Sunday, October 27, 2013

பெரிய இடைவெளி

இப்ப உலகம் சுருங்கின மாதிரி 1980களில் இல்லை, படித்த நண்பர்களையோ/இள வயதில் ஒன்றாக விளையாடிய நண்பர்களை கண்டு பிடிக்க வேண்டும் என்றால் கண்டுபிடிக்கவே முடியாத அளவில் இருக்கும் ஏனென்றால் வீட்டு முகவரியை தவிர வேறு எதுவும் எங்களிடம் கிடையாது.பாலிடெக்னிக் படித்துக்கொண்டிருக்கும் போது நெருக்கமான சிலர் இருந்தனர் அதில் புகைபடம் எடுத்துக்கொண்ட இந்த மூவர் நினைவும் மட்டும் பசுமையாக இருந்தது இதில் ஒருவர் பெற்றோர் வீட்டுக்கு பக்கத்திலேயே இருந்ததால் எப்போதும் தொடர்பில் இருந்தார் மற்ற இருவரைப்பற்றிய செய்தி எதுவே கிடைக்கவில்லை.பழைய நிருவனம் மற்றும் வேறு சில நண்பர்களிடம் கேட்ட போதும் சரியான விபரம் கிடைக்கவில்லை.

சமீபத்தில் நாகப்பட்டினம் போன போது இந்த நண்பர்களை பற்றிய ஏதாவது தகவல் கிடைக்கிறதா என்று என்னுடன் படித்த நண்பர்கள் சிலரிடம் கேட்டேன்,உதடு பிதிக்கினார்கள்.சரி அவர்கள் வீடாவது இருக்கா என்று போய் பார்த்தால் முகப்பு எல்லாம் மாறி கடையும் பிளாட்டாக மாறியிருந்தது.கீழே உள்ள கடைக்காரடிடம் கேட்ட போது அவர்கள் வீட்டை விற்று விட்டு சென்னைக்கு போய்விட்டார்களே என்றார்.சரி, சென்னை முகவரியாவது இருக்கா என்றால் "இல்லை" என்றார்.பிறகு கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு நாகை மார்கெட்டில் அவர்கள் அண்ணா கடை வைத்திருக்கார் என்று விபரம் கொடுத்தார்.அதை தேடி கண்டுபிடித்தவுடன் அவர்களிடம் இருந்து நண்பன் எண் கிடைத்தது அதன் மூலம் மற்றவர் எண்ணும் கிடைத்தது.எல்லோரிடமும் மீண்டும் தொடர்பு கிடைத்த சந்தோஷத்தை நான்கவரிடமும் பகிர்ந்துகொண்டோம்.

இவ்வளவு நாள் தான் பார்க்கமுடியவில்லையே இப்போதாவது பார்க்கலாம் என்று மதியம் மடிப்பாக்கத்தில் ஒரு இடத்தை முடிவு செய்து அங்கு சந்தித்து அளவளாவினோம்.

33 ஆண்டுகள் இடைவெளியில் இயற்கை விளையாடிய விளையாட்டை படங்களில் பார்க்கலாம்.



மனைவிமார்களை பேசவிட்டுவிட்டு எங்கள் பழைய கதைகளை ஓரளவு பேசிவிட்டு வீடு திரும்பினோம்.

இம்மூவரை தவிர நானே எதிர் பார்க்காத இன்னொரு நண்பரையும் சந்திக்க முடிந்தது மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது.

5 comments:

வெங்கட் நாகராஜ் said...

பால்ய கால நட்புகளைத் தேடி மீண்டும் சந்திப்பதில் ஒரு ஆனந்தம் இருக்கத்தான் செய்கிறது....

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய நினைவுகள்... வாழ்த்துக்கள்...

வடுவூர் குமார் said...

நன்றி வெங்கட் நாகராஜ் & திண்டுகல் தனபாலன்.

வவ்வால் said...

வடுவூர் குமார் அவர்களே,

யூத்தா ஒரு ப்ரொஃபைல் படம் போட்டு இப்படி ஏமாத்திட்டிங்களே அவ்வ்!


அந்தக்காலத்துல டிப்ளமோலாம் இந்த காலத்து எம்டெக் போல.

ஆனால் மற்ற எல்லார் விடவும் நீங்க இப்பவும் யூத்தா இருக்கீங்க ....எனி கேமரா டிரிக்கு?

மலரும் நினைவுகள் மலரட்டும்,வாழ்த்துக்கள்!

வடுவூர் குமார் said...

ஏதோ ரிவர்ஸில் போகிறது போல் இருக்கு வவ்வால், பார்த்த சில நண்பர்களும் இப்படித்தான் கேட்கிறார்கள்.