Saturday, October 18, 2008

ஐயின் மிருககாட்சிச் சாலை

ரமலான் பெருவிழா காலத்தில் சில நாட்கள் தொடர்ந்தார்போல் விடுமுறை வந்தது அதை உள்ளூரில் இருக்கும் பலர் வண்டியை எடுத்துக்கொண்டு 300~400 கி.மீட்டர் என்று பக்கத்து ஊருக்கு போய் வருவார்கள்.அதே மாதிரி என் உறவினர்கள் என்னையும் அவர்கள் குடும்பத்துடன் ஓமன் போய் வரலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தார்கள்.நான் இங்கு வந்து ஒரு வாரம் ஆன நிலையில் என்னிடம் இருப்பது வெறும் விசிட் விசா என்பதால் இங்கிருந்து போய் திரும்புவதில் பிரச்சனை இருக்கும் என்றார்கள்,அதற்குப் பதிலாக குழந்தைகளின் விருப்பப்படி அல் அயினில் இருக்கும் மிருககாட்சி சாலைக்கு போகலாம் என்று முடிவெடுத்து பாலைவனத்தை திரும்பவும் கடக்க ஆரம்பித்தோம்.



எங்கிருக்குது இந்த இடம்? கீழே உள்ள படத்தை பாருங்கள்



மறுபடியும் நீண்ட நெடும் சாலை எங்கு பார்த்தாலும் மணல் மற்றும் அங்கும் இங்குமாக வீடுகள்.

2 மணி நேரப்பயணம் சுகமாக இருந்தது.மொத்தமாக மணலாக இல்லாமல் ஒரு பகுதிக்கு மேல் சாலை இருபுறமும் புதர் போன்ற சில மரங்கள் தெண்பட்டன.

இது தான் முகப்பு பகுதி.



வாசலில் உள்ள பெயர் பலகை




மிருகக்காட்சி சாலையின் உள்ளே...









இது முடிந்து பக்கத்தில் உள்ள தீம் பார்கையும் ஒரு ரவுண்டு விட்டுவிட்டு வீடு திரும்பினோம்.
இங்கு மகிழுந்து மட்டும் இல்லை என்றால் ஒரு இடமும் போகமுடியாது.பொது போக்குவரத்து நகரத்துக்கு உள்ளே மாத்திரமே உண்டு.

No comments: