Friday, October 28, 2011

உண்மை நிலவரம்!

கடந்த ஒரு வருடகாலமாக கட்டுமானத்துறையில் நடைபெறும் பல நிகழ்வுகளை பார்த்து மனம் வெம்பும் அரை சதம் அடித்திருக்கும் பலரில் நானும் ஒருவன்.இதெல்லம் எல்லா பழசும் புலம்புவது போல் என்று இளைஞர்களுக்கு தோன்றினாலும் நாம் வாழும் வீடும் மற்றும் பல வித கட்டுமானங்களில் இருக்கும் குறைபாடுகள் நினைத்தாலும் மாற்ற முடியாத அளவுக்கு போய்விட்டது.இதற்கான மூல காரணத்தை ஆராய்ந்தால் விடை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சிக்கலாக இருக்கும்.

இன்று இணையத்தில் வந்த ஒரு குழுமத்தில் வந்த கருத்து தான் உண்மை நிலவரத்துக்கு அருகில் உள்ளது.இது எல்லா நிறுவனங்களில் இருக்கிறது என்று சொல்லமுடியாது, பெரும்பான்மை நிறுவனங்கள் இப்படித்தான் தொழிலை நடத்துகிறது.

Dear Vikramjeet:

I totally agree that notes and detailed view do not help.

We have solved this problem to an extent. Whenever we give bar bending schedule for the Construction drawing, we include the complete lengths and shapes of bars (include section lengths) and calculate the steel quantity (length & weight) to the contractor accordingly only in the Schedule. Though it is more work on our part, but we do not leave it to them as to what length they need to put for the bars and where. With this the menace of non-conformance to drawing has reduced drastically, since the drawing communicates clearly to the “skilled labour” what needs to be done rather than they apply their own mind on it.

Regards,
Mehta,
Technologies



Dear Friends

Even if you do the entire BBS with all cut lengths, lap lengths, bend lengths etc. if the same is not implemented in site everything will go in vain. The construction industry is the most neglected part of the engineering industry. Until “ CHALTA HAI”, “ HOTA HAI”, “ WE HAVE DONE THIS EARLIER AND TILL DATE NOTHING HAS HAPPENED” these callus approaches are eradicated from the construction industry, the designer has to weep at the corner of the wall.
May GOD have mercy on him


Regard
Munsi
புகழ்பெற்ற கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்பவர்.

இனிமேல் வீடு/அலுவலகத்துகுள் நுழையும் முன் தைரியமாக இருக்கமுடியும்??

Tuesday, October 11, 2011

GK மூப்பனார் மேம்பாலம்

நந்தனம் சிக்னலில் இருந்து தேவர் சிலையை  ஒட்டிய சாலையில் போனால் முதலில் வரும் சந்திப்பின் மேல் போகும் மேம்பாலம் தான் G.K.மூப்பனார் மேம்பாலம்.மறந்து போகாமல் இருக்க அவருடைய படத்தையும் போட்டிருந்ததாக ஞாபகம்.

இன்று சுமார் 11.45 க்கு நண்பரின் வேண்டுகோளுக்காக அங்கு போயிருந்தேன். பக்கத்தில் இருந்த கார் ஷோரூம் அவர் தன்னுடைய வேலையை பார்த்துக்கொண்டிருக்க என்னுடைய பார்வை அந்த மேம்பாலம் பக்கம் போனது.

இந்த படத்தை பாருங்கள்







வெள்ளை அம்புக்குறியிட்ட இடத்தில் ஒரு சிறிய இடைவெளி தெரிகிறதா? இது எதற்கு என்றால் மேம்பாலத்தில் வண்டி போகும் போதோ அல்லது சீதோஷ்ண நிலை மாறுபடும் போது ஏற்படும் நீள வேறுபாடுகள் சாலையை பாதிக்காமல் இருக்க கொடுக்கப்படும்.இதே முறை தான் ரயில் தண்டவாளங்களிலும் இருக்கும்.இதை சரியாக செய்த நெடுஞ்சாலைத்துறை அந்த பீம் மேல் கட்டியிருக்கும் சுவருக்கு அந்த இடைவெளி கொடுக்காமல் விட்டுவிட்டது.இதனால்  கீழே உள்ள பீம் இடையே உள்ள இடைவெளி அர்த்தமற்று போய்விட்டது. அந்த இடைவெளி அர்த்தமற்று போய்விட்டதால் அந்த பீம் உட்கார்ந்து இருக்கும் Bearing ஒரு தெண்டச்செலவு. இதே மாதிரி பல அரசாங்க கட்டுமானமே முன்மாதிரி இல்லாதது கவலையளிக்கிறது.இத்துறையில் இருப்பவர்கள் இவற்றையெல்லாம் தெரிந்தே அனுமதிக்கிறார்களா? அல்லது வேறு எதுவும் காரணமா? பொறியாளர்களுக்கு தெரியாது என்று சொல்லமுடியவில்லை ஏனென்றால் மேம்பாலத்தில் மறுபக்கத்தில் உள்ள இந்த படத்தை பாருங்கள்.இந்த இடைவெளி எப்படி இருக்கவேண்டும் என்பதை அதை சரியாக கடைபிடித்திருப்பதையும் சொல்கிறது.









Sunday, October 09, 2011

ஆனந்த தொல்லை


வேலை விஷயமாக சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானம் நடைபெரும் பகுதில் ஒன்றான வடபழனி - SRM பல்கலைகழகம் பக்கத்தில் நடந்து போய்கொண்டிருக்கும் போது இந்த குதிரை வண்டி கண்ணில் பட்டது.இந்த வண்டி இங்கு என்ன பண்ணுகிறது என்ற யோஜனையுடன் அடுத்த வரப்போகும் மூத்திர வாசனைக்காக என்னை தயார்படுத்திக்கொண்டேன்.சடாரென்று திரும்பி பார்க்கும் போது....









புறா

மிக மிக சீக்கிரமாக வளரக்கூடிய பறவை இனம் என்றால் மிகையில்லை. தற்காத்துக்கொள்ளக்கூடிய திறமை குறைவாக இருப்பதால் என்னவோ மிக சுலபமாக வேட்டையாடபடுகிறது.சிங்கையில் இருந்த போது இதன் எச்சம் மகிழுந்துகளிலும் கட்டிடங்களையும் பொலிவிழக்கச்செய்வதால் இதனை கட்டுப்படுத்த நஞ்சு கலந்த உணவு வைத்து சாகடித்தார்கள்.புறாவுக்கு மட்டுமில்லாமல் காக்கையும் சேர்த்தே இதன் முடிவு தான்.

சென்னையில் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு இந்த அளவுக்கு புறா கூட்டங்களை வீட்டுக்கு பக்கத்தில் பார்த்ததில்லை ஆனால் இப்போது இதன் அட்டகாசம் தாங்க முடியவில்லை.ஜன்னல் பக்கம் உட்கார்ந்துகொண்டு வீடு வெளிப்புறங்களை அசிங்கம் செய்துவிடுகிறது அதுவும் மழை பெய்தால் அதன் மூலம் வரும் நாற்றம் இன்னும் அதன் மீது வெறுப்பை வரவழைக்கிறது. சில வருடங்களுக்கு முன்பில் இருந்து எங்கள் வீட்டின் கழிவறை Exhaust Fan வைக்கும் இடம் வெற்றாக இருந்ததால் அதனுள் ஒரு புறா கூடு கட்டி வாழ்ந்து வந்தது.அப்போதிலிருந்து அது ஒரு பெரிய பிரச்சனையாக இல்லாத்தால் நாங்களும் கவலைப்படவில்லை. சமீபத்தில் அவைகளுக்கு ஏற்பட்ட இட பிரச்சனை அவர்களின் கழிவு வீட்டை நோக்கி வரவழைத்து மிக அதிகமாக நாற்றத்தை ஏற்படுத்தியது அதோடில்லாமல் ஜன்னல் குளிர்விப்பான மேல் சம தளமாக இருப்பதனால் அதன் மீதும் உட்கார்ந்து தன் தொழிலை தொடர்ந்தது.இது எல்லாவற்றையும் கட்டுப்படுத்த ஏதாவது வழி இருக்கா என்று நெட்டில் தேடிய போது மேற்கிந்திய நாடுகளில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து சொல்லியிருந்தார்கள்.அதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று வன்பொருள் கடைகளில் கேட்ட போது Wire Mesh ஐ காண்பித்து அதை வையுங்கள் புறா வராது என்றார்கள்.எனக்கு நம்பிக்கை இல்லாத்தால் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்தேன்.

சில நாட்கள் யோஜனையில் ஏதும் சரிப்பட்டு வரவில்லை.போன விடுமுறையில் மனைவி Loft மேல் இருக்கும் சில சாமான்களை எடுத்துகொடுக்ச்சொன்னார்கள் அப்போது ஒரு பெட்டியில் செயறகை அலங்கார பொருட்களை செய்ய உறுதுணையாக இருக்கும் ஒரு பொய் தங்க முலாம் பூசப்பட்ட ஒரு மெல்லிய கம்பியை பார்த்ததும் ஒரு ஐடியா தோனியது.புறாவை சாகாடிக்க கூடாது ஆனால் அது ஜன்னல் விளிம்பை உபயோகிக்க கூடாது. நான் செய்தது இது தான்.ஒரு பாலிஃபார்ம் எடுத்து அதன் ஒரு பகுதியில் இருந்து U வடிவில் அந்த மெல்லிய கம்பியை வெளிப்புறம் நோக்கியவாறு செலுத்த வேண்டும். இந்த பாலிஃபார்ம் ஜன்னலுடன் ஒட்ட வைக்க இருபுறமும் ஒட்டும் திறன் கொண்ட Tape மூலம் ஒட்டவைக்க வேண்டும்- அவ்வளவு தான். சுலபமாக புரிய கீழே உள்ளது படம். கடந்த 3 நாட்களாக புறா அங்கு வருவதில்லை.