Sunday, October 31, 2010

தேவர் திருவிழா

ஏற்கனவே இடைவிடாத மவுண்ட் ரோடின் ஹாரன் ஒலி அலுவலக கண்ணாடி தடுப்பையும் மீறி நாள் முழுவதும் ஒலித்துக்கொண்டிருக்கும்,நேற்று அந்த சத்ததையும் மீறி வெடி சத்தமும் தப்பு சத்தமும் ஒலிக்க ஆரம்பித்தது.சரி யாரோ மண்டையை போட்டுவிட்டார்கள் போலும் என்று நினைத்திருந்தேன்.வெளியே சென்று பார்க்க அலுப்பு.கலவையான இச்சத்தங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்த போது தான் இது ஏதோ விழா போல் நடக்கிறது என்ற உணர்வு ஏற்பட்டது அதே சமயத்தில் மவுண்ட் சாலையில் இருக்கும் நெருக்கடிக்கு இடையே எப்படி என்ற எண்ணமும் எழுந்தது.

வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு வெளியில் வந்து பார்க்கும் போது,முதல் குழு ஆண்களுக்கு; தப்பும் ஆட்டமும் போட்டுக்கொண்டு தேவர் சிலை வரை போனார்கள் அடுத்து பெண்கள் தலையில் குடம் வைத்து (நேர்த்திக்கடனா?)அவர்களும் அச்சிலை வரை போய்விட்டு ஒரு வண்டியில் குடங்களை அடுக்கிவைத்தார்கள்,அதற்கு மேல் எனக்கு நேரம் இல்லாத்தால் இரண்டு படங்கள் மட்டும் எடுத்துவிட்டு நகர்ந்துவிட்டேன்.

ஒரு வண்டியில் கோயம்பேடு யில் இருந்து தேவர் சிலை வரை நடைப்பயணம் என்று போட்டு ஏதோ விழா என்று எழுதியிருந்தார்கள்.இன்று காலை செய்தித்தாளை பார்த்தவுடன் தான் நேற்றைய விழாவுக்கு அர்த்தம் தெரிந்தது.




8 comments:

Gayathri said...

vidhyaasamaa irukku..evlo azhagaa ethanai vishayangal namma naatula..pagirndhamaikku nandri

வடுவூர் குமார் said...

thanks Gayathri.

திவாண்ணா said...

:-)) ரொம்ப நாள் வெளியூர்ல இருந்துட்டீங்கன்னு தெரியுது! :-))

வடுவூர் குமார் said...

ஆமாம்,ஆமாம்.

RAZIN ABDUL RAHMAN said...

சகோ குமார் அவர்களே.
தங்களுக்கும்,தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த இனிய தீபஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
இன்னாளில்,அனைவர் உள்ளத்திலும்,மகிழ்ச்சியும்,அன்பும்,நல்லிணக்கமும் பெருகி,மானுடம் தழைக்க அனைவரும் முயல்வோம்.

நமக்கும்,சுற்றுச்சூழலுக்கும்,பாதுகாப்பான தீபஒளித்திருநாளை கொண்டாடி மகிழ்வோம்.

வாழ்த்துக்கள்.

அன்புடன்
ரஜின்

வடுவூர் குமார் said...

மிக்க நன்றி,ரஜின்.

geethappriyan said...

உங்க போட்டோ ஷேரிங் மிக அருமை நண்பரே, நான் போய் வந்த இடங்களை மீண்டும் பார்க்க முடிகிறது

வடுவூர் குமார் said...

ஓ! அப்படியா?
நன்றி கீதப்பிரியன்.