Sunday, October 10, 2010

Employment Card

நான் படித்துக்கொண்டிருந்த கால கட்டத்தில் படித்து முடித்தவுடன் வேலை தேடுகிறோமோ இல்லையே முதன் முதலில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துவிடுவோம்,அப்படி செய்வதால் அப்பா/அம்மா ஏச்சுக்களில் இருந்து தற்காலிகமாக தப்பித்துக்கொள்ளலாம் என்பது வேறு கதை.முதன் முதலில் நாகையில் படித்துமுடிந்தவுடன் அங்குள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து காத்துக்கொண்டிருந்தேன் பிறகு தான் முன் அனுபவம் உள்ளவர்கள் பலரும் சொல்லிய படி சென்னைக்கு மாற்றிக்கொண்டேன்.அவ்வப்போது அதை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்பதால் வேலையில்லாததோர் பட்டியலில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை அது உணர்த்திக்கொண்டிருக்கும்.

இன்று ஏதோ பழைய குப்பைகளை கிளறிக்கொண்டிருக்கும் போது இவ்வட்டை கையில் கிடைத்தது.கொஞ்சம் கொசுவற்றி சுற்றி பார்த்த போது அன்றிருந்த நிலமை இன்றிருக்கும் நிலமை - வேடிக்கையாக இருக்கு வாழ்கை.

1 comment:

geethappriyan said...

நல்ல கொசுவத்தி