Wednesday, February 09, 2011

எப்போது ஓடும்?

கோயம்பேடுவில் இருந்து பில்லர் மற்றும் சைதாப்பேட்டையில் இருந்து கிண்டி போகும் வாகனங்களுக்கு இந்த தற்காலிக தொல்லையில் இருந்து தப்பிக்க இப்போது வழியில்லை,அதாங்க இந்த மெட்ரோ வேலையினால் இருந்த 3 வழிப்பாதை இரண்டாகி எந்த வண்டி எதன் மேல் உரசும்,மோதும் என்ற பயத்துடன் தினமும் பயணிக்கவேண்டியுள்ளது.கொஞ்ச நாட்களுக்கு முன்பு விடியற்காலை இவ்விடங்களுக்கு போய் அவர் மூலம் போக்குவரத்து பாதிக்காமல் பார்த்துக்கொண்டுள்ளார் நம் துணை முதல்வர், மேலும் 2013 யில் மெட்ரோ பயணிக்க ஆரம்பித்துவிடும் என்று சொல்லியிருக்கார் அதற்கேற்ப்ப வேலைகளும் மிக ஜரூராக நடந்துகொண்டிருக்கு.கோயம்பேடு மற்றும் வடபழனி பகுதிகளில் வேலை வேகமாக நடந்துவருகிறது.




அந்த மேம்பாலத்தின் மேற்பகுதி இப்போதைக்கு இப்படி இருக்கும்.நடுவில் இருக்கும் கம்பி இருக்கும் பகுதியில் தான் ரயில் ஓடும்,அத்தோடு இருபக்கமும் கைப்பிடி சுவர் மாதிரி கான்கிரீட் சுவர்கள் வரும் அதனுள் தேவையான மின்சார கேபிள்கள் போக வழி உண்டாக்கப்படும்.




ஒரு பில்லரில் இருந்து மறுபில்லர்கள் வரை உள்ள கான்கிரீட் துண்டுகளால் ஆனது அதை தகுந்த கெமிக்கல் மூலம் ஒட்டவைத்து பிறகு அவ்வளவு துண்டுகளையும் ஒருங்கினைத்து “Post Tensioning" முறைப்படி இழுத்துவைத்துவிடுவார்கள்.

மேலும் மேலும் அவ்வப்போது நடக்கும் சிறப்பு நிகழ்வுகளை படம் கிடைத்தால் போடுகிறேன்.

1 comment:

geethappriyan said...

நல்ல தகவலுக்கு நன்றி நண்பரே