Showing posts with label பாதுகாப்பு. Show all posts
Showing posts with label பாதுகாப்பு. Show all posts

Monday, August 09, 2010

இது சரியல்ல.

ஒரு காலத்தில் சென்னையில் வீட்டுக்கு குளிர்சாதன வசதி என்பது விரல்விட்டு எண்ணக்கூடிய நிலையில் தான் இருந்தது ஆனால் இப்போது சுமார் 40 விழுக்காடு வீடுகளில் குளிர்சாதன வசதி வந்துவிட்டது.இரவில் தூங்க காற்றாடி போய் குளிர்சாதனம் அத்தியாவசியமாகிவிட்டது.வீட்டு குளிர்சாதன வசதிக்கு சிறிதும் பெரிதுமாக பல உபகரணங்கள் இருந்தாலும் மத்திய வர்கத்துக்கு கைவசப்படுவது இரண்டு ரகம் தான்,ஒன்று Window Unit மற்றொன்று Split Aircon.

முதல் வகை சுவரில் இருக்கும் ஓட்டையில் அதன் பிரேமுடன் பொருத்தி தேவையான ஆணிகளை கொண்டுமுடுக்கிவிடுவார்கள்.சிங்கையில் இவ்வகையிலும் தரனான Stainless Brackets களை மட்டுமே உபயோகிகவேண்டும் என்ற சட்டம் இருக்கு,ஏனென்றால் இவ்வகை குளிர்சாதன பெட்டி மேலிருந்து கீழே விழுந்து பல விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளது.நம்மூரில் சரியான முறைகளை அமல்படுத்தாவிட்டால் இன்னும் பல விபத்துக்கள் இதனால் ஏற்பட சாத்தியங்கள் உள்ளது.

இரண்டாம் வகை Split Aircon : இது கொஞ்சம் பவர் அதிகம்என்பதாலும் ஒன்றுக்கு மேற்பட்ட அறைகளுக்கு குளிர்சாதன வசதி கொடுக்க முடியும் என்பதால் ஒரு சிறிய கம்பிரசரை பொருத்தி இவ்வசதியை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.இதை பொருத்தும் இடம் மற்றும் சில நியதிகள் இருக்கின்றன.கொஞ்சம் எடை அதிகம் என்பதால் இதை சரியாக பொருத்த வேண்டும் ஆனால் பல மாடிக்கட்டிடங்களில் இம்முறைகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு சன்ஷேடு மேல் வைத்துவிடுகிறார்கள். இந்த சன்ஷேடு சரியான முறையில் கன்கிரீட் போடப்பட்டிருந்தாலும் இவ்வகை எடைகளை தாக்குப்பிடிக்க ஏற்ற வகையில் டிசைன் செய்திருக்கமாட்டார்கள்,அத்துடன் இதிலிருந்து கசியும் நீர் கம்பியை துருபிடிக்கவைத்து கட்டிடத்தை பலமிழுக்கவைத்துவிடும்.கட்டுமான Knowledge மற்றும் வழிமுறைகள் முறையாக செயல்படுத்தாவிட்டால் தேவையில்லாத உயிரிழப்புகள் என்று நாளிழதர்களில் தினமும் பார்க்க நேரிடும்.

முறையான வழியும்,தவறான முறையும் கீழே படங்களில்.

தவறான முறைகள்.





சரியான முறை கீழே.

Wednesday, May 05, 2010

மலிவு விலையில்...

வர வர கட்டிடங்கள் உயரமாகிக்கொண்டு போய் கொண்டிருக்கும் வேளையில் அதற்காக செய்யப்படும் வேலைகளிலும் அபாயங்கள் நிறைந்துவருகின்றன அதில் ஒன்று தான் இந்த சுற்றுச்சுவர் கண்ணாடி துடைக்கும் வேலை.சில வருடங்கள் வரை கண்டோலா என்று சொல்லப்படுகிற தொங்கும் மேடை மூலம் சுத்தம் செய்து வந்தார்கள்.இம்மேடை இரு சிறுமோட்டார்கள் மூலம் கூறையின் மேலிருக்கும் ஒரு அமைப்பின் மூலம் இரும்பு கம்பி மூலம் நகரும் தன்மையுடையது.இம்முறை ஓரளவுக்கே பாதுகாப்புடையது இதுவும் தன் கட்டுப்பாடை இழந்து பல மனித உயிர்களை பலிவாங்கியுள்ளது.மேலே சொன்ன முறையை மேம்படுத்தி ஒழித்து மோட்டார் இல்லாமல் இரு கயிறுகள் மூலமே சுத்தம்செய்யும் வேலையை கொண்டுவந்தார்கள்.இம்முறையில் மன தைரியம் உள்ளவர்கள் மட்டுமே வேலை செய்யமுடியும்.முதன் முறையாக இவ்வேலையை சிங்கையில் உள்ள ஒரு பெரிய கட்டிடத்தில் அறிமுகபடுத்தினார்கள்.இதன் பாதகங்கள் பற்றிய முழு விபரங்கள் எனக்கு தெரியவில்லை.

கிழே உள்ள படம் சிங்கை நூலக வெளிப்புற கண்ணாடி சுவரை சுத்தம் செய்யும் போது எடுத்தது.இரு கயிற்றில் ஒன்று பாதுகாப்புக்காக.




கிழே உள்ள படம் துபாயில் ஒரு கட்டிடத்தில் அதே வேலை பழைய முறையில் நடக்கிறது.சில பாதுகாப்பு குறைபாடுங்கள் உள்ளன்.தலைக்கவசம் அணியவில்லை.



கடைசியாக நேற்று சென்னையில் எடுத்தது.இன்ஷூரன்ஸ் கம்பெனி விளம்பரம் வேறு.இதில் உள்ள குறைபாடுகள்...
முதலில் கட்டிடம் இவ்வேலை செய்ய தகுந்த ஏற்பாடுகளை கொண்டிருக்கவில்லை,அப்படியே இருந்தாலும் ஏன் அதை உபயோகிக்கவில்லை? இந்த நூலேனி சமாச்சாரம் எல்லாம் சர்கஸ் மற்றும் கப்பலில் மட்டுமே மிஞ்சியுள்ளது.அந்த ஏணியில் உள்ளவர் பாதுகாப்பு பட்டை அணியவில்லை.தலைக்கவசமும் இல்லை.ஆக மொத்தத்தில் இங்கு மனித உயிர்கள் "மிக மலிவு விலையில்!!"



நாளுக்கு நாள் பாதுகாப்பு சமாச்சாரங்கள் நுட்பமான முறையில் உலக நாடுகளில் அறிமுகபடுத்திவரும் வேலையில் நாம்மட்டும் ஏன் இவ்வளவு வருடங்கள் எடுத்துக்கொள்கிறோம் என்பது புரியாத புதிராகவே இருக்கு.

Friday, October 23, 2009

எனக்கு தான் முதல் Lane.

போன வாரம் மகிழுந்துவில் வேலூர் வரை போய் திரும்பிய போது விரைவுச்சாலையில் வித்தியாசமான ஒன்றை காண நேர்ந்தது.பல நாடுகளில் விரைவாக போக கூடிய வாகனங்கள் முதல் லேனில் பயணிக்கும் மற்றவை அதற்கடுத்த லேனில் பயணிக்கும்.நம்மூரில் அதுவும் தமிழ் நாட்டில் மணல் மற்றும் அதிக எடையுள்ள மற்றும் வேகம் குறைவாக பயணிக்க வேண்டிய வண்டிகள் முதல் லேனிலும் மற்றவை அதற்கடுத்தடுத்த லேன்களிலும் பயணிக்கின்றன.படம் பார்க்க.





ஒரு விதத்தில் இம்முறை பாதுகாப்பானது (சாலை ஓரத்தில் பயணிக்கும் மிதி வண்டி மற்றும் மாட்டு வண்டிகள் அடிவாங்காமல் தப்பிக்கும்) என்றாலும் ஏதேனும் வாகனம் தறிகெட்டு போனால் முழு சாலையும் அடைபடும் சாத்தியம் அதிகமாகவே இருக்கும்.

எந்த வகை வாகனம் எவ்விடத்தில் பயணிக்கனும் என்ற விதிமுறை நம்மூரில் கிடையாதா? அல்லது அவையெல்லாம் காகிதத்தில் மட்டுமே இருப்பதற்காக உருவாக்கப்பட்டவையா?

Thursday, July 30, 2009

விபத்து ஒரு சாபக்கேடு.

எல்லா துறைகளிலும் விபத்துக்கள் இருந்தாலும் கட்டுமானத்துறையில் விபத்து என்பது அன்றாட நிகழ்வு.எப்போது வேண்டுமானலும் வரலாம்.

சிங்கயில் அதுவும் கட்டுமானத்துறை மற்றும் கப்பல் கட்டும் துறையில் விபத்துகளும் போட்டி போட்டுக்கொண்டு இருக்கும்.அதை எப்படியெல்லாம் குறைப்பது என்று நிஜ அக்கறையுடன் இங்குள்ள தொழிலாலர் அமைச்சு மற்றும் பல அமைச்சுகளும் சேர்ந்து அக்கு வேறு ஆணி வேறாக யோசித்து பலவற்றை செய்தார்கள்.வரிசைப்படுத்தி பார்ப்போமா..
1.முக்கியமாக வேலைக்கு வரும் தொழிலாளிக்கு அந்தந்த நாடுகளின் துணையுடன் அவர்களுக்கு குறிப்பிட்ட வேலைக்கு என்று பிரித்து Training கொடுத்தார்கள்.
2.PPE என்று சொல்லக்கூடிய Personal Protective Equipment ஐ ஆதாவது முக்கியமாக ஹெல்மெட்,ஷூ மற்றும் பாதுகாப்பு பட்டை/வார்.இதைத்தவிர குறிப்பிட்ட வேலைக்கு தேவையான மூக்குக் கண்ணாடி,Nose Flter என்று பல சாதனங்களை கொடுப்பது அத்தியாவசிமாக்கியது.
3.வேலை செய்யும் இடத்துக்கு போய் வர சரியான படிகள்/ஏணிகள்.
4.சரியான தகுதியுடன் வேலை செய்யும் கிரேன் ஓட்டுனர் மட்டும் அவர்களுக்கு உரிய தகவல்களை கொடுப்பவர்களுக்க்கு தேவையான தகுதி என்று பல அடுக்கு ஆட்களை நிறுவியது.
5.மிக முக்கியமாக ஒப்பந்தக்காரர்களை, ஏற்படும் விபத்துக்கு Responsibility யாக்கியது.
6.எல்லாவற்றையும் விட வேலை செய்யும் இடம் பாதுகாப்பாக இல்லாமல் இருந்தால் அமைச்சுக்கு இலவசமாக தொலைப்பேசி தொடர்பு ஏற்படுத்தி,யார் வேண்டுமானாலும் தகவல் சொல்லலாம் என்ற நிலையை ஏற்படுத்தியது.

இதோடு நில்லாமல் தொழிலாளர்கள் கூடும் பொது இடத்தில் கீழ்கண்டவாறு சுவரொட்டிகளை ஒட்டி வேலைக்கு வந்த நம்மை பத்திரமாக திருப்பி அனுப்ப எடுக்கும் நடவடிக்கைகளை எடுக்கும் இந் நாட்டு மக்களை/அரசாங்கத்தை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.





இவ்வளவு செய்தும் இதுவரை மனித இழப்பு இல்லாத சூதாட்ட விடுதி கட்டுமான வேலையில் போனவாரம் ஒருவர் உயிரிழுந்தது மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது.

Wednesday, June 17, 2009

கொடைக்கானல் பயங்கரம்!!

சென்னை வெய்யில் மண்டையை பிளக்கும் நேரத்தில் வீட்டுக்காரம்மா எங்கேயாவது போய்வரலாம் என்று “பிளான்” போட்டு ஒரு மலைவாசஸ்தலம் போய் வந்தோம்.இங்கிருந்து ரயிலில் மதுரை பிறகு அங்கிருந்து வாடகை மகிழுந்தில் கொடைக்கானல்.கொடைக்கானலை நெருங்கும் நேரத்தில் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ள எல்லோரும் நிற்கும் இடம் தான் “டும் டும் பாறை”.இங்கிருந்து பார்த்தால் எலி வால் நீர் வீழ்ச்சி தண்ணீர் இல்லாமல் தெரிகிறது.

படங்களை பெரிதுபடுத்தி பார்க்க அதன் மீது சொடுக்கவும்.





இப்படி பார்க்கும் அழகை இன்னும் உயரத்திலிருந்து பார்த்தால் அழகாக இருக்கும் அத்துடன் சுற்றுப்பயணிகளை கவற முடியும் என்ற நோக்கத்துடன் ஒரு பார்வை கோபுரம் அமைத்துள்ளார்கள்.



கீழிருந்து படங்கள் எடுத்துவிட்டு அந்த கோபுரத்தின் மேல் ஏறும் போது சிறிய ஆட்டம் எனக்கு மட்டும் உணரப்பட்டது.ஒருவேளை காற்றின் சீற்றத்தில் அப்படி நேருகிறதோ என்ற எண்ணத்துடன் படங்களை எடுத்து கீழ்வந்தவுடன் கட்டுமானத்துறை அறிவு விழித்துகொண்டது.கட்டிட்டத்தை சுற்றி வந்தவுடன் பார்த்து அசந்துவிட்டேன்.கட்டிடம் சரியாமல் இருக்க கொடுக்கப்பட்டுள்ள பக்கவாட்டு முட்டு கான்கிரீட் பெயர்ந்து அதன் கம்பிகள் வெளியில் தெரிய அதோடு அதன் நிலையில் இல்லாமல் வளைந்தும் காணப்பட்டது,ஆதாவது அந்த முட்டின் மீது அளவு அதிகமாக வெயிட் ஏறி அதன் நிலையை குலைத்துள்ளது.





இந்த நிலமை இப்படியே நீடித்தால் கொடைக்கானலில் என்றோ ஒரு நாள் இது இடிந்து விழ மிக அதிக வாய்ப்புள்ளது.சுற்றுப்பயணிகள் இதன் மீது ஏறி பருந்துப்பார்வை பார்பதை தவிர்க்கவும்.இதை அங்குள்ள நகராட்சியிடம் தெரிவிக்கலாம் என்றிருந்தேன் கால நேரம் சரிவர அமையாததால் முடியவில்லை.

இதை படிப்பவர்கள் அங்கு தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லிவிடவும்.

கட்டிடங்களை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதிக்க வேண்டும் என்ற நியதி இருக்கையில் இது எப்படி அரசாட்சியின் கண்களில் இருந்து தப்பியது என்று தெரியவில்லை.சீக்கிரமே சரி செய்யப்படவில்லை என்றால் சில உயிர்களை தானம் செய்யவேண்டியிருக்கும்.

Tuesday, July 15, 2008

பேருந்து நிறுத்தும் இடம்!!

தைரியம் இருந்தால் இதனுள் இருந்துகொண்டு பேருந்துக்கு காத்திருக்கலாம்.

தில்லை கங்கா நகரில் இன்று காலை எடுத்தது.

பெரிதாக்கி பார்க்க அதன்மீது சொடுக்குங்கள்.

Friday, July 11, 2008

பாவம் நம் மக்கள்!!

சற்று முன் தி.நகர் பக்கம் போனேன்.முன்பகல் வேளை என்பதால் கூட்டம் குறைவாக இருந்தது.பனகல் பார்க்கை சுற்றி சென்னை சில்க்ஸ்க்கு மட்டுமே பிரத்யோகமாக உள்ள நிறுத்தும் இடத்தில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தியவுடன் கட்டணத்துக்காக அனுகியவுடன் அங்கிருந்தவர் வெளியேரும் போது எங்கள் கடையில் வாங்கிய ரசீதை மட்டும் காண்பியுங்கள் போதும் என்றார்.அட! நிறுத்தம் இலவசமா? என்று நினைப்புடன் வெளியேறினேன்.

மச்சினருக்கு வரப்போகும் திருமண நாளுக்காக ஏதாவது பரிசு வாங்கலாம் என்ற எண்ணத்துடன் கொஞ்சம் பக்கத்தில் இருந்த ரத்தினா ஸ்டோருக்கு போனோம்.என்ன வாங்கப்போகிறோம் என்று முன்னமே முடிவு செய்தபடியாமல் அதிகம் சுற்றாமல் நேராக அங்கு போய் இருந்த மின்சமைப்பானில் தரமான ஒன்றை எடுத்து பணம் கட்டிவெளியில் வந்தோம்.

என் கண்ணுக்குத்தான் படவேண்டுமா? இது.பக்கத்தில் நடக்கும் மேம்பால வேலைகள் முடிவடையும் நிலையில் பல பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்ததன.இதைச்செய்யும் நிறுவனம் Gammon India.அவர்கள் அலுவலகம் அந்த பாலத்தின் கீழேயே உள்ளது படம் பார்க்க.



பாலத்தின் முகப்பு (ரெங்கநாதன் தெரு பக்கம்)கீழே



பாலத்தின் பக்கவாட்டு காட்சி



இரு பக்கமும் உள்ள தடுப்புச்சுவர் (மாதிரி)



யார் அடிபட்டால் என்ன? வேலை முடிந்தால் சரி என்று எண்ணுகிறதோ "Gammon",ஆமாம் இதையெல்லாம் கட்டுப்படுத்த யாருக்காவது அதிகாரம் இருக்கா? இல்லை யாராவது தூங்குகிறார்களா?வேலையிட பாதுகாப்பு மிக மிக மோசம்.

உதாரணம் 1

முறையான தளம் இல்லாத வேலை...



உதாரணம் 2

உட்கார்ந்து இருக்கும் நபர்களுக்கு பாதுகாப்பு பட்டை எங்கே??



உதாரணம் 3

பெயின்டிங்க்,அதுவும் ஸ்பிரே பெயின்டிங்க் அடிக்கும் இடத்தை சுற்றி தடுப்பு ஏற்படுத்தி அதில் வெளியாகும் துகள்கள் வெளியேறாமல் கட்டுப்படுத்த வேண்டும் அது சுத்தமாக இல்லை,அந்த வழியே போகும் பொதுமக்களை பார்க்கும் போது மிக கஷ்டமாக இருந்தது.இது கூட தெரியாத இவ்வளவு பெரிய நிறுவனத்துக்கு குத்தகையை கொடுத்துவிட்டு தூங்கும் அதிகாரிகளை என்னவென்று சொல்வது.


யாராவது பொது நல வழக்கு போட்டு நீதிமுன்பு நிறுத்தவேண்டும்.

ஆறுதலான செய்தி: இந்த மேம்பாலம் இந்த வருடத்துக்குள் திறக்க இருப்பதாக திரு ஸ்டாலின் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கார்.

Thursday, April 17, 2008

தி.நகர் அபாயம்!!

இன்று மதியம் தி.நகர் பக்கம் போக வேண்டிய வேலை வந்தது.பழவந்தாங்களில் இருந்து மின் வண்டி மூலம் மாம்பலம் வந்துசேர்ந்தேன்.மாடிப்படி மூலம் கீழிறங்கி ரங்கநாதன் சாலையில் கால வைத்தவுடன் காண நேர்ந்த காட்சி தான் கீழே உள்ள படங்கள்.



கட்டுமானத்துறையில் இருப்பவர்கள் இந்த மாதிரி காட்சியை காண நேர்ந்தால் அங்கு நடக்கும் மக்களின் பாதுகாப்பு பற்றி கவலைப்படாமல் இருக்க முடியாது.



இந்த படங்களை எடுத்துக்கொண்டு இருக்கும் போது ஒரு சத்தம்,திரும்பினால் நான் எதிர்பார்த்தது போல் ஒருவர் நடந்துகொண்டு இருக்கும் இடத்துக்கு பக்கத்தில் கால் இடறி விழ,நீட்டிக்கொண்டு இருந்த கம்பி கையை பதம் பார்க்க ரத்தத்தை சுவைத்தது.பக்கத்தில் நடந்துகொண்டிருந்தவர்கள் கை கொடுக்க சிறிது நேரத்தில் ஒன்றும் நடக்காது போல் மக்கள் வெள்ளம் நடந்துகொண்டு இருந்தது.

இன்னும் எவ்வளவு மக்கள் ரத்தத்தை சுவைக்க காத்திருக்கோ!!!

இது இப்படிப்பட்ட கொடுமை என்றால் உஸ்மான் சாலை பக்கம், பால வேலை நடந்துகொண்டிருக்கும் இடத்தில் இதை விட மோசமான நிலமை.இங்கும் நமக்கு தெரியாமல் தினம் தினம் விபத்து நடக்கக்கூடிய சாத்தியங்கள் நிறைந்த இடம்.