Thursday, January 11, 2007

Jump பார்ம்

இங்கு கட்டப்பட இருந்த சிமினி 120 மீட்டர் உயரம் ஆனால் இதை கட்டவேண்டிய முறை நாங்கள் மேட்டூரில் செய்தது போல் இல்லை.

இங்கு உபயோகித்த முறைக்கு ஜம்ப் பார்ம் என்று பெயர்.

மாதிரி படம் இங்கே.

Photobucket - Video and Image Hosting

நன்றி:Fabquip

சுருக்கமாக..

கீழிருந்து மேலே போகப்போக மத்தியில் ஒரு இரும்பு சாரம் இருக்கும்.இந்த சாரத்தின் ஒரு பகுதியில் ஏணிப்படிக்களுக்கும் மற்றொரு பகுதியில் சாமான்கள் ஏற்றி இறக்க பாரம் தூக்கிக்கும் ஒதுக்கப்பட்டு இருக்கும்.

மின்தூக்கி நிறுவ தேவையான இடம் உள்ளே இல்லாததால் மேற்பார்வையாளர் முதல் தொழிலாளி முதல் இந்த ஏணிப்படியை தான் உபயோகிக்க வேண்டும்.
ஒரு நாளில் 2 முறை மேல் போய் வருவதற்குள் தாவு தீர்ந்துவிடும். ஆரம்பத்தில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்கு கஷ்டம் தெரியாது.

நாங்கள் பண்ண விதம்..

Photobucket - Video and Image Hosting

இந்த வேலை நடந்துகொண்டிருக்கும் இடம் ஒரே காம்பவுண்டில் இருந்தாலும் நான் அதிகமாக அங்கு போகமாட்டேன்.எப்போது அரிதாக நேரம் கிடைக்கும் போது அங்கு இருக்கும் பழைய நண்பர்களை பார்த்து அளவளாவதற்கு போவேன் ஆனால் வேலையைப்பற்றி அவ்வளவாக பேச மாட்டேன்.

அந்த சிமினிக்கு அஸ்திவாரம் போட்டு முடித்து சுற்றுச்சுவர் சுமார் 3.5 மீட்டர் எழுப்பியிருந்தார்கள்.அதன்பிறகு மேலே சொன்ன ஜம்ப் பார்ம் சிஸ்டத்தை முடுக்கி சுற்றுச்சுவரை எழுப்பியிருந்தார்கள்.

புதிய சிஸ்டம்,முன் அனுபவம் இல்லாத குத்தையாளர் மற்றும் மேற்பார்வையாளர்கள் என்பதால் ஒரு அடுக்கு போட்டு மறு அடுக்கு கான்கிறீட் போட ஒரு வார காலம் ஆனது.இந்த ரீதியில் போனால் கொடுக்கப்பட்ட குத்தகை காலத்தைப்போல் இரு மடங்கு காலம் வேண்டும்.

இந்த சிமினி வேலையில் ஏதோ சுணக்கம்,தேவையான நேரத்துக்குள் முடிக்கமுடியாத நிலையில் போய்கொண்டிருந்ததை பார்த்த புதிதாக வந்திருந்த கன்ஸ்ரக்ஷன் மேனேஜர், அதை மேற்பார்வை பார்க்கும் இன்ஜினியரை கூப்பிட்டு காரணத்தை விஜாரித்தார்.வேறு யாராவது உதவி செய்ய தேவைப்படுகிறார்களா? என்று கேட்டிருக்கிறார்.அதற்கு அந்த இன்ஜினியர் அனுபவம் உள்ள யாராவது இருந்தால் நல்லது என்றிருக்கிறார்,உடனே அந்த மேல் அதிகாரிக்கு என் பெயர் தான் ஞாபகம் வந்திருக்கிறது.இருந்தாலும் எனக்கு கொடுத்த உறுதிமொழியும்(ஆதாவது என்னை திரும்ப சிமினி வேலைக்கு அழைகாமல் இருப்பது) அவரை உறுத்தியிருக்கவேண்டும்.வேலை என்று வந்து தான் உயரதிகாரியாக இருந்து வேலை சுணக்கம் ஏற்படுவதை எந்த உயரதிகாரியாலும் பொறுத்துக்கொள்ள முடியாததால் வேறு வழியின்று என்னை கூப்பிட்டனுப்பினார்.

சிமினியின் இப்போது உள்ள நிலமையையும் என்னுடைய அனுபவுமும் மிக அவசியமாக தேவைப்படுவதால் நீ கட்டாயம் அங்கு போய் தான் ஆக வேண்டும் என்றார்.

என்னை தூக்கிவிட்டவர் மற்றும் நான் வேலை செய்யும் முறை அவருக்கு தெரியும் என்பதால் மறுக்க இயலாமல் போவதற்கு ஒத்துக்கொண்டேன்.

சிமினி சைட்டுக்கு போன முதல் நாளே அந்த இளம் இன்ஜினியரிடம் நான் உனக்கு உதவி செய்யவே வந்துள்ளேன் அதனால் உன்னை மீறி செயல்படுவதாக நினைக்காதே.முதன்மை அதிகாரி சொன்னதால் தான் இங்கு வந்தேன் என்று தன்னிலை விளக்கம் கொடுத்துவிட்டு வேலையை ஆரம்பித்தேன்.

நான் விலகி இருக்க வேண்டிய இடம் என்னைவிடமாட்டேன் என்று பிடித்துக்கொள்ள ஆரம்பித்தது.

மீதி வரும் பதிவுகளில்

2 comments:

Anonymous said...

nalla matter. I've forwarded this to all my friends, who are in construction field.

வடுவூர் குமார் said...

நன்றி செல்வகுமார்.