Wednesday, January 13, 2010

காலை வேளை மஸ்கட்.

பலருக்கு காலை வேளையில் தூங்குவது என்பது பிடித்தமான பழக்கங்களில் ஒன்று ஆனால் எனக்கு அப்படியில்லை.வேலைக்கு என்று வெளியில் வந்தாலும் படித்துக்கொண்டு இருக்கும் காலத்திலும் அப்பாவின் கண்டிப்பில் 6 மணிக்கு எழுந்திருப்பது ஒரு கட்டாய பாடமாக இருந்தது.உடம்பு ஒரு குறிப்பிட்ட நேரத்து பழக்கப்படுத்திவிட்டால் அவ்வளவு தான் மனம்/மூளை சரியாக விழிப்பு ஏற்படுத்திவிடுகிறது.வயது ஏற ஏற தூக்கம் வேறு குறைவதால் இன்னும் முன்பே முழிப்பு வந்துவிடுகிறது.இங்கு வார விடுமுறை வியாழன் மற்றும் வெள்ளி என்பதால் இவ்விரு நாட்களும் காலை எழுந்திருக்கும் போதே இன்று வேறு என்னென்ன வேலைகள் செய்யலாம் என்று மனது பட்டியல் போட ஆரம்பித்துவிடுகிறது அதில் ஒன்று தான் சுமார் 2-3 கிமீட்டர் தூரத்தில் உள்ள கடற்கரைக்கு போய் வருவது.காலை 8 மணிக்கு கிளம்பினால் திரும்ப வரும் போது மணி 10 ஆகிவிடும்.வீட்டுக்கு வந்து என்ன செய்யப்போகிறோம் என்ற அலுப்பிலேயே பீச்சில் சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு வருவேன்.இப்போது குளிர் காலம் என்பதால் மதிய வெய்யில் கூட உடம்பில் உறைப்பதில்லை.

சில வாரங்களுக்கு முன்பு அப்படி மெது நடை போன போது எடுத்த சில படங்கள் கீழே.

வாகனங்கள் இல்லாத சாலை.



கிரிக்கெட் விளையாடும் இந்திய/பங்களா மக்கள்.



இந்த சாலையை வாகனங்களே இல்லாமல் இப்போது தான் பார்க்கமுடியும்.



இரானுக்கும் ஓமனுக்கும் இடையில் நிற்கும் சில கப்பல்களும் அலையில்லாத கடலும்.



கடற்கரை

No comments: