Monday, October 15, 2007

கேட்கணும் ... பிடிக்கணும்

கொஞ்ச மாதங்களுக்கு முன்பு இணையத்தில் இருந்து எப்படி பாட்டு பிடிக்கனும் என்று சொல்லியிருந்தேன்.அது கொஞ்சம் வன்பொருட்கள் வாங்கி சொருக வேண்டிய விஷுயம்,இப்போ அது கூட தேவையில்லையாம்.

கீழே கொடுத்துள்ள "சுட்டி" யில் சொடுக்கவும்.

"சுட்டி"

இதை ஃபயர்பாக்ஸில் add-on ஆக நிறுவிக்கொள்ளவும்.கீழே உள்ள மாதிரி ஒரு டூல் பார் வந்து விடும்.கேட்கவேண்டிய பாடலை சொடுக்கவும் அப்படியே இந்த டூல் பாரில் உள்ள Record பட்டனை சொடுக்கினால் முடிந்தது.அப்படியே பாட்டை mp3 யாக மாற்றி கொடுத்துவிடுகிறது.


நாட்டுக்கட்டையை பிடிச்சி பார்த்தேன்... நல்லாத்தான் இருக்கு. :-))


Enjoy மக்கள்.

6 comments:

வெங்கட்ராமன் said...

நன்றி குமார் சார்.

போன வாரம் வடுவூர் வழியா போயிருந்தேன், அப்பப்பா எவ்வளவு பறவைகள் வடுவூர் ஏரியில். எல்லா மரத்திலயும் வெள்ளை பூ பூத்த மாதிரி.

ஐந்து வருடம் அந்த வழியாக தினமும் சென்றிருக்கிறேன், இவ்வளவு பறவைகளை இப்பொழுதுதான் பார்க்கிறேன்.

வடுவூர் குமார் said...

வாங்க வெங்கட்ராமன்
பல தடவை கோடை கால சமயத்தில் போவதால் பறவைகளை பார்க்கமுடியாது.உங்களுக்காவது அந்த வாய்ப்பு கிடைத்ததே! சந்தோஷம்.
கால அவகாசம் கிடைத்தால் இந்த தடவையாவது போகனும்.

கோவி.கண்ணன் said...

நல்ல தகவல்கள் குமார், நானும் முயன்று பார்க்கிறேன். இது விசிடியை கணனியில் ஓடவிட்டு பதிவு செய்ய உதவுமா ?

வடுவூர் குமார் said...

கோவியாரே,முடியும் என்றே நினைக்கிறேன்.

காரூரன் said...

நல்ல பிரயோசமான தகவல்

வடுவூர் குமார் said...

வாங்க காரூரான்
முதல் வருகைக்கு நன்றி.