Tuesday, October 21, 2008

போக்குவரத்து - துபாய்

போக்குவரத்து நெரிசலுக்கு இப்போதைக்கு பிரபமானாலும் ஷேக் சயித் சாலையில் 100 கி.மீ வேகத்துக்கு போகும் போது அருமையாகத்தான் இருக்கு.இந்த நெரிசல்கள் எல்லாம் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் ஓரளவுக்கு முடிவுக்கு வரும் என்று நினைக்கிறேன். துபாய் அரசாங்கம் செய்யும் மெட்ரோ மற்றும் மேம்பாலங்கள் வேலை எல்லாம் துரிதமாக நடந்து வருகிறது.

இப்போது ஓரளவுக்கு நிலவியல் அறிவு வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.அவ்வப்போது சாலையில் தென்படும் (கீழே உள்ள படத்தில்) இட பலகைகளை பார்க்கும் போது,எதற்கு இரண்டு கலரில் பலகைகள் என்று யோசித்தேன்.



பிரவுன் பலகைகள் புதியவர்கள்/ஊரைச்சுற்றி பார்ப்பவர்கள் எளிதாக அடையாளம் கண்டுகொள்வதற்காக வைத்துள்ளார்களாம்.வித்தியாசமாக இருந்தது.இதே மாதிரி வழிகாட்டும் பலகைகள் அல் அய்ன் மற்றும் ஃபுஜிரா போகும் போதும் கண்ணில் பட்டது.
இப்படி வித்தியாசமாக வைத்திருந்தாலும் அனிச்சையாக எந்த பலகையை பார்பது என்பது தெரியாமல் வாகன வேகத்தில் தடுமாறுவது இயற்கையாக நடந்தது.

2 comments:

Anonymous said...

Enna sir singapore-la parthathu illaya ? Same here. Brown color board for tourist attractions.

Anputan
Singai Nathan

வடுவூர் குமார் said...

இல்லையே நாதன்.
காரில் போன அனுபவம் அவ்வளவாக இல்லாத்தால் இருக்கக்கூடும்.