Friday, February 18, 2011

Exercise- உடல் நலம்.

என்னுடைய முந்தைய பதிவுகளில் அவ்வப்போது உடல் நலம் பேணுவதின் அவசியத்தை பற்றி எழுதியிருக்கேன் ஆனால் இதுவரை இணையத்தில் விடாத படங்களை இப்போது விடுகிறேன்.

தூசியை பார்த்தாலே தும்மல் விடும் நான் அந்த ஒவ்வாமை மூலமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வார சிகிச்சைக்கு பிறகு வெளியில் வந்தேன், இது நடந்ததெல்லாம் 1982 வாக்கில்.மருத்துவ மனையில் இருக்கும் போது அங்கிருந்த மருத்துவர் சொன்ன அறிவுரை தான் இன்றுவரை என்னுடைய உடல்நலத்தை பாதுகாக்கவும் பேணுவதற்கும் உதவி வருகிறது.
அன்று இருந்த இடம் பொட்டை காடு “ஜிம்” என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாத வயது இப்படி இருக்கும் கால கட்டத்தில் எனக்கு கிடைத்த ஒரே வழி Parallel Bar. இரு பைப்புகள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் பொருத்தப்படும் அதன் மூலம் செய்யும் Exercise நமது தசைகளை முறுக்கேற்றி நெஞ்சேற்றி நடக்கவைக்கும், மீசை முருக்கும் அளவுக்கு இருந்தால் அதன் மூலம் கொஞ்ச பந்தா காட்டவும் உதவும்.

விடாமுயற்சியும் ஓரளவு சத்துள்ள சாப்பாடு சாப்பிட்டு தினமும் செய்தால் உடலை நோய் எதிர்ப்பு சக்திக்கு ஏதுவாக இருக்கும் படி செய்யலாம். சுமார் 1 1/2 ஆண்டு காலம் விடாமல் செய்தது எந்த ஊருக்கு போனாலும் அது இருக்கும் இடம் தேடி செய்யவைத்தது.

சிங்கையில் மூலைக்கு ஒன்றாக இருக்கும் பூங்காவில் இளைஞர்களுக்கு மற்றும் முதியவர்களுக்கு ஏற்ற Exercise சாதனத்தை இலவசமாக வைத்திருப்பார்கள்.தினமும் அலுவலகம் விட்டு வந்தபிறகு சுமார் 2 கி.மீ நடந்த பிறகு கீழே உள்ள மாதிரி செய்வேன்.






துபாய் போன பிறகு ஜிம் உள்ளே இருக்கும் சாதனங்களை ஓரிரு முறை உபயோகித்துள்ளேன்.






வெளிநாட்டு வேலைகளை மூட்டைகட்டிய பிறகு சென்னை வந்தவுடன் இந்த Parallel Bar க்காக தேடித்தேடி அலைந்து ஓய்ந்து போன வேளையில் ஒரு நாள் திநகர் வெங்கட்நாராயண சாலையில் உள்ள நடேசன் பூங்காவில் இதைக் கண்டேன் ஆசையில் சில நாட்கள் செய்த பிறகு வயதான மூட்டுகள் வாய்விட்டு அலராமல் வலி மூலம் தன் இயலாமை காட்டியது.எச்சரிக்கை மணி அடித்த பிறகும் வீம்புக்காக செய்யாமல் வேறு விதமான Exercise களை செய்துவருகிறேன்.

Friday, February 11, 2011

பேருந்து நாள்!!

வயசுப்பையனாக நான் இருந்த போதே இந்த கூத்தை கேட்டிருந்தாலும் நேரிடையாக பார்த்ததில்லை அதை சில நாட்களுக்கு முன்பு நாளைய தலைவர்களை உருவாக்கும் ஒரு கல்லூரி மாணவர்கள் அவர்கள் கல்லூரி முன் செய்த அட்டகாசத்தை பார்க்கவும்.

ஒரு பேருந்தை கடத்தி அதனை அவர்கள் கல்லூரிக்குள் எடுத்துச்செல்வது போல் இருந்தது.






அன்று அண்ணா சாலையில் போக்குவரத்தை ஸ்தம்பிக்கவைத்ததோடு மட்டுமில்லாமல் வருங்கால சந்ததிக்கு ஒரு மோசமான நிகழ்வை நிகழ்த்திக்காட்டி விட்டிருந்தார்கள்.

என்ன பொது அறிவு!!! படம் கீழே.

Wednesday, February 09, 2011

எப்போது ஓடும்?

கோயம்பேடுவில் இருந்து பில்லர் மற்றும் சைதாப்பேட்டையில் இருந்து கிண்டி போகும் வாகனங்களுக்கு இந்த தற்காலிக தொல்லையில் இருந்து தப்பிக்க இப்போது வழியில்லை,அதாங்க இந்த மெட்ரோ வேலையினால் இருந்த 3 வழிப்பாதை இரண்டாகி எந்த வண்டி எதன் மேல் உரசும்,மோதும் என்ற பயத்துடன் தினமும் பயணிக்கவேண்டியுள்ளது.கொஞ்ச நாட்களுக்கு முன்பு விடியற்காலை இவ்விடங்களுக்கு போய் அவர் மூலம் போக்குவரத்து பாதிக்காமல் பார்த்துக்கொண்டுள்ளார் நம் துணை முதல்வர், மேலும் 2013 யில் மெட்ரோ பயணிக்க ஆரம்பித்துவிடும் என்று சொல்லியிருக்கார் அதற்கேற்ப்ப வேலைகளும் மிக ஜரூராக நடந்துகொண்டிருக்கு.கோயம்பேடு மற்றும் வடபழனி பகுதிகளில் வேலை வேகமாக நடந்துவருகிறது.




அந்த மேம்பாலத்தின் மேற்பகுதி இப்போதைக்கு இப்படி இருக்கும்.நடுவில் இருக்கும் கம்பி இருக்கும் பகுதியில் தான் ரயில் ஓடும்,அத்தோடு இருபக்கமும் கைப்பிடி சுவர் மாதிரி கான்கிரீட் சுவர்கள் வரும் அதனுள் தேவையான மின்சார கேபிள்கள் போக வழி உண்டாக்கப்படும்.




ஒரு பில்லரில் இருந்து மறுபில்லர்கள் வரை உள்ள கான்கிரீட் துண்டுகளால் ஆனது அதை தகுந்த கெமிக்கல் மூலம் ஒட்டவைத்து பிறகு அவ்வளவு துண்டுகளையும் ஒருங்கினைத்து “Post Tensioning" முறைப்படி இழுத்துவைத்துவிடுவார்கள்.

மேலும் மேலும் அவ்வப்போது நடக்கும் சிறப்பு நிகழ்வுகளை படம் கிடைத்தால் போடுகிறேன்.

Thursday, February 03, 2011

Pre-Cast Girder

இத்தொழிற்நுட்பம் பற்றி பல இடங்களில் எழுதியிருந்தாலும் சமீபத்தில் சென்ற ஒரு வேலை இடத்தில் எடுத்த படம் கிடைத்தது.அதன் விபரம் மற்றும் அனுகூலங்கள் கீழே.



இதை தரையில் மிகப்பெரிய முன்னேற்பாடுகள் இல்லாமல் குறைவான செலவில் கால தாமதமின்றி தேவைக்காலத்துக்கு முன்பே செய்துவிடலாம்.இத்துடன் அதன் தொடர்புடைய மற்றொரு தொழிற்நுட்பமான போஸ்ட் டென்ஷன் (Post Tension) ஐ புகுத்தி நம் தேவைக்கு ஏற்ப பீம்களை கான்கிரீட் போடலாம்.மேலே உள்ள படத்தில் கீழே உள்ள இரண்டு கான்கிரீட் குமிழ்கள் ஏற்கனவே அவ்விடத்தில் உள்ள கேபிள்களை இழுப்பு விசைக்கொண்டு நிலை நிறுத்தி அதன் பிரத்யோக அமைப்பின் மூலம் Lock செய்தவுடன் அதனை இம்மாதிரி கான்கிரீட் கொண்டு பூசிவிடுவார்கள்.இப்படி செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை என்றாலும் ஏதாவது ஒரு காரணத்தில் அந்த கம்பிகள் லூஸ் ஆனால் அதை பிடித்திருக்கும் நட் மாதிரியான அமைப்பு புல்லட் மாதிரி வெளியேற வாய்புள்ளது.அந்த வாய்ப்பை தவிர்க்கவே இந்த மாதிரி கான்கிரீட் போட்டு மூடிவிடுவார்கள்.



மேலே உள்ள படத்தில் கீழிருந்து 3 வது ஓட்டையில் ஒரு நெகிழி வைத்திருக்கார்களே அது இந்த பீம் கான்கிரீட் போடும் போது வளைந்து போகாமல் தடுக்க அதன் உள் அளவுக்கு தகுந்த நெகிழியை வைத்துவிடுவார்கள்.இந்த கேபிள் போகும் பாதை மெலிதான் தகடு பைப் ஒன்று இந்த முனையில் இருந்த அடுத்த முனை வரை போகக்கூடியதாக இருக்கும்.
கீழே உள்ள இரு பைப்புகளில் உள்ள ஒயர்களை Strands என்று சொல்வார்கள் இதன் மூலம் தேவையான இழுப்புவிசையை ஏற்படுத்தி கான்கிரீட் பீமை தகுந்த Load தாங்கக்கூடிய நிலைக்கு எடுத்துவருவார்கள்.மேலே உள்ள இரண்டு ஓட்டைகளையும் இதே முறையில் நிலை நிறுத்துவார்கள் அது இப்பீமை கிரேன் மூலம் தேவையான இடத்தில் வைத்த பிறகு செய்வார்கள்.இம்முறை இடத்துக்கு இடம் மாறுபடும் என்பதால் இது தான் முழுவேலை என்று சொல்லமுடியாது.



மேலே உள்ள படத்தில் ஒரு சிறிய Shutter ஐ எடுக்க எவ்வளவு பேர் நிற்கிறார்கள் பாருங்கள்.என்ன தான் அளவில் சிறியதாக இருந்தாலும் கான்கிரீட்டில் இருந்து வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் கம்பிகளால் இவ்வேலை நிறைய நேரம் எடுக்கும்.இப்படிப்பட்ட பல அனுகூலங்கள் இருந்தாலும் இப்படிப்பட்ட கஷ்டங்களும் இருக்கும்.