Monday, November 20, 2006

வெளிநாட்டவர்க்கு வீடு

இதற்கு முன்பு எழுதிய பகுதிகளில் சிங்கையில் மின் தூக்கி மேம்பாட்டு பணிகளை பற்றியும் மற்றும் வீடு வாங்குவதை பற்றியும் எழுதியிருந்தேன்.

அதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் அதன் சாதக பாதகங்களை பற்றி பார்க்கலாமா?
இது முழுக்க முழுக்க உள் நாட்டு விஷயம் என்பதால் இங்குள்ளவர்களுக்கு சற்றேனும் உதவும் என்ற நோக்கத்தில் எழுதுகிறேன்.மற்றவர்களும் தெரிந்துகொள்ளலாம்.

புதியவர்கள் மற்றும் வெளிநாட்டவர் வீடு வாங்க/விற்க என்ன செய்யவேண்டும்,எதை கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதை எனக்கு தெரிந்த அளவில் எழுதுகிறேன்.தவறுகள் இருக்கலாம்,தெரிந்தவர்கள் குறிப்பிட்டால் திருத்திக்கொள்கிறேன்.
வெளிநாட்டவர் இங்கு வீடு வாங்கி தான் ஆக வேண்டுமா?வாடகைக்கு இருக்க முடியாதா?

கேள்விகள் பல...

சிலவற்றுக்கு மாத்திரம் பதில் காணலாம்.

முதன் முதலில் கவனத்தில் கொள்ளவேண்டியது, உங்கள் வேலை நிலவரம்.நீங்கள் பணக்காரரின் பிள்ளை அல்லது உங்கள் சுற்றம் உங்களுக்கு அவர்கள் நாட்டிலிருந்து பணம் அனுப்பி காப்பாற்ற முடியும் என்றாலே தவிர,உங்கள் வேலை தான் உங்கள் வரவு செலவுக்கு ஆதாரம்.

உங்கள் வேலை நிரந்தரமா? (அப்படி இந்த காலத்தில் ஏதேனும் வேலை இருக்கா?என்ன) 25 வருடங்களுக்கு இருக்கும் என்று வைத்துக்கொண்டால் தாராளமாக முயலலாம்.சம்பளம் சுமார் 2500 க்கு மேல் இருந்தால் நலம்.நீங்கள் 30 வயதின் வட்டத்துக்குள் இருந்தால் உங்களுக்கு வங்கியின் கடன், கடைசிவரை கிடைக்கும்.

அல்லது வீட்டை வாங்குவது 5 ~ 10 வருடத்திற்கு பிறகு விற்றுவிடுவது.இதுவும் ஓரளவு பாதுகாப்பான திட்டம் என்றாலும்,விற்கும் போது பிரச்சனை வந்தால் நீங்கள் நினைத்தது, உங்களை பாதாளத்தில் அழுத்திவிடும்.

அடுத்தது நல்ல இடத்தில் வீட்டை வாங்குவது,(கவனம்:வீட்டின் விலை இங்கு அதிகமாக இருக்கும்)பிறகு விற்றுவிடுவது.இதில் இருக்கும் ஒரு ஆதாயம்,வீட்டை எப்போது வேண்டுமானாலும் விற்க முடியும்.உங்களுக்கு அதிஷ்டம் இருந்தால் பொருளாதாரம் பிரகாசித்து உங்கள் வீட்டு விலையை உயர்த்தி உங்களுக்கு லாபம் சம்பாதித்து கொடுக்கக்கூடும்.

மேலே சொன்ன அவ்வளவுமே,உங்கள் வயது,வேலையை பொருத்தது.
இதை தவிர,நீங்கள் உங்கள் குடியுரிமையை மாற்றிக்கொள்ள உத்தேசமாக இருந்தால் நீங்கள் தைரியமாக வாங்கலாம்.ஏனென்றால் இந்த அரசாங்கம் உங்களை அவ்வளவு சீக்கிரம் கை விட்டு விடாது.உங்களை உழைக்கத்தூண்டும்,பணம் கட்டாமல் அந்த வீட்டில் இருக்கலாம் ஆனால் காலம் தாழ்ந்து கட்டச்சொல்லும்.

வெளிநாட்டவர்கள் குடியுரிமை பெற்றபிறகு அவர்கள் நடைமுறையில் நிறைய மாற்றங்கள் வரும்.அவற்றில் சில

பழைய வீட்டை விற்றுவிட்டு புதிய வீடு வாங்குவார்கள்.

20~30K கொடுத்து அட்டகாசமாக மேம்பணிகள் மேற்கொள்வார்கள்.கார் வாங்க அடிதளம் போடும் எண்ணம் வரும்.சிகப்பு கடவுச்சீட்டு கிடைத்தவுடன் நினைத்த நேரத்தில் விசா இல்லாமல் பக்கத்து நாடுகளுக்கு போகத்தூண்டும்.இது அத்தனையும் தவறு என்ற நோக்கத்துடன் சொல்லவில்லை.ஒரு சில மாற்றம் தெரியும் என்பதற்காக.

ஒரு தலைமுறை போனதும் வீட்டில் இருந்து தமிழும் போய்விடும்.

கொஞ்சம் தடம் மாறிவிட்டேன்.திரும்புவோம்.

வீடு வாங்குவதற்கு முன்பு,அந்த வீடு கட்டி எவ்வளவு வருஷம் ஆகிறது என்று பார்க்கவேண்டும்.ஏனென்றால் சுமார் 20 வருடங்கள் கழித்து மின் தூக்கி மேம்பாடு வரும்.30 ~ 35 வருடம் என்றால் மொத்த மேம்பாட்டு பணிகள் வரும். இப்போது கட்டப்படும் வீடுகளில் மின் தூக்கி எல்லா மட்டங்களிலும் நிற்குமாறு அமைக்கப்டுவதால் இந்த மேம்பாட்டு பணிகள் அங்கு இருக்காது.கொஞ்சம் துணிச்சலாக வாங்கலாம்.

நிரந்தரவாச தகுதியுடன் இருக்கும் நபர்கள் முறையே சுமார் 14K & 70K கட்டவேண்டிருக்கும். ஒருவரின் புலம்பலை இங்கு பார்க்கவும்,

When upgrading is a dirty word

மீதியை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

No comments: