Saturday, October 16, 2010

யோகா

சில நாட்களுக்கு முன்பு யாகூ முதல் பக்கத்தில் மோசமான சுற்றுச்சூழல் உள்ள 20 நகரங்களில் பட்டியல் போட்டிருந்தார்கள் அதில் சென்னைக்கு 8வது இடம்,முதல் இடத்தில் குஜராத்தில் உள்ள அன்கலேஷ்வர்.இந்த அனகலேஷ்வர் பகுதியில் 1992களில் சில மாதங்கள் வேலை செய்துள்ளேன் அப்போதே காற்றில் ஒரு வித நெடி இருக்கும்.வெளியிடங்களில் இருந்து வரும் ரயிலில் வரும் போது இந்த நெடியே அன்கலேஷ்வர் வந்துவிட்டதை குறிப்பால் உணர்த்தும்.
உடல் நலம் அதுவும் வெட்டவெளியில் பணியில் இருக்கும் என்னை மாதிரி ஆட்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை என்னுடைய பழைய பதிவுகளில் அவ்வப்போது எழுதிவந்துள்ளேன்.ஒல்லியாக இருந்து சின்ன தூசிகளுக்கு எல்லாம் பல முறை பென்சிலின் ஊசி போட்டு வாழ்நாளை ஓட்டிக்கொண்டிருந்த நான் அதிலிருந்து விடுபட்டு ஓரளவு வியாதியில்லா வாழ்கைக்கு என்னை தயார்படுத்திக்கொள்ள பல உடற்பயிற்சிகள் உதவினாலும் அதையும் மீறி "யோகா" பக்கம் என்னை தள்ளியது 1990 களில் ஆனந்த விகடனில் வந்த யோகா பற்றிய கேள்வி பதில்கள் தான்.என்னை நான் தள்ளிக்கொண்ட பல நிகழ்வுகள் ஏனோ தானோ என்று புரிதல் முறையில் தான் நடந்திருக்கின்றன,அதே முறையில் இந்த யோகா கட்டுரைகளையும் படித்துக்கொண்டிருந்தேன்.திரு தேசிக்காச்சாரி என்பவர் அவர் தந்தை பெயரில் "கிருஷ்ணமாச்சாரி யோகா மந்திரம்" மூலம் பலருக்கு யோகா கலையை சொல்லிக்கொடுத்துக்கொண்டிருப்பதை அறிந்தேன்.உடலை ஓரளவு Tone Up செய்தாகிவிட்டது இனிமேல் அதில் அவ்வளவு முன்னேற்றம் காணமுடியாது என்ற நிலையில் யோகா பக்கம் முயற்சிக்கலாம் என்று அவர்களிடம் சில காலம் யோகா கற்றுக்கொண்டேன்.முதல் முறை அவர்கள் மந்திரம் போன போது அவர் என்னிடம் எதற்கு யோகா கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் என்றார்.இந்தியனாக இருக்கின்ற எனக்கு இக்கலை தெரியவில்லை என்பது கஷ்டமாக இருப்பதால் வந்தேன் என்றேன்.உடல் நிலை பற்றிய பேச்சு வந்த போது பெரிய பிரச்சனை எதுவும் இல்லை என்ற போது "திரு ஆன்ந்த்" என்பவரை எனக்கு ஆசிரியராக போட்டார்கள்.அவர் மூச்சு எடுக்கும் போது விடும் போதும் ஏதோ பிளாஸ்டிக் குழாய் மூலம் காற்று போய் வருவதைப்போன்று ஒரு சத்தம்,அவ்வளவு சுத்தமான மூச்சுக்குழாய் போலும்! ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தேன்.






யோகாவின் முக்கிய அங்கங்களில் முச்சுக்காற்று.ஏற்றுவது இறக்குவது என்ற கணக்கில் ஓடும்.எவ்வளவு வருடம் செய்தேன் என்ற நினைவில் இல்லை ஆனால் அதை செய்வதற்கால கால அளவு நிறையவே காலை நேரத்தை விழுங்கியது அதோடு சாயங்காலம் சரியாக வரவில்லை.யோகா செய்ததால் எவ்வளவு பலன் என்று தெரியவில்லை ஆனால் ஏதோ இருக்கு என்பதை மட்டும் உடல் நலம் காண்பிக்கிறது.இப்போதெல்லாம் யோகா பண்ணுவதில்லை என்றாலும் மூச்சுப்பயிற்சி மட்டும் தொடர்கிறது.

இனி சென்னை காற்றை தான் சுவாசிக்கவேண்டும் என்பதால் இது வரை செய்துவந்த உடற்பயிற்சிகள் எவ்வளவு நாட்களுக்கு தாக்குப்பிடிக்கும் என்று தெரியவில்லை அப்படி முடியவில்லை என்றால் திரும்பவும் யோகா பக்கம் கண்ணைப்பதிக்கவேண்டும்.

5 comments:

jeevagv said...

யோகாசனங்களை வரைபடம் மூலம் சொல்லிதிருப்பது சுவை.
சேர்த்தமைக்கு பாராட்டுக்கள்!

வடுவூர் குமார் said...

நன்றி ஜீவா.

geethappriyan said...

பகிர்வுக்கு நன்றி
என்று தான் இதை செய்ய நேரம் வருமோ?

goma said...

நானும் தற்பொழுது யோகா பயிற்சி மையத்தின் மாணவி.
யோகாவைக் கைவிடாதீர்கள்.அருமையான ஆரோக்கியமான ,சிகிச்சை.
அனுபவத்தில் சொல்கிறேன்..

வடுவூர் குமார் said...

நேரம் ஒத்துவரமாட்டேன் என்கிறதே!!