Saturday, July 26, 2008

நடந்தது -(துபாய் வேலை)

முதல், இரண்டாவது, பதிவுகள்

இதற்கு முந்தைய பதிவு.

இப்படி பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் தீபாவளியும் வந்தது,அலுவலகத்திலும் அவ்வளவாக வேலையில்லாததால் ஒரு 15 நாட்கள் விடுமுறைக்கு விண்ணப்பித்து சென்றேன்.திரும்ப நவம்பரில் வந்தபிறகும் அந்த நிறுவனத்திலிருந்து எந்தவிதமான பதிலோ,தொலைப்பேசியோ இல்லாதிருந்தது.இந்த முறை ஊருக்கு போய் வந்ததில் இருந்து இங்கு (வெளிநாட்டில்) சம்பாதிப்பதில் அவ்வளவு சுவாரஸ்யம் இல்லாமல் போய்விட்டது ஏனென்றால் ஒரு நண்பன் காண்பித்துக்கொடுத்த வழி.அவன் இப்போது நான் வாங்கும் சம்பளத்தை பார்த்து சிரிக்கிறான்.நம் ஊரிலேயே இதற்கு மேல் சம்பாதிக்கும் போது நீ ஏன் வெளிநாடு போய் சம்பாதிக்கனும் என்று வழி காட்டினான்.இருந்தாலும் துபாய் போகும் நிலை இப்படி கைமேல் வரும் போது இதையும் பார்த்துவிடலாம் என்ற எண்ணத்துடன் இருந்தேன்.குடும்பம் வேறு திரும்பி வர அவ்வப்போது அழைப்பு விடுத்தது என்றெல்லாம் சேர்ந்து இனி எங்கிருந்தாலும் 2 வருடங்கள் மட்டுமே வேலை செய்வது என்று முடிவுசெய்தேன்.

திரும்பி வந்ததும் புதிய இடத்தில் வேலை என்று வேறொரு இடத்துக்கு மாற்றப்பட்டேன்.புதிய தலை.அவருக்காக ஆடவேண்டிய கட்டாயம்.

புதிய வேலை இடம் என்னவோ பக்கத்தில் தான் இருந்தது ஆனால் செய்யப்போகும் வேலை இடத்திற்கு உள்ளே செல்ல சிறப்பு அனுமதி வாங்கவேண்டும் என்றும், அதோடிலில்லாமல் அந்த வேலை கிடைக்க சில மாதங்கள் ஆகும் என்றார்கள்.இங்கு தான் நம்ம சனி பகவான் வேலையை காண்பித்தார்.ஓரளவு வேலை இருந்தால் இருக்கும் 8 மணி நேரத்தில் இழுத்துப்பிடித்து வேலை காண்பிக்கலாம்,ஒன்றுமே இல்லை என்றால் கணினி முன்பு எவ்வளவு நேரம் தான் முடங்கிக்கிடப்பது?சரியான வேலை கொடுக்கத்தெரியாத ”தலை”,புரியாத வேலைகள்,ஏவல்கள் என்று எனக்கும் தலைக்கும் இடைவெளி அதிகமாகிக்கொண்டு போய்கொண்டிருந்தது.தினமும் வேலைக்கு வரவே டென்ஷனுக்காகத்தானோ என்று? ஒரு வித வெறுப்புடன் நாட்கள் கழிந்தன.

வெகு நாட்கள் கழித்து நானே அந்த (துபாய்) கம்பெனியை அழைத்து விபரங்கள் கேட்டேன்.என்னை புரிந்துகொண்டு சில நாட்கள் இடைவெளியில் அழைத்தார்கள்,அதற்கு முன்பு சம்பள விபரங்களை மின் அஞ்சலில் அனுப்பி இது சரி யென்றால் மேற்கொண்டு பேசலாம் என்றார்கள்.இங்கு இப்போது வாங்கும் சம்பளம்,அங்கு கிடைக்கப்போவது முதலியவற்றை கணக்கிட்டு, அங்கு நீங்கள் கொடுக்கப்போகும் வாடகைதான் குறைவாக இருப்பது போல் இருக்கிறது என்று சொல்லிவிட்டு,சந்திக்கலாம் என்றேன்.உடனே அவரிடம் இருந்து திரும்ப ஒரு மின்னஞ்சல் “அதை வேறு இடத்தில் உயர்த்திக்” கொடுக்கிறோம் என்று சொல்லி நான் எதிர்பார்க்காத அளவுக்கு உயர்த்திக்கொடுத்தார்.

முதல் நேர்காணலின் போது தங்கவசதி செய்து தருவதாக சொல்லிவிட்டு பிறகு வாபஸ் வாங்கிக்கொண்டார்கள்.சித்தப்பா பையனிடம் தொடர்பு கொண்டு விபரங்கள் வாங்கிய பிறகு அந்த பிரச்சனை அடங்கியது.அப்போது நான் சொல்லியபடி அவர்கள் வேலைக்கான உத்திரவை கொடுக்கும் நாளில் இருந்து ஒரு மாதம் கழித்து அவர்களிடம் சேருவதாக சொல்லியிருந்தேன்.ஆதாவது மார்ச் 1ம் தேதி.

அப்போதிருந்த நிறுவனத்தில் ஊக்கத்தொகை மார்ச் இறுதியில் கொடுப்பார்கள் அதை 2 வாரங்களுக்கு முன்பு அறிவிப்பார்கள்.நான் வேலை செய்ய ஆரம்பித்த 3 வருடங்களுக்கு கால்/அரை மாதம் என்று கொடுத்துவந்தவர்கள் போன வருடம் தான் சும்மா அள்ளிக்கொடுத்தார்கள்,அதுவே இந்த வருடம் தொடரும் என்று எங்கள் புதுத்தலை ஒரு மீட்டிங்கில் கசியவிட்டார்.சரி வருகிறது தான் வருது Pro-rated படி கிடைக்கட்டும் என்று பிப்ரவரி இறுதியில் கால்கடிதாசி கொடுத்துவிடலாம் என்றிருந்தேன்.நண்பர்களிடம் இதைப்பற்றி சொல்லிக்கொண்டு இருந்தேன் அதில் ஒருவர் நேராக மனிதவள அதிகாரிக்கு தொலைப்பேசி விளக்கம் கேட்ட போது “மார்ச் இறுதிக்குள் கடிதாசி கொடுத்தால்,ஒரு சல்லிக்காசு கிடைக்காது” என்றார்.ஆதாவது நான் மார்ச் இறுதிவரை வேலை பார்க்கவேண்டும் என்றும் அதற்குப்பிறகு நோட்டிஸ் Period கொடுக்கவேண்டும் என்று சொன்னபோது ஆடிப்போய்விட்டேன்.கணக்குப்போட்டு பார்த்த போது மே மாதம் தான் அந்த துபாய் கம்பெனியில் சேரமுடியும் என்று தெரிந்தது.இதை எப்படி அந்த புதுக்கம்பெனிடம் சொல்வது? சொன்னால் ஏற்பார்களா? முடியாது என்றால் விட்டது ஆசை விளாம்பழ ஓட்டோடு என்று நினைத்துக்கொள்ளவேண்டியது தான் என்று நினைத்து நாட்களை ஓட்டினேன்.

இரண்டாம் நேர்காணல், மனிதவள அதிகாரியுடன் நடந்தது,விபரங்களை அடுக்கினார்,இந்தியர்களை அங்கு அனுப்ப சில விதிமுறைகளை கடைப்பிடிக்கவேண்டும் என்றும் உங்கள் சான்றிதழ்களை சான்று முத்திரை குத்தவேண்டியிருக்கும் என்று விபரங்கள் சொன்னார்,சிலவற்றை நீங்கள் செய்யவேண்டும் என்றும் மீதியை நிறுவனம் கவனித்துக்கொள்ளும் என்று சொன்னபோது வெறுமனே தலையாட்டிக்கொண்டு இருந்தேன்,அதன் விபரீதம் தெரியாமல்.கடைசியாக நீ எப்போது எங்களிடம் சேர்வாய்? என்றார்.அதற்கு நான் ”மே மாதம்” என்றேன்.நீ முதலில் மார்ச் மாதம் சேர்வதாக சொன்னார்களே இப்போது இப்படி சொல்கிறாய்? என்றார்.விபரங்களை சொன்னதும் என்னை முதலில் நேர்காணல் செய்த நபருடன் தொலைப்பேசி இப்படி சொல்கிறார்,என்ன பண்ணலாம்? என்றார்.அவரோ கூலாக “பரவாயில்லை” அப்போதே வரட்டும் என்று சொல்லிவிட்டார்.
கூலாக நான் ஒரு பெருமூச்சு விட்டேன்.அதன் பிறகு அந்த அதிகாரியை அலுவலகத்தின் கீழே உள்ள காப்பிக்கடையில் சந்தித்தேன்.அவரே எனக்கு தேநீர் வாங்கிக்கொடுத்து பேசிக்கொண்டு இருந்தார்.நான் சொல்வதை பொருமையுடன் கேட்டு என்னை புரிந்துகொண்டார்.இவர் பேசிய விதம் மற்றும் நடந்துகொண்ட விதம் இவர் ஒரு அருமையான மனிதர் என்பதை சொல்லாமல் சொல்லியது.

மார்ச் இரண்டாம் வாரம் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டது,போன வருடத்தை விட ஒரு மாதம் கம்மி ஆனால் பரவாயில்லை.

மார்ச் இறுதியில் வங்கியில் பணம் ஏற்றப்பட்ட பிறகு ஒரு வாரம் கழித்து “கடிதாசியை” கொடுத்தேன்.தலை இதை பார்த்து வேறு சைட்டுக்கு மாற்றவா? என்றார்.
ஆளை விடுங்க சாமி என்றேன். அதிகமாக இழுக்காமல் கொடுத்துவிட்டார் ஆனால் என்னுடைய உபயோகிக்காத லீவில் மனிதர் விளையாட ஆரம்பித்துவிட்டர்.
கால் கடிதாசியில் என்னுடைய உபயோகிக்காத விடுமுறையை முடிந்தால் தள்ளிவிடும்படி கேட்டேன் அதற்கு முடியாது என்று மறுத்து பிறகு ஏதோ கேம் விளையாடி வாங்கினேன்.

சுமார் 15 நாட்கள் இருந்ததால் ஊருக்கு கிளம்பினேன்.

புதுக்கம்பெனி,நான் மே மாதம் தான் சேரப்போவதால் என்னுடைய appointment கடிதத்தை ஏபரல்-08 கடைசியில் தான் கொடுத்தார்கள்.

மீதி தொடரும்.

Wednesday, July 23, 2008

நான் இங்கு ... அவர் அங்கு

பல மாதங்களாக இவர் வருகைக்காக காத்திருந்தாலும், விதி என்னை இங்கு தள்ளிவிட்டு விட்டு திரு ராமகிருஷ்ணனை சிங்கைக்கு இழுத்துக்கொண்டது போலும்.

இதோ அவர் பார்வையில் சிங்கப்பூர்.

ஒவ்வொரு வாரம் தேக்காவை பார்த்தாலும் திங்கள் அன்று காணும் குப்பையை வித்தியாசமாக சொல்லும் பாணியே இவருடைய எழுத்தை வித்தியாசமாக காட்டுகிறது.

படித்து அனுபவியுங்கள்.

Tuesday, July 22, 2008

சென்னை தமிழ்

இரு வாரங்களுக்கு முன்பு சென்னை கடற்கரைக்கு போன போது இப்படிப்பட்ட தகவல் பலகையை பார்க்க நேரிட்டது.மேலிருந்து படித்துக்கொண்டு வரும் போது...





நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

பின்குறிப்பு: தமிழ்மொழி ஆராய்சிமையம் சென்னை கடற்கரைக்கு அருகில் வருவதாக எப்போதோ செய்தியில் படித்த ஞாபகம்.

நாவற்பழம்

பலருக்கும் இந்த பழத்தின் மீது தீராத காதல் ஆனால் என்ன? விலை தான் கொஞ்சம் அதிகமாக இருக்கு (1/4 கிலோ=30 ரூபாய்).
வாங்க முடியாதவர்கள்/ வெளிநாட்டில் வாழும் நம்மக்களுக்காக.. சென்னை பழங்கள் இவை.





அனுபவிங்க.

வீட்டுக்கார அம்மாவை உசுப்பேத்தனும் என்றால் படத்தின் மீது சொடுக்கிப்பார்க்கவும். :-))

டெல்லி- அதிசயம்.

இதன் தொடர்புடைய முந்தைய பதிவு இங்கு.

நம்ம முடிவெல்லாம் பற்றி யார் கவலைப்படுகிறார்கள்?டெல்லியில் இருக்கப்போகும் 2 நாட்களை எப்படி சமாளிப்பது? எங்கு போகலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.இதுவரை ஜெய்பூர் பக்கம் போனதில்லை என்பதால் அங்கு போய்வரலாம் என்று முடிவுசெய்தேன்.

நேரம்11 மணியை நெருங்கிக்கொண்டு இருக்கையில் என் அருகே ஒருவர் வந்து உட்கார்ந்தார்,அப்படியே பேச்சு கொடுக்கும் போது அவர் சோகக்கதையை சொன்னார் அது என்னுடையதைவிட மோசமாக இருந்தது.சிலர் மும்பையில் இந்த வேலையை பண்ணமுடியாமல் டெல்லிக்கு வந்திருந்தார்கள்.ஏனோ தகவல்கள் கிடைப்பதில் பலசிரமங்கள் உள்ளன,அதுவும் அரசாங்க அலுவலகங்களில் இருந்து ஒரு தகவல் வேண்டும் என்றால் தெரிந்தவர்கள் இருக்கவேண்டும் அல்லது கையூட்டு கொடுக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதியாகவே இருக்கு.இவ்விரண்டும் செய்ய துணிவில்லை என்றால் மிகப்பெரிய கால தமாததுக்கு தயராக இருக்கவேண்டும்.பல அரசாங்க அலுவலகங்களில் சரியான விபரப்பலகைகள் கூட இருப்பதில்லை,என்று சொன்னார்.

என் பக்கத்தில் இருந்தவர்க்கு தெரிந்தவர்கள் யாரோ இருந்திருப்பார்கள் போலும் அலுவலக கதவை திறந்துகொண்டு யோரோ ஒருவரை பார்த்திவிட்டு வந்தார். இரண்டாம் முறை அவர் கையில் சான்றிதழ் இருந்தது.சரி நாமும் இப்படித்தான் முயலவேண்டும் என்று நினைத்து கதை லேசாக திறந்து பார்த்தால் அஞ்சலக அலுவலகத்தில் முத்திரை குத்துவது போல் சில அதிகாரிகளிடம் சான்றிதழ்கள்"குத்து" வாங்கிக்கொண்டிருந்தது.வெளியில் நின்றுகொண்டிருந்த என்னை யாரும் பார்க்கவும் இல்லை,என்ன விஷயம் என்றும் கேட்கவில்லை.சிறிது நேரம் கழித்து நானே திரும்ப வந்து இருக்கையில் அமர்ந்துகொண்டேன்.காலம் விரயமாகிக்கொண்டிருந்தது.சாய் பாய் உள்ளே போய் அதிகாரிகளுக்கு தேநீர் கொடுத்துவிட்டு போகும் வழியில் சாய் வேணுமா? என்று கேட்டார்.தேநீர் குடிக்கும் மனநிலையில் இல்லாத்ததால் வேண்டாம் என்று சொன்னேன்.

சிறிது நேரத்தில் அலுவலகம் உள்ளே இருந்து தென்னிந்தியர் போல் தோற்றம் கொண்ட ஒருவர் வெளியே வந்தார்,உடனே ஓடிப்போய் அவரிடன் என் அவசரத்தை சொன்னேன்,அவரோ நீங்கள் போய் கவுன்டரில் வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்.என்னுடன் இருந்த மற்றொருவரையும் கூப்பிட்டுக்கொண்டு அங்குசென்றேன். வழக்கம் போல் அங்கு கதவு திறக்கவில்லை அதற்குள் அங்கு சுமார் 5 பேர் திரண்டிருந்தனர்.வரிசையில் நிற்பது என்பது நம்மக்களுக்கு வரவே வராத கலையோ என்று தோன்றுமளவுக்கு மக்கள் மொத்தமாக குழுமியிருந்தனர்.புதிதாக வருபவர்கள் தான்றோத்தனமாக முட்டி மோதிக்கொண்டு முன்னே சென்றார்கள்.மொத்தத்தில் கொடுமையாக இருந்தது.11.15 கவுன்டர் கதவு திறந்ததும் முட்டி மோதிய கூட்டம் சிறிது சிறிதாக குறைந்து என் நிலை வரும் போது 11.25.இதற்கிடையில் என் உறவினர் வந்ததால் ஒரு புதுத்தெம்பு வந்தது,ஏனெனில் அவர் டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் சாலை/போகும் விபரங்கள் அத்துப்படி அதோடு ஹிந்தியும் சரளமாக பேசக்கூடியவர்.

கைக்கு சான்றிதழ் கிடைத்தவுடன் வேகம் வேகமாக ஒரு ஆட்டோ பிடித்து விபரங்களை சொன்னோம்.அதே 70 ரூபாய் தான் UAE Embassy க்கு.11.45 க்கு போய்விட்டார்.மறுபடி வரிசை,இம்முறை அதிகமாக இல்லை ஆனால் சோதனை போல் எனக்கு முன் இருப்பவர் பல சான்றிதழ்களை வைத்துக்கொண்டு விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தார்.
இங்கு முத்திரை குத்தி திரும்ப வாங்க சாதாரண நிலைக்கு (2 வேலை நாட்கள்ஆகும்) ஒரு சான்றிதழுக்கு 1500 ரூபாயும் அவசரநிலை (அன்றே மதியம் 2~3 வாங்கிக்கொள்ளலாம்) க்கு ரூபாய் 2250 யும் வாங்குகிறார்கள்.முதலில் இதற்கு 750/1500 ஆக இருந்தது. எண்ணெய்விலை ஏற்றம் இதிலும் தெரிகிறது.தேவையான பணத்தை கட்டி ரசிதுவாங்கினேன்.

என்னுடைய சான்றிதழை திரும்ப வாங்க 2 மணிநேரம் இருப்பதால் என்னுடைய உறவினர் என்னை கனாட்பிளேஸில் இருக்கும் அவர் அலுவலகத்து அழைத்துச்சென்றார்.அவர் சிங்கப்பூர் ஒரு முறை வந்திருந்ததால் இங்குள்ள ரயில் சேவையைப் பற்றி நன்கு அறிவார்.இப்போது டெல்லியில் சக்கைபோடு போடும் மெட்ரோ சேவையை காண்பிக்க கூட்டிக்கொண்டு போனார்.அப்படியே கார்பன் காப்பி. தூய்மையாக வைத்துள்ளார்கள் ரயிலின் உள்ளும் புறத்தையும்.இதே மாதிரியான நிலை எல்லா ஊர்களுக்கும் வரவேண்டும்.சில நாட்களுக்கு முன்பு வரை இருந்த "ஊனமுற்றோர்" என்ற வாசகத்தை எடுத்துவிட்டு "மகளிர்" என்ற வாசகத்தை வைத்து 50% ஒதுக்கிவிட்டார்கள். :-)



மதிய உணவுக்குப்பிறகு திரும்ப UAE Embassy போய் சான்றிதழை பெற்றுக்கொண்டு இணையம் மூலம் சென்னைக்கு விமானச்சீட்டு வாங்கி அன்றிரவே 11.30க்கு சென்னை வந்துசேர்ந்தேன்.

Monday, July 21, 2008

டெல்லி

நேற்று முன் தினம் (17.7.08) முடிய வேண்டிய ஒரு வேலை சரியாக மாலை 3 மணிக்கு முடிந்தது ,அதன் தொடர்ச்சி டெல்லியில் இருப்பதால் அங்கு போகவேண்டிய ஆயத்தப்பணிகளை ஆரம்பித்தேன்.

முதன் முதலில் விமான டிக்கெட் விற்பனை தொடர்பாளரை தொடர்ப்புகொண்டேன்,அவர் மூலமே இன்றே கிளம்பவேண்டிய விமானத்தில் (இந்தியன்) மூலம் பதிவுசெய்துகொண்டேன்.இரவு 8 மணிக்கு விமானம் என்பதால் வீட்டைவிட்டு 6 மணிக்கு கிளம்பி சுமார் 6.45 க்கு காமராஜர் உள்நாட்டு முனையத்தை அடைந்தேன்.உள்நாட்டு முனையம் என்றாலும் பளபளப்புக்கு குறைவில்லாமல் இருந்தது. பயணிகள் போக்குவரத்தும் அதிகமாகவே இருந்தது.வழக்கம் போல் பல விமானச்சேவைகளும் காலதமதமாகவே சென்றுகொண்டிருந்ததன அது இந்தியனுக்கும் இருந்தது.ஒரு வழியாக பல நேர மாறுதலுக்கு பிறகு 9 மணிக்கு கிளப்பினார்கள்.

டெல்லியை அடைந்த போது இரவு மணி 11.30,முன்பதிவு முறைப்படி மகிழ்தூர்த்தியை (உபயம்:மக்கள் தொலைக்காட்சி) அமர்த்திக்கொண்டேன். முதல் ஆச்சரியம் இங்கிருந்து தொடங்கியது.நான் போக இருந்த RK Puram க்கு கட்டணம் 150 ரூபாய் தான் வசூலித்தார்கள்.சுமார் 13 வருடங்களுக்கு பிறகு டெல்லி போகிறேன்,ஹிந்தியுடன் இருந்த தொடர்ப்பு வெகுவாக இழந்திருந்தாலும் சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது.இந்த மாதிரி முன்பதிவு செய்திருப்பவர்களுக்கு வெளியில் தனிப்பாதை அமைத்து அங்கு அனுப்பிவைத்தார்கள்.அதன் முடிவில் ஒரு இளைஞன் அங்கிருக்கும் பைப்பின் மேல் உட்கார்ந்துகொண்டு உங்களுக்கு 7ம் எண் வண்டி என்றார். மினிவேன் ஒன்று அங்கு நின்றிருந்தது,ஆனால் அதன் ஓட்டுனரை அங்கு காணவில்லை.எனக்கு முன் வந்திருந்தவர்கள் கிளம்பி போய்விட்ட நிலையில் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு இளைஞன் வந்து என் எண்ணை கேட்டுவிட்டு போய்விட்டான். என்னசெய்வது என்றும் புரியவில்லை.இதற்கிடையில், எனக்கு முதல் வந்த பயணி போன இடத்தில் வந்து நின்ற ஒரு வண்டியின் ஓட்டுனர் என்னை வண்டியின் உள்ளே உட்காரச்சொன்னார்.கொஞ்சநேரம் கழித்து அங்குவந்த நபர் என்னுடன் மற்றவரை அழைத்து செல்லமுற்பட்டதையும் கண்டு அவரின் எண்ணத்தை அறிந்துகொன்டு மறுத்தேன்.வேறு வழியில்லாமல் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.

வழிநெடுகிலும் கட்டுமானத்துறையின் தடுப்புகளும் புதிதாக எழுப்பட்டுள்ள உயர்பாலங்களும் டெல்லியின் முகத்தை வெகுவாகவே மாற்றிவருகிறது. தடுப்புகள் அழகாக வர்ணம் பூசப்பட்டு என்ன வேலை (METRO) நடக்கிறது அதன் குத்தகைக்காரர் பெயரும் (AFCONS) பொறிக்கப்பட்டு இருந்தது.

என் வண்டி ஓட்டுனருக்கு வழி தெரியாத்தால் நான் தங்கப்போகும் என் உறவினரை கூப்பிட்டு அவர் மூலம் விளக்கி ஒரு வழியாக 12 மணிக்கு போய் சேர்ந்தேன்.சிறிது நேரம் பேசிவிட்டு தூங்கிவிட்டேன்.

மறுநாள் காலை விருந்தினர் வண்டி மூலம் UAE Embassy அடைந்தேன்,அப்போது வண்டி ஓட்டிய ஒரு சீக்கியருடன் பேசிக்கொண்டு வந்த போது கேட்ட/பார்த்த பல விஷயங்கள் ஆச்சரியப்பட வைத்தன.

1.தூய்மையான சாலைகள்

2.கேஸ் உபயோகிக்கும் ஆட்டோக்கள் (புகை இல்லவே இல்லை)

3.அழுக்கான பேருந்துகள் போன இடம் தெரியவில்லை.

4.பல சாலை ஓர குடிசைகள் எல்லாம் போயே போய்விட்டது.

5.விதிமுறையை மீறுபவர்கள் பலர் தண்டிக்கப்படுவதாகவும் அந்த ஓட்டுனர் சொன்னார்.

மொத்ததில் ஒரு ஒழுங்கு முறை கண்ணளவில் தெளிவாக தெரிந்தது.



என்னுடைய சான்றிதழை ஐக்கிய அரபு Embassy யில் முத்திரை குத்த அங்குசென்று சுமார் 15 பேரூக்கு பிறகு வரிசையில் நின்றேன். 9 மணிக்கு திறக்கும் என்று போட்டிருந்தது ஆனால் சுமார் 9.15க்கு தான் திறந்தார்கள். என் முறை வந்த போது என்னுடைய சான்றிதழை பார்த்துவிட்டு "நீ போய் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் முத்திரை குத்திக்கொண்டு வா" என்று சொல்லிவிட்டார்.

இவர்கள் இணைய பக்கத்தில் இளநிலை பட்டதாரிகளுக்கு இந்த முறை தேவையில்லை என்று போட்டிருந்ததால் நான் நேரிடையாக அங்கு சென்றேன்.இப்போது இது மற்றொரு வேலை.அமைச்சகம் என்றவுடனேயே பயம் தொற்றி க்கொண்டுவிட்டது.இது இன்னும் எவ்வளவு நாள் இழுக்கடிக்கப்போகிறதோ என்ற கவலையும் வந்தது.இந்த அமைச்சகம் எங்கிருக்கிறது என்று தெரியாதபட்சத்தில் வெளியில் நிற்கும் ஒரு முகவரிடம் கேட்டேன் அவரே ஆட்டோகாரர் ஒருவரை கூப்பிட்டு "படலா ஹவுசில்" கொண்டுவிடச்சொன்னார்.ஆட்டோகாரரிடம் பேரம் பேசும் நேரம் இதுவல்ல என்பதால் அவர் கேட்ட 70 ரூபாய்க்கு ஒப்புக்கொண்டு சென்றேன். பாதி டெல்லியை சுற்றிக்காண்பித்து சரியான இடத்தில் கொண்டுவிட்டார்.

இடையில் என் உறவினரை கூப்பிட்டு விபரங்கள் சொன்னேன்அவரும் தனக்கு தெரிந்தவர் மூலம் ஏதாவது செய்யமுடியுமா என்று பார்பதாக சொன்னார்.கையில் சான்றிதழ் இருப்பதை பார்த்த ஒருவர் தான் அதை செய்துதருவதாகவும் அதற்கு 200 ரூபாய் கொடுங்கள் போதும் என்றும் 11 மணிக்குள் முடிந்துவிடும் என்றும் சொன்னார்.நான் அங்குவந்த போது மணி சுமார் 9.45 அமைச்சக வேலையை முடித்து திரும்ப UAE Embassy க்கு திரும்பினால் தான் அவர்களிடம் என் சான்றிதழை கொடுக்கமுடியும் என்ற நிலை.இந்த பையன் சொல்லைக்கேட்டு அவனிடம் பேசிக்கொண்டே பக்கத்தில் உள்ள கட்டிடத்துக்கு அழைத்துச்சென்று ஒரு சிறு தெருவுக்குள் அழைத்தான்,அப்போது தான் உறைத்தது ஏதோ தவறு நடக்கிறது என்று.சற்று நின்று எதற்கு இங்கு கூட்டிப்போகிறாய்? என்றேன்.இல்லை பேசலாம் என்று திரும்ப அழைத்த போது நிர்தாட்சன்யம் காட்டாமால் நானே பார்த்துக்கொள்கிறேன் என்று திரும்பி நடக்கும் போது கண்ணில் பட்டது ஒரு போர்டு "BeWare of TOUTS".

கொஞ்சம் நடந்தவுடன் கண்ணில் பட்ட ஒரு போலிஸ்காரரிடம் இந்த வேலை செய்ய எங்கு போகவேண்டும் என்று கேட்டவுடன் அவர் சொன்ன இடத்துக்கு போனால் அங்கு 2 வரிசையில் ஆட்கள் நின்றுகொண்டிருந்தார்கள்.கடைசியில் நின்றுகொண்டிருந்த ஒருவரிடம் இந்த வரிசை எதற்கு? என்று கேட்டவுடன்,ஒன்று யுரோப்க்கும் மற்றது வேறு நாடுகளுக்கும் என்றார்.

மற்ற வரிசையில் சுமார் 25 பேர் நின்றிருந்தனர் அதோடு அதன் கதவுகள் 10 மணிக்கு தான் திறக்கும் என்றார்கள்.10 மணி ஆனதும் வரிசை நகர்வதாக தெரியவில்லை.நகர ஆரம்பித்த ரயிலில் ஏற வேண்டிய அவசரம் எப்படியிருக்குமோ அப்படி நின்றுகொண்டிருந்தேன்.சுமார் 10.15க்கு நகர ஆரம்பித்து என் முறை வந்தபோது 10.45 ஆகியிருந்தது.என்னுடைய சான்றிதழ் திரும்ப எப்போது கிடைக்கும் என்று கேட்டபோது

சாடே பாரா (12.30 மணி) என்று குண்டை தூக்கிப்போட்டார்.காற்று இறங்கிக்கொண்டு இருக்கும் பலூன் போல் ஆனேன்.ஆக மொத்தத்தில் இன்னும் 2 நாட்களுக்கு (சனி& ஞாயிறு) டெல்லியை விட்டு கிளம்பமுடியாது என்ற முடிவுக்கு வர ஆரம்பித்தேன்.

தொடரும்...

Tuesday, July 15, 2008

காணாமல் போகப்போகும் குழந்தை

இதன் நாட்கள் பல வருடங்களாகவே எண்ணப்பட்டுவந்தாலும் அவ்வப்போது இந்த மாதிரி வண்ணப்பூச்சு பூசி அதன் அழகை காட்டி அதன் நிலைத்தன்மையை காட்டிக்கொண்டு இருக்கிறது.

தியாகராய நகரில் தள்ளுவண்டிகளுக்கு பின்னால் ஒளிந்திருந்தது.

பேருந்து நிறுத்தும் இடம்!!

தைரியம் இருந்தால் இதனுள் இருந்துகொண்டு பேருந்துக்கு காத்திருக்கலாம்.

தில்லை கங்கா நகரில் இன்று காலை எடுத்தது.

பெரிதாக்கி பார்க்க அதன்மீது சொடுக்குங்கள்.

Friday, July 11, 2008

பாவம் நம் மக்கள்!!

சற்று முன் தி.நகர் பக்கம் போனேன்.முன்பகல் வேளை என்பதால் கூட்டம் குறைவாக இருந்தது.பனகல் பார்க்கை சுற்றி சென்னை சில்க்ஸ்க்கு மட்டுமே பிரத்யோகமாக உள்ள நிறுத்தும் இடத்தில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தியவுடன் கட்டணத்துக்காக அனுகியவுடன் அங்கிருந்தவர் வெளியேரும் போது எங்கள் கடையில் வாங்கிய ரசீதை மட்டும் காண்பியுங்கள் போதும் என்றார்.அட! நிறுத்தம் இலவசமா? என்று நினைப்புடன் வெளியேறினேன்.

மச்சினருக்கு வரப்போகும் திருமண நாளுக்காக ஏதாவது பரிசு வாங்கலாம் என்ற எண்ணத்துடன் கொஞ்சம் பக்கத்தில் இருந்த ரத்தினா ஸ்டோருக்கு போனோம்.என்ன வாங்கப்போகிறோம் என்று முன்னமே முடிவு செய்தபடியாமல் அதிகம் சுற்றாமல் நேராக அங்கு போய் இருந்த மின்சமைப்பானில் தரமான ஒன்றை எடுத்து பணம் கட்டிவெளியில் வந்தோம்.

என் கண்ணுக்குத்தான் படவேண்டுமா? இது.பக்கத்தில் நடக்கும் மேம்பால வேலைகள் முடிவடையும் நிலையில் பல பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்ததன.இதைச்செய்யும் நிறுவனம் Gammon India.அவர்கள் அலுவலகம் அந்த பாலத்தின் கீழேயே உள்ளது படம் பார்க்க.



பாலத்தின் முகப்பு (ரெங்கநாதன் தெரு பக்கம்)கீழே



பாலத்தின் பக்கவாட்டு காட்சி



இரு பக்கமும் உள்ள தடுப்புச்சுவர் (மாதிரி)



யார் அடிபட்டால் என்ன? வேலை முடிந்தால் சரி என்று எண்ணுகிறதோ "Gammon",ஆமாம் இதையெல்லாம் கட்டுப்படுத்த யாருக்காவது அதிகாரம் இருக்கா? இல்லை யாராவது தூங்குகிறார்களா?வேலையிட பாதுகாப்பு மிக மிக மோசம்.

உதாரணம் 1

முறையான தளம் இல்லாத வேலை...



உதாரணம் 2

உட்கார்ந்து இருக்கும் நபர்களுக்கு பாதுகாப்பு பட்டை எங்கே??



உதாரணம் 3

பெயின்டிங்க்,அதுவும் ஸ்பிரே பெயின்டிங்க் அடிக்கும் இடத்தை சுற்றி தடுப்பு ஏற்படுத்தி அதில் வெளியாகும் துகள்கள் வெளியேறாமல் கட்டுப்படுத்த வேண்டும் அது சுத்தமாக இல்லை,அந்த வழியே போகும் பொதுமக்களை பார்க்கும் போது மிக கஷ்டமாக இருந்தது.இது கூட தெரியாத இவ்வளவு பெரிய நிறுவனத்துக்கு குத்தகையை கொடுத்துவிட்டு தூங்கும் அதிகாரிகளை என்னவென்று சொல்வது.


யாராவது பொது நல வழக்கு போட்டு நீதிமுன்பு நிறுத்தவேண்டும்.

ஆறுதலான செய்தி: இந்த மேம்பாலம் இந்த வருடத்துக்குள் திறக்க இருப்பதாக திரு ஸ்டாலின் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கார்.

Saturday, July 05, 2008

துபாய் பதிவுகள்.

இதற்கு முந்தைய பதிவு இங்கே.

சரி நமக்கு துபாய் சான்ஸ் அடிக்கப்போகிறது என்ற நினைப்பில் விபரங்கள் தேட.... முதலில் ஞாபகத்துக்கு வந்தது நமது வலைப்பதிவுகள் தான்.

ரொம்ப நாட்களுக்கு முன்பு யாரோ ஒருவர் துபாய் பற்றி எழுதிய பதிவு ஞாபகத்துக்கு வந்தாலும் பெயர் ஞாபகம் வரவில்லை.
லொடுக்கா?
சுல்தான் பாயா?
குசும்பனா?
அபி அப்பாவா?
இம்சை அரசியா? அல்லது
ஜெலிசாவா? என்று குழம்பி கூகிளில் தமிழில் தேடினேன்.
என் தேடலுக்கு சரியான ஆளை கூகிள் அடையாளம் காட்டவில்லை அதன் இரண்டாவது பக்கம் வரை.

துபாயைப் பற்றி முதன் முதலில் நான் படித்த பதிவு இது தான். அன்பர் லொடுக்கு பாண்டியோடது. :-) ஜீன் 27 (2007) யில் போட்ட பதிவு.

அதன் பிறகு ஒவ்வொன்றாக வந்தது.

யாராவது பெயர் விட்டுப்போயிருந்தால் அடிக்காமல் இருக்க இங்கே பாருங்க,மொத்தமாக இருக்காங்க.

வல்லியம்மாவையெல்லாம் கணக்கில் எடுக்கமுடியாது. :-))

என்னுடைய முதல் நேர்காணலின் போது ஓரளவு பேசிமுடித்திருந்தாலும்,சம்பள விஷயத்தில் முடிவாக முடிவெடுக்கவில்லை,அதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.இது ஞாபகம் வந்ததும் அதன் தொடர்பில் உள்ள விபரங்களை தேடினாலும் ஒன்றும் சுலபமாக இல்லை.துபாயை பற்றிய அவ்வளவு நேர்த்தியான விபரங்கள் இணையத்தில் எனக்கு கிடைக்கவில்லை.

இதற்கிடையில் சில உறவினர்கள் அங்கு வசிப்பதாகவும் அவர்கள் மின்னஞ்சல் முகவரி கிடைத்து அதன் மூலமும் சில உபயோகமான விபரங்கள் கிடைத்தது.அவற்றில் சில..

What type of accommodation is available for single or family type and range of rents?What are the conditions?

You get sharing accomodation for bachelors, or you could share a single room some family if you wish to take a whole room. bachelors are not permitted to rent a whole house. the rent ranges from 1500 for sharing a room with two others or between 3000 to 3200 for renting a single room in a decent place in dubai. if you could move to sharjah, the rent is comparitively cheaper but the travel time is more. you do not have any public transport from sharjah to places in dubai.

Utility and other expenses.Is veg food available widely?(Singapore conditions are different)

It depends on the individual taste and requirements. one time southindian meal at saravana bhavan would cost you AED 12.00 this i am giving you to get some idea. i feel anything between 1000 and 1200 should be more than enough for your utility and food expenses.
telephone is one of the major cost here.

Transportation costs

If you know diriving and if you could get your licence (it is very difficult and time consuming and expensive) travelling cost is less, depending upon where you are going to stay and where you are going to work. public transport is not much in use.

Reg. visa,should look for any specific clarification?

Is it a work permit / residence visa or temporary work permit visa please note that if it is a residence visa, and if you need to cancel the visa or transfer the visa, you can do it on payment of AED 5500 + other documentation charges. now you let me know what is your status in Singapore .is this posting for a short period or a permanent in nature.

In general,what else benefits can I expect?

Please check in what currency you are going to be paid here in Dubai as on a personal note, do not accept your payment in Dollors as the value is depreciating day by day. If they can pay you in Euros, it is the best.secondly, if you can ask your employer to provide you family status bachelors accomodation, it would be most suited to you as then you would not have much problem of renting a house which is the most expensive thing in dubai.
please ensure you get family status in your visa or else getting your family makes all the more difficult.

ஓரளவுக்கு என்னுள் எழுந்த சந்தேகங்கள் இதனால் நிவர்த்தியடைந்தது.இன்னும் விபரங்கள் தேவையென்றால் கீழே உள்ள சுட்டிகளை சொடுக்குங்கள்,தமிழில் விபரங்களாக இருக்கு.கொடுத்த நம் பதிவர்கள் அனைவருக்கும் நன்றி.

கலைவாணி
ஜமாலன்
குசும்பு
சுல்தான் பாய்


சரி, என் கதைக்கு அடுத்த பதிவில் வருகிறேன்.