Thursday, July 30, 2009

விபத்து ஒரு சாபக்கேடு.

எல்லா துறைகளிலும் விபத்துக்கள் இருந்தாலும் கட்டுமானத்துறையில் விபத்து என்பது அன்றாட நிகழ்வு.எப்போது வேண்டுமானலும் வரலாம்.

சிங்கயில் அதுவும் கட்டுமானத்துறை மற்றும் கப்பல் கட்டும் துறையில் விபத்துகளும் போட்டி போட்டுக்கொண்டு இருக்கும்.அதை எப்படியெல்லாம் குறைப்பது என்று நிஜ அக்கறையுடன் இங்குள்ள தொழிலாலர் அமைச்சு மற்றும் பல அமைச்சுகளும் சேர்ந்து அக்கு வேறு ஆணி வேறாக யோசித்து பலவற்றை செய்தார்கள்.வரிசைப்படுத்தி பார்ப்போமா..
1.முக்கியமாக வேலைக்கு வரும் தொழிலாளிக்கு அந்தந்த நாடுகளின் துணையுடன் அவர்களுக்கு குறிப்பிட்ட வேலைக்கு என்று பிரித்து Training கொடுத்தார்கள்.
2.PPE என்று சொல்லக்கூடிய Personal Protective Equipment ஐ ஆதாவது முக்கியமாக ஹெல்மெட்,ஷூ மற்றும் பாதுகாப்பு பட்டை/வார்.இதைத்தவிர குறிப்பிட்ட வேலைக்கு தேவையான மூக்குக் கண்ணாடி,Nose Flter என்று பல சாதனங்களை கொடுப்பது அத்தியாவசிமாக்கியது.
3.வேலை செய்யும் இடத்துக்கு போய் வர சரியான படிகள்/ஏணிகள்.
4.சரியான தகுதியுடன் வேலை செய்யும் கிரேன் ஓட்டுனர் மட்டும் அவர்களுக்கு உரிய தகவல்களை கொடுப்பவர்களுக்க்கு தேவையான தகுதி என்று பல அடுக்கு ஆட்களை நிறுவியது.
5.மிக முக்கியமாக ஒப்பந்தக்காரர்களை, ஏற்படும் விபத்துக்கு Responsibility யாக்கியது.
6.எல்லாவற்றையும் விட வேலை செய்யும் இடம் பாதுகாப்பாக இல்லாமல் இருந்தால் அமைச்சுக்கு இலவசமாக தொலைப்பேசி தொடர்பு ஏற்படுத்தி,யார் வேண்டுமானாலும் தகவல் சொல்லலாம் என்ற நிலையை ஏற்படுத்தியது.

இதோடு நில்லாமல் தொழிலாளர்கள் கூடும் பொது இடத்தில் கீழ்கண்டவாறு சுவரொட்டிகளை ஒட்டி வேலைக்கு வந்த நம்மை பத்திரமாக திருப்பி அனுப்ப எடுக்கும் நடவடிக்கைகளை எடுக்கும் இந் நாட்டு மக்களை/அரசாங்கத்தை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.





இவ்வளவு செய்தும் இதுவரை மனித இழப்பு இல்லாத சூதாட்ட விடுதி கட்டுமான வேலையில் போனவாரம் ஒருவர் உயிரிழுந்தது மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது.

Wednesday, July 29, 2009

எனக்கு இது புதுசு!!

இது வரை என்னுடைய அனுபவத்தில் இப்படிப்பட்ட கான்கிரீட்டை முட்டுக்கொடுக்க இரும்பு பீமை உபயோகப்படுத்தியதில்லை.முதன் முறையாக பார்த்த போது “பக்” என்று இருந்தது.

இது எங்க எடுத்தது தெரியுமா? சமீபத்தில் பாலம் இடிந்து விழுந்ததே டெல்லியில், அங்கு தான்.கொடுமையிலும் கொடுமை அந்த கான்கிரீட் உள்ளே உள்ள இரும்பு கம்பிகளின் நீளம் தகுந்த standard படி இல்லாமல் இருந்தது அதோடு அந்த Column மும் அந்த தாங்கும் கான்கிரிட்டுக்கு இடையில் விரிசல் விழுந்ததும் முறையாக கவனிக்காமல் அதை Grout முறையில் பூசிவிட்டு வேலையை தொடர்ந்தது என்று பல குளறுபடிகள்.
படிக்கப் படிக்க குமுறுகிறது.





இடிந்ததால் இந்த பலவீனங்கள் தெரிகிறது வண்டி விட்ட பிறகு நடந்தால்!!! நம் மானம் கப்பலில் ஏறாமல் நீர்மூழ்கி கப்பலில் தான் ஏறும்.ஆண்டவா,அப்படி நடக்காமல் இருக்கனும்.

காட்டுக்குள் நடை

இன்னும் சில வருடங்களில் சிங்கைக்குள் நடப்பது காட்டுக்குள் நடப்பது போலாகிவிடும் போல் இருக்கு.இப்போது பெரிய பெரிய மரங்களுக்கு நடுவில் இருக்கும் இடத்தில் கூட புதிய அல்லது சிறிய பூஞ்செடிகளை நட ஆரம்பித்துவிட்டார்கள்.
கீழே உள்ள படம் நான் தினசரி மெது நடை போகும் இடம்.



கீழே உள்ள படத்தை பாருங்கள் வேகப்பாதைக்கு அருகில் இருக்கும் சாய்வு பகுதியை கூட வீணாக்காமல் மரக்கன்றை வைக்கிறார்கள்.



இப்படி வைப்பதால் என்னவோ மூன்று நாட்களுக்களுக்கு ஒரு முறையாவது மழை வந்துவிடுகிறது போலும்.

Tuesday, July 28, 2009

என்ன ஆயிற்று ஃபயர்பாக்ஸுக்கு!!

என்ன ஆச்சு என்று தெரியவில்லை இந்த பயர்பாக்ஸுக்கு.. கீழே உள்ள படத்தில் பாருங்க,படம் மற்றும் நகர் படம் ஏற்ற தொடுப்புக்கே வழியில்லாமல் இருக்கு.



எனக்கு ஞாபகம் இருந்த வரையில் வெர்ஷன் 3.5 யில் இருந்து 3.5.1 மாற்றிய போது தான் இந்த மாதிரி ஆகியிருக்கோமோ என்று தோன்றுகிறது.உங்களில் யாராவது இம்மாதிரி பிரச்சனையை உணர்ந்திருக்கிறீர்களா?

இப்போது நம்ம IE வை பார்ப்போமா?


படம் ஏற்ற வழியிருந்தாலும் ஏற்றும் போது ஏதோ பிழைச்செய்தி காண்பிக்கிறது ஆனால் படத்தை ஏற்றிவிடுகிறது.

கூகிளில் அலசியவரை குக்கிஸை நீக்கச்சொல்லி தான் போட்டிருக்கு,வழி தெரிந்தவர்கள் சொல்லவும்.ஃப்யர் பாக்ஸை நீக்கி பிறகு புதிதாக நிறுவியும் பார்த்துவிட்டேன் ,பிரயோஜனம் இல்லை.

Friday, July 24, 2009

தீராத தாகம்.

சிங்கை நூலக மாற்றங்களை பற்றி சொல்லனும் என்றால் சொல்லிக்கொண்டே போகலாம்.நான் வந்த 1995 வருடங்களில் சில நூலகங்களே இருந்தது.எனக்கு வேலை அதிகம் என்பதால் அப்போது அந்த பக்கமே போக முடியாமல் இருந்தது.என் மனைவி வந்ததும் நாங்கள் இருந்த இடத்துக்கு பக்கத்தில் நூலகம் இருந்ததால் அவரது நண்பி மூலம் அட்டை வாங்கி எனக்கும் வாங்கிக்கொடுத்தார்கள்.அபோதெல்லாம் ஒருவருடைய அடையாள அட்டையை காண்பித்தால் போதும் உருப்பினர் அட்டை கொடுத்து வந்தார்கள். அந்த கால கட்டத்தில் ஒரு உருப்பினருக்கு 2 புத்தகங்கள் தான் அதுவும் ஒரு வாரத்தில் கொடுத்துவிடவேண்டும்.எங்களுக்கு கிடைக்கும் 4 புத்தகங்கள் அவரின் வீட்டுத்தனிமையை போக்கியது.அதன் பிறகு மகனுக்கும் உருப்பினர் அட்டை கிடைத்தது அதன் மூலம் மேலும் இரண்டு புத்தகங்கள் வந்தது.இவ்வளவையும் ஒரு வாரத்தில் முடிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.

சிங்கையில் சில நூலகங்களே இருந்ததால் நாங்கள் வீடு வாங்கி போன ஈஷூன் வட்டாரத்தில் அப்போது நூலகம் இல்லாமல் இருந்தது கொஞ்ச நாட்களுக்கு கொடுமையாக இருந்தது.இதற்கிடையில் ஒரு உருப்பினருக்கு இரண்டு புத்தகம் என்பதில் இருந்து நான்கு புத்தகமானது. அதே சமயம் ஈஷீன் வட்டாரத்தில் புதிய நூலகம் திறந்தார்கள் அதுவும் முதல் மாடியில்.படிகள் மூலமே மேலே போகனும் லிப்ட் வசதி இருந்தால் உடற்குறை உள்ளவர்கள் கூட வர ஏதுவாக இருந்திருக்கும்,ஏனோ அதை திட்டமிடவில்லை. சில சமயம் என் மகன் 8/10 வின்வெளி புத்தகங்களாக எடுத்துவந்துவிடுவான்.அந்த காலத்தில் அதன் மீது மோகம் அதிகமாக இருந்தது.

நான் துபாய் போவதற்கு முன்பு வரை (8 மாதங்களுக்கு முன்பு) நான்கு புத்தகங்கள் மட்டுமே எடுக்கமுடியும்.துபாயில் இருந்து திரும்பி வந்த பிறகு நூலகம் போனால் உறுப்பினர்களுக்கு நான்கு புத்தகங்கள் கூட இரண்டு சிடி யும் கொடுக்கப்படும் என்று போட்டிருந்தார்கள்.ஆச்சரியாக இருந்தது.

வட்டு கிடைக்குது என்றவுடன் அந்த பக்கத்தில் ஏதாவது உபயோகமாக கிடைக்குது என்று மேய்ந்துகொண்டிருக்கும் போது இந்த வட்டு கிடைத்தது.ஆதாவது கணினி மொழியான “C" சொல்லிக்கொடுப்பது பற்றி அதுவும் தமிழில் என்று போட்டிருந்தது.இந்நேரத்தில் C யா? படிச்சி என்ன செய்யப்போகிறோம்? என்ற பலவித எண்ணங்களுக்கிடையே எடுத்துவந்தேன்.18 மணி நேர DVD வட்டு என்று பார்த்தவுடன் கொஞ்சம் அயர்சியாக இருந்தது.பார்க்க ஆரம்பித்தவுடன் தினமும் 1 மணி நேரம் அதற்கு ஒதுக்கவேண்டிய கட்டாயமாகி விட்டது.




மதுரையை சேர்ந்தவர்கள் இந்த வட்டை ரூபாய் 390 க்கு வெளிட்டுள்ளார்கள்.மதுரை தமிழுடன் கூடிய ஆங்கில வார்த்தைகள் இடையே வந்தாலும் முழுவதும் தமிழில் படிப்பதாக எனக்கு தோன்றியது.அருமையான விளக்கங்களுடன் சொல்லியுள்ளார்கள்.390 ரூபாய் கண்ணை மூடிக்கொண்டு கொடுக்கலாம்.என்னை மாதிரி அல்லது புதிதாக கற்றுக்கொள்ளும் ஆர்வலர்களுக்கு இந்த வட்டு மிக மிக அத்தியாவசியமானது.




இந்த கணினி மொழியை கற்றுக்கொள்ளும் ஆர்வம் அவ்வப்போது வந்து போனாலும் இம்முறையே ஓரளவு கற்றுக்கொண்டதாகவே நினைக்கிறேன்.இவை அத்தனையும் தினசரி வேலையில் இருந்தால் மட்டுமே ஞாபகத்தில் இருக்கும் என்று தோனுகிறது.சிங்கையில் இருப்பவர்கள் மற்றும் ஆர்வலர்கள் கட்டாயம் பார்க்கவும்.

தனித்து ஆடுவது ஏன்?

அன்று ஒரு நாள் அலுவலகம் முடித்து வீட்டுக்கு திரும்பும் நேரத்தில் ஒரு அரச மரத்தை தற்செயலாக காண நேரிட்டது அதில் ஒரு சில இடங்களில் உள்ள இலை மட்டும் ஆடிக்கொண்டிருந்தது. காற்றென்னவோ அவ்வளவாக இல்லாத நேரத்தில் அதெப்படி ஒரிரு இலைகள் மட்டும் ஆடுகின்றன என்ற கேள்வி என்னுள் எழுந்தது.கேள்விக்கு பதில் தேடும் நேரத்தில் அதை நகர் படமாக பிடிக்கும் எண்ணம் ஏற்படவில்லை.கேள்விக்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை.தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

தினமும் வேலை முடிந்து வந்த பிறகு சுமார் 45 நிமிடம் நடை பயிற்சி என்று வகுத்துக்கொண்டு போய் வருகிறேன்.நேற்று அப்படி போகும் போது என்னை கடந்து ஒருவர் இப்படி போனார்.சட்டை போட மறந்துவிட்டாரோ என்னவோ!! இதெல்லாம் இங்கு அதிசியம் இல்லை என்றாலும் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று பிடித்துவைத்துக்கொண்டேன்.

From கட்டுமானத்துறை


இன்று நடை பயிற்சி போகும் போது சட்டென்று கண்ணில் பட்டவும் பிடித்துவிட்டேன்.இதிலும் பாருங்கள் ஒரு இலை மட்டுமே ஆடுது.இதற்கென்ன காரணம்?

Monday, July 13, 2009

திருமுருக கிருபானந்த வாரியார்

நான் சிறுவனாக இருந்த காலத்தில் பல கதாகாலாட்சேபங்கள் நாங்கள் தங்கியிருந்த தெருவில் நடக்கும்.தெருவை அடைப்பது ஒன்றும் பெரிய விஷயமாக இருக்காது.தெருவின் ஒரு மூலையில் நாலைந்து பெஞ்ச் போட்டால் முடிந்தது.இப்படிப் பட்ட மேடைகளில் தான் திரு கீரன் போன்றோர்கள் பேசிக்கேட்டிருக்கேன்.பல சம்ஸ்கிருத பாடல்களை கேட்டு கேட்டே ஓரளவுக்கு அம்மொழியின் பரிட்ச்சயம் ஏற்பட்டது.இப்படி ஏற்பட்ட பரிட்சயம் மற்ற மாநிலங்களில் வேலைக்கு போகும் போது அம்மொமி திறன் விரைவாக வந்தது.

இப்படி கேட்ட சம்ஸ்கிருத பாடல்கள் மூலம் மந்திர சொற்கள் கூட காதில் விழுந்திருக்குமோ என்னவோ அதன் பலனாக இன்று வரை பெரிய பிரச்சனை என்று மாட்டாமல் வாழ்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

1970 களில் நாகைக்கு வந்த திருமுருக கிருபானந்த வாரியர் சொற்பொழிவையும் கேட்டுள்ளேன்.நாகை உயர் நிலை பள்ளிக்கு அருகில் ஒரு வீட்டில் தான் தங்கியிருந்தார்.அவரைக்காண காலை அந்த வீட்டுக்கு போன போது அவர் பூஜை செய்யும் காட்சியும் காணக்கிடைத்தது அதெல்லாம் இப்போது புகை மூட்டத்தில் பார்ப்பது போல் மெலிதாக ஞாபகம் இருக்கு.மைக் இல்லாத காலக்கட்டத்தில் இவர் வந்ததால் குரலும் கூட்டத்தின் கடைசி நபருக்கும் கேட்கும் விதத்தில் இருக்கும்.அவ்வப்போது கேள்வி கேட்டு சரியாக பதில் சொல்லும் குழந்தைகளுக்கு பரிசும் கொடுப்பார்.அப்படிப்பட்டவரை மறுபடியும் காண ஒரு விசிடி கிடைத்தது.இதில் இராமகிருஷ்ணர் பற்றி பேசுகிறார்.அதில் இருந்து ஒரு சிறிய காட்சி உங்களுக்காக ஏற்றியிருக்கேன்.பார்த்து மகிழுங்கள்.



திடிரென்று ஏறும் குரல் கூட்டத்தில் யாராவது தூங்கிக்கொண்டிருந்தால் மறுபடியும் தூக்கம் வராதமாதிரி செய்துவிடும்.

நன்றி: இதை விசிடி யாக போட்டவர்களுக்கு.

Saturday, July 11, 2009

முஸ்தாபா நீளுகிறது

சிங்கை இந்தியர்களின் ஒரு மைல் கல் என்றால் “முஸ்தாபா” கடை தொகுதிக்கு கட்டாயம் ஒரு இடம் இருக்கும்.இந்நாட்டின் பிரதமரே தேசிய தின உரையில் சொல்கிறார் என்றால் அதன் பிரபல்யம் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.ஒரு சின்ன இடம் என்று ஆரம்பித்த கடை இன்று ஒரு தெருவைத்தாண்டி அடுத்த தெருவையும் தாண்டிப்போய் கொண்டிருக்கிறது.வெளியூரில் இருந்து வருபவர்கள் அனைவரும் செல்ல விரும்பும் கடைத்தொகுதியாக விளங்கி வருகிறது முஸ்தாபா.

போன வாரம் அந்த பகுதிக்கு போய்கொண்டிருக்கும் போது கடந்த ஒரு வருடமாக நடந்து வரும் இந்த கட்டுமானத்தொகுதி பக்கம் பார்க்க நேர்ந்த போது கண்ணில் பட்டது இப்பணி முஸ்தாபாவுக்காக நடக்கிறது என்று தெரிந்தது.

இப்போது போனாலே அரை நாள் உள்ளே இருந்தாலும் போத மாட்டேன் என்கிறது அதோடு இதுவும் சேர்ந்துக்கொண்டால் ஒரு முழு நாளும் போவதே தெரியாது.

Mustafa

Mustafa

இப்போதெல்லாம் கான்கிரீட்டுக்கு பதில் அதிகமாக இரும்பை உபயோகிப்பதை இக்கட்டுமானத்திலும் காணலாம்.மணல் தட்டுப்பாட்டை இப்படி கட்டுவதன் மூலம் ஓரளவு இதனை சார்ந்திருப்பதை தவிர்க்கலாம்.

Saturday, July 04, 2009

மதுரை பயணம்

கோடை விடுமுறைக்கு கொடைக்கானல் போன முடிவு செய்யும் போதே திரும்பி வரும் வழியில் "பாசக்கார மக்ககளின்" தலைநகரான மதுரையையும் சுற்ற வேண்டும் முடிவு செய்திருந்தோம்.பதிவர்கள் திரு சீனா & திரு தருமி போன்றோர்கள் ஞாபகம் வந்தாலும் சரியான நேரம் சொல்ல முடியுமா என்ற தயக்கத்தில் சொல்லாமல் விட்டுவிட்டேன்.
கோவியாரின் பதிவு இங்கு.

இரவு சென்னையை விட்டு கிளம்பி விடியற்காலை 4.15க்கெல்லாம் மதுரை வந்துவிட்டோம்.பயண முகவரின் ஆள் வண்டி நிற்கும் பிளாட்பாரத்துக்கே வந்து சந்தித்து அழைத்துச்சென்றார்.மதுரையில் பிளாட்பாரம் டிக்கெட்டெல்லாம் கிடையாதா?மக்கள் ஏதோ கடைத்தெருவுக்குள் வந்து போவது போல் தோன்றியது.மதுரை மண்ணை மிதிக்கும் போதே ரயில் நிலையத்தில் இருக்கும் மரத்தில் இருந்து குயிலின் குரல் வரவேற்றது.விடியற்காலை என்பதால் அதன் சத்தமும் அதிகமாகவே கேட்டது.

ஸ்டே ஷனில் சந்தித்தித்த முகவர் எங்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த மகிழுந்து ஓட்டுனரிடம் ஒப்படைத்து விட்டு சென்றார்.அங்கிருந்து எங்களை அவர் தான் கொடைக்கானலுக்கு அழைத்துச்செல்ல வேண்டும்.மதுரையில் இருந்து கொடைக்கானல் எப்படியும் 3.5 மணி ஆகும் என்பதாலும் மற்றும் எங்கள் Check-in நேரம் மதியம் 12 மணி என்பதாலும் அவ்வளவு அவசரம் காட்டவில்லை.மதுரையிலேயே ஒரு கடையில் நிறுத்தி டீ/காபி அருந்திவிட்டு கிளம்பினோம்.என்ன தான் தாமதமாக கிளம்பினாலும் கொடைக்கானலுக்கு வந்து சேரும் போது மணி 9 தான் ஆகியிருந்தது.ஹோட்டல் எங்களுக்கு உடனே அறையை ஒதுக்கிக்கொடுத்தது.கொடைக்கானல் படங்கள் இங்கே.

3 நாட்கள் கொடைக்கானலை அனுபவித்த பிறகு காலை 8 மணிக்கு அங்கிருந்து கிளம்பி கொடைக்கானல் நோக்கி பயணப்பட்டோம்.மலை இறக்கம் முடிந்த பிறகு மகிழுந்து உள்ளே ஏர்கான் போட்டால் வேலை செய்யவில்லை,ஏதோ பிரச்சனை.ஓட்டுனர் யாரிடமோ பேசினார் ஆனால் பிரச்சனை சரியாகமலேயே பயணத்தை தொடர்ந்தோம்.

முதலில் திருப்பரங்குன்றம் போனோம்.கோவிலின் வெளியில் காலை கீழே வைக்கமுடியாத அளவுக்கு 11 மணி வெய்யில் தகித்தது.கோவிலின் ஸ்பெசல் தரிசனத்திலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த்தது.எனக்கு பக்கத்தில் இருந்த ஒரு பெரியம்மா முருகன் பாடல்களை மனமுருகி பாடிக்கொண்டிருந்தார்.தரிசனத்தை முடித்த போது சாப்பாட்டு வேளை வந்துவிட்டது.சாப்பிட்ட பிறகு அடுத்த இடம் “திருமலை நாயக்கர் மஹால்”. மேம்பாட்டு வேலைகள் நடந்துவருவதால் ஒரு நல்ல இடத்தை பார்த்த அனுபவம் கிடைக்காமல் போனது.இதன் முழு அளவை அங்கு எழுதிவைத்திருப்பதை பார்த்ததும் இப்போது இருக்கும் அளவு மிகவும் சிறியதாகப்பட்டது.சுமார் 400 வருடங்கள் பழமையான கட்டிடம்.

அடுத்து போன இடம் காந்தி மியூசியம்.சுமார் 2 மணி நேரம் பொழுது போனது அங்கு.பல அரிய புகைப்படங்கள் பார்க்க முடிந்தது.Round Table Conference படத்தில் காந்தி முகத்தை யாரோ கிழித்து வைத்திருக்கார்கள்,இதே போல் சுபாஸ் சந்திர போஸ் முகமும் ஒரு படத்தில் குடையப்பட்டுள்ளது.சுற்றுலாப்பயணிகள் சிலரே வருகின்றனர்.

கடைசியாக மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம்.மாலை 5.30 மணிக்கு தான் தரிசனம் கிடைக்கிறது அதனால் 4 மணிக்கு போய் வரிசையில் நிற்கவேண்டிய அவசியமில்லை.

பல காலங்களாக வலைப்பக்கங்களை படித்து வருவதாலும் நான் எழுத ஆரம்பித்த நாட்களில் பிரபலமாக இருந்தவர்களில் ஒருவர் “கால்கரி சிவா” எழுதிய ஜிகர்தண்டா பதிவு அப்போது ஞாபகத்தில் இருந்ததாலும் எங்கள் ஓட்டுனரிடம் சொல்லி இந்த கடையில் சாப்பிட்டோம்.வேறு நல்ல கடை இருக்குமோ என்னவோ! டேஸ்ட் என்னை அவ்வளவாக கவரவில்லை.

மிக முக்கியமாக, எப்போதே எழுதிய என் நண்பனின் முகவரியை வைத்து கண்டுபிடிக்கலாம் என்று போய் அந்த சாலையை பார்த்து அந்த எண்ணத்தை கைவிட்டுவிட்டேன்.அது முடியாமல் போனது கொஞ்சம் வருத்தம் தான்.

ஓரளவு சுற்றிய பிறகு சாலை ஓர கடையின் டேஸ்டையும் பார்த்துவிடலாம் என்றாலும் அதுவும் முடியாமல் போனது.

படமாக போட்டுக் கொல்லாமல் நகர் படமா கொடுத்துள்ளேன் பார்த்து மகிழவும்.