Monday, December 31, 2007

ஐம்பது வெள்ளி லஞ்சம்

இதன் தலைப்பை "இது தான்டா சிங்கப்பூர்" என்று வைக்கலாம் என்று நினைத்தேன் பிறகு மாற்றிவிட்டேன்.

கீழே படத்தில் உள்ள மாதிரி செய்தி அடிக்கடி வராவிட்டாலும் அவ்வப்போது தலைக்காட்டும் அதுவும் நேர்மையான போலீஸ் அதிகாரியை உற்சாகப்படுத்துவதற்காக மட்டும் அல்லாமல் இனி கொடுக்க நினைக்கும் ஒரு எச்சரிக்கையாகவும் இருக்கும்.

இந்த ஓட்டுனர் கொடுக்க நினைத்த 50 வெள்ளி அவரை ஆறு வாரம் சிறையில் போடவைத்துவிட்டது.

அப்படி என்றால் எல்லா அதிகாரியும் புணிதரா? என்றால் இல்லை என்று தான் பதில் வரும் ஏனென்றால் அங்கொன்றும் இங்கொன்றுமாம் தவறு செய்து மாட்டிக்கொண்டவர்களை பற்றியும் அவ்வப்போது செய்தி வரும்.அது எதுக்கு நமக்கு?? நல்லதை பார்ப்போம்/பாராட்டுவோம்.





நன்றி: சனிக்கிழமை டுடே.

2 comments:

cheena (சீனா) said...

இங்கொன்றும் அங்கொன்றுமாக நடக்கும் இது மாதிரியான நல்ல செயல்கள் பாராட்டத்தக்கவைதான். ஆனால் யதார்த்தம் என்பது வேறு.

வடுவூர் குமார் said...

சீனா,யதார்ததம் வேறு!
நம்மூரிலா?