Wednesday, September 03, 2008

காதல் ----> காட்டாளானது

திரு.ராகி ரங்கராஜனுடைய கதைகளை அவ்வளவாக படித்த ஞாபகம் இல்லாததாலும் அட்டை பக்கம் புதிதாக இருந்ததாலும் நூலகத்தில் இருந்து எடுத்துவந்தேன்.செம விருந்து.


ஒவ்வோரு கதையிலும் நகைச்சுவை இழைந்தோடியிருக்கு அதில் ஒரு கதையில்,சில வருடங்களுக்கு முன்பு திருப்பதி பஸ் நிலையத்தில் ஒரு இளம் பெண் தெலுங்கில் ஏதோ சொல்லிச் சொல்லி சிரித்துக்கொண்டிருப்பதை பார்த்து, அவள் பேசும் பாஷை புரியாததால் ஏற்பட்ட உசுப்பேத்தலில் சுமார் 8 மொழிகள் கற்றுக்கொள்கிறாராம்.சில வருடங்களுக்கு பிறகு ஒரு சமயத்தில் அந்த பெண்ணை குடும்பப்பெண்ணாக சந்திக்க நேரும் போது அன்று எதற்காக அப்படி சிரித்தாய் என்று தெலுங்கிலேயே கேட்கிறார்.

அதற்கு அந்த பெண் “உங்க சட்டையின் முதுகில் ஒரு பெரிய ஓட்டை இருந்தது,அது கூட தெரியாமல் ஸ்டைலாக அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தீர்கள்” என்று போட்டு உடைக்கிறார்.

அவர் எழுதிய கதையில் தான் நகைச்சுவை என்று பார்த்தால்... கீழே நூலகத்தில் கொடுக்கும் Receipt யில் ஆங்கிலப் படுத்தியிருக்கிறார்கள்.

இங்கே பார் “சிரி”. :-))