Wednesday, January 13, 2010

அதது ஊருக்கு தகுந்த மாதிரி

நம்ம கண்ணுக்கு என்று இதெல்லாம் படுது பாருங்க அதை சொல்லனும்.இந்த மாதிரி வலைப்பதிவு இருக்கும் போது என்ன கவலை! பிடிச்சி போட்டா எப்போவாது உபயோகப்படும் பாருங்க.

இங்கு மஸ்கட்டில் கடந்த சில ஆண்டுகளாக மழைப்பொழிவு அதிகமாகி வருவதாக உள்ளூர் மக்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் ஆனால் இந்த வாய்கால் முகப்பை பாருங்கள்,வித்தியாசமாக இல்லை?

ஒன்றும் இல்லை! இது மழைக்காலத்துக்கும் வெய்யில் காலத்துக்கும் ஏற்றவாறு இருகிய ரப்பர் கொண்டு மோல்ட் செய்து அப்படியே பொருத்திவிட்டார்கள்.சிமிண்ட் மற்றும் மண் எதுவும் கிடையாது.இப்படி கிடைப்பதன் மூலம் வேலையும் சுலபமாக முடியும் பணமும் மிச்சம் பிடிக்கமுடியும்.மழை தண்ணீர் போக்குவரத்து குறைவாக உள்ள நாடுகளுக்கு உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.தண்ணீர் மூலம் அதன் அடிப்பகுதியில் அரிப்பு இருக்காது என்பதால் சாலை அமிழும் நிலை வராது.



காலத்துக்கு ஏற்ப மாறுதல் ஏற்பட்டுகொண்டிருக்கும் பல துறைகளில் கட்டுமானத்துறையும் ஒன்று.

2 comments:

கண்ணா.. said...

நல்ல பகிர்வு.. இது போல் சைட்டில் நடக்கும் வேலைகளையும் படங்களுடன் விளக்குங்கள். பல பேருக்கு உபயோகமாக இருக்கும்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

வடுவூர் குமார் said...

கண்ணா அப்படியே கொஞ்சம் முன்பதிவுகளை பாருங்களேன் நிறைய பதிவுகளை போட்டுள்ளேன்.