Monday, April 06, 2009

சிங்கப்பூரின் கவலை!!

சிங்கப்பூரின் கவலைகள் பட்டியலில் புதிதாக(பழையது தான்) ஒன்றும் சேர்ந்திருக்காம்...

After saying that one-third of men and women in Singapore were single "and quite comfortable with their lives", the Minister Mentor said: "My daughter is one of them. What can I do?"...


இப்படி சொன்னது யார்? என்று நினைக்கிறீர்கள்.

திரு லீ குவான் யூ (சிங்கப்பூரின் சிற்பி)

முழுவதும் படிக்க இங்கே சொடுக்குங்கள்.

8 comments:

துளசி கோபால் said...

அநேக நாடுகளில் இந்தக் கவலை பீடிச்சு இருக்கு(-:

வடுவூர் குமார் said...

வாங்க துளசி
பெண்கள் தனியாக (பொருளாதாரத்தில்) இயங்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று 1960,70 களில் எழும்பிய முழக்கம் இந்த மாதிரியான விளைவுகளை கொண்டு வரும் என்பது அப்போதே தெரியாமல் போய்விட்டது போலும்.
இந்தியாவிலும் இப்போக்கு அதிகரித்து வருவது நல்லதற்கல்ல.

Unknown said...

அட போங்கோ தம்பி.......!! அங்க எல்லாமே இங்குளிபீசுல இருக்குது.....!! ஒண்ணுமே புரியல......!!!!

கணினி தேசம் said...

குடும்பம் குழந்தை என்பதை ஏதோ பாரமாக நினைக்கத் துவங்கிவிட்டார்கள்.

தனியே இருந்தால் சம்பாதித்தோம் செலவழித்தோம் என்றிருக்கலாம் . கேள்வி கேட்பாரில்லை. சந்தோசமாக வாழ்வை கழிக்கலாம் என்ற எண்ணம்.

வயதானபின் ஒரு நாய்குட்டியோ இல்லை பூனைக்குட்டியோ வீட்டில் துணை.

மேற்கத்திய நாடுகளில் இப்போதெல்லாம் மனிதர்களைவிட செல்லப்பிராணிகளுக்கு அதிக மரியாதை கொடுக்கிறார்கள்.

"என்ன கொடுமை சார் இது !"

கோவி.கண்ணன் said...

சிங்கப்பூரார்களின் பார்வையில் அப்படி அவர்கள் இருப்பதைத் தவறாகவும் சொல்ல முடியவில்லை. ரெஸ்பான்சிபிலிட்டி என்பது தனிமனித சுதந்ததிரத்திற்கு இடையூறாக இருப்பதாக நம்புகிறார்கள்.

எங்கள் அலுவலகத்திலும் பேரிளம் ஆண்கள் பெண்கள் உண்டு.

அது தவிர பொருளாதரமும் நாளடைவில் 'குடும்பம்' என்பதை கட்டமைக்கும் முக்கிய காரணியாக அமைந்துவிடுகிறது.

வடுவூர் குமார் said...

வாங்க கணினி தேசம்
என்ன பண்ணுவது எல்லாவற்றிருக்கும் இந்த பொருளாதார தேவை வந்து மூக்கை நுழைக்குதே!
ஒரு சிறிய நாட்டில் இப்படி மக்கள் தொகை பெருக்கம் இல்லாவிட்டால் மூன்றாம் தலைமுறை என்று ஒன்று இல்லாமல் போய்விடும் அதும் அந்நாட்டு மக்கள் என்ற தகுதியுடன்.

வடுவூர் குமார் said...

கோவியாரே,ஒரு நாட்டின் தலைவரே இப்படி புலம்புவது நிலமை அவர் கையை மீறிவிட்டது என்றே தோன்றுகிறது அத்தோடில்லாமல் சரியான குடிமக்கள் தொகை இல்லாவிட்டால் வருங்காலத்தில் அந்நாட்டை நிர்வகிப்பதும் அதனை கட்டிக்காப்பதும் இயலாமல் போய்விடும் என்று எண்ணுகிறாரோ என்னவோ?

கடந்த 8 வருடங்களாக மக்கள் பிறப்பை மேம்படுத்த பல முயற்சிகள் எடுத்தும் ஓரளவே முன்னேற்றம் காணமுடிந்தது.

வடுவூர் குமார் said...

மேடி அண்ணாச்சி (நீங்க அந்த அண்ணாச்சி இல்லையே!!)
பின்னூட்டம் எல்லாம் தமிழிலேயே இருக்கு அதிலிருந்தும் தெரிந்துகொள்ளலாம். :-)