Friday, February 18, 2011

Exercise- உடல் நலம்.

என்னுடைய முந்தைய பதிவுகளில் அவ்வப்போது உடல் நலம் பேணுவதின் அவசியத்தை பற்றி எழுதியிருக்கேன் ஆனால் இதுவரை இணையத்தில் விடாத படங்களை இப்போது விடுகிறேன்.

தூசியை பார்த்தாலே தும்மல் விடும் நான் அந்த ஒவ்வாமை மூலமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வார சிகிச்சைக்கு பிறகு வெளியில் வந்தேன், இது நடந்ததெல்லாம் 1982 வாக்கில்.மருத்துவ மனையில் இருக்கும் போது அங்கிருந்த மருத்துவர் சொன்ன அறிவுரை தான் இன்றுவரை என்னுடைய உடல்நலத்தை பாதுகாக்கவும் பேணுவதற்கும் உதவி வருகிறது.
அன்று இருந்த இடம் பொட்டை காடு “ஜிம்” என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாத வயது இப்படி இருக்கும் கால கட்டத்தில் எனக்கு கிடைத்த ஒரே வழி Parallel Bar. இரு பைப்புகள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் பொருத்தப்படும் அதன் மூலம் செய்யும் Exercise நமது தசைகளை முறுக்கேற்றி நெஞ்சேற்றி நடக்கவைக்கும், மீசை முருக்கும் அளவுக்கு இருந்தால் அதன் மூலம் கொஞ்ச பந்தா காட்டவும் உதவும்.

விடாமுயற்சியும் ஓரளவு சத்துள்ள சாப்பாடு சாப்பிட்டு தினமும் செய்தால் உடலை நோய் எதிர்ப்பு சக்திக்கு ஏதுவாக இருக்கும் படி செய்யலாம். சுமார் 1 1/2 ஆண்டு காலம் விடாமல் செய்தது எந்த ஊருக்கு போனாலும் அது இருக்கும் இடம் தேடி செய்யவைத்தது.

சிங்கையில் மூலைக்கு ஒன்றாக இருக்கும் பூங்காவில் இளைஞர்களுக்கு மற்றும் முதியவர்களுக்கு ஏற்ற Exercise சாதனத்தை இலவசமாக வைத்திருப்பார்கள்.தினமும் அலுவலகம் விட்டு வந்தபிறகு சுமார் 2 கி.மீ நடந்த பிறகு கீழே உள்ள மாதிரி செய்வேன்.






துபாய் போன பிறகு ஜிம் உள்ளே இருக்கும் சாதனங்களை ஓரிரு முறை உபயோகித்துள்ளேன்.






வெளிநாட்டு வேலைகளை மூட்டைகட்டிய பிறகு சென்னை வந்தவுடன் இந்த Parallel Bar க்காக தேடித்தேடி அலைந்து ஓய்ந்து போன வேளையில் ஒரு நாள் திநகர் வெங்கட்நாராயண சாலையில் உள்ள நடேசன் பூங்காவில் இதைக் கண்டேன் ஆசையில் சில நாட்கள் செய்த பிறகு வயதான மூட்டுகள் வாய்விட்டு அலராமல் வலி மூலம் தன் இயலாமை காட்டியது.எச்சரிக்கை மணி அடித்த பிறகும் வீம்புக்காக செய்யாமல் வேறு விதமான Exercise களை செய்துவருகிறேன்.

No comments: