Wednesday, June 25, 2008

நடந்தது .. நடப்பது .. நடக்கப்போவது.

நடந்தது...

ஒரு 3 வருடங்களுக்கு முன்பு என்னுடைய சித்தப்பா பையன் துபாயில் இருந்து சாட் செய்துகொண்டிருக்கும் போது, ஏதேச்சையாக என்னை துபாய் வரும்படி கூப்பிட்டான்.கட்டுமானத்துறையில் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் ஒரு 2 மாதம் விடுமுறை போட்டுவிட்டு வந்தால் நிச்சயம் வேலை வாங்கிவிடலாம் என்று சொன்னான்.அப்போது என் வீடு, என் தலைமேலும் தோளிலும் சேர்ந்து உட்கார்ந்து அழுத்திக்கொண்டு இருந்தது.அதை முதலில் இறக்காமல் சிங்கையைவிட்டு வெளியில் கிளம்பமுடியாது அதோடு வேறு சில இடைஞ்சல்களும் மறைமுகமாக இருந்ததால், அவனிடம் இப்போது நான் வரமுடியாது பிறகு பார்க்கலாம் என்று சொல்லியிருந்தேன்.

இந்த பேச்சு வார்த்தை நடந்த போது வேலைக்கு பிரச்சனையில்லாமல் இருந்தது,இருந்தாலும் வேலை சுவாரஸ்யம் இல்லாமல் போய்கொண்டிருந்தது.அவ்வப்போது சனிக்கிழமை செய்தித்தாள் மூலம் வேலை எங்காவது காலியாக இருக்கா? என்று பார்க்கும் போது துபாய் நிறுவனங்களும் உள்ளூர் நிறுவனங்களும் வேலைக்கு ஆட்கள் தேவை என்று கட்டம் கட்டி போட்டிருந்தன.இது சிங்கையில் அதிசியம் அதுவும் மத்திய கிழக்கு நாடுகள் சிங்கையில் இருந்து ஆட்கள் தேடுகிறார்களே என்று.சிங்கை ஆட்களுக்கு சம்பளம் அதிகம் என்பதால் பக்கத்தில் உள்ள நாடுகள் தேவைக்கு இந்தியாவையோ,மலேசியாவையோ அல்லது பிலிபைன்சில் தேடுவார்கள்.

நூல் விட்டு பார்க்கும் எண்ணத்துடன் உள்ளூர் நிறுவனத்துக்கு போட்டேன்.அந்த உள்ளூர் நிறுவன Advertisement யே ஒரு மாதிரி லொல்லாக இருந்தது.வேலைக்கு விண்ணப்பிக்கும் ஆட்களுக்கு இருமொழி (ஆதாவது ஆங்கிலம் மற்றும் சீனம்) தெரிந்திருக்கவேண்டும் என்று கேட்டிருந்த்து.வேலையோ மத்திய கிழக்கில், எதற்கு சீனம் அங்கு என்று மண்டையை குடைய,அதையே குறிப்பிட்டு உங்களுக்கு ஆட்சேபனையில்லாவிட்டால் சீனம் தெரியாத என்னை வேலைக்கு அமர்த்திக்கொள்ளலாம் என்று போட்டிருந்தேன்.பதில் வரவில்லை. வேலைக்கு வருவதற்கு முன்பே இவ்வளவு லொல்லா? என்று நினைத்து என் கடிதத்தை கடாசியிருக்கலாம்.

அதோடு நில்லாமல் துபாய் கம்பெனி விளம்பரத்துக்கும் என்னுடைய தகவல்களை அனுப்பிவைத்தேன்.இரண்டு மாதம் கழித்து மின் அஞ்சலில் பதிலோடு கூடிய ஃபார்மும் அனுப்பி இன்றைய தேதிக்கு நேர்காணலுக்கு ஆர்சர்ட் சாலையில் உள்ள ஹோட்டலில் பார்க்கச்சொன்னார்கள் துபாய் நிறுவனத்தார்.

சொன்னதேதிக்கு போனேன்,நேர்காணல் முடிந்தது,சம்பளம் எவ்வளவு வேணும் என்று கேட்டபோது நிஜமாகவே திணறினேன்.அங்குள்ள நிலமை அவ்வளவாக தெரியாததால் முழித்தேன்.பிறகு ஏதோ சொல்லி சமாளித்தேன். என்னுடன் வந்த மற்றொரு பிலிபைன்ஸ் பொறியாளர் என்னிடம் வந்து எனக்கு அமெரிக்க டாலர் 5000 தருவதாகவும் ஒரே மாதத்தில் அங்கு போய் சேரவேண்டும் என்றார்.இங்குள்ள குடும்ப நிலமை மற்றும் அவர் வீட்டை ஒப்படைக்க ஆகும் காலம் எல்லாவற்றையும் கணக்கு பண்ணி கலங்கிப்போயிருந்தார்.

என்னை மட்டும் பிறகு தொடர்புகொள்வதாக சொல்லிவிட்டார்கள்.நானும் சரி என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.கவலைப்படவில்லை ஏனென்றால் நான் போகப்போவதாக எண்ணமே இல்லையே!!
இதற்கிடையில் பிரிட்டன்காரர் ஒருவர் நெடு நெடு என்று வந்தார்,அவரை உடனே அழைத்து (அவருக்கு வரிசையெல்லாம் கிடையாது) வேலைக்கான ஆர்டரை கொடுத்த போது “கால்கரியாரின்” பதிவுகள் தான் ஞாபகத்துக்கு வந்தது. அனறு முழுவதும் வேடிக்கை பார்த்துவிட்டு வீடு திரும்பினேன்.

இப்போது ஓரளவு அங்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள் என்று தெரிந்து போனதால் வகை தொகையில்லாமல் மத்திய கிழக்கில் இருந்து வரும் அவ்வளவு நாடுகளுக்கும் விண்ணப்பித்தேன்.அதிலேயே 2 வருடம் ஓடிவிட்டது.வெகு சிலரே கூப்பிட்டனர் அதில் ஒருவர் கத்தாரில் இருந்து இந்தூர் நேரத்தில் இரவு 12 மணிக்கு கூப்பிட்டு சம்பள பேரம் நடத்தினார்.நான் தூக்க கலக்கத்தில் இருப்பதால் காலையில் கூப்பிடுங்கள் என்றேன்,அப்போது தான் சிங்கையில் என்ன நேரம் என்றார்!!! இப்படியும் ஒரு அங்கு வேலைசெய்யும் பெங்காலிக்காரர். :-(

அதன் பிறகு எந்தவித தகவலும் இல்லை,மற்றும் அங்கிருந்து வரும் விளம்பரங்களும் குறைந்துவிட்டன.

பதிவு அதிக நீளமானது போல் இருக்கு,அடுத்த பதிவில் மீதியை சொல்லிவிடுகிறேன்.

4 comments:

கிஷோர் said...

என்ன தல ஊரை காலி பண்ணபோறீங்களா?
நான் இப்போதான் எப்படியாவது சிங்கை வந்து செட்டில் ஆகலாம்னு பார்க்கிறேன்.

துளசி கோபால் said...

ஆஹா..... ஆஹா....முக்காலமும் உணர்ந்த முதல்வனே...

சீக்கிரம் அடுத்த பகுதியைப் போடும்.

ரொம்ப த்ரில்லிங்கா இருக்கு.

வடுவூர் குமார் said...

வாங்க கிஷோர்
இன்று வரை என்னிடம் இதற்கு விடையில்லை.:-)

வடுவூர் குமார் said...

வாங்க துளசி
கூடிய விரைவில் வெளிவரும்.