Monday, March 02, 2009

சும்ம்மா எடுத்தா சூப்பராக வருது.

இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவியலை தேடிப்போன போது அமெரிக்கா வாழ் தமிழன் தான் குளிரில் அதுவும் முக்காலி போட்டு எடுத்த ஒரு படத்தையும் போட்டு ஒரு பதிவு எழுதியிருந்தார்.கிட்டத்தட்ட அதே நிலையில் ஆனால் குளிரில்லை,முக்காலியும் இல்லை அவ்வளவு தான்.

போன வெள்ளி துபாய் கிரீக் பக்கம் போய் சும்மா உட்கார்ந்து வேடிக்கை பார்த்துவிட்டு வரலாம் என்று மாலை சென்றிருந்தேன்.இம்முறை கையோடு 3.2 MP புகைப்பட கருவியையும் கொண்டுசென்றிருந்தேன்.மாலை சூரியன் சீக்கிரமே கிழே விழ அவ்விடத்தில் சந்திரனும் வெள்ளியும் அழகாக காட்சி அளித்தார்கள்.பல முறை சந்திரனை புகைப்படம் எடுக்க நினைத்து வெறும் புள்ளியாக வந்ததை பார்த்து நொந்துபோயிருக்கேன்,இருந்தாலும் இம்முறை கொஞ்சம் வித்தியாசமாக இரவுக்கென்று இருக்கும் செட்டிங்கில் வைத்து எடுக்கலாம் என்று முயற்சித்தேன்.முதல் முறை எவ்வித செட்டிங்கும் இல்லாமல் மூக்கில் அழுத்திக்கொண்டு படம் எடுத்தேன்,அது கீழே.




இன்னும் கொஞ்ச நேரம் ஆனதும் பக்கத்தில் உள்ள ஒரு இருக்கையில் உட்கார்ந்துகொண்டு எடுதத படங்கள் கீழே.இதற்காக இரவு செட்டிங் செய்ததால் சிறு அசைவு இருந்தாலும் அதனால் சரியாக பிடிக்கமுடியவில்லை.






ஓரளவு தெளிவாக வந்துள்ள படம் கீழே.





இவ்விரண்டையும் பார்க்கும் போது முதலில் எடுத்த படம் நிலாவில் வளைவு தெளிவாக தெரிகிறது(படத்தின் மீது சொடுக்கி பார்க்கவும்)

அமெரிக்காவில் திரு வாசன் மாலை 6.30 மணிக்கு பார்க்கும் சந்திரனை நான் துபாயில் அதே நேரத்தில் பார்த்து படம் எடுத்தது ஒரு தற்செயலே.

2 comments:

Tech Shankar said...

தற்செயலாக நிகழும் கண்டுபிடிப்புகளுக்கு உள்ள மதிப்பே தனிங்க

வடுவூர் குமார் said...

ஆமாம் தமிழ்நெஞ்சம்.நன்றி.