Tuesday, February 27, 2007

ஆஞ்சநேயர்.

புட்டபர்தி வேலையை பற்றி எழுத ஆரம்பிக்கும் முன்பே ஒரு சின்ன முன்னோட்டம் ஓட்டி பார்த்துக்கொண்டேன்.அதில் முதல் கவனம் கொண்டது "ஆஞ்சனேயர் சிலை" தான்.


இது ஆஸ்ரம் நுழைவதற்கு சற்று முன்பு ஒரு சின்ன குன்றின் மேல் இருக்கும்.இதற்கான இரும்பு வேலைகளை மாத்திரம் L&T-ECC செய்தது.

சரி இணையத்தில் ஏதாவது படம் கிடைக்குமா என்று தேடியபோது கீழ் கண்ட ஒரு அனுபவஸ்தரின் வரிகள் கிடைத்தது.

இவரை தொடர்புகொண்டு அனுமதிவாங்கி போடலாம் என்று பார்த்தால் அதற்கான விளக்கம் ஒன்றும் இல்லை.

அதனால் அப்படியே போடுகிறேன்.ஒரு வேளை அவரே படிக்க நேர்ந்தால்,ஆட்சேபித்தால் என்னை தொடர்புகொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

Experience of the Divinity of Bhagavan by Devotees

Mr. K.Thillainayagam

Mr. Thillainayagam (60), a Civil & Sanitary Engineer, worked
initially in the Tamil Nadu Water Supply & Drainage Board. Later he
moved to the Corporations of the Government of India. From there he
moved to Bahrain to work in the Government there for about 20 years.
He just resigned service and moved over to Chennai. He plans to move
over to Puttaparthi in the next few weeks to spend the rest of his
life at the Feet of Bhagavan. He has several experiences of the
Divinity of Bhagavan of which he narrates an important one in his own
words.

'Swami called the then Ashram Engineer Sri Jeyakumar a few months
before the 65th Birthday Celebrations in the year 1990 and instructed
him to begin the construction of a 65 feet tall statue signifying the
65th year of the Advent of the Avatar, for His Bhaktha 'Hanuman', at
a place selected by Him on the hill top overlooking the Hill View
Stadium.

I had been then working as an Honorary Engineer of the Sri Sathya Sai
Institute of Higher Learning at Prasanthi Nilayam for a short while.
Sri Jayakumar formed a team of three, comprising him, Sri
Subrahmanyam the Ashram Shilpi and me. Swami blessed all of us
together expressing His approval for the joint effort.

Sri Subrahmanyam colleted a few pictures available in the market and
also prepared a few hand sketches, and submitted all those for
Swami's approval. Swami selected a particular picture depicting
Hanuman lifting Sanjeevani Hill in his left hand, the bent left leg
on small hillock and the straight right leg behind. None of us had
any idea as to how to proceed. Sri Subrahmanyam, though involved in
creating many statues earlier, also had no definite ideas about this
tall statue.

Sri Subrahmanyam, however, made a small-scale model of the statue. I
took measurement of the various components of this scale model, and
made load calculation of the prototype statue. I found that the
statue was going to weigh several hundreds of tonnes. We thought that
it would be too difficult to support this massive statue, and hence
we prayed to Swami to allow us to make the statue hollow.

Swami, while disapproving our proposal, said, 'this statue is going
to last hundreds and hundreds of years. Therefore, no hollow work, no
false work. Make it solid and strong.' Owing to the heaviness, I
decided to support the statue using rolled structural steel sections.
Swami, though He did not instruct me directly, used to flash the
right solution at the right time, of course, only after we had
strained our nerves. Unable to resolve many issues related to the
structural stability of the statue, I used to go to the Prayer Hall,
kneel before the Chair with my sketchbook, pencil and eraser and
prayed to Swami to give me the correct solution. I used to get the
correct idea as if some one was dictating. This happened on quite a
few occasions during the period.

The statue had been designed on the following principle. The
structural steel sections were to form part of the skeleton, and
reinforced cement concrete (RCC) would make the flesh. Brickbats
fixed on specially prepared cement mortar were to be used to create
the shape and curves of the statue.

After having completed the preliminary calculations, the next step
was the site clearance, levelling, grading and preparation of the
base area for the statue. We engaged local labour to clear the site
over the rock underneath. Once we removed the weathered rock, lo, we
found a flat, level, solid rock bed, which did not require any
further treatment to bear the massive statue! Remember, Swami Himself
chose this site!

Next we wanted to procure the rolled structural steel sections from
Bangalore. To fabricate the legs and other important parts, we needed
ISMB 600 steel girders. This is the largest and heaviest rolled steel
section manufactured in India. This section is normally used in
railway bridges and in heavy steel construction. This section was not
available in Bangalore city. We went round and round, but of no use.

We suddenly heard from one dealer that freshly rolled ISMB 600
girders in required quantity and length had just been received
through railway wagons in the goods yard, and could be delivered to
us the next day! We transported these and other smaller sections
through long body trucks. Lord Sai made it possible for us to get the
steel sections not commonly used by the general public and not easily
available in the open market. Normally one has to place orders for
these sections and wait for a very long time, whereas we got them
just like that.

While gracing the Bhoomi Pooja for the statue, Swami created a three
inches and a half (approximately) tall statue, and instructed us to
construct the actual statue according to this model. This model was
different from the one approved by Swami earlier, but it was a
beautiful one. The statue now standing on the Hilltop was built on
that model. Swami blessed a few stone blocks and bricks by touching
them. Swami also placed them in position on cement mortar bed thus
signalling the commencement of construction. The Divine Feet
consecrated the whole area. Swami broke a few coconuts and sprinkled
the water all over the place.

Swami directed me to go to the ECC Design Office to finalize the
design, detailed engineering and drafting the construction drawing.
They allocated a draughtsman to assist me in preparing the drawings.
Within a couple of days, that draughtsman was withdrawn saying that
his services were required for a very urgent tender work. As I could
not wait for long, I requested the ECC Management to make alternate
arrangement. They borrowed the services of a draughtsman from another
division. Once again Lord Sai came to our rescue. The draughtsman
suddenly withdrawn from this work is a RCC specialist where as the
one who replaced him is a structural steel specialist. Thus Swami
arranged the services of the right person for this job.

Swami used to visit the site very frequently. One day, during one of
His site visits, He instructed me to place the statue on a pedestal
and not directly on the rock, because the lower part of the statue
might not be visible to the people at the ground level.

I prayed to Swami to indicate as to what should be the height of the
pedestal. Swami said, 'My height'.

In order to counterbalance the overturning effect of the wind on the
statue, we needed a very heavy base for the statue. We found, by
calculation, that we needed a 45 feet long and 25 feet wide pedestal.
But what should be the height of the pedestal? After calculations we
found that the height of the pedestal required to counter the wind
forces is the same as Swami wanted it to be!

The leg girders were actually anchored into this pedestal, which is
simply resting on the sheet rock. Because of this base pedestal,
there was no need to excavate deep into the rock or drill holes into
the rock for anchoring the statue. Thus Swami saved us from the
difficult task of anchoring the statue.

Swami evinced keen interest on this work. He used to bless us with
His frequent Darshan at the site. He always came with carloads of
snacks, sweets, and fruits to the site. Swami used to bring many
visitors and show them the construction work.

The steel frame supporting the Sanjeevani hill had to be hoisted and
placed in position. The frame was ready. Hoisting arrangement was
made ready. I was requesting Swami to come to the site and bless us
to commence the hoisting. Swami was somehow postponing the site-
visit. But I was continuously praying for the Divine site-visit.

One day He came and broke a coconut on the steel frame and directed
us to start lifting. Swami got into the car and drove off. The car
would have gone only a hundred yards, and suddenly stopped. I ran and
reached Swami's Presence. Swami asked me, 'when will you complete the
hoisting work?' I replied, 'Swami, with your grace, we hope to
complete the work around lunch time and I will inform you when I come
for the afternoon Darshan'.

No sooner had Swami left the scene than the steel beam on top
carrying the hoisting pulley was twisted (torsion failure), and the
steel frame, which was lifted above the ground by a few feet, crash-
landed on the ground. Because of this unexpected event, we had simply
to abandon the hoisting work!

I went to the Mandir for the afternoon Darshan and sat desolate in
the verandah. Swami's door opened, and Swami came straight to me with
thumb- down signal even before I could open my mouth to explain the
debacle. Swami said he had known everything. There was no damage to
men or materials. Swami saved us all from a major site accident.

The next day Swami told me that I had chosen a very bad time for the
hoisting operation because all the planets at that time were in
unfavourable position. He directed us not to do anything for the next
few days. Accordingly we waited for a few days and recommenced the
work on instructions by Swami. No need to mention that we could
successfully complete the work soon after.


The steel fabrication and erection work of the statue was a heavy
construction work, something similar to major bridgework. The hard
working and highly skilled site engineers and technicians of the ECC
accomplished the construction work in time. Every one of us
associated with the erection of the Hanuman statue could feel the
Divine Presence every moment in its execution.

Jai Sai Ram'

-- Mr. K.Thillainayagam

நன்றி:http://srisathyasaibaba.blogspot.com/2005_03_01_srisathyasaibaba_archive.html

ஒரு சின்ன பின்குறிப்பு:இதை மேற்பார்வை செய்த எங்கள் சக நண்பர் திரு.தியாகராஜன்,இதற்கு முன்பு இருந்த போதும் அந்த வேலை முடித்தபிறகு அவர் வாழ்ந்த வாழ்கை முறையும் அப்படியே நேர் எதிர்.நேரில் பார்த்த அனுபவம் இது.
இத்தனைக்கும் அவர் என்னை அழைப்பது (மறைமுகமாக) ஹரி வலைப்பூவில் நமது கருப்புவின் பெயரில் வரும் பின்னூட்டம் போல்!!

இப்படி ஆசிரமத்தை சுற்றி சிறிய வேலைகள் செய்துவந்தோம்.
அபோது தான் சாய்பாபா ஒரு ஆஸ்பத்திரி கட்டப்போகிறார் என்றும் அதற்காக நிலம் வாங்கும் முயற்சிகள் முடிவடைந்தாக சொன்னார்கள்.

அந்த இடம் புட்டபர்த்தியில் இருந்து சுமார் 7KM தள்ளியிருந்தது.

புட்டபர்த்தி வருபவர்கள் இந்த இடத்தை கடந்துதான் வரவேண்டும்,அதனால் கண்ணில் இருந்து தப்பிப்பது கஷ்டம்.
வாங்க அங்கு போவோம்,அடுத்த பதிவில்.

Sunday, February 25, 2007

பாட்டு பிடிக்கும் வேலை

நாம் பல சமயம் பாடல்/பேச்சு இவைகளை இணையத்தின் மூலம் கேட்கிறோம்.அப்படி கேட்க்கும் போது,இதை நம் கணினியில் சேமிக்க முடிந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும் என்று நினைத்திருப்போம்.

இந்த மாதிரி சில பாடல்கள்/பேச்சுக்கள் தரவிரக்கம் செய்யக்கூடிய சூழ்நிலையை அந்தந்த வலைப்பக்கங்களே செய்துகொடுத்திருப்பார்கள்.

சிலர் கேட்க மட்டும் அனுமதித்திருப்பார்கள்.

அவுங்க என்ன பண்ணா,எனக்கென்ன? எனக்கு அது வேண்டும் என்று அடம்பிடிக்கும் குழந்தை நீங்கள் என்றால், இதோ அதற்கு ஒரு வழி.
தெரிஞ்சவங்க அப்படியே அப்பீட் ஆகிங்கிங்க!!

கீழே உள்ளது சவுண்ட் Card. இதில் உள்ள ஒரு நுழைப்பான் Line In என்று உள்ளது பாருங்க,அதைத்தான் நான் உபயோகிக்க போகிறோம்.


இந்த தொழிற்நுட்பம் மிகவும் எளிது. கணினிக்கு சவுண்டு போக ஒரு நுழைப்பானும்,வாங்கிக்கொள்ள மற்றொன்றும் இருந்தால் போதும்.

கீழே உள்ள மாதிரி ஒரு அடாப்டர் வாங்கிக்கொள்ளுங்கள்.இது இங்கு சிங்கையில் 1 வெள்ளிதான்.(Get Stereo Type)


இதை சவுண்ட் கார்டில் உள்ள speaker in யில் பொருத்தவும்.ஒரு நுழைப்பில் Speaker cable உம் மற்றொன்றில் கீழே காண்பித்துள்ள கேபிளையும் சொருகவும்.

இந்த கேபிளின் மறுமுனை சவுண்ட் கார்டின் Line in உள் நுழைக்கவும்.
அம்புடெதேன்.
இப்ப பாட்டு பிடிக்க என்ன மென்பொருள் வேனும் என்று பார்ப்போம்.
XP வைதிருப்பவர்களுக்கு Sound Recorder என்ற மென்பொருள் இருக்கு,அதில் வெரும் 1 நிமிடம் தான் பிடிக்க முடியும். வேலைக்கு ஆகாது.
அடுத்து Real Player, இதில் மேம்படுத்தப்பட்ட சேவைக்கு மாத்திரம் தான் இருக்கிறது. அதற்கு பணம் கட்ட வேண்டும்.அதனால அப்பால போக்லாம்.
நான் உபயோகப்படுத்தியது.

ஆடா சிட்டி(தொடுப்பை சுட்டு,எடுத்துக்கங்க)

அதில் உள்ள Settings உங்களுக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுத்து "Record"ஐ அமுத்த வேண்டும்.அதற்கு முன் நீங்கள் கேட்கவிரும்பும் இடத்துக்கு போய் பாடலை/பேச்சை ஓட விடுங்கள்.

MP3 ஆக சேமிக்க அங்கு வழி சொல்லப்பட்டுள்ளது.


தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறேன்,அவ்வளவு தான்.

Friday, February 23, 2007

சென்னையில் வீடு

அவ்வப்போது செய்திதாள்களில் இதை பார்த்திருக்கலாம்.
வீடு கட்டித்தர பணம் வாங்கிகொண்டு தலை மறைவு,
வாங்கிய வீட்டுக்கு பத்திரம் இல்லை.அனுமதிக்கப்பட்ட உயரத்துக்கு மேல் கட்டிடம் கட்டிவிட்டார்.
அனுமதியில்லாமல் வீட்டில் கட்டுமானப்பணிகள் மேற்கொண்டதால் "இடிப்பு"
இவை அனைத்தும் கொஞ்சம் பெரிய சிட்டிகளில் அனாயாசமாக நடந்துவருகிறது,அதற்கு பலரும் உடந்தை.
இந்த பட்டனை தட்டுங்க.
இதில் சொல்லப்பட்டது உண்மையாக இருந்தால்,உழைத்த வர்கத்தின் வேர்வைப்பணம் எப்படி சுருட்டப்பட்டு இருக்கிறது என்று தெரியும்.
அப்ப இதுக்கு என்ன வழி?
நான் இப்ப வீடு வாங்கப்போவதில்லை,அதனால் யோசிக்கவில்லை.:-))
ரொம்ப அவசியமாக வேண்டுமென்றால்..
ஒரு 2 வருடம் காத்திருங்க,நான் வந்து கட்டிக்கொடுக்கிறேன்.
என்னை எப்படி நம்புவது என்று கேட்கிறீர்களா?
கஷ்டம் தான் - பதில் சொல்வது.
நல்ல தரமான கட்டுமான வேலை செய்பவர் வேண்டுமென்றால் தனி மடலில் கேட்கவும்.

Wednesday, February 21, 2007

கிரிக்கெட்

இணைய இணைப்பில் வேகம் வந்தவுடன் என்ன செய்வது என்ற யோஜனையுடன் கிரிக்கெட் மேச் ஏதாவது கிடைக்குமா? என்று பார்த்துக்கொண்டிருந்தேன்.
அப்போது மாட்டியது இந்த பக்கம்.
இதில் பல வீடியோக்கள் கிடைக்கிறது,அதில் சமீபத்தில் நடந்த ஸ்ரீலங்கா மற்றும் இந்தியாவுக்கு இடையில் நடந்த மேட்சும் இருக்கு.
இதை தரவிரக்கம் செய்ய நீங்கள் ரிஜிஸ்டர் செய்துகொள்ளவேண்டும்.
வீடியோ தரம் கொஞ்சம் கம்மி தான்.கிரிக்கெட் மீது காதல் உள்ளவர்களுக்கு இதெல்லாம் பொருட்டாக இருக்காது.
போய் பாருங்கள்

Tuesday, February 20, 2007

Pre-Cast

10 பக்கங்கள் எழுதுவதை ஒரு படம் போட்டு சொல்லி விடலாம்.அதன்படி Pre-Cast என்னும் தொழிற்நுட்பம் இங்கு எப்படி செய்கிறார்கள் என்று பாருங்கள்.கான்டேக்ட் முகவரியில்லாத்தால் அப்படியே சுட்டு திருப்பி போட்டிருக்கேன்.வழக்கம் போல் ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்,பதில் எனக்கு தெரிந்த அளவுக்கு சொல்கிறேன்.
மேல்படத்தின் வலது பக்கம் உள்ளது நெகடிவ் மோல்ட்.இடது பக்கம் உள்ளது கான்கிரீட் போட்டது.
போட்ட கான்கிரீட் கிட்டத்தில்

ஒர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மாற்றுகிறார்கள்.


இன்னும் கொஞ்சம் கிட்டத்தில் பார்க்கலாம்.






போட்ட கான்கிரீட்க்கு முட்டு கொடுத்திருப்பதை கீழே உள்ள படம் காட்டுகிறது.

இந்த பிரி-காஸ்ட் வேலை, ஒரு பாலத்தை ஆஸ்திரேலியாவில் எப்படி செய்கிறார்கள் என்ற படத்தை காண இங்கே சொடுக்குங்கள்.

இந்த பக்கத்தில் பாருங்கள் அதைவிட விபரமாக இருக்கிறது,இது தாய்லாந்தில் கட்டப்படும் ஒரு கட்டுமானத்தில் நடப்பது.

Friday, February 16, 2007

காற்றில் இணையம்

இணையம் முதன் முதலில் மோடத்துடன் ஆரம்பித்தது,அதன் ஒரு முனை கணினியின் RS232 போர்ட் உடன் மற்ற முனை மோடத்துடன் இருந்தது.தொலை பேசி கேபிளை இணைத்து டையல் அப் முறையில் இணைந்தோம்.

பிறகு அதை மேம்படுத்தி இன்னும் கொஞ்சம் வேகத்தை கூட்ட புதுவித மோடத்தை (ADSL) USB போர்ட் உடன் இணைத்தோம்.

இதற்கு பிறகும் தாகம் அடங்காமல் இங்குள்ள ஸ்டார் ஹப் என்ற கம்பெனி கேபிள் டிவி வழக்ங்கும் அதே கேபிளின் மூலம் அதிவேக இணைய இணைப்பை வழங்கியது,வழங்கி வருகிறது.

இது வரை சொன்ன அவ்வளவுக்குமே உங்கள் வீட்டில் உள்ள தொலைபேசி கேபிளையோ அல்லது கேபிள் டிவி கேபிளையோ தான் உபயோகப்படுத்த வேண்டியிருக்கும்.

இதையெல்லாம் தூக்கி சாப்பிடக்கூடிய தொழிற்நுட்பம் இப்போது சிங்கையில் உள்ள ஒரு தொலைபேசி நிறுவனம் வழங்கத்தொடங்கியுள்ளது.அந்த நிறுவனத்தின் பெயர் M1.

இவர்கள் 3G-HSDPA என்ற முறையின் கீழ் கீழே உள்ள படத்தின் இருப்பது போல் ஒரு கம்பியில்லா மோடம் கொடுக்கிறார்கள்.அதை சிங்கப்பூரில் எங்கு வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம்.





உங்களிடம் இருக்க வேண்டியதெல்லாம் USB 2 போர்ட்,Win XP or Win 2000.இதன் அளவு ஒரு செல் போன் அளவுக்குத்தான் இருக்கிறது.அதனால் எங்கு வேண்டுமானாலும் எடுத்துப்போக வசதியாக உள்ளது.தேவையான டிரைவர்கள் அதை இணைக்கும் போதே எடுத்துக்கொள்ளும் வகையில் உள்ளது.Mac யையும் இது சப்போர்ட் பண்ணுகிறது.

வேகம்??

3வித பிளான்கள் உள்ளது.உங்கள் பர்சின் உள்ளே இருப்பதற்கு தகுந்தமாதிரி 22,38 மற்றும் 69 வெள்ளிகளுக்கு உள்ளது.

அவ்வப்போது இணைபின் வேகம் மாறுபடுவதால் சில சமயம் தடுமாறுகிறது,இருந்தாலும் Dail-up வை விட மேம்பட்ட வேகம்.

இதெல்லாவற்றிலும் இவர்கள் கேட்பது 6 மாத ஒப்பந்தம் தான்.சிம் கார்டுக்கு 26.25 வெள்ளி மட்டுமே கட்டி 3 நாட்கள் காத்திருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.இந்த 3 நாட்கள் வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே.

கடந்த 2 நாட்களாக உபயோகிக்கிறேன்.நன்றாக உள்ளது.போகப்போக பார்ப்போம்.

இந்த மாதிரி மோடங்கள் வின் டோஸ்க்கு மாத்திரம் தேவையான் டிரைவர்கள் வழங்குகின்றன.லினக்ஸ்க்கு?

சும்மா இருபாங்களா நம் ஆட்கள்.சில தேசங்களில் இதை வேலை செய்ய வைத்துவிட்டார்கள்.பல முறை படித்து செயல்படுத்த உள்ளேன்.

Thursday, February 15, 2007

புட்டபர்த்தி

இந்த சாய்ராம் பேப்பர்களை அஸ்திவாரத்தில் போடமுடியுமா என்று கேட்டு வந்த மலையாள பெண்மணிக்கு தேவையான அறிவுரைகளை கொடுத்து,எங்கள் வேலைக்கு வேட்டு வைக்காதே,என்று சொல்லி அனுப்பிவைத்தோம்.

இந்த கேன்டின் கட்டுமானப்பணி மிக சாதாரணமானது ஆனால் மிகவும் இட நெருக்கடிக்கிடையில் செய்யவேண்டியிருந்தது.காலை மற்றும் மாலை நடக்கும் பஜன்/தர்ஷன் சமயங்களில் வேலையை நிறுத்த வேண்டும்.அருகருகே உள்ள கட்டிடங்களுக்கு எவ்வித சேதாரம் இல்லாமல் வேலை செய்யவேண்டும் என்ற நெருக்கடி வேறு.இதெல்லாம் எங்களுக்கு பழக்கமான வேலை என்பதால் அவ்வளவாக கஷ்டம் தெரியவில்லை.

என்னை இங்கு வரச்சொல்லிய வேலை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டிருந்ததால்,அது சரியாகும் வரை இந்த கேன்டின் கூரை வேலையை பார்க்கும்படி பணிக்கப்பட்டேன்.

இது முன்கூட்டிய கான்கிரீட் போட்டு மேல் எடுத்து வைக்கும் முறையான (PreCast) முறைப்படி கட்ட உத்தேசித்திருந்தார்கள்.நான் இந்த வேலையை ஏற்கனவே செய்திருந்ததால் அதற்கான வேலையில் மூழ்கினேன்.


அதற்கு தேவையான மோல்ட் செய்து முதல் சிலாப் போட்டு எடுக்கும் வரை தான் பிரச்சனை.முதல் சிலாப் உடையாமல் வந்துவிட்டால்,அப்புறம் வந்து சும்மா மேற்பார்வை மட்டும் செய்தால் போதும்.

இந்த மோல்ட் என்பது மெழுகு பொம்மை தயாரிக்க அதன் உருவத்தின் பிரதி எடுத்து அதன் மேல் மெழுகை ஊற்றி எடுப்பார்களோ அதே டெக்னிக் தான் இங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது.

இது சில சமயம் பிளைவுட் அல்லது செங்கல்லில் செய்து சுற்றி கொஞ்சம் கான்கிரீட் போட்டு பிறகு மெழுகை கரைத்து ஊற்றி நன்றாக பாலிஸ் செய்வார்கள்.கான்கிரீட் போடுவதற்கு முன்பு இதற்கென்று உள்ள எண்ணையை ஊற்றி போடுவார்கள்.இந்த எண்ணெய் கான்கிரீட்டுக்கும் மோல்டுக்கும் இடையே அதிக உராய்வு இல்லாமல் செய்து,கான்கிரீட்டை மேல் தூக்கும் போது இலகுவாக்கும்.


இதில் மிக முக்கியமாக பார்க்கவேண்டியது,மோல்டின் அத்தனை பக்கங்களும் கீழ் பக்கத்தைவிட மேல் பக்கம் குறைவாக இருக்கவேண்டும்.

அதற்கடுத்தது எல்லா பக்கங்களும் வழவழப்பாக இருக்கவேண்டும்.எவ்வளவுக்கு எவ்வளவு வழுவழுப்பாக இருக்கோ அவ்வளவுக்கு நல்லது.

அதற்கடுத்தது இப்படி போட்ட கான்கிரீட் தூக்குவதற்கு ஏற்ற ஹ¥க் இருக்கவேண்டும்.

குடுத்திருக்கும் வரைபடத்தில் இருக்கும் இடத்திலேயே பொருத்தினால் சரியாக இருக்கும்.இந்த ஹ¥க்கின் மேல் பகுதி கான்கிரீட்டின் வெளிப்புறத்தில் இருந்து மிக குறைந்த பட்சமாக 30MM இருக்க வேண்டும்.

அதி முக்கியமாக போட்ட கான்கிரீட் ஓரளவுக்கு இறுகியிருக்கவேண்டும்.இதற்காக சில சமயம் நீராவியில் கூட குளிப்பாட்டுவார்கள்.இது கான்கிரீட் இறுகும் நிலையை மேம்படுத்தும் ஆனால் செலவு பிடிக்கும்.

தேவைக்கேற்ப ஒன்று அல்லது இரண்டு மோல்ட் போட்டு வேலை பார்ப்போம்.அதை தூக்குவதற்கு கிரேன் இருக்கும்.பக்கத்திலேயே,போட்ட சிலாபுகளை ரிப்பேர் மற்றும் மேம்படுத்துவதற்காக பல மேடைகள் இருக்கும்.

இந்த வேலை அவ்வளவு தொந்திரவு கொடுக்காமல் முடிய,நாங்கள் எதிர்பார்த்த வேலையும் வந்தது.

மேலும் சில கலர் படங்கள் (Precast) அடுத்த பதிவில் வரும்

வாங்க அடுத்த பதிவுக்கு

Tuesday, February 13, 2007

கேள்விகள் பல விதம்

வலைப்பூ மற்றும் தமிழ்மணத்தில் இணைந்திருப்பவர்களுக்கு இங்கு நடைப்பெறும் விவாதங்களும் கருத்துகளும் பரிட்சனமானவையே.



இதற்கான விளக்கத்தை ஒரு மூன்றாவது மனிதர் எப்போதோ எழுதியதை படிக்க நேர்ந்தால்???



இன்று மதியம் இந்த புத்தகத்தை படிக்கும் போது கண்ணில் பட்டது.இதை நம் வலைப்பூ மக்களுக்கும் காண்பிக்கலாம் என்ற எண்ணத்துடன் கீழே உள்ள படங்கள்.





இந்த பக்கத்தில், ஒருவர் எப்படி இருக்கவேண்டும்,இல்லாவிட்டால் என்னாகும் என்று எவ்வளவு அழகாக சொல்லியிருக்கார் பாருங்கள்.




பெரிதாக பார்க்க படத்தின் மேல் சொடுக்கவும்.

இந்த புத்தகத்தில், பக்கம் 300யில் இருந்து கடைசி வரை திரு.பாலகுமாரனனின் கை வண்ணம்...
சொல்ல என்னிடம் வரிகள் இல்லை.
படித்து மகிழுங்கள்.

பிரசாந்தி நிலையம்

போன பதிவு

போன பதிவில் எங்களுக்கு புட்டபர்த்தியில் பல வேலைகள் கிடைத்ததை பற்றி சொல்லியிருந்தேன்.அதன் பிறகு வேறு பெரிய வேலை எதுவும் கிடைக்காத பட்சத்தில் எனக்கு அங்கு போகச்சொல்லி கடிதம் வந்தது.

பாபாவை விமர்சித்ததற்கு உடனே பலன் கிடைத்துவிட்டது.

இளம் வயது,வீரியம் அதிகம், அதனால் எதற்கும் கவலைப்படாமல் திரும்ப பெட்டிகளை கட்ட ஆரம்பித்தேன்.

ஆமாம் இந்த புட்டபர்த்தி எங்கிருக்கு?கீழே உள்ள படத்தை பார்க்கவும்.



சென்னையில் இருந்து நேரடி பேருந்து வசதி அப்போது இருந்தது.இன்று இருக்கிறதா என்று தெரியவில்லை.


தேவையான விபரங்களை வாங்கிக்கொண்டு கொஞ்ச நாள் விடுமுறை எடுத்துக்கொண்டு சென்னை போய் பிறகு புட்டபர்த்தி போகலாம் என்று முடிவுசெய்தேன்.

சென்னை வந்து சில காலம் சுற்றிவிட்டு, புட்டபர்த்திக்கு ஆந்திர போக்குவரத்து கழக பேருந்து நமது பழைய பாரீஸ் கார்னரில் இருந்து புறப்படும்,அதில் முன்பதிவு செய்துகொண்டு (ரூபாய் 87 என்று ஞாபகம்)புறப்பட்டு போனேன்.இதில் உள்ள இருக்கைகளுக்கு இடையே உள்ள இடைவெளி மிக மிக குறுகியதாக இருக்கும்.மேல் நாட்டவர்கள் அதிகமாகவே சிரமப்படுவார்கள்.

இரவு சுமார் 8 மணிவாக்கில் கிளம்பி காடு மேடுகளைத்தாண்டி காலை சுமார் 7 மணிக்கு புட்டபர்த்தி வந்துசேர்ந்தேன்.

மிகச்சிறிய பஸ் நிலையம்.இறங்கியதும் எங்கு போவது என்று தெரியாமல் ஏதோ ஒரு திசையை நோக்கி போய்கொண்டிருந்தேன்.

கையில் இருக்கும் ஒரே விலாசம் "பிராசாந்தி" நிலையம்.அது என்ன இடம்?யார் இருக்கிறார்கள் என்று எதுவும் தெரியாமல்,வழியில் உள்ளவர்களிடம் விஜாரித்து போனேன்.

வாசலில் "பிராசாந்தி" நிலையம் போர்டு பார்த்து உள்ளே போனேன்.ஒரு விதமான அமைதி.அதை விளக்குவது கஷ்டம்.பல காலங்கள் கழித்து இந்த மாதிரி இடங்களுக்கு போன போது என்னையறியாமலே இதை உணர்ந்தேன்.

வெள்ளை சீருடையில் பல மக்கள் எறும்புகளை போல் சாரி சாரியாக ஒரு திசையை நோக்கி போய்கொண்டிருந்தார்கள்.எங்கு போகிறார்கள் எதற்கு போகிறார்கள் என்று தெரியாமல் அவர்களை கொஞ்சம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

கொஞ்சம் நேரம் கழித்து,ஒருவரை அனுகி,நான் எல் & டி கம்பெனியில் வேலை செய்ய வந்துள்ளேன்.அவர்கள் அலுவலகம் எங்குள்ளது என்று காட்டமுடியுமா? என்றேன்.

அவர், நான் உள் நுழைந்த வாசலைக்காட்டி அங்கு காத்திருங்கள் உங்கள் ஜீப் வரும்,அவர்களை விஜாரித்தால் சொல்வார்கள் என்று எனக்கு மட்டுமே கேட்கக்கூடிய அளவில் சொல்லிவிட்டு,இன்னும் கொஞ்ச நேரத்தில் பஜன் ஆரம்பித்துவிடும் அதனால் வெளியில் காத்திருங்கள் என்றார்.அப்போது தான் புரிந்தது நான் பாபா தரிசனம் தரும் இடத்துக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்தது.

வெளியில் வந்து காந்திருந்த கொஞ்ச நேரத்தில் ஜீப் வந்தது.விபரம் சொன்னவுடன்,புற வழியில் போய் அலுவலகத்துக்கு போனேன்.

இங்கிருந்த ரெசிடென்ட் இன்ஜினியர் திரு.ரகுராமன்,முன்னமே மேட்டூரில் பழக்கமானவர் மற்றும் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்தவர்.மெதுவாகப்பேசக்கூடியவர்.

நான் போன சமயத்தில் இவர் தலைமையில் பக்தர்கள் தங்குவதற்காக பல மாடிகள் கொண்ட வீடுகளை கட்டிக்கொண்டிருந்தார்கள்.வெளிப்புற வேலைகள் முடிந்து உள் பூச்சு/ அலங்கார வேலைகள் நடந்துகொண்டிருந்தது.

அப்போது, கட்டிய வீடுகள் பக்தர்களுக்கு விற்கப்பட்டது.சுமார் 1 இலட்சம்.புட்டபர்த்தி வரும் போது தங்கிக்கொள்ளலாம்.மற்ற நேரத்தில் ஆசிரமம் தேவையானால் உபயோகித்துக்கொள்ளும். இந்த அடிப்படையில் எல்லா வீடுகளும் விற்கப்பட்டன.

இந்த தங்கும் விடுதி கூட மிக விரைவாக கட்டிமுடிக்க சாதாரண தொழிற்நுட்பத்துக்கு பதிலாக முன்னமே கட்டப்பட்டு தேவையான இடத்துக்கு கொண்டுவந்து தீப்பெட்டி மாதிரி அடிக்கிவைக்கிற மாதிரி கட்டினோம்.

நான் போகும் போது இந்த வீட்டு வேலை முடியும் தருவாயில் இருந்தது.

இப்படி எங்கள் வேலை போய்கொண்டிருக்கும் போது ஆசிரமத்தில் மேலும் ஒரு வேலை கொடுத்தார்கள்.அது தான் கேன்டின்.

புட்டபர்த்தியில் விரல் விட்டு எண்ணக்கூடிய விடுதிகளும் சாப்பாட்டு விடுதிகளும் தான் இருந்தது.இதனால் வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் படும் அவஸ்தையை சொல்லிமாலாது,அதுவும் பாபாவின் பிறந்த நாள் என்றால் கேட்கவேண்டாம்.


உணவு உண்ண சரியான இடம் கிடையாது.அதை மனதில் வைத்துக்கொண்டு,ஒரு கேன்டீன் கட்ட தயாராகுமாறு சொன்னார்கள்.

இது அத்தனையும் ஆஸ்ரமத்தின் உள்ளேயே நடந்தது.பல தேசங்களில் இருந்து வந்த பக்தர்கள்,எப்போது கூட்டம் கூட்டமாக வந்து போய்கொண்டிருப்பார்கள்.
ஒரு சமயம் இந்த விடுதிக்கான அஸ்திவாரம் போடும் போது ஒரு பக்தர் கூட்டத்தில் இருந்த ஒரு சில பெண்கள் வந்து ஒரு கட்டு காகிதத்தை கொடுத்து " இது சாய்ராமுக்காக எழுதியது,அந்த அஸ்திவாரத்தில் போட்டு மூடமுடியுமா?" என்றார்கள்.

என்னது கான்கீரீட் உள்ளே காகிதக்கட்டா?

வாங்க அடுத்த பதிவுக்கு.

Friday, February 09, 2007

தரைக்கு கீழே!!

பல நாடுகளில் எண்ணையை கடலடிக்கடியில் இருந்து எடுத்து வந்து தரைக்கு மேலே தொட்டி கட்டி சேமிப்பார்கள்,ஆனால் சிங்கையில் இட நெருக்கடியை சமாளிக்க என்ன செய்கிறார்கள் என்று கீழே படத்தில் பார்க்கவும்.

பெரிதாக பார்க்க படத்தின் மேல் சொடுக்கவும்
புகைப்படம்:நன்றி:டுடே

தரைக்கு கீழே பாறையில் தோண்டி அதனுள் எண்ணையை சேமிக்கிறார்கள்.இந்த மாதிரி வேறெங்கும் செய்கிறார்களா? செய்தார்களா என்று தெரியவில்லை.

இது ஒரு கல்லில் பல மாங்காய் அடிக்கும் நுட்பம்.

முதலில் சிங்கப்பூர் மக்களின் பாதுக்காப்பு கருதி நகரத்தை விட்டு தள்ளி அமைக்கப்பட்டுள்ளது.ஏதாவது அசம்பாவிதம் நடந்தாலும் அது நகரமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்காது.

தரைக்கு மேல் உள்ள இடத்தை வேறு பணிகளுக்கு உபயோகப்படுத்தலாம்.

பாசமிகு மக்களின் குறி இலக்கு கொஞ்சம் முறியடிக்கப்படுகிறது.

இது எண்ணைக்கும் மட்டும் அல்லாமல் கொஞ்சம் தொந்தரவு கொடுக்கக்கூடிய கெமிக்கள்களுக்கும் உபயோகப்படுத்த எண்ணம் உள்ளது,என்று சொல்லியுள்ளார்கள்.

மிக முக்கியமாக தனது எண்ணை கொள்ளலவை அதிகப்படுத்திகொள்ளமுடியும்.

பல வருடங்களாக தூங்கிக்கொண்டிருந்த கட்டுமானத்துறையை எழுப்ப இதுவும் கொஞ்சம் உதவும்.

இப்படி பலவற்றில், சில மேலே சொன்னவை.

இப்படி துணிச்சலாக சில வேலைகள் செய்யும் போது தான் தொழிற்நுட்பத்தின் வீச்சு தெரியவருகிறது.

Wednesday, February 07, 2007

பழைய பாடல்கள்

நமது வலைப்பதிவாளர் திரு.ஞானவெட்டியான் அவர்கள் பழம்பெரும் இனிய பாடல்களை அவர்களில் இந்த வலைப்பூவின் மூலம் நாம் கேட்பதற்கும் தரவிரக்கம் செய்யவும் கொடுத்து உதவி வருகிறார்.

இது பலரும் அறிந்தது தான்.

பல வெளிநாட்டு மக்களுக்கு இப்படி தரவிரக்கம் செய்து, தேவைப்படும் போது கேட்டுக்கொள்ள வசதியாக இருக்கிறது.

இருந்தாலும்,பல பாடல்களில் முதல் சில நொடிகள் ஒரு ஆங்கில வாசகம் வரும்.ஒரு முறை கேட்டால் இந்த வாசகம் சரி,பொறுத்துக்கொள்ளலாம்.பல பாடல்களை கேட்கும் போது சிறிது பொறுமை இழக்க வாய்புள்ளது.

இதை தவிர்க்க இலவசமாக ஒரு மென்பொருள் இங்கு கிடைக்கிறது.

அதை இன்ஸ்டால் செய்து,திறந்தவுடன் (கீழே உள்ள படத்தை பார்க்கவும்)



இதில்
"How Much do you want to Trim"-- "From the begining"

க்கு பக்கத்தில் உள்ள முதல் கட்டத்தில் 140~190 வரை கொடுத்து அதற்கு நேர் இருக்கும் பிளே பட்டனை அழுத்தினால்,வெட்டப்படும் இடத்தில் இருந்து ஒரு சில நொடிகள் பாட்டை கேட்கலாம்.

இந்த அளவை ஏற்றி/இறக்கி எங்கிருந்து வெட்டவேண்டும் என்று சொல்லிவிட்டு சேமிக்க வேண்டியது தான்.

பின்புலத்தில் உள்ள படம் திரு ராமனாதனின் பதிவில் இருந்து சுட்டது.

Tuesday, February 06, 2007

தொழிற்நுட்ப மாற்றம்

இதன் முந்தய தொடரில் தண்ணீர் கசிவைப்பற்றி சொல்லியிருந்தேன்.அதை எவ்வாறு எதிர்கொள்வார்கள் என்றும் அதற்கு அப்போது அதை தடுக்க என்ன முறையை கையாண்டார்கள் எனபதை எழுதியிருந்தேன்.

அதே தொழிற்நுட்பம் தான் அதை கொஞ்சம் மாற்றி கீழ் கண்டவாறு செய்கிறார்கள்.

அதன்படி சுற்றுச்சுவரின் கீழ் ஏதும் குழாய் பொருத்தமாட்டார்கள்.
அதென்ன அந்த குழாய் பொருத்துவது அவ்வளவு கஷ்டமான வேலையா? என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.இது ஒரு தனி குத்தகைகாரர் என்பதால் அவரை சரியான நேரத்துக்கு கூப்பிடவேண்டும்.அவர் செய்துவிட்டு போன பிறகு அந்த குழாய் சேதம் அடையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.இதெல்லாம் சின்னஞ்சிறிய பிரச்சனைகள்.அவற்றை களைவதற்கு இப்படி செய்துவிட்டார்கள்.

சுவர் வழியாக தண்ணீர் வரும் வழியை அடையாளம் கண்டபிறகு,அந்த இடத்தில் ஒரு சிறிய ஓட்டை போட்டு





கீழ் காணும் பிளாஸ்டிக்கை பொருத்த வேண்டும்.




பிறகு இந்த கரைசலை தேவையான அளவு இந்த PUMPயில் இட்டு






இந்த மாதிரி தள்ளவேண்டும்.


ஒரு குறிப்பிட்ட அழுத்தத்தில் நிறுத்தினால் கண்ணுக்கு தெரியாத விரிசலுக்குள்ளும் இந்த கரைசல் போய் நிரப்பும்.தண்ணீர் காணப்படும் இடங்களில் அதனுடன் வினைபுரிந்து விரிவாகி விரிசலை அடைக்கும்.
இப்படி போன கரைசல் Foam மாதிரி மாறி தண்ணீர் வரத்தை சுத்தமாக நிறுத்திவிடுகிறது.

இந்த வேலைக்கு அதிக ஆட்கள் தேவைப்படுவதில்லை.அதிக பட்சமாக இருவர்.

தேவைப்படும் உபகரணங்கள்

கரைசலை கலக்க பயண்படும் இயந்திரம்
ஓட்டை போட டிரில்லர்..அவ்வளவு தான்.

தேவைப்படும் உதிரி பாகங்கள்
மேல் காண்பிக்கப்பட்ட பிளாஸ்டிக் குப்பி.
மற்றும் சிறிய கைச்சாமான்கள்

நான் வேலை செய்த காலங்களில் நம் நாட்டில் பார்க்கவில்லை. ஒருவேளை இப்போது வந்திருக்கலாம்.

கட்டுமானத்துறையில் வியாபாரத்துக்காக நுழையவிரும்பும் மக்கள், சிறிய முதலீட்டுடன் இறங்கி பணம் பார்க்கலாம்.

முயலுங்களேன்.