Friday, May 26, 2006

இரண்டாவது வேலை.

Tambaram siteயில் (கட்டுமான வேலை நடைபெரும் இடத்திற்கு பெயர் Site என்போம்) இருந்த எனது மேலதிகாரிக்கு தேனீர் என்றால் உயிர் போலும்,20 நிமிடங்களுக்கு ஒருமுறை குடித்தே ஆகவேண்டும்,ஆனால் எனக்கு ஒரு நாளைக்கு 2 தடவை மாத்திரம் தான்.இது எனக்கு நானே விதித்துக்கொண்ட கட்டுப்பாடுகள்.

அவருக்கு நல்ல மனது,தான் எப்பொழுதெல்லாம் Tea குடிக்கிறாறோ அப்பொழுதெல்லாம் நமக்கும் சேர்த்து Order செய்துவிடுவார்.அதற்கு காசும் கொடுக்கவிடமாட்டார்.இப்படித்தான் முதல் வலை சுற்றப்படும்,இப்படியே உங்கள் Charactorம் அளக்கப்படும்.1 வாரம் பார்த்தேன்,கண்டதை கொட்டிவைக்க என் வயிற்றில் இடம் இல்லை என்பதால்,அவரிடம்,ஸார்,என்னுடைய லிமிட் ஒரு நாளைக்கு 2 தான் அதனால் தயவுசெய்து எனக்கு இனிமேல் Tea order செய்யவேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.நான் சொன்னவிதமோ,இடமோ அவரை காயப்படுதியிருக்க வேண்டும்.கொஞ்சம் கொஞ்சமாக உறவுகள் தேயத்தொடங்கின.என்னை கயட்டி விட காரணங்களை தேடத்தொடங்கிருந்தார்.

இபபடியே ஒடிக்கொண்டிருந்த நாட்களில் ஒரு நாள் நான் cycle இல் வந்துகொண்டு இருக்கும்போது,எங்கள் site contractor ஒரு வண்டியில் சிமிண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு எங்கோ போய்கொண்டு இருந்தார்.என்னைப்பார்த்ததும் அவருக்கு கொஞ்சம் "திக்" என்றிருந்தது.விஜாரித்ததில் அவை நான் வேலை பார்க்கும் இடத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது தெரிந்தது.இது நடந்தது ஞாயிறு ஆதலால் மறுநாள் எனது அதிகாரியிடம் சொன்னேன்.அவரும் Godown போய் stockஐ சரி பார்க்கச்சொன்னார்.கணக்கு சரியாக இல்லை.மற்றும் இதைச்செய்யச்சொன்னதே அந்த அதிகாரிதான் என்றார்கள்.இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
உறவுகள் விரியத்தொடங்கியது.அவருக்கு ஒரு புதிய எதிரி இருப்பதாக நினைக்கத் தொடங்கினார்.பழிவாங்கும் பகுதிகள் மறைமுகமாகத் தொடங்கியது.வேறுவழி தெரியாமல் யாரோ கொடுத்த Ideaப் படி அவருக்கு மேல் உள்ள அதிகாரிஐ பார்த்துச் சொன்னால் ஏதாவது விமோசனம் கிடைக்கும் என்று அவரிடம் சொன்னேன்.

அவரும் பொறுமையாக நடந்ததெல்லாம் கேட்டுவிட்டு ஆவன செய்வதாக கூறினார்.
சில நாட்கள் கழிந்த பிறகு அவர் சொன்ன சொல்லை காப்பாற்றி என்னை பக்கத்தில் உள்ள இன்னொரு Site க்கு மாற்றினார்கள்.

இங்கு இருந்த Assistant Engineer (திரு.நாரயணசாமி) மற்றும் Technical Assistant (திரு.ஜெகன்நாதன்)ம் எனக்கு மிகவும் உதவினார்கள்.இவர்கள் இல்லாமல் இருந்தால் இன்று அந்தக்குட்டையில் மூழ்கிருப்பேன்.காப்பாற்றியதற்கு நன்றி.நன்றி.

ஒரு நாள் திரு.ஜெகன்நாதன் என்னைப் பார்த்து இந்த வேலை உனக்கு சரிப்பட்டு வராது, ECC என்ற Companyயில் ஆள் எடுக்கிறார்கள்,Apply செய்துபாரேன் என்றார்.
இங்கிருந்து எப்படியாவது தப்பித்தால் போதும் என்ற நோக்கத்துடன் apply செய்தேன்.இதற்கிடையில் மற்ற இடங்களுக்கும் Try செய்தேன்.அப்படி போன இடத்தில் நடந்த சுவாரஸயமான விவரம்....
அடுத்த பதிப்பில்...

No comments: