Monday, July 09, 2012

தோட்ட நிலம்

சில வருடங்களுக்கு முன்பு இது பிரபலமாகி பிறகு கொஞ்சம் காலம் பேச்சு இல்லாமல் இப்போது திரும்பியிருக்கு, அது தான் Farm Garden எனப்படும் நில விற்பனை.உள்ளூரில் வீடு/நிலம் பார்த்து அலுத்த வேளையில் தெரிந்தவர் மூலம் இந்த விற்பனை வந்தது,பெரிய நிலப்பகுதி அதில் மா,தென்னை மற்றும் தேக்கு என்று மரங்கள் சுமார் 13 வருடங்கள் கஷ்டப்பட்டு வளர்த்து விற்கிறார்கள்.மாங்காய் என்றால் படுத்துக்கொண்டே கடிக்கலாம், படம் பார்க்க.பல வித ரக மாங்காய்கள் காய்கின்றன, சுவையும் மோசமாக இல்லை.தெரிந்தவர்களுக்கு மட்டுமே சொல்லியதில் இரு தொகுதி மட்டுமே மிச்சம்(வலது பக்க பவுன்ரியில்).அடுத்த தொகுதியும் விற்பனைக்கு வருகிறது அதில் தென்னை அதிகமாக உள்ளது.
நாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறட்டுமே என்ற எண்ணத்தில் மட்டுமே இங்கு போடுகிறேன்.இதற்கு நான் முகவர் அல்ல அதனால் தேவையானவர்கள் தொடர்புகொள்ளலாம்.(vaduvurkumar at gmail dot kam)




இடம்: சுங்குவார் சத்திரம் அருகில்.
கோயம்பேடுவில் இருந்து சரியாக 1 மணி நேரப்பயணம்

கூகிள் மேப்பில் இந்த இடத்தில் பார்க்கலாம்.சுலபமாக தூரங்களை கணக்கிடலாம்.



இங்கிருந்து மருதமங்களம் வழியாக காஞ்சிபுரம் போகலாம் மற்றும் 120 என்று போட்டுள்ள சாலை திருவள்ளூருக்கு போகலாம்.அமைதியான சுற்றுப்புறத்துடன் சில காலம் வாழனும் மற்றும் investment என்ற நோக்கத்துடன் வாங்கிப்போடலாம்.

மருதமங்களம் என்ற ஊர் சுமார் 4 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது அங்கு 1100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய ஒரு கோவிலும் உள்ளது.படங்கள் கீழே.


ஊரில் உள்ள குளம்.


2 comments:

Anonymous said...

ஆகா! நல்ல பதிவு. சோசல் சேவை.
வேதா. இலங்காதிலகம்.

வடுவூர் குமார் said...

வருகைக்கு நன்றி வேதா.