என்னைப் பற்றி

My Photo
சென்னை, தமிழ்நாடு, India
இன்னும் முடிவாக தெரியவில்லை. நான் யார் என்று!!

பின் தொடர்பவர்கள்

தலைவலி ஆரம்பம்.

Posted by வடுவூர் குமார் Sunday, February 12, 2012 2 comments

வீடுகளில் மராமத்து வேலைகள் ஆரம்பம் ஆகிறது என்றால் தலைவலி ஆரம்பிக்கிறது என்று வைத்துக்கொள்ளலாம் ஏனென்றால் எப்போது வரும் எப்போது போகும் என்பது தெரியாது.ஒரு வேலை ஆரம்பித்தால் அதன் தொடர்ச்சி எலி வலை போல் எங்கு முடியும் என்று தெரியாது. செலவுக்கு இவ்வளவு தான் என்று முடிவாக ஒதுக்கமுடியாது.

சில வருடங்களுக்கு முன்பு மேற்கூரையில் ஏதோ டொம் டொம்  என்று சத்தம் வந்தவுடனே தெரிந்தது அங்கு பிரச்சனை என்று.
 
கூரையில் முதன் முதலில் விரிசல் ஏற்பட்டவுடன் தெரிந்தவர் மூலம் வந்த பூச்சு வேலைக்காரர் கடையில் கிடைக்கும் துறு நீக்கியை உபயோகித்து கம்பி மேல் இருக்கும் துறுவை நீக்கிவிட்டு கொஞ்சம் அதிக ஸ்ட்ராங்க் உள்ள சிமிண்டை உபயோகித்து  பூசினேன்.அந்த பூச்சு சுமார் 1.5 வருடம் தாங்கியது,அதே இடத்தில் திரும்பவும் டொம் சத்தம் கேட்க நானே அதை உடைக்க சின்ன தாம்பாளம் அளவுக்கு பூசிய கான்கிரீட் வந்தது.உள்ளே இருந்த கம்பி துறுபிடித்து விரிவாக அதன் கீழ் பக்கம் இருக்கும் கான்கிரீட்டை வெளியே தள்ளிவிட்டது. ஒரு ஓரத்தில் கம்பியின் கீழ்பக்கம் வைக்கப்படும் சிறிய கான்கிர்ரீட் துண்டு எவ்வித ஆட்சேபனை இன்றி கையாலேயே எடுக்க முடித்தது. 18 வருடத்துக்கு முன்பு எப்படி கான்கிரீட் போட்டார்கள் என்பதை இது தெளிவாக காட்டியது.


ஒரு சின்ன பகுதி தானே விழுந்திருக்கு என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது மேலும் சில இடங்களில் வீக்கம் தெரிய வரவேற்பறை முழுவதும் கைவைக்க வேண்டிய நிலை வந்தது.


இம்முறை தெரிந்தவர் ஒருவரே குத்தகைக்காரரை அனுப்பி அவர் செய்யும் வேலையில் உபயோகிக்கும் முறையை அமல்படுத்தினார்.கீழே உள்ள துறு நீக்கியை பிரஸ் கொண்டு கம்பி மீது அடிக்கவேண்டும். இது ஒருவித அமிலம் என்பதால் கம்பி மீது படும் போது சிறிது நுரை வரும்.

இம்முறையில் கம்பி மீது அந்த கெமிகலை அடித்துமுடித்து இரண்டு மணி நேரம் கழித்து கீழே காண்பித்துள்ள Compound ஐ சிமிண்டுடன் கலந்து விரிசல் உள்ள இடங்களில் போடவேண்டும் அதன் பிறகு குறைந்தபட்சம் 7 நாட்களுக்கு அதன் மீது தண்ணீர் தெளித்து அது இருக வழிசெய்ய வேண்டும்.

எல்லாம் செய்து முடிக்க சுமார் 3 நாட்கள் ஆனது. பெயிண்ட் அடிக்க இந்த கான்கிரீட் இருக வேண்டும் என்பதால் காத்திருக்கோம்.


Compound கலக்கும் விதம் மற்றும் விகிதம் அந்த உரிமையாளர்கள் சொல்லியிருக்கும் படி செய்யவேண்டும். எல்லாம் சரி, இனி இப்பிரச்சனை வராதா? என்று கேட்டால் பதில் கிடையாது. ஏனென்றால் மறுபடியும் விரிசல் வர பல காரணிகள் நம் கண்ணுக்கே தெரியாமல் கூட இருக்கலாம்.இம்முறை வெறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே.

| | edit post

தரமான கட்டுமானம்- ஸ்ரீராம் சங்கரி

Posted by வடுவூர் குமார் Monday, January 16, 2012 9 comments

சில வருடங்களாகவே ஒரு வீடு என் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி தேடிக்கொண்டிருக்கிறேன், இது வரை சரியாக அமையவில்லை.வளசரவாக்கம்/வடபழநி/விருகம்பாகம் வீடுகள் சுமார் 6000 முதல் 8000 வரை ஒரு சதுர அடிக்கு கேட்கிறார்கள்.லோக்கல் வீடு கட்டுபவர்கள் செய்யும் வேலை பார்த்து அவர்கள் பக்கம் போவதையே நிறுத்திவிட்டேன்.வீட்டு இடத்துக்குள் இருக்கும் ஆக்கிரமிப்பை தவிர்த்து வீட்டு முன்புறம் வண்டி ஏறுவதற்காக சாலையை ஆக்கிரமிப்பு பணியை நிறைவாகவே செய்கிறார்கள்.இதையெல்லாம் யாராவது கண்காணிக்கிறார்களா அல்லது தெரிந்தே விட்டுவிடுகிறார்களா என்று தெரியவில்லை.ஆக்கிரமிப்பு என்ற ஒரு வார்த்தையை வைத்தே ஒரு பெரிய வால்யூம் புக் போடலாம், அதுவும் சென்னையில்.

பின்புலம் இப்படி இருக்க, அடிக்கடி வானொலியில் இவர்களின் விளம்பரம் கேட்க கேட்க, சரி போய் பார்த்தால் என்ன என்ற முடிவு எடுத்து அதுவும் போன வாரம் தான் போக முடிந்தது.GST சாலையில் பல  துணை சாலைகள் இருந்தாலும் கூடுவாஞ்சேரியில் இருக்கும் சாலைக்கு பெயர் எதுவும் கண்ணில் படாததால் சிறிது திணறி பயணித்தோம். சுமார் 4 கி.மீட்டர் பயணிந்த பிறகு இவர்களின் கட்டுமான இடத்தை அடைந்தோம் . G+4 முறையில் அமைந்த 3 கட்டிடங்கள் கான்கிரீட் முடிந்த நிலையில் சுற்றுச்சுவர்கள் வேலை நடந்துவருகிறது.கட்டுமான இடத்திலேயே Batching Plant அமைத்து கான்கிரீட் போடுவதால் குறை எதுவும் கண்ணில் படாமல் அட்டகாசமாக இருந்தது.தாங்கும் தூண்கள் கூட நேர்த்தியாக வரிசையில் இருந்தது.இவ்வளவு நாள் பல கட்டுமான வேலைகளை பார்த்திருந்தாலும் இவர்களின் Finish மிக அருமையாக இருக்கிறது.கட்டுமான வேலைகளை இவர்கள் நேரடியாக மேற்கொள்ளாமல் ஒரு துணை நிறுவனத்திடம் கொடுத்துள்ளார்கள்.Middle East நிறுவனம் என்று சொன்னதாக ஞாபகம்.

அங்கிருந்த முகவர் எங்கள் விவரங்களை கேட்ட பிறகு மாதிரி வீட்டை காண்பிக்க அமைத்துப்போனார்.ஒரு ஏரிக்கு பக்கத்தில் இருந்ததால் எல்லோருக்கும் ஏற்படும் சந்தேகம் போல் எனக்கும் எழுந்தது. மழை காலத்தில் ஏரி தண்ணீர் எங்கு போகும் என்று கேட்டேன். சமீபத்தில் ”தானே” புயல் கொண்டு வந்து கட்டிய மழையில் இதன் விளைவு தெரிந்திருக்குமே என்று கேட்டேன். நிலம் மேட்டுப்பகுதியில் இருப்பதாலும் இதன் கீழ் பகுதியில் இன்னொரு ஏரி இருப்பதாலும் தண்ணீர் பிரச்சனை இருக்காது என்றார்கள்.

ஒரு Model House, 3 அறை வீடுக்குள் அழைத்துப்போனார்கள்.வெளிவெளிச்சம் நன்றாக நுழையும் அளவுக்கு வீடுகள் இருந்தன.வீட்டு விலையை கேட்ட போது,சதுர அடிக்கு 2150 ரூபாய் என்றும் மற்ற செலவுகளை கூட்டினால் 2500 வரும் என்று சொன்னார்.கூடவே கிளப் ஹவுசும் நீச்சல் குளமும் வரப்போவதாகவும் பிற்காலத்தில் நல்ல தங்கும் இடமாகவும் விளங்கும் என்ற விளக்கமும் சொல்லப்பட்டது.தற்போதைக்கு பள்ளிக்கூடமும்,மருத்துவனையும் பக்கத்தில் இல்லை.மக்கள் அதிகம் வந்தால் இவையெல்லாம் தன்னால் வந்துவிடும் என்று நம்பலாம்.இப்போதைக்கு முதல் Phase ஐ வரும் ஜூன் மாதம் முடியப்போவதாகவும் அடுத்த Phase இரண்டு வருடம் ஆகும் என்றார்கள்.மற்ற விவரங்களுக்கு இங்கு போய் பாருங்கள்.

புது வீடுக்காக 95% விழுக்காடு பணத்தை கட்டிய பிறகும் கடைசி 5% பணத்தை மட்டும் விட்டு வைத்துவிட்டு வீட்டை Handing Over பண்ண வருடக்கணக்காகும் நிலை போய், வீட்டை கட்ட கட்ட நம்மிடம் பணம் கறக்கும் காலமும் போய் கட்டியவீடுகள் பணம் கட்டிய உடன் கிடைக்கும் வீடுகள் சந்தையில் வர ஆரம்பித்திருப்பது இப்போது தான். இது கட்டுமானத்துறையின் வீழ்ச்சி என்றாலும் மற்ற நகரங்களை விட சென்னையில் வீடுகள் விற்பனை ஆகாவிட்டாலும் விலையை மட்டும் யாரோ தாங்கிப்பிடிக்கிறார்கள்.


கூடுவாஞ்சேரி பக்கத்தில்  இருக்க ஆசைப்படுபவர்கள் இந்த கட்டுமானத்தொகுதியை நேரில் பார்த்து முடிவு செய்யலாம்.

பின்குறிப்பு: நான் இவர்களுக்கு முகவர் அல்ல, அவரவர் தேவையை கருத்தில் கொண்டு முடிவு செய்துகொள்ளவும்.

வேடந்தாங்கல்

Posted by வடுவூர் குமார் Monday, January 09, 2012 0 comments

என்ன தான் சென்னைக்கு பக்க்கத்தில் இருந்தாலும் இவ்விடத்துக்கு போக நேற்று தான் நேரம் வாய்த்தது.கோயம்பேடில் இருந்து பெங்களூர் நெடுங்சாலையை பிடித்து மதுரவாயல் மேம்பாலம் அருகில் இருக்கும் துணை சாலையை பிடித்தால் சென்னை மேம்பால விரைவுச்சாலை வரும் இதன் மூலம் பெருங்களத்தூரை வெறும் 35 நிமிடத்தில் சென்றடையலாம்.
பெருங்களத்தூரில் இருந்து செங்கல்பட்டுவரை பலவேறு தடைகளை கடந்தால் அதன் பிறகு வெள்ளோட்டம் தான். மாமண்டூர் தாண்டியபிறகு வலது பக்கத்தில் உத்திரமேரூர் சாலை பிரிவு வரும் அதனையும் தாண்டினால் வேடந்தாங்கல் செல்லும் சாலை வலது பக்கத்தில் பிரியும் அச்சாலையில் சென்றால் 12 கி.மீட்டர் தூரத்தில் இருக்கும் பறவைகளின் சரணாலயம். சில இடங்களில் சாலை மேசமாக இருந்தாலும் மிதமான வேகத்தில் சென்றால் அவ்வளவாக பிரச்சனையில்லை. இங்கு போகும் வழியில் திருவையாவூர் என்ற புண்ணியஸ்தலம் மலைமேல் உள்ளது. மகிழுந்தை கோவில் வரை மேலே ஓட்டிச்செல்லலாம்.
வேடந்தாங்கல் ஒரு சிறு ஏரி போல் உள்ள இடத்தில் நிறைய மரங்கள் தண்ணீருக்கு மத்தியில் உள்ளது.பருந்து பார்வை பார்க்க உயரமான கோபுரம் ஒன்றும் வேறு சில பிளாட்ஃர்ம்கள் உள்ளன.என்ன தான் வெறும் கண்ணால் பார்க்கமுடிந்தாலும் பைனாகுலர் மூலம் பார்க்கும் போது இன்னும் நெருக்கமாக பார்க்கமுடிகிறது.

அங்கு எடுத்த சில படங்கள் கீழே. Zoom பண்ணிபார்க்க அதன் மீது சொடுக்குங்கள்.






கோயம்பேடுவில் இருந்து சுமார் 80 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது வேடந்தாங்கல். 

| | edit post

உண்மை நிலவரம்!

Posted by வடுவூர் குமார் Friday, October 28, 2011 2 comments

கடந்த ஒரு வருடகாலமாக கட்டுமானத்துறையில் நடைபெறும் பல நிகழ்வுகளை பார்த்து மனம் வெம்பும் அரை சதம் அடித்திருக்கும் பலரில் நானும் ஒருவன்.இதெல்லம் எல்லா பழசும் புலம்புவது போல் என்று இளைஞர்களுக்கு தோன்றினாலும் நாம் வாழும் வீடும் மற்றும் பல வித கட்டுமானங்களில் இருக்கும் குறைபாடுகள் நினைத்தாலும் மாற்ற முடியாத அளவுக்கு போய்விட்டது.இதற்கான மூல காரணத்தை ஆராய்ந்தால் விடை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சிக்கலாக இருக்கும்.

இன்று இணையத்தில் வந்த ஒரு குழுமத்தில் வந்த கருத்து தான் உண்மை நிலவரத்துக்கு அருகில் உள்ளது.இது எல்லா நிறுவனங்களில் இருக்கிறது என்று சொல்லமுடியாது, பெரும்பான்மை நிறுவனங்கள் இப்படித்தான் தொழிலை நடத்துகிறது.

Dear Vikramjeet:

I totally agree that notes and detailed view do not help.

We have solved this problem to an extent. Whenever we give bar bending schedule for the Construction drawing, we include the complete lengths and shapes of bars (include section lengths) and calculate the steel quantity (length & weight) to the contractor accordingly only in the Schedule. Though it is more work on our part, but we do not leave it to them as to what length they need to put for the bars and where. With this the menace of non-conformance to drawing has reduced drastically, since the drawing communicates clearly to the “skilled labour” what needs to be done rather than they apply their own mind on it.

Regards,
Mehta,
Technologies



Dear Friends

Even if you do the entire BBS with all cut lengths, lap lengths, bend lengths etc. if the same is not implemented in site everything will go in vain. The construction industry is the most neglected part of the engineering industry. Until “ CHALTA HAI”, “ HOTA HAI”, “ WE HAVE DONE THIS EARLIER AND TILL DATE NOTHING HAS HAPPENED” these callus approaches are eradicated from the construction industry, the designer has to weep at the corner of the wall.
May GOD have mercy on him


Regard
Munsi
புகழ்பெற்ற கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்பவர்.

இனிமேல் வீடு/அலுவலகத்துகுள் நுழையும் முன் தைரியமாக இருக்கமுடியும்??

| | edit post

GK மூப்பனார் மேம்பாலம்

Posted by வடுவூர் குமார் Wednesday, October 12, 2011 4 comments

நந்தனம் சிக்னலில் இருந்து தேவர் சிலையை  ஒட்டிய சாலையில் போனால் முதலில் வரும் சந்திப்பின் மேல் போகும் மேம்பாலம் தான் G.K.மூப்பனார் மேம்பாலம்.மறந்து போகாமல் இருக்க அவருடைய படத்தையும் போட்டிருந்ததாக ஞாபகம்.

இன்று சுமார் 11.45 க்கு நண்பரின் வேண்டுகோளுக்காக அங்கு போயிருந்தேன். பக்கத்தில் இருந்த கார் ஷோரூம் அவர் தன்னுடைய வேலையை பார்த்துக்கொண்டிருக்க என்னுடைய பார்வை அந்த மேம்பாலம் பக்கம் போனது.

இந்த படத்தை பாருங்கள்







வெள்ளை அம்புக்குறியிட்ட இடத்தில் ஒரு சிறிய இடைவெளி தெரிகிறதா? இது எதற்கு என்றால் மேம்பாலத்தில் வண்டி போகும் போதோ அல்லது சீதோஷ்ண நிலை மாறுபடும் போது ஏற்படும் நீள வேறுபாடுகள் சாலையை பாதிக்காமல் இருக்க கொடுக்கப்படும்.இதே முறை தான் ரயில் தண்டவாளங்களிலும் இருக்கும்.இதை சரியாக செய்த நெடுஞ்சாலைத்துறை அந்த பீம் மேல் கட்டியிருக்கும் சுவருக்கு அந்த இடைவெளி கொடுக்காமல் விட்டுவிட்டது.இதனால்  கீழே உள்ள பீம் இடையே உள்ள இடைவெளி அர்த்தமற்று போய்விட்டது. அந்த இடைவெளி அர்த்தமற்று போய்விட்டதால் அந்த பீம் உட்கார்ந்து இருக்கும் Bearing ஒரு தெண்டச்செலவு. இதே மாதிரி பல அரசாங்க கட்டுமானமே முன்மாதிரி இல்லாதது கவலையளிக்கிறது.இத்துறையில் இருப்பவர்கள் இவற்றையெல்லாம் தெரிந்தே அனுமதிக்கிறார்களா? அல்லது வேறு எதுவும் காரணமா? பொறியாளர்களுக்கு தெரியாது என்று சொல்லமுடியவில்லை ஏனென்றால் மேம்பாலத்தில் மறுபக்கத்தில் உள்ள இந்த படத்தை பாருங்கள்.இந்த இடைவெளி எப்படி இருக்கவேண்டும் என்பதை அதை சரியாக கடைபிடித்திருப்பதையும் சொல்கிறது.









ஆனந்த தொல்லை

Posted by வடுவூர் குமார் Sunday, October 09, 2011 4 comments


வேலை விஷயமாக சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானம் நடைபெரும் பகுதில் ஒன்றான வடபழனி - SRM பல்கலைகழகம் பக்கத்தில் நடந்து போய்கொண்டிருக்கும் போது இந்த குதிரை வண்டி கண்ணில் பட்டது.இந்த வண்டி இங்கு என்ன பண்ணுகிறது என்ற யோஜனையுடன் அடுத்த வரப்போகும் மூத்திர வாசனைக்காக என்னை தயார்படுத்திக்கொண்டேன்.சடாரென்று திரும்பி பார்க்கும் போது....









புறா

Posted by வடுவூர் குமார் 0 comments

மிக மிக சீக்கிரமாக வளரக்கூடிய பறவை இனம் என்றால் மிகையில்லை. தற்காத்துக்கொள்ளக்கூடிய திறமை குறைவாக இருப்பதால் என்னவோ மிக சுலபமாக வேட்டையாடபடுகிறது.சிங்கையில் இருந்த போது இதன் எச்சம் மகிழுந்துகளிலும் கட்டிடங்களையும் பொலிவிழக்கச்செய்வதால் இதனை கட்டுப்படுத்த நஞ்சு கலந்த உணவு வைத்து சாகடித்தார்கள்.புறாவுக்கு மட்டுமில்லாமல் காக்கையும் சேர்த்தே இதன் முடிவு தான்.

சென்னையில் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு இந்த அளவுக்கு புறா கூட்டங்களை வீட்டுக்கு பக்கத்தில் பார்த்ததில்லை ஆனால் இப்போது இதன் அட்டகாசம் தாங்க முடியவில்லை.ஜன்னல் பக்கம் உட்கார்ந்துகொண்டு வீடு வெளிப்புறங்களை அசிங்கம் செய்துவிடுகிறது அதுவும் மழை பெய்தால் அதன் மூலம் வரும் நாற்றம் இன்னும் அதன் மீது வெறுப்பை வரவழைக்கிறது. சில வருடங்களுக்கு முன்பில் இருந்து எங்கள் வீட்டின் கழிவறை Exhaust Fan வைக்கும் இடம் வெற்றாக இருந்ததால் அதனுள் ஒரு புறா கூடு கட்டி வாழ்ந்து வந்தது.அப்போதிலிருந்து அது ஒரு பெரிய பிரச்சனையாக இல்லாத்தால் நாங்களும் கவலைப்படவில்லை. சமீபத்தில் அவைகளுக்கு ஏற்பட்ட இட பிரச்சனை அவர்களின் கழிவு வீட்டை நோக்கி வரவழைத்து மிக அதிகமாக நாற்றத்தை ஏற்படுத்தியது அதோடில்லாமல் ஜன்னல் குளிர்விப்பான மேல் சம தளமாக இருப்பதனால் அதன் மீதும் உட்கார்ந்து தன் தொழிலை தொடர்ந்தது.இது எல்லாவற்றையும் கட்டுப்படுத்த ஏதாவது வழி இருக்கா என்று நெட்டில் தேடிய போது மேற்கிந்திய நாடுகளில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து சொல்லியிருந்தார்கள்.அதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று வன்பொருள் கடைகளில் கேட்ட போது Wire Mesh ஐ காண்பித்து அதை வையுங்கள் புறா வராது என்றார்கள்.எனக்கு நம்பிக்கை இல்லாத்தால் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்தேன்.

சில நாட்கள் யோஜனையில் ஏதும் சரிப்பட்டு வரவில்லை.போன விடுமுறையில் மனைவி Loft மேல் இருக்கும் சில சாமான்களை எடுத்துகொடுக்ச்சொன்னார்கள் அப்போது ஒரு பெட்டியில் செயறகை அலங்கார பொருட்களை செய்ய உறுதுணையாக இருக்கும் ஒரு பொய் தங்க முலாம் பூசப்பட்ட ஒரு மெல்லிய கம்பியை பார்த்ததும் ஒரு ஐடியா தோனியது.புறாவை சாகாடிக்க கூடாது ஆனால் அது ஜன்னல் விளிம்பை உபயோகிக்க கூடாது. நான் செய்தது இது தான்.ஒரு பாலிஃபார்ம் எடுத்து அதன் ஒரு பகுதியில் இருந்து U வடிவில் அந்த மெல்லிய கம்பியை வெளிப்புறம் நோக்கியவாறு செலுத்த வேண்டும். இந்த பாலிஃபார்ம் ஜன்னலுடன் ஒட்ட வைக்க இருபுறமும் ஒட்டும் திறன் கொண்ட Tape மூலம் ஒட்டவைக்க வேண்டும்- அவ்வளவு தான். சுலபமாக புரிய கீழே உள்ளது படம். கடந்த 3 நாட்களாக புறா அங்கு வருவதில்லை.

மகிழுந்து

Posted by வடுவூர் குமார் Wednesday, August 10, 2011 2 comments


என்ன தான் போகும் வழிகளை பளிச் என்று காட்டியிருந்தாலும் “எதிர்” திசையில் தான் போவேன் என்று அடம்பிடித்த மஞ்சள் Top வாடகை மகிழுந்துகள் ஒதுக்கப்பட்டு காலத்தின் கட்டாயத்துக்கு ஏற்று ஓட்டத்தை நிறுத்த தயராக நிற்கின்றன.



சென்னை விமான நிலையத்தின் ஒரு ஓரமாக நிறுத்தப்பட்டுள்ள மகிழுந்துகள்.
அலை பேசியில் எடுத்ததால் அவ்வளவு சரியாக வரவில்லை.




கள்ளிப்பெட்டி