Thursday, December 17, 2009

பண விரயம்.

ஒரு நாலஞ்சு நாளாகவே வேலைக்கு அலுவலகம் போகும் வழியில் இந்த வேலை கண்ணில் பட்டு வெறுப்பேற்றிக்கொண்டு இருந்தது.அதன் காரணம்?

முன்பெல்லாம் சாலை அல்லது பாலம் (Abutment) அங்கிருக்கும் நிலத்தில் இருந்து உயரமாக கட்டும் போது மேலே உள்ள மண் சரியாமல் இருக்க ஒரு குறிப்பிட்ட கோணத்தில் மண்ணை சரிப்பார்கள்.இப்படி செய்தால் மழை காலத்தில் கூட சாலைக்கு ஒரு பாதகமும் ஏற்படாது.

1990 களில் எப்போதும் செய்யும் முறையில் தொழிற்நுட்பத்தை புகுத்தி சாலைக்கு(செங்குத்தாக சுவர்) எவ்வளவு இடம் வேண்டுமோ அதை மட்டும் உபயோகிக்கும் முறையை கொண்டு வந்தார்கள்.சென்னை தி.நகர் பாலம் போத்தீஸ் பக்கத்தில் எப்படி இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.இது பல விதங்களில் குத்தகைக்காரர்களுக்கும் அரசாங்கத்தும் சௌகரியமாக இருந்தது.இடவிரயம் என்பது கட்டுக்குள் வந்தது.இதே முறையை தான் பல நாடுகளிலும் உபயோகப்படுத்துகிறார்கள்.மஸ்கட்டிலும் பெரும்பாலான சாலைகள் சம தளத்தில் இருந்து உயரமாக வைத்து கீழே போக்குவரத்து வரும் இடங்களில் பாலங்களை வைத்துள்ளார்கள்.

நன்றாகத்தான் செய்துள்ளார்கள் ஆனால் திடிரென்று என்னவாயிற்று என்று தெரியவில்லை அந்த செங்குத்து சுவருக்கு முட்டு கொடுப்பது போல் மண்ணை கொட்டி முட்டு கொடுக்கிறார்கள்.இது அப்படியே பழைய முறையை கையாளுவது போல் இருக்கிறது.இவர்களுக்கு இடம் இருக்கு செய்துட்டு போகட்டுமே எங்கிறீர்களா?அப்ப அந்த செங்குத்து சுவர் கட்ட ஆன செலவு?

அதைத் தான் மண் போட்டு மூடிவிடுகிறார்களே?? கீழுள்ள படத்தில் வலதுபக்கம்- அதன் மீது சொடுக்கி பெரிதாக்கி பாருங்கள்.



வண்டியில் போகும் போது எடுத்த சில சாலைப்படங்கள்.




2 comments:

geethappriyan said...

காசு வீண் தான்

வடுவூர் குமார் said...

நன்றி வருகைக்கு கார்த்திகேயன்.