Friday, June 30, 2006

பின்னூட்டம்.(Posting Comment)

பின்னூட்டம்.(Posting Comment)
நான் கணிணி பொறியாளன் அல்ல.அதனால் நான் கேட்கும் கேள்வி புரிந்தால் எனக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
என்னுடைய Templateயை எப்படி மாற்றினால் இந்த மாதிரி செய்யமுடியும்?
எப்போதும் போல் நாம் "Post Comment" சொடுக்கி அதில் தமிழில் பின்னூட்டம் இடுகிறோம்.இது Win XP, Linux உபயோகிப்பவர்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.ஆனால் win98,95 & Me வைத்திருப்பவர்களுக்கு eகலப்பை முதலியவற்றை உபயோகப்படுத்தி தான் பின்னூட்டம் இடமுடியும்.eகலப்பையில் கூட தமிங்கலத்தில்(phonetic முறையில்) அடிக்கமுடியவில்லை.என்னைப்போன்ற தமிழ் தட்டச்சு தெரியாதவர்கள் இந்த தமிங்கல(phonetic) முறை தான் இப்போது கைகொடுக்கிறது. அப்படியில்லாமல் நமது வலைபூவிலேயே "ஒரு கட்டத்தில் தமிங்கலத்தில் அடித்து மற்றொன்றில் தமிழில் வருமாறு செய்து" (இது வரை சில வலைபூக்களில் பார்த்துள்ளேன்,நானும் உபயோகித்துள்ளேன்)அதற்கு கீழேயே "Post Comment" என்ற Button ம் வைத்துவிட்டால் மிக வசதியாக இருக்கும்.Cut & Paste வேலையும் குறையும்.
முடியுமா??
கணிணி வல்லுனர்களே! வாருங்கள்

குட் மார்னிங்.

குட் மார்னிங்.
நம்மில் பலர் இதனுடன் தான் காலை பொழுதை தொடங்குகிறோம்.காலையில் யார் யாரையெல்லாம் முதலில் பார்கிறோமோ-- மனைவி,குழந்தைகள்,பக்கத்துவீட்டுக்காரர்கள் & நண்பர்கள் என்று பலரிடம்.
நம்மூரில் இதற்கு பஞ்சமே கிடையாது.நீங்கள் எவரிடம் குட் மார்னிங் சொன்னால் அவர்களும் திரும்ப உங்களை அப்படியே வாழ்த்துவார்கள்.சிலர் தலையை சிறிதாக அசைப்பார்கள்.அதது அவர்கள் இருக்கும் நாற்காலியை பொருத்தது.
இதுக்கு ஒரு பதிவா???!!! கொடுமையப்பா என்று நினைக்கிறீர்களா? மேலே படிங்க.அப்புறம் ஒரு முடிவுக்கு வாங்க...
1980களில் நான் வேலைக்கு போக ஆரம்பித்த சமயத்தில் நான் காலையில் அல்லது அந்த நாளின் முதலில் பார்க்கும் போது "குட் மார்னிங்" சொல்லுவேன்.சில இடங்களில் இதை நம்மிடம் இருந்து முதலில் எதிர்பார்பார்கள்.சிலர் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார்கள்.Govt அலுவலகம் என்றால் இது அவசியம் எதிர்பார்க்கப்படுவது ஒன்று.
சரிவர Relation இல்லாத மனிதர்களா?போற போக்குல சொல்லிட்டா போயிற்று என்று சொல்லிவிடுவேன்.இது பல சமயங்களில் நிறைய புது எதிரிகளை உருவாக்காமல் தடுத்திருக்கிறது.
நேற்று ஏற்பட்ட கருத்துவேறுபாடா?
ஒரு வாரத்திற்கு முன்பு பேசிய கேலியா?
தவறாக புரிந்துகொள்ளப்பட்டீர்களா?
இதெல்லாவற்றுக்கும் இதமான மருந்து "குட் மார்னிங்"இந்த மருந்து கொஞ்சம் மெதுவாகத்தான் வேலை செய்யும்.பொருமை அவசியம்.
நான் இந்தியாவில் இருந்தவரை "குட்மார்னிங்"ன் சில முகங்களை மட்டும் தான் பார்க்கமுடிந்தது.மேலும் சில முகங்களை வெளி நாடுகளில் பார்க்க முடிந்ததை பார்க்கமுடிந்தது...அது தான் இங்கே.

1992யில் மலேசியா போனபோது இதில் அவ்வளவு பிரச்சனையில்லை.நீங்கள் வாழ்த்தினால் அவர்களும் வாழ்த்துவார்கள்.நான் வேலை செய்த இடம் ஒரு சின்ன கிராமம் என்றதாலும் அவர்கள் "குட் மார்னிங்"கை விட "சலாமத் பஹி"யையே (பஹி என்றால் அந்த நாள்) மிகவும் விரும்பினார்கள்.நீங்கள் சொன்னால் கட்டாயமாக திரும்ப சொல்வார்கள்.

1995யில் சிங்கப்பூர்
நான் வேலைசெய்த இடங்களில் பார்த்த அனுபவங்கள்.
குட்மார்னிங்
...................(என்னை ஒரு முறை(ர) பார்த்துவிட்டு போய்விட்டார்)
குட்மார்னிங்
ஒரு அசட்டு சிரிப்பு தான் பதில்.(என்ன மாங்காய் இவ்வளவு புளிக்கிறது??)

குட்மார்னிங்
ஹ¤ம் (அட இது பதில்தாங்க)

குட்மார்னிங்
குட்மார்னிங் (சிலர்)

குட்மார்னிங்
"What is so good of this morning"-இப்படியும் ஒருவர் கேட்டார்.இவர் நன்கு படித்தவர்.

குட்மார்னிங்
"குட்மார்னிங்"இப்படி இவர் எனக்கு திரும்ப சொன்னதாக "Telepathy" மூலமாக தெரிந்துகொண்டேன்.

குட்மார்னிங்
.................... காதில் வாங்காத மாதிரி போய்விட்டார்.

கட்டுமான துறையில் இந்த மாதிரியான Custom எதுவும் கிடையாது.கொஞ்சம் முரட்டுத்தனம் தான் பெரிதாக தெரியும்.ஆனால் இப்போது கொஞ்சம் மாற்றம் அவ்வப்போது தெரிகிறது.

ஜப்பானியர்கள் மற்றும் கொரியர்கள் இதிலிருந்து விதிவிலக்கு.நிச்சயம் மரியாதை திரும்ப கிடைக்கும்.

"குட்மார்னிங்"-எல்லோருக்கும்.

Thursday, June 29, 2006

ஊருவிட்டு ஊருவந்து (1)

முந்தய பதிப்புகள்
கட்டுமானத்துறை (அறிமுகம்)
கட்டுமானத்துறை (அறிமுகம்-1)
தாச்சப்பள்ளி
தாச்சப்பள்ளி (அலுவலர்கள்)
தாச்சப்பள்ளி (Account Section)
ஊருவிட்டு ஊருவந்து

கட்டுமானத்துறையில் அதுவும் ஊர்விட்டு வேறு இடத்தில் வேலை பார்க்கும்போது இந்தமாதிரி பிரச்சனைகள் அடிக்கடி வரும்.அதுவும் அவர்கள் பேசுவது அல்லது நீங்கள் சொல்வது அவர்களுக்கு புரியாவிட்டாலும் பிரச்சனைதான்.இதனால் PR வேலையை ஒருவர் கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும்.தாங்கள் வேலைப்பார்க்கும் இடத்துக்கு பக்கத்தில் உள்ள ஊரில் உள்ள பெரிய மனிதர்களுடன் நல்லுறவு வைத்துக்கொள்வார்கள்.முக்கியமாக அஞ்சல் அலுவலக அதிகாரி,போலீஸ் அதிகாரி மற்றும் ஊர் நாட்டாமை இவர்களுடன் தேவையான அளவு நட்புறவு வைத்திருப்பது நல்லது.இதில் கொஞ்சம் காசு போகும் ஆனால் நம்மைபோன்ற வெளி ஆட்களுக்கு ஒரு பிடிப்பு இருக்கும்.நம் மீது அனவசியமாக கை வைப்பதற்கு உள்ளூர்காரர்கள் யோசிப்பார்கள்.
இவ்வளவையும் ஒரளவு என் கம்பெனி செய்துவைத்திருந்ததால் அன்று ஒருவித அசம்பாவிதமும் நடக்காமல் தப்பித்தோம்.குறைந்த நாட்களிளே வேலை திரும்ப நடைப்பெறத் தொடங்கியது.
கட்டுமானத்துறை இடத்தில் எப்போதுமே 3 பிரச்சனைகள் தொடர்ந்துகொண்டே இருக்கும்.
1.தொழிலாளர்கள் சம்பளம்.
2.பெண்கள் பாலியல்.
3.வேலை பாதுகாப்பு.(இதைப்பற்றி தனியாக வேறொரு சமயத்தில் பார்கலாம்)

முன்னதைவிட பின்னது கொஞ்சம் அதிகம் தான்.அதற்கு முதல் காரணம் 90% ஆண்மக்கள் "Forced Bachelor"ஆக்கப்படுவது.அப்போ பெண்களுக்கு கிடையாதா என்று கேட்கிறீர்களா?அதற்கான ஆடுகளம் வேறு.அதில் நான் இப்போது விளையாடப்போவதில்லை.
இதை ஒரு ஆணின் கண்ணோட்டத்தில் பார்கிறேன்.அவ்வளவுதான்.
இவர்கள்(Supervisor,Engineers) பலர் ஆசைப்படுவது அங்கு வேலைசெய்யவரும் சித்தாட்களிடம்.ஏனென்றால்,இவர்களின் Power!!
ஒன்று, இவர்கள் மூலம் பணம் பட்டுவாடா பண்ணுவது,
இரண்டாவது, அவர்கள் வேலைக்கு இவர்கள் உத்திரவாதம் கொடுப்பது.
மூன்றாவது இவர்கள் நினைத்தால் அவர்களுக்கு சம்பளம் கூட போட்டுக்கொடுப்பது.
சிலசமயம் அந்தந்த ஒப்பந்தக்காரர்களே இந்த மாதிரி வேலைகளுக்கு உடந்தையாகவும் இருப்பது உண்டு.
இதற்கு மேலும் இதைப்பற்றி எழுத விருப்பம் இல்லை.இப்படியும் இதனுள் இருக்கிறது என்பதை எழுதவே குறிப்பிட்டேன்.மேலே போவோம்.
இப்படி போய்கொண்டிருந்த வேளையில்...எவ்வளவு நாள் தான் தாச்சப்பள்ளியையே பார்த்துக்கொண்டு இருப்பது என்று எண்ணி எங்கள் Senior site Manager உடன் சேர்ந்து கொண்டு பக்கத்தில் வேறொரு இடத்தில் வேலை செய்யும் சக Staffsஐ பார்த்து வர கிளம்பினோம்.இதுவும் L&T-ECC எடுத்திருக்கும் மற்றொரு வேலை தான்.
எங்கள் Site கிருஷ்ணா நதிக்கு இந்த பக்கம் உள்ளது என்றால் அவர்கள் Site கரைக்கு அந்த பக்கம்.நாட்டுப்படகில் தான் கடக்க வேண்டும்.
அந்த இடத்தின் பெயர் "வாடப்பள்ளி"
மறுபடியும், இன்னொறு ஞாயிறு.
ஆ.....!!!
அடுத்த பதிவில் தொடரும்.

Tuesday, June 27, 2006

ஊருவிட்டு ஊருவந்து

முந்தய பதிப்புகள்
கட்டுமானத்துறை (அறிமுகம்)
கட்டுமானத்துறை (அறிமுகம்-1)
தாச்சப்பள்ளி
தாச்சப்பள்ளி (அலுவலர்கள்)
தாச்சப்பள்ளி (Account Section)
உயிருக்கு பயந்து ஓடினோம் என்றேன் அல்லவா? அதற்கு முன்பு..
சில விபரங்கள்
இந்த காலக்கட்டத்தில் Siteயில் கிட்டத்தட்ட 350~400 தமிழர்கள்,300 மலையாளிகள்,சில வட நாட்டவர்கள் மற்றும் உள்ளூர் ஆட்களும் இருந்தார்கள்.
இவர்கள் மொத்த பொழுது போக்கு சனி இரவு ஆரம்பிக்கும்.பக்கத்து கிராமமான தாச்சப்பள்ளிக்கு போய் சாப்பிடுவது,தண்ணி அடிப்பது,பரதைகளிடம் போவது,சினிமா பார்பது என்று ஒவ்வொரு Group அவர் அவர்களுக்கு பிடிப்பதை செய்வார்கள்.இவ்வாறு போக விருப்பம் இல்லாதவர்கள் தங்கள் Quartersயிலே அதை செய்யத்தொடங்கினார்கள்.இங்கு தான் பிரச்சனை ஆரம்பித்தது.
ஞாயிறு காலை சுமார் 9 மணியிருக்கும்
நம் குடிமகன் ஒருவர் முழுவதும் ஊற்றிகொண்டு என்ன செய்கிறோம் என்று தெரியாமல் பக்கத்து கிராமத்துக்கு போய் ஏதோ ஒரு வீட்டு கதவை தட்ட ஆரம்பித்தார்.அந்த பொம்பளை கத்த ஆரம்பிக்க இவருக்கு தெளிய ஆரம்பிக்க அவர்கள் துரத்த இவர் site பக்கம் வர,அதற்குள் அந்த கிராமத்தில் வதந்தி பரவி மொத்த கிராமமும் கையில் கிடைத்தை எடுத்துக்கொண்டு எங்கள் Quartersஐ சுற்றி வளைத்துக்கொண்டு கண்ணில் பட்ட எல்லோருக்கும் தர்ம அடிகொடுத்தனர்.Planning Managerகூட இதிலிருந்து தப்பவில்லை.பலர் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்து தப்பினர்.
சிலர் மண்டையும் பிளந்தது.
காலையிலே அலுவலகத்தில் இருந்ததால் எனக்கு அடி விழவில்லை.
நிலமையின் தீவிரம் புரிய சில நேரம் பிடித்தது.அதே சமயத்தில் Workers quarter பக்கம் அவர்கள் தங்கள் பார்வையை திருப்பினர்.இங்கு பல குடும்பங்கள் தங்கள் சிறு குழந்தைகளுடன் தங்கியிருந்தனர்.அவர்களை காக்கும் பொருட்டு சில ஆண்கள் அவர்கள் முன்னேற்றத்தை தடுக்க மற்றவர்கள் அவர்களை பெரிய Lorryகளில் ஏற்றி பக்கத்து ஊருக்கு அனுப்பிவிட்டனர்.பலர் கால் நடையாகவே மலைகளை தாண்டி பக்கத்து ஊருக்கு போய்விட்டனர்.சுமார் 1 மணிநேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது.போலீஸ் அழைக்கப்பட்டு பிறகு சமாதானம் செய்யப்பட்டுவிட்டது.நல்ல வேலை உயிரிழப்பு ஏதும் இல்லை.
இந்த பதட்ட நிலை சில நாட்கள் நீடித்தது.காவலுக்கு சில போலீஸ்காரர்கள் இருந்ததால் வேலையில் சகஜநிலை வந்தது.
இது இப்படியென்றால்...
வெளியிடங்களில் வேலை செய்யும்போது கம்பெனிகள் கடைபிடித்த சில வழிமுறைகளை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Sunday, June 25, 2006

இந்தியன் ஏர்லயன்ஸ்.

கொஞ்சநாட்களாக இங்கு ஒரு விளம்பரம் இவர்கள் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்,பாருங்கள் எப்படி என்று..

Digital Clockகாலை 6.01என்று காட்டுகிறது உடனே ஒரு Alarmஅடிக்கிறது.

தூங்கிகொண்டு இருக்கிற ஒருவரை கையில் ஒரு கோப்பையுடன் ஒரு பெண்மனி எழுப்புகிறார்.

அப்போது அங்கு இருக்கிற ஒரு கடிகாரம் காட்டப்படுகிறது

ஆனால்,அதில் மணி 5.58.

ஒரு பெரிய இந்திய நிருவனம்,இந்தியனின் பெருமையை பறைசாற்றக்கூடிய நிருவனம் இப்படி ஒரு விளம்பரத்தை வெளியிடுகிறது.கொஞ்சம் கூட அக்கறையில்லாத விளம்பரம்.

ஏன் இதை அந்த கம்பெனியில் யாரும் பார்க்கவில்லையா அல்லது இந்த விளம்பரத்தை எடுத்த நிருவனத்திடமே எல்லாவற்றையும் விட்டுவிட்டு வேடிக்கை பார்கிறதா என்று தெரியவில்லை.

இது ஒரு உதாரணம் தான்.

மேலும் படிங்க..

இந்த வருடம் முதலில் சென்னைக்கு போயிருந்தேன்.போகும்போது எந்த பிரச்சனையும் இல்லை.இந்த பயணம் வெறும் 9 மணி நேரத்துக்கு முன்பு முடிவு செய்து டிக்கெட் முன்பதிவு செய்தேன்.அப்போதே திரும்பவரும் பயணத்தையும் முடிவு செய்து வங்கியிருந்தேன்.நான் பயணச்சீட்டை வாங்கும் போதே அந்த முகவர் "நீங்கள் சென்னை போனவுடன் உங்கள் Return Journeyயை Confirmசெய்துவிடுங்கள் " என்று சொன்னார்.

நான் தான் இங்கேயே Confirmசெய்துவிட்டேனே திரும்ப எதற்கு செய்யவேண்டும் என்று கேட்டேன்.

செய்வது நல்லது என்று சொன்னார்.(அனுபவசாலி போல)

சென்னையில் இருந்து திரும்புவதற்கு முன்பு 3 நாட்களுக்கு முன்பு அவர்களுடைய அலுவலகத்துக்கு போன் செய்து என்னுடைய விபரங்களை கொடுத்து அதை Confirm செய்து அதற்குரிய கடவு எண்ணையும் பெற்றுக்கொண்டேன்.

பயண நாள் வந்தது. Boarding Passவாங்கும் இடத்தில் எனது டிக்கெட்டை கொடுத்தபோது....

உங்கள் டிக்கெட்டை நீங்கள் Reconfirmசெய்யவில்லை அதனால் நீங்கள் சிறிது நேரம் இருங்கள் என்று அடுத்த பயணியை பார்க்க ஆரம்பித்துவிட்டார்.


நான் போன் செய்து பெற்றுக்கொண்ட அந்த கடவு எண்ணையும் ஏற்றுக்கொள்ளாமல் நான் ஏதோ பொய் சொல்லுவது போல் சொன்னார். ஒரு தடவை Confirmசெய்த டிக்கட்டை எதற்கு திரும்ப Confirmசெய்யவேண்டும் என்று கேட்டகேள்விக்கு பதில் இல்லை.

மனிதனாக ஏறிய எல்லோரையும் அன்றே குரங்காக மாற்றிவிட்டார்கள்.(விமானத்துள்)

ஆமாங்க,அவங்க கொடுத்து கடலை பாக்கெட்டை கையால் பிரிக்கமுடியாமல் எல்லோரும் எங்கள் பல்லைத்தான் உபயோகித்தோம்.ஆதாவது எப்போதும் அதை பிரிக்க ஒரு சின்ன கட் இருக்கும்.அன்று அதில் இல்லை.இதை அவர்களுக்கு ஈமெயில் மூலம் தெரியப்படுத்திய போதும் "பதில் கூட இல்லை".

மற்ற ஏர்லயன் கம்பெனிகளை பார்க்கும் போது இவர்கள் வேலை செய்யும் விதம் எப்போதுமே ஒரு 5அல்லது 10வருடங்கள் பின்தங்கியிருக்கும்.சிங்கையில் இவர்கள் அலுவலககத்துக்கு போன் செய்து, கிடைத்து அவர்களுடன் பேசி உங்கள் வேலையை முடித்துவிட்டீர்களானால் அந்த நாள் உங்களுக்கு ஒரு பொன் நாள்.

மென்பொருளில் சக்கைபோடும் நம்மவர் அதை உபயோகப்படுத்தும் போது மிகவும் பின் தங்கிவிடுகின்றனர்.இவர்கள் அலுவலகங்களை ஒவ்வொன்றுடன் இணைக்காமல் நம்ம உயிரை வாங்குகிறார்கள்.

இந்த மாதிரியே இன்னும் 2 வருடங்கள் இவர்கள் வேலை செய்தால் இவர்களை மக்கள் உதாசீனப்படுத்துவது நிச்சயம் .தேசீய உணர்வெல்லாம் பிறகு தான் வரும்.

கொஞ்சம் இவர்களும் காலரை தூக்கிவிட்டுக்கொள்ளலாம் ஏனென்றால் Marketயில் இவர்கள் மட்டும் தனித்தில்லை.

அது யார் மற்றொருவர்?நான் அனுபவபட்ட விதத்தில்.

இந்தியன் வங்கி தான்.

அதை பிரிதொரு சமயம் பார்ப்போம்.

Saturday, June 24, 2006

தாச்சப்பள்ளி (Account Section)

இதற்கு முந்தயைய பதிப்பு
முந்தய பதிப்புகள்
கட்டுமானத்துறை (அறிமுகம்)
கட்டுமானத்துறை (அறிமுகம்-1)
தாச்சப்பள்ளி
தாச்சப்பள்ளி (அலுவலர்கள்)

இதற்கு தலைவர்
Accountdant: T.S.Venkatesan மிகவும் இள வயதிலில் இந்த இடத்திற்கு வந்தவர்.சகஜமாக பழகக்கூடியவர்.கம்பெனி சட்டதிட்டத்திற்கு உட்பட்ட எல்லா சலுகைகளையும் பெற அனுமதித்தவர்.இவர் எதற்கு அனுமதிக்கவேண்டும் என்கிறீர்களா?உங்களுக்கு என்ன என்ன சலுகை இருக்கு எனது இவருக்கு அத்துப்படி.அதை அவரே சொல்லிக்கொடுப்பார்.இவருக்கு கீழே Store ம் Time Officeம் வரும்.
திரும்ப Accounts Departmentயில் பார்த்தால் ஒரு காசாளர்,ஒப்பந்தகாரர்களின் Billஐப் போடுபவர் என்று மேலும் 2 இருப்பார்கள்.

Storeக்கு போனால்--ஒரு Store Keeper மற்றும் 2 assistantsம் இருப்பார்கள்.

Time officeயில் ஒரு Officerம் ஒரு உதவியாளரும் இருப்பார்கள்.
பாருங்கள் ஒரு வேலைதான் ஆனால் ஒரு கூட்டுக்குடும்பம் போல் வேலை பார்க்கவேண்டும்.
கூட்டுக்குடும்பம் என்ற உடனே சண்டை சச்சரவு ஞாபகம் வருதா?இங்கும் அந்த மாதிரி பிரச்சனைகள் வெகு பிரபல்யம்.தினசரி உராய்வுகளுக்கு குறைவே இருக்காது.பெரும்பொழுது ஒப்பந்தக்காரர்களின் கணக்கு பார்பதற்கே சரியாக இருக்கும்.நிறைவு என்று ஒன்று இல்லாதவர்கள் யார் என்றால் கண்ணை மூடிக்கொண்டு இவர்கள் பக்கம் கையை காட்டலாம். இது ஒரு மாதிரி உள் பிரச்சனை என்றால் வெளிப் பிரச்சனை,இதன் வீச்சு மிக பெரிதாக இருக்கும்.

அப்படி ஒன்று வந்து நாங்கள் உயிருக்கு பயந்து ஓடிய அனுபவம் வரும்.

அடுத்த பதிவில்.

Friday, June 23, 2006

தாச்சப்பள்ளி (அலுவலர்கள்)

முந்தய பதிப்புகள்
கட்டுமானத்துறை (அறிமுகம்)
கட்டுமானத்துறை (அறிமுகம்-1)
தாச்சப்பள்ளி

இந்த Site எங்கள் அலுவலகத்தின் பணியாளர்களின் அமைப்பை பார்ப்போம்.
Resident Engineer - திரு சேகர்.இவர் தான் தலைவர்.மொத்த Siteம் இவர் கீழ்தான் இருக்கும்.1985இல் ஆஸ்திரேலியா போனார்.இப்போதும் அங்குதான் உள்ளாரா என்று தெரியவில்லை.
Planning Engineer - திரு ஞானசேகரன்-இவர் இன்றும் அந்த கம்பெனியில் தான் இருப்பதாக கேள்விப்பட்டேன்.பெங்களூர் Airport siteயில்.இவரின் கீழ்
Asst Planning Engineers-S.R.பாண்டியன்,
S.அருனாச்சலம்-Clients Billing
நான் - ஒப்பந்தக்கார்களின் சம்பந்தமாக உள்ள விஷயங்கள்.
Site Senior Engineers சிலர்இவர்களின் கீழ் Assistant Engineers.
கம்பெனியின் கீழ் உள்ள தொழிலாளிகள் சிலர் இந்த Assitant Engineersக்கு உதவுவார்கள்.

Site Senior Engineers பொதுவாக 3 அல்லது 4 கட்டிட வேலைகளை மேற்பார்வையிடுவார்.இவருடைய வேலை பொதுவாக அந்தந்த கட்டிடங்கலுக்கு வேண்டிய சாமான்களை கொடுப்பது,கொடுக்கப்பட்டுள்ள கால வரையரைக்குள் கட்டிடங்களை முடிப்பதும் ஆகும்.மற்றும் வரைப்பட பிரச்சனைகளையும்,துணை ஒப்பந்தக்காரர்களின் பிரச்சனையை இவர் தான் களையவேண்டும்.மொத்தத்தில் நிறைய பொருப்பு மிகுந்த பதவி.
Assitant Engineers: இவர்கள் வேலை வரைப்படத்தில் உள்ள மாதிரி கட்டுமான வேலை செய்யப்படுகிறதா என்று மேற்பார்வை இடுவது.இப்படி எழுதுவது சுலபமாக இருந்தாலும் நேரடியாக நாம் ஈடுபடும் போதுதான் அதன் கஷ்டம் தெரியும்.உதாரணத்திற்கு ஒரு சின்ன Beamயில் போடமுடியாத அளவுக்கு கம்பியை காண்பித்திருப்பார்கள்.நிறைய விபரங்கள் விடுபட்டிருக்கும்.இவைமட்டும் அல்லாமல் கான்கிரீட் போடுவதற்க்கு முன்பு Electrical & Mechanical ஆட்களுக்கு வேண்டிய ஓட்டைகள் விடப்பட்டுள்ளனவா என்று பார்க்கவேண்டும்.நான் இதுவரை பார்த்த அவ்வளவு Projectஇலும் வரைப்படம் முழுவதுமாக இருந்ததில்லை.நடக்க நடக்க பல மாறுதல்கள் வந்துகொண்டு இருக்கும்.

Carpentry Workshop:இதற்கு என்று Foreman இருந்தார்கள்.பல வேலைகளில் இவர்கள் வேலையும் மிக அத்தியாவசியமான ஒன்று.
Siteயில் உள்ள வண்டிகளை பழுது பார்க்கவும்,Mixer Machine சரியான இடத்துக்கு கொண்டுசெல்ல, பழுது பார்க்க ஒரு Maintanence Workshopம் அதில் சில Staffsம் இருந்தார்கள்.
கரன்ட் சமாச்சாரங்களைப் பார்க்க ஒரு Engineerம் அவர் கீழே சில Electriciansம் வேலைப் பார்தார்கள்.
மேலே சொன்னவர்கள் எல்லோரும் "Technical Staffs" என்ற அமைப்பின் கீழ் வருவார்கள்.Project பெரிதாக இருந்ததால் Peak சமயத்தில் சுமார் 60வது Staffs இருந்தோம்.
அடுத்தது Account Section.....அடுத்த பதிவில்.

Thursday, June 22, 2006

மரணத்திற்கு பிறகு!!

இந்த கேள்வி பல சமயங்களில் பல இறப்புகளை பார்க்கும் போது எனக்கும் ஏற்பட்டுள்ளது.அதைப்பற்றி இவர் எழுதியிருப்பதை பாருங்கள்.

என் எண்ணமும் இவர் எழுத்தும் ஒத்துப்போவது மிக மிக அதிசயம்.
மூலம்

"இறப்பவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? அதுவும் தான் உறுதியாக சாகும் நிலையில் இருக்கின்றோம் என்று அறிந்தவர்களின் அந்த நொடி மன ஓட்டம் என்னவாக இருக்கும? மரணத்தை எதிர்கொண்டவர்கள் என்ன யோசித்து கொண்டு இறந்திருப்பார்கள்? வலிக்குது என்றா ? யாரையும் விட்டு விட்டு போகின்றோம் என்ற? எதையும் முடிக்காமல் போகின்றோமென்றா ? அய்யோ போகின்றோமே என்றா? தான் போகப்போவது சொர்க்கமா இருக்கனும் என்றா ? கடவுளைப்பார்க்கப்போகின்றோம் என்ற கேள்வியுடனா?"

உதவி:திரு யாத்ரீகன்.

இந்த உணர்வு என் தாத்தா சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தபோது ஏற்பட்டது.
அவரும் கொஞ்ச நாள் படுக்கையில் படுத்தபிறகு, ஒரு நாள் வாசலைப்பார்த்த ரூமில் உட்கார்ந்திருந்தார்.அப்போது அவரை என் கடைசி அத்தைதான் பார்த்துக்கொண்டிருந்தார்.
திடிரென்று ஒரு நாள்
"வாங்கோ வாங்கோ,என்ன இவ்வளவு நாளாக்கிடேலே.நான் இங்கு காத்தின்ருக்கேன்."என்று யாரையோ பார்த்து கூப்பிட்டுவிட்டு அத்தையை பார்த்து எமன் வந்திருக்கார் எருமையில் வந்திருக்கிறார் அவரை வரச்சொல்!
அவ்வளவு தான்.
போய்விட்டார்.

அடுத்த நிகழ்வு இப்படி
4 மாதங்களுக்கு முன்பு
சென்னையில் எனது மாமி சிறுநீரக கோளாரினால் மருத்துவமணைக்கும் வீட்டுக்கும் மாறி மாறி போய்கொண்டு இருந்த சமயத்தில்,ஒரு நாள் மருத்துவர், இனி வீட்டில் வைத்தே Dialysis செய்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டார்.
மறைமுகமாக "நாட்களை எண்ணிக்கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டார்.
உடல் உபாதைகள் ஒரு பக்கம், நாம் எல்லோரையும் கஷ்டப்படுத்துகிறோம் என்ற நினைப்பும் சேர்ந்து, வருவோர் எல்லோரிடமும் "என்னை கொண்டு போகமாட்டேன்"என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார்.மிக தெரிந்தவர்களிடம்" நான் சீக்கிரமே செத்துபோகவேண்டும்" என்று ஆண்டவனிடம் வேண்டிக்கொள்,என்று கேட்க ஆரம்பித்தார்கள்.
ஒவ்வொறு அவயமாக செயலிழுந்து கொண்டிருந்த நேரத்தில்..
ஒரு நாள்
அவங்க வீட்டுக்காரரை கூப்பிட்டு நான் இப்போதே பக்கத்தில் உள்ள கோயில் பேரை சொல்லி அங்கே போகவேண்டும் என்றார்.அங்கு என் அப்பா,அம்மா,மாமனார் & மாமியார் வந்திருக்கிறார்கள்,கூப்பிடுகிறார்கள் போகவேண்டும் என்று.
மேலே சொன்ன அனைவரும் "மேலே" போய் பல வருடங்கள் ஆகிவிட்டது.
கொஞ்ச நேரம் தான்...எல்லாம் முடிந்துவிட்டது.
இதையெல்லாம் பார்க்கும் போது இவர்களுக்குள் என்ன நடக்கிறது.ஏன் சில விஷயம் மாத்திரம் கடைசிவரை இருந்துவிட்டு போகிறது என்ற கேள்விகள் எழுகிறது.

புரியாத புதிரா?? சே! சே! அப்படியிருக்காது, அப்புறம் எப்படி தெரிந்துகொள்வது?

மேலே போகிறவரிடம் சொல்லியுள்ளேன், முடிந்தால் திரும்பவந்து எழுதுகிறேன் என்று சொல்லியுள்ளார்.அதற்குள் வேறு எங்காவது எழுதியிருந்தால் தெரியப்படுத்தவும்.

அது வரை காத்திருப்போம். :-))

Wednesday, June 21, 2006

தாச்சப்பள்ளி site (கட்டுமானத்துறை)

முந்தய பதிப்புகள் (1) (2)
இந்த Siteஐப் பற்றிய சிறிய முன் குறிப்பு.
பெயர்:துர்கா சிமின்ட்ஸ்
மதிப்பு:1 கோடிசொச்சம்(சரியாகத்தான் சொல்கிறேன் என்று நினைக்கிறேன்-எங்கள் ஒப்பந்தம் மட்டும்)
காலம்:28 மாதங்கள்இந்த சிமின்ட் ஆலைக்கு வேண்டிய கட்டிடங்களின் கான்கிரீட் வேலை மட்டும் எங்களுக்கு கொடுக்கப்பட்டது.
Mechanical வேலை BABA engineering என்ற கம்பெனிக்கும்
ஆர்கிடெக்சர் வேலை வேறொரு நிருவனத்துக்கும் கொடுக்கப்பட்டது.
Site வாழ்கையின் முதல் நாள்.
காலை 7 மணிக்கு சிற்றுண்டி முடித்துவிட்டு 7.15க்கு மகேன்திரா ஜீப்பில் கிளம்பினோம்.நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து சுமார் 8 K.M.கொஞ்சதூரம் தான் தார் சாலை அப்புறம் நம் கிராமத்துச்சாலை தான்.பாதி புழுதி ஜீப் உள்ளேயே திரும்பவரும்.
L&T-ECC siteகள் காலை 8 மணிக்கு வேலை ஆரம்பிக்கும்,முடியும் நேரம்....எனக்கு தெரிந்தவரை அதை நாங்களே முடிவுசெய்துகொள்ள வேண்டும்.இதைப்பற்றி பிறகு விபரமாக சொல்லுகிறேன்.
நான் போன சமயம் ஒரு 20 பேர் மட்டும் இருந்ததால் அனைவரிடமும் எங்களை introduce பண்ணிவைத்தார்கள்.சில பெரிய siteகளில் இது முடியாத காரியம் அதனால் போகப்போக நாமே நம்மளை தெரியப்படுத்திக்கொள்ளவேண்டும்.
Siteயில் இறங்கியவுடன் எங்களை வரவேற்றது "பொட்டல்காடு".ஆமாம் ரொம்ப தூரத்துக்கு மரம் என்ற ஒன்று கூட தென்படவில்லை.Lime stone rocks அங்கங்கே பூமியிலிருந்து துருத்திக்கொண்டு இருந்தது.இதைதவிர அந்த Siteயின் முதலாளி அவர்களுக்கு வேண்டிய அலுவலகத்தின் கட்டுமான் பணிகளை வேறு ஒரு குத்தகைகாரர் உதவியுடன் அப்போது தான் கட்ட ஆரம்பித்தார்கள்.
அப்போது எங்களுக்கு என்று இருந்தது ஒரு "Tent" தான்.அதில் ஒரு பெரிய மேஜை,சில நாற்காலிகள் மற்றும் வரைபடங்கள் மட்டும் தான்.முதல் நாள் என்பதால் அங்கிருந்த வரைப்படங்களை பார்த்து Siteயை பற்றி தெரிந்துகொள்ள சொன்னார்கள்.
பல வரைப்படங்களை பார்த்துக்கொண்டு வந்தபோது ஒரெ ஒரு கட்டிடம் மட்டும் என் கவனத்தை கவர்ந்தது.ஆமாம் நான் இதுவரை பார்க்காத உயரத்தை கொண்டது.அதன் விபரங்கள் பின்வருமாறு.
64 மீட்டர் உயரம்.50 மீட்டர் விட்டம் உள்ள ஒரு பெரும் கிணறுஇவ்வளவு பெரிய கான்கிரீட் கட்டடத்தை எப்படி கட்டுவார்கள் என்று யோசித்து யோசித்து அது தொடங்கும் வரை வியந்துபோனேன்.ஆமாம் நான் இங்கு பார்க்கும் கட்டிடங்கள் எல்லாமே பெரிது பெரிதாக இருந்தது.அதை கட்டும் விதமும் அலாதியாகத்தான் இருந்தது.
நாட்கள் ஆக ஆக நிறைய Staffs வர ஆரம்பித்தனர்.வேலையும் கொஞ்சம் சூடு பிடிக்கத்தொடங்கியது.

Sunday, June 18, 2006

இன்று தந்தையர் தினம்.

சுமார் 8வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் இதே தினம் மாலை தமிழ் வானொலி கேட்டுக்கொண்டிருந்த போது

"தந்தையர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவிப்பவர்கள் எங்கள் தொலைபேசி எண்ணை அழைக்கலாம்"என்று DJ அழைப்புவிடுத்தார்கள்.

பலர் அழைத்தனர்,வாழ்த்து தெரிவித்தனர்.

அதில் ஒருவர்,நம்மூரில் இருந்து வந்த தொழிலாளி போலும்.

ரேடியோ:வணக்கம்

நம்மவர்:வணக்கம்.

ரேடியோ:உங்க பெயரைச்சொல்லுங்க

நம்மவர்:முனியாண்டி

ரேடியோ:நன்றி திரு முனியாண்டி,தந்தையர் தின வாழ்த்துக்காக அழைத்திருக்கிறீர்கள்.உங்கப்பாவுக்கு என்ன வாழ்த்து சொல்லப்போகிறீர்கள்?

நம்மவர்:அவருடைய தந்தையின் பராக்கிரமங்களையும் அவர் எங்கிருந்தாலும் நாங்கள் என்றும் மறக்காமல் இருக்கவேண்டும் என்றார்.அவரும் எங்களை எப்போதும் போல் வாழ்த்தவேண்டும் என்றார்.

ரேடியோ:முனியாண்டி,நிச்சயம் உங்கள் அப்பா வாழ்த்துவார் என்று நம்புவோமே.சரி தற்போது உங்கள் அப்பா எங்குள்ளார்?சிங்கையிலா அல்லது ஊரிலா?இந்த நிகழ்சியை கேட்டுக்கொண்டு இருப்பாரா?

நம்மவர்:இல்லங்க!அவர் இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது என்றார்.


ரேடியோவிலிருந்து கொஞ்சநேரத்துக்கு சவுண்டே வரவில்லை. Shockயில் இருந்து விடுபட கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது போலும்.


அவ்வப்போது இந்த மாதிரி சுவையான நிகழ்சிகளும் நடைபெரும்.

Saturday, June 17, 2006

டிவி இல்லையா!! பிடி அபராதம்??

இன்று காலை செய்தித்தாளை படித்துக்கொண்டு இருக்கும் போது இப்படி ஒரு தகவலைப்பற்றி ஒருவர் Forumயில் எழுதியிருந்தார்.

சாராம்சம் இதுதான்

இந்த நபருக்கு ஒரு ஆணை Media Developmentயில் இருந்து வந்தது,

இப்படி

"Broadcast television receiver without valid licence" அபராதத்தொகை கட்டு.

உடனே அவர் அந்த departmentஐ கூப்பிட்டு விபரங்கள் கேட்டபிறகு தன்னிடம் டிவி யே கிடையாது ஆனாலும் நான் பணம் கட்டவேண்டுமா?என்றிருக்கிறார்.

அதற்கு அவர்கள்

உங்களிடம் டிவி பெட்டி இல்லாத்தை எங்களிடம் சொல்லவில்லை என்றால் அபராதத்தொகை கட்டித்தான் ஆகவேண்டும் என்று.

என்னிடம் இல்லாததை சொல்லாததற்கு தண்டனையா? என்று கேட்டிருக்கிறார்.

படிப்பதற்கு கொஞ்சம் பைத்தியகாரத்தனமாகத் தோன்றினாலும் இது தான் இங்கு சட்டம்.இதைப்பற்றி அவர்கள் இணையப்பக்கத்திலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது அதுமட்டுமில்லாமல் வீட்டுக்கு வரும் Property tax யிலும் விளக்கம் இருக்கும். இந்த இரண்டையும் அவர் பார்க்க தவறவிட்டுவிட்டார் போலும்.

இது இப்படியிருக்க சில மாதங்களுக்கு முன்பு ஒருவர் இப்படி கேட்டிருந்தார்

"இப்பொதெல்லாம் Computer Monitorயிலே TV Tunerவருவதால் டிவி என்பதே ஒரு அவசியம் இல்லாத பொருளாக போக உள்ளது.இந்த சமயத்தில் டிவி மீது வரி என்பதே செல்லுபடியாகாதே"என்று.

நல்ல கேள்வி தான்.

பதில் கிடைத்ததா என்று தெரியவில்லை.

Friday, June 16, 2006

கட்டுமானத்துறை-அறிமுகம் (1)

Land aquaization,City Developement Authorityயின் அனுமதி,கட்டப்படும் இடத்தில் கீழே உள்ள நில அமைப்பு இப்படி பல வேலைகள் வெகு முன்னதாகவே ஆரம்பித்துவிடும்.ஆனால் நாம் ஒரு குத்தகையாளர் நிலையில் இருந்து பார்போம்.

வேலை ஆரம்பிப்பதற்கு முன்பு கிழே இருக்கிறவற்றை Ready பண்ணினால் பின்னால் வரும் பிரச்சனைகளில் இருந்து ஒரளவு விடுபடலாம்.

Siteயின் அளவை பொருத்து முதன் முதலில் வேலை இடத்தைச்சுற்றி Hoarding/ Fencing போடவேண்டும்.இது மிக முக்கியம்.வெளி ஆட்கள் உள்ளே வராமல் இருப்பதையும் மற்றும் உங்கள் கட்டுமான சாமான்கள் கானாமல் போவதற்க்கும் இது உதவியாக இருக்கும்.
Site உள்ளே வருவதற்கான சாலை வசதிகள்.தினமும் உங்களுக்கு தேவையான சாமான்கள் வருவதற்கும்,போவதற்கும் சாலை வசதி மிக முக்கியம்.இது அனேகமாக Owner கையில் இருக்கும் சில சமயம் ஒப்பந்தக்காரர்களிடம் விட்டுவிடுவார்கள்.
Drinage-தண்ணீர் வெளியேற சரியான வழி.

கழிவறைகள்:வேலை செய்யும் தொழிலாளர்களை கணக்கில் எடுத்துகொண்டு அதற்கு தகுந்தார்போல் கட்டவேண்டும்.

கொசு பெருக்கத்தை தடுப்பது:இது ஒப்பந்தக்காரரின் வேலையா என்று கேட்டால்,ஆமாம் தான் என் பதில்.கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்தினால் வியாதி குறையும் இதனால் ஆட்கள் விடுப்பு எடுப்பது குறையும்.வேலையும் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கமுடியும்.கட்டுப்படுத்த சில வழிமுறைகள்
1.தண்ணீர் தேங்கவிடக்கூடாது.அப்படி தேங்குகின்ற இடங்களில் சிறிது டீசல் விடலாம்.
2.மாதம் 2 முறை புகை அடிக்கலாம்.

வேலை செய்பவர்களுக்கு தங்க இடம்.

ஒப்பந்தக்காரர் அலுவலகம்.இதில் Store,Tecnical Office and Time officeம் வரும்.

Time Office:கம்பெனி ஆட்களின் வருகை பதிவேடுகளை பராமரிப்பது,மற்றும் அவர்களுக்கு தேவையானவற்றை செய்வதற்கும் இருக்கும்.
Technical Office:இங்கு வேலை நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகளையும்(Planning),துணை ஒப்பந்தக்காரர்களின் வேலை விபரங்களும் மற்றும் ownerயிடம் இருந்து வேலை முடித்தற்கான Bill போடும் வேலைகளும் நடக்கும் இடம்.ஒரு Project என்றால் பல விதமான Drawings வரும் அதில் சில சமயம் சில மாறுதல்கள் இருக்கும் அந்த மாறுதல்களை முறைப்படுத்தி வைப்பதும் அதை தேவையானவர்களுக்கு தெரியப்படுத்துவதும் இங்குள்ளவர்கள் வேலை.அதே சமயம் துணை ஒப்பந்தக்காரர்களின் Bill போடுவதும் இங்கள்ளவர்கள் வேலை.

Accounts:பெரும்பாலும் இவர்கள் வேலை பணத்தை கையாள்வதிலே போய்விடும்.சாமான்கள் வாங்குவது அதற்கான Paper Work,வேலை செய்பவர்களின் பண பட்டுவாடா மற்றும் Staff & Workers welfare இப்படி பல அவதாரங்கள் எடுக்கவேண்டும்.
இதுவரை சொன்னதெல்லாம் ஒரு மேலோட்டம் தான்...உள்ளே போகப்போக நிறைய விஷயம் இருக்கும்.அவ்வளவும் எழுதினால் Bore அடிக்கும்.

வாங்க தொன்டப்பாடு site உள்ளே போவோம்...அடுத்த பதிவில்.

கட்டுமானத்துறை-அறிமுகம்.

ஒரு கட்டுமான Site தொடங்குகிறது என்றால்

Owner/Consultant/Architect

Main Contractor

Sub Contractors

இந்த வரிசையில் தான் ஆரம்பம் ஆகும்.

Owner:இவருடைய தேவைகளை Architectயிடம் சொல்ல அதற்கு தகுந்த மாதிரி வரைபடங்கள் உருவாகும்.குறிப்பாக ஒரு "Shopping Complex"கட்ட வேண்டும் என்றால் எவ்வளவு மாடி,ஒரு மாடியில் எவ்வளவு சதுர அடி உபயோகத்துக்கு வேண்டும்.
எவ்வளவு கார் நிறுத்த இடம் ஒதுக்கவேண்டும்?சாப்பாட்டுக்கடைகளுக்கு இடம் உண்டா?அப்படியிருந்தால் அதற்கு எவ்வளவு இடம்?

இந்த விபரங்கள் இருந்தால் ஒரு Consultant தோராயமாக இவ்வளவு செலவாகும் என்று சொல்லமுடியும்.இதற்கு மேல் + or - ஆகும்.Buffer money கொஞ்சமும் தேவைப்படும்.
கட்டிட பணி நடந்து கொண்டியிருக்கும் போதே சில சிறிய மாறுதல்களை செய்ய நேரிடும் போது அதனால் விளையும் செலவுகளுக்கு இந்த பணம் உதவும்.சில சமயம் இதையும் மீறி செலவு ஏற்படும் அப்போது தான் Ownerக்கும் Consultantக்கும் பிரச்சனை உருவாகும்.இப்படி உருவானாலும் முக்கால் வாசி நேரம் அது ஒப்பந்தகாரர் தலையில்தான் வந்து விழும்.பல சமயங்களில் வேறொரு ஒப்பந்தம் போட்டு இதை சரிபண்ணுவார்கள்.

சரியான வரைபடங்கள் இருந்து,பெரிய மாற்றங்கள் இல்லாவிட்டால்,குறிப்பிட்ட நேரத்தில் வேலை முடிந்துவிட்டால் எல்லோரும் நல்ல Profitஐ எதிர்பார்கலாம்.எவவளவு தான் முன் ஜாக்கிரதையாக Plan செய்தாலும் நாம் கட்டிமுடிக்க வேண்டிய பணத்தைக்காட்டிலும் அதிகமாகத் தான் வரும்.இதற்கு பல காரணங்கள் இருக்கும்.

சிறந்த உதாரணம்:வீட்டைக்கட்டிப் பார் என்பதுதான்.கட்டுமான பொருட்களின் விலையேற்றம்.ஆட்களின் கூலி உயர்வு இப்படி பல விஷயங்கள்.அதனால் முதலில் சொன்னேன் --குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்துவிட்டாலே உங்கள் லாபம் நிச்சயம்.

Consultant:இவருடைய பங்கு ஒரு Projectயில் மிக மிக முக்கியம்.நான் கேள்விப்பட்ட வரை Designers ஒரு Projectஐ 2 விதமாகப்பார்பார்கள்.ஏனென்றால் இவர்கள் வருமானம் Project Costயில் %age.

ஒன்று Lump Sum மற்றொன்று Project Value படி.இவை இரண்டிலும் + and - points உள்ளது.வேலை சூழ்நிலைக்கு தக்கப்படி முடிவுசெய்வார்கள்.ஒரு Project வேலை நடந்துகொண்டு இருக்கும் போது நிறைய மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்தால் அந்த குத்தகையை value படி போடுவார்கள்.

ஒரு Projectக்கு தேவைப்படும் அத்தனை வரைப்படங்களையும் இவர்கள் தான் கொடுக்கவேண்டும்.
இங்கு தான் "Autocad"-(வரைப்பட) Software க்கு வேலை.

Main Contractor:

Owner & Consultant பேச்சுவார்த்தை முடிந்த பிறகு அந்த வேலைக்கு தகுந்த Contractorகளிடம் Tenderகள் வரவழைக்கப்படும்.அதிலிருந்து சில சட்ட திட்டங்கலுக்கு உட்பட்டு ஒப்பந்தங்கள் வழங்கப்படும்.இங்கும் பல உப பிரிவுகள் உள்ளதால் அதையெல்லாம் நான் சொல்லப்போவதில்லை.இங்கு சொல்லப்படுவது எல்லாமே Basic தான்.

சில குத்தகைகள் நேரடியாக ஒப்பந்தக்காரர்களுக்கும் கொடுக்கப்படுவதுண்டு.

சரி Owner,Consultant and Contractor ரெடியாக உள்ளார்கள்,அடுத்தது என்ன?

அடுத்த பதிவில்.

Thursday, June 15, 2006

நீச்சல் அனுபவம் (1)

நீச்சல் அனுபவம் (முந்தைய பதிப்பு)

கரையேறி வீட்டுக்கு போன பிறகு மாமா பெண்கள் அம்மாவிடம் போட்டுக்கொடுத்துவிட
ஆஹா!!! அம்மா காட்டிய அன்பு

நீ போய்டினா உங்கப்பாவுக்கு யார் பதில் சொல்லுவது?என்று சொல்லி சொல்லி

செம மொத்து தான்.

என்ன செய்வது சில பேர் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதம் இப்படித்தான் அமைந்துவிடுகிறது.

"வலி" எனக்குதான்.

சரி 2 வது அனுபவம் இப்படி

புன்டரிகுளம்(நாகப்பட்டிணம்)

திரும்பவும் கோடைவிடுமுறை.இப்போது கொஞ்சம் வளர்ந்துவிட்டதால் தைரியமாக ஜெட்டியுடன் போனேன்.

இந்த தடவை கூப்பிட்டது எனது பள்ளி நண்பன் பிராபகரன் முருகேசன்.

குளம் என்பதால் தண்ணீர் ஓட்டம் கிடையாது.அப்படியே 3 படிகள் மட்டும் இறங்கி நீச்சல் அடிக்க முயற்சி செய்தேன்.

ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை.மரியாதையாக கரையைவிட்டு வெளியேறினேன்.

3வது அனுபவம்.

இது நடந்த களம் மலேசியா.

1992.2வது அனுபவம் முடிந்து 17வருடங்கள் கழித்து நடந்தது.

அப்போது எங்கள் அலுவலகத்தில் உள்ளேயே ஒரு நீச்சல் குளம் இருந்தது. திரும்பவும் நீச்சல் ஆசை வந்தது.

இங்கிருக்கும் காலத்திலாவது ஒழுங்காக நீச்சலை கற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைத்து அதற்கான வேலையை தொடங்கினேன்.


முதல் 2 நாட்கள் பக்கத்தி உள்ள சுவற்றின் பிடியை பிடித்துக் கொண்டு நீச்சல் அடிக்க முயற்சி செய்தேன்.ஏதோ கொஞ்சம் வருவதுபோல இருந்தது.

சரி நீச்சல் அடிக்க வந்துவிட்டது என்று எண்ணி அங்கிருந்த எங்கள் cookயிடம்,வந்து பார்

என்று சொல்லி ஒரு முனையில் இருந்து ஆரம்பித்தேன்.

இத்தனைக்கும் அந்த நீச்சல் குளம் வெறும் 10மீட்டர் நீளம் தான்.

நடந்தது என்ன?

அடுத்த பதிவில்.

Wednesday, June 14, 2006

நீச்சல் அனுபவம் (3)

நீச்சல் அனுபவங்கள். நீச்சல் அனுபவம் (1),நீச்சல் (2).

அந்த அருமையான இடம் இப்போது நான் இருக்கும் சிங்கப்பூர் தான்.

ஒவ்வொரு Townக்கும் ஒரு நீச்சல் குளம் இருக்கும்..புதிதாக கற்றுக்கொள்பவர்களுக்கு ஏற்ற மாதிரி -இது 1.2 மீட்டர் ஆழம் மட்டுமே இருக்கும்.இன்னொன்று 1.2 மீட்டர் -1.8 மீட்டர் ஆழம் உள்ள மாதிரி அமைப்புடன் 10 lanesஉள்ள குளம் பெரியவர்களுக்கு மற்றும் நீச்சல் பயிற்சி செய்பவர்களுக்கும் ஏதுவாக இருக்குமாறு கட்டியுள்ளார்கள்.

பாதுகாப்புக்காக சிலபேர்கள் கவனிப்பு மேடைகளில் இருந்து கவனித்துக்கொண்டு இருப்பார்கள்.

இங்கு வந்த சமயத்தில் நேரமின்மையாலும் வேலை தொந்தரவாலும் நீச்சல் குளம் பக்கமே போகமுடியவில்லை.

ஒரு நாள் இங்குள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற போது அவர்கள் மகன் நீச்சல் குளத்திற்க்கு போவதாகவும் விருப்பப்பட்டால் என்னையும் போகச்சொன்னார்கள்.
சரியென்று கிளம்பிவிட்டேன்.

உள்ளே போனபிறகு தான் இங்கு ஒரு தனி உலகமே நீந்திக்கொண்டு இருப்பது தெரிந்தது.

சின்னஞ்சிறு குழந்தைகள் அவ்வளவு அருமையாக நீந்திக்கொண்டிருந்தது கண்கொள்ளா காட்சி.அவர்களுக்கு பயிற்சி கொடுத்து கொண்டிருக்கும் வாத்தியார் அவர்களை கண் கொத்திப்பாம்பாக பார்த்து தவறுகளை திருத்திக்கொண்டிருப்பார்.

பலசமயம் இந்த குழந்தைகள் ஒரு lapயை அனாயாசமாக செய்வதை பார்த்தே நாமும் செய்யவேண்டும் என்ற வெறி என்னுள் ஏற்பட்டது.சில சமயம் தண்ணீருக்குள் மூழ்கிக்கொண்டு அவர்கள் எப்படி மூச்சை வெளிவிடுகிறார்கள் என்று பார்த்து தெரிந்து கொண்டேன்.நான் பார்த்தவரை இவர்கள் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு நீந்துவதில்லை.அதிகமானோர் Brest stroke,Butterfly Stroke and Free styleபாணிகளை மட்டுமே கடைபிடிக்கிறார்கள்.
யாராவது பாம்பு மாதிரி தலையை மாத்திரம் தூக்கிகொண்டு நீச்சல் போட்டால் 99% அவர் நம் நாட்டில் இருந்து சமீபத்தில் வந்தவர் என்று தெரிந்துகொள்ளலாம்.
4 வருடங்களுக்கு முன்பு ஒரு site(கீழே உள்ளே படத்தை பார்க்கவும்.)வேலை செய்யும் சமயத்தில் இந்த மாதிரி சாய்வு தளத்தில் ஒரு கயிற்றை பிடித்துக் கொண்டு ஏறி இறங்க வேண்டும்.அப்படி 3 மாதங்கள் செய்யததில் எனது முட்டி தனது வயதை காட்டியது.மருத்துவரிடம் காட்டியபோது,முட்டிக்கு அதிக அழுத்தம் கொடுக்ககூடிய பயிற்சிகளை செய்யாதீர்கள் என்றார்.பிறகு அவரே நீச்சல் பயிற்சி செய்வது நல்லது என்றார்.
ஆரம்பித்தது புதிய துவக்கம்.
புதிதாக Trunk & Gogglesவாங்கிவைத்து 6 மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் ஆரம்பித்தேன்.இந்த முறை முதலில் இருந்த பயம் இல்லை ஆனால் Middle lane போகக்கூடிய தைரியம் வரவில்லை.சுவர் பக்கமாகவே 7,8 வயது குழந்தைகள் பக்கத்திலேயே நீந்தினேன்.இந்த முறை பாதி laneவரை போகமுடிந்தது.
2 மாதங்களிலே ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்தேன்.தண்ணீரில் உள்ளே இருந்த 10 நிமிடங்களுக்கு பின்பு உடம்பு தன்னாலே மிதக்கும் நிலைக்கு வந்துவிட்டது போல் இருந்தது.
பலர் நீச்சல் செய்யும் போது கவனித்த போது கொஞ்சம் கூட பதற்றப்படாமல் அவர்கள் இருப்பதைப்பார்த்து அது போல் நிதானமாகசெய்யமுற்பட்டதில் 1 lapயை முடிக்கமுடிந்தது.
8 வயதில் ஆரம்பித்து 45வயதில் தான் எனக்கும் நீச்சல் தெரியும் என்று தன்னம்பிக்கையுடன் சொல்லமுடிகிறது.

"முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்திவிடும்."

நன்றி.

நீச்சல் அனுபவம் (2)

நீச்சல் அனுபவங்கள். நீச்சல் அனுபவம் (1)

ராவத் எங்கள் மெஸ்ஸின் சமையல்காரர்.

"ஹரே ராவத் பையா இதற் தேகோ மே கைசா தேர்த்தா ஹு"-ராவத் இங்கே பார் நான் எப்படி நீந்துகிறேன்.(ஹிந்தி சரியில்லை என்றால் மன்னிக்கவும் இதையும் நீச்சல் மாதிரி தான் கற்றுவருகிறேன்)என்றதும் அவனும் வந்தான்.

தொடக்கத்தில் ஆழம் குறைவு போகப்போக கூட இந்த அமைப்பில் இருந்த நீச்சல் குளம் அது.

தொடங்கினேன் ஆழம் குறைந்த இடத்திலிருந்து,பாதிதூரம் கடந்தபிறகு திரும்பவும் மூக்கு,தண்ணீர்...

பக்கத்தில் இருந்த சுவற்றைப் பிடிக்கலாம் என்று பிடிக்க முயன்ற போது கை வழுக்கியது.

மூழ்கினேன்,2 தடவை தண்ணீர் குடித்தேன்.

"ராவத்"-பஜாவோ என்று கத்தக்கூட திரானியில்லை.

நான் கொஞ்சதூரம் நீச்சல் அடிப்பதை பார்த்து அவன் கவனம் வேறு எங்கோ இருக்க அந்த சமயத்தில் இது நடந்தது.

அவன் எதேச்சயையாக திரும்ப நான் தத்தளிப்பதைப்பார்த்து கைகொடுத்து தூக்கிவிட்டான்.

நான் எந்த இடத்தில் தத்தளித்தேன் என்பதை பின்னாளில் பார்த்தபோது எனக்கே வெட்கமாக இருந்தது.என்னுடைய உயரத்தை விட 2,3 அங்குலம் தான் அதிகமாக இருந்தது.

இதற்கு பிறகு நீச்சலைப்பற்றி சுய பரிசோதனை செய்துபார்த்ததில் நான் ஏதோ தப்பு செய்கிறேன் என்று மட்டும் புலப்பட்டது.

1.மூக்கு

2.தண்ணீர்

தண்ணீரில் தான் நீச்சல் அடிக்கவேண்டும் என்பதால் மூக்கில் மட்டும் கவனம் செலுத்தினேன்.

சின்ன வயதில் இருந்தே மூக்கால் தான் மூச்சுவிட வேண்டும் என்று சொல்லி பழக்கப்படுத்திவிட்டதால்,நீந்தும் போதும் இதையே கடைப்பிடித்தேன்.இது தான் மிகப்பெரிய தவறு என்று பிற்காலத்தில் புரிந்து கொண்டேன்.

சரி இதை எப்படி சரிசெய்வது?

பலரிடம் பேசி,நீச்சலைப்பற்றி சில புத்தகங்களை படித்து ஒரளவு தெரிந்துகொண்ட பிறகு
முயற்சிக்கலாம் என்று எண்ணிய போது நான் மாற்றப்பட்டது பஞ்சாப்பில் உள்ள ஜெய்பூரா என்ற ஊருக்கு.

கோடைக்காலம் ஆதலால் சொட்டு தண்ணீர் காணக்கூட கிடைக்கவில்லை.

அப்புறம்? கிடைத்தது அருமையான இடம்.

எங்கு??

அது அடுத்த பதிவில்.

Sunday, June 11, 2006

ஜாக்கிரதை!!

2 நாட்களுக்கு முன்பு திரு.பத்ரி அவர்களின் பேட்டி தொலைகாட்சியில் ஒளிப்பரப்பியதாக எனது மனைவி சொல்லிவிட்டு.....
இந்த குண்டையும் தூக்கிப்போட்டார்.!
அதாவது அவர்களும் வலைபூக்களில் எழுதப்போவதாக.
நானும் "இது எழுதுவது பேசுவது அல்ல" என்று சொல்லிப்பார்தேன்.
ஹுகும்,நான் உங்களுக்கு முன்னாடியே எழுத ஆரம்பித்துவிட்டேன்,அதை ஒரு பத்திரிக்கை வேறு பிரசுரித்துவிட்டது என்று சொல்லிவிட்டார்கள்.
இனி நான் சொல்லிப்பிரயோஜனம் இல்லை.
நண்பர்களே!
திரும்ப தலைப்பை பார்த்துக்கொள்ளுங்கள்.

Saturday, June 10, 2006

Seven இன் Eleven

நேற்று இரவு வெளியில் போகும் போது இன்டெர் நெட் கம்பெனிக்கு பணம் கட்டவேண்டிய ஞாபகம் வந்தது.

Billஐ எடுத்துக்கொண்டு கட்டவேண்டிய Machine பக்கம் போனால் அங்கு கூட்டம்.

சரி இங்குள்ள Seven Eleven கடையில் கூட கட்டமுடியும் என்பதால் அங்கு சென்றேன்.நல்ல வேலை அவ்வளவு கூட்டம் இல்லை.

Billஐ கொடுத்தவுடன் கடைக்காரர் எவ்வளவு கட்ட விரும்புகிறீர்கள் என்றார்.செலுத்த வேண்டிய பணத்தை Installmentஇல் செலுத்த முடியும் என்பதால் அப்படி கேட்டார்.

முழுவதும் என்றேன்.

பில்லில் இருந்த Bar Codeyயை scan செய்தார்.

Dispaly யில் வந்தது இது தான்

"Foldable Mountain Bike $69.90"

நான் கட்டவேண்டியதோ 15.75 வெள்ளி அதுவும் இன்டெர்னெட்க்கான காசு.

கடைசிவரை அந்த கடைக்காரருக்கு ஏன் இப்படி காண்பிக்கிறது என்று புரியவில்லை.பல தடவை முயற்சித்தும் பலனில்லாமல் கை வழியாக amountயை புகுத்தி பணம் கட்டவைத்தார்.

ஏதோ Software Bug போல

Friday, June 09, 2006

வெளிச்சம்

தினமும் காலை வேலைக்கு போகும்போது ஒலி வானொலி(தமிழ்) கேட்டுக்கொண்டு போவது வழக்கம்.அதுவும் திருமதி.கீதா படைப்பு என்றால் கொஞ்சம் சந்தோஷம் கூடும்.மிகச் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டதாக கேள்விப்பட்டேன்.

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

நேற்று காலை "வெளிச்சம்" என்ற ஒரு நிகழ்சி போட்டார்கள். அதில் ஒரு வழக்குரைஞர் நிறுவனம் செய்த மோசடியை விலாவாரியாக சொல்லிப்படைத்த விதம் மிகவும் அருமை.அதைவிட அதைச் சொன்னவருடைய Modulation மிக நன்றாக இருந்தது.நான் கேட்ட வரை அவர்களின் தமிழ் ஆளுமையைத்தான் மிகவும் ரசித்தேன்.
அதை அவர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக பின்வருமாறு எழுதி அனுப்பினேன் ஆனால் அவர்களால் இந்த Fontஐ படிக்க முடியவில்லை என்றார்கள்.சரி என்று ஆங்கிலத்தில் மாற்றி அனுப்பினேன்.

என்ன Operating system/ Browser உபயோகிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

"திரு அழகிய பாண்டியன் அவர்களுக்கு
இன்று(8.6.06) காலை 7.50க்கு ஒலிபரப்பாகிய "வெளிச்சம்" நிகழ்ச்சியைப் பற்றி சில வரிகள்..

இந்த நிகழ்ச்சியை கேட்டு முடிந்தவுடன்..

அடடா என்ன அருமையான தமிழ், அதை எழுதியவருக்கும்,சொன்னவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

"அருமின் அருமின் ஆசை அருமின் ஈசனோடாயின் ஆசை அருமின்"என்ற சொற்றொடரின் வீச்சு நன்றாகவே வெளிப்பட்டது.(ரு வா? று வா? குழப்பமாக உள்ளது.)
பூனை இருக்கும் வீட்டில் தான் எலியும் குட்டி போட்டு வாழ்கிறது என்ற வார்தையும் உங்கள் நிகழ்ச்சிக்கு பலம் கூட்டியது.

வெகு நாட்கள் கழித்து ஒரு நல்ல, மனம் நிறைந்த நிகழ்சியை கேட்கவைத்தற்கு "ஒலி"க்கு என் மனமார்ந்த நன்றி.

வாழ்க வளர்க உங்கள் தமிழ் பணி.

இப்படிக்கு
வெங்கடேசன்."

ஒரு கூடுதல் தகவல்.இந்த வெளிச்சம் நிகழ்சிக்கா போடப்படும் விளம்பரத்தில் முதலில் பேசுவது நமது ஜனாதிபதி திரு அப்துல்கலாம் அவர்கள்."வெள்ளத்தனைய....என்று குரள் சொல்லி அதற்கு விளக்கமும் சொல்வார்.

இதை ஆடியோ Link போட அவர்களிடம் கேட்டுள்ளேன்.அவர்கள் கொடுத்தால் நீங்களும் அனுபவிக்கலாம்.

Thursday, June 08, 2006

L&T-ECC-ஆந்திரா(1)

இதற்கு முந்தைய பதிவுக்கு இங்கு சொடுக்கவும்

ரயில் மறுநாள் காலை மணி 4.15க்கு குண்டூர் வந்துசேர்ந்தது.
பாதி தூக்கதில் வெளியில் வந்து பஸ் நிலையத்துக்கு வந்து சேர்ந்து அங்குள்ள Information Counterயில் நாங்கள் போகும் ஊருக்கு எப்போது பஸ் உள்ளது என்று கேட்டு பதில் வாங்க முடியாமல் "ஙே" என்று முழித்துக்கொண்டு இருக்கும்போது,ஒரு தமிழ்காரர் உதவினார்.அவர் மூலம் எங்களுக்கு முதல் பஸ் 7.15க்கு தான் என்று தெரிந்தது.
அதற்குள் பசிக்க ஆரம்பித்தால் காலை 5 மணிக்கெல்லாம் திறந்திருக்கும் Hotel ஐ பார்த்து நகர்ந்தோம்.

ஒரு வழியாக நாங்கள் ஏறும் பஸ் ஐ கண்டுபிடித்து பாஷை புரியாமல் மணி 11.40க்கு "தொன்டப்பாடு"(Dondapadu) வந்துசேர்ந்தோம்.சிகப்பு கலர் பஸ்,இன்ஜியுடன் கூட மொத்த பஸ்சும் சத்தத்துடன் இருந்தது.காட்டு மிருகங்கள் தவிர மற்றவையுடன் பயணம் செய்ய கொடுத்து வைத்திருக்கவேண்டும்.முதன் முதலில் ஆந்திராவின் "சுருட்டு"ன் மகிமையை தெரிந்துகொண்டேன்.தப்பாக புரிந்துகொள்ளாதீர்கள்,நான் குடிக்கவில்லை.அங்கு "No Smoking" யெல்லாம் அப்போது அவ்வளவு செல்லுபடியாகவில்லை.இப்போது எப்படி என்று தெரியவில்லை.

மிகச்சிறிய ஊர்,நாங்கள் பேசிய யாருக்கும் ஆங்கிலம் தெரியவில்லை.நாங்களே ஆங்கிலத்தில் அரை குறை தான் அதுவும் அவர்களுக்கு புரியவில்லை.
பிறகு Post Office ஞாபகம் வந்து அங்குள்ள அதிகாரியிடம் விஜாரித்த போது,"வெளியில் காத்திருங்கள்,உங்கள் ஜீப் வரும்" என்றார்.எங்களுக்கு உயிர் வந்தது.
ரயில் நிலயமும் இருந்தது ஆனால் நாங்கள் ஒரு தடவைகூட உபயோகப்படுத்தியது கிடையாது.ஏனென்றால் Bus வசதி மிக அதிகம் மற்றும் பயண நேரமும் குறைவு.அதனால் அனைவரும் பஸ்சில் போவதையே விரும்பினார்.

சிறிய ஊர் என்பதால் எல்லாமே மிகவும் குறைவாகத்தான் இருக்கும். காய்கறி கடைகள்,Hardware கடைகள்,ஹோட்டல்,சினிமா தியேட்டர் எல்லாமே Limitஆக இருந்தது.Entertaimentக்கு வழிகிடையாது.குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அங்குள்ள வெய்யில் கடுமையை காரணம் காட்டி நிறைய பீர் குடித்தார்கள்.அப்போது 1 பாட்டில் 11ரூபாய் என நினைக்கிறேன்.புதிதாக வீட்டை விட்டு வெளியில் வந்து கட்டுபாடு இல்லாத நிலையில் பல இளைஞர்கள் துணிகரமாக இறங்கிப்பார்தார்கள்.மீண்டார்களா என்று தெரியவில்லை.

அந்த கால கட்டத்தில் கிடைத்த வேலைகள் அவ்வளவும் வானந்திர பகுதிகளில் தான் இருந்தது.அதற்கு காரணமும் உண்டு.பல வேலைகள் மிகப்பெரிய Projects, அதுமட்டுமில்லாமல் அதனால் உண்டாகும் தூய்மைக்கேடு மக்களை பாதிக்கக்கூடாது என்பதால் சற்று தள்ளியே இருக்கும்.இந்த மாதிரி இடங்கள் என்பதால் Companyம் வேலை செய்பவர்களுக்கு பல வசதிகளை செய்துகொடுத்தது.
அவற்றில் சில


  1. Mess-சில பேர் கட்டாயா பிரம்மச்சாரியாக இருந்தார்கள்.சிலர் நிஜமாகவே பிரம்மச்சாரி-என்னைப்போல்(அப்போது) இருந்ததால் சாப்பட்டுக்கு வேண்டிய பாத்திரங்கள்,Cook,உதவியாளர்கள்,இடம் முதலியவற்றை Comapny ஏற்பாடு செய்து கொடுத்தது.மற்றபடி வேண்டிய மளிகை சாமான்கள் எல்லாம் Staffs பார்த்துக்கொள்ள வேண்டும்.ஒவ்வொரு மாதம் ஒவ்வொருவர் என்று மாற்றி மாற்றி பார்க்கவேண்டும்.காலை டிபன்,மதியம் சாப்பாடு & இரவு டிபனுடன் ஏதாவது அரிசி சாதம் இருக்கும்.மாதக்கடைசியில் செலவைப்பார்த்து பகிர்ந்துகொள்வோம்.மாதம் ரூபாய் 110யில் இருந்து 200 வரை வரும்.

  2. Sports: வியாடுவதற்காக கிரிகெட் கிட்,டேபிள் டென்னிஸ்,Batminton என்று தேவையானவற்றை வாங்கி கொடுத்தார்கள்.
  3. Recreation: மாதம் ஒரு முறை படங்கள் பார்க்க Video போடுவோம்.2 மாதங்களுக்கு ஒரு முறை ஏதோ ஒரு Party நடக்கும்.தண்ணி பார்டிகளுக்கு கொண்டாடம் தான்.என்னை மாதிரி ஆட்களுக்கு நாயிடம் தேங்காய் கொடுத்த கதைதான்.எங்களுக்கு Mazzaவும் snacksம் தான்.
  4. தங்க வசதி: Dormitory type யில் ஒரு சத்திரத்தை siteயில் கட்டினோம்.32 அறைகள்.பெரிய ஆட்களுக்கு தனி ரூம் மற்றவர்களுக்கு இன்னொருவருடன் பகிர்ந்து கொள்ளவேண்டும்.Mess இதிலே அமைத்திருந்தால் பிரச்சனை இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
    இப்படி பல...
    பலருக்கு வீட்டு நினைவே வராது.
    சரி ,இனிமேல் உண்மையான கட்டுமானத்துறை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    பொருத்துக்கொள்ளுங்கள் அடுத்த பதிவு வரை..

Tuesday, June 06, 2006

ஆந்திர மண்ணில்-லார்சன் & டூப்ரோ-ECC

L&T-ECC-Chennai முந்தைய பதிவு

Accounts Departmentயில் என்னுடைய Transferக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யத்தொடங்கினார்கள்.

எங்கே என்று சொல்லவேயில்லையே?

நமது பக்கத்து ஊர்காரர் "மனவாடு" திரு N.T.Ramaraokகாரு ஊருக்குத்தான்.
Site இருந்த இடம் குண்டூர் பக்கத்தில் உள்ள "Dontapadu"என்ற ஊர்.குண்டூரீல் இருந்து சுமார் 5 மணிநேரம் Bus பிராயாணம்.அதற்கு பிறகு Company Jeepவந்து அழைத்துச்செல்லும் என்று சொன்னார்கள்.

தேதி குறித்துவிட்டு கையில் கொஞ்சம் முன்பணம் கொடுத்து நீங்கள் இந்த தேதியில் அங்கு இருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.1st Classயில் போவதற்கு அனுமதியிருந்ததால் நாங்கள் கேட்ட தேதியில் Ticket கிடைத்தது.

நாங்கள்?? சொல்ல மறந்துவிட்டேன்,என்னுடன் இன்னொரு diploma holderஐயும் சேர்த்துவிட்டார்கள்.பிற் காலத்தில் ஒரு நல்ல நண்பர் கிடைக்க இது வசதியாகயிருந்தது.அவர் பெயர் திரு பிரேம்ராஜ்.

இந்த சமயம் வரை நான் இப்படிபோவது வீட்டுக்குத் தெரியாது.கிளம்ப 5 நாட்கள் இருக்கும் சமயத்தில் வீட்டுக்கு கடிதம் போட்டுவிட்டு நான் ஆந்திரா போய் சேர்ந்த பிறகு கடிதம் போடுகிறேன் என்று எழுதிவிட்டேன்.
அம்மாவுக்கு நான் நல்ல வேலையை விட்டுவிட்டதாக வருத்தம்.ஆனால் அந்த வேலையில் உள்ள கஷ்டங்கள் தெரியாது.என்னடா இது Permanent ஆகப்போகிற சமயத்தில் விட்டுட்டு ஏதோ Private Companyக்கு போகிறாய்? என்ற வருத்ததுடன் இருந்தார் போலும்.உடனே கணவரைப்பிடித்து நீங்கள் போய் அவனை ஆந்திரா பக்கமெல்லாம் போகவேண்டாம் திரும்ப நாகைக்கே வரச்சொல்லுங்கள் என்று சொல்லி சென்னைக்கு அனுப்பிவிட்டார்.

அப்பாவும் வந்தார்.விபரங்களை கேட்டுவிட்டு,நல்ல இடமாகத்தான் தெரிகிறது "போ,போய் பிழைக்கிற வழியப்பாரு.அம்மாக்கள் எல்லாம் இப்படித்தான் இருப்பார்கள்".என்றார்.
"அப்பாடி" என்று இருந்தது.

ஒரு பிரச்சனையை ஆண் & பெண் அணுகும் விதம் கொஞ்சம் தெரிய ஆரம்பித்தது.
கிளம்பும் நாள் வந்தது.எனக்காக என் அப்பாவும்,பிரேம்ராஜுக்காக அவனுடைய பெற்றோர்களும் ரயில் நிலையத்திற்கு வந்திருந்தார்கள்.

ஆமாம், ஆந்திரா போகிறாயா அந்த பாஷை தெரியுமா?

சுத்தமாக எங்கள் இருவருக்கும் "தெளவது" --தெரியாது.

அப்புறம் எப்படி??!!

போகப்போக தெரியும்.

குண்டூரை நோக்கி வண்டி கிளம்பிற்று....

மற்றவை அடுத்த பதிவில்.

Monday, June 05, 2006

நீச்சல் அனுபவம்

நீச்சல் எனக்கு தண்ணிகாட்டிய அனுபவத்தை பார்கலாமா?

தொடக்கப்பள்ளியில் படித்துக்கொண்டு இருக்கும் போது அவ்வப்போது பாட்டி வீட்டுக்கு(வடுவூர்) பள்ளி இறுதி விடுமுறையை கழிக்கச்செல்வதுண்டு.

அந்த மாதிரி ஒரு தடவை செல்லும் போது, காலை வேலையில், அந்த ஊர் நண்பர்கள் குளிக்க பக்கத்தில் உள்ள வாய்காலுக்கு கூப்பிட்டார்கள்.நீச்சல் தெரியாது என்றேன் அவர்கள் கற்றுத்தருவதாக சொன்னார்கள்.எனக்கு ஒரு பக்கம் ஆசை மற்றொரு பக்கம் பயம் ஏனென்றால் எனக்கு நீச்சல் சுத்தமாக தெரியாது.

விதி யாரைவிட்டது.அம்மாவிடம் சொல்லிவிட்டு ஆத்தங்கரைப்பக்கம் போய்விட்டேன்.

ஒரு சிலர் பாலத்தின்மேல் இருந்து ஆற்றில் குதித்தார்கள்,பலர் ஆற்றையே கடந்தார்கள்.நான் கரையில் இருந்த படியே எனது நண்பர்கள் அடிக்கும் நீச்சல் சாகசங்களை பார்த்துக்கொண்டு இருந்தேன்.கொஞ்சநேரம் கழிந்த பிறகு

"வாடா, கரையிலேயே உட்காந்திருக்கவா வந்தாய்?" என்றார்கள் நண்பர்கள்

சரி முயற்சி செய்வோம் என்று எண்ணி டிராயரை அவுத்து கரையில் வைத்துவிட்டு "கோவணத்துடன்" படிப்படியாக இறங்கினேன்.(கூர்ந்து பார்த்தால்!! கண் கூசுவதற்காக இந்த கலர் கொடுக்கவில்லை) :-))

கரையெல்லாம் ஒரே பாசியாக இருந்ததால் காலும் சரியாக படியவில்லை.ஏதோ ஒரு அசட்டு துணிச்சலில் இறங்கிவிட்டேன்.

என்னை ஒரளவுக்கு கூட்டிக்கொண்டு போய்விட்டு...

டேய் காலை அடிடா...கையை அடிடா என்று சத்தம் போட்டார்கள்.ரெண்டு அடி போட்ட பிறகு கொஞ்சம் தண்ணீர் மூக்குகுள் போக...அவ்வளவு தான்.என்னை வழிநடத்திய நண்பன் விட்டுவிட்டான்.அவனால் என்னை கட்டுப்படுத்த முடியவில்லை.

அப்புறம் என்ன? கையை காலை அடித்து அடித்து ஆற்றோட்டத்துடன் போக ஆரம்பித்தேன்.

நண்பன் கத்த,பக்கத்தில் குளித்துக்கொண்டிருந்த மாமா பெண்கள் & மற்றவர்களுக்கு குரல் கொடுக்க,எல்லோரும் என்னைப்பார்பது தெரிந்தது ஆனாலும் நான் அவர்கள் பக்கம் போகமுடியவில்லை.

இப்படியாக சில வினாடிகள் போக நான் அங்கிருந்த கான்கிரீட் பாலத்தின் கீழே ஆட்றோட்டத்துடன் போய் கொண்டிருந்தேன்.அப்படி போய்கொண்டு இருக்கும் போது அதன் அடியில் இருந்த Steel Beam கைகெட்டும் தூரத்தில் இருந்ததால் டக்கெண்று அதை பிடித்துக்கொண்டு தொங்க ஆரம்பித்துவிட்டேன்.

உடனே பாலத்துக்கு அந்தபக்கத்தில் இருந்த ஒருவர் வந்து என்னை காப்பாற்றினார்.

கொஞ்ச நேரம் கரையிலே உட்கார்ந்திருந்தேன்.எல்லோரும் வந்து ஆசுவாசப்படுத்தியபிறகு..

சரி சரி ஆத்துக்கு போ என்றார்கள்.

எழுந்திருக்கலாம் என்று நினைத்து பாதி எழுந்த போது தான்..... கண்டது

என் கோவணத்தை ஆறு திருடிவிட்டது.

நீச்சலை இத்துடாவது விட்டேனா!! ஹ¤கும்..

வாங்க அடுத்த பதிவுக்கு.

Sunday, June 04, 2006

போலீஸ் முகம்

இங்கு சிங்கப்பூரில் ஒரு TV நிகழ்ச்சி "குற்றப்பத்திரிக்கை" என்று ஒன்று போடுவார்கள்.
அதில் நடந்த குற்றங்களும் அதை துப்புதுலக்கிய விதமும் நாடக வடிவத்தில் போட்டுவிட்டு உண்மையான குற்றவாளியின் போட்டோவையும் போடுவார்கள்.

அதன் பக்கத்தில் அவர்களுக்கு கிடைத்த தண்டனையும் போடுவார்கள்.

இதில் என்ன அதிசியம் என்கிறீர்களா?

அவர்கள் "குற்றவாளி" என்று சந்தேக்கிற நபர்களை கூப்பிட்டு உட்கார வைத்து அவர்களுக்கே உரித்தான முறையில் விசாரனை நடக்கும்.கொஞ்சமும் வன்முறை கிடையாது.

இதே நமது TVயில் வந்தால்,மனித நேயம் காண்பிக்கப்படாது.அடி உதை மட்டும் கொஞ்சம் விவரமாக காண்பிக்கப்படும்.

ம்ம்.. இப்போ அதுக்கென்ன??

போலிசை உங்கள் நண்பனாக காண்பித்தால் பொதுமக்கள் உங்களை நம்பி தைரியமாக விபரங்கள் கொடுக்க முன்வருவார்கள்.இது இங்கே மிகச்சரியாக கையாளப்படுவதாக நம்புகிறேன்.பொது மக்களும் அதற்கு தகுந்தார் போல் நடந்துகொள்கிறார்கள்.

இதெல்லாம் உங்களை மாதிரி சின்ன ஊருக்கு தான் சரிப்படும் என்று சொல்லாதீர்கள்.

நீங்கள் பார்பது,கேட்பது எல்லாம்தான் உங்களை வழிநடத்துகிறது.

பொது ஊடகங்கள் மற்றும் போலீஸ் துறை சேர்ந்து ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கவேண்டும்.

நல்ல விஷயங்களை மட்டும் காண்பித்து வந்தால் மக்களுக்கும் போலிஸ்க்கும் மத்தியில் ஒரு நல்ல உறவு ஏறபட வாய்ப்புள்ளது.

யோசியிங்கள்.

சிங்கப்பூரில் கணினி Show 2006

கடந்த வியாழன் முதல் "Suntech City" சென்டரில் நடந்துவரும் இந்த கண்காட்சிக்கு நேற்று போய் வந்தேன்.

Laptop,LCT Monitors & Thump drive விலையில் வீழ்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.

நீங்க எதுவும் வாங்கவில்லையா என்று கேட்கிறீர்களா?

இப்போதைக்கு அவசியம் இல்லாததாலும் அங்கு கிடைப்பதை விட “Sim Lim Squareயில் விலை குறைவாக கிடைக்கும் என்பதால் முடிந்த வரை தவிர்த்து விடுவேன்.

Sim Lim Square--இங்கு தான் கணினி சாமான்கள் போட்டி போட்டு விற்பார்கள்.

சில விலை விவர பட்டியல் கிழே.

Flashஇல் சில விபரங்கள் Over Expose ஆகிவிட்டது இருந்தாலும் வித்தியாசம் அதிகமில்லை. 2 அல்லது 3 வெள்ளிதான்.(Flash drive)

1 வெள்ளி= ருபாய் 28.20.(சுமாராக)



Friday, June 02, 2006

சென்னை அலுவலகம்-L&T-ECC

சென்னை அலுவலகம்.L&T ECC

இந்த அலுவலகம் முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் உள்ளடங்கியது.

இங்கு வருவதற்கு முன்பு Aircon வசதியை ஒரிரு முறைமட்டும் Cinema Theature இல் அனுபவத்திருப்பேன்.
சரியாக ஞாபகம் இல்லை.அதனால் புதிய Office சூழலுக்கு உடம்பை கொண்டுவர தடுமாறினேன்.என்ன காரணம் என்று தெரியாமலேயே நிறைய "கொட்டாவி" வந்தது.புது இடம் இப்படி கொட்டாவி விட்டு கொண்டியிருந்தால் நன்றாகவாக இருக்கும்.கூடிய சீக்கிரம் Site க்கு போனால் நன்றாக இருக்கும் என நினைத்துக்கொண்டிருந்தேன்.

Office இல் உள்ளவர்களுக்கு மதிய சாப்பாடு அங்குள்ள canteenயில் தான்.விலை குறைவாக்கப்பட்டு கொடுக்கப்பட்டது.முதல் நாள் தெரிந்த ஒருவரிடம் Meals கூப்பன் வாங்கிக்கொண்டு வரிசையில் நின்று சாப்பாடு வாங்கி சாப்பிட்டேன்.

சரி சாப்பாடு முடிந்தது அடுத்து குடிக்க தண்ணீர் எங்கு என்று பார்த்தபோது அதற்கு தனி Q.

எல்லோரும் அந்த தண்ணீர் தரும் Machine பக்கத்தில் போகிறார்கள் Glassஐ வைக்கிறார்கள், தண்ணீர் வருகிறது எடுத்துக்கொண்டு போய்விடுகிறார்கள்.எனக்கோ ஒரே யோஜனை-என்னடா இது? Tapம் இல்லை எப்படி தண்ணீர் வருகிறது, எதை திருவுவது ஒன்றும் புரியவில்லை.

என்னுடைய முறை வருகிறது..

போனேன்

முன்னால் நின்றேன்

Glassஐ வைத்தேன்...ஆனால் தண்ணீர் வரவில்லை

pipeஐ திருகுகிறேன் என்னவோ செய்கிறேன் ஊகும்..வரவில்லை

Glass உள்ள மேடையை தட்டுகிறேன்....பலன் இல்லை

நான் படும் பாட்டைப் பார்த்த பின்னால் இருந்த சக நண்பர் கால் பக்கம் காட்டி "அந்த Pedestal" அமுக்குமாறு சொன்னார்.

அதை காலால் அமுக்கிய பிறகு தண்ணீர் வந்தது.ரகசியம் புரிந்தது.

1980களில் Tapeஐ திருகினால் தான் தண்ணீர் வரும் என்று பழகியிருந்த ஒருவனுக்கு இது புதியது.இப்போது இதெல்லாம் ஜுஜூபி .இப்போது கை பக்கத்தில் கொண்டு போனாலே தண்ணீர் வரும் sensor modelகள் வந்துவிட்டன.

நம்மில் பலர் இந்த மாதிரி அனுபவப்பட்டு தான் வந்திருப்போம் என்று நினைக்கிறேன்.

இப்படியே 1 வாரம் போனதும் அடுத்த வாரத்தில் எனக்கு siteக்கு போக order வந்தது.

எங்கு தெரியுமா?

அடுத்த பதிவில் பார்க்கலாம்...

லார்சன் & டூப்ரோ - ECC

1982 முதல் காலாண்டு சமயம் இங்கிருந்து நேர்கானலுக்கு அழைப்பு வந்தது.என்னைப்போல் நிறைய இளைஞர்கள் வந்திருந்தார்கள்.அப்போதும் இப்போதும் அது உள்ள இடம் மிக பிரசத்தி பெற்ற MGR ராமாவரம் தோட்டத்திற்கு சற்று தள்ளி உள்ள "ஒரு" தூணில் மேல் கட்டப்பட்ட Office.இது Chennaiக்கு ஒரு Icon.இந்த மாதிரி கட்டிடம் சென்னையில் வேறு எங்கும் இல்லை.

இந்திய கட்டுமானத்துறையில் இன்றும் இவர்கள் பங்கு மிக மிக அதிகம்.
என்னுடைய ஞாபகம் சரியாக இருந்தால்,அப்போது 2வது மாடியில் Accounts, 3வது மாடியில் Chennai Regional Office & 4வது மாடியில் ECC head office.மற்ற விபரங்களுக்கு இங்கே தட்டவும்.

ஆனால் இன்று Regional Office இடம் பெயர்ந்து அணணா சாலைக்கு போய்விட்டது.

1980 ஆரம்பத்தில் ஆந்திராவில் நிறைய Cement plants கட்டுவதற்கான ஒப்பந்தம் ECCக்கு கிடைத்தது.அப்போது சென்னை Regionக்கு இருந்த manager ஒரு Military Return.கொஞ்சம் Strict.அவருக்கு Hair cutting கூட சரியாக இருக்கவேண்டும்.
இவருக்கு இளைஞர்களை மிகவும் பிடிக்குமாதலால் நிறைய இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.

Diploma படித்தவர்களுக்கு "Diploma Engineer Trainee"என்று 3 வருடங்களும்,Degree படித்தவர்களுக்கு 1 வருடமும் Training கொடுத்து பிறகு நிரந்தர பணியார்களாக ஏற்றுக்கொண்டார்கள்.

கொஞ்ச நாட்கள் சென்னை அலுவலகத்தில் தங்கி Work Contactsஐ பற்றி தெரிந்து கொள்ளச்சொன்னார்கள்.இப்போது Senior Vice President ஆக இருக்கும் திரு K.V.Rengasamy அவர்கள் தான் என்னுடைய முதல் ECC அதிகாரி.அருமையான மனிதர்.நல்ல ஞாபகசக்தி உள்ளவர் என்று கேள்விப்பட்டேன்.

போன Januaryயில் சென்னைக்குப் போன பொழுது ஒரு பழைய ECC நண்பனை சந்திக்க நேர்ந்தது.அப்போது அவன் "தற்போது Companyயில் நிறைய வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது நீ திரும்ப வருவதானால் போய் KVRஐ போய் பார்" என்றான்.

அதற்கு நான் "அவருக்கு என்னை ஞாபகம் இருக்காது,busyயாக இருப்பார்.அவரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை என்றேன்".

நிச்சயமாக இருக்காது.என்னை பல வருடங்கள் கழித்துப்பார்த்து பேர் சொல்லி கூப்பிட்டார் என்றான்.
இதே போல் என் மச்சான் பல வருடங்கள் கழித்து பார்க்கச் சென்ற பொழுது கூட அவனை Correctஆக அடையாளம் கண்டுகொண்டதாகச் சொன்னார்.இருந்தாலும். நான் அவரைக்காண போக முடியவில்லை.அடுத்த முறையாவது போய் பார்க்கவேண்டும்.

கொஞ்சம் தடம் தவறிவிட்டேன்...

திரும்ப வேலைக்கு சேர்ந்த சமயத்துக்கு போவோம்.

சென்னை office இன்னும் 2 வாரங்கள் இருக்க வேண்டும் என்றார்கள்.இந்த சமயத்தில் நேர்ந்த வேடிகையான சில விஷயங்களை...
அடுத்த பதிவில் பார்ப்போம்.

குப்பை போடுவது பற்றி

நேற்று இரவு "வசந்தம் சென்ரல்"(சிங்கப்பூர் தமிழ் தொலைக்காட்சி) தமிழ்ச்செய்தியில் சிங்கப்பூரில் குப்பை போடும் பழக்கம் இன்னும் குறைந்தபாடு இல்லை அதை கட்டுப்படுத்த ஏதோ "Programme" நடத்தப்போவதாகச் சொன்னார்கள்.கடந்த வருடங்களில் சுமார் 4000 மக்கள் பிடிபட்டதாகவும் சொன்னார்கள்.

நான் இங்கு வந்த பொழுது பல இடங்களில் "COW"என்று
(அதாவது "Corrective Work Order"யின் சுருக்கம் தான்) போட்ட Jacket உடன் பல மனிதர்கள் பொது இடங்களை சுத்தம் செய்வதைப் பார்திருக்கேன்.குப்பை போடுவோர்கள் பிடிபட்டால் அவர்களுக்கு இந்த மாதிரி தண்டனை கொடுப்பார்கள்.

கடந்த 2, 3 வருடங்களில் இந்த மாதிரி ஆட்கள் என் கண்ணில் படவில்லை.

ஆனால் நான் இருக்கும் இடத்தில் நிலமை கொஞ்சம் மோசம் தான்போலும்.கொஞ்சம் கொஞ்சமாக மாறுவதால் தெரியவில்லை.

7 வருடங்களுக்கு பிறகு வந்த எனது பெற்றோர்கள்

"என்னடா! முதல் தடவை வந்தபோது மிகவும் சுத்தமாக இருந்தது இப்போது எங்கும் காகிதம்,Plastic என்று உள்ளதே"என்றார்.

என்ன பதில் சொல்ல முடியும்.ஜனத்தொகை அதிகமாகிவிட்டது என்றேன்.

நாம் இருக்கும் / தங்கும் இடத்தை நாம் தான் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
பல சிறுவர்களுக்கு இது புரிவதில்லை.சில பெரியவர்களுக்கும் இது தெரிவதில்லை.

குற்றம் செய்பவர்கள் பிடிபடுவது குறைந்துவிட்டதால் மற்றவர்களும் கவலைப்படுவதாக தெரியவில்லை போலும்.

"தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும்".

இழந்து கொண்டிருக்கின்ற நமது நல்ல பெயரை காப்பாற்ற வேண்டும்.நம்மால் முடிந்த அளவுக்கு அரசாங்கத்துக்கு உதவவேண்டும்.

உதாரணமாக Letter Box இல் வந்து விழும் Flyersஐ பக்கத்தில் உள்ள குப்பை தொட்டியில் போடலாம்.அதற்கு கூட சிலருக்கு கஷ்டமாக உள்ளது.பொது இடத்தில் உள்ளதால் இது Blockயின் உள்ளே நுழைபவரின் கவனத்தை முதலில் பெரும் இடமாக உள்ளது.

கொஞ்ச நாள் இந்த மாதிரி விழுந்த Paperஐ பொறுக்கி குப்பைத் தொட்டியில் போட்டேன்.ஒரு நாள் நான் இதை செய்துகொண்டிருக்கும் போதே பக்கத்து பெட்டியில் lettersஐ எடுத்த ஒரு பொம்பளை அதில் இருந்த Flyers கீழே விழுந்தது அதைப்பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் போய்விட்டாள்.Behaviour Problem போல.

அதிலிருந்து என்னுடைய Boxஐ மட்டும் clear செய்துவிட்டு போய்விடுவேன்.

இதைப்போல் இன்னோர் விஷயமும் கவனத்தில் கொள்ளவேண்டியது "Pedestrian Crossing"

சிவப்பு விளக்கு இருக்கும் போதே சாலையை கடப்பது.சமீப காலத்தில் நிறைய Near Miss ஐ பார்க்க நேர்ந்தது.அடிப்பட்டவர்கள் வந்து சொல்லப்போவதில்லை இப்படி செய்வது தவறு என்று.
நண்பர்களே!! 30 seconds ஒரு பெரிய Time அல்ல நீங்கள் வாழும் நாளை கணக்கிட்டால்.

சிலர் தான் செய்வது தவறு என்று தெரிந்தும் தலையை குனிந்து கொண்டு சாலையை கடப்பது "இன்னொரு கொடுமை".

Thursday, June 01, 2006

இரண்டுக்கும் மூன்றுக்கும் மத்தியில்

முதல் வேலை
இரண்டாம் வேலை

மூன்றாம் வேலைக்கு முன்பு..

பல இடங்களுக்கு Apply செய்ததில் Gemini Flyover பக்கத்தில் உள்ள ஒரு கட்டுமான Companyயில் நேர்கானலுக்கு கூப்பிட்டார்கள்.அப்போது அவர்கள் Parksen Complexஐ கட்டிக்கொண்டு இருந்தார்கள்.காலை 11 மணிக்கு Appoitment.சொன்ன Timeக்கு அங்கு இருந்தேன்.

"உட்காருங்கள்"

நன்றி

எந்த வருடம் Pass செய்தீர்கள்?எங்கு படித்தீர்கள்?உங்கள் குடும்ப விபரம் போன்ற விபரங்களை கேட்டறிந்த பிறகு,

இதற்கு முன்பு எங்கு வேலை பார்த்தீர்கள்?

"அந்த பொது......... Companyயில்"

இதைக்கேட்டதும் அவருக்கு Histeria வந்தது போல் என்னுடைய Certificatesஐ கொடுத்து போகச்சொல்லிவிட்டார்.உங்களுக்கு இங்கு வேலையில்லை!!
எனக்கு ஒன்றும் புரியவில்லை.

நான் "சார் என் மேல் ஏதேனும் தவறா?என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளலாமா?"

உனக்கு வேலையே தெரியலை என்றாலும் எடுத்துக்கொள்வேன் ஆனால் "அந்த பொது ..." இடத்தில் வேலை செய்த எவனையும் வேலைக்கு வைக்கமாட்டேன் என்றார்.

"நான் அந்த மாதிரியான ஆள் இல்லை மற்றும் இதே காரணத்திற்கு தான் அந்த Companyயில் இருந்து வெளியில் வருகிறேன்" என்றேன்.

"தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமால் இருக்க மாட்டான்".எனக்கு தெரியும் என்றார்.

"சார் எல்லோரையும் ஒரே மாதிரி பார்காதீர்கள்" என்றேன்.

இது அவரை மேலும் வெறுப்பேத்தியிருக்க வேண்டும்..

இங்க பாருங்க தம்பி நானும் அதே Companyயில் குப்பை கொட்டியவன் தான்,எனக்கு அங்கிருப்பவன் எப்படி வேலை செய்வான் என்று தெரியும்.உன்னை நம்பி இந்த Site ஐ விட்டு விட்டு போயி நான் நிம்மதியாக தூங்க முடியாது.நீங்க போய் வரலாம் என்றார்.

எவ்வளவோ முயன்றும் அவரைச் சாந்தப்படுத்த முடியவில்லை.செம அடி வாங்கி இருப்பார் போலும்.
அதை என்னிடம் காட்டிவிட்டார்.

அவருக்கு புற முதுகு காட்டி வெளியில் வந்தேன் அதே சமயத்தில் இந்த கறை எவ்வளவு நாள் என்னுடன் இருக்கப்போகிறதோ என்ற கவலையும் வரத்தொடங்கியது.

அப்படியென்றால் அந்த பொது துறையில் இருந்து கற்றுக்கொள்ள எதுவுமே இல்லையா?என்கிறீர்களா?

கற்றுக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பு,முன்னேற வேண்டும் என்ற வெறி இருந்தால் போதும் எந்த ஒரு மோசமான இடத்திலும் கற்றுக்கொள்ள ஏதாவது இருக்கும்.

நான் கற்றுக்கொண்டது...சில நல்லவற்றை பார்ப்போம்

Material Selection:ஜல்லி,மணல்,சிமெண்ட்,செங்கல் மற்றும் கம்பிகளின் தரம்.இவற்றை எப்படி Check செய்வது / நிராகரிப்பது.இதைத்தான் தரக்கட்டுப்பாடு என்பார்கள்.

Contract Documentation:குத்தகைக்காரர்கள் தங்கள் குத்தகயை பிடிப்பதற்கு முன்பே அவர்கள் வேலையைப் பற்றிய முழு விபரம் கொடுக்கப்படும்.அதில் அவர்கள் நிறைவேற்றப்பட வேண்டிய Conditionsஐ கொடுத்திருப்பார்கள்.ஓட்டையில்லாத Contact தயாரிப்பது கடினம்.சில சமயம் வேண்டும் என்றே விடப்படும்.

Implementation:Goverment நிறுவனமாக இருந்தால் தாங்கள் செய்யவேண்டிய வேலையை குத்தகைகாரர்களால் அவ்வளவு சீக்கிரமாக By Pass பண்ணமுடியாது.குத்தகைகாரர்களின் Resposibility பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.

Work Specification:இதைப்பற்றி நிறைய பேசுவார்கள்.அதனால் நிறைய கற்றுக்கொள்ளலாம்.வேறு பெரிய Companyகளில் வேலை செய்யும்போது மிகவும் உதவியாக இருக்கும்.

அடுத்த பதிவில் L&T-ECCயின்(எனது மூன்றாவது வேலை இடம்) உள்ளே நுழைவோம்