என்னைப் பற்றி

My Photo
சென்னை, தமிழ்நாடு, India
இன்னும் முடிவாக தெரியவில்லை. நான் யார் என்று!!

பின் தொடர்பவர்கள்

வேடந்தாங்கல்

Posted by வடுவூர் குமார் Monday, January 09, 2012

என்ன தான் சென்னைக்கு பக்க்கத்தில் இருந்தாலும் இவ்விடத்துக்கு போக நேற்று தான் நேரம் வாய்த்தது.கோயம்பேடில் இருந்து பெங்களூர் நெடுங்சாலையை பிடித்து மதுரவாயல் மேம்பாலம் அருகில் இருக்கும் துணை சாலையை பிடித்தால் சென்னை மேம்பால விரைவுச்சாலை வரும் இதன் மூலம் பெருங்களத்தூரை வெறும் 35 நிமிடத்தில் சென்றடையலாம்.
பெருங்களத்தூரில் இருந்து செங்கல்பட்டுவரை பலவேறு தடைகளை கடந்தால் அதன் பிறகு வெள்ளோட்டம் தான். மாமண்டூர் தாண்டியபிறகு வலது பக்கத்தில் உத்திரமேரூர் சாலை பிரிவு வரும் அதனையும் தாண்டினால் வேடந்தாங்கல் செல்லும் சாலை வலது பக்கத்தில் பிரியும் அச்சாலையில் சென்றால் 12 கி.மீட்டர் தூரத்தில் இருக்கும் பறவைகளின் சரணாலயம். சில இடங்களில் சாலை மேசமாக இருந்தாலும் மிதமான வேகத்தில் சென்றால் அவ்வளவாக பிரச்சனையில்லை. இங்கு போகும் வழியில் திருவையாவூர் என்ற புண்ணியஸ்தலம் மலைமேல் உள்ளது. மகிழுந்தை கோவில் வரை மேலே ஓட்டிச்செல்லலாம்.
வேடந்தாங்கல் ஒரு சிறு ஏரி போல் உள்ள இடத்தில் நிறைய மரங்கள் தண்ணீருக்கு மத்தியில் உள்ளது.பருந்து பார்வை பார்க்க உயரமான கோபுரம் ஒன்றும் வேறு சில பிளாட்ஃர்ம்கள் உள்ளன.என்ன தான் வெறும் கண்ணால் பார்க்கமுடிந்தாலும் பைனாகுலர் மூலம் பார்க்கும் போது இன்னும் நெருக்கமாக பார்க்கமுடிகிறது.

அங்கு எடுத்த சில படங்கள் கீழே. Zoom பண்ணிபார்க்க அதன் மீது சொடுக்குங்கள்.






கோயம்பேடுவில் இருந்து சுமார் 80 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது வேடந்தாங்கல். 

0 comments

Post a Comment

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்கள்?

கள்ளிப்பெட்டி