Wednesday, November 19, 2008

புர்ஜ் துபாய் கட்டிடம்

இதைப் பற்றி பலரும் படம் போட்டு அருமை பெருமையெல்லாம் எழுதிட்டாங்க அதனால் வேறு ஒன்றும் சொல்ல இல்லை.

இங்கு வந்த நாள் முதலாக பக்கத்தில் போய் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் மட்டும் உறுத்திக்கொண்டு இருந்தது அது இன்று (19/11/08) மதியம் நிறைவேறியது அதுவும் எதிர்பாராமல்.

காலை 11 மணிக்கு தலை கூப்பிட்டு இன்னிக்கு ஒரு மெட்டிரீயல் டெஸ்ட் இருக்கு குத்தகைக்காரர் அழைத்துப்போவார் போய் வா என்றார், அத்தோடு இங்கிருந்து அங்கு போக வாகன நெரிசலில் 1 மணி நேரம் ஆகும் என்றார்.சரி,இங்கு சும்மா இருப்பதற்கு போய் வரலாம் என்று 12.30 க்கு கிளம்பினோம்.போகும் சாலையில் இக்கட்டிடம் தென்பட்டதும் அதை செல்பேசியில் பதிந்தேன் இதை பார்த்துக்கொண்டிருந்த நண்பர் அதன் கட்டிட விபரங்களை சொல்லி நாங்கள் அதன் அருகில் தான் வேலை பார்த்தோம் வேண்டுமென்றால் திரும்ப வரும் போது அங்கு போகலாம் என்றார்.



சுமார் 2.10க்கு அந்த வேலையை முடித்துவிட்டு திரும்பும் போது குத்தகைக்காரர் புர்ஜ் துபாய் பக்கம் போய் வரலா என்றார். அவர் சொல்லி முடிக்கும் முன்பே சரி என்றேன்.என்ன ஒரு 1 கி.மீட்டர் தள்ளி நிற்க வைத்து காண்பிப்பார் என்று பார்த்தால் அந்த கட்டிடத்துக்கு அருகிலேயே கொண்டுவிட்டு அதிசியப்படுத்திவிட்டார்.



கட்டுமானத்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் படத்தின் மீது சொடுக்கி பல விபரங்களை காணலாம்.வேலை செய்பவர்கள் எப்படி மேலே போகிறார்கள்,கட்டிடம் கட்டும் சாமான்கள் எப்படி மேலே போகின்றன் என்ற விபரங்கள் அருமையாக தெரியும்.

இந்த கட்டிடம் பைல் (PILE) எனப்படும் தாங்கும் தூண்களில் நிற்கிறது, அது 1500 விட்டம் என்றும் தரைக்கு கீழே சுமார் 45 மீட்டர் ஆழம் வரை தோண்டி போட்டுள்ளார்களாம்.167 மாடி வரை கான்கிரீட்டாலும் அதற்கு மேல் ஸ்டீலாலும் கட்டிடம் அமைந்திருப்பதாக சொன்னார்கள்.இப்போது ஸ்டீல் கட்டுமானம் நடந்துகொண்டிருக்கிறது.



அராப் டெக் மற்றும் சாம்சங் நிறுவனமும் கூட்டு சேர்ந்து கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.எம்மார் என்னும் நிறுவனம் தான் இந்த கட்டிடத்தின் உரிமையாளர்.

மறக்காமல் படத்தின் மீது சொடுக்கிப்பாருங்கள்.

Tuesday, November 18, 2008

பலூன் பறக்குது.

நேற்று சாயங்காலம் வேலை முடிய இருக்கும் நேரம் வெளியே நின்றுகொண்டிருக்கும் போது சூரிய அஸ்தமனம் அழகாக இருந்தது, அப்போது எடுத்த படங்கள் இது.கணினியில் போட்டு பார்க்கும் போது ஹீலியம் அடைக்கப்பட்ட பலூனா அல்லது ஹாட் ஏர் பலுனா என்று தெரியவில்லை,நகரப்பகுதியை சுற்றி வருவதை காண முடிந்தது.இந்த சேவை பொது மக்களுக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை.

இப்போதைக்கு படத்தை மட்டும் பார்த்துவையுங்கள்.









Monday, November 17, 2008

முதல் துளி

துபாயில் எப்பவாவது தான் மழை பெய்யும் என்று கேள்விப்பட்டிருந்தேன்,நேற்று தான் அந்த முதல் நாள் போலும்.கொஞ்ச நாட்களாகவே காற்றின் குளுமை மாலை சூரியன் விழும் போதே தெரிய ஆரம்பித்துவிட்டது.

வேலை செய்யும் இடத்தில் வெய்யில் நின்றால் ஒரு வித வெப்பமும் சட்டென்று நிழலில் நின்றால் சடாரென்று குளுமையாவது வினோதமாக இருக்கு.

மழை பெய்யும் போது நான் தூங்கியிருந்தாலும் சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரையும் இப்படி கார் மீது நிற்கும் தண்ணீரும் காட்டிக்கொடுத்துவிடும்.அதை நீங்களும் பார்த்து மகிழுங்கள்.

சக்கரத்து மூடிக்கு கூட இவ்வளவு பளபளப்பு வேண்டியிருக்கு!!



படத்தை பெரிதாக்கி பார்க்க அதன் மீது சொடுக்கவும்.

Tuesday, November 11, 2008

சோ!!

இந்த புத்தகம் கண்ணில் பட்டதும் இதை படிப்பதா அல்லது வேண்டாமா என்ற குழப்பத்துடன் இருந்தேன். தெரிந்த கதை ஏற்கனவே பல புத்தகங்களில் படித்தது நிறைய கதாகாலட்ஷேபத்தில் கேட்டதையே திரும்பவும் படிக்கனுமா என்ற நிலையில் பொழுது போக்குவதற்காக படித்தேன்.

தலைக்கு வைத்தால் நிச்சயம் தலைகாணி தேவைப்படாது என்பது போன்ற அளவு நிச்சயம் தூங்கத்தான் போகிறோம்(தூங்காம இருக்கத்தான் இந்த படிக்கும் வேலையே!!) என்று நினைத்தேன்.



படிக்கப்படிக்க ஒவ்வொரு பக்கமும் ஒரு சரித்திரமாக இருக்கு.புரிதல்கள் மற்றும் விளக்கங்களும் கணக்கிடமுடியாத காலகட்டத்தில் என்ன மாதிரி எண்ணங்கள் இருந்திருக்கின்றன என்று யோசிக்கும் போது வியக்காமல் இருக்கமுடியவில்லை.

ஆத்திகர்/நாத்திகர் என்ற பாகுபாடின்றி அனைவரும் ஒரு முறையாவது படித்து பயன்பெற வேண்டும்/சுயசோதனை செய்துகொள்ளவேண்டிய அவசியம்.

சோ, மொட்டை தலையன், சொட்டை தலையன்,பார்பன அடிவருடி என்ற எண்ணத்துடன் படித்தால் இழப்பு அவருக்கல்ல.

Thursday, November 06, 2008

துபாய் - வான்வெளி

முதல் படம்: வேலை முடிந்து வீட்டுக்கு கிளம்பும் நேரம் வெளியில் வந்தவுடன் இந்த வானக்கோலம் கண்ணில்பட்டது,பிடி செல்பேசி மூலம்.




அடுத்து இந்த ஹெலிக்காப்டர்,எதையோ தூக்கிட்டு போகுது.





இந்த படம் நேற்று எடுத்தது.கரமா பகுதிக்கு போகும் எடுத்தது.உலகின் உயரமான கோபுரம் தெரிகிறதா?

Sunday, November 02, 2008

கத்திப்பாரா அழகு.

கத்திப்பாரா பாலம் - அனைத்து கிளைகளும் திறக்கப்பட்ட பிறகு
(படங்கள் என் மனைவி எடுத்தது)




என்னையா இது பாலத்தை இவ்வளவு செலவு பண்ணி கட்டிவிட்டு பெயர் பலகையை இப்படியா வைப்பது அதுவும் புயல் வரும் சென்னையில்.சரியான அரைவேக்காட்டுத்தனமா தெரியுது.



என்ன தான் சொல்லுங்க,பார்ப்பதற்கு கொஞ்சம் அழகு கூடிய மாதிரி தான் இருக்கு.சாலை மார்க்கிங்கை அடிக்கடி போடுங்கப்பா!

மேம்பால பகுதியிலும் POT HOLES வராம இருக்கனும்.

Saturday, November 01, 2008

சத்வா

இது துபாயில் இப்போதைக்கு விலை குறைந்த வீடுகள் கிடைக்கும் இடங்களில் ஒன்று.சில நாட்களுக்கு முன்பு, என்னுடன் வேலை செய்யும் பிலிப்பினோகாரர் என்னை அங்கு கூட்டிக்கொண்டு போனார்.அங்குள்ள சில கடைத்தொகுதி வாசல்களில் பிட் நோட்டிஸ் ஒட்டியிருப்பார்கள் அதில் உள்ள எண்ணை அழைத்தால் விபரங்கள் கிடைக்கும் என்று சொன்னார்.

அங்கு இறங்கியவுடனே மாலை வெய்யிலில் ஷேக் சையட் சாலையில் நடக்கும் கட்டுமான வேலைகள் "பளிச்" என்று தெரிந்தது.வீடு தேடுவதை பிறகு பார்க்கலாம், உலகத்தில் இப்போதைக்கு உயரமான கட்டிடம் நன்றாக தெரிவதை படம் எடுக்கலாம் என்று சாலையில் மறுபக்கத்துக்கு போய் கீழுள்ள படத்தை எடுத்தேன்.....உங்களுக்காக.



இப்பகுதியில் நம்மவர்கள் பிலிபைன்ஸ் மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள்.ஒரு சிறிய அறை கிடைத்தால் அதிலும் தட்டி அடித்து பிரித்து மறுபகுதியை வாடைக்குவிட ஆசைப்படுகிறார்கள்.எவ்வளவுக்கு எவ்வளவு தங்கள் இருப்பிடத்தை சுருக்க முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு சுருக்கிக்கொள்கிறார்கள்.

மறுநாள் அந்த பிலிப்பினோ நண்பனிடம் ஒரு அறை வாடகை 4000 திராம் சொல்கிறார்கள் என்றேன்,அங்கு போய் அதில் தடுப்பு போட்டு,தடுப்பை வாடகைக்கு விட்டுவிடு என்று கூலாக சொன்னான்.

இவ்வளவு பக்கத்திலா?

ஹாங்காங் பழையவிமான நிலையத்தை அடையும் விமானங்கள் மிகவும் பிரம்மப்பிரயத்னத்துடன் அடைவதாக முன்பு எங்கோ படித்த ஞாபகம் அதோடு ஒரு நகரத்தின் மீது மிகவும் தாழ்வாக பறக்கிறது என்று ஒரு விமானத்தின் படத்தையும் போட்டு காட்டிருந்தார்கள்.

இங்கு வந்த நாட்கள் முழுவதும் விடிகாலையில் நான் தங்கியிருக்கும் வீட்டுக்கு அருகில் மிகுந்த சத்தத்துடன் இறங்கிக்கொண்டு இருக்கும்,அதுவும் சுமாராக 3 நிமிட இடைவெளியில்.மாலை வேளையில் காற்றின் திசையை பொருத்து மேலெழும்பும் அல்லது தரையிரங்கும்.சாலையில் நடப்போரும் மாலைவேளை காற்றை அனுபவிக்க வெளியில் இருப்போர்களும் அன்னாந்து பார்பது அவரவர் ஊர் போகும் நாளை ஏக்கத்துடன் விமானம் மூலம் பார்பதாக தோனும்.

இன்று காலை இந்த படம் எடுக்கும் போது வீட்டின் கூரைக்கும் விமானத்துக்கும் 50 மீட்டர் இடைவெளி தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.எதுவும் நடக்காத வரை சரி ஒரு விபத்து போதும் சில ஆயிரங்களை முழுங்க.