Friday, January 09, 2015

நிசகர்தாமா-திபெத் மோனாஸ்டரி

மடிக்கேரின் இரண்டாவது நாளில் முதல் பாதி தலைக்காவிரி பக்கம் சுற்றிய பிறகு மைசூர் பக்கம் இருக்கும் சில சுற்றுலா தளங்களை பார்க்க அப்படியே கிளம்பினோம்.

முதலில் போனது திபெத் மோன்ஸ்டரி,கிட்டத்தட்ட திபெத்க்கே வந்த மாதிரி இருக்கு.பெரிய ஹால் ஒன்றில் புத்தருடன் இன்னும் இருவர் அவர் பக்கம் உட்கார்ந்திருக்கார்கள்.வேறு சில அறைகளில் மந்திரானம் நடந்துகொண்டிருந்தது.நல்ல பராமரிப்புடன் சுத்தமாக வைத்திருக்கார்கள்.







இங்கு சுமார் 1 மணி நேரம் சுற்றிய பிறகு அங்கிருந்து கிளம்பி நிசகர்தாமா என்ற இடத்துக்கு போனோம்.சாலையில் இருந்து ஒரு தொங்கு பாலம் வழியாக காவிரியை தாண்டி ஒரு மணல் மேடு பகுதிக்கு போனோம்.படகு சவாரி,யானை சவாரி,கயிற்றில் தொங்கிக்கொண்டு பரணில் இருந்து கீழே வருவது போன்றவை இருந்தது.சிறுவர்கள் பொழுது போக்க சுமாரான இடம்.

இங்கிருந்து வெளியே வரவே மாலை 5 மணிக்கு மேல் ஆகிவிட்டதால் விடுதிக்கு செல்ல 6 மணியாகிவிடும் என்பதாலும் ஊர் சுற்றலை இத்தோடு முடித்துக்கொண்டோம்.வரும் வழியில் டிரைவருக்கு தெரிந்த கடை,விலை மலிவு என்று சொல்லி இறக்கிவிட்டார்,பல ஐட்டங்கள் சென்னையிலேயே சல்லிசாக கிடைப்பதால் வந்த வேளைக்காக ஒரு காப்பிப்பொடி பாக்கேட் மட்டும் வாங்கிக்கொண்டார் மனைவி.
மறுநாள் விடியற்காலை இங்கிருந்து மைசூருக்கு பஸ்ஸில் முன்பதிவு செய்திருந்ததால் வேறு எந்த வேலையையும் வைத்துக்கொள்ளமால் ரெஸ்ட் எடுத்துக்கொண்டோம்.

அடுத்த இடம் மைசூர்.

2 comments:

ப.கந்தசாமி said...

//ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?//

ஆமாம். துளசி தளத்திலிருந்து நேராக இங்கே வருகிறேன். இதுதான் மொதோ விசிட். சுற்றுலா விஷயங்களை சாவதானமாகப் படிக்கவேண்டும். "கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பாச்சு" அப்படீன்னு ஒரு பழமாழி உண்டு. அந்த மாதிரி 2007 ல் 141 பதிவுகளா இருந்தது 2014 ல் 6 பதிவுகளாய்ப் போயிட்டுதே. அதிகம் வேலை பார்க்கறீங்க போல் இருக்குது.

வடுவூர் குமார் said...

வாங்க ஐயா. வேலையே இல்லை அதானால் தான் மேட்டரே இல்லை.பல பதிவர்கள் அந்த கால கட்டத்தில் எழுதியவர்களின் பதிவுகள் படிப்படியாக குறைத்தது போலவே என்னுடையதும். ஃபேஸ் புக்/டுவிட்டர் கூட காரணமாக இருக்கலாம்.