கள்.என்ன தான் அளவில் சிறியதாக இருந்தாலும் கான்கிரீட்டில் இருந்து வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் கம்பிகளால் இவ்வேலை நிறைய நேரம் எடுக்கும்.இப்படிப்பட்ட பல அனுகூலங்கள் இருந்தாலும் இப்படிப்பட்ட கஷ்டங்களும் இருக்கும்.

இதை தரையில் மிகப்பெரிய முன்னேற்பாடுகள் இல்லாமல் குறைவான செலவில் கால தாமதமின்றி தேவைக்காலத்துக்கு முன்பே செய்துவிடலாம்.இத்துடன் அதன் தொடர்புடைய மற்றொரு தொழிற்நுட்பமான போஸ்ட் டென்ஷன் (Post Tension) ஐ புகுத்தி நம் தேவைக்கு ஏற்ப பீம்களை கான்கிரீட் போடலாம்.மேலே உள்ள படத்தில் கீழே உள்ள இரண்டு கான்கிரீட் குமிழ்கள் ஏற்கனவே அவ்விடத்தில் உள்ள கேபிள்களை இழுப்பு விசைக்கொண்டு நிலை நிறுத்தி அதன் பிரத்யோக அமைப்பின் மூலம் Lock செய்தவுடன் அதனை இம்மாதிரி கான்கிரீட் கொண்டு பூசிவிடுவார்கள்.இப்படி செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை என்றாலும் ஏதாவது ஒரு காரணத்தில் அந்த கம்பிகள் லூஸ் ஆனால் அதை பிடித்திருக்கும் நட் மாதிரியான அமைப்பு புல்லட் மாதிரி வெளியேற வாய்புள்ளது.அந்த வாய்ப்பை தவிர்க்கவே இந்த மாதிரி கான்கிரீட் போட்டு மூடிவிடுவார்கள்.

மேலே உள்ள படத்தில் கீழிருந்து 3 வது ஓட்டையில் ஒரு நெகிழி வைத்திருக்கார்களே அது இந்த பீம் கான்கிரீட் போடும் போது வளைந்து போகாமல் தடுக்க அதன் உள் அளவுக்கு தகுந்த நெகிழியை வைத்துவிடுவார்கள்.இந்த கேபிள் போகும் பாதை மெலிதான் தகடு பைப் ஒன்று இந்த முனையில் இருந்த அடுத்த முனை வரை போகக்கூடியதாக இருக்கும்.
கீழே உள்ள இரு பைப்புகளில் உள்ள ஒயர்களை Strands என்று சொல்வார்கள் இதன் மூலம் தேவையான இழுப்புவிசையை ஏற்படுத்தி கான்கிரீட் பீமை தகுந்த Load தாங்கக்கூடிய நிலைக்கு எடுத்துவருவார்கள்.மேலே உள்ள இரண்டு ஓட்டைகளையும் இதே முறையில் நிலை நிறுத்துவார்கள் அது இப்பீமை கிரேன் மூலம் தேவையான இடத்தில் வைத்த பிறகு செய்வார்கள்.இம்முறை இடத்துக்கு இடம் மாறுபடும் என்பதால் இது தான் முழுவேலை என்று சொல்லமுடியாது.
மேலே உள்ள படத்தில் ஒரு சிறிய Shutter ஐ எடுக்க எவ்வளவு பேர் நிற்கிறார்கள் பாருங்கள்.என்ன தான் அளவில் சிறியதாக இருந்தாலும் கான்கிரீட்டில் இருந்து வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் கம்பிகளால் இவ்வேலை நிறைய நேரம் எடுக்கும்.இப்படிப்பட்ட பல அனுகூலங்கள் இருந்தாலும் இப்படிப்பட்ட கஷ்டங்களும் இருக்கும்.
Sunday, November 28, 2010
சென்னை விமான நிலையம்.
விமான நிலையத்துக்கு போகிறவர்கள்/வருபவர்களுக்கு இக்கட்டுமானப்பணி கண்ணில் படாமல் தப்பிப்பது முடியாத காரியம்.இருக்கிற நிலயத்தை மேம்படுத்தும் பணிகளுடன் புதிய வரவேற்று மற்றும் புறப்படும் நிலையங்கள் புதுப்பொலிவு பெற வேலைகள் நடந்துவருகின்றன.இன்றைக்கு இருக்கும் இந்த நிலையை பார்க்கும் போது வேலை முடிய இன்னும் 1 வருட காலம் காத்திருக்க வேண்டும் போல் தோனுகிறது.இரு விமான முனையங்களை இணைக்கும் ஒரு பாலம் பணியும் நடந்துவருகிறது இதன் மூலம் மகிழுந்துகள் விமான நிலைய வாசலுக்கே வரமுடியும் போல் தோனுகிறது.
நேற்று அங்கு போக நேர்ந்த போது கண்ணில் பட்ட சில காட்சிகள் கீழே.
உள்நாட்டு முனையம்

வெளி நாட்டு முனையம்.

சாலை போன்று இணைக்கும் பாலத்தின் Beam ஐ தூக்கி பொருத்துகிறார்கள்.


படமெல்லாம் இருக்கட்டும்...எப்ப முடியும்? நான் கேட்கலை பையன் கேட்கிறான்.
நேற்று அங்கு போக நேர்ந்த போது கண்ணில் பட்ட சில காட்சிகள் கீழே.
உள்நாட்டு முனையம்
வெளி நாட்டு முனையம்.
சாலை போன்று இணைக்கும் பாலத்தின் Beam ஐ தூக்கி பொருத்துகிறார்கள்.
படமெல்லாம் இருக்கட்டும்...எப்ப முடியும்? நான் கேட்கலை பையன் கேட்கிறான்.
Sunday, October 10, 2010
Employment Card
நான் படித்துக்கொண்டிருந்த கால கட்டத்தில் படித்து முடித்தவுடன் வேலை தேடுகிறோமோ இல்லையே முதன் முதலில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துவிடுவோம்,அப்படி செய்வதால் அப்பா/அம்மா ஏச்சுக்களில் இருந்து தற்காலிகமாக தப்பித்துக்கொள்ளலாம் என்பது வேறு கதை.முதன் முதலில் நாகையில் படித்துமுடிந்தவுடன் அங்குள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து காத்துக்கொண்டிருந்தேன் பிறகு தான் முன் அனுபவம் உள்ளவர்கள் பலரும் சொல்லிய படி சென்னைக்கு மாற்றிக்கொண்டேன்.அவ்வப்போது அதை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்பதால் வேலையில்லாததோர் பட்டியலில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை அது உணர்த்திக்கொண்டிருக்கும்.
இன்று ஏதோ பழைய குப்பைகளை கிளறிக்கொண்டிருக்கும் போது இவ்வட்டை கையில் கிடைத்தது.கொஞ்சம் கொசுவற்றி சுற்றி பார்த்த போது அன்றிருந்த நிலமை இன்றிருக்கும் நிலமை - வேடிக்கையாக இருக்கு வாழ்கை.
இன்று ஏதோ பழைய குப்பைகளை கிளறிக்கொண்டிருக்கும் போது இவ்வட்டை கையில் கிடைத்தது.கொஞ்சம் கொசுவற்றி சுற்றி பார்த்த போது அன்றிருந்த நிலமை இன்றிருக்கும் நிலமை - வேடிக்கையாக இருக்கு வாழ்கை.
Saturday, October 09, 2010
சென்னை மெட்ரோ
கோயம்பேடு மற்றும் வடபழனி பக்க சாலைகளை வழிப்பறி செய்து சென்னை மெட்ரோ வேலைக்காக ஆட்கள் உழைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.தூண்கள் மண்ணைவிட்டு வெளியே வந்தும் யாரும் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள் ஆனால் 20 நாட்களுக்கு முன்பு இப்படி ஒரு ஸ்டீல் Girder ஐ தூக்கி வைத்ததும் பத்திரிக்கைகள் புகைப்படம் போட்டு ஒரு சில பக்கங்களை நிரப்பிவிட்டன.
இரண்டு வாரங்களுக்கு முன்பு அப்பகுதி வழியே போன போது அலைபேசி மூலம் எடுத்தேன்.

கோயம்பேடு,CMBT,வடபழனி,அரும்பாக்கம் மற்றும் அசோக் நகர் பக்கம் வண்டி ஓட 2013 ஆகிவிடும் போல் தோனுகிறது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு அப்பகுதி வழியே போன போது அலைபேசி மூலம் எடுத்தேன்.
கோயம்பேடு,CMBT,வடபழனி,அரும்பாக்கம் மற்றும் அசோக் நகர் பக்கம் வண்டி ஓட 2013 ஆகிவிடும் போல் தோனுகிறது.
Friday, September 10, 2010
புதிய தொழிற்நுட்பம்-Hollw Core Slab.
போன பதிவில் ஆசிய கடற்கரை விளையாட்டு கட்டிடங்களை பற்றிய விளகங்களை சொல்கிறேன் சொல்லியிருந்தேன்.
மிக அதிக உயரமான கட்டிடமே ஐந்து மாடி தான்.ஒரு ஹோட்டல்,விளையாட்டாளர்கள் தங்கும் இடம்,பத்திரிக்கையாளர்கள் இருக்கும் இடம் மற்றொரு கட்டிடத்தில் உணவகம் மற்றும் கடைத்தொகுதி இருக்கிறது.வரும் நவம்பரில் விளையாட்டுகள் தொடங்கக்கூடும்.
விளையாட்டாளர்கள் தங்கும் கட்டிடத்தை தான் முதலில் பார்த்தேன்,நண்பர் அதில் செய்யப்பட்ட வேலைகளும் அதை எங்கிருந்து வரவழைத்தார்கள் அதன் சாதக பாதகங்களை விவரித்துக்கொண்டு இருக்கும் போது மேற் கூரையை பார்த்தேன்.அதன் Finishing அருமையாக இருக்கிறதே என்றேன்.
ஓ! அதுவா? இது தான் Hollow Core Slab என்றார்.இதை துபாயில் பல நிறுவனங்கள் செங்கல் மாதிரி போட்டு விற்கிறார்கள் என்றார்.ஆச்சரியமாக இருந்தது.நான் பார்த்த கூரை சுமார் 8.50 மீட்டர் நீளம்.இவ்வளவு Span இருக்கும் ஒரு இடத்தில் கான்கிரீட் கூரை போடனும் என்றால் நடுவில் ஒரு Beam வேண்டும் இல்லையென்றால் சிலாப் அதிக கணம் உள்ளதாக போடனும்.அதிக கணம் என்றால் அதற்கு தகுந்த கம்பி போடனும்.எந்த பொறியாளரும் அந்த அளவுக்கு போகமாட்டார்கள் ஏனென்றால் செலவு பிடிக்கக்கூடியது அதோடில்லாமல் அது சரியான கட்டுமான வேலையாக இருக்காது.
இவ்வளவு பெரிய Span யில் நடுவே ஒரு Beam கூட இல்லாமல் இருக்கும் இந்த Slab கணம் எவ்வளவு என்று கேட்டேன், அதற்கு 200 மி.மீட்டர் தான் என்றார் அதோடு இதன் உள்ளே வெறும் 8 அல்லது 9 கம்பிகள் மட்டுமே இருக்கிறது என்ற குண்டையும் போட்டார்.என்னால் நம்பவே முடியவில்லை. Slab அளவு 8.50 x1.2x0.2 மீட்டர், இதற்கு கம்பி வெறும் 9 தான்.படத்தை பாருங்கள்.தூணின் இரு பக்கத்திலும் Beam போட்டுவிட்டு அதன் மேல் இந்த Slab ஐ வைத்தால் முடிந்தது கூரை.
சில படங்கள் இணையத்தில் சுட்டவை..

நன்றி: கான்கிரீட் டெக்.

நன்றி:பிரிகாஸ்ட் ஒர்க்ஸ்

இதன் அனுகூலங்கள்.
1.Building கட்டுமானம் ஆரம்பிப்பதற்கு முன்பே இந்த வேலையை ஆரம்பித்துவிடலாம்.(Parellel Working), இதனால் நேரம் மிச்சமாகும்.
2.அருமையான Finishing அதனால் மேற்பூச்சு என்ற வேலையே இல்லை.
3.கம்பி கிடையாது அதனால் கம்பி வேலை என்று சொல்லப்படுகிற Bar Bending வேலை இருக்காது.
4.வேண்டிய அளவுக்கு செய்துகொள்ளலாம் என்பதால் நம் தேவைக்கு ஏற்ற அளவில் கிடைக்கும்.
5.Erection அல்லது பொருத்தும் வேலை மிகவும் சுலபம் அதோடில்லாமல் குறுகிய காலத்தில் விரைவாக முடிக்கமுடியும்.
6.Form Work அல்லது செண்டரிங் என்ற வேலையே கிடையாது.
7.சிலாபின் மத்தியில் ஓட்டை இருப்பதால் மேலும் கீழும் Thermal Insulation கிடைக்கும்.
இன்னும் நிறைய இருக்கு.
பிரதிகூலங்கள்
அனுகூலங்கள் என்று இருந்தால் அதற்கு பிரதி என்று ஒன்று இருக்கும் அல்லவா!
1.இதை மேல் தூக்கிவைக்க பாரம் தூக்கி வேணும்.சென்னை மாதிரி குருகிய சாலையில் பாரம் தூக்கி நிறுத்த முடியாது.Tower Crane மூலம் இவ்வவளவு பாரம் தூக்க முடியுமா என்று தெரியவில்லை.
2.பெரிய பெரிய தொழிற்சாலைகளில் கடைசி நேர வேலையாக சில சமயம் துளை போட வேண்டிவரும் அது இதில் கஷ்டம்.
3.Slab களுக்கு இடையே உள்ள ஜாயிண்டை மூட தனி தொழிற்நுட்பம் தேவை.
4.Slab அளவுகளை நினைத்த நேரத்துக்கு மாற்ற முடியாது.
இன்னும் இருக்கலாம் அவ்விடத்தில் வேலை செய்தால் புரிபடும்.
கீழே உள்ள படங்கள்...முதலில் உள்ள படத்தில் சிகப்பு வட்டம் போட்டு காட்டியிருப்பது தான் கம்பியின் அளவு 4~6 MM இருக்கக்கூடும்.

மற்றொரு படம் அந்த சைட்டில் எடுத்தது.
இதில் சிலாபின் Finish ஐ பார்க்கலாம்,இதில் மேற்பூச்சு இல்லை.அதோடு மின்சார பைப்புகள் ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு எப்படி போகிறது என்றும் பார்க்கலாம்.

இதன் மூலம் எனக்கும்/உங்களுக்கும் பல விஷயங்களை தெரிந்துகொள்ள உதவிய என் நண்பனுக்கு நன்றி.
மிக அதிக உயரமான கட்டிடமே ஐந்து மாடி தான்.ஒரு ஹோட்டல்,விளையாட்டாளர்கள் தங்கும் இடம்,பத்திரிக்கையாளர்கள் இருக்கும் இடம் மற்றொரு கட்டிடத்தில் உணவகம் மற்றும் கடைத்தொகுதி இருக்கிறது.வரும் நவம்பரில் விளையாட்டுகள் தொடங்கக்கூடும்.
விளையாட்டாளர்கள் தங்கும் கட்டிடத்தை தான் முதலில் பார்த்தேன்,நண்பர் அதில் செய்யப்பட்ட வேலைகளும் அதை எங்கிருந்து வரவழைத்தார்கள் அதன் சாதக பாதகங்களை விவரித்துக்கொண்டு இருக்கும் போது மேற் கூரையை பார்த்தேன்.அதன் Finishing அருமையாக இருக்கிறதே என்றேன்.
ஓ! அதுவா? இது தான் Hollow Core Slab என்றார்.இதை துபாயில் பல நிறுவனங்கள் செங்கல் மாதிரி போட்டு விற்கிறார்கள் என்றார்.ஆச்சரியமாக இருந்தது.நான் பார்த்த கூரை சுமார் 8.50 மீட்டர் நீளம்.இவ்வளவு Span இருக்கும் ஒரு இடத்தில் கான்கிரீட் கூரை போடனும் என்றால் நடுவில் ஒரு Beam வேண்டும் இல்லையென்றால் சிலாப் அதிக கணம் உள்ளதாக போடனும்.அதிக கணம் என்றால் அதற்கு தகுந்த கம்பி போடனும்.எந்த பொறியாளரும் அந்த அளவுக்கு போகமாட்டார்கள் ஏனென்றால் செலவு பிடிக்கக்கூடியது அதோடில்லாமல் அது சரியான கட்டுமான வேலையாக இருக்காது.
இவ்வளவு பெரிய Span யில் நடுவே ஒரு Beam கூட இல்லாமல் இருக்கும் இந்த Slab கணம் எவ்வளவு என்று கேட்டேன், அதற்கு 200 மி.மீட்டர் தான் என்றார் அதோடு இதன் உள்ளே வெறும் 8 அல்லது 9 கம்பிகள் மட்டுமே இருக்கிறது என்ற குண்டையும் போட்டார்.என்னால் நம்பவே முடியவில்லை. Slab அளவு 8.50 x1.2x0.2 மீட்டர், இதற்கு கம்பி வெறும் 9 தான்.படத்தை பாருங்கள்.தூணின் இரு பக்கத்திலும் Beam போட்டுவிட்டு அதன் மேல் இந்த Slab ஐ வைத்தால் முடிந்தது கூரை.
சில படங்கள் இணையத்தில் சுட்டவை..

நன்றி: கான்கிரீட் டெக்.

நன்றி:பிரிகாஸ்ட் ஒர்க்ஸ்

இதன் அனுகூலங்கள்.
1.Building கட்டுமானம் ஆரம்பிப்பதற்கு முன்பே இந்த வேலையை ஆரம்பித்துவிடலாம்.(Parellel Working), இதனால் நேரம் மிச்சமாகும்.
2.அருமையான Finishing அதனால் மேற்பூச்சு என்ற வேலையே இல்லை.
3.கம்பி கிடையாது அதனால் கம்பி வேலை என்று சொல்லப்படுகிற Bar Bending வேலை இருக்காது.
4.வேண்டிய அளவுக்கு செய்துகொள்ளலாம் என்பதால் நம் தேவைக்கு ஏற்ற அளவில் கிடைக்கும்.
5.Erection அல்லது பொருத்தும் வேலை மிகவும் சுலபம் அதோடில்லாமல் குறுகிய காலத்தில் விரைவாக முடிக்கமுடியும்.
6.Form Work அல்லது செண்டரிங் என்ற வேலையே கிடையாது.
7.சிலாபின் மத்தியில் ஓட்டை இருப்பதால் மேலும் கீழும் Thermal Insulation கிடைக்கும்.
இன்னும் நிறைய இருக்கு.
பிரதிகூலங்கள்
அனுகூலங்கள் என்று இருந்தால் அதற்கு பிரதி என்று ஒன்று இருக்கும் அல்லவா!
1.இதை மேல் தூக்கிவைக்க பாரம் தூக்கி வேணும்.சென்னை மாதிரி குருகிய சாலையில் பாரம் தூக்கி நிறுத்த முடியாது.Tower Crane மூலம் இவ்வவளவு பாரம் தூக்க முடியுமா என்று தெரியவில்லை.
2.பெரிய பெரிய தொழிற்சாலைகளில் கடைசி நேர வேலையாக சில சமயம் துளை போட வேண்டிவரும் அது இதில் கஷ்டம்.
3.Slab களுக்கு இடையே உள்ள ஜாயிண்டை மூட தனி தொழிற்நுட்பம் தேவை.
4.Slab அளவுகளை நினைத்த நேரத்துக்கு மாற்ற முடியாது.
இன்னும் இருக்கலாம் அவ்விடத்தில் வேலை செய்தால் புரிபடும்.
கீழே உள்ள படங்கள்...முதலில் உள்ள படத்தில் சிகப்பு வட்டம் போட்டு காட்டியிருப்பது தான் கம்பியின் அளவு 4~6 MM இருக்கக்கூடும்.
மற்றொரு படம் அந்த சைட்டில் எடுத்தது.
இதில் சிலாபின் Finish ஐ பார்க்கலாம்,இதில் மேற்பூச்சு இல்லை.அதோடு மின்சார பைப்புகள் ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு எப்படி போகிறது என்றும் பார்க்கலாம்.
இதன் மூலம் எனக்கும்/உங்களுக்கும் பல விஷயங்களை தெரிந்துகொள்ள உதவிய என் நண்பனுக்கு நன்றி.
Thursday, September 09, 2010
ஆசிய கடற்கரை விளையாட்டு-மஸ்கட்.
எல்லோர் வாழ்வில் இப்படி ஒரு முறையாவது நடந்திருக்கும் அல்லது நடக்கும்.என்னுடைய வாழ்விலும் இது சில முறை நடந்திருக்கு. நினைப்பதெல்லாம் நடக்குபோது ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் மோசமான எண்ணங்களும் நடந்திடுமோ என்று தோன்றும்,அதாங்க நீங்க ஏதாவது நினைத்திக்கொண்டு இருப்பீங்க அது உடனே நடப்பதற்கான சாத்திய கூருகள் நடக்க ஆரம்பித்துவிடும்.ஆங்கிலத்தில் “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்”என்பதை ”டெலிபதி”என்று சொல்வார்கள் ஆனால் இந்த மாதிரி நினைப்பு நடப்பதை என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை.
ஒரு முறை என் அம்மாவுடன் தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருக்கும் போது இன்று விசேஷமான நாள் முடிந்தால் கோவிலுக்கு போய்விட்டு வா- என்றார்.இங்கு என்ன கோவில் நடந்து போகக்கூடிய தூரத்திலா இருக்கு என்று நினைத்துக்கொண்டு,கம்பெனி வண்டி ஃபிரியாக இருந்தால் போகிறேன் இல்லை யாராவது நண்பர்கள் வண்டி கொண்டுவந்தால் அவர்களிடம் கேட்கிறேன் என்று சொல்லி வைத்தேன்.இது நடந்தது காலை மணி 7. நண்பனிடம் இருந்து ஒரு அழைப்பு,என்ன Program இன்று என்று கேட்டார்.வழக்கம் போல் ஒன்றும் இல்லை வீட்டில் தான் இருக்கேன் என்றேன்.சரி ஒரு 10 மணி போல் வருகிறேன் கிருஷ்ணன் கோவிலுக்கு போகலாமா என்றார்??!! ஆச்சரியம். அவன் தயவில் அன்று கோவில் தரிசனம் கிடைத்தது.
என்னுடைய ஒப்பந்த நாள் வரும் 14ம் தேதியோடு முடிவதால் ஒரேடியாக ஊருக்கு கிளம்புவதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்யும் போது இவ்வளவு நாள் இங்கிருந்தோம் கூடியவரை பல இடங்களை பார்த்திருந்தாலும் ஒரு கட்டுமான இடத்துக்கு உள்ளே போய் பார்க்கமுடியவில்லையே என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.25 வருடங்களுக்கு பிறகு சந்தித்த நண்பன் அதே வேலையில் இருந்தாலும் அவனிடம் கேட்பதற்கு கொஞ்சம் கூச்சமாக இருந்தது.கிளம்புவதற்கு முதல் வாரம் வேண்டுமென்றால் கேட்கலாம் என்று நினைத்திருந்தேன்.
L&T-ECC நிறுவனம் என்னுடைய தாய் நிறுவனம் மாதிரி,நான் இங்கு கற்றது இன்று வரை எனக்கு சோறு போடுகிறது.புதிய புதிய தொழிற்நுட்பங்கள்,வித்தியாசமான வேலைகள் என்று அறியும் ஆர்வம் உள்ளவர்களுக்கு தீனி போடும் செமத்தியான இடம் அது.என்ன தான் மலேசியா/சிங்கப்பூர்/துபாய்/மஸ்கட் என்று பல ஊர்களில் கட்டுமான தொழிற்நுட்பங்களை பார்த்திருந்தாலும் 15 வருடங்களுக்கு பிறகு என்னுடைய தாய் நிறுவனத்தில் எப்படி வேலை நடக்குது என்று பார்க்க ஆவலாக இருந்தது.சில வேலைகள் வெளி ஆட்களுக்கு நுழைய தடை இருக்கும் அந்த வகையில் இந்த வேலை இருந்தால் என்னால் உள்ளே போக வேண்டுகோள் கூட வைக்கமுடியாது.இப்படி எண்ணங்கள் மட்டும் ஓடிக்கொண்டிருந்தது.
என்னதான் Gtalk யில் அவன் பெயரில் Available என்று வந்தாலும் அவசியமில்லாமல் அவனும் கூப்பிடமாட்டான் நானும் கூப்பிடமாட்டேன்.இரண்டு வாரங்களுக்கு முன்பு கூப்பிட்டு இந்த வார கடைசியில் முடிந்தால் சந்திக்கலாம் என்றான்.சரி என்றேன் ஆனால் அந்த வாரம் அவனுக்கு வேலை வர அவனால் வரமுடியவில்லை.மறுவாரம் கூப்பிட்டு என்னுடைய வேலை நிலவரங்களை கேட்டுவிட்டு வியாழன் இரவு ஏதோ ஒரு இடம் சொல்லி அங்கு கொஞ்சம் வேலை இருக்கு அங்கு தங்கிவிட்டு மறுநாள் site ஐ சுற்றிப்பார்க்கலாம் என்றார்.ஆச்ச்சரியமோ ஆச்சரியம் நான் கேட்கமாலே நான் நினைத்தது நடக்கவிருந்தது.
வியாழன் இரவு சுமார் 7 மணிக்கு வந்தான் இருவரும் கிளம்பி Seeb (Airport) வழியாக President Palace இருக்கும் இடத்தையும் கடந்து போய்கொண்டிருந்தோம்.Mussanah என்ற இடம் வந்தது அது வரை வண்டி 100 ~ 110 கி.மீ வேகத்தில் வழுக்கிக்கொண்டு போய்க்கொண்டிருந்தது.கிட்டத்தட்ட 105 கி.மீ வந்தவுடன் ஒரு சிறிய கிராமம் போல் இருந்த இடத்தில் ஒரு வில்லாவில் இவர்களுக்காக இடம் ஒதுக்கியிருந்தார்கள் அங்கு தங்கினோம்.ECC முறைப்படி ஒரு Mess ம் இருந்தது.பழைய கதைகளை பேசிவிட்டு சுமார் 11 மணிக்கு படுத்தோம்.

காலை எழுந்து சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பி Site க்கு போனோம். தங்கியிருக்கும் இடத்துக்கும் Site க்கும் சிறிது தூரம் தான் இருந்தாலும் மகிழுந்துவில் தான் போகனும்.நடுநடுவே சில இடங்களில் வீடுகள் கட்டுமானம் நடந்துகொண்டிருந்தது மற்ற படி பொட்டக்காடு தான்.ஒரு துருக்கிஸ் நிறுவனம் தன்னுடைய பேச்சிங் பிளாண்ட் மற்றும் 400 டிப்பர் வகை வாகனங்களை அங்கு நிறுத்திவைத்திருந்தது.ஒரு வேளை வரப்போகும் வேலைக்காக இப்போதே அடுக்க ஆரம்பித்துவிட்டார்களா என்ற யோசனையில் இதற்கான Over Heads என்னவாகும் என்ற நினைப்பும் வந்தது.துபாய் விழுந்ததில் வந்தவையாக கூட இருக்கலாம்.
ECC யில் ஒரு காலத்தில் ஆதாவது நான் வேலை செய்ய ஆரம்பித்திருக்கும் காலத்தில் சிறிய பெரிய விபத்துகள் நிகழத்தொடங்கிய காலம்(1982) அதனால் விபத்துக்கு இழப்பீடு செய்யும் போது காப்பீடு நிறுவனம் இதே நிலை தொடர்ந்தால் அதிக சந்தா கட்டவேண்டும் என்று நிர்பந்திக்க ஆரம்பித்தது அதனால் இவர்களுக்கு சந்தா அதிகமாக கட்டாமல் இருக்கவும் மார்க்கட்டில் கம்பெனி பெயர் நிலை நிருத்தவும் பாதுகாப்புக்கு செலவு செய்வது என்று முடிவெடுத்தார்கள்.என்னுடைய முதல் வேலை இடத்தில் 60 பேருக்கு மேல் இருந்தால் Site இல் 20 ஹெல்மட் தான் இருக்கும்.பெரிய தலைகள் கட்டாயமாக போட்டிருப்பார்கள்.கட்டிடங்கள் அதிக உயரம் எழும்ப எழும்ப சின்ன சின்ன கற்கள் மூலம் காயம் ஏற்படுவதை கண்டு எல்லோருக்கும் ஹெல்மட் கிடைத்தது.வேலையாட்கள் வரை அதை கொண்டு வர பல ஆண்டுகள் பிடித்தது.சித்தாள்கள் தலையில் திண்டு வைப்பதால் ஹெல்மட் என்பது அவர்களுக்கு ஒத்துவராதது என்று ஒதுக்கிவிட்டார்கள்.அப்போதெல்லாம் விபத்து என்று வரும் கேஸ்கள் காலில் ஆணி குத்திவிடுவது தான் அதிகம்.இப்படியெல்லாம் இருந்த நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளில் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது என்பதை நுழைவாயிலில் மாட்டியிருக்கும் பலகை உங்கள் பாதுகாப்பு உங்கள் குடும்பத்துக்கும் பாதுகாப்பு என்று சொல்லி நச் என்று அனைவரது மண்டையில் ஏற்றியிருக்கிறார்கள்.இப்படி நச் என்ற பலகை மாட்டினால் வேலை செய்யும் இடம் பாதுகாப்பாகிவிடுமா? நிச்சயம் முடியாது.வேலை செய்பவர்கள் மற்றும் வேலை வாங்குபவர்கள் இருவரும் சேர்ந்து உழைத்தால் விபத்தே நிகழாமல் ஒரு வேலையை முடிக்கலாம் என்று சொல்லாமல் சொல்லியது மற்றொரு அறிவிப்பு பலகை,அது தான் அவர்களின் 10 மில்லியன் வேலை நேரம்.இமாலய சாதனை என்றே சொல்ல வேண்டும்.நிஜமாக பாதுகாப்புக்காக இவர்கள் உழைக்கிறார்களா? அதற்காக என்னென்ன செய்கிறார்கள் என்பதை பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது.இதையெல்லாம் நான் பார்க்கிறேன் எனபதை நான் என் நண்பனிடம் சொல்லவில்லை இப்படி இங்கு எழுதி அவர்கள் அனைவரையும் பாராட்டிவிடலாம் என்று விட்டுவிட்டேன்.

நான் பார்த்த வரை
1.ஒழுங்கான வேலை Platform.ஏறுவதற்கு ஏணி,நின்று வேலை பார்ப்பதற்கு சரியான பலகை,கைப்பிடி பைப்புகள்(சரியான உயரத்துக்கு),Toe Board(சாமான்கள் கீழே விழாமல் இருக்க) & மிக முக்கியமாக அந்த Platform வேலை செய்ய ஏற்றது தான் என்ற சான்றிதழ் வழங்கி அதை அதில் மாட்டியும் வைத்துள்ளார்கள்.
2.தற்காலிக ஓட்டைகளை சுற்று கைப்பிடி போட்டு அதன் மேல் பாகத்தை கனமான மூடி போட்டு மூடி வைத்துள்ளார்கள்.

3.ஏணி படிகளில் உள்ள தற்காலிக கைப்பிடி பைபுகளின் முனையில் பிளாஸ்டிக் குப்பி போட்டு மூடி வைத்துள்ளார்கள் இதன் மூலம் கூர்மையான பாகத்தால கையில் அடிபடாமல் இருக்கும்.
சொல்ல வேண்டுமென்றால் இது போல் பலவற்றை சொல்லலாம்.இதைப்படிக்கும் கட்டுமானத்துறை நண்பர்கள் வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் சேர வேண்டிய நிறுவனம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
இப்படியெல்லாம் இருக்கும் இடம் தான் ஆசியன் கடற்கரை விளையாட்டுக்காக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கட்டிடங்கள்.
மற்றவை அடுத்த பதிவில்.
ஒரு முறை என் அம்மாவுடன் தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருக்கும் போது இன்று விசேஷமான நாள் முடிந்தால் கோவிலுக்கு போய்விட்டு வா- என்றார்.இங்கு என்ன கோவில் நடந்து போகக்கூடிய தூரத்திலா இருக்கு என்று நினைத்துக்கொண்டு,கம்பெனி வண்டி ஃபிரியாக இருந்தால் போகிறேன் இல்லை யாராவது நண்பர்கள் வண்டி கொண்டுவந்தால் அவர்களிடம் கேட்கிறேன் என்று சொல்லி வைத்தேன்.இது நடந்தது காலை மணி 7. நண்பனிடம் இருந்து ஒரு அழைப்பு,என்ன Program இன்று என்று கேட்டார்.வழக்கம் போல் ஒன்றும் இல்லை வீட்டில் தான் இருக்கேன் என்றேன்.சரி ஒரு 10 மணி போல் வருகிறேன் கிருஷ்ணன் கோவிலுக்கு போகலாமா என்றார்??!! ஆச்சரியம். அவன் தயவில் அன்று கோவில் தரிசனம் கிடைத்தது.
என்னுடைய ஒப்பந்த நாள் வரும் 14ம் தேதியோடு முடிவதால் ஒரேடியாக ஊருக்கு கிளம்புவதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்யும் போது இவ்வளவு நாள் இங்கிருந்தோம் கூடியவரை பல இடங்களை பார்த்திருந்தாலும் ஒரு கட்டுமான இடத்துக்கு உள்ளே போய் பார்க்கமுடியவில்லையே என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.25 வருடங்களுக்கு பிறகு சந்தித்த நண்பன் அதே வேலையில் இருந்தாலும் அவனிடம் கேட்பதற்கு கொஞ்சம் கூச்சமாக இருந்தது.கிளம்புவதற்கு முதல் வாரம் வேண்டுமென்றால் கேட்கலாம் என்று நினைத்திருந்தேன்.
L&T-ECC நிறுவனம் என்னுடைய தாய் நிறுவனம் மாதிரி,நான் இங்கு கற்றது இன்று வரை எனக்கு சோறு போடுகிறது.புதிய புதிய தொழிற்நுட்பங்கள்,வித்தியாசமான வேலைகள் என்று அறியும் ஆர்வம் உள்ளவர்களுக்கு தீனி போடும் செமத்தியான இடம் அது.என்ன தான் மலேசியா/சிங்கப்பூர்/துபாய்/மஸ்கட் என்று பல ஊர்களில் கட்டுமான தொழிற்நுட்பங்களை பார்த்திருந்தாலும் 15 வருடங்களுக்கு பிறகு என்னுடைய தாய் நிறுவனத்தில் எப்படி வேலை நடக்குது என்று பார்க்க ஆவலாக இருந்தது.சில வேலைகள் வெளி ஆட்களுக்கு நுழைய தடை இருக்கும் அந்த வகையில் இந்த வேலை இருந்தால் என்னால் உள்ளே போக வேண்டுகோள் கூட வைக்கமுடியாது.இப்படி எண்ணங்கள் மட்டும் ஓடிக்கொண்டிருந்தது.
என்னதான் Gtalk யில் அவன் பெயரில் Available என்று வந்தாலும் அவசியமில்லாமல் அவனும் கூப்பிடமாட்டான் நானும் கூப்பிடமாட்டேன்.இரண்டு வாரங்களுக்கு முன்பு கூப்பிட்டு இந்த வார கடைசியில் முடிந்தால் சந்திக்கலாம் என்றான்.சரி என்றேன் ஆனால் அந்த வாரம் அவனுக்கு வேலை வர அவனால் வரமுடியவில்லை.மறுவாரம் கூப்பிட்டு என்னுடைய வேலை நிலவரங்களை கேட்டுவிட்டு வியாழன் இரவு ஏதோ ஒரு இடம் சொல்லி அங்கு கொஞ்சம் வேலை இருக்கு அங்கு தங்கிவிட்டு மறுநாள் site ஐ சுற்றிப்பார்க்கலாம் என்றார்.ஆச்ச்சரியமோ ஆச்சரியம் நான் கேட்கமாலே நான் நினைத்தது நடக்கவிருந்தது.
வியாழன் இரவு சுமார் 7 மணிக்கு வந்தான் இருவரும் கிளம்பி Seeb (Airport) வழியாக President Palace இருக்கும் இடத்தையும் கடந்து போய்கொண்டிருந்தோம்.Mussanah என்ற இடம் வந்தது அது வரை வண்டி 100 ~ 110 கி.மீ வேகத்தில் வழுக்கிக்கொண்டு போய்க்கொண்டிருந்தது.கிட்டத்தட்ட 105 கி.மீ வந்தவுடன் ஒரு சிறிய கிராமம் போல் இருந்த இடத்தில் ஒரு வில்லாவில் இவர்களுக்காக இடம் ஒதுக்கியிருந்தார்கள் அங்கு தங்கினோம்.ECC முறைப்படி ஒரு Mess ம் இருந்தது.பழைய கதைகளை பேசிவிட்டு சுமார் 11 மணிக்கு படுத்தோம்.
காலை எழுந்து சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பி Site க்கு போனோம். தங்கியிருக்கும் இடத்துக்கும் Site க்கும் சிறிது தூரம் தான் இருந்தாலும் மகிழுந்துவில் தான் போகனும்.நடுநடுவே சில இடங்களில் வீடுகள் கட்டுமானம் நடந்துகொண்டிருந்தது மற்ற படி பொட்டக்காடு தான்.ஒரு துருக்கிஸ் நிறுவனம் தன்னுடைய பேச்சிங் பிளாண்ட் மற்றும் 400 டிப்பர் வகை வாகனங்களை அங்கு நிறுத்திவைத்திருந்தது.ஒரு வேளை வரப்போகும் வேலைக்காக இப்போதே அடுக்க ஆரம்பித்துவிட்டார்களா என்ற யோசனையில் இதற்கான Over Heads என்னவாகும் என்ற நினைப்பும் வந்தது.துபாய் விழுந்ததில் வந்தவையாக கூட இருக்கலாம்.
ECC யில் ஒரு காலத்தில் ஆதாவது நான் வேலை செய்ய ஆரம்பித்திருக்கும் காலத்தில் சிறிய பெரிய விபத்துகள் நிகழத்தொடங்கிய காலம்(1982) அதனால் விபத்துக்கு இழப்பீடு செய்யும் போது காப்பீடு நிறுவனம் இதே நிலை தொடர்ந்தால் அதிக சந்தா கட்டவேண்டும் என்று நிர்பந்திக்க ஆரம்பித்தது அதனால் இவர்களுக்கு சந்தா அதிகமாக கட்டாமல் இருக்கவும் மார்க்கட்டில் கம்பெனி பெயர் நிலை நிருத்தவும் பாதுகாப்புக்கு செலவு செய்வது என்று முடிவெடுத்தார்கள்.என்னுடைய முதல் வேலை இடத்தில் 60 பேருக்கு மேல் இருந்தால் Site இல் 20 ஹெல்மட் தான் இருக்கும்.பெரிய தலைகள் கட்டாயமாக போட்டிருப்பார்கள்.கட்டிடங்கள் அதிக உயரம் எழும்ப எழும்ப சின்ன சின்ன கற்கள் மூலம் காயம் ஏற்படுவதை கண்டு எல்லோருக்கும் ஹெல்மட் கிடைத்தது.வேலையாட்கள் வரை அதை கொண்டு வர பல ஆண்டுகள் பிடித்தது.சித்தாள்கள் தலையில் திண்டு வைப்பதால் ஹெல்மட் என்பது அவர்களுக்கு ஒத்துவராதது என்று ஒதுக்கிவிட்டார்கள்.அப்போதெல்லாம் விபத்து என்று வரும் கேஸ்கள் காலில் ஆணி குத்திவிடுவது தான் அதிகம்.இப்படியெல்லாம் இருந்த நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளில் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது என்பதை நுழைவாயிலில் மாட்டியிருக்கும் பலகை உங்கள் பாதுகாப்பு உங்கள் குடும்பத்துக்கும் பாதுகாப்பு என்று சொல்லி நச் என்று அனைவரது மண்டையில் ஏற்றியிருக்கிறார்கள்.இப்படி நச் என்ற பலகை மாட்டினால் வேலை செய்யும் இடம் பாதுகாப்பாகிவிடுமா? நிச்சயம் முடியாது.வேலை செய்பவர்கள் மற்றும் வேலை வாங்குபவர்கள் இருவரும் சேர்ந்து உழைத்தால் விபத்தே நிகழாமல் ஒரு வேலையை முடிக்கலாம் என்று சொல்லாமல் சொல்லியது மற்றொரு அறிவிப்பு பலகை,அது தான் அவர்களின் 10 மில்லியன் வேலை நேரம்.இமாலய சாதனை என்றே சொல்ல வேண்டும்.நிஜமாக பாதுகாப்புக்காக இவர்கள் உழைக்கிறார்களா? அதற்காக என்னென்ன செய்கிறார்கள் என்பதை பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது.இதையெல்லாம் நான் பார்க்கிறேன் எனபதை நான் என் நண்பனிடம் சொல்லவில்லை இப்படி இங்கு எழுதி அவர்கள் அனைவரையும் பாராட்டிவிடலாம் என்று விட்டுவிட்டேன்.
நான் பார்த்த வரை
1.ஒழுங்கான வேலை Platform.ஏறுவதற்கு ஏணி,நின்று வேலை பார்ப்பதற்கு சரியான பலகை,கைப்பிடி பைப்புகள்(சரியான உயரத்துக்கு),Toe Board(சாமான்கள் கீழே விழாமல் இருக்க) & மிக முக்கியமாக அந்த Platform வேலை செய்ய ஏற்றது தான் என்ற சான்றிதழ் வழங்கி அதை அதில் மாட்டியும் வைத்துள்ளார்கள்.
2.தற்காலிக ஓட்டைகளை சுற்று கைப்பிடி போட்டு அதன் மேல் பாகத்தை கனமான மூடி போட்டு மூடி வைத்துள்ளார்கள்.
3.ஏணி படிகளில் உள்ள தற்காலிக கைப்பிடி பைபுகளின் முனையில் பிளாஸ்டிக் குப்பி போட்டு மூடி வைத்துள்ளார்கள் இதன் மூலம் கூர்மையான பாகத்தால கையில் அடிபடாமல் இருக்கும்.
சொல்ல வேண்டுமென்றால் இது போல் பலவற்றை சொல்லலாம்.இதைப்படிக்கும் கட்டுமானத்துறை நண்பர்கள் வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் சேர வேண்டிய நிறுவனம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
இப்படியெல்லாம் இருக்கும் இடம் தான் ஆசியன் கடற்கரை விளையாட்டுக்காக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கட்டிடங்கள்.
மற்றவை அடுத்த பதிவில்.
Thursday, September 02, 2010
Footing- அஸ்திவாரம்
அஸ்திவாரங்களில் பல வகைகள் இருந்தாலும் பல கட்டிடங்கள் இந்த மாதிரி Footing போட்டு அதன் மீது தூண் எழுப்பி தான் செய்கிறார்கள்.நாங்கள் இப்போது இருக்கும் இடத்துக்கு பக்கத்தில் ஒரு மசூதியை இடித்துவிட்டு புதிதாக கட்டுகிறார்கள் அவ்வப்போது மெது நடை போகும் போது எட்டிப்பார்த்துவிட்டு போவேன் அதிலிருந்து சில படங்கள் கீழே.
கான்கிரீட்டை பாதுகாக்க ஏதோ கருப்பு கலர் பெய்ண்ட் அடித்து இருக்கிறார்கள்.படத்தின் மீது சொடுக்கி பெரிதுபடுத்தி பார்த்தால் இன்னும் பல விபரங்கள் தெரியும்.
கீழே உள்ள படம் துபாயில் எடுத்தது,இந்த மாதிரி Footing தரை முழுவதும் வருமாறு இருக்கும் அதன் மீது தூண்கள் வரும்.இப்படி Footing போடுவதால் அதையே கார் நிறுத்தும் இடமாகவும் உபயோகிக்க முடியும்.

இப்படம் இணையத்தில் கிடைத்தது.என்னை பொருத்தவரை மோசமான உதாரணம்.தூண்,அஸ்திவாரத்தின் நடுவில் இல்லாதது ஒரு பெரும் குறையல்ல ஆனால் இதில் மண்ணை தோண்டுவதற்கு பதில் தோண்டிய மண்ணுக்காக அஸ்திவாரம் போடப்பட்டுள்ளதாக தோன்றுகிறது.

மசூதியின் அஸ்திவாரம்.

இன்னும் அருகே..
கான்கிரீட்டை பாதுகாக்க ஏதோ கருப்பு கலர் பெய்ண்ட் அடித்து இருக்கிறார்கள்.படத்தின் மீது சொடுக்கி பெரிதுபடுத்தி பார்த்தால் இன்னும் பல விபரங்கள் தெரியும்.
கீழே உள்ள படம் துபாயில் எடுத்தது,இந்த மாதிரி Footing தரை முழுவதும் வருமாறு இருக்கும் அதன் மீது தூண்கள் வரும்.இப்படி Footing போடுவதால் அதையே கார் நிறுத்தும் இடமாகவும் உபயோகிக்க முடியும்.
இப்படம் இணையத்தில் கிடைத்தது.என்னை பொருத்தவரை மோசமான உதாரணம்.தூண்,அஸ்திவாரத்தின் நடுவில் இல்லாதது ஒரு பெரும் குறையல்ல ஆனால் இதில் மண்ணை தோண்டுவதற்கு பதில் தோண்டிய மண்ணுக்காக அஸ்திவாரம் போடப்பட்டுள்ளதாக தோன்றுகிறது.

மசூதியின் அஸ்திவாரம்.
இன்னும் அருகே..
Monday, August 09, 2010
இது சரியல்ல.
ஒரு காலத்தில் சென்னையில் வீட்டுக்கு குளிர்சாதன வசதி என்பது விரல்விட்டு எண்ணக்கூடிய நிலையில் தான் இருந்தது ஆனால் இப்போது சுமார் 40 விழுக்காடு வீடுகளில் குளிர்சாதன வசதி வந்துவிட்டது.இரவில் தூங்க காற்றாடி போய் குளிர்சாதனம் அத்தியாவசியமாகிவிட்டது.வீட்டு குளிர்சாதன வசதிக்கு சிறிதும் பெரிதுமாக பல உபகரணங்கள் இருந்தாலும் மத்திய வர்கத்துக்கு கைவசப்படுவது இரண்டு ரகம் தான்,ஒன்று Window Unit மற்றொன்று Split Aircon.
முதல் வகை சுவரில் இருக்கும் ஓட்டையில் அதன் பிரேமுடன் பொருத்தி தேவையான ஆணிகளை கொண்டுமுடுக்கிவிடுவார்கள்.சிங்கையில் இவ்வகையிலும் தரனான Stainless Brackets களை மட்டுமே உபயோகிகவேண்டும் என்ற சட்டம் இருக்கு,ஏனென்றால் இவ்வகை குளிர்சாதன பெட்டி மேலிருந்து கீழே விழுந்து பல விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளது.நம்மூரில் சரியான முறைகளை அமல்படுத்தாவிட்டால் இன்னும் பல விபத்துக்கள் இதனால் ஏற்பட சாத்தியங்கள் உள்ளது.
இரண்டாம் வகை Split Aircon : இது கொஞ்சம் பவர் அதிகம்என்பதாலும் ஒன்றுக்கு மேற்பட்ட அறைகளுக்கு குளிர்சாதன வசதி கொடுக்க முடியும் என்பதால் ஒரு சிறிய கம்பிரசரை பொருத்தி இவ்வசதியை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.இதை பொருத்தும் இடம் மற்றும் சில நியதிகள் இருக்கின்றன.கொஞ்சம் எடை அதிகம் என்பதால் இதை சரியாக பொருத்த வேண்டும் ஆனால் பல மாடிக்கட்டிடங்களில் இம்முறைகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு சன்ஷேடு மேல் வைத்துவிடுகிறார்கள். இந்த சன்ஷேடு சரியான முறையில் கன்கிரீட் போடப்பட்டிருந்தாலும் இவ்வகை எடைகளை தாக்குப்பிடிக்க ஏற்ற வகையில் டிசைன் செய்திருக்கமாட்டார்கள்,அத்துடன் இதிலிருந்து கசியும் நீர் கம்பியை துருபிடிக்கவைத்து கட்டிடத்தை பலமிழுக்கவைத்துவிடும்.கட்டுமான Knowledge மற்றும் வழிமுறைகள் முறையாக செயல்படுத்தாவிட்டால் தேவையில்லாத உயிரிழப்புகள் என்று நாளிழதர்களில் தினமும் பார்க்க நேரிடும்.
முறையான வழியும்,தவறான முறையும் கீழே படங்களில்.
தவறான முறைகள்.


சரியான முறை கீழே.
முதல் வகை சுவரில் இருக்கும் ஓட்டையில் அதன் பிரேமுடன் பொருத்தி தேவையான ஆணிகளை கொண்டுமுடுக்கிவிடுவார்கள்.சிங்கையில் இவ்வகையிலும் தரனான Stainless Brackets களை மட்டுமே உபயோகிகவேண்டும் என்ற சட்டம் இருக்கு,ஏனென்றால் இவ்வகை குளிர்சாதன பெட்டி மேலிருந்து கீழே விழுந்து பல விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளது.நம்மூரில் சரியான முறைகளை அமல்படுத்தாவிட்டால் இன்னும் பல விபத்துக்கள் இதனால் ஏற்பட சாத்தியங்கள் உள்ளது.
இரண்டாம் வகை Split Aircon : இது கொஞ்சம் பவர் அதிகம்என்பதாலும் ஒன்றுக்கு மேற்பட்ட அறைகளுக்கு குளிர்சாதன வசதி கொடுக்க முடியும் என்பதால் ஒரு சிறிய கம்பிரசரை பொருத்தி இவ்வசதியை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.இதை பொருத்தும் இடம் மற்றும் சில நியதிகள் இருக்கின்றன.கொஞ்சம் எடை அதிகம் என்பதால் இதை சரியாக பொருத்த வேண்டும் ஆனால் பல மாடிக்கட்டிடங்களில் இம்முறைகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு சன்ஷேடு மேல் வைத்துவிடுகிறார்கள். இந்த சன்ஷேடு சரியான முறையில் கன்கிரீட் போடப்பட்டிருந்தாலும் இவ்வகை எடைகளை தாக்குப்பிடிக்க ஏற்ற வகையில் டிசைன் செய்திருக்கமாட்டார்கள்,அத்துடன் இதிலிருந்து கசியும் நீர் கம்பியை துருபிடிக்கவைத்து கட்டிடத்தை பலமிழுக்கவைத்துவிடும்.கட்டுமான Knowledge மற்றும் வழிமுறைகள் முறையாக செயல்படுத்தாவிட்டால் தேவையில்லாத உயிரிழப்புகள் என்று நாளிழதர்களில் தினமும் பார்க்க நேரிடும்.
முறையான வழியும்,தவறான முறையும் கீழே படங்களில்.
தவறான முறைகள்.


சரியான முறை கீழே.
Sunday, August 01, 2010
புது மாதிரியான செங்கல்.
கடந்த ஒரு வருடமாக வீடு வாங்க சுற்றி சுற்றி வந்த பல இடங்களிலும் நான் கண்டது இருவகைகளை கொண்ட சுவர்களை மட்டுமே,ஒன்று சுட்ட/பாரம்பரிய செங்கல் மற்றொன்றுஃபிளை ஆஸ் மூலம் செய்யப்படும் செங்கல்.முந்தையது அளவில் சிறியது அடுத்தது அளவில் பெரியது ஆனால் மற்றது சுவர் வேலைகள் சுலபமாக முடிக்கக்கூடியது.இரண்டிலும் சாதக பாதகங்கள் இருக்கின்றன.இந்த இரண்டு மட்டுமே மனதில் இருந்த வேலையில் இன்று மதியம் படப்பை அருகே ஒரு வீடு கட்டுமானத்தளத்துக்கு போன போது எதேச்சையாக கண்ணில் பட்டது அவர்கள் செய்திருந்த சுவர் வேலை.
கீழே உள்ளது ஒரு கல்லின் நீள,அகல உயரங்கள்,சுமாராக 18x18x36 செ.மீட்டர்.

இதனுள் இருக்கும் ஓட்டைகள் அப்படியே இருக்கும் என்பதால் வெளிப்புற சூடு உள்ளே வராது அதோடு உள்ளிருக்கும் குளுமையும் அவ்வளவாக வெளியே போகாது.அவசியம் ஏற்பட்டால் ஒழிய மேற்பூச்சு கூட தேவைப்படாது என்றே நினைக்கிறேன்.
இப்படம் முகப்பில் எடுக்கப்பட்டது.

நிலை வாசலில் சுவர் முடியும் பாகம் இது,இதன் மூலம் அதன் வேலை முறையை அறிந்துகொள்ளலாம்.
கீழே உள்ளது ஒரு கல்லின் நீள,அகல உயரங்கள்,சுமாராக 18x18x36 செ.மீட்டர்.
இதனுள் இருக்கும் ஓட்டைகள் அப்படியே இருக்கும் என்பதால் வெளிப்புற சூடு உள்ளே வராது அதோடு உள்ளிருக்கும் குளுமையும் அவ்வளவாக வெளியே போகாது.அவசியம் ஏற்பட்டால் ஒழிய மேற்பூச்சு கூட தேவைப்படாது என்றே நினைக்கிறேன்.
இப்படம் முகப்பில் எடுக்கப்பட்டது.
நிலை வாசலில் சுவர் முடியும் பாகம் இது,இதன் மூலம் அதன் வேலை முறையை அறிந்துகொள்ளலாம்.
Wednesday, May 19, 2010
மலைக்கே முட்டு!
தினம் தினம் போய்வரும் பாதை அதுவும் வழியில் குறுக்கிடும் குன்றை வெட்டி அது மேலும் சரியாமல் இருக்க படத்தில் உள்ள மாதிரி ஒரு சப்போர்ர்ட்.இத்தொழிற்நுட்பம் பல இடங்களில் பல மாதிரி உபயோகப்படுத்தப்படுகிறது.ஐக்கிய அரபு நாடுகளில் இம்முறை பரவலாக உபயோகப்படுத்தப்படுகிறது.இந்நாள் வரை நேரிடையாக நான் மேற்பார்வை செய்யாத வேலைகளில் இதுவும் ஒன்று ஆனால் புரிந்துகொள்ள அவ்வளவு ஒன்றும் கடினமானது ஒன்றில்லை.
பொது விதியாக, ஓரிடம் சரிகிறது என்றால் அது சரியும் திசைக்கு எதிர்புறத்தில் முட்டு கொடுத்து அது மேலும் சரியாமல் பார்த்துக்கொள்வார்கள் ஆனால் இந்த வேலையில் சரியக்கூடிய திசையில் எவ்வித முட்டும் கண்ணுக்குத்தெரியாது,அப்படியென்றால் இந்த சுவர் எப்படி அந்த மண்ணை சரிவில் இருந்து தாங்கிப்பிடிக்கிறது? அது தான் தொழிற்நுட்பம்.
இந்த தொழிற்நுட்பத்துக்கு MSE என்று பெயர்: ஆதாவது Mechanically Stabilized Earth- இன்னும் எளிதாக சொல்லவேண்டும் என்றால் மண்ணிற்கு நீட்சித்தன்மையை கொடுப்பது.மண்ணினால் தள்ளப்படும் விசையை அதே மண்ணைக்கொண்டு தாங்கிப்பிடிக்கக்கூடிய செயல் முறை.மேலை நாடுகளில் பல தரப்பட்ட முறையில் 1980 களிலேயே பல இடங்களில் பல தரப்பட்ட சாமான்கள் மூலம் முயற்சித்து வெற்றிகொள்ளப்பட்ட தொழிற்நுட்பம் இது.
முதலில் பக்கவாட்டு சுவர் Precast முறைப்படி சிறிய சிறிய பாகங்களாக கொண்டுவருவார்கள் அதை முதலில் நிறுத்தி அதற்கு தற்காலிக முட்டு கொடுப்பார்கள் அதன் பிறகு அதோடு Steel Flats அல்லது சிறிய கம்பி வலைகளை பொருத்துவார்கள்.

நன்றி:ரியின்ஃபோர்ஸேட் எர்த்(படங்கள்)

இந்த கம்பிவலை தான் பக்கவாட்டு சுவர் வெளியே போகாமல் இழுத்துபிடித்துக்கொள்ளும்.சுவரின் உயரத்தை வைத்து இந்த வலை நீளம் இருக்கும்.பொறியாளர்களின் மதிப்பு படி ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் இந்த வலை சுவர் நீளத்துக்கு குறுக்குவாட்டில் இருக்கும்.படிப்படியாக தரமான மண்ணை போட்டு Compact செய்துகொண்டே போகனும்.இந்த மண் இறுக்கம் தான் தான் அந்த கம்பிவலையையும் மண்ணையும் ஒன்றாக்கி சுவர் வெளிப்பக்கம் சாயாமல் இருக்க உதவும்.
இப்படியெல்லாம் எழுதினா பலருக்கு புரிய வாய்ப்பில்லை தான் ஆனால் சென்னை தி.நகர் பாலம்,போத்தீஸ் பக்கம் இறங்கும் இடத்தில் உள்ள பாலத்தின் பகுதி இம்முறையில் தான் கட்டப்பட்டுள்ளது,என்றாவது அந்த பக்கம் போகும் போது ஞாபகம் இருந்தால் பாருங்கள்.இத்தொழிற்நுட்பம் இந்தியாவில் பல இடங்களிலும் கையாளப்படுவருகிறது.என்ன தான் தொழிற்நுட்பம் அதன் வேலையை செய்தாலும் முறையான கண்காணிப்பு இல்லாவிட்டால் மழை நீர் உட்புகுந்து அந்த இரும்பு வலைகளை துருபிடிக்க வைத்து அதன் செயல் திறனை குறைக்கும் வாய்ப்புள்ளது.
Thursday, May 13, 2010
சென்னையில் வீடு வாங்கியிருக்கிறீர்களா?
சொன்னா நம்பமாட்டீங்க,சமீபத்தில் நானும் சென்னையில் ஒரு வீடு வாங்கலாம் என்று சுமார் 1 வருடமாக அலைகிறேன்..ஹூகும் முடியவில்லை.எப்படியும் பேங்க் லோன் போட்டே ஆகனும் என்ற நிலை இருந்தாலும் நான் பார்க்கிற அல்லது எனக்கு காண்பிக்கிப்படுகிற வீடுகள் அவ்வளவும் சில முக்கியமான விஷயங்களில் விட்டுக்கொடுத்து போக வேண்டியுள்ளது.சென்னைக்கு உள்ளே கட்டப்படும் பல வீடுகள் நடுத்தர குத்தகைக்காரர்களாகவே அல்லது பில்டர்ஸ்களாலேயே கட்டப்படுகிறது.இவர்கள் வேலையை எடுத்து முன் அனுபவம் உள்ள குத்தகைக்காரர்களிடம் கொடுத்துவிடுகிறார்கள் அதன் பிறகு அவ்வப்போது உள் நுழைந்து பார்பதோடு சரி.எனக்கு தெரிந்த அளவில் தரக்கட்டுப்பாடு என்பது அதுவாக நிகழ்தாலொழிய இவர்களால் கொடுக்க இயலாது ஏனென்றால் இவர்கள் சொல்லும் காரணம்
சதுர அடிக்கு பேசியுள்ள விலை
வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை
சாமான்கள் விலை ஏறிவிட்டது.
வேலையை முடிக்க நிறைய நேரமாகும்.. இப்படி பல.
நான் நுழைந்து பார்த்த பல வீடுகளின் கான்கிரீட், போட்ட பின்பும் கம்பி வெளியில் தெரிந்தவையாகவே இருந்தது.Cantilever Slab க்கு கம்பி கீழ்பகுதியில் கட்டி தூக்கிக்கொண்டு போகும் போது..இந்த துறையில் இருந்துகொண்டு இப்படி ஒரு நிலையை பார்க்கும் போது அப்படியே வெளியே ஒடிப்போய்விடனும் என்று தோனும்,எவ்வளவு வீட்டுக்கு அப்படி போவது?சிலவற்றில் செங்கற்கள் தரமாக இருக்கும் ஆனால் சிலாப் சிமிண்ட் மோசமாக இருக்கும்,இன்னொன்றில் இதற்கு அப்படியே ஏறுமாறாக இருக்கும்.பல வீடுகளில் அறைகள் சிறியதாகவும் அமைப்பாகவும் இருக்காது.பாதி கட்டிக்கொண்டு இருக்கும் வீட்டுக்கு தாத்தாக்களை/பாட்டிகளையெல்லாம் அழைத்துப்போக கூடாது,ஏதோ நாளையே அங்கு குடி வருவது போல் நொட்டாங்கு சொல்லிக்கொண்டிருப்பார்கள் அதோடில்லாமல் செங்கல் சரியில்லை என்பார்கள்.பழைய காலங்களில் மேற்கூரை மற்றும் பலவற்றின் Weight சுவற்றின் வழியாகத்தான் தரைக்கு எடுத்துச்செல்லப்படும் அதனால் செங்கல்லின் தரம் முக்கியமான ஒன்று ஆனால் இப்போதெல்லாம் Column/Beam வழியாக செல்வதால் சுற்றுச்சுவர்கள் எல்லாமே ஒரு மறைப்புச்சுவர் தான். தடுப்புச்சுவருக்கு சுதி சுத்தமான செங்கல் என்பது அத்தியாவசியம் இல்லை.குத்தகைக்காரர்களுக்கு செங்கல் சுவர் கட்டுவது பழகிக்போன ஒன்று அவ்வளவு தான். அதை விட செலவு குறைவாக பிடிக்கக்கூடிய வேலைகள் நிறைய இருந்தாலும் அவ்வளவாக பயண்பாட்டில் காண முடிவதில்லை. மிக மிக முக்கியமாக Violation என்று சொல்லப்படுகிற அரசாங்க விதிமுறை மீறல் நான் பார்த்த பல இடங்களிலும் அளவில் வித்தியாசத்துடன் இருந்தது.ஏதோ ஒரு சமயத்தில் அரசாங்கம் விழித்துக்கொண்டு அதையெல்லாம் இடிக்கனும் என்று புறப்பட்டால் நகரத்தில் உள்ள 90% கட்டிடங்களை இடிக்கவேண்டியிருக்கும்(சென்னையில் மட்டும்).
உதாரணம் 1:என் பெற்றோர் இருக்கும்(தெருவில்) நங்கநல்லூரில் அனைத்து வீடுகளும் G+1,ஆதாவது சாலையில் அகலம் வைத்து வீட்டின் உயரத்தை முடிவு செய்து அதையே அங்கிருக்கும் அனைவரும் கடைபிடித்து வீடு கட்டியுள்ளார்கள் ஆனால் ஒரு வீடு மாத்திரம் ஒரு மாடி அதிகம் ஏனென்றால் அது அந்த ஏரியா கவுன்சிலர் வீடு.இந்த வீடு தான் சமீபத்தில் கட்டிய வீடுகளில் ஒன்று.
உதாரணம் 2:விருகம்பாக்கத்தில் ஒரு வீடு அதுவும் Dead Endல் உள்ள வீடு,அவ்வீட்டை அனுகும் சாலையும் அகலத்தில் மிக குறைவு இருந்தாலும் அவர்கள் G+2 உயரத்துக்கு கட்டியுள்ளார்கள்.கேட்க ஆளில்லை போலும்!ஏதோ ஒரு விபத்து நேரிட்டால் பக்கத்தில் உள்ள பல வீட்டிக்காரர்களும் தங்கள் வீட்டை இழக்கவேண்டும்.இழப்பீடு இன்ஷூர் செய்திருந்தால் கிடைக்கலாம்,இல்லாவிட்டால் அதோ கதி தான்.
இப்பிரச்சனையை வேறு ஏதாவது தேர்தலுக்கு ஏதாவது ஒரு கட்சி Trump Card ஆக உபயோகித்துக்கொள்ளக்கூடும்.மக்களுக்கு இலவசமாக அனுமதி பத்திரமும் கொடுக்கப்படும்.
ஆமாம் இதென்ன அரசாங்க விதிமுறை மீறல்??
ஒரு வீடு என்பது எப்படி அமையவேண்டும் என்ற விதிமுறை.2400 சதுர அடியில் 65(இப்ப 70% என்று நினைக்கிறேன்) விழுக்காடு மட்டுமே கட்டிடம் அமையவேண்டும் போன்ற விதிமுறைகள் சர்வசாதரணமாக காற்றில் விடப்படுவது,இது கொஞ்சம் பெரிய சப்ஜெக்ட் இதில் பில்டர்ஸ் பண்ணும் கோல்மால்கள் ஒரு பெரிய நாவல் எழுதும் அளவுக்கு உள்ளது.நான் பார்த்த ஒரு வீட்டில் பக்கத்து பிளாட்டு சன்ஷேடுக்கு நடந்தே போகலாம் என்ற இடைவெளி மட்டுமே இருந்தது.இவ்வளவு குருகிய இடைவெளி இருந்தால் நாள் முழுவதும் அறையில் மின்வெளிச்சம் வேண்டியிருக்கும் அதோடு வெய்யில் காலங்களில் ஒவ்வொரு வீடும் வெளியிடும் வெப்பம் வெளியேற வழியில்லாமல் வீடே Oven மாதிரி இருக்கும்.பிறகு என்ன? குளிர்சாதன வசதி செய்துகொண்டு அதற்கு மின்சாரம் கிடைக்கவில்லை என்று புலம்பிக்கொண்டிருக்கவேண்டியது தான்.
சென்னை மாதிரி நகரங்களில் Town Planning Council என்று ஒன்று இருக்கிறது, இவர்களிடம் தான் இந்த இடங்களில் இந்த மாதிரியான கட்டிடங்கள் வரலாம் என்ற நியதியும் உள்ளது அதுபடி தான் அனுமதியும் வழங்குகிறார்கள்,ஆனால் அதை மேற்பார்வை செய்ய அல்லது கட்டுப்படுத்த ஏதாவது செய்கிறார்களா? என்பது சந்தேகமாகவே இருக்கிறது.
இதுவரை பார்த்தது முதல் படி தான்.வீடு இருக்கும் இடம் அவர்கள் சொல்லும் அளவு பிடித்திருந்தால் அவர்களிடம் முன் பணம் கொடுத்து அந்த நிலப்பகுதியின் பட்டா விபரங்களை வாங்கவேண்டும் அதை தேர்ந்த நோட்டரியிடமோ அல்லது வக்கீலீடமோ கொடுத்து ஆவணங்கள் சரியாக இருக்கிறதா? என்று பார்க்கவேண்டும்.இவ்வேளையை செய்ய 1500 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள்.இப்படி சொல்வதிலும் ஒருவொருக்கொருவர் வேறுபடுகிறார்கள்.இந்த இரண்டாவது படியையும் ஆண்டவன் மேல் பாரத்தை போட்டு மேலே போவோம்.
வீடு பிடிச்சிருக்கு,வில்லங்கம் இல்லாத நிலம் என்று சான்றிதழ் இருக்கு அடுத்து இங்கு கட்டிடம் கட்ட அனுமதி இருக்கா என்று பார்க்கனும்!! அதிலும் வேடிக்கை தான்.பிளானை கொடுக்கும் போதே அதில் இருக்கும் சீலெல்லாம் நம்மை ஓரளவுக்கு நம்பவைக்கும் திசையை நோக்கி இழுத்துப்போகும் ஆனால் அதனுள்ளும் பல்வேறு விஷயங்கள் இருக்கும்.இதனுள் இருக்கும் விஷயங்களை தெளிவாக எழுதனும் என்றால் இன்னும் அதனுள் போய் பார்த்தால் தான் தெரியும்.கொஞ்சம் கேள்வி கேட்கும் ஞானம் இருந்தாலே போதும் இதிலும் வில்லங்கம் இருக்கு என்று.
இந்த கடைசி படி தான் சூப்பரோ சூப்பர்,அது தான் உங்க வீட்டின் அளவு(சதுர அடியில்).இதில் எப்படியெல்லாம் விளையாடிகிறார்கள் என்று ஒரு நண்பர் விவரித்த போது அப்படியே அசந்து இனி நம்மால் முடியாது என்று கையை மேலே தூக்கிடவேண்டியது தான்.வீட்டின் அளவை அவர்கள் சொல்லிய அளவில் வாங்குபவர்களுக்கே முன்னுரிமை அதில் ஏதாவது கேள்வி கேட்டால் நீங்கள் காஞ்சிபுரம் அருகே தான் வீடு பார்க்கவேண்டும்.
ஒன்னே ஒன்னு மறந்திட்டேன்....உங்களிடம் எப்படிப்பட்ட Payment Schedule இருக்கு? அதற்கு தகுந்த மாதிரி வீடு கிடைக்கும்.அதென்ன Payment Schedule???
மார்க்கெட்டில் விஜாரியுங்கள். :-)
இவ்வளவு தொந்தரவுகளையும் ஓரளவு தவிர்க்கலாம் ECR/OMR பகுதியில் கட்டப்படும் அடுக்கு மாடிகளை தேர்வு செய்தால் ஆனால் வேலை இடத்துக்கு வந்து போக கொஞ்சம் நேரமாகும்.
சதுர அடிக்கு பேசியுள்ள விலை
வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை
சாமான்கள் விலை ஏறிவிட்டது.
வேலையை முடிக்க நிறைய நேரமாகும்.. இப்படி பல.
நான் நுழைந்து பார்த்த பல வீடுகளின் கான்கிரீட், போட்ட பின்பும் கம்பி வெளியில் தெரிந்தவையாகவே இருந்தது.Cantilever Slab க்கு கம்பி கீழ்பகுதியில் கட்டி தூக்கிக்கொண்டு போகும் போது..இந்த துறையில் இருந்துகொண்டு இப்படி ஒரு நிலையை பார்க்கும் போது அப்படியே வெளியே ஒடிப்போய்விடனும் என்று தோனும்,எவ்வளவு வீட்டுக்கு அப்படி போவது?சிலவற்றில் செங்கற்கள் தரமாக இருக்கும் ஆனால் சிலாப் சிமிண்ட் மோசமாக இருக்கும்,இன்னொன்றில் இதற்கு அப்படியே ஏறுமாறாக இருக்கும்.பல வீடுகளில் அறைகள் சிறியதாகவும் அமைப்பாகவும் இருக்காது.பாதி கட்டிக்கொண்டு இருக்கும் வீட்டுக்கு தாத்தாக்களை/பாட்டிகளையெல்லாம் அழைத்துப்போக கூடாது,ஏதோ நாளையே அங்கு குடி வருவது போல் நொட்டாங்கு சொல்லிக்கொண்டிருப்பார்கள் அதோடில்லாமல் செங்கல் சரியில்லை என்பார்கள்.பழைய காலங்களில் மேற்கூரை மற்றும் பலவற்றின் Weight சுவற்றின் வழியாகத்தான் தரைக்கு எடுத்துச்செல்லப்படும் அதனால் செங்கல்லின் தரம் முக்கியமான ஒன்று ஆனால் இப்போதெல்லாம் Column/Beam வழியாக செல்வதால் சுற்றுச்சுவர்கள் எல்லாமே ஒரு மறைப்புச்சுவர் தான். தடுப்புச்சுவருக்கு சுதி சுத்தமான செங்கல் என்பது அத்தியாவசியம் இல்லை.குத்தகைக்காரர்களுக்கு செங்கல் சுவர் கட்டுவது பழகிக்போன ஒன்று அவ்வளவு தான். அதை விட செலவு குறைவாக பிடிக்கக்கூடிய வேலைகள் நிறைய இருந்தாலும் அவ்வளவாக பயண்பாட்டில் காண முடிவதில்லை. மிக மிக முக்கியமாக Violation என்று சொல்லப்படுகிற அரசாங்க விதிமுறை மீறல் நான் பார்த்த பல இடங்களிலும் அளவில் வித்தியாசத்துடன் இருந்தது.ஏதோ ஒரு சமயத்தில் அரசாங்கம் விழித்துக்கொண்டு அதையெல்லாம் இடிக்கனும் என்று புறப்பட்டால் நகரத்தில் உள்ள 90% கட்டிடங்களை இடிக்கவேண்டியிருக்கும்(சென்னையில் மட்டும்).
உதாரணம் 1:என் பெற்றோர் இருக்கும்(தெருவில்) நங்கநல்லூரில் அனைத்து வீடுகளும் G+1,ஆதாவது சாலையில் அகலம் வைத்து வீட்டின் உயரத்தை முடிவு செய்து அதையே அங்கிருக்கும் அனைவரும் கடைபிடித்து வீடு கட்டியுள்ளார்கள் ஆனால் ஒரு வீடு மாத்திரம் ஒரு மாடி அதிகம் ஏனென்றால் அது அந்த ஏரியா கவுன்சிலர் வீடு.இந்த வீடு தான் சமீபத்தில் கட்டிய வீடுகளில் ஒன்று.
உதாரணம் 2:விருகம்பாக்கத்தில் ஒரு வீடு அதுவும் Dead Endல் உள்ள வீடு,அவ்வீட்டை அனுகும் சாலையும் அகலத்தில் மிக குறைவு இருந்தாலும் அவர்கள் G+2 உயரத்துக்கு கட்டியுள்ளார்கள்.கேட்க ஆளில்லை போலும்!ஏதோ ஒரு விபத்து நேரிட்டால் பக்கத்தில் உள்ள பல வீட்டிக்காரர்களும் தங்கள் வீட்டை இழக்கவேண்டும்.இழப்பீடு இன்ஷூர் செய்திருந்தால் கிடைக்கலாம்,இல்லாவிட்டால் அதோ கதி தான்.
இப்பிரச்சனையை வேறு ஏதாவது தேர்தலுக்கு ஏதாவது ஒரு கட்சி Trump Card ஆக உபயோகித்துக்கொள்ளக்கூடும்.மக்களுக்கு இலவசமாக அனுமதி பத்திரமும் கொடுக்கப்படும்.
ஆமாம் இதென்ன அரசாங்க விதிமுறை மீறல்??
ஒரு வீடு என்பது எப்படி அமையவேண்டும் என்ற விதிமுறை.2400 சதுர அடியில் 65(இப்ப 70% என்று நினைக்கிறேன்) விழுக்காடு மட்டுமே கட்டிடம் அமையவேண்டும் போன்ற விதிமுறைகள் சர்வசாதரணமாக காற்றில் விடப்படுவது,இது கொஞ்சம் பெரிய சப்ஜெக்ட் இதில் பில்டர்ஸ் பண்ணும் கோல்மால்கள் ஒரு பெரிய நாவல் எழுதும் அளவுக்கு உள்ளது.நான் பார்த்த ஒரு வீட்டில் பக்கத்து பிளாட்டு சன்ஷேடுக்கு நடந்தே போகலாம் என்ற இடைவெளி மட்டுமே இருந்தது.இவ்வளவு குருகிய இடைவெளி இருந்தால் நாள் முழுவதும் அறையில் மின்வெளிச்சம் வேண்டியிருக்கும் அதோடு வெய்யில் காலங்களில் ஒவ்வொரு வீடும் வெளியிடும் வெப்பம் வெளியேற வழியில்லாமல் வீடே Oven மாதிரி இருக்கும்.பிறகு என்ன? குளிர்சாதன வசதி செய்துகொண்டு அதற்கு மின்சாரம் கிடைக்கவில்லை என்று புலம்பிக்கொண்டிருக்கவேண்டியது தான்.
சென்னை மாதிரி நகரங்களில் Town Planning Council என்று ஒன்று இருக்கிறது, இவர்களிடம் தான் இந்த இடங்களில் இந்த மாதிரியான கட்டிடங்கள் வரலாம் என்ற நியதியும் உள்ளது அதுபடி தான் அனுமதியும் வழங்குகிறார்கள்,ஆனால் அதை மேற்பார்வை செய்ய அல்லது கட்டுப்படுத்த ஏதாவது செய்கிறார்களா? என்பது சந்தேகமாகவே இருக்கிறது.
இதுவரை பார்த்தது முதல் படி தான்.வீடு இருக்கும் இடம் அவர்கள் சொல்லும் அளவு பிடித்திருந்தால் அவர்களிடம் முன் பணம் கொடுத்து அந்த நிலப்பகுதியின் பட்டா விபரங்களை வாங்கவேண்டும் அதை தேர்ந்த நோட்டரியிடமோ அல்லது வக்கீலீடமோ கொடுத்து ஆவணங்கள் சரியாக இருக்கிறதா? என்று பார்க்கவேண்டும்.இவ்வேளையை செய்ய 1500 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள்.இப்படி சொல்வதிலும் ஒருவொருக்கொருவர் வேறுபடுகிறார்கள்.இந்த இரண்டாவது படியையும் ஆண்டவன் மேல் பாரத்தை போட்டு மேலே போவோம்.
வீடு பிடிச்சிருக்கு,வில்லங்கம் இல்லாத நிலம் என்று சான்றிதழ் இருக்கு அடுத்து இங்கு கட்டிடம் கட்ட அனுமதி இருக்கா என்று பார்க்கனும்!! அதிலும் வேடிக்கை தான்.பிளானை கொடுக்கும் போதே அதில் இருக்கும் சீலெல்லாம் நம்மை ஓரளவுக்கு நம்பவைக்கும் திசையை நோக்கி இழுத்துப்போகும் ஆனால் அதனுள்ளும் பல்வேறு விஷயங்கள் இருக்கும்.இதனுள் இருக்கும் விஷயங்களை தெளிவாக எழுதனும் என்றால் இன்னும் அதனுள் போய் பார்த்தால் தான் தெரியும்.கொஞ்சம் கேள்வி கேட்கும் ஞானம் இருந்தாலே போதும் இதிலும் வில்லங்கம் இருக்கு என்று.
இந்த கடைசி படி தான் சூப்பரோ சூப்பர்,அது தான் உங்க வீட்டின் அளவு(சதுர அடியில்).இதில் எப்படியெல்லாம் விளையாடிகிறார்கள் என்று ஒரு நண்பர் விவரித்த போது அப்படியே அசந்து இனி நம்மால் முடியாது என்று கையை மேலே தூக்கிடவேண்டியது தான்.வீட்டின் அளவை அவர்கள் சொல்லிய அளவில் வாங்குபவர்களுக்கே முன்னுரிமை அதில் ஏதாவது கேள்வி கேட்டால் நீங்கள் காஞ்சிபுரம் அருகே தான் வீடு பார்க்கவேண்டும்.
ஒன்னே ஒன்னு மறந்திட்டேன்....உங்களிடம் எப்படிப்பட்ட Payment Schedule இருக்கு? அதற்கு தகுந்த மாதிரி வீடு கிடைக்கும்.அதென்ன Payment Schedule???
மார்க்கெட்டில் விஜாரியுங்கள். :-)
இவ்வளவு தொந்தரவுகளையும் ஓரளவு தவிர்க்கலாம் ECR/OMR பகுதியில் கட்டப்படும் அடுக்கு மாடிகளை தேர்வு செய்தால் ஆனால் வேலை இடத்துக்கு வந்து போக கொஞ்சம் நேரமாகும்.
Thursday, March 25, 2010
கம்பியின் நிலை.
கட்டுமானத்துறையில் கம்பியின் பங்கு என்பது இன்றியமையாதது.பல கட்டுமானங்கள் நிமிர்ந்து பல காலம் நிட்கவும் அதே சமயத்தில் முறையாக உபயோகப்படுத்தாததால் சரிந்து விழுவதும் அடிக்கடி நிகழ்கின்ற நிகழ்வுகள்.அதென்ன கம்பியை சரியாக பயண்படுத்தாத முறை??
நிறையவே இருக்கு,இடம் சூழல் இவற்றை கணக்கில் எடுத்துக்கொன்டு கான்கிரீட்டில் உள்ளிருக்கும் கம்பி வெளிப்புறத்தில் இருந்து எவ்வளவு தூரம் இருக்கனும் என்பதை பொறியாளர்களும் தரநிர்ணய கழகமும் சொலியிருக்கிறார்கள்.உதாரணத்துக்கு தஞ்சாவூரில் ஒரு கட்டிடம் என்றால் அதன் பீமின்(Beam) உள்ளே போடப்படும் கம்பி வெளியில் இருந்து 40mm இருக்கனும் அதுவே நாகப்பட்டினத்தில் கட்டப்படும் பீமில் 50 mm இருக்கனும்.உப்புக்காற்றின் தாக்கத்தை முன்னிட்டு இதை முடிவு செய்துள்ளார்கள்.முடிவு செய்வது எல்லாம் சுலபம் தான் ஆனால் பீம் கம்பி கட்டி கான்கிரீட் போடும் போது அது சரியான நிலையில் இருக்கிறதா என்பதை மேற்பார்வை செய்பவர்கள் கையில் தான் உள்ளது.என்ன தான் மேற்பார்வையாளர் பக்கத்தில் இருந்து கான்கிரீட் போட்டாலும் வேலை செய்பவர்களும் மற்றும் வேறு சில காரணங்களாலும் கம்பி அது உள்ள நிலையில் இருந்து விலக வழியிருக்கு.இந்த மாதிரி வழிகளை பல முறையில் அடைக்கலாம் என்றாலும் அது முழு பயணை பெரும்பாலான சமயங்களில் கொடுப்பதில்லை.
கீழே உள்ள படங்களை பாருங்கள்.
30 ஆண்டு பழமையான ஒரு கட்டிடத்தின் பகுதிகள் முக்கியமாக கூறையின் கீழ் பகுதி.
இங்கு என்ன நடந்துள்ளது? ஆதாவது கான்கிரீட்டின் அடிப்பகுதிக்கும் கம்பிக்கும் தேவையான தூரத்தை விடவில்லை.இதை ஒழுங்குபடுத்த கான்கிரீட் போடும் போது கம்பியின் கீழ் Cover Block என்று சொல்லப்படுகிற சிறிய கான்கிரீட் துண்டைவைத்து அதை கம்பியுடன் கட்டிவிடுவார்கள்,அதனால் கம்பி தன் நிலையில் இருக்கும்.இப்படி சொல்வது எளிதென்றாலும் கான்கிரீட் போடும் இடம் ஒரு போர்களம் அங்கு இதெயெல்லாம் தெளிவாக பார்த்துக்கொண்டிருக்க முடியாது.ஒன்றிருந்தால் போதும் என்ற இடத்தில் 3 வைப்பார்கள்.மேலே உள்ள படத்தில் இந்த மாதிரி Block இல்லாததால் கம்பி கீழே உள்ள சாரத்துடன் ஒட்டிக்கொண்டுவிட்டது,நாள் ஆக ஆக வெளிப்புற காற்றில் உள்ள ஈரப்பதம் கான்கிரீட் உள்ளோ போனதால் கம்பியும் ஆக்ஜிஜனும் சேர்ந்து வேதியல் மாற்றம் அடைய கம்பி துறு பிடித்து அதன் அளவில் விரிவடைய ஆரம்பித்திருக்கு அதன் மூலம் கீழிருக்கும் மெலிதான கான்கிரீட்டை தள்ள ஆரம்பித்திருக்கு.வலுவிழிந்திருக்கும் கான்கிரீட் கீழே விழுந்துவிட்டது.
சரி,இப்போது என்ன பண்ணுவது?30 வருடங்களுக்கு முன்பு போய் யாரையெல்லாம் காரணகர்தாவாக முடியும்? அதற்கு ஆகும் செலவுக்கு தேவையான மராமத்து வேலைகளை பார்த்து குடிபுகும் வழியை பார்பது தான் உசிதம்.மராமத்து பார்த்தால் சரியாகிவிடுமா?
இந்த கேள்விக்கு சரியான Test மூலமும் தேர்ந்த பொறியாளருமே விடை கொடுக்கமுடியும்.என்னென்ன சோதனை செய்வார்கள் அதை எப்படி ஒரு பொறியாளர் அனுகுவார் என்பன எனக்கு அவ்வளவாக தெரியாது அதனால் எப்படி இதை ரிப்பேர் செய்தார்கள் என்பதை மட்டும் இப்போது பார்ப்போம்.
முதலில் இக்கம்பிகளை சுத்தப்படுத்துவார்கள் அதன் பிறகு ஒருவித ரசாயன கலவையை கொண்டு அதன் மீது பூசுவார்கள்.இது ஒரு வகை பெயிண்ட்.அதன் பிறகு அது காயும் வரை காத்திருந்து அதன் மீது கீழ்கண்ட படத்தில் உள்ள சிமிண்ட் கலவையை பூசுவார்கள்.இதன் மூலம் ஒன்று துறுபிடிப்பதை தவிர்த்தல் அடுத்து அக்கம்பிகள் வெளிக்காற்றுடன் உள்ள தொடர்பை கட்டுப்படுத்துதல் என்ற இருவித பணிகளை செய்கிறது.
நிறையவே இருக்கு,இடம் சூழல் இவற்றை கணக்கில் எடுத்துக்கொன்டு கான்கிரீட்டில் உள்ளிருக்கும் கம்பி வெளிப்புறத்தில் இருந்து எவ்வளவு தூரம் இருக்கனும் என்பதை பொறியாளர்களும் தரநிர்ணய கழகமும் சொலியிருக்கிறார்கள்.உதாரணத்துக்கு தஞ்சாவூரில் ஒரு கட்டிடம் என்றால் அதன் பீமின்(Beam) உள்ளே போடப்படும் கம்பி வெளியில் இருந்து 40mm இருக்கனும் அதுவே நாகப்பட்டினத்தில் கட்டப்படும் பீமில் 50 mm இருக்கனும்.உப்புக்காற்றின் தாக்கத்தை முன்னிட்டு இதை முடிவு செய்துள்ளார்கள்.முடிவு செய்வது எல்லாம் சுலபம் தான் ஆனால் பீம் கம்பி கட்டி கான்கிரீட் போடும் போது அது சரியான நிலையில் இருக்கிறதா என்பதை மேற்பார்வை செய்பவர்கள் கையில் தான் உள்ளது.என்ன தான் மேற்பார்வையாளர் பக்கத்தில் இருந்து கான்கிரீட் போட்டாலும் வேலை செய்பவர்களும் மற்றும் வேறு சில காரணங்களாலும் கம்பி அது உள்ள நிலையில் இருந்து விலக வழியிருக்கு.இந்த மாதிரி வழிகளை பல முறையில் அடைக்கலாம் என்றாலும் அது முழு பயணை பெரும்பாலான சமயங்களில் கொடுப்பதில்லை.
கீழே உள்ள படங்களை பாருங்கள்.
30 ஆண்டு பழமையான ஒரு கட்டிடத்தின் பகுதிகள் முக்கியமாக கூறையின் கீழ் பகுதி.
இங்கு என்ன நடந்துள்ளது? ஆதாவது கான்கிரீட்டின் அடிப்பகுதிக்கும் கம்பிக்கும் தேவையான தூரத்தை விடவில்லை.இதை ஒழுங்குபடுத்த கான்கிரீட் போடும் போது கம்பியின் கீழ் Cover Block என்று சொல்லப்படுகிற சிறிய கான்கிரீட் துண்டைவைத்து அதை கம்பியுடன் கட்டிவிடுவார்கள்,அதனால் கம்பி தன் நிலையில் இருக்கும்.இப்படி சொல்வது எளிதென்றாலும் கான்கிரீட் போடும் இடம் ஒரு போர்களம் அங்கு இதெயெல்லாம் தெளிவாக பார்த்துக்கொண்டிருக்க முடியாது.ஒன்றிருந்தால் போதும் என்ற இடத்தில் 3 வைப்பார்கள்.மேலே உள்ள படத்தில் இந்த மாதிரி Block இல்லாததால் கம்பி கீழே உள்ள சாரத்துடன் ஒட்டிக்கொண்டுவிட்டது,நாள் ஆக ஆக வெளிப்புற காற்றில் உள்ள ஈரப்பதம் கான்கிரீட் உள்ளோ போனதால் கம்பியும் ஆக்ஜிஜனும் சேர்ந்து வேதியல் மாற்றம் அடைய கம்பி துறு பிடித்து அதன் அளவில் விரிவடைய ஆரம்பித்திருக்கு அதன் மூலம் கீழிருக்கும் மெலிதான கான்கிரீட்டை தள்ள ஆரம்பித்திருக்கு.வலுவிழிந்திருக்கும் கான்கிரீட் கீழே விழுந்துவிட்டது.
சரி,இப்போது என்ன பண்ணுவது?30 வருடங்களுக்கு முன்பு போய் யாரையெல்லாம் காரணகர்தாவாக முடியும்? அதற்கு ஆகும் செலவுக்கு தேவையான மராமத்து வேலைகளை பார்த்து குடிபுகும் வழியை பார்பது தான் உசிதம்.மராமத்து பார்த்தால் சரியாகிவிடுமா?
இந்த கேள்விக்கு சரியான Test மூலமும் தேர்ந்த பொறியாளருமே விடை கொடுக்கமுடியும்.என்னென்ன சோதனை செய்வார்கள் அதை எப்படி ஒரு பொறியாளர் அனுகுவார் என்பன எனக்கு அவ்வளவாக தெரியாது அதனால் எப்படி இதை ரிப்பேர் செய்தார்கள் என்பதை மட்டும் இப்போது பார்ப்போம்.
முதலில் இக்கம்பிகளை சுத்தப்படுத்துவார்கள் அதன் பிறகு ஒருவித ரசாயன கலவையை கொண்டு அதன் மீது பூசுவார்கள்.இது ஒரு வகை பெயிண்ட்.அதன் பிறகு அது காயும் வரை காத்திருந்து அதன் மீது கீழ்கண்ட படத்தில் உள்ள சிமிண்ட் கலவையை பூசுவார்கள்.இதன் மூலம் ஒன்று துறுபிடிப்பதை தவிர்த்தல் அடுத்து அக்கம்பிகள் வெளிக்காற்றுடன் உள்ள தொடர்பை கட்டுப்படுத்துதல் என்ற இருவித பணிகளை செய்கிறது.
Wednesday, January 06, 2010
என்ன,இப்படி சொல்லிட்டாங்களே!!
சும்மா தானே இருக்கோம் இப்போ என்று நான் முன்பு வேலை செய்த பாலத்தின்(மலேசியாவில்) புதிய படம் ஏதாவது இருக்கா என்று கூகிளிடம் தேடிய போது ஒரு அருமையான படம் கிடைத்தது.
இங்கே
படுபாவி கேமிராமேன் இப்படி ஒரு கமெண்ட் போட்டு என்னவோ பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி மானத்தை வாங்கிட்டான்.அப்ப அவன் சொன்னது எல்லாம் பொய்யா?
இல்லை.
நிலத்தில் பார்க்கும் போது மண் தோண்டி அவ்வளவாக உபயோகிக்காமல் மனித வளத்தை அதிகமாக உபயோகித்து வேலை பார்த்தோம் அதை பார்த்திருப்பான் போல் இருக்கு அதை பொத்தாம் பொதுவாக சொல்லிட்டு போய்விட்டார்.ஊரில் இருந்து கொண்டு வந்த ஆட்களை சும்மா உட்கார்த்தி வைத்து சம்பளம் கொடுப்பார்களா?
இங்கே
படுபாவி கேமிராமேன் இப்படி ஒரு கமெண்ட் போட்டு என்னவோ பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி மானத்தை வாங்கிட்டான்.அப்ப அவன் சொன்னது எல்லாம் பொய்யா?
இல்லை.
நிலத்தில் பார்க்கும் போது மண் தோண்டி அவ்வளவாக உபயோகிக்காமல் மனித வளத்தை அதிகமாக உபயோகித்து வேலை பார்த்தோம் அதை பார்த்திருப்பான் போல் இருக்கு அதை பொத்தாம் பொதுவாக சொல்லிட்டு போய்விட்டார்.ஊரில் இருந்து கொண்டு வந்த ஆட்களை சும்மா உட்கார்த்தி வைத்து சம்பளம் கொடுப்பார்களா?
Thursday, December 31, 2009
சிமிண்ட் தேவையில்லை
மஸ்கட்டில் சிறு சிறு குன்றுகளை சமப்படுத்தி அதன் மேல் வீடுகள் கட்டாமல் குன்றின் மேலேயே கட்டி,வீட்டுக்குப்போக சாலையை அதன் போக்கிலே போட்டுவிடுகிறார்கள்.நடப்பதெல்லாம் வீட்டோடு சரி, வெளியில் வந்தால் மகிழுந்து தான் அதனால் அதற்கு ஏற்றாற் போல் சாலையை போட்டுவிட்டால் போதும் வீடு எந்த உயரத்தில் இருந்தாலும் கவலையில்லை.
மேடு பள்ளம் என்று மாறி மாறி இருக்கும் இடத்தில் சாலைகள் வரும் போது சரிவு எந்த பக்கம் அதிகமாக இருக்கும் இடத்தில் கான்கிரீட் சுவர் எழுப்புவது என்பது நடைமுறை.தொழிற்நுட்பம் மேம்பாடு கண்டுகொண்டிருக்கும் நிலையில் அதையும் மாற்றி அமைத்துள்ளார்கள்,இந்த முறையில் சுவருக்கு கட்டுவதற்கு மட்டும் சிமிண்ட் தேவையில்லை.கீழே உள்ள படத்தை பாருங்கள் இது அத்தனையும் முன்னமே வடிவமைத்து செய்யப்பட்ட Precast Blocks.இந்த பிலாக்குகள் ஒன்றுடன் ஒன்று இணைந்துகொள்ளும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த இரு பிலாக்குகளுக்கு இடையே வரும் பகுதியை ஒரு சிறிய சிலாப் மூலம் அடைத்துவிடுகிறார்கள்.அவ்வளவு தான்.வேலையிடத்தில் சிமிண்ட்டுக்கு அவசியமே இல்லை.இதைப் பற்றி ஏற்கனவே ஒரு பதிவு இங்கே போட்டிருந்தேன்.பக்கத்தில் இருக்கும் Qurm பூங்காவிலும் இத்தொழிற்நுட்பத்தை புகுத்தியுள்ளார்கள்.

இப்படியெல்லாம் இருந்தாலும் நான் தங்கியிருக்கும் இடத்துக்கு பக்கத்தில் ஒரு வீடு கொஞ்சம் சாலையை விட ஒரு 3 மீட்டர் உயரத்தில் இருந்தது.சாலையை விட 10’ உள்ளடங்கியும் இருந்தது.வீட்டின் அஸ்திவாரத்துக்கும் சாலைக்கும் இடைப்பட்ட பகுதி வாட்டமாக மண் சரிந்து இருந்தது.
முதல் நாள் ஒரு மண் தோண்டி வந்தது மறு நாள் அந்த வாட்டமான பகுதி மழித்து எடுக்கப்பட்டது.இப்போது வீடு அதன் அஸ்திவார ஒரு பகுதி வெளியில் தெரிய ஆரம்பித்தது.இந்நிலையில் மழை பெய்தால் அந்த வீடு ஒருவழியாக சரிய ஏதுவாகியிருக்கும் ஆனால் இந்த ஊரில் தான் அவ்வளவாக மழை கிடையாதே அதனால் தான் இப்படி தைரியமாக செய்கிறார்கள் என்று நினைத்திருந்தேன்.அவர்கள் நேரம், 3 ம் நாள் “ப” வடிவத்தில் சுவர் எழுப்பினார்கள் அதுவும் Hollow Blockயில்.இந்த Hollow Blocks இவ்வகை அழுத்தத்தை தாங்கக்கூடியது அல்ல.முதலில் இந்த பகுதியை என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியாமல் இருந்தது,சுவர் எழுப்பியவுடன் புரிந்தது இவர்கள் சாலை மட்டத்தில் ஒரு மகிழுந்து நிருத்தும் இடம் செய்கிறார்கள் என்று.
3ம் நாள் சுவர் வேலை செய்யும் போதே என் நண்பனிடம் சுட்டினேன் இவ்விடத்தை பார்த்துக்கொள் என்றேன்.நீட்டு வாக்கில் உள்ள சுவர் சுமார் 7 மீட்டர் இருக்கும் அந்த சுவர் தான் பக்கத்தில் உள்ள வீட்டின் ஒரு பகுதி மண்ணை தாங்க வேண்டும்.யார் பொறியாளரோ தெரியவில்லை.3 மீட்டர் உயரத்தில் 1 மீட்டர் எழுப்பியாகிவிட்டது அடுத்த வேலை ஆரம்பிக்கும் முன்பு 3 நாட்கள் விட்டு விட்டு மழை.Flash Flood மூலம் ஓமனில் ஆறு பேர் சாவு.
மழை நின்றவுடன் வேலை ஆரம்பமானது.மீதி உயரத்தை கட்டி முடித்தார்கள்,வண்டி நிற்கும் இடத்துக்கு கீழே கற்கள் பதித்தார்கள்.காசு இருக்கே என்ன பண்ணலாம் என்று நினைத்து சுவருக்கும் சேர்த்து Tile பதித்தார்கள்.
அடுத்து இப்போது சுவருக்கும் வீட்டுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை நிரப்ப பக்கத்தில் வெட்டிப்போட்ட மண்ணை உபயோகித்தார்கள்.வேலை முடிந்தது!!!
அங்கு மண் போட போட சுவர் உள் பக்கம் வில் மாதிரி வளைய ஆரம்பித்தது.Hollow Block என்பது 3 மீட்டர் உயர மண்ணை தாங்கும் திறன் கிடையாது என்பதை இவ்வளவு வேலை செய்து தெரிந்துகொண்டார்கள்.எல்லாவற்ரையும் இடித்துவிட்டு இப்போது அந்த பகுதி தட்டி போட்டு மறைத்து வைத்துள்ளார்கள்.இடிப்பதற்கு முதல் நாள் இரவு அந்த பக்கம் போய் நின்று பார்த்த போது அந்த “வில்” தெரிந்தது,சரி வீட்டுக்காரரிடம் சொல்லுவோம் என்று கதவை திறக்கப்போனால் அது பூட்டியிருந்தது.வீட்டில் ஆட்கள் இருப்பதற்கான அறிகுறியும் இல்லை.மறு நாள் எப்படியே தெரிந்து அந்த சுவரை இடித்துவிட்டார்கள்.இப்ப வீட்டின் கதி என்னவென்று தெரியவில்லை.
மேடு பள்ளம் என்று மாறி மாறி இருக்கும் இடத்தில் சாலைகள் வரும் போது சரிவு எந்த பக்கம் அதிகமாக இருக்கும் இடத்தில் கான்கிரீட் சுவர் எழுப்புவது என்பது நடைமுறை.தொழிற்நுட்பம் மேம்பாடு கண்டுகொண்டிருக்கும் நிலையில் அதையும் மாற்றி அமைத்துள்ளார்கள்,இந்த முறையில் சுவருக்கு கட்டுவதற்கு மட்டும் சிமிண்ட் தேவையில்லை.கீழே உள்ள படத்தை பாருங்கள் இது அத்தனையும் முன்னமே வடிவமைத்து செய்யப்பட்ட Precast Blocks.இந்த பிலாக்குகள் ஒன்றுடன் ஒன்று இணைந்துகொள்ளும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த இரு பிலாக்குகளுக்கு இடையே வரும் பகுதியை ஒரு சிறிய சிலாப் மூலம் அடைத்துவிடுகிறார்கள்.அவ்வளவு தான்.வேலையிடத்தில் சிமிண்ட்டுக்கு அவசியமே இல்லை.இதைப் பற்றி ஏற்கனவே ஒரு பதிவு இங்கே போட்டிருந்தேன்.பக்கத்தில் இருக்கும் Qurm பூங்காவிலும் இத்தொழிற்நுட்பத்தை புகுத்தியுள்ளார்கள்.
இப்படியெல்லாம் இருந்தாலும் நான் தங்கியிருக்கும் இடத்துக்கு பக்கத்தில் ஒரு வீடு கொஞ்சம் சாலையை விட ஒரு 3 மீட்டர் உயரத்தில் இருந்தது.சாலையை விட 10’ உள்ளடங்கியும் இருந்தது.வீட்டின் அஸ்திவாரத்துக்கும் சாலைக்கும் இடைப்பட்ட பகுதி வாட்டமாக மண் சரிந்து இருந்தது.
முதல் நாள் ஒரு மண் தோண்டி வந்தது மறு நாள் அந்த வாட்டமான பகுதி மழித்து எடுக்கப்பட்டது.இப்போது வீடு அதன் அஸ்திவார ஒரு பகுதி வெளியில் தெரிய ஆரம்பித்தது.இந்நிலையில் மழை பெய்தால் அந்த வீடு ஒருவழியாக சரிய ஏதுவாகியிருக்கும் ஆனால் இந்த ஊரில் தான் அவ்வளவாக மழை கிடையாதே அதனால் தான் இப்படி தைரியமாக செய்கிறார்கள் என்று நினைத்திருந்தேன்.அவர்கள் நேரம், 3 ம் நாள் “ப” வடிவத்தில் சுவர் எழுப்பினார்கள் அதுவும் Hollow Blockயில்.இந்த Hollow Blocks இவ்வகை அழுத்தத்தை தாங்கக்கூடியது அல்ல.முதலில் இந்த பகுதியை என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியாமல் இருந்தது,சுவர் எழுப்பியவுடன் புரிந்தது இவர்கள் சாலை மட்டத்தில் ஒரு மகிழுந்து நிருத்தும் இடம் செய்கிறார்கள் என்று.
3ம் நாள் சுவர் வேலை செய்யும் போதே என் நண்பனிடம் சுட்டினேன் இவ்விடத்தை பார்த்துக்கொள் என்றேன்.நீட்டு வாக்கில் உள்ள சுவர் சுமார் 7 மீட்டர் இருக்கும் அந்த சுவர் தான் பக்கத்தில் உள்ள வீட்டின் ஒரு பகுதி மண்ணை தாங்க வேண்டும்.யார் பொறியாளரோ தெரியவில்லை.3 மீட்டர் உயரத்தில் 1 மீட்டர் எழுப்பியாகிவிட்டது அடுத்த வேலை ஆரம்பிக்கும் முன்பு 3 நாட்கள் விட்டு விட்டு மழை.Flash Flood மூலம் ஓமனில் ஆறு பேர் சாவு.
மழை நின்றவுடன் வேலை ஆரம்பமானது.மீதி உயரத்தை கட்டி முடித்தார்கள்,வண்டி நிற்கும் இடத்துக்கு கீழே கற்கள் பதித்தார்கள்.காசு இருக்கே என்ன பண்ணலாம் என்று நினைத்து சுவருக்கும் சேர்த்து Tile பதித்தார்கள்.
அடுத்து இப்போது சுவருக்கும் வீட்டுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை நிரப்ப பக்கத்தில் வெட்டிப்போட்ட மண்ணை உபயோகித்தார்கள்.வேலை முடிந்தது!!!
அங்கு மண் போட போட சுவர் உள் பக்கம் வில் மாதிரி வளைய ஆரம்பித்தது.Hollow Block என்பது 3 மீட்டர் உயர மண்ணை தாங்கும் திறன் கிடையாது என்பதை இவ்வளவு வேலை செய்து தெரிந்துகொண்டார்கள்.எல்லாவற்ரையும் இடித்துவிட்டு இப்போது அந்த பகுதி தட்டி போட்டு மறைத்து வைத்துள்ளார்கள்.இடிப்பதற்கு முதல் நாள் இரவு அந்த பக்கம் போய் நின்று பார்த்த போது அந்த “வில்” தெரிந்தது,சரி வீட்டுக்காரரிடம் சொல்லுவோம் என்று கதவை திறக்கப்போனால் அது பூட்டியிருந்தது.வீட்டில் ஆட்கள் இருப்பதற்கான அறிகுறியும் இல்லை.மறு நாள் எப்படியே தெரிந்து அந்த சுவரை இடித்துவிட்டார்கள்.இப்ப வீட்டின் கதி என்னவென்று தெரியவில்லை.
Thursday, December 10, 2009
சகஜம்.
கட்டுமானத்துறையில் சில சமயம் விசித்திரமான நிகழ்வுகள் ஏற்படுவது சகஜம் ஏனென்றால் தொழிலாளர்கள் கல்வி குறைவாக இருப்பதும்,தொழில் பற்றிய அறிவு குறைவாக இருப்பதும் தான்.நான் வேலை செய்ய ஆரம்பிக்கும் நேரத்தில் எல்லாம் பெரிய Board மற்றும் சில உபகரணங்கள் மூலம் வரை படம் தயாரித்து அதை பிரதி எடுத்து அனுப்புவார்கள்.தவறுகள் நேராமல் மிக நேரம் எடுத்து ஒவ்வொரு வரைப்படமும் செய்வார்கள்.வரை படத்தின் ஒரு பகுதி தவறானாலும் அப்படி தூக்கி கடாசிவிட்டு மறுபடியும் புதிதாக வரைய வேண்டும் என்பதால் வெகு சிரத்தையாக செய்வார்கள்.இப்போது வரைகலைக்கு என்றே மென்பொருட்கள் வந்துவிட்டதால் வரைவதும் எளிதாகி மாறுபாடுகள் செய்வதும் வெகு சுலபமாகிவிட்டது.
என்ன தான் எளிதாக வரைய முடியும்,பிரிண்ட் எடுக்க முடியும் என்றாலும் Site வேலை செய்பவர்கள் அந்த வரை படத்தை பார்த்து அதில் சொல்லியிருப்பது போல் செய்வது அதை மேற்பார்வை செய்பவரும் மற்றும் குத்தகைக்காரர்/அவருடைய தொழிலாளர்கள் கையில் தான் உள்ளது.கீழே உள்ள படத்தை பாருங்கள்.

ஆதாவது ஒரு வரைபடம் வரைந்து அதை மேம்படுத்தும் போது எந்த இடத்தை மேம்படுத்துகிறோம் என்பதை படம் வரைபவர்கள் மேகம் போல குறியிட்டு காண்பிப்பார்கள்.இங்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை,முன்னறிவு இல்லாத தொழிலாளி அந்த இடத்தில் அதே மாதிரி ஓட்டை வரவேண்டும் நிறைய முயற்சி எடுத்து இப்படி ஓட்டை போட்டுள்ளார்.இது ஒரு நகைச்சுவைக்காகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன் ஆனால் நடக்காது என்று சொல்லமுடியாது.
என்ன தான் எளிதாக வரைய முடியும்,பிரிண்ட் எடுக்க முடியும் என்றாலும் Site வேலை செய்பவர்கள் அந்த வரை படத்தை பார்த்து அதில் சொல்லியிருப்பது போல் செய்வது அதை மேற்பார்வை செய்பவரும் மற்றும் குத்தகைக்காரர்/அவருடைய தொழிலாளர்கள் கையில் தான் உள்ளது.கீழே உள்ள படத்தை பாருங்கள்.

ஆதாவது ஒரு வரைபடம் வரைந்து அதை மேம்படுத்தும் போது எந்த இடத்தை மேம்படுத்துகிறோம் என்பதை படம் வரைபவர்கள் மேகம் போல குறியிட்டு காண்பிப்பார்கள்.இங்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை,முன்னறிவு இல்லாத தொழிலாளி அந்த இடத்தில் அதே மாதிரி ஓட்டை வரவேண்டும் நிறைய முயற்சி எடுத்து இப்படி ஓட்டை போட்டுள்ளார்.இது ஒரு நகைச்சுவைக்காகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன் ஆனால் நடக்காது என்று சொல்லமுடியாது.
Sunday, September 13, 2009
மேலிருந்து கீழ்(Top Down)
புதுப்புது தொழிற்நுட்பங்கள் கட்டுமானத்துறைக்கு புதிதல்ல ஆனால் அதை வெளிக்கொணர்ந்து பொதுவில் வைக்கும் போது தான் சாதரண மக்கள் அதுவும் தொழிற்சார் பதிவுகளை படிக்கும் மக்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கும்,அந்த வகையில்..
கட்டிடங்கள் அஸ்திவாரத்தில் இருந்து ஆரம்பித்து மேலே வருவார்கள்.இது பொதுவாக கடைபிடிக்கும் முறை.இம்முறையை கொஞ்சம் மாற்றி மேலிருந்து கீழேயும் அதே சமயத்தில் மேலேயும் (இரு முனை தாக்குதல்) வேலை நடைபெற வைக்கும் முறை தான் இந்த டாப் டவுன் என்ற முறை.
சிங்கையில் இம்முறை ஒரு சில வேலைகளில் மட்டுமே செயற்படுத்தப்பட்டது.ஒபயாஷி கட்டுமான நிருவனம் தன்னுடைய தலைமை அலுவலகத்தை இம்முறையில் கட்டியபோது அது பரபரப்பாக பேசப்பட்டது.சிங்கை கட்டுமானத்துறை முதன் முதலுலில் இங்கு தான் செயற்படுத்தியது என்று நினைக்கிறேன் அதன் பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாக இம்முறையை பல இடங்களில் கடைபிடித்து வருகிறார்கள் அதில் முக்கியமானவை
சாங்கி விமான நிலையத்தின் மூன்றாம் முனையம்.
சமீபத்தில் திறக்கப்பட்ட ஆர்சட் சாலையில் இருக்கும் கடைத்தொகுதி.
ஆமாம்,இதை எப்படி செய்கிறார்கள்?
முதலில் கட்டப்படவேண்டிய கட்டிடத்தை சுற்றி டயபரம்(Diaphram) சுவரை கட்டி வெளி மண் சரியாமல் இருக்க கட்டப்படவேண்டும்.அதன் பிறகு தரை மட்டத்தில் இருக்கும் நிலையில் உள்ள ஸ்லேப்யை(Slab) போடவேண்டும்.இப்படி செய்வது கட்டிடத்தை சுற்றி உள்ள டையபரம் சுவருக்கு முட்டுக்கொடுத்த மாதிரியும் இருக்கும் அதே சமயத்தில் தரைக்கு கீழே/மேலே உள்ள வேலைகளை ஆரம்பிக்கவும் உதவியாக இருக்கும்.
டையபரம் சுவர் எப்படி செய்கிறார்கள்? கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

தரை மட்டத்தில் உள்ள ஸ்லாபில் போதிய அளவு துவாரம் கொடுத்து அதன் மூலம் கீழே தோண்டும் மண் மற்றும் போடப்போகும் கான்கிரீட்கள் கொண்டு செல்லப்படும்.போதிய அளவு மண் தோண்டியவுடன் திரும்பவும் வெளிச்சுவருக்கு முட்டுக்கொடுத்துவிட்டு தள கான்கிரீட்டை போட்டுவிடுவார்கள்.
கீழே உள்ள படங்களை பாருங்கள் மிக எளிதாக புரியும்.சந்தேகம் இருந்தால் கேளுங்கள் எனக்கு தெரிந்த அளவில் சொல்கிறேன்.
நன்றி:LTA
கட்டிடங்கள் அஸ்திவாரத்தில் இருந்து ஆரம்பித்து மேலே வருவார்கள்.இது பொதுவாக கடைபிடிக்கும் முறை.இம்முறையை கொஞ்சம் மாற்றி மேலிருந்து கீழேயும் அதே சமயத்தில் மேலேயும் (இரு முனை தாக்குதல்) வேலை நடைபெற வைக்கும் முறை தான் இந்த டாப் டவுன் என்ற முறை.
சிங்கையில் இம்முறை ஒரு சில வேலைகளில் மட்டுமே செயற்படுத்தப்பட்டது.ஒபயாஷி கட்டுமான நிருவனம் தன்னுடைய தலைமை அலுவலகத்தை இம்முறையில் கட்டியபோது அது பரபரப்பாக பேசப்பட்டது.சிங்கை கட்டுமானத்துறை முதன் முதலுலில் இங்கு தான் செயற்படுத்தியது என்று நினைக்கிறேன் அதன் பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாக இம்முறையை பல இடங்களில் கடைபிடித்து வருகிறார்கள் அதில் முக்கியமானவை
சாங்கி விமான நிலையத்தின் மூன்றாம் முனையம்.
சமீபத்தில் திறக்கப்பட்ட ஆர்சட் சாலையில் இருக்கும் கடைத்தொகுதி.
ஆமாம்,இதை எப்படி செய்கிறார்கள்?
முதலில் கட்டப்படவேண்டிய கட்டிடத்தை சுற்றி டயபரம்(Diaphram) சுவரை கட்டி வெளி மண் சரியாமல் இருக்க கட்டப்படவேண்டும்.அதன் பிறகு தரை மட்டத்தில் இருக்கும் நிலையில் உள்ள ஸ்லேப்யை(Slab) போடவேண்டும்.இப்படி செய்வது கட்டிடத்தை சுற்றி உள்ள டையபரம் சுவருக்கு முட்டுக்கொடுத்த மாதிரியும் இருக்கும் அதே சமயத்தில் தரைக்கு கீழே/மேலே உள்ள வேலைகளை ஆரம்பிக்கவும் உதவியாக இருக்கும்.
டையபரம் சுவர் எப்படி செய்கிறார்கள்? கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

தரை மட்டத்தில் உள்ள ஸ்லாபில் போதிய அளவு துவாரம் கொடுத்து அதன் மூலம் கீழே தோண்டும் மண் மற்றும் போடப்போகும் கான்கிரீட்கள் கொண்டு செல்லப்படும்.போதிய அளவு மண் தோண்டியவுடன் திரும்பவும் வெளிச்சுவருக்கு முட்டுக்கொடுத்துவிட்டு தள கான்கிரீட்டை போட்டுவிடுவார்கள்.
கீழே உள்ள படங்களை பாருங்கள் மிக எளிதாக புரியும்.சந்தேகம் இருந்தால் கேளுங்கள் எனக்கு தெரிந்த அளவில் சொல்கிறேன்.
நன்றி:LTA
Saturday, August 22, 2009
Winsor Probe சோதனை
இந்த சோதனை,ஏற்கனவே போட்டு முடிந்த கான்கிரீட்டின் தரத்தை சோதிக்க நடத்தப்படும் சோதனைகளில் ஒன்று.எளிமையானது மட்டுமில்லாமல் மிக விரைவில் இதன் முடிவை அறிந்துகொள்ளலாம்.பழைய கான்கிரீட்டின் தரத்தை சோதிக்க பல சோதனை கருவிகள் இருக்கு அதில் இதுவும் ஒன்று.
சோதனை செய்யப்போகும் கான்கிரீட்டில் Firing Gun (கட்டுமானத்துறைக்கு மட்டும்) உள்ளே ஒரு ஆணியை போட்டு அதை கீழே உள்ள படத்தில் இருக்கும் படி Fire பண்ணுவார்கள்.அந்த ஆணி எவ்வளவு ஆழம் கான்கிரீட்டில் போகிறதோ அதை வைத்து அதன் தரத்தை நிர்ணயம் செய்யப்படும்.

இடத்துக்கு தகுந்த மாதிரி ஒரு ஆணியோ அல்லது மூன்று ஆணிகளோ Fire செய்யப்படும்.மூன்று ஆணிகள் ஆனால் அதை சதவீத அடிப்படையில் கணக்கிடுவார்கள்.இதில் இருக்கும் ஒரே ஒரு பிரச்சனை என்னவென்றால் துப்பாக்கி மூலம் அதிக விசையுடன் ஏற்றப்படுவதால் அடுத்த பகுதியில் யாரும் இல்லாமல் இருப்பது நல்லது.
பூச்சுடன் இருக்கும் கான்கிரீட்டின் தரத்தை கண்ணால் அளவிட முடியாது என்பதால் இந்த எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இது தரையில் உள்ள கான்கிரீட்டை சோதனை செய்வது.

ஆணி அடித்து முடித்தவுடன்..

கான்கிரீட்டின் உள் எவ்வளவு தூரம் போயுள்ளது எனபதை அளக்கிறார்கள்.ஆணியின் அளவு தெரியும் அதனால் வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும் அளவை பார்த்து அதை முழு நீளத்தில் இருந்து கழித்தால் கான்கிரீட் உள்ளே போன நீளம் தெரிந்துவிடும்.

அளவுகளை எடுத்த பிறகு அந்த ஆணியையும் எடுத்துவிடலாம்.ஆணியை எடுத்த இடம்.

கான்கிரீட்டின் தரத்தை சோதிக்க மற்றொரு முறையும் இருக்கு அது அடுத்த பதில் போடுகிறேன்.
சோதனை செய்யப்போகும் கான்கிரீட்டில் Firing Gun (கட்டுமானத்துறைக்கு மட்டும்) உள்ளே ஒரு ஆணியை போட்டு அதை கீழே உள்ள படத்தில் இருக்கும் படி Fire பண்ணுவார்கள்.அந்த ஆணி எவ்வளவு ஆழம் கான்கிரீட்டில் போகிறதோ அதை வைத்து அதன் தரத்தை நிர்ணயம் செய்யப்படும்.
இடத்துக்கு தகுந்த மாதிரி ஒரு ஆணியோ அல்லது மூன்று ஆணிகளோ Fire செய்யப்படும்.மூன்று ஆணிகள் ஆனால் அதை சதவீத அடிப்படையில் கணக்கிடுவார்கள்.இதில் இருக்கும் ஒரே ஒரு பிரச்சனை என்னவென்றால் துப்பாக்கி மூலம் அதிக விசையுடன் ஏற்றப்படுவதால் அடுத்த பகுதியில் யாரும் இல்லாமல் இருப்பது நல்லது.
பூச்சுடன் இருக்கும் கான்கிரீட்டின் தரத்தை கண்ணால் அளவிட முடியாது என்பதால் இந்த எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இது தரையில் உள்ள கான்கிரீட்டை சோதனை செய்வது.
ஆணி அடித்து முடித்தவுடன்..
கான்கிரீட்டின் உள் எவ்வளவு தூரம் போயுள்ளது எனபதை அளக்கிறார்கள்.ஆணியின் அளவு தெரியும் அதனால் வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும் அளவை பார்த்து அதை முழு நீளத்தில் இருந்து கழித்தால் கான்கிரீட் உள்ளே போன நீளம் தெரிந்துவிடும்.
அளவுகளை எடுத்த பிறகு அந்த ஆணியையும் எடுத்துவிடலாம்.ஆணியை எடுத்த இடம்.
கான்கிரீட்டின் தரத்தை சோதிக்க மற்றொரு முறையும் இருக்கு அது அடுத்த பதில் போடுகிறேன்.
Wednesday, July 29, 2009
எனக்கு இது புதுசு!!
இது வரை என்னுடைய அனுபவத்தில் இப்படிப்பட்ட கான்கிரீட்டை முட்டுக்கொடுக்க இரும்பு பீமை உபயோகப்படுத்தியதில்லை.முதன் முறையாக பார்த்த போது “பக்” என்று இருந்தது.
இது எங்க எடுத்தது தெரியுமா? சமீபத்தில் பாலம் இடிந்து விழுந்ததே டெல்லியில், அங்கு தான்.கொடுமையிலும் கொடுமை அந்த கான்கிரீட் உள்ளே உள்ள இரும்பு கம்பிகளின் நீளம் தகுந்த standard படி இல்லாமல் இருந்தது அதோடு அந்த Column மும் அந்த தாங்கும் கான்கிரிட்டுக்கு இடையில் விரிசல் விழுந்ததும் முறையாக கவனிக்காமல் அதை Grout முறையில் பூசிவிட்டு வேலையை தொடர்ந்தது என்று பல குளறுபடிகள்.
படிக்கப் படிக்க குமுறுகிறது.

இடிந்ததால் இந்த பலவீனங்கள் தெரிகிறது வண்டி விட்ட பிறகு நடந்தால்!!! நம் மானம் கப்பலில் ஏறாமல் நீர்மூழ்கி கப்பலில் தான் ஏறும்.ஆண்டவா,அப்படி நடக்காமல் இருக்கனும்.
இது எங்க எடுத்தது தெரியுமா? சமீபத்தில் பாலம் இடிந்து விழுந்ததே டெல்லியில், அங்கு தான்.கொடுமையிலும் கொடுமை அந்த கான்கிரீட் உள்ளே உள்ள இரும்பு கம்பிகளின் நீளம் தகுந்த standard படி இல்லாமல் இருந்தது அதோடு அந்த Column மும் அந்த தாங்கும் கான்கிரிட்டுக்கு இடையில் விரிசல் விழுந்ததும் முறையாக கவனிக்காமல் அதை Grout முறையில் பூசிவிட்டு வேலையை தொடர்ந்தது என்று பல குளறுபடிகள்.
படிக்கப் படிக்க குமுறுகிறது.

இடிந்ததால் இந்த பலவீனங்கள் தெரிகிறது வண்டி விட்ட பிறகு நடந்தால்!!! நம் மானம் கப்பலில் ஏறாமல் நீர்மூழ்கி கப்பலில் தான் ஏறும்.ஆண்டவா,அப்படி நடக்காமல் இருக்கனும்.
Subscribe to:
Comments (Atom)
