Tuesday, March 17, 2009

தண்ணீர் கசிவை தடுக்க.

உலகமெங்கும் நிதி நிலவரம் மோசமாக போய்கொண்டிருக்கும் வேளையில் இதனால் பல தொழிலாளர்கள் வேலையிழப்பு அதன் பிறகு பிறந்த தேசத்துக்கே போகவேண்டிய சூழ்நிலை என்ற இறுக்கமான சூழ்நிலை இருந்தாலும் அங்கங்கு சில வேலைகள் நடந்துகொண்டு தான் இருக்கிறது.

போன வாரம் வழக்கமாக வீட்டுக்கு நடந்து போகும் வழியை தேர்ந்தெடுக்காமல் வேறு வழியில் போன போது இந்த கட்டுமான வேலை கண்ணில் பட்டது.என்னடா! ஏதோ கருப்பாக இருக்கே என்று எட்டிப்பார்த்த போது அஸ்திவாரத்துக்கு கீழே இருந்து தண்ணீர் ஊற்றெடுக்காமல் இருக்க இந்த மாதிரி தார் அட்டைகளை போட்டு அதன் மீது தாரை உற்றி ஒரு கார்ப்பெட்டே போடுகிறார்கள்.அனேகமாக இதன் மீது மெல்லிய கான்கிரீட் போட்டு அதன் பிறகு அதன் மேல் கம்பி கட்டி அஸ்திவார ஸிலாப் போடுவார்கள் என்று நினைக்கிறேன்.

என்ன தான் பாலைவன பிரதேசமாக இருந்தாலும் ஓரளவுக்கு மேல் கீழே போகும் போது பக்கத்தில் உள்ள கடல் நீர் தன் வழியை தேடி மேலே வர முயற்சிக்கும்,அதை தடுக்கவே இம்முறை.

பிட்டுமன் அட்டைகள்



தார் உருளைகள்




11 நாட்களில் கண்ட முன்னேற்றம்.




பக்கத்திலேயே இன்னொரு வேலையும் ஆரம்பிக்கிறது.. நம்பிக்கையும் வருகிறது.


No comments: