Wednesday, September 30, 2009

வடுவூர் துரைசாமி அய்யங்கார்

இவர் என்ன தான் என் அம்மா வழி ஊரில் பக்கத்துவீட்டில் இருந்தாலும் இவரை பற்றி குறைந்த அளவே தெரிந்துவைத்திருந்தேன்.இவர் எழுதிய எந்த புத்தகத்தையும் படித்ததில்லை.இம்முறை ஊருக்கு போன போது என்னுடைய மாமாவிடம் இவரைப் பற்றி கேட்ட போது இவர் எழுத்தைப் பற்றி அவ்வளவாக சொல்லாவிட்டாலும் நமது பக்கத்து வீட்டில் தான் அவர் இருந்ததாகவும் பிறகு சென்னை சென்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டதாகவும் சொன்னர்.அதில் ஓரளவு உண்மை என்பது கிழ்கண்ட புத்தகம் உறுதிப்படுத்தியது.இப்புத்தகத்தை படிக்கும் போது இவரின் எழுத்து அப்படியே “தேவனின்” எழுத்து போலவே இருந்தது.சிரிக்க சிரிக்க நிறுத்தவே முடியாத அளவுக்கு இருக்கு.



Long Missing Links என்னும் ஆங்கில புத்தகத்தை தன் சொந்த செலவிலேயே வெளியிட முயன்று அது சரிவர போகாமல் திரும்ப ஊருக்கே போனதாக சொல்லப்படுகிறது.இவருடைய பல நாவல்கள் ஆங்கில மூலத்தில் இருந்தே தழுவி எடுக்கப்பட்டதாக அவரே ஒத்துக்கொண்டிருக்கிறார்,இவருடைய கதை “மேனகா” & “மைனர் ராஜாமணி” திரைப்படங்களாகவும் வந்துள்ளது.

இவர் எடுத்துக்கொண்ட இந்த ஆங்கில புத்தகத்தின் கருத்தை அறிய கூகிளிடம் போட்ட போது எதேச்சையாக இந்த வலைப் பதிவு விழுந்தது.அய்யையோ!! என்ன மாதிரி அலசல்/விபரங்கள்!! முதல் பத்தியில் உள்ளதை டிஸ்கியாக எடுத்து படித்துப்பாருங்கள்.நமது சரித்திரத்தையை எப்படியெல்லாம் மாற்றி நம்மை நம்பவைத்துள்ளார்கள் என்று ஆச்சரியமாக இருக்கு.

நிஜத்தை பார்க்க இங்கு அழுத்தவும்.

மறுபடியும்....இச்சுட்டி யாரையும் புண்படுத்தும் எண்ணத்தில் அல்ல.

அப்பதிவை எழுதியவரே அந்த பக்கம் வருவதில்லை போலும்,அனுமதி கேட்டும் பதில் இல்லை.மௌனம் சம்மதிற்கு அறிகுறி என்று எடுத்துக்கொண்டு வெளியிடுகிறேன்.

No comments: