Saturday, March 14, 2009

வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்

முதல் நாள் இரவு தூங்க 12 மணி ஆனது,காது அடைப்பானுக்கும் பெப்பே காண்பித்தது சூழ்நிலை.வேறு வழியில்லாமல் எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை.காலை முழிப்பு வந்தபோது மணி 6.30.பெற்றோருக்கு தொலைப்பேசிக்கு முயற்சித்தேன் மணி அடித்துக்கொண்டிருந்தது ஆனால் யாரும் எடுக்கவில்லை.கொஞ்ச நேரம் கழித்து தான் புரிந்தது அவர்கள் ஒரு விழாவுக்கு சென்றிருக்ககூடும் என்று.

காலை 7 மணிக்கு எழுந்து குளித்து கணினியில் “தெய்வத்தின் குரல்” படித்துவிட்டு UFO பற்றிய தொடர் ஒன்று பாக்கியிருந்ததையும் அதன் பிறகு அனிமேஷன் படம் பார்த்து முடிக்கும் போது கிட்டத்தட்ட 10 மணியாகிவிட்டிருந்தது.வெளியில் போய் 2 கேக் மற்றும் ஒரு தேநீர் குடித்துவிட்டு அப்படியே நடையை கட்டினேன்.



எப்போதும் கிரிக்கெட் ஆட்டக்காரர் பலர் இத்திடலை ஆக்கிரம்மித்திருப்பார்கள் ஆனால் இன்று யாருமே தென்படவில்லை.தடைசெய்திருப்பார்களா அல்லது பலர் ஊருக்கு திரும்ப அனுப்பப்பட்டிருப்பார்களோ! என்ற சந்தேகமும் வந்தது.அப்படியே சிறிது தூரம் வந்து முத்தினா பார்க்கில் சற்று உடகார்ந்து தூங்கிவிட்டு 12 மணிக்கு வீட்டுக்கு திரும்பினேன்.

12 மணியில் இருந்து 1.15 வரை கணினியில் குடைந்துவிட்டு மதிய சாப்பாட்டுக்கு பக்கத்தில் உள்ள ஆனந்த பவன் போய் “தாலி” என்று சொல்லப்படுகிற சாப்பாட்டை கொண்டுவரச்சொல்லினேன். பக்கத்தில் உள்ள நண்பர்கள் சாம்பாரை தேங்காய் எண்ணெய்யில் தாளிப்பதால் நன்றாக இல்லை என்றும் பருப்பில் நெய் போட்டு சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று சொல்லி பல விபரங்களை தெரியவைத்தார்.சாப்பாட்டுக்கு 12 திராம் கொடுத்துவிட்டு பக்கத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வந்தேன்.

போன வாரம் இரவு நடை போய்கொண்டிருக்கும் போது தற்செயலாக தடம் எண் 10 ஐ பார்த்தேன், அது Jumeira Beach Park போவதாக போட்டிருந்தது.ஆச்சரியத்துடம் வருகிற வெள்ளிக்கு அதை முயற்சிக்கலாம் என்று முடிவு செய்திருந்தேன்.எதற்கும் உறுதி செய்துகொள்ளலாம் என்று இணையத்தில் உள்ள அவர்கள் பக்கத்துக்கு போய் பார்த்து உறுதிசெய்துகொண்டேன்.

Muragabat Police Station க்கு அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் போய் நிற்கலாம் என்று போகும் போது 10ம் எண் பேருந்து என்னை கடந்து போனது.அடுத்த பேருந்துக்காக இன்னும் எவ்வளவு நேரம் நிற்கப்போகிறமோ என்ற நினைப்புடனே அங்கு சென்றேன்.நல்ல வேளையாக அடுத்த 10 நிமிடங்களில் வந்தது.வந்த பேருந்து Double Decker புதியது, அருமையாக இருந்தது உள் அமைப்புகள்.



மணிக்கூண்டு சுற்று வழிச்சாலை உட்பட் பல இடங்களை கடந்து முக்கியமாக துபாயின் பிரசித்தி பெற்ற சாலைகளில் ஒன்றான Sheik Zayed சாலை வழியாக சென்று Al Quoz என்ற இடத்துக்கு வந்தது.Sheik Zayed சாலையை கடக்கும் போது சாலையின் மறுபக்கத்தில் பல கட்டிடங்கள் பேருந்து உள்ளிருந்து பார்க்க முடியாத உயரத்துக்கு இருந்தது.உடனடியாக படம் பிடிக்கவோ, நகர் படம் எடுக்க தோனவில்லை.சில கட்டிடங்கள் மட்டும் பார்வைக்கு கீழே.



Al Quoz யில் தான் பல நிறுவனங்களின் ஊழியர்கள் தங்கவைக்கப்படிருக்கிறார்கள்.இதன் உள் அமைப்பு எவ்வாறு என்பதால் மேல் விபரங்கள் சொல்லமுடியவில்லை.ஊழியர்கள் தங்கும் விடுதியின் ஒரு பகுதி கீழே.




பேருந்தில் உட்கார்ந்திருக்கும் போது ஒருவர் இது Bur Dubai போகுமா? என்றார்.”தெரியவில்லை” ஆனால் நான் Jemeria Beach Park போகிறேன் என்றார்.இப்பேருந்துக்கு இது தான் கடைசி நிறுத்தம் என்று ஒரு குண்டை தூக்கிப்போட்டார்.என்னடா! இது புதுக்குழப்பம் என்று நினைத்து வேறு ஒருவரிடம் கேட்ட போது அவரும் ஆமாம் என்றார்.இது Cut Service போலும்.கீழே இறங்கி கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தேன்.சிறிது தூரத்திலேயே Grand Shopping Mall ஒன்று கண்ணில் பட்டது,அதனுள் நுழைந்து சுற்றி பார்க்க ஆரம்பித்தேன்.துணி மற்றும் பல மின்னியல் சாதனங்கள் விலை மலிவாகபட்டது.தொழிலாளர்கள் பெரும்பாலாக இருப்பதால் என்னவோ விலை மலிவாக வைக்கப்பட்டுள்ளதா அல்லது தரத்தில் குறைவாக இருக்குமோ என்று தெரியவில்லை.நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு இவ்வளவு தயாள குணமா! என்று ஆச்சரியப்படும் நேரத்தில் பணம் அனுப்பும் சேவைகள் உள்ள இடத்துக்குள் நுழைந்தேன்.Money Exchange சேவை செய்யும் இடங்களுக்குள் நுழையும் போது அன்று சிஙகப்பூர் வெள்ளியின் மதிப்பு என்ன என்று மதிப்பீடு செய்வது வழக்கம் இன்றும் அந்த மாதிரி பார்க்கும் போது இந்த நிறுவனத்தின் பட்டுவாட விகிதம் வாங்க 2 என்றும் விற்க 3 என்றும் போட்டிருந்தார்கள்.சந்தையில் சிங்கை வெள்ளியின் மதிப்பு வாங்க 2.35,பகல் கொள்ளையாக இல்ல?இந்திய ரூபாயை மதிப்பீடு செய்யவில்லை,ஒருவேளை பல தொழிலாளர்களுக்கு தேவைப்படும் பணம் மாற்றுவிகிதம் சரியாக இருக்குமோ என்னவோ!






வாங்க ஒன்றும் இல்லாததால் அப்படியே வெறும் கையோடு வெளியேரும் சமயத்தில் சிறு நீர் கழிக்கலாம் என்று கழிப்பறை பக்கம் போனேன்.சில கழிப்பறைகளில் பல வித Acrobatics ஐ பார்க்கலாம்,ஒரு காலை அப்படியே கை கழுவும் பேசினில் உள்ளே வைத்து கழுவுவார்கள்.ஒரு தடவை பிரபலமான கடை தொகுதியில் பார்த்து அசந்துவிட்டேன்.இதை வேறொரு சமயத்தில் பார்க்கலாம்.சிறு நீர் கழிக்கும் இடத்தின் முன்,பேசினுக்கு முன்பு சுமார் 3 அங்குல விட்டத்தில் தண்ணீர் வெளியேற்ற ஒரு பொத்தான் இருந்தது அதன் பள பளப்பில் நம்மோடதை சும்மா “பளிச்” என்று பார்த்துக்கொள்ளலாம். . :-)
எந்த Architect செய்தானோ! தலையில் அடித்துக்கொள்ளலாம் போல் இருந்தது.

வேறு எதுவும் வேலையில்லாததால் பேருந்துவில் இருந்து இறங்கிய இடத்துக்கு வந்து மறுபடியும் தடம் எண் 10 ஐ பிடித்து உட்கார்ந்தேன்.உட்காருவதற்கு முன்பு இம்முறையாவது Sheik Zayed சாலையில் உள்ள கட்டிடங்களை நம் பதிவர்களுக்காக படம் பிடித்துகாட்டலாம் என்று தோதான இடத்தில் உட்கார்ந்தேன்.அப்படி எடுத்த நகர் படம் கீழே



பேருந்தில் இருந்து எடுத்ததால் அதன் உள்ளே உள்ள விளக்குகளும் இதில் பிரதிபலிக்கிறது.

இவ்வளவு பெரிய பதிவாக போடுவதற்கு ஒருவர் மிகவும் துணைபுரிந்தார்,எப்படி?
மாலை நேரம் வீட்டுக்கு வந்தவுடன் ஒரு படம் பார்க்கவேண்டி காதில் Ear Phone வைத்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்கும் போது “மகிஷாஷவர்த்தினி” ஓட ஆரம்பித்தது அந்த சத்தத்தில் வீட்டின் உள்ளே தேவி இருந்திருந்தால் ஓஓஓஒடியே போயிருப்பா.இவ்வளவு சத்ததில் படமா பார்க்கமுடியும்? வேறு என்ன செய்யலாம் என்று யோசித்து இப்பதிவை எழுதினேன்.உபயோகமாக இருந்தால் உங்கள் நன்றியையும் அவர்களுக்கு சொல்லிடுங்க.

3 comments:

நாகை சிவா said...

சூடானிலும் இதே தொல்லை தான், காலை தூக்கி வாஸ்பேசினில் வைத்து கழுவார்கள். பார்க்க பார்க்க அவ்வளவு கடுப்பு வரும். பக்கத்தில் தான் ஷவர் ரூம் இருக்கும், அதில் போய் கழுவ மாட்டார்கள்...

வடுவூர் குமார் said...

சிவா இம்முறையை ஒருதடவை சிங்கை முஸ்தாபா கழிப்பறையில் பார்த்து அசந்துவிட்டேன்.இப்படி கால் கழுவவே பல கடைத்தொகுதியில் உயரம் குறைந்த பேசின் ஒன்று வைத்துள்ளார்கள்.

Tech Shankar said...

அடடா...