Tuesday, April 29, 2008

காவிரி நதி மீது (1)

இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சிக்கு சென்ற போது பேருந்தில் பாலத்தை கடக்கும் போது இங்கு நடைபெற்றுக்கொண்டு இருக்கும் மேம்பால பணி கண்ணில்பட்டது,அது உங்கள் பார்வைக்கு....

இப்போது இருக்கும் பாலத்தின் மீது நின்றுகொண்டு காவிரி அழகை காணலாம் என்று நின்றால் ,அங்கு போய் கொண்டு இருக்கும் வண்டிகள் மூலம் பால அதிர்வு இருப்பதை நன்கு உணர முடியும்.

1979 களில் முதன்முறையாக இங்கு சென்ற போது இந்த பாலத்தின் முகப்பில் ஏதோ எச்சரிக்கை அறிவிப்புப் பலகையை பார்த்த ஞாபகம். என்னவென்று சரியாக்க நினைவில்லை ஆனால் அந்த ஆட்டம் மட்டும் நினைவில் இருக்கிறது.



இன்றைய நிலமைக்கு ஈடுகொடுக்க மற்றொரு மேம்பாலம் தேவை என்று நினைத்த அரசாங்கம் இப்போது புதிய பாலம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்,அதை எப்படி செய்கிறார்கள்? என்று பார்ப்போமா...

நிறைய படங்கள் இருப்பதால் இரண்டு அல்லது மூன்று பதிவுகளில் சொல்கிறேன்.

இந்த பால Design வெகு எளிமையாக செய்யப்பட்டுள்ளது.

பால எடையை தாங்க Piling செய்திருப்பார்கள் என நினைக்கிறேன். அதன் மீது Foundation போட்டிருக்கிறார்ர்கள்.கீழே உள்ள படம் பார்க்க.



அதன் மீது தூண்...



அந்த தூண் மீது பாலம் வர ஏதுவாக இருக்கும் தாங்கும் Beam.

முதலில் சாரப்பணி தொடங்குகிறது...



கான்கிரீட் போட்டு முடிந்தபிறகு..




வெகு அதிசயமான காட்சி அதற்கு Curing என சொல்லப்படுகிற குளிர்வூட்டும் நிகழ்ச்சி.இதை பெரும்பாளானவர்கள் செய்வதில்லை.

மீதியை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

படம் எடுக்க உதவிய மச்சினருக்கு "நன்றி".

2 comments:

துளசி கோபால் said...

லீவுலே போனாலும் அக்கடான்னு இருக்க முடியுதா? இப்படி எங்கே பார்த்தாலும் பாலமுன்னா நீங்க என்னதான் செய்வீங்க.......:-))))

வடுவூர் குமார் said...

ஹா! ஹா! என்ன செய்வது? :-))