Thursday, January 04, 2007

ரெசிடென்ட் இஞ்சினியர்

ரெசிடென்ட் இஞ்சினியர் சைட் உள்ளே இருந்ததால் அவரை பார்க்க கிளம்பினேன்.

வழியில் பல பழைய நண்பர்களை பார்த்து பேசிய போது ரெசிடென்ட் இஞ்சினியர் சைலோ எனப்படும் கட்டிடத்தின் அஸ்திவாரம் போடும் இடத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தை தொடர்ந்து அங்கு சென்றேன்.

சைலோ என்பது ஒரு பெரிய கிணற்றை மேல் நோக்கி கட்டினால் எப்படியிருக்குமோ அப்படி இருக்கும்.இதைப்பற்றி இந்த பழைய பதிவில் சொல்லியிருந்தேன்.விருப்பம் இருந்தால் போய் பார்க்கவும்.

அந்த அஸ்திவாரம் போடும் இடத்தில் ஒரே கூட்டம் மற்றும் சத்தமும் கூட.மூன்று கான்கிரீட் கலக்கும் இயந்திரங்கள் வேலை செய்துகொண்டிருந்தன.கான்கிரீட் அளவும் அதிகமாக இருந்ததால் 3 மிஷின்கள் போடப்பட்டிருந்தன.இது நடக்கும் கால கட்டம் 1989,அப்போது கூட பேச்சிங் பிளன்ட் மற்றும் கான்கிரீட் வண்டிகள் எட்டிப்பார்க்காத காலம்,அதானாலேயே மிக்ஸர் மிசின் மற்றும் ஆட்கள் மூலம் ஜல்லி , சிமின்ட் மற்றும் மணல் போடும் வேலையை செய்துகொண்டிருந்தோம்.ஒரு மிஷின் சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு 16 மூட்டைகள் போடும்.

நான் அங்கு போன சமயம் கான்கிரீட்டை அதிரப்படுத்தும் சாதனம் பழுதாகி, வேறு இல்லாத நிலையில் எல்லோரும் அங்கு இங்கு என்று ஓடிக்கொண்டிருந்தார்கள்.அந்த இஞ்சினியர் கொஞ்சம் டென்ஷன் பார்ட்டி ஆனதால் அந்த இடமே ஒரே சத்தமாக இருந்தது.போதாக்குறைக்கு கிளைன்ட் அதிகாரிகளும் தங்கள் பங்குக்கு அவ்விடத்தை உஷ்ணப்படுத்திக்கொண்டிருந்தார்கள்.

இதற்கிடையில்,

அந்த கால கட்டத்தில் இருந்த பல படித்த மற்றும் படிக்காத சில உயரதிகாரிகள் வேலை செய்யும் தொழிலாளர்களை நடத்தும் விதம் மிக மோசமாக இருக்கும்.வேலை செய்பவர்களை சத்தம் போட்டு தான் வேலை வாங்கவேண்டும் என்று எழுதப்படாத விதியாக இருந்தது.அதிலும் மரியாதை இருக்காது

அவர்கள் கால கட்டத்தில் பலர் கட்டுமானத்துறைக்கு போதிய கல்வி அறிவு இல்லாதவர்களாகத்தான் வந்தார்கள் அதனால் இவர்கள் மிரட்டல்கள் எல்லாம் செல்லுபடியாகியிருக்குமோ என்னவோ!!ஆனால் இந்த கால கட்டத்தில் கொஞ்சம் படித்தவர்கள் வர ஆரம்பித்தவுடன் பூசல்கள் தோன்ற ஆரம்பித்தது.

"சார் அவரை இங்கு வந்து கத்தச்சொல்லாதீங்க,செய்ய வேண்டியது மட்டும் சொன்னால் போதும், நாங்கள் செய்கிறோம்,வேலை முடிந்த பிறகு வந்து பார்த்து தவறு இருந்தால் சொல்லச்சொல்லுங்கள்" என்பார்கள்.

இது ஒரு Transition டைம்.அதனால் இவர்களாலும் மாற முடியவில்லை, வேலை செய்பவர்களாலும் பொருத்துக்கொள்ள முடியவில்லை.

அந்த உஷ்ணமான நிலையில் அவரருகே சென்று காலை வணக்கம் என்றேன்.
பதில் சொல்வதற்குள் அந்த கான்கிரீட் அதிரப்படுத்தும் சாதனத்தை எடுத்து அவரே வேலை செய்ய ஆரம்பித்துவிட்டார். அவருடன் சில காலம் பணிபுரிந்திருந்ததால் அவருடைய குணம் தெரிந்து நானும் சில வேலைகளை அங்கேயே செய்ய ஆரம்பித்துவிட்டேன்.முதல் நாள் அன்றே வேலை ஆரம்பித்துவிட்டது.யார் நமது ஆள் யார் குத்தகைகாரரின் ஆள் என்று தெரியாமல் வேலை நடக்காதது பார்த்து அந்த இஞ்சினியருக்கு கோபம் தலைக்கு மேல் ஏறி என்னைப்பார்த்து "நீ அங்கு போய் ரெஸ்ட் எடு" என்ற தொனியில் சொல்லிவிட்டு அவரே அந்த வேலை செய்ய ஆரம்பித்தார்.

இதை எதற்கு சொல்கிறேன் என்றால்,முதன் முதலில் வரும் ஒருவருக்கு ஒரு சைட் என்பது காடு மாதிரி.எங்கு என்ன இருக்கும் என்று தெரியாது,நமது கம்பெனி ஆள் யார் என்று தெரியாது,அதனால் சில நாட்கள் தேவையான கட்டுமான வரைப்படங்களை கொடுத்து படிக்கச்சொல்வார்கள்.

வந்து இரண்டு மூன்று நாட்கள் ஆனவுடன் எங்கு வேலை செய்யப்போகிறோமோ அந்த இஞ்சினியரிடம் ஒப்படைப்பார்கள்.இது ஒவ்வொரு தலைமை இஞ்சினியரின் பொறுப்பு.இப்படி செய்வதால் வேலை செய்யப்போகும் இடம்,மக்கள் பற்றி ஒரு தெளிவு வரும்.எதற்கு யாரை பார்க்கவேண்டும் என்று தோனும்.அது இங்கு நடைபெறவில்லை.

ஆமாம் கான்கிரீட் போடுவது கஷ்டமான வேலையா?இந்த மாதிரி வேலைக்கு தலைமை அதிகாரி தான் இந்த வேலைகளை செய்யவேண்டுமா? என்றால்

நிச்சயமாக இல்லை.

சில பிராஜக்ட் மேனேஜர்கள் பக்கத்திலேயே வரமாட்டார்கள்,ஆனால் வேலை மட்டும் சுலபமாக போய்கொண்டிருக்கும்.அதெப்படி?

இவர்கள் எண்ணம் இப்படி

சைட்டில் வேலை நடக்க உதவி இஞ்சினியர்கள் உள்ளார்கள்,தேவையானவற்றை வைத்துக்கொள்வது மற்றும் வழி நடத்துவது அவர்கள் வேலை,இதில் நான் தலையிடவேண்டிய அவசியம் இல்லை.பிரச்சனை அவர்களால் தீர்க்கமுடியாத அளவில் இருந்தால் நான் வருவேன்.அது வரையில் என்னிடம் வரவேண்டிய அவசியமே இல்லை என்று பட் என்று சொல்லிவிடுவார்.

"ஆதாவது அவரவர் வேலை அவரவர் செய்யவேண்டும்"- இது தான் சாராம்சம்.
எனக்கு தெரிந்த சில தலைமை இஞ்சினியர்கள் இதில்லெல்லாம் தலையிடமாட்டார்கள்.

மீண்டும் இங்கே

ஏற்கனவே நல்லுறவு இல்லை அதுவும் வந்த முதல் நாளே சரியாக அமையவில்லை.இது சரிப்பட்டு வராது என்று நினைத்து மறுநாளே மாற்றல் கேட்கலாம் என்றிருந்தேன்.

சாயங்காலம் வீட்டுக்கு வந்தவுடன்,பிரம்மச்சாரிகள் தங்கும் அறையில் ஒரு இடமும் கட்டிலும் கொடுக்கப்பட்டது.

இரவு சக நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது என்னுடைய எண்ணத்தை சொன்னேன்.இந்த ரெசிடென்ட் இஞ்சினியருடன் சரிப்பட்டுவராது நான் டிரான்பர் கேட்கலாம் என்றுள்ளேன்,என்று.

அதற்கு நண்பர்கள் "கவலைப்படாதே நாங்கள் எல்லோரும் பொருத்துக்கொண்டிருக்கிறோம் மற்றும்..??"

வாங்க அடுத்த பதிவுக்கு.

No comments: