Sunday, February 08, 2015

மைசூர் சுற்றுலா

மடிக்கேரி யில் இருந்து சரியாக காலை 7 மணிக்கு கிளம்பி காலை 10 மணிக்கு மைசூர் வந்து சேர்ந்தோம்.மைசூர் KSRTC க்கு சொந்தமான யாத்ரா நிவாஸில் ரூம் போட்டதால் அதற்கு ஏற்ப சரியான இடத்தில் இறங்கலாம் என்றால் பேருந்து ஓட்டுனர்/நடத்துனருக்கும் கேட்டதற்கு சரியாக தெரியவில்லை.பதில் சொல்லவே யோசிக்கிறார்கள்.சரி விடு நம்ம நேரம் என்று நினைத்து KSRTC முனையத்திலேயே இறங்கினோம்.ஆட்டோ மூலம் விடுதிக்கு வந்த போது காலை மணி 10.15. அறை காலியாக இருந்ததால் அப்போதே திறந்துவிட்டு விட்டார்கள். ரயில் நிலையத்துக்கு வெகு அருகில் உள்ளது ஆனால் மட்டமான பராமரிப்பு.அடுத்த தடவை இங்கு போகக்கூடாது என்று முடிவெடுத்துவிட்டேன்.

காலையே வந்துவிட்டோம் இரவு வரை நேரத்தை வீணடிக்க மனமில்லாமல் அங்கே இருந்த Tourist Centre இல் மதியம் மட்டும் பார்க்க ஏதாவது சுர்றுலா இடம் இருக்கா என்று கேட்டேன்.மைசூர் சிட்டி சுற்றுலா காலையில் தான் இருக்கு ஆனால் நீங்களாக வண்டி அமர்த்திக்கொண்டு செல்லலாம் என்றார் ஆனால் கேட்ட கூலி அதிகமாக இருந்ததால் அந்த எண்ணத்தை கைவிட்டுவிட்டு மாற்று யோஜனையை கேட்டோம்.அவர் கொடுத்த ஆலோசனைப்படி இன்று மதியம் மேல்கோட் என்னும் இடத்துக்கு சென்று கோவில் தரிசனம் செய்வது மறு நாள் மைசூரை சுற்றிப்பார்பது என்பதை முடிவு செய்தோம்.

மதிய உணவை முடித்துக்கொண்டு பேருந்து நிலையத்துக்கு சென்று “மேல்கோட்” செல்ல  வேண்டிய பேருந்தில் ஏறினோம். நேரடியாக செல்ல சில பேருந்து மட்டுமே இருப்பதால் ஓரிடத்தில் இறங்கி அங்கிருந்து ஷேர் ஆட்டோ மூலம் சென்றோம்.

இங்கு இரண்டு கோவில்களை மட்டுமே பார்க்க முடிந்தது. முதல் கோவில் மாலை 4 மணிக்கு திறக்கிறார்கள் அது முடிந்ததும் குன்றில் மேல் இருக்கும் நரசிம்மர் கோவில் 5.30 மணிக்கு திறந்ததும் அங்கும் சேவையை முடித்தோம்.திரும்ப மைசூர் வர பேருந்து கிடைப்பதில் சிரமம் இருக்கிறது வயதானவர்கள்/குழந்தைகள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.படங்கள் கீழே.




 நரசிம்மர் கோவில் குன்றின் மேல்


குன்றின் மேல் இருந்து மேல்கோட்


மறுநாள் முழுவதும் மைசூர் சிட்டி சுற்றுலா.

பார்த்த இடங்கள் விவரம் கீழே.
Chamundi Hills - Mysore Zoo - Mysore Palace Museum - Jaganmohana Palace - St.Philomena's Church - Sri Ranganatha Swamy Temple - Tippu's Summer Palace - Brindavan Gardens.

சொல்வது என்னவோ ஒருவருக்கு ரூ 210 ஆனால் நுழைவுக்கட்டணம் அது இது என்று மேலும் ஒரு 170 ரூபாய் கறந்துவிடுகிறார்கள்.

சாமுண்டேஸ்வரி கோவில் படங்கள் கீழே.




பிருந்தாவன் மிக மோசமான பராமரிப்புடன்.வெளிநாட்டில் இருக்கும்  மீயூசிகள் பவுண்டைன் பார்த்த பிறகு இதெல்லாம் ஒன்றும் இல்லை.இசைக்கும் தண்ணீர்க்கும் ஒருங்கிணைப்பு சுத்தமாக இல்லை.

மைசூர் முடித்தவுடன் மறுநாள் காலை கிளம்பி பெங்களூர் வந்து உறவினர் ஒருவரை பார்த்துவிட்டு விமானம் பிடித்து சென்னை வந்து சேர்ந்தோம்.

ஆமாம் எல்லாம் சொல்லியாகிவிட்டது ஆனால் செலவு எவ்வளவு என்று சொல்லவில்லையே என்று பார்க்கிறீர்களா? அது கீழே. ஒருவருக்கு எவ்வளவு எனபதை கீழே உள்ள பணத்தை மூன்றால் வகுத்துக்கொள்ளவும்.தேவையில்லாதது என்னது என்றால் விமானப்பயணம் காசு தான்.


2 comments:

வெங்கட் நாகராஜ் said...

உங்களுடன் பயணித்தோம்.... நன்றி நண்பரே.

வடுவூர் குமார் said...

மிக்க நன்றி, வெங்கட் நாகராஜ்.